திருக்குறள் வளாகம் திறப்பு விழா

  


சிவஞானச் சுடர்பல்வைத்திய கலாநிதி  பாரதி இளமுருகனார்  வாழ்நாள் சாதனையாளர்




சரித்திரப் பிரசித்தி பெற்ற மாவிட்டபுரத்திலே சரித்திரப் பிரசித்தி பெற்றதோர் அரிய நிகழ்ச்சியாய்   திருக்குறள் வளாகம் நேற்றைய தினம்(02-02-2025 ஞாயிற்றுக் கிழமை) காலை திறக்கப்பெற்றது.  தனது வாழ்நாட் கனவான இந்தப் புனித பணியையும் திருவருள் துணையுடன் நிறைவு செய்யமையையிட்டு - விழா நாயகனான சிவத்திரு கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுக்கு வளாகம் திறப்பு விழா சிறக்கவேண்டி  அளிக்கப்பெற்ற நல் வாழ்த்து தமிழ் முரசு நேயர்களின் பார்வைக்காகப் பகிரப்படுகிறது.

     




     
   

மாவைக்கு காசியானந்தனின் இரங்கல்

 

முடிவுக்கு வந்த மாவையின் சகாப்தம்

 Published By: Digital Desk 2

01 Feb, 2025 | 11:19 AM
image

-என்.கண்ணன்

இலங்கை தமிழரசுக் கட்சி சர்ச்சைகள் மற்றும் சிக்கல்களுக்குள் சிக்கியிருக்கும் சூழலில், அந்தக் கட்சியின்  மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவு நிகழ்ந்திருக்கிறது

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, இரா.சம்பந்தன் மறைந்து, சரியாக ஏழு மாதங்களில்,  அந்தக் கட்சி தமது பாரம்பரிய தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜாவை இழந்திருக்கிறது.

82 வயதுடைய மாவை சேனாதிராஜா தமிழ் தேசிய அரசியலின் மூத்த தலைவராக விளங்கியவர்.

போதை என்பதைப் பொசுக்கியே நிற்போம் !

 

























மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .. அவுஸ்திரேலியா 



பணத்தில் போதை பதவியில் போதை 
பட்டத்தில் போதை பார்ப்பதிலும் போதை
இப்போதை எல்லோர்க்கும் இருக்கின்ற போதை
இதனைவிட ஆபத்தே இளைஞரிடம் போதை

படிக்கின்ற பலரையும் பற்றியதே போதை
குடிக்கின்ற புகைக்கின்ற சுவைக்கின்ற வகையில்
மாத்திரையாய் வகைவகையாய் வண்ணமுறு வகையில்
போதைதரும் பொருட்கள் வீதி வருகிறதே

கண்டதை உடைப்பார் கைக்குண்டு வீசுவார் 
கண்ணெதிரே வருவாரைக் கத்தியால் குத்துவார் 
கடையும்  உடைப்பார் பொருளும் எடுப்பார்
அத்தனையும் போயை அரங்கேற்றி நிற்கும்

பழம் பெரும் தமிழ் தேசியவாதியான மாவை சேனாதிராஜா அவர்களுக்கு இறுதி அஞ்சலி

 தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினராகவும், தலைவராகவும், 1960களிலிருந்து ஈழத் தமிழ் மக்கள் போராட்டங்களில் முன்னணியிலிருந்து செயல்பட்டவரான மாவை சேனாதிராஜா ஐயா அவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் அஞ்சலிகளையும் தெரிவித்து கொள்கின்றோம். இவர் சாத்வீகப் போராட்டம், ஆயுதப் போராட்டம், மற்றும் முள்ளிவாய்க்காலிற்கு பிந்திய அரசியல் ராஜதந்திரப் போராட்டம் என்கின்ற மூன்று முக்கியமான காலகட்டங்களிலும் தொடர்ச்சியாகச் செயல்பட்ட ஒரு தமிழ் தேசியவாதி ஆவார்.

மாவை சேனாதிராஜா அவர்கள் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த காலத்தில்அவருக்கு பல சவால்களும் நெருக்கடிகளும் கட்சிக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் கொடுக்கப்பட்ட போதிலும்தமிழ்த் தேசியத்தின்பால் தன்னை நிலை நிறுத்திச் செயற்பட்டமை இவரது தனித்துவ சிறப்பாகும்.

இவர் 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றினார்இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962இல் இணைந்தார். 1966 - 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார். 1969 - 1983 வரையான காலப் பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுஎட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார். 1972இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இரங்கல்: டாக்டர் இராசையா ராஜகோபாலன் (ராஜ்)

 




















தேடியே உதவி செய் - அன்பு ஜெயா (கழி நெடிலடி ஆசிரியப் பன்னிரு சீர் மண்டிலம்)

 

தன்னையும், சுற்றம் தன்னையும் காக்கத்

      தளர்வே இன்றிநாளும்

    தமக்கென உழைப்போர் அடுத்தவர் நலமும்

      சற்றே நினைப்பீரே!

உன்னையும் ஓர்நாள் அடுத்தவர் காப்பர்

      உணர்வீர் அதையும்தான்,

    உலகமும் நமக்கு அளித்தநல் பாடம்,

      உயர்வீர் நேயமதில்!

தன்னலம் மட்டும் காப்பது நன்றோ?

      தனித்தே வாழ்வதேனோ?

    தாயெனும் நாட்டில் வாழ்பவர் எல்லாம்

      தாயின் பிள்ளைகளே!

உன்மனம் மாற்று, உதவியை நாடி

      ஒடுங்கி வாழ்வோர்க்கே

    உற்றவோர் உதவித் தேடியே செய்தால்

      உலகும் உயர்ந்திடுமே!

ஆயிரம் ருபாய் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்


இன்றைய பண மதிப்பின்படி ஆயிரம் ருபாய் என்பது சாதாரண பணமாகத் தெரியலாம். ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரம் ரூபாய் என்பது பெறுமதியான பணமாகும். இதனைக் கொண்டு ஒரு கல்யாணத்தையே அன்று நடத்தி விடலாம். அப்படிப் பட்ட ஆயிரம் ரூபாய் தெருவில் ஆடிப் பாடித் திரியும் ஒரு சேரி வாழ் பெண்ணிடம் கிடைத்தால் என்ன நடக்கும், என்ன செய்யலாம் என்பதை சொல்ல முற்பட்டு உருவாக்கிய படம்தான் ஆயிரம் ருபாய்!


வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ள

முனையும் சந்தானம் ஒரு குழந்தையை விபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டியவனாகிறான். அதனால் அவனது தற்கொலை செய்யும் எண்ணம் அகலுகிறது. அதே சமயம் வள்ளி என்ற நாட்டியக்காரியின் அறிமுகம் ஏற்படுகிறது. ஆனாலும் அவள் ஒரு நாட்டியக்காரி என்பதால் அவளது அன்பையும் காதலையும் தவிர்த்து வெளியேறுகிறான். பொன்னி என்ற சேரிப் பெண்ணின் அறிமுகம் அடுத்து அவனுக்கு கிடைக்கிறது. அவளும் தெருவில் ஆடிப் பாடுபவள்தான். ஆனாலும் அவளின் காதல் அவனுக்கு இனிக்கிறது. அந்த சேரிப் பெண்ணுக்கு எதிர்பாராத விதத்தில் தெருவில் ஆயிரம் ருபாய் கிடைக்கிறது. அந்த பணம் அவள் வாழ்வில் ஏற்றத்தை தரும் என்று எதிர்பார்த்தால் , அவள் வாழ்வையே புரட்டிப் போட்டு விடுகிறது அந்த ரூபாய் நோட்டு. அத்துடன் படத்தின் கதைக்கும் வைக்கிறது வேட்டு !

நேரிசை ஆசிரியப்பா: (ஈற்றியலடி சிந்தடியாகவும் மற்ற அடிகளை அளவடிகளாகவும் அமைத்து ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடியும்படி இயற்றப் பட்டுள்ளது) கற்றறியான் மொழிந்த கவியதாகுமே!

 


- சங்கர சுப்பிரமணியன்.





நிறைகுட மென்றும் கூத்தாடா திருக்கும்
குறைகுடம் என்றும் கூத்தாடித் தீர்க்கும்
கற்றோர் நிறைந்த அவையில்
கற்றறியான் மொழிந்த கவிய தாகுமே

நல்லதை சொன்னால் நாடும் போற்றும்
இல்லையா னாலுமொ ன்றுங் கெடாது
அல்லவை தேய்ந்து அறமாக
சொல்வதில் பிழை ஒன்றும் வாராதே

வள்ளல் குணமே வறியோர்க் கீதல்
தெள்ளத் தெளிவா யதும் அறமாம்
உள்ளத் தெளிவொடு இருந்தால்
அள்ளக் குறையா செல்வம் பெருகுமே

அதிகாலையின் அமைதியை கிழித்துக்கொண்டு வந்து தரையிறங்கிய உலங்குவானுர்திகள் ; 100க்கும் அதிகமானவர்களை பறிகொடுத்த குடும்பங்கள் ; மகிழடித்தீவு இறால் பண்ணை படுகொலை - 38 வருடங்கள்

 Published By: Rajeeban

29 Jan, 2025 | 02:22 PM
image

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு இறால் பண்ணை படுகொலை இடம்பெற்று ஜனவரி 28ம் திகதியுடன் 38வருடங்களாகின்றது.

இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை சம்பவங்களின் பட்டியல் மீக நீளமானது - அதில் இதுவுமொன்று.

நீதிக்கான எந்த நம்பிக்கையும் இன்றி அன்றைய நாட்களின் வலிகளுடன்  வாழ்பவர்கள் பலர்.

மகிழடித்தீவு இறால் பண்ணையில் வேலை பார்த்த 85 இளைஞர்கள் உட்பட 100 க்கும் அதிகமானவர்களை இலங்கை இராணுவத்தினர் கொன்றுகுவித்தது இன்னமும் பலரின் நெஞ்சில் நீங்காத வடுவாக நீடிக்கின்றது.

நூல் அறிமுகம் : முருகபூபதி எழுதிய வாழும் வரலாறு மல்லிகை ஜீவா பாவண்ணன் மகத்தான கனவு

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் வளவனூர்


அரசு நூலகத்தில் ஒருமுறை புத்தகத் தாங்கிகளில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்த சமயத்தில் தண்ணீரும் கண்ணீரும் என்னும் புத்தகத்தைப் பார்த்தேன்.

 அதன் அட்டையில் தண்ணீருக்கு அடையாளமாக ஒரு கிணறும் கண்ணீருக்கு அடையாளமாக அழுதுகொண்டிருக்கும் ஒரு பெண்ணும் கொண்ட சித்திரம் வரையப்பட்டிருந்தது. எதுகைமோனையோடு அமைந்திருந்த புத்தகத்தலைப்பும் வசீகரமான அட்டைப்பட சித்திரமும் அப்புத்தகத்தைப் படிக்கத் தூண்டின.

உடனே அப்புத்தகத்தை எடுத்துச் சென்று இரண்டு நாட்களிலேயே படித்தேன். அந்தச் சிறுகதைத்தொகுதியை எழுதியவர் பெயர் டொமினிக் ஜீவா (Dominic Jeeva). அந்தப் பெயரை அப்போதுதான் முதலில் பார்த்தேன். அவர் கதைகளும் அந்தப் பெயரும் அக்கணமே என் நெஞ்சில் பதிந்துவிட்டன. மேலும் சில ஆண்டுகள் கழித்து, நானும் ஓர் எழுத்தாளனாகி பத்திரிகைகளில் என் சிறுகதைகளும் வெளிவரத் தொடங்கிய சமயத்தில் அவருடைய பாதுகை என்னும் சிறுகதைத்தொகுதியையும் மல்லிகை பத்திரிகைப்பிரதிகளையும் படித்தேன். அந்த வாசிப்பின் வழியாக அவர் பெயர் என் மனதில் நிலைத்துவிட்டது.

பிறகுதான் அவரைப்பற்றிய விவரங்களை கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொண்டேன். யாழ்ப்பாணத்தில் மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர் அவர். ஐந்தாம் வகுப்பு வரையில் மட்டுமே படித்திருந்தாலும் சொந்த முயற்சியால் தேடித்தேடிப் படித்து தன் ஞானத்தை வளர்த்துக்கொண்டார். கடந்த நூற்றாண்டின் நாற்பதுகளின் இறுதியில் இலங்கைக்குச் சென்ற தமிழ்நாட்டு ஜீவாவின் கொள்கைகளாலும் பேச்சாலும் ஈர்க்கப்பட்டு பொதுவுடைமைக் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டார். டொமினிக் என்னும் தன் பெயரை டொமினிக் ஜீவா (Dominic Jeeva) என மாற்றியமைத்துக்கொண்டு எழுத்துமுயற்சியில் இறங்கினார்.

பவளவிழா நாயகன் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் முதுசொம் ! முருகபூபதி


பெப்ரவரி மாதம்  01 ஆம் திகதி தனது 75 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் எமது இனிய நண்பர் திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்களின் சேவைகளை பாராட்டும் முகமாக கொழும்பு தமிழ்ச்சங்கம் அவருக்கு பவளவிழா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. 

இவ்வேளையில் தொலை தூரத்திலிருந்து அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்:டு இந்தப்  பதிவை ஆரம்பிக்கின்றேன்.

கந்தசாமி அவர்களுடனான நட்புறவு எனக்கு 1997 ஆம் ஆண்டின் பின்னரே உருவானது.

  நண்பர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள்   என்று


ஏற்கனவே எனது பத்திகளில் குறிப்பிட்டிருக்கின்றேன்.  அவ்வாறு எனது நண்பர்கள் வட்டத்தில் இணைந்துகொண்டவர்தான் கலை, இலக்கிய ஆர்வலரும். சமூகப்பணியாளரும், கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிக்கு உரமூட்டிக்கொண்டிருப்பவருமான திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்கள்.

இவரது மனைவி சுபா சாமினி எங்கள் நீர்கொழும்பூரின் கல்விக்கலங்கரை விளக்கம், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் இசை ஆசிரியராக பணியாற்றத் தொடங்கிய காலத்தில், கந்தசாமி இவரது கரம் பற்றி இல்லறவாழ்வினை தொடங்கியிருந்தார்.

சுபா சாமினி எனது உடன்பிறந்த தங்கை  திருமதி பரிமளஜெயந்தி நவரட்ணத்தின் குடும்ப சிநேகிதி.  இவர்களது  திருமணத்தின் பின்னணியிலும் எனது தங்கை இருந்துள்ளார் என்பது எனக்கு பிந்திக்கிடைத்த செய்தி.

1987 முதல் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் நான், சுமார் பதினொரு வருடங்களின் பின்னர் 1997 இல் தாயகம் திரும்பியிருந்தவேளையில், எனது இலக்கியப் பிரவேச வெள்ளிவிழாவை முன்னிட்டு, என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவுக்கு மிகவும் விமரிசையாக ஒரு பாராட்டு விழாவை எங்கள் நீர்கொழும்பு இந்து இளைஞர் மண்டபத்தில் நடத்தினேன்.

அவ்விழாவுக்கு கொழும்பிலிருந்து பல எழுத்தாளர்கள் திரண்டு வந்திருந்தார்கள்.

இலங்கைச் செய்திகள்

தமிழ் தேசிய இனத்தின் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு போராளி மாவை சேனாதிராஜா - சி.வி.கே.சிவஞானம்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம்

தமிழ் மக்களுக்காக தன் வாழ்நாட்களை போராட்டங்களோடும் சிறைவாசங்களோடும் கடந்த சரித்திர நாயகன் - ஹிஸ்புல்லாஹ் எம்.பி.


மாவிட்டபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மாவையின் பூதவுடல்; ஞாயிற்றுக்கிழமை இறுதிக் கிரியைகள்!

தம்பலகாமம் படுகொலையின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்

ஒற்றுமையின் மூலமே எம்மால் முன்னோக்கி செல்ல முடியும் ; ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு  


தமிழ் தேசிய இனத்தின் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு போராளி மாவை சேனாதிராஜா - சி.வி.கே.சிவஞானம்

Published By: Vishnu

31 Jan, 2025 | 02:56 AM
image

தமிழ் தேசிய இனத்தின் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு போராளி மாவை சேனாதிராஜா என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.  

உலகச் செய்திகள்

அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

பாலஸ்தீன ஆதரவு செயற்பாட்டாளர்களை இலக்குவைக்குமாறு டிரம்ப் உத்தரவு - யூத எதிர்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முயற்சி

காசா மக்களை ஜோர்தான் எகிப்தில் மீள்குடியேற்றும் டிரம்பின் யோசனை - இரு நாடுகளும் நிராகரிப்பு

பணயக் கைதிகளாகயிருந்த 4 இஸ்ரேலிய இராணு வீராங்கனைகளை விடுதலை செய்தது ஹமாஸ் 


அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம் 

Published By: Digital Desk 3

30 Jan, 2025 | 10:12 AM
image

அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. நகரில் பயணிகள் விமானமொன்று ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது.

பிப்ரவரி 9, ஞாயிற்றுக்கிழமை: இனிய இலக்கிய சந்திப்பு

 





சஹஸ்ர கலச அபிஷேகம் சனிக்கிழமை, 8 பிப்ரவரி 2025

 



எல்லாம் வல்ல ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமானுக்கு சஹஸ்ர கலசாபிஷேகத்தின் முக்கியத்துவமானது, அனைத்து புண்ணிய நதிகளிலும் (தீர்த்த யாத்திரை) நீராடி, நமது பாவங்கள் அனைத்தையும் போக்கி, நம்மை நாமே சுத்திகரிக்கும் புனிதத்தை அளிக்கிறது!!
பிரமஸ்தானம், தேவஸ்தானம் மற்றும் மாஅனுஷஸ்தானம் ஆகிய பாதைகளை பிரித்து... சம்பந்தப்பட்ட தேவதைகள் மற்றும் தீர்த்த தேவதைகளை ‘1001 கலசங்களுக்கு’ பிரதிஷ்டை செய்வதன் மூலம் இது புனித நாளில் செய்யப்படுகிறது.

8 பிப்ரவரி 2025, சனிக்கிழமை நிகழ்ச்சி
08.30 AM - சங்கல்பம், புண்யாகவச்சனம் & கலச ஸ்தாபனம்.
09.00 AM - மூல மந்திர ஹோமம்
10.30 AM - அபிஷேகம் மற்றும் அலங்காரம் & சோடோச உபசாரம், அதைத் தொடர்ந்து வீதி உற்சவம்.
பிற்பகல் 1.30 - கருட சேவை