பக்குவமாய் காப்பியமாய் மலர்கிறதே பக்தியுடன் !

 










 




மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மெனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

 

 

உலகில் பல்மொழியிருக்கு உயரிலக் களுமிருக்கு

அம்மொழிக்குள் எம்மொழியாம் அன்னைமொழி ஒன்றாகும்

பல்மொழிகள் இருந்தாலும் பக்தியெனும் கருதன்னை

இலக்கியமாய் இயம்பும்மொழி எம்மொழியாம் தமிழொன்றே 

 

எம்மொழியும் சிந்திக்கா பக்தியினை பக்குவமாய்

இலக்கியத்தில் புகுத்தியது எம்மொழியின் சிறப்பாகும்

இலக்கியத்தின் வரலாற்றை எடுத்தியம்பும் ஆளுமைகள் 

பக்தியது வரலாற்றை பயபக்தியுடன் பார்க்கின்றார்

 

தமிழென்று சொன்னால் சைவமும் வந்துநிற்கும் 

வைணவமும் முன்வந்து வண்ணத் தமிழ்தழுவும் 

நாயன்மார் வந்தார்கள் ஆழ்வார்கள் வந்தார்கள்

அவர்களால் பக்தியது இலக்கியத்துள் புகுந்தது 

 

திருமுறைகள் வந்தன திவ்வியப்பிரவந்தமும் வந்தது 

அருணகிரி தமிழ்த்தேனும் ஆனந்தமாய் கலந்தது

தெய்வமாக் கதையெல்லாம் சிறப்பாக வந்தன

சிறப்புடைக் காப்பியங்கள் பக்தியாய் மலர்ந்தன 

எனது பார்வையில் கற்பகதரு நூல் வெளியீட்டு விழா!

 ஆங்கில ஆண்டு 2024, மாதம் ஆறு திகதி இரண்டு, நேரம் பிற்பகல்


நான்கு மணியளவில்  கரம்ஸ்டவுன் சிவா விஷ்ணு ஆலயத்தின் பீகொக் மண்டபத்தில் கற்பகதரு நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது.

இயற்கையின் சுழற்சியால் மெல்பனில் குளிர்காலம் தொடங்கியிருந்தது. மயக்கும் மாலைப்  பொழுது மெல் பனில் குளிர்காலத் தொடக்கத்தில் அதிக குளிரின்றி வெயில் வெண்சாமரம் வீசியது. மகிழுந்திலிருந்து இற ங்கி மண்டப த்துக்குள் நுழைந்தேன். ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மண்டபத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த நூலா சிரியர் திரு. ஜெயராமசர்மா புன்முறுவல் தாங்கிய இன்முகத்தோடு வரவேற்றார்.

நான்கு மணியிலிருந்து மக்கள் வந்து கொண்டிருந்தனர். மங்கல

விளக்கேற்றல் மற்றும் வரவேற்புரையைத் தொடர் ந்து திரு. மாவை நித்தியானந்தன் அவர்கள் பொன்னாடை  போர்த்தி கௌரவிக்கப் பட்டார். அத ன்பின் அவர் தனது வாழ்த்துரையை வழங்கினார்.  " ஜெயராமசர்மாஎ எனக்கு நல்ல நண்பர். எங்கள் பாரதி பள்ளியின் கற்றல் , கற்பித்தல் செயற்பாட்டுக்குப் பலவழிகளில் உதவி இருக்கிறார். அவரின் ஆற்றலை , அவரின் பெறுமதியை - யாவரும் அறியாமல் இருக்கிறார்கள். அவர் அமைதியாய் தனது பணிகளை ஆற் றிக் கொண்டிருக்கிறார். அவரை நாங்கள் அனைவரும் சரியாகப் பயன் படுத்திக் கொள் ளுவது அவசியம். ஜெயராமசர்மா ஒரு நல்ல மனிதர்  " என்று   வாழ்த்துரையில் மாவை நித்தியானந்தன்  அவர்கள் சுட்டிக் காட்டிப் பேசினார்.  
தலைமையேற்ற எனக்கும் பொன்னாடை போர்த்தி பரிசுப் பொருளும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டேன்.
அதன்பின் திரு. ஜெயராமசர்மா எழுதிய கற்பகதரு நூலை நான் வழங்க அவர் முதல் பிரதியை பெற்றுக் கொண் டார்.  அதனைத் தொடர்ந்து நான் ஆற்றிய தலைமையரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

அன்னைத் தமிழுக்கும் ஆசான் வள்ளுவனுக்கும் இங்கு இன்பமுடன் வீற்றிருக்கும் ஈடற்ற தமிழன்பர்களுக் கும் உள்ளத்தே தோன்றி ஊற்றெனப் பெருக்கெடுக்கும் என் அன்பின் வணக்கத்தை ஏற்புடையதாக்கி வணங்குகிறேன். ஒப்பற்ற தமிழில் ஓங்குபுகழ் நீதி சொல்ல ஔவை எழுத ஏடு தந்த தரு யாதெனில் அஃதே கற்பகதரு என்பேன்.

`கற்பகதரு’ ` கே.எஸ்.சுதாகர்


தமிழக அரசின் மொழியியல் விருதாளரான திரு. ஜெயராமசர்மா அவர்கள் பேராதனைப்பல்கலைக்கழக தமிழ் சிறப்புப் பட்டதாரி ஆவார். அத்துடன் கல்வியியல் சமூகவியல் துறைகளில் டிப்ளோமா, கற்பித்தல் நுணுக்கத்தில் முதுதத்துவமானி பட்டங்களைப் பெற்றவர். இவர் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், தமிழ் – இந்து கலாசார விரிவுரையாளர், ஆசிரிய ஆலோசகர், வானொலி அறிவிப்பாளர் எனக் கடமை ஆற்றியுள்ளார்.

இதுவரை இருபத்திரண்டு நூல்கள், இருபது நாட்டியநாடகங்கள், பத்து வில்லுப்பாட்டுகள், பல ஓரங்க நாடகங்கள், கோவில்களுக்கான திருப்பொன்னூஞ்சல்கள் எழுதியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.06.2024) இவரது


‘கற்பகதரு’ கட்டுரை நூல் வெளியீடு, அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் அமைந்துள்ள ‘சிவா – விஷ்ணு’ ஆலய ‘மயில் மண்டபத்தில்’ திரு சங்கர சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அரங்கம் நிறைந்த தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் மத்தியில் இனிதே நடைபெற்ற இப்புத்தக வெளியீட்டின்,  வாழ்த்துரையை மாவை நித்தியானந்தன் அவர்களும், நூல் ஆய்வுரையை திரு சண்முகம் சந்திரனும் நிகழ்த்தினார்கள்.

பனையைப் பற்றிப் பலரும் எழுதிய புத்தகங்கள் - தரவுகள் சார்ந்ததாகவும், ஆராய்ச்சி நிமிர்த்தமும், பிரச்சார நோக்கிலும் அமைந்தவை. திரு.ஜெயராமசர்மா அவர்கள் எழுதிய `கற்பகதரு என்ற இந்தப் புத்தகம் பனை பற்றிய முழுமையான தகவல்கள் கொண்ட ஒரு பெட்டகமாகும்.

இலக்கியத்தில் ஆரம்பித்து இனிக்கும் பனையுடன் நிறைவு பெறும் இந்நூல் - பனையின் வரலாறு, அதன் பயன்பாடு, அதன் முக்கியத்துவம் எனப் பத்து அத்தியாயங்களில், நாற்பது சுவைகளைக் கொண்டுள்ளது.

இந்தப் புத்தகம், என்னைப் போலவே, பலருக்கும் தமது இளமைக்கால நினைவுகளை மீட்டித்தரும். பனை மரம் பற்றிய இத்தனை தகவல்களையும் எம்மால் மனதிறுத்தி வைத்திருப்பது என்பது மிகச் சிரமமான காரியம் ஆகும். வேண்டும்போது புரட்டிப் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் ஒரு ஆவணமாக, திரு ஜெயராமசர்மா அவர்களின் கடும் முயற்சியினால் உழைப்பினால் உருவாகியிருக்கின்றது இந்தக் `கற்பகதரு நூல். இத்தனை தகவல்களையும் ஒருசேரத் திரட்டித் தருவதற்கு ஆசிரியர் எவ்வளவு தேடல்களைச் செய்திருக்க வேண்டும்! ஆச்சரியமாக இருக்கின்றது. ஆசிரியரின் இந்த முயற்சி பாராட்டுதற்குரியது. நின்று நிலைக்கக்கூடிய புத்தகமாக திகழும் இந்தப் புத்தகம் பலரிடமும் போய்ச் சேர வேண்டும், பலரும் வாசித்துப் பயன் பெற வேண்டும் என்பது எனது விருப்பம். திரு ஜெயராமசர்மா அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

 

எழுத்தாளர், யூனியன் கல்லூரி முன்னாள் அதிபர் கதிர்.பாலசுந்தரம் இறைபதம் அடைந்தார் - கே.எஸ்.சுதாகர்


யூனியன்கல்லூரி, 1816 ஆம் ஆண்டளவில் வட அமெரிக்காவிலிருந்து மதம் பரப்ப வந்த திருச்சபையினர் வடபகுதியில் ஆரம்பித்த முதல் ஆங்கிலப்பாடசாலை ஆகும். இந்தப்பாடசாலையின் அமெரிக்க வெள்ளை முதல்வர்களை அடுத்து வந்த முதல் சுதேச அதிபர் ஐ.பி.துரைரத்தினம். நான்காவது அதிபர் கதிர்.பாலசுந்தரம். இவர் ‘Saturday Review’ என்னும் ஆங்கிலவாரச் சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தினால் யாழ் குடாநாட்டின் அதிசிறந்த அரசாங்க பாடசாலை அதிபர் எனப் போற்றப்பட்டவர். யாழ்ப்பாணம் ஆவரங்கால் என்னுமிடத்தில் பிறந்த கதிர்.பாலசுந்தரம், அறுபதுகளின் நடுப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்று கலைப் பட்டதாரியானார். லண்டன் பல்கலைக்கழக இடைக் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றவர். இலங்கையின் பல்வேறு பாகங்களில் பல்வேறு தொழில்கள் புரிந்த இவர், 1951 முதல் அரசினர் பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றினார். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் 1972 ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, 1979 முதல் யூனியன் கல்லூரியில் ஒரு தசாப்தகாலம் கல்வி நிர்வாக சேவை அதிபராகப் பணிபுரிந்தவர்.

 சிறுகதை, வானொலி நாடகம், மேடை நாடகம், நாவல், வாழ்க்கை


வரலாறு என்று பல்துறையிலும் தடம் பதித்த எழுத்தாளர். இவர் எழுதி நெறிப்படுத்திய நாடகங்களில் ‘விஞ்ஞானி என்ன கடவுளா?
’, ’சாம்பல் மேடு’, ‘விழிப்புஎன்பவை வித்தியாசமான சமூகப்பார்வை கொண்டவை. ‘விஞ்ஞானி என்ன கடவுளா?’, ‘விழிப்பு என்ற நாடகங்கள் வானொலி நாடகங்களாக வந்து பாராட்டுப் பெற்றவை. எழுபதுகளின் ஆரம்பத்தில் இவரது படைப்புகள் சிரித்திரன், றோசாப்பூ போன்ற சஞ்சிகைகளில் பிரசுரமாகின. ஆங்கிலமொழியிலும் எழுதும் இவர் ‘அந்நிய விருந்தாளிசிறுகதைத் தொகுப்பு, ‘மறைவில் ஐந்து முகங்கள், ‘கனடாவில் ஒரு நவீன சாவித்திரி, ‘சிவப்பு நரிநாவல்கள், ‘அமிர்தலிங்கம் சகாப்தம், ‘சாணக்கியன்  வாழ்க்கைச் சரிதைகள் , ’சத்தியங்களின் சாட்சியம்ஆய்வு நூல் மற்றும்The Five Hidden Faces’, His Royal Highness, The Tamil Tigerஎன்ற ஆங்கிலநாவல்களையும் படைத்துள்ளார்.

 யாழ் இலக்கியவட்ட வெளியீடாக வந்த ‘அந்நிய விருந்தாளிஎன்ற சிறுகதைத்தொகுதிக்கு முன்னுரை எழுதிய பேராசிரியர் கலாநிதி சு.வித்தியானந்தன் ---இவரது கதைகளை வாசிக்கும் ஒருவருக்குச் சமகால யாழ்ப்பாண மண்ணின் மணம் நன்கு புலனாகும். நாம் மண்ணில் அன்றாடம் சந்திக்கும் மாந்தரைக் கதாபாத்திரமாக்கி ஆசிரியர் நடமாடவிட்டுள்ளார். பிரதேசப் பேச்சுவழக்கு ஆசிரியருக்கு நன்கு கைகொடுத்து உதவியுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. கதைகளை அமைக்கும் முறையிலே வெவ்வேறுவகை உத்திகளை ஆசிரியர் கையாண்டுள்ளார். பெரும்பாலும் ஒவ்வொருகதையும் ஒவ்வொரு உத்தியில் அமைந்துள்ளது--- என்கின்றார்.

இன்னும் கன்னியாக பாடும் மீன் சு.ஶ்ரீகந்தராஜாவின் சிறுகதைத்தொகுதி வாசிப்பனுபவம் கானா பிரபா

 இன்னும் கன்னியாக

பாடும் மீன் சு.ஶ்ரீகந்தராஜாவின் சிறுகதைத்தொகுதி
வாசிப்பனுபவம் கானா பிரபா 
IMG_4171.JPG
சட்டத்துறையில் இயங்கும் பாடும் மீன் சு.ஶ்ரீகந்தராஜா அவர்கள் அவுஸ்திரேலிய மண்ணில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வாழ்பவர், கவிஞராக அதிகம் அறியப்பட்டாலும் ஆழ்ந்த இலக்கியமும், தமிழ்ப் பற்றும் மிக்க புலமையாளர். மடை திறந்தது போலப் பேச்சாற்றல் மிக்கவர்.
இவருடைய ஆளுமைத் திறத்துக்கு இவர் ஆக்கியளித்த அச்சுவடிவில் வந்த நூல்கள் மிகச் சிலவே.

இன்று அவருடைய இன்னொரு பரிமாணமாக “இன்னும் கன்னியாக” என்ற சிறுகதைத் தொகுதியைப் பற்றிய எனது வாசிப்பனுபவத்தைப் பகிர வந்துள்ளேன்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் உரையை இந்த நூல் வெளியீட்டு விழாவின் தலைமையுரையில் எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்கள் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.

அதன் நீட்சியாக “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது போலவே இந்தச் சிறுகதைத் தொகுதியின் ஒன்பது கதைகள் அமைந்திருக்கின்றன.

“இன்னும் கன்னியாக”
இந்தப் புத்தகத் தலைப்பே இதற்குள் அடக்கப்பட்டிருக்கும் சிறுகதைகளைப் பற்றிக் கோடிட்டுக் காட்டி விடும்.
அவ்வளவு தூரம் பெண்ணியம் சார்ந்த, பெண்களுக்கு நேரும் பல்வேறு சவால்களை, குறிப்பாகத் திருமணம் முடித்த பெண்களின் கதைகளாக அமைந்திருக்கின்றன.

பக்தியினூடாகச் சமுதாயச் சீர்திருத்த கருத்துக்களை துணிந்து காட்டியவர் சேக்கிழார் பெருமான்

 

















மகாதேவ ஐயர் 
ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 
  


  " பக்திச் சுவை நனி சொட்ட சொட்ட " பாடியதால் சேக்கிழார் சிறப்புப் பெறுகிறாரா?  புதிய உத்தியைக் கையாண்டதால் சேக்கிழார் உயர்ச்சி பெறுகின்றாரா? முதலமைச்சர்   ஆகவிருந்தமையால் சிறப்புப் பெறுகின்றாரா?புரட்சிகரமான கருத்துக்களை முன் வைத்          தமையால் சிறப்பும் உயர்வும் பெறுகின்றாரா?அல்லது பெரியபுராணத்தைத் தந்தமை யால் சிறப்பும் உயர்வும் பெறுகின்றாரா? என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா ?        

      பேரரசு உருவாகி அந்தப்பேரரசுக்கு புகழ்மாலைகள் பெருகும் பொழுது ஆட்சியாள  ர்கள் தம்மை மறப்பது இயல்புதான். ஆனால் இந்தநிலையத் தொடரவிட்டால் குறிக்கோ  ள்கள் இல்லாமலே கெட்டழிந்தும் போய்விடலாம்.போர் வெற்றியாலும், அதனால் ஏற்ப      டும் பேராசையினாலும் அந்தப்பேரரசு தன்னை ஒருநாளும் தழர்வடையச் செய்யும்படி நடந்து கொள்ளவும் கூடாது.ஆனால் இதனை எந்தவொரு அரசும் நோக்கியதாகத்தெரி யவில்லை.தளர்வுறும் வேளை அந்த நாட்டுமக்களையும் அப்போது உள்ள அரசர்களை            யும் நல்வழிப்படுத்துதல் மிகவும் முக்கியமானதாகும்.இதனை முதலமைச்சராக இருந்த  அனுபவம் மிக்க சேக்கிழார் தம்வசம் எடுத்துக்கொண்டார். இதனால் பெரியபுராணம்     பிறந்தது எனலாம்.                                             

         பிற்காலச் சோழமன்னரது போக்கை சேக்கிழார் விரும்பவில்லை.அவர்களின் மனோபாபம் வேறுவிதமாகப் போவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.     அவர்களுக்கு நல்ல வழியைக் காட்டினால்த்தான் மக்களும் நாடும் மீண்டும் பழைய நிலைய அடையமுடியும் என்று கருதினார். எனவே மன்னர் மனம்மாற, மக்கள் விழிப் புப்பெற ,அவர்கையாண்டவழிதான்--- ஆண்டவன் அடியாரை அறிமுகப் படுத்தும் அதி உன்னத பணியான பெரியபுராணமாக அமைந்தது." குடிஉயரக் கோனுயர்வான் " இதை        நன்கு அறிந்தவராகச் சேக்கிழார் இருந்தபடியால் குடிகள் உயர்வுபெற வேண்டுமானால்        கோன் -- அதாவது அரசர்களை உயிர்ப்பூண்டவேண்டும் என எண்ணினார்.அதனால் மன் னர்மனத்தில் இறையுணர்வை ஊட்டுவதே மிகச்சிறந்தவழி என்று அதனை மையமாகக்         கொண்டு சுவைபட ஒருகாவியத்தை ஆக்கினார்.        

ஈழத்துப் புலமைசார் ஆளுமை திரு.கதிர் பாலசுந்தரம் நினைவேந்தல் - கானா பிரபா

 கடந்த ஜூன் மாதம் 1 ஆம் திகதி மறைந்த யாழ்.தெல்லிப்பழை


யூனியன் கல்லூரியின் பொற்கால ஓய்வு நிலை அதிபரும், எழுத்தாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான திரு.கதிர் பாலசுந்தரம் அவர்களது நினைவேந்தலை ஒருங்கமைத்து அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானலைகளில் பகிர்ந்திருந்தேன்.

இந்தப் பகிர்வில் கனடாவில் இருந்து "சிந்தனைப்பூக்கள்" திரு.எஸ்.பத்மநாதன், மற்றும் மெல்பர்னில் இருந்து எழுத்தாளர் லெ.முருகபூபதி ஆகியோர் தமது பகிர்வுகளை வழங்கிருந்தார்கள்.
அந்த ஒலிப் பகிர்வைக் கேட்க



முதல் சந்திப்பு அவுஸ்திரேலியாவிலிருந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் புனைவிலக்கியம் படைக்கும் தேவகி கருணாகரன் ! முருகபூபதி


நீர்கொழும்பில்  முன்னர்  தமிழர்கள் வாழ்ந்தார்களா..? என்று இன்றும் கேட்கும் தமிழர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள்.

இதுபற்றி ஏற்கனவே நான் தொகுத்து வெளியிட்ட நெய்தல் நூலில் விரிவாக எழுதியிருக்கின்றேன்.

எனது இந்த முதல் சந்திப்பு தொடரில் இடம்பெறும் எழுத்தாளர் தேவகி கருணாகரனின் பெரிய தந்தையார்  சண்முகம் கதிர்வேலு விஜயரத்தினம் ( எஸ். கே. விஜயரத்தினம் ) அவர்கள் 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எங்கள் நீர்கொழும்பூரின் நகரபிதாவாக ( மேயர் ) இருந்தார் எனச்சொன்னால், இக்கால தலைமுறைத் தமிழர்கள் நம்புவார்களா..?

அவர் நீர்கொழும்பு கடற்கரை வீதியிலமைந்திருந்த இந்து வாலிபர்


சங்க மண்டபத்தில்  தலைவராக இருந்தபோதுதான் 1954 ஆம் ஆண்டு விஜயதசமியின் போது எனக்கும் ஏடுதுவக்கி வித்தியாரம்பம் செய்வித்து ,  விவேகானந்தா வித்தியாலயம்  அன்று தொடங்கியது.

அவரது தம்பி எஸ். கே. சண்முகமும்    புதல்வன் ஜெயம் விஜயரத்தினமும்  நீர்கொழும்பு  மாநகர சபையில்  அந்த மூன்றாம் வட்டாரத்தை பிரதிநிதித்துவம் செய்தவர்கள்.

32 தமிழ்க்குழந்தைகளுடன் ஆரம்பமான அந்த வித்தியாலயம்தான் பின்னாளில் அதன் ஸ்தாபகர் விஜயரத்தினம் அவர்களின் பெயரில் வடமேற்கில்  இன்றும் ஒரே ஒரு இந்து தமிழ் கல்லூரியாகத் திகழுகின்றது.

இந்தப்பின்னணிகளுடன்தான்   அவுஸ்திரேலியாவில் நான் வாழத்தலைப்பட்ட பின்னர் எனக்கு தேவகி கருணாகரன் அறிமுகமானார்.

எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஒரு  எழுத்தாளர் விழாவின்போதுதான் இவரை முதல் முதலில் சந்தித்தேன்.  எமது சங்கத்தின்  ஆயுள்கால உறுப்பினராக இணைந்துகொண்டவர்.

தேவகியின் கணவர் கருணாகரன் பல்மருத்துவர்.  இவருக்கும் புகழ் பூத்த பின்னணியிருக்கிறது.  கருணாகரனும் கலை, இலக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.

கருணாகரனின் சகோதரர்கள்தான் கட்டிடக் கலைஞர் வி. எஸ். துரைராஜா,  மற்றும் எழுத்தாளர் வி. எஸ். கணநாதன்.  திருமதி சகுந்தலா கணநாதனும் எழுத்தாளர்தான்.

தேவகி கருணாகரனின் புதிய வரவாக வெளிவந்துள்ள யாழினி நூலுக்கு முகப்போவியம் வரைந்தவர், வி. எஸ். துரைராஜாவின் புதல்வி மஞ்சுளா ஶ்ரீபத்மா. வி. எஸ். துரைராஜா கதை எழுதி,  தயாரித்து திரைப்படமான குத்துவிளக்கு பற்றியும் அறிந்திருப்பீர்கள்.

வன்னி ஹோப் - சிட்னி முருகன் வாழ்வாதார அபிவிருத்தி மன்னார் மாவட்டம் 0624

 


சிட்னி முருகன் கோவில் மனிதாபிமான நிதியத்தின் ஆதரவுடன் நிலையான வாழ்வாதார மேம்பாட்டு முயற்சியின் கீழ் எங்களின் சமீபத்திய திட்டத்தை வன்னி ஹோப் பெருமையுடன் முன்வைக்கிறது. மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேசத்தில் தன்னிறைவை வளர்ப்பதற்கும் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இந்த திட்டம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

வன்னி ஹோப் பயனாளிகளை சந்திக்கவும்: • ஏ. யோகராசா மொராயஸ் - தனது சொந்த வியாபாரத்தை (
kickstart) கிக்ஸ்டார்ட் செய்வதற்கும் நிலைநிறுத்துவதற்கும் அத்தியாவசியமான கடைப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

• கருப்பையா - தனது விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்த புதிய தண்ணீர் பம்ப் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தக் கருவிகள் வெறும் உதவிகள் அல்ல; அவர்கள் இந்த கடின உழைப்பாளிகள் மற்றும் அவர்களின் சமூகங்களின் வளர்ச்சியின் விதைகள். அவர்களின் கதைகளையும் இந்தத் திட்டத்தின் தாக்கத்தையும் காண வன்னி ஹோப் வீடியோவைப் பார்க்கவும்.


பொருளாதார சுதந்திரத்தை நோக்கிய அவர்களின் படிகளைக் கொண்டாடுவதில் வன்னி ஹோப் டன் சேருங்கள்!

படித்தோம் சொல்கின்றோம்: கனடா தேசத்தின் நிலக்காட்சியையும் பல்லின மக்களின் ஆத்மாவையும் சித்திரிக்கும் வ. ந. கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் கதைத் தொகுதி ! முருகபூபதி


வாசிப்பு அனுபவம், ஆளாளுக்கு வேறுபடும்.  ஒரு  எழுத்தாளரின் புனைவு இலக்கியப் படைப்பினைப் பற்றி,  சாதாரண வாசகர் கொண்டிருக்கும் ரசனைக்கும்,  மற்றும் ஒரு எழுத்தாளர் வைத்திருக்கும்  பார்வைக்கும்  இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

கனடாவில் வதியும் வ. ந. கிரிதரனின் கதைத் தொகுதியான கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் நூலை நான் படித்தபோது,  வாசகர் மனநிலையிலும்,  படைப்பாளி மனவுணர்வுடனும்தான் படிக்க நேர்ந்தது.  

சரியாக ஓராண்டுக்கு முன்னர், 07-06-2023 ஆம் திகதி கனடா ஸ்காபரோவில் என்னைச் சந்தித்து விருந்துபசாரம் வழங்கியபோது, அவர் என்னை வாழ்த்தி தனது கையொப்பத்துடன் தந்த இந்த நூல் பற்றி,  ஒரு வருடம் கழித்து எழுது நேர்ந்தமைக்கு, இந்த இடைப்பட்ட காலத்தில் எனக்கிருந்த பணிச்சுமைகள்தான் அடிப்படைக் காரணம்.

எனக்கிருக்கும் பணிச்சுமைகளுக்கு மத்தியில்தான் கிடைக்கும்


நூல்களைப்பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை படிப்படியாக பதிவுசெய்வதற்கும் நேரம் தேட வேண்டியிருக்கிறது !

யாழ்ப்பாணம் ஜீவநதியின் 194 ஆவது  வெளியீடாக வந்திருக்கும்  கிரிதரனின் கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பதிப்பினைக் கண்டுள்ளது.

தனது பத்து வயதுப் பராயத்திலிருந்தே இலக்கியப் பிரதிகளை எழுதிவரும் கிரிதரன், கனடாவுக்கு புலம் பெயர்ந்த பின்னரும் எழுத்தூழியத்திற்கு ஓய்வு தராமல், தொடர்ந்தும் எழுதிவருகிறார்.  பதிவுகள் இணைய இதழை கடந்த கால் நூற்றாண்டு காலமாக நடத்திவரும் கிரிதரன், அதன் மூலம் உலகெங்கும் வாழும் படைப்பிலைக்கியவாதிகளுக்கு போதியளவு களம் வழங்கி வருகிறார்.

கிரிதரனின் படைப்புகள் இலங்கை, புகலிட நாடுகள் மற்றும் தமிழகத்திலிருந்து வெளியாகும் ஊடகங்களிலும் வெளியாகின்றன.

தமிழகப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் இவரது படைப்புகளைப்பற்றி முனைவர் பட்ட, தத்துவமானிப் பட்டப்படிப்புகளுக்காக ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொந்துப்பறவைகள் சிறுகதை, சிங்கப்பூர் கல்வி அமைச்சினால் உயர் கல்வித் தமிழ்ப்பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் தொகுப்பில் 25 சிறுகதைகளும் இரண்டு குறுநாவல்களும் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் சிலவற்றை ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் நான் படித்திருந்தாலும், மீண்டும் இத்தொகுப்பில் படிக்கின்றபோது,  புதிதாக படித்தமை போன்றதோர் உணர்வினையே தருகின்றன.

தமது தாயகம் விட்டுச்சென்றவர்களில் பெரும்பாலான எழுத்தாளர்கள் தொடர்ந்தும் தங்கள் தாயகம் பற்றிய நினைவுகளுடன்தான் எழுதுகிறார்கள் என்ற குறையை அண்மைக்காலமாக சில தமிழக விமர்சகர்கள் முன்வைத்து வருகிறார்கள்.

தமிழர்களின் தேவை

 June 4, 2024

விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியலை தீர்மானித்த காலத்தில் தமிழர்களின் அரசியல் உலகால் உற்றுநோக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் இராணுவ பலமே அதற்கான காரணமாகும்.
2009இல் அந்தப் பலம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
ஒட்டு மொத்த உலக ஆதரவையும் விடுதலைப் புலிகள் இழந்திருந்த சூழலில்தான் இலங்கையால் இராணுவ வெற்றியை பெற முடிந்தது.
ராஜபக்ஷக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடித்தார்கள் என்பது சிங்கள மக்களால் நம்பப்பட்ட ஒரு கதையாக இருப்பினும்கூட உலகின் ஆதரவில்லாது இருந்திருந்தால் அவ்வாறான ஒரு வெற்றியை ராஜபக்ஷக்கள் பெற்றிருக்கவே முடியாது.
விடுதலைப் புலிகள் ஜனநாயக நீரோட்டத்துக்குள் வரவேண்டும் என்பதே மேற்குலகின் எதிர்பார்ப்பாக இருந்தது.
எனினும், மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றியானது மேற்குலகின் சமாதான முன்னெடுப்புகளை சீர்குலைத்தது.
இவ்வாறானதொரு நிலையில் அனைவரின் கோபமும் விடுதலைப் புலிகள் மீதே திரும்பியது.
இந்தப் பின்புலத்தில்தான் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா ஆகிய நாடுகள் விடுதலை புலிகள் இயக்கத்தை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டன.
புலம்பெயர் சமூகத்தால் எதனையும் செய்ய முடியவில்லை.
யுத்தம் முடிவுற்று பதினைந்து வருடங்கள் கழிந்த பின்னர்கூட விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படவில்லை.
மேற்குலக நாடுகளில் தமிழ் மக்கள் உரிமைகள் சார்ந்து சுதந்திரமாக செயல்பட முடிந்தாலும்கூட விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் மேற்குலகம் ஒன்றாக நோக்கவில்லை.

தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் தீர்வு

 June 8, 2024

தான் ஜனாதிபதியானால் நாட்டின் இறையாண்மைக்கு பாதகமில்லாமல் தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை வழங்குவேன் – என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்திருகின்றார். அதேவேளை தமிழ், முஸ்லிம் மக்கள் தன்னைத்தான் ஆதரிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார். முதலில் நாட்டின் இறையாண்மை என்பதால் சஜித் என்ன புரிந்து கொள்கிறார் என்பது முக்கியம். ஏனெனில், நாட்டின் இறையாண்மை என்னும் பெயரில் பெரும்பாலான விடயங்களை நிராகரிக்க முடியும். உதாரணமாக அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பொலிஸ் அதிகாரத்தை நிராகரிக்க முடியும் – வடக்கு, கிழக்கு இணைப்பை நிராகரிக்க முடியும் – இவ்வாறு பல விடயங்களை எதிர்க்க முடியும் அல்லது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனையோர் அவ்வாறு எதிர்கின்றபோது அதனை மௌனமாக அங்கீகரிக்க முடியும்.

கடந்த காலத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறைமை என்னும் பெயரில்தான் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. யுத்தம் நிறைவுற்று பதினைந்து வருடங்களாகின்றன. இந்தக் காலத்தில் தமிழ் மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் முயற்சிக்கு மாறாக மேலும் புதிய பிரச்னைகளை ஏற்படுத்தும் விடயங்களே நடைபெற்றிருந்தன. வடக்கு, கிழக்கில் பௌத்தமயமாக்கல் தீவிரப் படுத்தப்பட்டன. சிறியசிறிய பிரச்னைகளுக்கு தீர்வை தேடும் நிலைமை திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த விடயங்களில் சஜித் பிரேமதாஸவுக்கு நேரடியான தொடர்பு இல்லையென்று கூற முடியுமானாலும் இந்தக் காலத்தில் நடைபெற்ற பல பிரச்னைகளின்போது அதனை கண்டிக்கும் பலமான குரலாக சஜித் இருந்திருக்கவில்லை. இதேபோன்றுதான் ரணில் விக்கிரமசிங்கவும் இருந்தார்.

தேர்தல் காலங்களில் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் தீர்வுக்கு ஆதரவாக பேசுவதும் – அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் எதிர்ப்பை கருத்தில் கொண்டு பின்வாங்குவதும் தென்னிலங்கை அரசியலுக்கு புதிதல்ல. இதன் காரணமாகவே தென்னிலங்கை வேட்பாளர்கள் எவரையும் நம்ப முடியாதென்னும் குரல்கள் தமிழ் மக்கள் மத்தியில் மேலெழுந்திருக்கின்றன. தேர்தல் காலவாக்குறுதிகளை நம்பக்கூடிய நிலையில் தமிழ் மக்கள் இருக்க வேண்டுமென்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் கருதக்கூடாது. ஏனெனில், கடந்த காலங்களில் ஒரு தீர்வை நோக்கி செல்வதற்கு விடுதலைப் புலிகள் தடையாக இருக்கின்றனர் என்றே கூறப்பட்டு வந்திருக்கின்றது.

முரடன் முத்து - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், இயக்குனர் பி ஆர் பந்துலுவும்


திரையுலகில் மிக நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தவர்கள். சிவாஜிக்கு முன்பே சினிமாத் துறைக்குள் நடிகராக நுழைந்து விட்ட பந்துலு கால வெள்ளத்தில் தயாரிப்பாளராகவும் , இயக்குனராக மாறினார். அப்படி மாறியவர் உருவாக்கிய கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, சபாஷ் மீனா, தங்கமலை ரகசியம் போன்ற படங்களில் சிவாஜி முழு ஒத்துழைப்பையும் கொடுத்தது நடித்து கொடுத்து அப் படங்கள் வெற்றி பெற துணை நின்றார். தனது நீண்ட கால ஆசையான வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை தயாரித்து இயக்கும் வாய்ப்பை பந்துலுவுக்கு கொடுத்த சிவாஜி பின்னர் கப்பலோட்டியத் தமிழன் பாடதில் நடித்து , அந்தப் படம் வெற்றி பெறாமல் போகவே உடனடியாக குறுகிய காலத் தயாரிப்பாக பலே பாண்டியாவில் இலவசமாக நடித்து கொடுத்தும் உதவினார்.


தொடர்ந்து இருவரும் இணைந்த கர்ணன் படம் வசூல் ரீதியில்

பின்னடைவை சந்திக்கவே உடனடியாக மற்றும் ஒரு படத்தில் நடித்தது கொடுக்க முன் வந்தார். அப்படி உருவான படம் தான் 1964ல் வெளிவந்த முரடன் முத்து. ஆனால் இந்தப் படம்தான் சிவாஜிக்கும், பந்துலுவுக்கும் இடையில் இருந்த நட்புக்கு உலை வைத்தது.

முரடன் முத்து படத்தை தயாரித்து இயக்கத் தொடங்கிய பந்துலு அதே படத்தை ஒரே நேரத்தில் கன்னடத்திலும் சின்னடா கொம்பே ( தங்க பொம்மை ) என்ற பெயரில் உருவாக்கலானார். இந்தப் படத்தின் கதாநாயகியாக அவரால் புதுமுகமாக அறிமுகம் செய்ய்யப் பட்டவர் தான் தங்க பொம்மை போல் தோற்றமளித்த ஜெயலலிதா. இதுதான் அவரின் முதல் படமுமாகும். ஆனால் தமிழில் முரடன் முத்துவின் காதலியாக நடித்தவர் தேவிகா. கன்னடத்தில் ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு கொடுத்த பந்துலு தமிழில் எனோ அதனை வழங்கவில்லை. இல்லை என்றால் ஜெயலலிதாவின் முதல் படமாகவும், அவரின் முதல் ஜோடியாக சிவாஜியும் நடித்திருப்பார். ஆனாலும் அவ்வாறு நடக்காமல் அதே பந்துலுவால் பின்னர் எம் ஜி ஆருடன் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜோடி சேரும் வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு கிடைத்தது. பின்னர் நடந்தவை வரலாறு!

உலகச் செய்திகள்

சீனா, இத்தாலி, நேபாளம், இலங்கை உட்பட உலக தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து

காசாவில் ஐ.நா. புகலிடம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 40க்கும் மேற்பட்டவர்கள் பலி

சுவிஸ் அமைதி மாநாடு: செலன்ஸ்கி அழைப்பு

மத்திய காசாவில் இஸ்ரேலின் புதிய படை நடவடிக்கையில் 75 பேர் பலி

இஸ்ரேலியருக்கு மாலைதீவு தடை

தாய்வானைச் சூழ சீனாவின் செயற்பாடுகள் அதிகரிப்பு

ஒன்பதாவது மாதத்தைத் தொட்ட காசா போரில் அகதி முகாம்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை



சீனா, இத்தாலி, நேபாளம், இலங்கை உட்பட உலக தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து

June 6, 2024 9:50 am 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 3ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இலங்கைச் செய்திகள்

யாழில் மோடியின் வெற்றியை கொண்டாடிய சிவசேனை அமைப்பு

முல்லைத்தீவுக்கான விஜயம் மேற்கொண்ட மார்க் என்ட்ரோ பிரஞ்ச்

செய்மதி மூலம் இணையம்: எலொன் மஸ்க்கின் Starlink நிறுவனத்திற்கு அனுமதி

சனத் ஜயசூரியவின் தாயின் இறுதிக்கிரியை

5 மாதங்களில் 25,000 டெங்கு நோயாளிகள் அடையாளம்; 9 பேர் உயிரிழப்பு

ஜெனரல் ஷவேந்திர சில்வா மீண்டும் நியமனம்

வெளி நாடுகளிலிருந்து வருவோர் வீசாக்கள் இருப்பதாக பெரும் மோசடி


யாழில் மோடியின் வெற்றியை கொண்டாடிய சிவசேனை அமைப்பு

June 5, 2024 9:59 am 0 comment

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றிப் பெற்றதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமுகமாக இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகளின் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு யாழ். நகரிலுள்ள வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

NSW தமிழ் பொறியாளர்கள் அறக்கட்டளை - எந்திர மாலை 2024

 


இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 39

 


இலக்கியவெளி 

நடத்தும்

இணையவழிக்  கலந்துரையாடல் - அரங்கு 39

“குரு அரவிந்தனின் படைப்புக்கள்

 நாள்:         சனிக்கிழமை 15-06-2024       

நேரம்:     

 இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30      

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

 வழி:  ZOOM

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

சிறப்புப் பேச்சாளர்கள்:

 கலாநிதி மைதிலி தயாநிதி

வைத்திய கலாநிதி மேரி கியூரி போல்

கலாநிதி சு.குணேஸ்வரன்

திறனாய்வாளர் சி.ரமேஷ்

 ஒருங்கிணைப்பு:

அகில்  சாம்பசிவம்

 மேலதிக விபரங்களுக்கு: -  001416-822-6316