Hare Krsna dear devotees!


Please accept the blessings of Sri Radha Gopinath!!

We cordially invite you all to....
Krishna Evening
Saturday 3rd July 2010
6.00 pm
Bhagavad Gita Discussion ~ Bhajan ~ Arati ~ Free Sumptuous Prasadam ~ Mantra Yoga

Admission Free!!!

Special Children's Program
Games - Songs - Stories

Wentworthville Community Centre
2, Lane Street,
Wentworthville

(Very close to Wentworthville Station)

Vijay                      Bharat
0419 382 105 0425 213 876
Please forward this email to your friends and bring them as well....
See you all there!
Your servant
Ghanashyam Govinda Das
                                         
பிறந்தநாள் வாழ்த்து


                                            செல்வி அபிநயா ரவி  

                                  பிறந்தநாள் வாழ்த்து   26 . 06 .2010




Toongabbie  யை சேர்ந்த ரவி வானதி தம்பதிகளின் அன்புப் புதல்வி அபிநயா தனது 7வது பிறந்த தினத்தை 26-06-10 அன்று சிறப்பாகக் கொண்டாடினார். இவரை அப்பா, அம்மா, தங்கை மிதுலா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் பல்கலையும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் ஜூலியா கிலார்ட்


ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக ஜூலியா கிலார்ட் பதவியேற்றுள்ளார். ஆளும் தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கு ஆச்சரியமூட்டும் வகையில் நடைபெற இருந்த ஒரு தேர்தலில் கெவின் ரட் போட்டிக்கு போகமல்  விலகவே அவர் தலைமைப் பதவியை பெற்றுள்ளார்.

எழுதாத காகிதமாய் நானிருந்தேன்

                         செ.பாஸ்கரன்


எழுதாத காகிதமாய் நானிருந்தேன்
என்னை எடுத்துச்செல்ல எத்தணித்தனர்சிலர்
சுற்றிலும்
சுயநலப்போர்வையை போர்தியிருந்தனர்
மென்மையின் அழகு நீயென்றவரும்
மேனி மினுங்கும் தாரகை என்றவரும்
என்னைப்பார்த்தனர்
என் அழகைப்பார்த்தனர்
என் உள்ளத்து எண்ணங்களையும்
உணர்வுகளின் மென்மையையும்
பார்ப்பதையே தவிர்த்துக்கொண்டனர்
நான் கேட்காதவற்றை கொட்டித் தந்தவர்கள்
நான் தேடியவற்றை ஒளித்துக்கொண்டார்கள்
நான் வேண்டுவதெல்லாம்
வயல்வெளியின் வரம்புபோல
என்மீது கிறுக்கப்படும் சில கோடுகள்
என்மீது வரையப்படும் சில ஓவியங்கள்
மைகொண்டு எழுதி என்னை வருடும்
அந்த அற்புதங்கள்
தான்வரைந்த ஓவியத்தை
ஓய்வின்றிப் பேசும் ஒருவன் வேண்டாம்
என்னில் விழுந்த கோடுகள்
ஓவியமாய் பெயர்பெற்றதைப்பற்றி
பேசும் ஒருவனுக்காய் காத்திருப்பேன்
வரைவதற்காய் மட்டுமன்றி
வளித்துணைக்காயும் என்னைத் தேடுபவன்
எங்கோ ஓரிடத்தில்
எனக்காகக் காத்திருப்பான்
அதுவரை
நான் எழுதாத காகிதமாய்
அவனுக்காய் காத்திருப்பேன்.

###########################################################
மூன்று ஆஸ்திரேலிய இராணுவத்தினர்  மரணம்
                                                                           செய்தித் தொகுப்பு . கரு
மூன்று அவுஸ்திரேலியா இராணுவத்தினர்  ஆப்கானிஸ்தானில்   ஷெலிகொப்ரர் விபத்தில் சென்ற திங்கட்கிழமை மரணமாகியுள்ளார்கள். ஏழு இராணுவத்தினர் காயப்பட்டுள்ளார்கள். அவர்களில் இருவர் மோசமான நிலையில் உள்ளனர். 15 இராணுவத்தினரை  ஏற்றிச் சென்ற அந்த ஷெலிகொப்ரரில் 10 பேர் அவுஸ்திரேலியா இராணுவத்தினர் ஆவர். இந்த விபத்து எதிரிகளால் ஏற்பட்டதல்ல என கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில்  மரணமான அவுஸதிரேலிய  ராணுவத்தின்  எண்ணிக்கை  இத்துடன் 16 ஆக  உயர்ந்துள்ளது. முன்னாள்  பிரதமர் திரு கெவின் ரட் பாரளுமன்றத்தில் இந்த விபத்து அவுஸ்திரேலியாவிற்கும் அவுஸ்திரேலிய காவல் துறைக்கும் மிக கவலை தரும் நாள் என்று கூறியிருந்தார். அவர் தனது அனுதாபங்களை குறிப்பாக அவர்களுடைய குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் தெரிவித்திருந்தார்.
சிட்னி இசை விழா 2010

சென்ற வாரம் சிட்னி இசை விழாவைப் பற்றிய ஒர் பார்வை நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரால் விபரிக்கப்பட்டது. எமது உள்ளுர் கலைஞர்கள் பலர் அவ்விழாவில் பங்குபற்றினார்கள். அவர்களுடைய படங்களை கீழே இணைத்துள்ளோம்.

                                                                                                                                       படப்பிடிப்பு திரு ப. இராசேந்திரன்

கோடியில் இருவர்

சாலையில் கடுமையான வெயிலில் நடக்கும் போதெல்லாம், ஓரமாய், அமைதியாய் நிழலைப் பொழியும் மரம் தாயின் மடிபோல் சுகமாய் அரவணைத்துக் கொள்ளும். ஒரு போதும் நினைத்துப் பார்ப்பதில்லை, இந்த மரத்திற்கு விதையிட்டு, நீரூற்றி வளர்த்தது யார், இந்த மரத்தின் வரலாறு என்னவாக இருக்கும் என்று.

மரம் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில்லாத துரதிருஷ்டம், அந்த இரண்டு நபர்களைச் சந்தித்த போது தகர்ந்து போனது. மரத்தின் மேல கணக்கிலடங்கா காதலும் வெறியும் மனதில் வேரூன்றியது... ஈரோடு மாவட்டம் இந்த இரண்டு நபர்களைப் பெற என்ன தவம் செய்ததோ!!!?

 மெல்பேர்னில் ”ஆஞ்சநேயம்”  நாட்டிய நிகழ்வு


மெல்பேர்ன் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ”ஆஞ்சநேயம்” என்ற நாட்டிய நிகழ்வு  எதிர்வரும் ஜுலை 3 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் றிங்வூட் ஈஸ்ட்டில், மைன்ஸ் வீதியில் அமைந்துள்ள Karralyka மண்டபத்தில் (Karralyka Centre, Mines Road, Ringwood East, 3135 (Melway Ref: 50 A6))நடைபெறவுள்ளது.
சரின்டா வழங்கும் வைரத்தில் முத்துக்கள்


சரின்டா வழங்கும் வைரத்தில் முத்துக்கள் ஜூலை மூன்றாம் திகதி சிட்னியிலும் ஜூலை நான்காம் திகதி மெல்பர்ன் இலும் நடைபெறுகின்றது .




உஷா ஜவாகரின் நூல் வெளியீடு ஓர் பார்வை

ஓர் இரம்மியமான சூழலில் 12-06-2010 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் தமிழ்க் கல்வி நிலையம் ஹோம்புஷ் மாணவர்களின் தமிழ் மொழி வாழ்த்துடனும் அவுஸ்திரேலிய தேசிய கீதத்துடனும் விழா சிறப்பாக ஆரம்பமாகியது. அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளர்களில் ஓருவரும் ஹோம்புஷ் தமிழ்க்கல்வி நிலைய தலைவரும் ஓர் தலைசிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவருமாகிய திரு திருநந்தகுமார் அவர்களின் தலைமையில் ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய அதிபர் திரு திருமதி தேவராஜா அவர்கள் மங்கள விளக்கேற்றி வைக்க மங்களகரமாக தொடர்ந்தது நூல் வெளியீட்டு விழா.

Kevin Rudd இன் தலைவலி, அவுஸ்திரேலியாவின் முதல் தலைவியாக
-                                                         சுற்றியவர்: கானா பிரபா


அவுஸ்திரேலியாவின் அரசியல் இன்று தலைவிரி கோலமாக்கப்பட்டு அவசர அவசரமாக அள்ளி முடியப்பட்டிருக்கின்றது புதிய இரண்டு சரித்திரங்களோடு.

ஒன்று அவுஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக Julia Gillard அம்மையார் வந்திருக்கிறார். இன்னொன்று அவுஸ்திரேலிய தொழிற்கட்சிச் சரித்திரத்திலேயே முதல் தடவையாக ஒரு தலைவர் தன் பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே தூக்கி வீசப்பட்டிருக்கிறார் அவர் இது நாள் வரை பிரதமராக இருந்த Kevin Rudd.

"வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்" இது சரத் பொன்சேகாவுக்கு மட்டுமல்ல, நேற்று வரை எமது அவுஸ்திரேலிய தேசத்தை ஆண்டு அடங்கிப் போன கெவின் ரட்டிற்கும் பொருந்தும்.
முதலாவது தமிழ் நூல் 1578 இல் பிரசுரிப்பு


                                                                                                 நன்றி The Hindu
 முதலாவது தமிழ் நூல் 1578 இல் பிரசுரிப்பு "தம்பிரான் வணக்கம் தமிழில்நூல் அச்சிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டவரலாறுசுவாரஸ்யமானது.முதலாவதுதமிழ் நூல் 1578 அக்டோபர் 20 ஆம் திகதி வெளிவந்தது. அன்றைய தினம்சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடதாசி மூலம் போர்த்துக்கேயமிசனரியான ஹென்ரிக் ஹென்ரிக்குயஸ் (அன்ரிக் அன்ரிக்குயஸ்) "தம்பிரான்வணக்கம்  என்ற நூலை பிரசுரித்துள்ளார்.  16 பக்கங்களுடன் 10 14 செ.மீ. புத்தகம் பிரசுரிக்கப்பட்டதாகவும் அதன்ஒவ்வொரு பக்கமும் 24 வரிகளைக் கொண்டதாக இருந்ததாகவும் அதில்பயன்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துருவானது ஓலைச்சுவடிகள்,கற்களில்பயன்படுத்தப்பட்டவையெனவும் தமிழ் வரலாற்றியலாளரான புலவர் எஸ்.ராஜுகூறியதாக "இந்து பத்திரிகை  திங்கட்கிழமை குறிப்பிட்டுள்ளது.
புருஷோத்தமா மாதம் - இரண்டாம் பகுதி



ஹரே கிருஷ்ணா! பத்ம புராணத்தில் இருந்து புருஷோத்தமா மாதத்தின் புகழின் முதல் பகுதியினை போன வாரம் பார்த்தோம். இரண்டாம் பகுதியினை இந்த வாரக் கட்டுரையில் பார்ப்போம்.


 இசை உலக மேதை மைக்கல் ஜக்சன்




சென்ற வருடம் ஜீன் மாதம் 25ம் திதி மைக்கல் ஜக்சன் வாடகை வீட்டில் மரணமானர். அவரது ஒராண்டு நினைவு தினத்தில் நாம்  நினைவு கூறுகின்றோம்
அவுஸ்திரேலிய விமானம் விழுந்து நொருங்கியது

அவுஸ்திரேலிய மைனிங் சண்டான்ஸ் கொம்பனியில் கடமை புரியும் ஆறு பேரோடு இரண்டு பிரித்தானியர், இரண்டு பிரென்ஸ் மற்றும் ஒரு அமெரிக்கரோடு பயணித்த விமானம் ஒன்று கொன்கோவில் விழுந்து
நொருங்கியதால் எல்லோரும் மரணமானார்கள். இதனால் 200 வருடங்கள் மைனிங் அனுபவம் வீணாக்கப்பட்டது. சண்டான்ஸ் தலைவர் திரு கென் ரல்பொட் இறந்தவர்களில் ஒருவர் ஆவர். இவர் 965 மில்லியன் வெள்ளிகளுக்கு சொத்து வைத்திருப்பதாக அறியப்படுகிறது. சண்டான்ஸ் கொம்பனிக்கு தலைவராக தற்காலிகமாக ஜோர்ச் ஜோன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
திரு கென் ரல்பொட் தனது 30 மில்லியன் பெறுமதியான விமானம் பெரிதானதாலும் அவர்கள் இறங்க வேண்டிய விமானத்தளம் சிறியதானதாலும் அவர்கள்  வேறு  ஒரு 26 பேர் பயணிக்க கூடிய ஒரு சிறிய விமானமான காசா சி212 டை  வாடைக்கு எடுத்துச் செல்லும் போதே விபத்து நடைபெற்றது.
ரத்த ஓட்டத்தை சீராக்கும் தக்காளி



‌சில‌ர் ப‌ல்வேறு உட‌ல் உபாதைகளு‌க்காக ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக்கொள்வது வழக்கம். அந்த மாத்திரையை சாப்பிட்டவுடன் அவற்றில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

ஆனால், இந்த ஆஸ்பிரின் மாத்திரைக்கு பதிலாக தக்காளியை சாப்பிடலாம் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறு‌கிறது.
வீதி வன்முறைக் கும்பலின் தலைவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்

ரொறன்ரோவிலுள்ள தெரு வன்முறைக் குழுவின் தலைவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். அவர் இழைத்த குற்றங்களுக்காக கனடாவிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட ஆறு வருடங்களின் பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 10 ஆம் திகதி ஜோதிரவி சிற்றம்பலம் என்பவரை அவருடைய தாயகத்திற்கு கனடாவின் எல்லை சேவைகள் முகவரமைப்பு அதிகாரிகள் பாதுகாப்புடன் திருப்பியனுப்பியதாக நஷனல் போஸ்ட் பத்திரிகை நேற்று தெரிவித்திருக்கிறது.
‘பூமராங்’ சிறப்புமலர்.


                                                                             ரஸஞானி



அவுஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக கலை,இலக்கிய,ஊடகத்துறையில் ஈடுபட்டுவரும் குறிப்பிட்ட சிலரின் கூட்டுமுயற்சியால் கடந்த பத்து ஆண்டுகாலமாக (2001-2010) தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் ‘அற்லஸ்’ (Atlas) என அழைக்கப்படும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சமீபத்திய வெளியீடு ‘பூமராங்’ சிறப்புமலர்.
ஈழம்-இந்திய அரசு தற்கொலைகளை விரும்புகிறது. தற்கொலைப் படைகளை வெறுக்கிறது.- அருந்ததிராய்

அருந்ததி ராய்… இந்திய எழுத்துலகின் முற்போக்கு முகம்!

மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடு களில் இருக்கும் கனிம வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்படுவதை எதிர்த்துப் பழங்குடி மக்கள் வில், அம்பு ஏந்தி வீரத் துடன் போரிட்டுக்கொண்டு இருக்க, அறிவுலகில் தன்னந்தனியாக நின்று போராடுகிறார் அருந்ததி ராய்.


உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு சிறப்பு மலர் ஜனாதிபதியிடம் கையளிப்பு

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சிறப்பு மலரை தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிட அதனை இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பெற்றுக் கொண்டபோது எடுக்கப்பட்ட படம்.

புலி சந்தேக நபர்கள் ஆஸ்திரேலியா பயணம்; இலங்கை எச்சரிக்கை
சட்டவிரோதமாக படகொன்றில் 200 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் பயணித்திருப்பது தொடர்பில் ஆஸ்திரேலியாவுக்கு, இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு படகொன்றில் 200 விடுதலைப் புலி சந்தேக நபர்கள் ஆஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்திருப்பது தொடர்பில் தனக்கு தகவல் கிடைக்கப் பெற்றிருப்பதாக ஆஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சேனக வலகம்பய குறிப்பிட்டார்.