அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை 03/02/2025 - 09/02/ 2025 தமிழ் 15 முரசு 44
tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
கற்ற தொழுகு” எனும் தாரக மந்திரத்தோடு கல்விச் சிறப்பிலும், உடல் வலுப் பெறும் விளையாட்டிலும் மேன்மையும், புகழும் கொண்டு விளங்கும் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கற்ற மாணவர்கள் உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் கிளை பரப்பித் தம் கல்லூரித் தாயைப் போற்றிச் சிறப்பிக்கிறார்கள். அவ்வண்ணம் சிட்னியிலும் தசாப்தங்கள் கடந்து கொக்குவில் இந்துவின் மைந்தர்கள் சங்கம் அமைத்து கல்லூரியின் புகழ் பாடும் ஆண்டுக் கொண்டாட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் திகதி, சிட்னியின் மேற்குப் பாகத்தில் அமைந்துள்ள Redgum Function Centre, Wentworthville இல் வெகு சிறப்பானதொரு நிகழ்வை வழங்கியிருந்தார்கள்.
20/11/2019 பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம், புதிய கட்சியிலிருந்து ஒரு புதிய முகம் அரச தலைவர் பதவியில் அறிமுகமாகியுள்ளது. இந்தப் புதிய முக பிரவேசமானது நாட்டைப் புதியதோர் அரசியல் நெறியில் வழிநடத்திச் செல்வதற்கு வழிவகுக்குமா என்பது பலருடைய ஆர்வமிக்க கேள்வியாக உள்ளது.
ஒரு சிப்பாயாக இராணுவத்தில் பிரவேசித்து போர்க்கள அனுபவத்தின் பின்பே அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்தார். முடிவின்றி தொடர்ந்த யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்காக விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகச் செயலிழக்கச் செய்ய வேண்டும் அல்லது முழுமையாகத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக் ஷ இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்தார்.
நந்தசேன கோத்தாபய ராஜபக்ச முழுமையான வெள்ளை ஆடையில் நவம்பர் 18 ம் திகதி அனுராபுரத்தில் உள்ள ருவன்வெலிசயவில் உள்ள பௌத்த தூபியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டவேளை வடக்குகிழக்கில் அச்சம்
பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்ற இடம்போன்று அந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்ட சிங்களவர்கள் மாத்திரம் செய்தியும் முக்கியமானது என அதனை தொலைக்காட்சியில் பார்வையிட்ட தமிழர்கள் தெரிவித்தனர்.
செயற்பாட்டாளர்கள் மிகவும் அமைதியாக உள்ளனர்,அவர்கள் கட்டுரை எழுதுவதையும் அறிக்கைகள் விடுவதையும் நிறுத்திவிட்டனர்,அச்சம் வெளிப்படையாக தெரிகின்றது என யாழ்ப்பாணத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.
நல்லாட்சிக்காக பிரச்சாரம் செய்த காமினிவியாங்கொடவும் சந்திரகுப்ததேனுவரவும் தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்ற தினத்தன்று இலங்கையிலிருந்து வெளியேறிவிட்டனர் என செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
18/11/2019 கடந்த வாரம் நடைபெற்ற இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச செல்லுபடியான வாக்குகளில் 52.25 சதவீதத்தைப் பெற்று நிறைவான ஒரு வெற்றியை தனதாக்கிக்கொண்டிருக்கும் அதேவேளை, அவரின் பிரதான போட்டியாளரான ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 41.99 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.
ஞாயிறன்று தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்னதாகவே பிரேமதாச தோல்வியை ஒத்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
சைவமன்றம் தனது சமூகப்பணிகளின் இன்னும் ஒரு பரிமாணமாக இறுதிக்கிரியைகள் செய்யும் காரியத்தை சேவை அடிப்படையில் வழங்க முன்வந்துள்ளது. ஆதலால் சைவமன்றத்தில் சைவக் குருக்களாக பணிபுரியவும் ஏனைய நேரத்தில் சைவமன்றத்தின் பிற பணிகள் செய்வதற்கும் ஒருவருக்கு வாய்ப்புண்டு. தேர்ந்தெடுக்கப்படுபவர் சைவமன்ற வெளியீடான சைவ இறுதிக்கிரியைகள் என்னும் நூலில் கூறப்பட்டுள்ளதற்கு அமைய கிரியை செய்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு ஏற்கெனவே இந்த சமூகப்பணியில் ஈடுபட்டு அனுபவம் உடையவர்களால் பயிற்சி அளிக்கப்படும். தொடக்கத்தில் 6 மாத தகுதி அவதானிப்புக் காலத்துடன் இரு வருடங்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்படும்.
21/11/2019 அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு இலங்கை ஜனநாயகக் குடியரசான நமது நாட்டை ஆளும் உரிமை தேர்தலின் மூலம் நந்தசேன கோத்தாபய ராஜபக்ஷவிடம் தேர்தல் மூலம் நாட்டு மக்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அடுத்து பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலும், மாகாணசபைகளுக்கான தேர்தலுக்கான எதிர்பார்ப்பும் உள்ளது.
இவ்வாறுள்ள நிலையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகள் தெரிவாகியுள்ள ஜனாதிபதியின் எதிர்காலத் திட்டங்கள் எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பை நாட்டு மக்களிடம் குறிப்பாக சிறுபான்மை மக்களிடம் மட்டுமல்ல உலக அரங்கிலும் ஏற்படுத்தியுள்ளது என்பதை நோக்க முடிகின்றது.
நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, தேசிய பாதுகாப்பு, தொழிலற்றோர் பிரச்சினை எனப் பல்வேறு பிரச்சினை களுக்குத் தீர்வுகாண வேண்டியுள்ளது என்று கூறப்பட்டாலும், அதற்கும் அப்பால் நாட்டின் சகல இன, மத மொழி மக்களுக்கு மத்தியிலே புரிந்துணர்வும், நல்லுறவும் ஏற்படுத்தும் பாரிய பொறுப்பும் அவருக்குள்ளது.
யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நாடும், நாட்டு மக்களும் எதிர்நோக்கியுள்ள முதன்மைப் பிரச்சினை அதுவாகவேயுள்ளது.
பெரும்பான்மை வெற்றியின் மூலம் நாட்டில் இனப்பிரச்சினை இல்லையென்றாகி விடாது. இந்த நாட்டில் மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றியீட்டிய அரசாங்கங்களே இனப்பிரச்சினைக்கு அடித்தளமிட்டன என்ற உண்மையை மறைக்க முடியாது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஜனாதிபதியை தெரிந்தெடுப்பதில் தமக்கும் ஒரு பங்கு இருப்பதன் காரணமாக, ஜனாதிபதிக்கு சிறுபான்மையினத்தவர்களது நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதில் ஆர்வம் இருக்கும் என்ற நம்பிக்கையே சிறுபான்மையினத்தினர் இம்முறை தேர்தலில் பெரிதும் அக்கறையும் ஆதரவும் காட்டுவதற்கான காரணமாக இருந்துள்ளது.
ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் தேர்தல் பிரச்சாரமும் தேர்தல் முடிவுகளும் பெரும்பான்மையின மக்களையே ஒன்றிணைத்ததாக அமைந்துள்ளமை சிறுபான்மையினத்தவர்களை அச்சுறுத்தக் கூடியதாகியுள்ளது. மேலும் பொதுவாகவே எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறப் போவதில்லை என்ற அனுமானம் இருந்திருந்த நிலையில் இரண்டாவது விருப்பு வாக்குகளையும் கவனித்து பார்க்க வேண்டி வரலாம் என்ற அபிப்பிராயங்கள் நிலவிய சூழ்நிலையில் கோத்தாபய அவர்கள் 52.5 வீத வாக்குகளை பெற்றுள்ளமை மனதில் பதிய வைப்பதாக உள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் வெற்றிக்கு சிறுபான்மை இனத்தவர்களதும், சமயத்தவர்களதும் ஆதரவு அத்தியாவசியமாக தேவைப்படும் என்ற சிந்தனைவாதம் மாத்திரமே இப்போது அழிந்து விட்டதாக கூற முடியாது. மனதிலும் அரசியலிலும் ஏற்பட்டுள்ள வேதனைகள் காரணமாக தெளிவாக இனங்காணக்கூடிய வகையில் அரசியலில் முனைவாக்கம் நிலவுகின்றது என்பதனை தெளிவாக்கி உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த வீட்டுக்கு வந்த
நாளன்று காலையில், தனது கைபற்றி வரவேற்றவள்
சுபாஷினி மாத்திரம்தான் என்பதை அபிதா மறக்கவில்லை.
அக்கணத்தில் சுபாஷினியிடமிருந்து கிடைக்கப்பெற்ற கனிவான வார்த்தைகள் இன்னமும் அபிதாவின்
செவிகளில் ரீங்காரமிடுகின்றன.
அங்கிருக்கும் ஒவ்வொருவரதும் குணஇயல்புகளை நன்கு தெரிந்துகொண்டு,
அதற்கேற்ப நடந்துகொள்வதற்கு அபிதா தன்னை தயார்படுத்தியிருந்தாள்.
ஜீவிகா,இந்த மழைக்காலத்தில் எடுத்துச்சென்ற குடையை மறக்காமல்
பத்திரமாக எடுத்துவரவில்லை என்பதை சுபாஷினி சுட்டிக்காண்பித்தமையால் எழுந்த சாதாரணமான வாய்த்தர்க்கம் விபரீதமாகிவிட்டதனால்,
அடுத்து என்ன நிகழுமோ என்ற பயம் அபிதாவை பற்றிக்கொண்டாலும், வெளியே காண்பிக்கவில்லை.மஞ்சுளாவுக்கும் ஜீவிகாவுக்கும் அன்றைய பொழுதும்
வழக்கம்போலவே கழிந்துகொண்டிருக்கிறது.
அடிக்கடி இங்கு இவர்களுக்குள் நடக்கும் வாதங்கள், சூரியனைக்கண்ட
பனிபோன்று மறைந்துவிடுமா..? ஆனால், ஜீவிகா, எய்த அம்பினால், அடிபட்ட மான்போன்று துள்ளிக்கொண்டு
சுபாஷினி ஓடி தனது அறைக்குள் மறைந்துகொண்டதுதான் அபிதாவின் மனதை வாட்டிக்கொண்டிருக்கிறது.
அந்த ஓட்டோகாரன் குடையை கொண்டுவந்து கொடுத்துவிட்டான். பிரச்சினை
அத்தோடு முடிந்துவிட்டது. கொட்டிய அரசியை பொறுக்கி எடுத்துவிடலாம், கொட்டிவிடும் வார்த்தைகளைஅவ்வாறு பொறுக்கிவிடமுடியுமா..?
சுபாஷினி, எதனை பத்திரப்படுத்தி
பாதுகாக்கத்தவறினாள்..? அதனை ஏன் ஜீவிகா குத்திக்காண்பித்து இடித்துரைத்தாள்..?
சுபாஷினி முகம்குப்புறப்படுத்துக்கிடக்கிறாள். அபிதா கட்டிலருகில்
சென்று அமர்ந்து, அவளது நீண்ட கூந்தலை தடவி வருடிவிட்டாள். அந்த ஸ்பரிசம் அபிதாவுடையதாகத்தான்
இருக்கும் என்பது சுபாஷினிக்குத் தெரியும்.
முகத்தை திருப்பாமலேயே,“ அபிதா, நீங்க போங்க. நான் பிறகு வாரன்.
கொஞ்சநேரம் தனியே இருக்கவிரும்புறன்.“
அபிதா,குனிந்து அவளது
முகத்தைத்திருப்பினாள். அவளது கண்கள் சிவந்திருப்பதைப்பார்த்து அபிதா கலவரமுற்றாள்.
எமது நீர்கொழும்பூரில் கலை, இலக்கியவாதிகள் இணைந்து இலக்கிய
வட்டம் என்ற அமைப்பை 1975களில் தொடங்கினோம்.
அதன் தலைவராக இயங்கியவர் எழுத்தாளர் மு. பஷீர். இந்த அமைப்புக்கு முன்னோடியாக
எமது இல்லத்தில் வளர்மதி நூலகம் என்றநூல் நிலையத்தையும் தொடக்கியிருந்தேன்.
வளர்மதி நூலகம்
1971 இல் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி தொடங்கப்பட்ட காலத்தில் உருவானது. மாலையானதும்
ஊரடங்கு உத்தரவு அமுலாகிவிடும். வெளியே செல்லமுடியாது. அக்காலத்தில் தொலைக்காட்சியும்
இல்லை.
இலக்கிய நண்பர்கள் மத்தியில்
நூல்களை பரிமாரிக்கொள்வதற்காகவே வளர்மதி இயங்கியது. வளர்மதி கையெழுத்து சஞ்சிகையும்
நடத்தினோம்.இக்காலப்பகுதியில் மல்லிகை ஆசிரியர்
டொமினிக் ஜீவாவும்எங்கள் ஊருக்குவந்து அறிமுகமானார்.
மல்லிகை நீர்கொழும்புசிறப்பிதழும் வெளியிட்டோம். அதற்கு முன்னர் எமது
மாமா முறையானவரான அ. மயில்வாகனன் தனது சாந்தி அச்சகத்திலிருந்து அண்ணி என்ற
மாத இதழை சில மாதங்கள் நடத்தினார். அதன் முதல் இதழின் வெளியீட்டு விழாவுக்கு மட்டக்களப்பு
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்லையா இராசதுரை தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியின்போதுதான்
பஷீர் எனக்கு அறிமுகமானார்.
எனினும் அப்போது நான்
இலக்கியப்பிரவேசம் செய்திருக்கவில்லை. பழைய பஸ்நிலையத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த
மாநகர சபையின் பொது நூலகத்தில் பஷீரை அவ்வப்போது சந்திப்பேன். அவருக்குத் தெரிந்த தொழில்
பீடி சுற்றுவது. அவரது வாப்பா கேரளத்திலிருந்து வந்தவர்.
கேரளத்தில் மிகவும்
புகழ்பெற்ற தொழில்தான் பீடி வர்த்தகம். இலங்கையில்
அக்காலப்பகுதியில்ராஜா பீடி, யானை பீடி, கல்கி
பீடி, பவுண் பீடி என்பன பிரபல்யம் பெற்றிருந்தன.
ராஜா பீடி தொழிற்சாலையை
கேரளத்திலிருந்து வந்தவர்கள் தொடங்கியிருந்தாலும், நீதிராஜா - யானை , சின்னத்துரை - கல்கி , வடிவேல் - பவுண் என்பன இலங்கைத் தமிழர்களினால்
தொடங்கப்பட்டவை. இவர்களில் நீதிராஜா யூ. என்.பி.யின்
கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும் செனட்டராகவும் இருந்தவர்.
இவரது யானை பீடித்தொழிற்சாலைக்கு
நீர்கொழும்பிலும் கிளை இருந்தது. அதனை நடத்தியவர்தான் பஷீரின் வாப்பா. பஷீருக்கு கேரளத்தொடர்புகள்
இருந்தமையால்,கேரள இலக்கியங்களில் பரிச்சியம் மிக்கவர்.
இவர்தான் எனக்குவைக்கம் முகம்மது பஷீர், தகழி சிவசங்கரன் பிள்ளை,
பொற்றேகாட், கேசவதேவ் முதலான கேரள இலக்கியவாதிகளின்
படைப்புகளை அறிமுகப்படுத்தியவர்.
எமது சமூக சிந்தனையில் மார்பு கச்சம் (Bra) பற்றி வெளிப்படையாக பேசுவதோ எழுதுவதோ சங்கோசப் படவேண்டிய விஷயமாகவே இருந்து வருகிறது. நான் நடனத்தின் பாரம்பரியம் அது எவ்வாறு நடைபெற்றது என்பதை ஆராயும் பொழுது நர்த்தகிகள் அணிந்த மார்பு கச்சங்கள் பற்றி வெளி நாடுகளில் இருந்து வந்த பயணிகள் எழுதியிருந்தமை என்னை வியப்பில் ஆழ்த்தியது . இதை பலரும் அறியவேண்டும் என்ற ஆர்வம் தூண்டப் பட் டமையால் எழுதுகிறேன்.
12ம் நூற்றாண்டிலே இந்திய ஆடல் நங்கையர் இடையே இது பரவலாக இருந்தமையை வெனிஸ் நகரில் இருந்து வந்த மாலுமி தனது The Travel என்ற நூலில் எழுதுகிறார். இவரே இதுபற்றி வெளிநாட் டவருக்கு வியந்து எழுதியவர். 1298 இல் இவர் தென்னகம் நோக்கி வந்தவர். அவர் எழுதியது எம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்தியது.
ஆடல் நங்கையர் தமது மார்பகங்களை கிண்ணம் போன்ற ஒரு கவசம் கொண்டு மூடியிருக்கிறார்கள். இந்த வடட வடிவமான மார்புக் கவசம் முன்னோக்கி இருக்கும் . இது மார்பகங்களை மிருதுவாக தாங்கிக் கொள்கிறது . அதை அலங்கரித்து தங்க வேளை பாடுகள் இருக்கும் . இது சூரிய ஒளியில் பிரகாசிப்பதே தனி அழகு என்கிறார். 57 John Henry Grose A Voyage to the east Indies என்ற நூலில் கிண்ணம் போன்று அமைக்கப்பட்ட மார்புக்கான உடை, மார்பின் அழவுக்கேற்ப பிடிப்பாக அமைக்கப் பட்டிருக்கும் மிக மிருதுவான மரப்பட்டையால் ( வாழை மடலாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகின்றது ) அமைக்கப்பட்டு ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பட்டிருக்கும் . முத்துக்குப் புறத்தில் ஒரு இணைப்பு (Buckled at the back) இருக்கும். இதன் வெளிப்புறம் மென்மையானது. தங்கத்தினாலோ அல்லது வெள்ளியில் தங்க முலாம் பூசப் பட்டு இருக்கும் . அவரவர் அந்தஸ்துக்கேற்ப நவரத்தினங்கள் பதிக்கப் பட்டிருக்கும் . இலகுவாக கழட்டக் கூடியதாக இருக்கும்.
டச்சுக் காரரான Jacob Haafaner 1754 முதல் 1809 வரை வாழ்ந்தவர் , இவரோ 13 ஆண்டுகள் தென்னிந்தியாவிலும் சிறிலங்காவிலும் வாழ்ந்தவர். ஒரு தாசியை திருமணம் செய்து வாழ்ந்தார். (De Werken van Jocob Haafiner) என்ற நூலில் மார்பகங்கள் பெருத்து விடாதோ சிறுத்து விடாதோ இருப்பதற்காக மார்பகங்கள் ஒரு கவசத்தால் மூடப்பட்டிருக்கும் , இந்த கவசம் மிக மெல்லியதாக ஊடுருவிப் பார்க்கக் கூடியதாக இருக்கும். மென்மையானதும் ரப்பர் போன்று இழுபடும் தன்மை வாய்ந்தது . அவரவர் நிறத்திலேயே அமைக்கப் பட்டிருக்கும். இது அவர்கள் உடலா உடையா என எண்ணும் வண்ணம் உடலுடன் இணைந்திருக்கும் . இந்த பயணிகள் மூலம் 1298 முதல் 1809 வரையான 5 நூற்றாண்டுகள் தென் இந்திய ஆடல் நங்கையரிடையே இருந்த மார்பகத்திற்கான உடைகளைக் கண்டோம் .
ஆடலைத் தொழிலாக கொண்டவர் தமது மார்பகங்களை அவ்வாறு அலங்கரித்தனர் என அறிய வியப்பாகவே உள்ளது .
தனிச்சிங்கள தலைவர் கிடைத்திருப்பதால் பொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவோம் - ஞானசார
ராஜபக்சாக்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவார்கள் என்பது இந்தியாவிற்கு முன்னரே தெரிந்திருந்தது- இந்திய ஊடகம்
பொறுப்புக்கூறலை உறுதி செய்யுங்கள் மைக்பொம்பியோ கோத்தாபய ராஜபக்சவிற்கு வேண்டுகோள்
காலி, இரத்தினபுரி மாவட்டங்களில் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் ; பொலிஸார் தீவிர விசாரணை
யாருக்கு வாக்களித்தீர்கள் எனக்கேட்டு யட்டியாந்தோட்டையில் தமிழர்கள் மீது தாக்குதல் தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வொன்றை உறுதிப்படுத்துங்கள் - ஜெய்ஷங்கர் ஜனாதிபதி விமர்சித்தமை குறித்து செய்தி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரித்தானிய தூதரகத்தில் மகஜர் சிங்கள பெளத்த அரசு உருவானால் சிறுபான்மை மக்களை பாதிக்கும்: ஜே.வி.பி. லசந்த கொலை உட்பட முக்கிய சம்பவங்கள் குறித்து விசாரணை செய்த அதிகாரி இடமாற்றம் - அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் அமெரிக்க , ஜப்பான் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு தேர்தலை தொடர்ந்து விசமிகளால் அழிக்கப்படும் தமிழ் பெயர் பலகைகள்! உலகில் இரண்டாவது முறையாக அதியுயர் இருபதவிகளை வகிக்கும் சகோதரர்கள் நாட்டை அதிர வைத்த குற்றங்கள் தொடர்பில் துப்புத் துலக்கிய சி.ஐ.டி. சிறப்பு விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறினார்
தனிச்சிங்கள தலைவர் கிடைத்திருப்பதால் பொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவோம் - ஞானசார
(செ.தேன்மொழி)
19/11/2019 ஜனாதிபதி தேர்தலின் மூலம் நாட்டுக்கு தனிச்சிங்கள தலைவரொருவர் கிடைத்திருக்கிறார்.இதுவரை காலமும் தந்தையின்றி வாழ்ந்த பிள்ளைகள் போல் இருந்த சிங்கள இனத்தவர்களுக்கு ஒரு சிறந்த ஆண்மகன் தந்தையாக கிடைத்துள்ளார் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கான மருத்துவ பரிசோதனை நெறிமுறைகளை மீறிய டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் போர்ட்டோ அணுசக்தி நிலையத்துக்கான தடைகள் தொடர்பான சலுகைகள் நிறுத்தம் - அமெரிக்கா முகமூடி அணிவதற்கான தடை அடிப்படை உரிமை மீறலாகும் : ஹொங்கொங் உயர் நீதிமன்றம் தீர்ப்பு! ஈரானில் ஆர்ப்பாட்டங்களின் போது 106 பேர் கொல்லப்பட்டுள்ளனர் - சர்வதேச மன்னிப்பு சபை குழந்தைகள் கடத்தல் விவகாரம்: நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் - பொலிஸார் தகவல் ஹொங்கொங்கிற்கு எதிராக இரு சட்ட மூலங்களை நிறைவேற்றியது அமெரிக்கா! பாதுகாப்பு பணியில் ஈடுபடும் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 நாய்கள் ஜனாதிபதிக்கான மருத்துவ பரிசோதனை நெறிமுறைகளை மீறிய டொனால்ட் ட்ரம்ப்
19/11/2019 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது ஜனாதிபதி பதவி நிலைக்கான மருத்துவ பரிசோதனை நெறிமுறைகளைப் பின்பற்றாது இராணுவ மருத்துவமனையொன்றுக்கு நடு இரவு வேளையில் விஜயம் செய்துள்ளார்.
ஏவி. எம். ராஜன், ஜெய்சங்கர் இருவரும் முன்னணி நடிகர்களாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்தார்கள். அந்தப் படம் தான் மன்னிப்பு.
ஜெய்சங்கரையும் ஜெயலலிதாவையும் ஜோடியாக நடிக்க வைத்து படங்களை தயாரித்தவர் மோகன்ராம். இவர் தயாரித்த ராஜா வீட்டுப் பிள்ளை முத்துச் சிப்பி படங்களில் இவர்கள் இருவரும் நடித்தார்கள். ஆனால் மூன்றாவது படத்தில் இணைந்து நடிப்பதில் ஒரு பெரிய நடிகரின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதால் ஜெயலலிதா ஒதுங்கிக் கொள்ள லஷ்மி நடித்தார். இரண்டாவது நாயகியாக வெண்ணிற ஆடை நிர்மலாவும் தோன்றினார். இவர்களுடன் சுந்தரராஜன் நாகேஷ் மனோகர் பி. கே. சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர்.
கிராமத்து அருவியில் குளிக்கச் செல்லும் இளம் பெண்ணை பணக்கார வாலிபன் ஒருவன் பலாத்காரம் செய்ய முனைகிறான். அதனை தடுக்க முனையும் ஒருவர் தாக்கியதில் வாலிபன் இறக்கிறான். தடுக்க முனைந்தவன் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்படுகிறது.
அவனுக்காக வாதிடும் இளம் வக்கீல் பெண்ணின் கற்பு உயிரைவிட மேலானது அதைக் காக்க செய்த கொலை தண்டனைக்குரியதல்ல என்று வாதிட்டு வெற்றி காண்கிறார். ஆனால் சில காலம் கழித்து கற்புக்காக குரல் கொடுத்த வக்கிலே ஒரு இளம் பெண்ணை பலாத்காரம் செய்யும் நிலைக்கு உள்ளாகிறான். குண நேரசபலம் ஒரு பெண்ணின் உயிரையே பறித்து விடுகிறது.
தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை, எழுச்சியுடன் நினைவு கொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2019ம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27ம் நாள் புதன்கிழமை (27 – 11 – 2019) அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்ற நிலையில், அவுஸ்திரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இதுவரை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விபரப்பட்டியலில் இல்லாத, மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக அண்மையில் குடிபுகுந்தவர்கள் தயவு செய்து தமது விபரங்களைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் பகிர்ந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
மாவீரர் நாள் நிகழ்வில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரரின் திருவுருவப் படத்திற்கு விளக்கேற்றும் நிகழ்வுக்கான ஒழுங்குபடுத்தல்களைச் செய்யவே, இவ்விபரத் திரட்டு நடைபெறுகின்றது. எனவே இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள், 20 - 11 - 2019 இற்கு முன்பதாக தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழ் சினிமாவில் பல படங்கள் ரீமேக் ஆகியுள்ளது. ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்கள் ரீமேக் படங்களில் நடித்துள்ளனர். அவர்கள் ஒரு படத்தில் நடித்தால் எப்படி ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்குமோ, அதில் பாதியளவிற்கு எதிர்ப்பார்ப்பு உள்ள படம் தான் ஆதித்ய வர்மா, அப்படி என்ன இந்த படத்திற்கு ஒரு எதிர்ப்பார்ப்பு, அர்ஜுன் ரெட்டியா என்றால், அதைவிட விக்ரம் மகன் துருவ் நடித்துள்ளார் என்பதே இவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பிற்கு காரணம், அத்தனை பேர் எதிர்ப்பார்ப்பையும் காப்பாற்றினாரா துருவ்? பார்க்கலாம்.
கதைக்களம்
துருவ் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவன். எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஒரு கதாபாத்திரம், ஹீரோயின் பனிதா கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியாக வர, அவரைப்பார்த்தவுடன் துருவ்விற்கு காதல் பற்றிக்கொள்கின்றது.
அதை தொடர்ந்து அந்த பெண் இந்த காதலை ஏற்கின்றாரா? இல்லையா? என்றெல்லாம் தெரியவில்லை, துருவ், அவருக்கு முத்தம் கொடுக்கின்றார், கையை பிடிக்கின்றார், ஒரு கட்டத்தில் தன் காதலிக்கு ஏற்படும் சங்கடத்தை பக்கத்து கல்லூரி வரை சென்று தட்டிக்கேட்க, அந்த தருணம் தான் பனிதாவிற்கு காதல் பிறக்கின்றது.
பிறகு இருவரும் ஈர் உயிர் ஒரு உடலாக இருக்க, இவர்களின் காதல் பனிதாவின் வீட்டிற்கு தெரிய வர, பனிதாவிற்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகள் நடக்கின்றது, துருவ் அதை தடுக்க சென்ற இடத்தில் பனிதா தன்னுடன் வராத கோபத்தில் போதைக்கு அடிமையாகி மிக அரக்கக்குணத்திற்கு மாறுகின்றார், இதன் பிறகு இவர்கள் காதல் என்ன ஆனது? என்பதன் உணர்ச்சிப்போராட்டமே இந்த ஆதித்ய வர்மா.
படத்தை பற்றிய அலசல்
ஆதித்ய வர்மாவாக த்ருவ், உண்மையாகவே அர்ஜுன் ரெட்டி என்ற கதாபாத்திரத்தை எப்படி தாங்குவார் என்ற பயம் அனைவரிடத்திலும் இருந்தது, அதை விட படம் ஏற்கனவே எடுத்து அதன் ரிலிஸை நிறுத்தி, பிறகு மீண்டும் முழுவதும் எடுத்தது என கசப்பான அனுபங்களை சந்தித்து வந்தார், ஆனால், துளிகூட அர்ஜுன் ரெட்டி கதாபாத்திரத்திற்கு குறை இல்லாமல் சிறப்பாக செய்துள்ளார், தமிழ் சினிமாவிற்கு இளைஞர்கள் கொண்டாடும் ஒரு ஹீரோ கிடைத்துவிட்டார். அதைவிட த்ருவ் வாய்ஸ் மிகப்பெரிய ப்ளஸ்.
அதேபோல் அவருடைய நண்பராக வரும் அன்பு, ஹீரோயின் பனிதா, சில நிமிடங்கள் வரும் ப்ரியா ஆனந்த், நீண்ட வருடங்களுக்கு பிறகு ரீஎண்ட்ரி கொடுத்து ராஜா உட்பட அனைவருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர், பனிதா, ஷாலினி பாண்டே அளவிற்கு ஆரம்பத்தில் மனதில் நிற்காமல் விலகி வந்தாலும், கிளைமேக்ஸில் அவரின் நடிப்பு ரசிக்க வைக்கின்றது.
அர்ஜுன் ரெட்டி படத்தில் இருக்கும் ஒரு விஷயத்தை கூட மாற்றாமல் அப்படியே எடுத்தது புத்திசாலித்தனம், மேலும், அதே பாடல்கள், பின்னணி இசை என ரதனும் மனதில் நிற்கின்றார், ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு சிகரெட் புகையில் இருந்து அதில் விழும் நெருப்பு வரை தெளிவாக படம் பிடித்துள்ளது.
சரி ஏற்கனவே தெலுங்கு, ஹிந்தி என கொண்டாடிய படம் இதில் குறை சொல்ல என்ன இருக்கின்றது என்றால், அந்த அர்ஜுன் ரெட்டி கதாபாத்திரமே ஒரு வகையில் மைனஸ் தான், படத்தில் இந்த குணம் இந்தியாவிற்கே செட் ஆகாது என்று கூட வசனம் வருகின்றது.
அதை விட என்ன தான் இப்படம் சாதி திருமணத்தை எதிர்க்கிறது, குடியால் இழந்த வாழ்க்கை என்று காட்டினாலும், தேவர் மகன் போல் படம் முழுவதும் சாதியை கொண்டாடி கிளைமேக்ஸில் சாதியை விடுங்கள் என்று சொல்வது போல் தான் உள்ளது.
ஆதித்ய படம் முழுவதும் தன் கோபம், பிடிவாதம், போதைக்கு அடிமை என இருந்துக்கொண்டு கிளைமேக்ஸில் அனைத்தையும் விட்டு வருவது படமாக பார்க்க நன்றாக இருந்தாலும், இதை இளைஞர்கள் எப்படி தெளிவாக எடுத்துக்கொள்வார்கள் என்பதிலேயெ கேள்விக்குறி மிஞ்சுகிறது, ஏனெனில் இன்றும் அர்ஜுன் ரெட்டி என்றால் நம் நினைவிற்கு போதை, கோபம் மட்டுமே முதலில் வந்து செல்கின்றது.
காதலிக்கின்றாளா இல்லையா? என்று கூட தெரியாமல் ஒரு பெண்ணை முத்தமிடுவது, படமாக பார்க்க நன்றாக இருந்தாலும், கதாபாத்திரமாக ஆதித்ய வர்மா ரியல் லைபில் பயணப்பட முடியாத கதாபாத்திரம், திரையோடு மட்டும் கொண்டாடி செல்லுங்கள்.
க்ளபாஸ்
படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் யாருமே மிகைப்படுத்தி நடிக்கவில்லை, த்ருவ் ஆதித்ய வர்மாவாகவே வாழ்ந்துள்ளது.
படத்தின் இசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள். படத்தின் வசனங்கள் குறிப்பாக பெண்களின் ப்ரீயட் வைத்து கூறும் எ-கா, சாதி திருமணத்தை எதிர்ப்பது போன்ற வசனங்கள்.
த்ருவ்-அன்பு நட்பு படத்தில் சூப்பராக ஒர்க் அவுட் ஆகியுள்ளது, அதிலும் அழும் நண்பரின் கண்ணீரை துடைக்கும் காட்சி செம்ம.
அர்ஜுன் ரெட்டி பார்த்தாவர்களுக்கு கொஞ்சம் அடுத்த இதானே, என்று எண்ணிக்கொண்டே இருக்கும், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் த்ருவ் பேண்ட் ஈரமாகும் போதே பலரும் இடைவேளை என்று திரையரங்கில் இருப்பவர்களே எழுந்து நிற்பது தெரிகின்றது.
மொத்தத்தில் அர்ஜுன் ரெட்டியை தாண்ட முடியாது என்றாலும், அதை டேமேஜ் செய்யாமல் எடுத்தது ஆதித்ய வர்மாவின் வெற்றி தான்.
உங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா? புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்
விளம்பரங்கள்
உங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.