லய இசையில் லயித்த மெல்பேர்ண் - சித்தம் அழகியான்.

.
 அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் அண்மையில் இடம்பெற்ற மிருதங்க அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அந்நிகழ்வு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென எண்ணுகின்றேன். Indian Arts Academy இன் 44 ஆவது மாணவனின் மிருதங்க அரங்கேற்றம் இதுவாகும்.

மாலை 6:30 மணிக்கு முன்னரே Revergum Performing Arts Centre மண்டபம் நிரம்பியிருந்தது. சரியாக 6:30 மணிக்கு நிகழ்ச்சி தொகுப்பாளரான நவரட்ணம் ரகுராமும் செல்வி கஜானு மகேஸ்வரனும் மேடையில் வந்து எல்லோரையும் வரவேற்று அரங்கேற்ற நிகழ்வை ஆரம்பித்தனர்.

தொடர்ந்து, அரங்க நாயகன் செல்வன். கணாதீபனின் சகோதரி செல்வி. சுபானு மகேஸ்வரன் வரவேற்புரையை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து மேடைக்கு வந்த குரு. சிறீ யோகராஜா கந்தசாமி அவர்கள் இரத்தினச் சுருக்கமாக சில வார்த்தைகள் பேசி சம்பிரதாயபூர்வமாக அரங்கேற்றத்தை ஆரம்பித்து வைத்தார்.

மண்டபத்தின் திரை விலகவும் ஒளி வெள்ளத்தில் நீல வர்ணத்தில் அமைந்த சிவனின் பின்னணி திரைச்சீலையும் அதற்கு முன்னே அலங்கரிக்கப்பட்ட மேடையில் பாடகர் சிறீ அகிலன் சிவானந்தன் நடு நாயகமாக வீற்றிருக்க, விழா நாயகன் செல்வன். கணாதீபன் மகேஸ்வரன் அணியிசைக் கலைஞர்களுடன் ஒருமித்த இசையொலி நாதத்தை அள்ளி ஊற்றியது என்றால் மிகையாகாது.

கவிஞர் காமராசனுக்கு அஞ்சலி- கானா பிரபா

.

கவி வானின் நட்சத்திரம் ஐயா காமராசன் அவர்கள் காலமான செய்தியை இன்றைய காலை துயிர் பகிர்ந்தது. கவிஞர் முத்துலிங்கம் அவர்களோடு ஒரு நீண்ட வானொலிப் பேட்டியை எடுத்த பின் காமராசன் அவர்களையே மனதில் நினைத்து வைத்திருந்தேன். ஆனால் சந்தர்ப்பங்கள் தடையாக இருக்க, சமீபத்தில் குமுதம் இதழில் அவர் கொடுத்த பேட்டி மீண்டும் என்னுள் அவரோடு பேச வேண்டும், ஒலிப் பேட்டி கண்டு ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. ஆனால் அது மீளா இருப்பாக இன்று முற்றுப்புள்ளி வைத்தது. 
கவிஞர் காமராசன் அவர்களின் பாடல்களில் ஐயா வாழ்ந்து கொண்டிருப்பார்.

நக்கீரன் இதழுக்காக செப்டெம்பர் 1, 2013 இல் காமராசன் அவர்கள் வழங்கிய பேட்டியை நன்றியோடு இங்கு மறு பதிப்புச் செய்கிறேன்.

புதுக்கவிதை உலகின் பிதாமகன்களில் தலையாயவர் கவியரசர் நா. காமராசன். இவர் வசீகர வார்த்தைகளால் கவிவானை அளந்த ராஜாளிப் பறவை. மாணவப் பருவத்திலேயே மரபுக்கவிதைகள் எழுதத் தொடங்கிய இவர், அறுபதுகளின் இறுதியில் புதுக்கவிதையின் காதலர் ஆனார். இவரது பிரவேசத்திற்குப் பிறகு புதுக்கவிதை உலகம் கம்பீரம் அடைந்தது. 

சிட்னி தமிழ் அறிவகம் கொடி தினம் 2017 Jun 03

.
சிட்னி தமிழ் அறிவகம்  கடந்த இருபது ஆண்டுகளாக யாழ் நூலகம்தீக்கிரையாக்கப்பட்ட  நிகழ்வை  நினைவுகூர்ந்து  வருவதை  தாங்கள்  நன்கு  அறிவீர்கள்.
ஈழத்தமிழர்களின் அறிவாலயமாக விளங்கிய யாழ் நூலகம்தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை, இவ்வருடமும் நினைவு கூர்ந்துகொடிதின நிகழ்வை நடாத்த எமது நிர்வாகக் குழுதீர்மானித்துள்ளதுஇந்த நிகழ்வு ஜூன் மாதம் 03 ஆம் திகதி,சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு Homebush Public School மண்டபத்தில்நடைபெறும்.  இந்நிகழ்வில் தமிழ்ப் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும்சிறப்புரையும் இடம்பெறவுள்ளன.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் -தோற்றம். - நடேசன்

.

எக்சைல் 1984.

சென்னையில் தமிழர் மருத்துவ நிறுவனம் தொடங்கியபோது வெலிக்கடை சிறையில் இருந்து உயிர் தப்பி வந்த டாக்டர் ஜெயகுலராஜா தலைவராக இருந்தார். நான் செயலாளராக இருந்தேன். போராளி இயக்கங்கள் ஐந்து எம்மோடு இணைந்து இருந்தது. ஒரு வருடத்திற்கு இந்தக்கூட்டு முயற்சி எதுவிதத் தடையற்று இருந்தது. இக்காலத்திலே புளட்டைத் தவிர்ந்த மற்றைய இயக்கங்கள் இணைந்திருந்தன. இயக்கத்தினருக்கும், அகதிகளுக்கும் எமது மருத்துவசேவை கிடைத்தது. அத்துடன் இந்திய வைத்தியர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடையே வேலை செய்ய இந்தக்கூட்டு முயற்சி இலகுவாக இருந்தது.
எமது நிறுவனம் வெளிநாட்டில் தமிழர்கள், மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து இருந்து பெற்றபணத்தால் வளர்ந்து வந்தது. ஒரு வருடத்தின் பின்பு 86 ஆண்டு ஆரம்பக்காலத்தில் எமது முதலாவது வருடாந்தப்பொதுக்கூட்டம் நடக்கவிருந்தது.
144 சூளைமேட்டுத்தெருவில் மேல்மாடியில் காலை பத்து மணியளவில் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. செயலாளராக நான் எல்லாவிடயங்களையும் தயார் செய்துவிட்டு கூட்டத்திற்கு, அரைமணிக்கு முன்பாக மாம்பலத்தில் வசிக்கும் தலைவரை ஓட்டோவில் சென்று அழைத்துவரும்படி எங்களுக்கு உதவியாக இருந்து கருணாநிதியை அனுப்பினேன்.

மெல்பனில் 'காலச்சுவடு' கண்ணனுடன் சந்திப்பு

.

படைப்பிலக்கியவாதி சுந்தர ராமசாமியின் புதல்வனும் காலச்சுவடு இதழ் மற்றும் பதிப்பகத்தினை நடத்துபவருமான கண்ணனுடன் மெல்பனில் சந்திப்பு - கலந்துரையாடல்  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

நடைபெறும் நாள்:  ஜூன் 3 ஆம் ( 03-06-2017) திகதி சனிக்கிழமை

நேரம்: பிற்பகல் 2.00 மணி

நடைபெறும் முகவரி:  9 prospector court wheeler shill  Vic 3150

மேலதிக விபரங்களுக்கு : நடேசன்  0452 63 19 54




இலங்கையில் பாரதி அங்கம் -- 20 - முருகபூபதி -

.


" இசை  வெறும்  உணர்ச்சியைத்தரக்கூடிய  போதையல்ல.  அது நலிந்துபோன  இதயத்திற்கு  நம்பிக்கையை  ஊட்டுகிறது. மனிதனின்  தத்துவார்த்த  வாழ்வை  வளப்படுத்தும்  வலிமை அதற்குண்டு.  எனவே  மனித நாகரீகத்தின்  செல்வமான இசையின்  உயிரை  அகற்றி, அதன் வெறும் சடலத்தை மாத்திரம் காட்டும்  நிலையை  இசையமைப்பாளர்கள்  கைவிடவேண்டும். மக்கள்  கவிஞன்  பாரதி  கூறியதைப்போலவே  இசையின் வாயிலாக  நவரசங்களை  பிரதிபலிக்கச்செய்யவேண்டும். அதைச்செய்யமுன்வரும்  இசையமைப்பாளர்களையும் மக்களையுமே  நான்  விரும்புகின்றேன்."
           இவ்வாறு  பாரதி நூற்றாண்டு காலகட்டத்தில் இலங்கை வந்திருந்த இந்திய  இசைமேதை எம்.பி. ஶ்ரீநிவாசன் ( மானாமதுரை பாலகிருஷ்ணன்  ஶ்ரீநிவாசன்) வீரகேசரி வாரவெளியீட்டிற்கு  ( 20-12-1981) வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.
இவரை  பேட்டிகண்டவர் வீரகேசரி பத்திரிகையாளர் சுபாஷ் சந்திரபோஸ்.
யார் இந்த ஶ்ரீநிவாசன்...?
ஒரு   கால கட்டத்தில்  சென்னையில்  இடதுசாரி  கலை இலக்கியவாதிகள்   கூட்டாக  இணைந்து  தயாரித்து  வெளியிட்ட பாதை   தெரியுது  பார்  என்ற   திரைப்படத்தின்  இசையமைப்பாளர். இந்தப்படத்தில்   சில   காட்சிகளில்   ஜெயகாந்தனும்    வேண்டா வெறுப்பாக   தோன்றி  நடித்திருந்தார்.  எனினும்  படத்தின்  நீளம்  கருதி   அதனை  சுருக்கும்பொழுது  தான்  வரும்  காட்சிகளை ஜெயகாந்தன்   நீக்கச்சொன்னார்.

ஜெயகாந்தனின் அருமை நண்பரான எம்.பி.ஶ்ரீநிவாசன், தமிழ், மலையாளம், வங்காளம் உட்பட சில  இந்திய மொழிகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட  திரைப்படங்களுக்கு  இசையமைத்திருப்பவர்.

ஜெயகாந்தனின் பாரிசுக்குப்போ  நாவலில் வரும் நாயகன் சாரங்கன் வேறு யாருமல்ல - அவர் இந்த ஶ்ரீநிவாசன்தான் என்று விடயம்  தெரிந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ( வாசகர்கள் மீண்டும்  ஒரு  முறை பாரிசுக்குப்போ நாவலை படித்துப்பார்க்கலாம்)


உலகச் செய்திகள்


சிறையை உடைத்து தப்பிய 17 குற்றவாளிகள் சுட்டுக்கொலை : பப்புவா நியூகினியாவில் சம்பவம்..!

‘ஒசாமா பின்லேடனு’க்கு ஆதார் அட்டை பெற விண்ணப்பித்த ‘சதாம் ஹுசைன்’ கைது

 கொலரா நோயினால் 209 பேர் பலி : 17 ஆயிரம் பேர்வரையில் பாதிப்பு : ஏமனில் சம்பவம்

 பிரித்தானியாவில் தற்கொலை தாக்குதல்: 19 பேர் பலி, 50 க்கும் மேற்பட்டோர் காயம்

சர்ச்சைகளுக்கு மத்தியில் குறுந்தூர ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தியுள்ள வடகொரியா..!

பாலியல் குற்றம் சுமத்திய அதிகாரிகளை மறக்கவும் முடியாது - மன்னிக்கவும் முடியாது : ஜூலியன் அசாஞ்சே



சிட்னி முருகன் ஆலயத்தில் சேக்கிழார் குருபூசை 30 05 2017

.

இலங்கைச் செய்திகள்


மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு

முல்லைத்தீவில் வரட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம்!

மோடி உரை­யினால் இலங்­கையின் பாது­காப்­புக்கு பெரும் அச்­சு­றுத்தல்

"மட்டு. இராணுவ விமான நிலைய தளம் 31 ஆம் திகதி முதல் சிவில் பாவனைக்கு"

 ‘வன் பெல்ட் வன் ரோட்’ திட்டத்துக்கு இலங்கை ஆதரவு வழங்கும் : சீனாவில் பிரதமர்

 வாள்வெட்டு வழக்கில் மூவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை

பெற்றோல் குண்டுகள், கற்கள் கொண்டு முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் - பாணந்துறை, வெல்லம்பிட்டி பகுதிகளில் சம்பவம்

புளொட் நெடுமாறனுக்கு 2வருட கடூழியச் சிறைத் தண்டனை : வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

 கனடாவிற்கு நேரடி விமானச்சேவை..!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு  முல்லைத்தீவு நீதிமன்றம் தடை உத்தரவு

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : சம்பந்தன் உரையாற்ற வந்த போது குழப்பநிலை

வெள்ளவத்தையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் காயமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு.!

 பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் : சந்­தேக நபர்­களை கைது செய்ய விசேட பொலிஸ் குழு

வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் வரை தொடர் போராட்டம் : வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் திட்டவட்டம்

புலிகள் அமைப்பிற்கு எம்.ஜி.ஆர். பாரிய நிதி உதவிகளை வழங்கினார் : பல புதுத் தகவல்களை வெளியிட்டார் கே.பி. (காணொளி இணைப்பு)

மஹிந்தவிற்கு எதிரான வழக்கு 26 ஆம் திகதி விசாரணை..!


குல தெய்வங்கள்

.


தாமிரபரணி ஆற்றினை  ரசிக்காதவர்கள் கிடையாது எனலாம். இந்த ஆறு என்னைக் கவர்வதற்கு ஒரு பிரத்தியேகமானக் காரணம் இருக்கின்றது. இந்த ஆற்றின் கரையோரங்களில் ஆங்காங்கே சின்னச்சின்னதாய் கோயில்கள் பல  இருக்கின்றன. பெண் தெய்வமாகவும் ஆண் தெய்வமாகவும் வெவ்வேறு பெயர்களுடன் இந்தத் தெய்வங்களின் சிறு கோயில்கள் அமைந்திருப்பதையும் இங்குச் சென்று வந்தவர்கள் நேரில் அறிந்திருக்கலாம்.

ஒரு முறை நான் இந்தப் பகுதியில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது ஆற்றங்கரையில் கிராம மக்கள் கூட்டமாக நின்று பூசைக்கு தயாராகிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். மஞ்சள் நிறத்தில் ஆடையணிந்த பெண்களும் ஆண்களும் தலையில் குடங்களை ஏந்தியவாறு இருக்க, அருகில் மத்தளம் நாதஸ்வரம் என இசைக்கருவிகளை ஒரு குழு வாசித்துக் கொண்டிருக்க, அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தோர் சிலர் பக்கத்தில் நின்று கொண்டு குதூகலம் பொங்க சில சடங்குகளைச் செய்து கொண்டிருந்தனர். அதற்குச் சற்று தூரத்தில் சிறிய கோயில் ஒன்று பூமாலையும் வன்ண வண்ண காகித மாலைகளின் அலங்காரமும் செய்யப்பட்டு திருவிழா கோலம் பூண்டிருந்ததையும் காண முடிந்தது.

மக்களைச் சிறைப்படுத்தும் மன அழுத்தம் - டாக்டர் கு .கணேசன்

.
உலகிலேயே மன அழுத்தம் உள்ளவர்கள் அதிகமாக வாழும் நாடு எது தெரியுமா? இந்தியாதான். 2011-ல் எடுத்த புள்ளிவிவரப்படி 100-ல் 15 பேரிடம் காணப்பட்ட மன அழுத்தம் 2015-ல் 100-க்கு 20 பேரிடம் காணப்படுவதாகவும், இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 50-%க்கும் அதிகமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் நிலைமை 10%. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், மன அழுத்தம் ஒரு தேசியப் பிரச்சினை ஆகிவருகிறது என்றும் அது எச்சரித்துள்ளது.
மன அழுத்தமானது தனிப்பட்ட ஒரு மனிதரின் மன நலப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இந்தப் பாதிப்பின் ஆரம்பகட்டத்தில் குடும்ப வேலை, அலுவலக வேலை போன்ற சாதாரண வாழ்வியல் கடமைகளை நிறைவேற்ற முடியாமல் திணறுவார்கள். ஆனால், காலப்போக்கில் உடல் நலம் குறைவதும், உறவுகள் சிதைவதும், ஒட்டு மொத்த சமூகமே எதிரியாவதும் தவிர்க்க முடியாத தாகிவிடும். நாள்பட்ட மன அழுத்தம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையே சீர்குலைத்து விடுகிற ஆபத்து நிறைந்தது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். ஆகவேதான், நடப்பு ஆண்டில் மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் மருத்துவர்களையும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் அறிவுறுத்திவருகிறது.

தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – மெல்பேர்ண் / சிட்னி –

.
 தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – மெல்பேர்ண் – ஊடகச்செய்தி
அவுஸ்திரேலியா மெல்பேர்ண்நகரில் உணர்வெழுசிசியுடன் நடைபெற்ற மே- 18 தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நினைவுநாள். கடந்த 2009-ம்ஆண்டு மேமாதம் முள்ளிவாய்க்காலில் இறுதியுத்தநாட்களில் சிங்களப்பேரினவாதஅரசினால் தமிழ்மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவழிப்புப்போரின்போது காவுகொள்ளப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழ்மக்களின் எட்டாவது ஆண்டுநினைவுதினமும் காலத்திற்குக்காலம் சிங்களப்பேரினவாத அரசினால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவான தமிழர் இனவழிப்பு நினைவுநாளும் மெல்பேர்ண்நகரில் கங்கேரியன் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

18-05-2017அன்று மாலை 6.30மணிக்கு மண்டப நினைவேந்தல்நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வை செல்வி மது பாலா அவர்களும் (தமிழ்மொழியிலும்) திரு ஆதவன் சிறீதரன் அவர்களும் (ஆங்கிலமொழியிலும்) தலைமையேற்று தொகுத்து வழங்கினார்கள்.


அறுக்கப்பட்டது ஆணாதிக்கம்... த.ராம்

.
டவுளின் தேசமான கேரளத்தில் காமுகர்களின் அட்டகாசம் அதிகரித்திருப்பது வேதனை. தன்னைப் பல ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் ஒருவருக்கு, அந்தப் பெண் கொடுத்த தண்டனை நாட்டையே உலுக்கிவிட்டது. 

அந்தச் சாமியார் பெயர், கங்கேஷ் ஆனந்த தீர்த்தபாத சுவாமி. அந்தப் பெண், 23 வயதான சட்டக்கல்லூரி மாணவி. ஒவ்வொரு சாமியாருக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கும். அங்கிருந்து வருவோம்.

சாமியாரின் பூர்வாசிரமப் பெயர், ஸ்ரீஹரி. கேரள மாநிலம் கோலாஞ்சேரி இவரின் சொந்த ஊர். அந்த ஊரில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். டீக்கடை தொழில் கைகொடுக்காத சிலர் அரசியலுக்கு வருவதைப் பார்த்திருக்கிறோம். இவர், ஆன்மிகம் பக்கம் திரும்பினார். கொல்லம் நகருக்குச் சென்று, அங்குள்ள ஒரு சாமியாரின் சமாதியைத் தினசரி வழிபட ஆரம்பித்தார். ஆண்டுகள் கடந்தன. தாடி, மீசை வளர்த்து, காவி உடை அணிந்து தன்னைச் சாமியார் போல் மாற்றிக்கொண்டார். அங்கு வந்த பக்தர்களின் பிரச்னைகளுக்கு ஆலோசனை சொல்லத் தொடங்கினார். கேரளாவில் இந்து அமைப்புகள் சார்பில் நடந்த பல்வேறு போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பல கோயில்களில் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடத்தினார். அதன்பிறகு, கொல்லம் பன்மனை ஆசிரமத்தில் இணைந்து முழுநேரச் சாமியாராக மாறினார்.


அறிவோம் இஸ்லாம் - பாத்திமா மைந்தன்

.
ஒட்டகம்- ஓர் ஒப்பற்ற அதிசயம்



ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவரம் உண்ணும் வகையைச் சேர்ந்த, பாலூட்டக்கூடிய, அசைபோடும் பெருவிலங்கு ஆகும். இவை 30 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. சராசரியாக 250 கிலோ முதல் 700 கிலோ எடை கொண்டது. உயரம் 7 முதல் 8 அடி வரை! 
பரம சாதுவாகக் காட்சி அளிக்கும் ஒட்டகங்கள், சாதாரணமாக மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் படைத்தவை. சிறுதொலைவு ஓட்டப்பந்தயம் வைத்தால் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடவும் செய்யும். ஒட்டகம் ஒன்று 200 கிலோ எடையைச் சுமந்து கொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தூரம் நடக்கக் கூடியது. பெரும்பாலான நாடுகளில் ஒட்டகங்கள் பொதி சுமக்கும் விலங்குகளாகவும், வண்டி இழுக்கவும் பயன்படுகின்றன. பாலைவனப் பகுதிகளில் ஒட்டகங்களை ராணுவத்தினர் அதிக அளவு பயன்படுத்துகின்றனர்.
கொளுத்தும் கோடை வெயிலிலும், கொதிக்கும் பாலை மணலிலும் நீர் இல்லாமலும், உணவில்லாமலும் பல நாட்கள் வாழக்கூடிய சக்தி கொண்டவை, ஒட்டகங்கள். மேய்வதற்குப் புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் வரையிலும் தண்ணீர் குடிக்காமல் ஒட்டகத்தால் இருக்க முடியும். 
சில மாதங்கள் நீர் அருந்தாமல் உலர் நிலையில் இருந்து மீண்டும் நீர் அருந்தும்போது ஒரே மூச்சில் 100 லிட்டர் தண்ணீரைக் குடித்து விடும். இவ்வாறு நீரைக் குடித்தவுடன் 10 நிமிடங்களில் அதன் உடலில் நீர்ச்சத்து ஏறி விடும். பிற விலங்குகள், நீர் இல்லாத உலர் நிலையில் இருந்து இவ்வளவு விரைவாக நீர்ப்பதம் அடைய முடியாது. ஏனெனில் ரத்தத்தில் திடீரென்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் அந்த விலங்குகளின் சிவப்பணுக்கள் வெடித்து விடும். ஆனால் ஒட்டகங்கள் நீரை அருந்தியவுடன் அதன் இரைப்பையில் உள்ள நீர் அறைகளில் நீரைத் தற்காலிகமாக ஏற்றிக் கொள்கிறது. அங்கிருந்து உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் சிவப்பு அணுக்களில் ஏற்றி சேமித்துக் கொள்கிறது. அப்போது சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் 240 சதவீதம் விரிந்து இடமளிக்கிறது. 

நா.காமராசன் - கவிஞர் மகுடேசுவரன்

.

தம் படங்களுக்குப் பாடல்கள் எழுத புதுப்புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அன்றைக்கே முனைப்பாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கண்ணதாசனோடு எம்.ஜி.ஆருக்கு அரசியல் ரீதியான பிரிவு தோன்றியிருந்ததால் அவரை நாடமுடியாத நிலை. மேலும், கண்ணதாசன் சிவாஜியின் படங்களுக்கு அதிகமாக எழுதிக்கொண்டிருந்தார். ஆகவே, தவிர்க்கவே முடியாமல் வாலி போன்றவர்கள் எம். ஜி. ஆர் படங்களில் தொடர்ந்து எழுதலாயினர். வாலியின் பாடல்கள் கண்ணதாசனே எழுதியவையோ என்ற மயக்கத்தை ஏற்படுத்தியபோதிலும் கண்ணதாசன் பாடல்களோடு ஒப்பிடுகையில் ஒருபடி தாழ்ந்தே இருந்தன. மேலும் கவிஞர் வாலியும் எல்லாப் படங்களுக்கும் நிறைய பாடல்கள் எழுதி வந்தார். எம்.ஜி.ஆருக்குத் தமிழ் அறிந்த புலவர்கள்மீது அளப்பரிய மதிப்பும் பற்றும் எப்போதும் இருந்திருக்கிறது. அந்தப் பற்றே தமிழறிஞரான கருணாநிதியோடு அவர் ஆழ்ந்த தோழமை கொள்வதற்குக் காரணம். அவர் எப்போதும் தமிழறிஞர்களையும் புலவர்களையும் மதிப்போடு போற்றியும் ஆதரித்தும் வந்திருக்கிறார் என்பதற்கு நிறைய சாட்சியாளர்களைக் காணமுடிகிறது.

புற்றுநோயைத் தடுக்கும்... ச.மோகனப்பிரியா

.

உடலை வலுவாக்கும், புற்றுநோயைத் தடுக்கும்... எக்கச்சக்க பலன்கள் தரும் 10 மூலிகை தோசைகள்!

மூலிகை தோசை
ல வீடுகளில் தினமுமே இரவு உணவு, தோசை! `இன்னிக்கும் தோசைதானா?’ என்று எதிரொலிக்கும் குரல்களும் உண்டு. இது ஒரு புறம் இருக்கட்டும். இன்னொரு புறம், நெய்விட்டு முறுகலாக அம்மா சுட்டுத்தரும் தோசையை விரும்பாத குழந்தைகளே இருக்க முடியாது. தோசை, நம் பாரம்பர்ய உணவுகளில் ஒன்று. நாம் உண்ணும் அனைத்து உணவுகளுமே மருந்தாக முடியும்.  `மருந்து’ எனக் கருதும் மூலிகைகளை உணவுடன் கலந்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக் கிடைக்கும்; நோய்கள் வராமல் தடுக்கும். இப்படி நோயாளிக்கு உணவே மருந்தாகவும் மாறும். இதனால் நோயிலிருந்து எளிதாக விடுபடவும் முடியும். ஆயுர்வேதக் குறிப்புகளைக் கொண்டு, அதன்படி தோசை செய்வது அந்தக்கால நடைமுறை. அதற்கான குறிப்புகளும் காணப்படுகின்றன. அந்தக் காலத்தில், உடல் பலத்தைப் பெருக்குவதற்கும் ஆண்மையை விருத்தி செய்யவும் மருந்துகளை அரிசி மாவுடன் கலந்து, அடையாகச் செய்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.  குறிப்பாக மூலிகை தோசைகள் பற்றி விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்...

Sri Krishna Charithiram 19 .08 .2017

.




இந்த தனிமை அழகானது...........

.


மஹேந்திரமான வானத்தினிலே
மாய மோஹனக் காற்றினிலே
பசுமை கொஞ்சும் மொட்டுகள்,
பறந்தோடும் வண்டுகள்,
பாடித்திரியும் பறவைகள்,
ஓடி மகிழும் ஓவியங்கள்,
சின்னஞ்சிறு கொஞ்சல்கள்,
செல்லச் செல்லச் சிணுங்கல்கள்
அழகான காட்சிகள்
அனைத்தையும் ரசித்தபடி
தனியாக நான்........
நிழலாடும் உன்
நினைவுகள்
நெஞ்சினில் இனிப்பதால்,
இந்த தனிமை
அழகானது............

தமிழ் சினிமா

லென்ஸ்   


சினிமாவில் எத்தனையோ விதமான படங்கள் வருகின்றன. அதில் ஒரு சில படங்கள் சமூகத்தில் நடக்கும் அவலங்களை அப்பட்டமாக சொல்கின்றன. விருதுகளுக்காகவே சில படங்கள் எடுக்கப்பட்டாலும் அவை குறிப்பட்ட கதையை ஆழமாக பதியவைத்துவிட்டு செல்கிறது.
அந்த வரிசையில் லென்ஸ் திரைப்படம் எதை வெளிச்சம் போட்டு காட்டப்போகிறது என பார்க்கலாம்.

Lens
கதைக்களம்

கதைப்படி பார்க்கப்போனால் வில்லன் தான் ஹீரோவா, இல்லை ஹீரோ தான் வில்லனா என்பது தான் ட்விஸ்ட். கிளைமாக்ஸில் தான் இது புரியும்.
அரவிந்தாக வரும் இயக்குனர் தன் மனைவி சுவாதிக்கு தெரியாமல் சமூகவலைதளத்தை தவறாக பயன்படுத்தி முகம் தெரியாத பெண்ணுடன் chatல் ஆபாச இச்சை கொள்கிறார்.
வில்லன் யோகனாக வரும் ஆனந்தசாமி ஆதரவற்றவர். வாய்பேச முடியாத ஏஞ்சலை திருமணம் செய்து சந்தோசமாக வாழ்கிறார். ஒரு கட்டத்தில் மனைவி இறந்துபோக தனிமையால் வாடுகிறார் யோகன்.
வீட்டில் மனைவி இல்லாத சமயத்தில் வழக்கம் போல அரவிந்த் தனது தொடர்கதையை செய்ய திடீரென ஒருநாள் இவரது சிஸ்டத்தை வில்லன் ஹேக் செய்து விளையாட கதை சூடுபிடிக்கிறது.
எதிர்முனையில் Chat பக்கத்திலிருந்து தான் சொல்வதை கேட்க வேண்டும் இல்லையெனில் உன் லீலைகளை நான் அம்பலப்படுத்திவிடுவேன் என வில்லன் அரவிந்தை மிரட்டுகிறார்.
வில்லன் ஏன் ஹீரோவை மிரட்டவேண்டும். இருவருக்கும் என்ன சம்பந்தம், அவனிடமிருந்து இவர் தப்பித்தாரா, இவரின் லீலைகள் அம்பலமானதா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அறிமுக இயக்குனராக தானே கதையெழுதி படத்தை எடுத்து, நடித்திருக்கும் ஜெயபிரகாஷ் தற்போதிருக்கும் கவர்ச்சி உலகில் சைக்கோத்தனமாக நடக்கும் விஷயத்தில் ஹீரோவாக நன்கு நடித்திருக்கிறார்.
படுக்கையறை விசயங்கள் இப்போதெல்லாம் பப்ளிக் வீடியோவாக எப்படியோ சமூகவலைதளத்திலும், இணையதளத்திலும் உலா வருவதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
வழக்கமான வில்லன்களை போல் இல்லாமல் இப்படத்தில் வில்லன் ஒரு வித்தியாசமானவராக நடித்திருக்கிறார். சொல்லப்போனால் பார்ப்பவர்களுக்கு இவர் தான் ஹீரோ என்று தோன்றும்.
ஏஞ்சலாக நடித்திருக்கும் அஸ்வதி புதுமுகம் என்றாலும் தன் ரோலை சரியாக செய்திருக்கிறார். சுவாதியாக நடித்திருக்கும் மிஷா கோஷல் ஒரு சில காட்சிகள் தான் என்றாலும் கிளைமாக்ஸில் இவரும் ஒரு ட்விஸ்ட்டை வைக்கிறார்.
படத்தில் ஒரே பாடல் தான் என்றாலும் சலிப்பு தட்டவில்லை.

கிளாப்ஸ்

Cyber crime குற்றங்களை புதுமுக இயக்குனராக ஜெயபிரகாஷ் துணிச்சலாக இந்த கதையை எடுத்திருப்பதை பாராட்ட வேண்டும்.
வெற்றிமாறன் படத்தை வழங்கியிருப்பது இப்படத்திற்கு கிடைத்த பிளஸ்.



கதைக்கோர்வையில் காட்சிகளை நகர்த்திய விதத்தில் ஒளிப்பதிவு ஓகே.ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரே ஒரு பாடல் தான் என்றாலும் ஒகே. ரொமாண்டிக்.

பல்பஸ்

காமெடி இல்லையென்றாலும் சில சீரியஸான இடங்களில் ஹீரோவின் டையலாக் சிரிக்கும் படியாக உள்ளது.
முதல் படம் என்றாலும் இயக்குனர் ஆபாச விழிப்புணர்வு என்ற பெயரில் கொஞ்சம் கூடுதலாக ஆபாசத்தை தொட்டுவிட்டாரோ என தெரிகிறது.
வயது வந்தோர் மட்டுமே பார்க்கும் நிலையாக உள்ளது.
மொத்தத்தில் லென்ஸ் சரியான வியூ. தெளிவாக விசயத்தை காட்டியிருக்கிறது.
Cast:

நன்றி   Cineulagam