தரைக்குவரும் நட்சந்திரங்கள்..

.


கண்ணீரை ஆவியாக்கியபடி
ஒரு காலம்
வறண்டுபோய் கிடக்கிறது..


ஊரெல்லாம்
ஒருபாட்டம் மழைவராதா என்று
மண்ணை இறுகப்பிடித்தபடி
ஈரப்பதன் தேடி
வேர்கள் மூச்சுவிடத்துடிக்கின்றன 


திசைகளை மூடி
வீசும் அணல்காற்றில்
தீய்ந்து தீய்ந்து
ஒவ்வொரு இலைகளாக 
கருகி உதிர்கின்றன


அணலாய் கொதித்துருகும்
எல்லாக்கடல்களில் இருந்தும்
ஆவியாகின்றன
கண்ணீர்த்துளிகள்

கலாரசிகப் பெருமக்களின் மனம் உருகி, நெகிழ, மகிழ, உணர்ச்சிவசப்பட வைத்த கர்னாடக இசைக் கச்சேரி.



டிசம்பர் 31ம் திகதி இரவு 8 மணிமுதல் 10.30 வரை செல்வி சந்திரிகா மாணிக்கவேல் அவர்களின் கச்சேரி சிட்னி முருகன் ஆலயத்தில் சைவமன்றத்தின் ஆதரவுடன் நடந்தேறியது. இந்நிகழ்ச்சியை ஜெயராம் ஜெகதீசன் தொகுத்து வழங்கினார். டாக்டர் சிவரதி கேதீஸ்வரன் அவர்களின் கணீரென்ற குரலில் திருமுறையோடு விழா ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து உலக சமானத்திற்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது. அதன்பின் ஜெயேந்திரன் தம்பதிகள் குத்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர். சிட்னி முருகன் ஆலய தலைவர் திரு தில்லை நடேசன் வரவேற்புரையை ஆற்றினார். தொடர்ந்து அறிமுக உரையை திரு கணிகை ஸ்கந்தகுமார் ஆற்றினார். அதைத் தொடர்ந்து எனது ஆசியுரை இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து செல்வி சந்திரிகாவின் இன்னிசைக் கச்சேரி ஆரம்பமாகியது.

சிட்னி சைவ மன்றம் நடாத்திய ஸ்ரீ வெங்கடேஷன் ஓதுவார் அவர்களின் இசை நிகழ்ச்சி






இலங்கையில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு


எஸ்.கிருஷ்ணமூர்த்தி – அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் இயங்கும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகின்றன.

இரண்டு தமிழ்நாவல்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியாவதுடன் தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட சில சிறுகதைகளைக்கொண்ட தொகுப்பு நூலும் வெளியிடப்படவிருக்கின்றன.

அவுஸ்திரேலியாவில் நீண்டகாலமாக வதியும் இலங்கையர்களான டொக்டர் நொயல் நடேசன் மற்றும் லெ.முருகபூபதி ஆகியோரின் புத்தம் புதிய மொழிபெயர்ப்பு படைப்புகளே இந்த வெளியீட்டு நிகழ்வில் அறிமுகமாகின்றன. ஜனவரி 8 ஆம் திகதி கொழும்பில் பணடாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாலை 5 மணிக்கு செயற்குழுக்கூட்ட அறை F இல் வெளியிடப்படும் குறிப்பிட்ட மூன்று நூல்களின் விபரம் வருமாறு:

டொக்டர் நொயல் நடேசனின் உனையே மயல்கொண்டு என்னும் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு Lost In You . இதனை சென்னையைச்சேர்ந்த கலாநிதி ……வாசுதேவ் மொழிபெயர்த்துள்ளார். இலங்கையின் பிரபல நூல் வெளியீட்டாளர்கள் விஜிதயாப்பா பதிப்பகத்தினர் இதனை பதிப்பித்துள்ளனர்.

திருவாசகவிழா 12 .01. 2013

.

இலங்கைச் செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தை 14 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்

2012 இல் 40460 வாகன விபத்துக்கள்: 2263 பேர் பலி

வயலில் பெண்களை தாக்கி பாலியல் வல்லுறவுக்குட்டுபடுத்த முயற்சித்த குழுவினர்

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தை 14 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்

யாழ். பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலைப்பீடத்தை இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை கலைப் பீடத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

எண்பது ரூபா ---நெல்லை க.பேரன்

.

தூரத்தில் எங்கேயோ  பௌத்த ஆலயத்திலிருந்து பிக்குகள் பிரித் ஓதும் சத்தம். 'புத்தம் சரணம் கச்சாமி' 'சங்கம் சரணம் கச்சாமிஎன்று விட்டு விட்டுப் புத்தர்பெருமானின் திருப்பாதங்களைத் தொழுகின்ற அடியார்களது ஒலிகூடக்கந்தையாவை அமைதிப் படுத்தவில்லைபடுக்கையில் புரண்டு படுத்த அவனைக்கணநேரத்திற்குள் சுள் என்று குத்திய மூட்டைப் பூச்சி தட்டி எழுப்பிவிட்டதுபக்கத்துஅறையில் இருந்த தனிக்குடித்தனக் காரர்களின் பழைய காலத்துப் 'பிக்பென்'மணிக்கூடு டாண் டாண் என்று பன்னிரண்டு தடவைகள் அடித்து ஓய்ந்தது.கந்தையாவுக்குப் பெரியதொரு பெருமூச்சு வெளிப்பட்டதுகடந்த காலமும் குடும்பநினைவுகளும் அவனை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டன.


அப்பொழுது கந்தையாவுக்கு இருபது வயதிருக்கும்நெல்லியடி சென்றல் ஸ்கூலில்படித்து எஸ்.எஸ்.சி யைப் பாஸ் பண்ணிவிட்டு அதற்கு மேலே படிக்க முடியாமல்ஊர்ப்பொடியள் ஒன்றுகூடும் முருகையன் கோவிலின் பிள்ளையார் மண்டபத்திற்குமுன்னால் அந்தப் பன்னீர் மர நிழலில் உட்கார்ந்து அரசியல் தொடக்கம் சினிமாஉலகம் வரையில் நண்பர்களுடன் விளாசித் தள்ளுவான் கந்தையா.சிலவேளைகளில் சுவாமியை வைத்துத் தள்ளும் பெரிய சகடைச் சில்லுகளின் மேல்உட்கார்ந்து கொண்டு நண்பர்களுடன் உலக விவகாரங்களையும் ஊர்விவகாரங்களையும் அவன் அலசும் விதமே தனி 

“பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதே படைப்பாளியின் தலையாய பணி” - முருகபூபதி நேர்காணல்


.
சந்திப்பு: கார்த்தியாயினி



படைப்பாளியும் பத்திரிகையாளருமான முருகபூபதிக்கு அறிமுகம் அவசியமில்லை. நீண்டகாலமாக எழுத்துலகில் பயணித்துவரும் இவருக்கு சமூகப்பணியாளர் என்ற மற்றுமொரு முகமும் இருக்கிறது. சமீபத்தில் இலங்கைவந்திருந்தார். நேரடியாகவே அவரிடம் கேள்விகளை தொடுத்தோம்.

கேள்வி: 
சிறுகதை, நாவல், கட்டுரை, பயணஇலக்கியம், சிறுவர் இலக்கியம், பத்திஎழுத்துக்கள் முதலான துறைகளில் எழுதிவருகிறீர்கள். இதழ்கள் மற்றும் இணையத்தளங்களிலும் உங்கள் ஆக்கங்கள் பதிவாகின்றன. சமகாலத்தில் உங்களது இலக்கிய முயற்சிகள் பற்றிச்சொல்லுங்கள்.

முருகபூபதி:
 மீண்டும் எனது தாயகம் வந்துள்ளேன்.  நாட்கள் வேகமாக நகருகின்றன. ஒருமாதம் ஓடியவேகம் தெரியவில்லை. அவுஸ்திரேலியாவிலிருந்திருப்பின் இந்த ஒருமாதகாலத்துள் நிறைய எழுதியிருப்பேன். அங்கிருந்து நாம் இயக்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பராமரிப்பிலிருக்கும் போரில் பாதிக்கப்பட்ட பிள்ளைளை (மாணவர்களை) நேரில் பார்ப்பதற்காக வந்த இடத்தில் பயணங்கள் அதிகம். வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு, கிளி;நொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் எமது நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களை நேரில் சந்தித்தேன். விரைவில் கிழக்கு மாகாணம் செல்லவிருக்கின்றேன். அதனால் கிடைத்த நேர அவகாசத்தில் ஒருசில கட்டுரைகள்தான் இந்த ஒருமாத காலத்தில் எழுதமுடிந்தது.

கோலாகலமாக 2013 ஆம் ஆண்டை வரவேற்ற உலகம்

.

  புத்தாண்டை வரவேற்கும் முகமாக உலகம் முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற புதுவருட நிகழ்வுகளின் படங்களை கீழே காணலாம்.


சிட்னி சைவ மன்றம் நடாத்திய ஸ்ரீ வெங்கடேஷன் ஓதுவார் அவர்களின் இசை நிகழ்ச்சி you tube





வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு 50 அன்பு எங்கே சாரும்?


ஞானா:        அம்மா….அம்மா…..ஒரு செய்தி கேட்டியளே. என்ரை சிநேகிதியின்ரை boy friend கோபத்திலை            ஆரோ ஒருத்தனைச் சுட்டுக் கொண்டு போட்டானாம். இப்ப அவன் மறியலிலை இருக்கிறானாம்.            இவள் என்ரை சிநேகிதி என்ன செய்யிறது எண்டு தெரியாமல் தவிக்கிறாள்.

சுந்தரி:        ஏன் தவிப்பான்? அந்த அதர்மககாறனை மறந்திட்டு வேறை ஆளைப் பாக்க வேண்டியதுதானே.

ஞானா:        இதொன்னம்மா உங்கடை கதை? எவ்வளவோ காலம் பழகின
Boy friend டிலை அன்பில்லாமல்            இருக்கலாமே? அதுகும் போக உடுப்பு மாத்திறமாதிரி டிழல கசநைனெ டையும் மாத்தலாமே?
அப்பா:        (வந்து) மாத்தேலாதுதான் ஞானா. நீ திருக்குறள் ஆராயிறனிதானே, திருக்குறளைத் தட்டிப்                பாரன் உந்த நிலைபரத்துக்கு என்ன செய்லாம் எண்டு.

வணிக சஞ்சிகைகளில் தொழில்நுட்பத் தமிழ் - யசோ பத்மநாதன்



.
நேற்றைக்கு வேலைக்குப் போகும் அவசரத்தில் கையில் அகப்பட்ட ஒரு சஞ்சிகையைத் தூக்கி பையில் போட்டுக் கொண்டு புறப்பட்டேன்.வாராந்த ‘குங்குமம்’ சஞ்சிகை. ஏதோ ஒரு பண்டமாற்றடிப்படையில் வீடு வந்து சேர்ந்திருக்கின்றது.

புரட்டிய போது தமிழ் எவ்வளவு அவசர அவசரமாகப் பயனிக்கின்றது என்று தெரிந்தது. நாவல்கள், நெடுங்கதைகள், குறுநாவல்கள், சிறுகதைகள் எல்லாம் சுருங்கி ஒரு பக்கக் கதைகளாகவும், துணுக்குகளாகவும்  twitter, Facebook முகப்புப் பக்க வரிகளாகவும் மாறிப்போனதைக் காண முடிந்தது.

ஒரு சிறுவரியில் நச்சென்று சொல்லி விட்டுப் போவதை போகிற போக்கில் பார்த்து விட்டுப் போகும் அவசரம்!

தமிழில் அது மெல்லச் சுவறுகிறது.

காலமாற்றம் ஒன்று கண்ணில் தெரிகிறது.

தமிழும் இலக்கியமும் கூட இடம்மாறி அவசர அவசரமாக ஓடுவதாகத் தோன்றுகிறது. எண்ணிம யுகத்துக்குள் புத்தாடை புனைந்தவாறு புதுத் தமிழ் நிற்கிறது. தொழில்நுட்பம் எழுத்தாளர்களை வாசகர்களாகவும் வாசகர்களை எழுத்தாளர்களாகவும் இடம்மாற்றிப் போட்டிருப்பதால் இணைய வெளி எங்கும்; மக்கள் கூடும் சமூக வலைத்தளங்கள்  எங்கும்; சிறுகதைகளுக்கான கருக்கள் மலிந்து கிடக்கின்றன. ஒரு நையாண்டியோடு நகைச்சுவையோடு இரண்டு வரியில் தமிழ் இப்போதெல்லாம் அதைச் சொல்லிப் போகிறது.

கலைப்படுத்தல், இலக்கியமயப்படுத்தல், அழகுபடுத்தல் எல்லாம் வேண்டாத ஒன்றாய் ’சிம்பிளாய் ரெண்டு வரி’ என்ற அளவில் குறுகிப் போயிற்று.

“வீரம் அன்று; விதி அன்று; மெய்மையின்
வாரம் அன்று; நின் மண்ணினுக் கென்னுடல்
பாரம் அன்று: பகை அன்று - பண்பொழிந்து,
ஈரம் இன்றி, இது என் செய்தவாறு நீ?”

கொடிகாமத்துக்கும் தட்டிவான் டுபாயிலும் தட்டிவான் - கரவைக்குரல்

.


ஈழத்து முற்றத்திலிருந்து மகிழ்ச்சியுடன் உல்லாசமாயிருக்கும் அனைத்துப்பதிவர்களுக்கும் வணக்கம்.
நானும் உங்களுடன் இணைந்துகொள்வதில் ரொம்ப மகிழ்ச்சி.
ஆரம்பத்தில் என்ன பதிவிடுவது என்ற சின்ன எண்ணச்சிக்கலில் இருந்த எனக்கு இதன் ஆரம்பகர்த்தாவாகிய கானாவின் ஆமோதித்தலுடன் என் கரவைக்குரல் பதிவில் இட்ட பதிவை மீள்பதிவிடுகிறேன்,ஏனென்றால் இது எம் ஈழத்துடன் கொஞ்சம் தொடர்புபட்ட பதிவாகையாலும் ஈழத்துமுற்றத்தில் இருக்கும் எல்லா பதிவர்களும் பார்த்திருப்பார்களோ என்ற எண்ணத்தினாலும் இதை மீள்பதிவிடுகிறேன்,

"சீனப்பா சீனப்பா" என்று ஒருவர் இருந்தார் கரவெட்டி கோவிற்சந்தைக்கு கிட்டடியில்.இது ஏதோ அரசகதை சொல்ல தொடங்குவது போலல்லவா இருக்கிறது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.யாழ்ப்பாணம் வடமராட்சியில் பாடசாலை சேவை வாகனசேவை ஓடி பிரசித்தமான ஒருவர்.அவரைத்தொடர்ந்து அவருடைய பிள்ளைகள் தொடர்ந்து சேவை செய்தவர்கள்
இதை ஏன் சொல்கிறேனென்றால் இவர்கள் கையில்தான் தட்டி வான் என்று சொல்லப்படும் ஒருவாகனத்தை நான் சிறுபராயம் முதலே கண்டவன். இப்போது ஒரு சில வாகனங்கள் கொடிகாமத்துக்க்கு ஓடிக்கொண்டிருப்பதாக அறிய முடிகிறது ஈழத்திலிருந்து.

உலகச் செய்திகள்

டெல்லியில் பலியான மாணவியின் உடல் இன்று அதிகாலை தகனம்

 ஐவரிகோஸ்டில் அழிவுடன் ஆரம்பித்த புத்தாண்டு!

 இஸ்ரேலில் புதிய மைல்கல்லை எட்டிய யூதர்கள்

டெல்லியில் பலியான மாணவியின் உடல் இன்று அதிகாலை தகனம்

ஐவரிகோஸ்டில் அழிவுடன் ஆரம்பித்த புத்தாண்டு! பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி உயிரிழந்த மாணவியின் உடல் டெல்லி வந்தடைந்த சிலமணி நேரத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் கடந்த 16-ந் தேதி மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கியது.
பின்னர் ஓடும் பேருந்தில் இருந்து மாணவியை தூக்கி வெளியே வீசியது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்துக்கு நீதி கோரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அமெரிக்காவில் திறக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான இந்துக் கோயில்!

.


அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிக பிரமாண்ட இந்து கோயில் திறக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் நகருக்கு மிக அருகில் அமைந்துள்ள இக்கோயில் தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில், டிசம்பர் 23ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. 21 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலின் திருப்பணிகள் 2009ம் ஆண்டு துவங்கப்பட்டது.
ஆன்மிக தலமாக மட்டுமின்றி இந்தியாவின் பாரம்பரிய கட்டிட கலைகள்,. கலாச்சாரங்கள் ஆகியவற்றிற்கு மிகப் பெரிய சான்றாகவும், அடுத்த 1000 ஆண்டுகளுக்கு பிரம்மாண்டத்தை ஏற்படுத்தும் விதமாக இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

இறுதிப் போட்டியிலும் இலங்கைக்கு தோல்வி: 3-0 என தொடரை கைப்பற்றியது ஆஸி.

By M.D.Lucias
2013-01-06


அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியது. இதனால் அவுஸ்திரேலிய அணி 3-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

BATIKS FOR SALE

.

தமிழ் சினிமா

.
கும்கி

பாகனின் காதலை, கும்கி யானையை மையமாக வைத்து பசுமை பொங்க சொல்லியிருக்கிறார் பிரபு சாலமன்.
கேரளா வனக்காடுகளில் எடுக்கப்பட்டிருக்கும் கும்கி படம் முழுவதும் ஒரே பசுமையாக தெரிகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் விக்ரம் பிரபு, தன் தாத்தாவை தொட்டுக்கூட பார்க்க முடியாது.
யானைக்கு கொடுக்கப்பட்ட கதையை வைத்தே கதாநாயகனை இப்படத்தில் காண்பித்திருக்கிறார் பிரபு சாலமன்.
அனாதையான விக்ரம்பிரபு, தன் மாமாவான தம்பி ராமையா மற்றும் வளர்க்கும் யானை மாணிக்கத்துடன் ஊர் ஊராக சென்று திருவிழாக்களில் கலந்து கொண்டு பிழைத்து வருகிறார்.
கொமெடியாக காட்டப்பட்டுள்ள மாமா தம்பி ராமையாவின் பேச்சைக்கேட்டு யானை ஒரு கடையில் ஊருகாய் பாக்கெட்டை திருட இதை விக்ரம் பிரபு பார்த்து விடுகிறார்.
இதனால் கோபித்துக்கொண்டு நாயகன் செல்ல, யானை குழந்தையாட்டம் பின் தொடர்கிறது.
யானை வேகமாக நடந்து வருவதைக்கண்டு மக்கள் பயந்தோட பொலிஸார் வருகிறார்கள்.
யானையின் உரிமத்தை பொலிசார் கேட்க, அது தவறிவிட்டது என தம்பி ராமய்யா பதிலளிக்க இதனால் யானை பறிபோகிறது.
பின்னர் நண்பர் ஒருவரின் உதவியுடன் நாயகன் யானையை மீட்கின்றார்.
இந்த சமயத்தில் ஆதிகாடு என்ற ஊரில் விவசாய அறுவடைக்காக காட்டு யானைகளை விரட்ட ஒரு கும்கி யானை தேவைப்படுகிறது என்ற செய்தி நண்பர் மூலம் நாயகனுக்கு தெரியவருகிறது.
கும்கி என்பது காட்டு யானைகளை விரட்ட உதவும் யானைகள். மிகவும் பலம்வாய்ந்தவை.
ஆனால் நாயகனிடத்தில் இருப்பதோ, திருவிழாக்களில் பங்கேற்கும் யானை.
இருப்பினும் தன் யானையை மீட்டுத்தந்த நண்பருக்கு மீண்டும் ஏதாவது உதவி செய்யவேண்டுமென எண்ணுகிறார் விக்ரம்.
இன்னும் 2 நாட்களில் கும்கி யானையை ஏற்பாடு செய்துவிடுவதாக நண்பர் சொல்ல ஆதிகாட்டிற்குள் நுழைகிறார் நாயகன்.
அப்போதே நாயகி லட்சுமிமேனனை நாயகன் விக்ரம் பார்க்க, காதலில் மூழ்கிறார்.
காதலில் மூழ்கினாலும் கொம்பன் என்ற காட்டு யானையை விரட்ட என்ன செய்யப்போகிறோம்? என்று நாயகன் நினைக்க அதற்கேற்றாற்போல் தன் யானைக்கு பயிற்சியும் தருகிறார்.
ஆனால் பயிற்சியை ஏற்றுக்கொள்வது போல் யானை இல்லை, எருமைமாட்டைக் கண்டு யானை பின்வாங்குவது கை தட்டல்கள்.
இந்நேரத்தில் நாயகி லட்சுமி மேனனுக்கு வீட்டில் திருமணம் நிச்சியிக்கப்படுகிறது. தன் காதலை சொல்ல நினைக்கும் நாயகன் விக்ரம் பிரபுவுக்கு இது வாய்ப்பாக அமைய, காதலை சொல்கிறார்.
அவர் காதலை லட்சுமி மேனன் ஏற்றுக்கொண்டாலும் நாயகியின் தந்தை, விக்ரம் பிரபு மேலும் நாயகியின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருக்கிறார்.
நாயகனும் நாயகியும் தனியாக இருக்கும் நேரத்தில் வன அதிகாரியொருவர் இவர்களை பார்த்துவிடுகிறார்.
அதை லட்சுமி மேனனின் தந்தையிடம் கூற, அவர் நம்ப மறுக்கிறார்.
இதனால் நாயகனும் நாயகியும் தங்களது காதலை மறந்து பிரிந்து விடுகின்றனர்.
மறுநாள் அறுவடைத்திருவிழா என்பதால் அறுவடை ஜோராக நடக்கிறது.
இந்நேரத்தில் தன் யானைக்கு மதம் பிடிக்க, அதை கட்டிப்போட்டு விடுகிறார் நாயகன்.
அப்போதே கொம்பன் என்ற காட்டு யானை நாயகனின் தங்குமிடத்திற்கு வர, இரண்டு யானைகளும் சண்டை போடுகிறது.
இதில் மாணிக்கம், கொம்பனை வீழ்த்தினாலும் இரண்டு யானைகளும் இறந்துவிடுகிறது.
இந்த சண்டையின் போது நடந்த தீ விபத்தில் தம்பி ராமைய்யாவும் இறந்துவிட நாயகன் அனாதையாக்கப்படுகிறார் என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
இந்த க்ளைமேக்ஸ் பிடிக்க வில்லை என சிலர் கூறினாலும் படம் எதார்த்தமாக அமைந்திருக்கிறது.
இசை, ஒளிப்பதிவு இரண்டும் கும்கியின் கம்பீரத் தந்தங்கள்.
கொம்பன் வரும் காட்சிகளில் பின்னணி இசையில் பதைபதைப்பூட்டும் இமானின் இசை, பாடல்களில் சொக்கவைக்கிறது.
புற்களுக்கு இடையில் பயணிக்கும்போதும், ஹோவெனக் கொட்டும் அருவியின் தலை மேல் ஏறி இறங்கிச் சுற்றிச் சுழன்று பரவசப்படுத்தும்போதும் மயக்குகிறது சுகுமாரின் ஒளிப்பதிவு.
யுகபாரதியின் பாடல் வரிகள் கதைக்கு அழுத்தம் சேர்க்கின்றன.