மூத்த எழுத்தாளர் காவலூர் ராஜதுரை காலமானார்

.

இலங்கையின்   மூத்த  எழுத்தாளரும்  இலங்கை   வானொலியின்  முன்னாள்   நிகழ்ச்சித்தயாரிப்பாளரும்   வானொலி    ஊடகவியலாளருமான  காவலூர்  ராஜதுரை   நேற்று (14-10-2014)  மாலை   அவுஸ்திரேலியா  சிட்னியில்  காலமானார்.
இலங்கை   முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்தின்  மூத்த உறுப்பினராகவும்  இயங்கிய   காவலூர்  ராஜதுரையின்  கதை வசனத்தில்  வெளியான   பொன்மணி    திரைப்படம்  இலங்கை    தமிழ்த்திரைப்படங்களில்  குறிப்பிடத்தகுந்தது.
கொழும்பில்   வசீகரா  விளம்பர  நிறுவனத்தின்  இயக்குநராகவும்  இயங்கிய காவலூர்   ராஜதுரை  பல  வருடங்களாக  அவுஸ்திரேலியா  சிட்னியில் தமது    குடும்பத்தினருடன்    வசித்தார்.
இங்கு    இயங்கும்  அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தினதும்   மூத்த  உறுப்பினரான  காவலூர்  ராஜதுரை   சிறுகதை,  விமர்சனம்,    கட்டுரை,   விளம்பரம்   முதலான    துறைகளிலும்    எழுதியிருப்பவர்.    சில  நூல்களின்  ஆசிரியருமாவார்.

அன்னாரின் மறைவிற்கு தமிழ்முரசுஅவுஸ்ரேலியா ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றது.

-----0----

என் மனம் கவர்ந்த ஷோனா லோகநாதனின் அரங்கேற்றம் - மது எமில்

.
என் மனம் கவர்ந்த அபிநயலயா நடனப்பள்ளியின் இன்னுமோர் நாட்டிய அரங்கேற்றம். ஸ்ரீமதி மிருணாளினி ஜயமோகனின் மாணவி செல்வி ஷோனா  லோகநாதன்;













இளவேனில் காலம்.........இனியமாலைப்;பொழுது   ....... ஐப்பசி திங்;கள் நான்காம் நாள்.........2014

மண்டபம் நிறைந்த கூட்டம்  - பட்டாடை அணிந்து நெற்றி திலகமிட்டு கூந்தலிலே பூச்சூடி மங்கல விளக்கேற்றி மங்கையவளின் வரவுக்காய் நேரம் கடந்தும் காத்திருந்தனர் சிட்ணி தமிழ் மக்கள்.
அழைப்பு வந்த போது அரங்கிலே அமைதியாய் அணிசேர்ந்த உறவுகளும் நண்பர்களும் செல்வி ஷோனா  லோகநாதனின்; அரங்கேற்ற நிகழ்விலே மெய் மறந்து ஒருங்கிணைந்த காட்சி அரங்கிற்கு மெருகேற்றியது என்பதை யாரும் மறுக்க முடியாது.
செல்வி ஷோனா கைகளிலே மலரேந்தி விநாயக கடவுளை துதி செய்து அரங்கினை வலம் வந்து குருவையும் சபையையும் வணங்கி ஆரம்பித்த அரங்கேற்ற நிகழ்வு இசை கலைஞர்களின் தனித்தவமான திறனோடு பின்னி பிணைந்து ஒரு மனம் நிறைந்த ஆடல் இன்பத்தை தந்ததென்றால் மிகையாகாது.

அகில அவுஸ்திரேலிய தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள்

.


அவுஸ்ரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நடாத்தப்பட்ட தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 8வது ஆண்டிலிருந்து அவுஸ்ரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின்  தலைமையின் கீழ் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்த வருடம் சிட்னியில் மட்டும் 450க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர். மேலும் அவுஸ்திரேலிய-நியூசிலாந்தின் மற்ற எல்லா மாநகர்களில் இந்தப் போட்டிகள் நடாத்தப்பட்டன. சிட்னி தவிர மற்ற மாநகர்களிலிருந்தும் நியூசிலாந்திலிருந்தும் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் போட்டிகளில் பங்குபற்றினர். மொத்தமாக 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் இந்த வருடம் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளில் பங்குபற்றியிருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

1994ம் ஆண்டு சிட்னிப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினரால் தொடங்கப்பட:;டு 8 ஆண்டுகள் நடாத்தப்பட்ட தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள்ää பட்டதாரிகள் குழுவினரால் 20வது வருடமாக நடாத்தப்பட்டு வருகிறது என்பது பெருமைக்குரிய விடயம்.

அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் பெருமையுடன் வழங்கும் 'ஞான வேள்வி'

.

அன்பர்களுக்கு வணக்கம்,
கடல்கடந்து வந்து அவுஸ்திரேலியக் கம்பன் விழாக்களில்,
கலந்து சிறப்பிக்கவுள்ள ‘கம்பவாரிதி’ இ ஜெயராஜ் அவர்களின்,
இலக்கிய நயம் சிந்தும் சிறப்பான சொற்பொழிவுகளை
பலரது வேண்டுகோளுக்கிணங்க,
சிட்னியில் ஒழுங்கு செய்துள்ளோம் -  "ஞான வேள்வி 2014".
உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நிகழ்வு நாட்கள்: 14ம் 15ம் மற்றும் 16ம் திகதிகள் (செவ், புதன், வியா)
நிகழ் காலம்: மாலை 7மணிமுதல் 9:15மணிவரை.
நிகழ்விடம்: Redgum Function Centre, 2 Lane St, Wentworthville NSW.
மூன்று நாட்களும் உட்பட்ட நுழைவு - $25

மேலதிக விபரங்கள் மற்றும் நுழைவுச் சீட்டுகளுக்கு,
க. குமணன் – 0422 708 320
ஷிவானி தீரஜ் – 0424 023 234
மைத்திரேஜி சங்கரதாசன் – 0430 173 918
கிருஷ்ணா ஷர்மா – 0430 176 547
ஜெ. ஜெய்ராம் - 0432 796 424
நிகழ்விற்கான நுழைவுச்சீட்டுக்களை பின்வரும் 'தமிழ் அவுஸ்திரேலியன்' இணையத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
https://www.tamilaustralian.com.au/booking/events/?ee=113

-அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்-

எழுத மறந்த குறிப்புகள் - முருகபூபதி

.
எங்கிருந்தாலும்   இயங்கும்   செயற்பாட்டாளர்  வீரகேசரியின்  முன்னாள்   விளம்பர - விநியோக   முகாமையாளர்   சிவப்பிரகாசம்
                                                  


இலங்கையில்   இலக்கியம்  மற்றும்  பத்திரிகைத்துறையில் 1970 முதல்   ஈடுபட்டு    வந்தமையினால்  இவற்றில்   சம்பந்தப்பட்ட மூவினங்களையும்  சேர்ந்த   பலருடன்   எனக்கு  தொடர்பாடல்  நீடிக்கிறது.
தொடர்பாடலை    பேணுவதற்கும்  அடிப்படையில்   சில   இயல்புகள் இருத்தல்   வேண்டும்.
எனது    பத்தி   எழுத்துக்களில்   தொடர்ச்சியாக   பல இலக்கியப்படைப்பாளிகள்  -   கலைஞர்கள்  -   ஊடகவியலாளர்கள்  - சமூகப் பணியாளர்கள் -  மனித   உரிமை   ஆர்வலர்கள்  -   ஓவியர்கள் - இதழாசிரியர்கள்  -   கல்விமான்கள்  மட்டுமல்ல   அச்சுக்கோப்பாளர்கள் -அரசியல்   தலைவர்கள்   -   தொழிற்சங்கவாதிகள்  -  மத குருமார் - ஆசிரியர்கள்  -   குழந்தைகள் -   மாணவர்களும்கூட இடம்பெற்றுள்ளனர்.
பலரைச்சந்தித்து  நேர்காணல்களும்   எழுதியிருக்கின்றேன்.    மல்லிகை  -   ஞானம்   முதலான    இதழ்களில்  சிலரைப்பற்றிய  அட்டைப்பட   அதிதி   கட்டுரைகளும்   படைத்தேன்.
தினகரன்    ஆசிரியர்களாக   பணியாற்றிய   பேராசிரியர்  கைலாசபதி - சிவகுருநாதன்  -   ராஜஸ்ரீகாந்தன்  -    இலங்கை  வானொலியில்   பணியிலிருந்த    அப்பல்லோ  ' சுந்தா'   சுந்தரலிங்கம்  -   வி.ஏ. திருஞானசுந்தரம்  -   காவலூர்  ராஜதுரை  -   சில்லையூர்   செல்வராசன் -  கே.எஸ்.சிவகுமாரன்  -  வீரகேசரி    குழுமத்தில்   முன்னாள்    பிரதம ஆசிரியர்   க.சிவப்பிரகாசம்  -   செய்தி  ஆசிரியர்களான  டேவிட்ராஜூ - 'நடா ' நடராஜா  -  கார்மேகம்  -    வாரவெளியீட்டுக்குப்பொறுப்பாகவிருந்த  பொன். ராஜகோபால்  -   தேவராஜ்  -   வீரகேசரி   முன்னாள் முகாமையாளர்    பாலச்சந்திரன்  -  தினக்குரல்    பிரதம   ஆசிரியர்  தனபாலசிங்கம்  -  ஆகியோரைப்பற்றியெல்லாம்   ஏற்கனவே  எழுதியிருக்கின்றேன்.
அதே  சமயம்   தினக்குரல்  பதினைந்தாவது   அகவை   சுவடு  விசேட மலரில்  (2011)   ஊடகத்துறையில்   பதிவாகும்   அனுபவப்பகிர்வு என்ற   எனது    கட்டுரையில்   நான்   இணைந்து    பணியாற்றிய   பல பத்திரிகையாளர்கள்    பற்றியும்   பதிவு  செய்திருக்கின்றேன்.

அன்புள்ள யேசுதாஸ், உங்களுக்கு ஒரு கடிதம்!



அன்புள்ள யேசுதாஸ், ‘அணியும் ஆடையினால் மற்றவர்களுக்குத் தொல்லை தரக் கூடாது’ என்று சொல்லியிருக்கிறீர்கள். மறைத்தே வைத்துக்கொள்கிறோம் யேசுதாஸ், கவலைப்படாதீர்கள். இந்தப் பாவப்பட்ட பெண்கள் திசைமாறிப் போகிறார்களே என்று துயருறாதீர்கள். உங்கள் குரல் எங்கள் தந்தைமார்களின் குரல்போல், எங்கள் அண்ணன்மார்களின் குரல்போல் இதயத்துக்கு வெகு அணுக்கமாகவே இருக்கிறது. அதனால் உங்கள் குரலில் ஒலிக்கும் துயரத்தை எங்களால் புறக்கணிக்க முடியாது. கடந்தும் போக முடியாது. அப்படியெல்லாம் போகக் கூடியவர்களா நாங்கள்?
2004 ஆகஸ்ட். யு.எஸ். ஓப்பன் டென்னிஸ் போட்டியில் நான்காவது சுற்றுக்குள் சென்ற முதல் இந்தியப் பெண் என்று டென்னிஸ் உலகம் சானியா மிர்ஸாவைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்தப் பெண் ணுக்கு வயது வெறும் பதினெட்டுதான்.டென்னிஸில் இந்தியாவின் பெயரை உலக அளவில் உயரவைப்பாள் என்று வெளிநாட்டுப் பத்திரிகைகள் ஆருடம் கூறிக்கொண்டிருந்தபோது, எங்கள் தந்தைமார்களாகிய நீங்கள் இந்தியாவில் என்ன சொல்லிக்கொண்டிருந்தீர்கள் தெரியுமா?


ஞான வேள்வி 2014


அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் பெருமையுடன் வழங்கும் 'ஞான வேள்வி'
'கம்பவாரிதி' இ. ஜெயராஜ் அவர்களுடைய மூன்று நாள் தொடர் சொற்பொழிவுகள்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்.
நிகழ்வு நாட்கள்: 14ம் 15ம் மற்றும் 16ம் திகதிகள் (செவ், புதன், வியா)
நிகழ் காலம்: மாலை 7மணிமுதல் 9:15மணிவரை.
நிகழ்விடம்: Redgum Function Centre, 2 Lane St, Wentworthville NSW.


உலகச் செய்திகள்


ஒரே நாளில் 121 பேர் பலி

இந்தியாவிடம் மன்னிப்புக் கோரியது நிவ்யோர்க் டைம்ஸ்

சீனாவில் பாரிய நிலஅதிர்வு: 300 பேர் காயம், ஒரு இலட்சம் பேர் இடம்பெயர்வு, உயிரிழப்பு விபரங்கள் வெளியாகவில்லை!

ஒரே நாளில் 121 பேர் பலி

06/10/2014 மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோனில் எபோலா வைரஸினால் பாதிக்கப்பட்டு 121 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.


எபோலோ வைரஸினால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் அதிகளவானோர் உயிரிழந்த சந்தர்ப்பம்  இது என்பது  குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து எபோலா வைரஸினால் இதுவரை 3,439 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி



சங்க இலக்கியக் காட்சிகள் 27- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

நோயை அறியாத தாய்!



அவள் ஓர் அழகிய இளம் பெண். அவளது ஊருக்குப் பக்கத்தே இருக்கும் பசுமை நிறைந்த மலைநாட்டுக்குரியவனான ஒருத்தன்மேல் அவள் காதல் கொண்டாள். இருவர் மனமும் கலந்தது. இடைவிடாமல் காதல் வளர்ந்தது. ஊரிலே சிலருக்கு இதுபற்றித் தெரிய வந்தது. அதனால் வதந்தியாகப் பரவிக்கொண்டது. அவளது தாய்க்கும் ஊரவரின் அலருரை(வதந்தி பேச்சு) எட்டியது. அதனால் மகளுக்குக் கட்டுக்காவல் போட்டு வீட்டிலே சிறைவைத்தாள்.
எத்தனை நாட்கள்தான் காதலனைப் பார்க்காமல் அவளால் இருக்க முடியும். அவளால் ஒழுங்காக உண்ண முடியவில்லை. சரியாக உறங்க முடியவில்லை. அவளுக்கு யாரோடும் பேசப் பிடிக்கவில்லை. நாட்கள் நகர நகர அவளது உடல் மெலிந்துகொண்டு வந்தது. கண்கள் எந்நேரமும் கலங்கியபடியே இருந்தன. முகம் காய்ந்துபோனது. உதடுகள் வெளுத்துப் போயின. இவற்றையெல்லாம் கண்ணுற்ற அவளின் தாய் காரணம் எதுவெனத் தெரியாமல் கவலைப் படுகிறாள். தெய்வக் குற்றமோ என்று சந்தேகிக்கின்றாள். மகளின் நோய்க்கான காரணத்தை அறியவும்ää வைத்தியம் செய்யவும் அவள் அந்த ஊரிலே உள்ள வேலன் என்னும் ஒரு வெறியாடியை நாடுகிறாள்.

தாய் பாலின் புதிய பயன் - ச. சுந்தர பெருமாள் .

.

தாய் பாலின் பலன்கள் எண்ணில் அடங்காதவை . தாய் பால் குறித்த ஆராய்சிகள் , ஒவ்வொரு  நாளும் புதிய உண்மைகளைதந்து கொண்டே உள்ளன.
தாய்ப்பாலுக்கு, புற்று நோய் வராமல் தடுக்கும் சிறப்பான பண்பு உள்ளது என்பது,
மிக சமீபத்திய ஆராய்ச்சியின் முடிவாகும்.தாய்ப்பாலில் ,ஹியுமன் ஆல்பா லேக்ட் ஆல்புமின்  என்னும் உயிரி வேதிப்பொருள் உள்ளது. இது ஹேம்லெட்என அழைக்கப்படுகிறது .இதை அடிப்படைப் பொருளாக வைத்து , புற்று நோய்க்கான எதிர்ப்பு மருந்து உருவாக்கப்பட்டது. 
இதனை பயன் படுத்திய புற்று நோயாளி களின் சிறுநீரில் இறந்து போன புற்று நோய் செல்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. மற்ற புற்றுநோய் மருந் துகளுடன் ஒப்பிடுகையில் , உடலில் உள்ள மற்ற ஆரோக்கியமான செல்களை தவிர்த்து , புற்று நோய் செல்களை மட்டுமே இந்த ஹேம்லெட் உயிர் வேதிப்பொருள் சிதைக்கிறது .40 வகையான புற்று நோய் உயிர் அணுக்களை கொள்ளும் திறனை இந்த ஹேம்லெட் வேதிப்பொருள் பெற்று உள்ளது .


ஏழு இயற்கை அதிசயங்கள்;

உலக அதிசயங்கள் ஏழு என்பதை போல இயற்கை அதிசயங்கள் ஏழு தேர் ந்து எடுக்கப்பட்டு உள்ளன. 
இதில் அமேசன் மழை காடுகள் , ஏஞ்சல் அருவி , சாக்கடல் . ஹெலங்வளைகுடா , கிரேட் பேரியர்கடலோர பாறைகள், கிரான்ட் கேன்யன் என்னும் பள்ளத்தாக்கு , கலபகொஸ் தீவுகள் ஆகியன உள்ளன .இந்த ஏழு அதிசயங்களும் .உலக அதியங்களைபோல பார்க்க இயற்கையில் ஆர்வமுள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர் .
இதில் ஏஞ்சல் அருவி என்பது நயாகராவை விட ,19 மடங்கு உயரமானது . உலகின் மிக உயரமான அருவி என்னும் அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த அருவியை முதன் முதலில் கண்டறிந்த ஜிம்மி ஏஞ்சலின் பெயரால் இது , ஏஞ்சல் அருவி என்னும் சிறப்பை பெற்று உள்ளது .
பிரேசில் மற்றும் வெனிசுல நாடுகளின் எல்லை களுக்கிடையில் கேநாய்மா என்னும் தேசிய பூங்காவில் இது உள்ளது .கலபகொஸ் தீவுகள் என்பது எரிமலை தீவுகள் ஆகும். இங்கு உலகின் அழியும் நிலையில் உள்ள சிற்றினங்கள் வாழ்கின்றன.


                                                                     
                  

கம்பன் விழா 12, 18.19 oct 2014



அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் பெருமையுடன் வழங்கும் கம்பன் விழா (சிட்னி மற்றும் மெல்பேர்ண் நகரங்களில்).
இனியவர்களே வணக்கம்,
தன்னிகரில்லாத் தலைவனை மண் தொடவைத்து,
தமிழை விண் தொடவைத்த கம்பனாடனுக்கு விழா!
இனிதே நடைபெறவுள்ள சிட்னி மற்றும் மெல்பேர்ண் கம்பன் விழாக்களின் அழைப்பு மடலை
உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
என்றும் போல் உங்கள் ஆதரவோடு
கல்வியிற் பெரியவனுக்கு விழா எடுப்போம் வாரீர்!
நன்றி.

-அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்- 





இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாக். சிறுமி மலாலாவுக்கு அமைதி நோபல்

.


இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி. பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி மலாலாவுக்கு 2014-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு பெறும் 7-வது இந்தியர் என்ற பெருமையை, கைலாஷ் சத்யார்த்தியும், மிக இளம் வயதில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுபவர் என்ற பெருமையை மலாலாவும் பெற்றுள்ளனர்.
கைலாஷ் சத்யார்த்தி
கைலாஷ் சத்யார்த்தி மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷாவில் 1954-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி பிறந்தார். 1990-ம் ஆண்டு "பச்பன் பச்சாவோ ஆந்தோலன்' (குழந்தையைப் பாதுகாப்போம் இயக்கம்) என்ற அமைப்பை நிறுவிய இவர், நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்டு வருகிறார். இந்த அமைப்பு மூலம் இதுவரை இந்தி யாவில் 80 ஆயிரம் குழந்தைகளை பல்வேறு சுரண்டல்களில் இருந்து மீட்டு, அவர்கள் கல்வி கற்க உதவியுள்ளார். தற்போது கைலாஷ் சத்யார்த்தி டெல்லியில் வசித்து வருகிறார்.

இலங்கைச் செய்திகள்


நாட்டில் இடியுடன் கூடிய மழை

06/10/2014 நாட்டின் பல பாகங்களிலும் இன்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இடி ,மின்னல் நேரங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரி 


நாட்டில் இடியுடன் கூடிய மழை

07/10/2014 நாட்டின் பல பாகங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியகூறுகள் இருப்பதனால் மீனவர்கள் அவதானமாக  செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி 







மலாலாவுக்கு நோபல் பரிசு: பெண் கல்வி ஆர்வலர்கள் வரவேற்பு

.

பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடி வரும் பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டிருப்பதற்கு பெண்கள் நல ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானை சேர்ந்தவர் மலாலா யூசப்சய். பள்ளிப் பருவத் தில் இருந்தே பெண் குழந்தைகளின் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இதனால், கடந்த 2012-ல் தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளானார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்தவர், பெண் கல்விக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மகளிர் நல அமைப்புகள், பெண் உரிமை ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமா

மெட்ராஸ்  

அட்டக்கத்தி படத்தின் புறசென்னையை காட்டிய ரஞ்சித் மீண்டும் வடசென்னையை யதார்த்தமாக காட்டியிருக்கும் படம் மெட்ராஸ்.


சுவருக்கு ஒரு போரா பெரிய அக்கப்போராகல்லவா இருக்கிறது என்பது போல பெரிய சுவரில் விளம்பரம் செய்வதற்கு அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் போராட்டமும், அதற்காக உயிர்கள் பலியாவதும் தான் கதை.

தொடர் தோல்விக்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் யதார்த்த நடிப்பால் அனைவரையும் கவர்கிறார் கார்த்தி. நட்பு, காதல், துரோகம், வலி என ஒவ்வொன்றையும் எதிர்கொள்வதில் பிரமாதப்படுத்துகிறார். நண்பராக வரும் கலையரசனை இனி அதிகபடங்களில் காண வாய்ப்புள்ளது.

மலையாள புதுவரவான கேத்ரின் தெரஸாவுக்கு டுயட் பாடுவதோடு மட்டுமல்லாமல் நடிப்பிலும் கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது.

வட சென்னை இளைஞரான கார்த்தி அவரது நண்பர் கலையரசனுடன் ஜாலியாக சுற்றிக்கொண்டு நடுவில் கேத்ரின் தெரசாவை காதலித்து வருகிறார். இந்த சமயத்தில் அரசியல்வாதிகளின் சண்டையில் மாட்டி என்னவானார் என்பதே மீதி கதை.


கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் தனித்துவமாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். அதிக காட்சிகள் இல்லாவிட்டாலும் அவ்வப்போது கருத்து சொல்லி விட்டுப்போகும் மனநிலை பாதிக்க பட்ட கதாபாத்திரமான ஜானி, கார்த்தியின் அம்மா, அப்பா, பாட்டியாக வரும் என ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் நிற்கிறது.


நகைச்சுவைக்கென தனி டிராக் வைக்காமல் கதையோடு ஒட்டியே திரைக்கதை அமைந்துள்ளது.
படத்தின் சில இடங்கள் மெதுவாக நகர்கின்றன. யூகிக்கும் படியான க்ளைமேக்ஸ் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்திவிட்டார் சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு, எடிட்டிங்கும் ரசிக்கும்படியாக உள்ளது.மொத்தத்தில் “மெட்ராஸு”க்கு மெர்சலாகம ஒருவாட்டி போய்ட்டு வரலாம்.
நன்றி cineulagam