.
தமிழ் முரசு நேயர்கள் அனைவருக்கும் எமது ஆங்கில புத்தாண்டு வாழ்துக்கள் .
ஆசிரியர் குழு
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை 20/01/2025 - 26/01/ 2025 தமிழ் 15 முரசு 42 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
பிறக்கும் வருடம் சிறக்க
தொடக்கும் காரியம் துலங்க
உற்றார் உறவின் இணக்கம்
வாண வேடிக்கைகள், கோடி நட்சத்திரங்களை அள்ளி அள்ளிக் கொழிக்க; பட்டாசு பட படக்க; புத்தாடை மினு மினுக்க; கண்ணாடி டம்லர்கள் டிங் டிங் எனச் சிணுங்க; மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரிக்க Happy New year வாழ்த்துக்கள்; கட்டித் தழுவல்கள்; ஆசை முத்தங்களோடு Happy New Year!
எழுத்தும்
வாழ்க்கையும் என்ற இந்தத்
தொடரை கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பித்தேன். இரண்டு ஆண்டுகள்
கடந்து, மூன்றாவது ஆண்டிலும் இந்தத் தொடர் முற்றுப்பெறாமல் தொடருவதற்கு, பல காரணங்கள் இருக்கின்றன.
இந்தத் தொடரின் முதல் பாகம் நிறைவடைந்து, இரண்டாவது
2020 – 2021 – 2022 ஆகிய
வருடங்களில் கொவிட் பெருந்தொற்றால் மறைந்துவிட்ட
எனது நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்கள் பற்றியும்,
இம்மூன்றாண்டு காலத்துள் நோய் உபாதைகள் மற்றும் முதுமையின் காரணத்தினால் விடைபெற்றுவிட்டவர்கள்
பற்றியும் பல பதிவுகளை ஏற்கனவே எழுதிவிட்டேன்.
அவ்வாறு எழுதியதன் மூலம்
அந்தத் துயரங்களிலிருந்து ஓரளவு விடுபட முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. நான்
எழுத்துலக பிரவேசம் செய்து அரைநூற்றாண்டு காலம் நெருங்கிய வேளையில் ( 2022 இறுதிப்பகுதியில்
) எனது எழுத்தூழியத்துடன் தொடர்புபட்ட சில
நற்செய்திகள் என்னை வந்தடைந்தன. அச்செய்திகள் அடுத்தடுத்து வந்தமைதான் வியப்பானது.
எதிர்பாராதது.
எதிர்பாராத நிகழ்வுகளின்
சங்கமம்தான் வாழ்க்கை என்று அடிக்கடி நான் சொல்லியும் எழுதியும் வந்திருக்கின்றேன்.
கடந்த டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி காலையில் நான் மெல்பன் விமான நிலையத்திற்கு புறப்படத் தயராகிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
எனக்கு வணக்கமும் வாழ்த்தும்
கூறியவாறு மறுமுனையில் கனடாவிலிருந்து எனக்கு மிகவும் பிரியமான படைப்பிலக்கியவாதி அ.
முத்துலிங்கம் அவர்கள் தொடர்புகொண்டார்.
அவரை நான் இதுவரையில் நேருக்கு
நேர் சந்தித்து பேசியதும் இல்லை. ஆனால், அவுஸ்திரேலியாவுக்கு
நான் புலம்பெயர்ந்த பின்னரே அவரது எழுத்துக்களை படித்தேன். கனடாவுக்கு 2007 ஆம் ஆண்டு இறுதியில் நான்
சென்றபோது, 2008 ஆம் ஜனவரி மாதம் 01 ஆம் திகதி அவர், அமெரிக்காவிலிருந்து என்னை தொலைபேசியில்
அழைத்து புத்தாண்டு வாழ்த்துக்கூறியதுடன்,
தன்னால் சந்திக்கமுடியாமல் போனதையிட்டு வருத்தமும் தெரிவித்தார். அன்று என்னுடன் நீண்ட
நேரம் பேசினார்.
அதன்பின்னரும் என்னுடன்
மின்னஞ்சல் தொடர்பிலிருந்தார். கடந்த டிசம்பர்
மாதம் 05 ஆம் திகதி அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
முருகபூபதி இம்முறை உங்களுக்கு எமது கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருதினை வழங்கவிருக்கின்றோம். விரைவில் இயல்விருது தொடர்பான கடிதம் வரும் என்றார்.
இந்த சந்திப்புகளுக்கு
தற்போது அரைநூற்றாண்டு காலமாகிறது.
மேலதிக தகவல் நான் 1972 இல்தான் எழுத்து துறைக்குள் வந்தேன்.
அதற்கு முன்னர் இரண்டு
தமிழக பிரபல எழுத்தாளர்களை முதல் முதலில் எனது
ஐந்து வயதிலும், பத்துவயதிலும்தான் பார்த்திருக்கின்றேன்.
அவர்கள்தான் இலக்கிய சகோதரர்கள் தொ.மு. பாஸ்கரத் தொண்டமான்.
தொ.மு. சிதம்பர ரகுநாதன்.
மூத்தவர் தமிழ்நாடு பாளையங்கோட்டையில் மாவட்ட ஆட்சித்
அத்துடன் ஆனந்தவிகடன், கல்கி முதலான இதழ்களில் இந்திய திருத்தலங்கள்
பற்றிய தொடர்களை எழுதியவர். இவர் இலங்கை வந்த சமயத்தில் காரைநகர் சிவன்கோயிலுக்கு ஈழத்து
சிதம்பரம் என்ற பெயரையும் சூட்டினார். காங்கிரஸ் கட்சியிலிருந்த காந்தீயவாதி.
இவரது தம்பிதான் தொ.மு. சிதம்பர ரகுநாதன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர்
சங்கத்தின் அழைப்பில் 1956 ஆம் ஆண்டு நாடெங்கும் நடந்த
பாரதி விழாக்களில் கலந்துகொண்ட எழுத்தாளர், பேச்சாளர்.
முதலில் காங்கிரஸ் தொண்டராகவிருந்தவர்.
பின்னர் இடதுசாரிச் சிந்தனையாளராக மாறியதுடன், சோவியத் இலக்கிய
மேதை மாக்ஸிம் கோர்க்கியின் தாய் நாவலையும் தமிழுக்கு மொழிபெயர்த்தார். இதனை பெரும்பாலான
முற்போக்கு எழுத்தாளர்கள் படித்துவிட்டே தங்கள் இலக்கியப் பயணத்தை தொடர்ந்திருப்பார்கள்.
தமிழ்நாடு திருநெல்வேலி பிரதேசத்தில்
வாழ்ந்த கைத்தறி நெசவாளர்களின் போராட்ட வாழ்வை
சித்திரித்த ரகுநாதனின் பஞ்சும் பசியும் நாவல், செக் மொழியிலும் பெயர்க்கப்பட்டு,
அந்த நாட்டில் அக்காலத்திலேயே ஐம்பதினாயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கிறது. பஞ்சும் பசியும் நாவலை, காமிஸ்வலபில் என்ற புகழ்பெற்ற எழுத்தாளரினால் செக் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது.
பஞ்சும் பசியும் நாவலை எமது
இலங்கைப் பேராசிரியர் க. கைலாசபதி, தான் எழுதிய
தமிழ் நாவல் இலக்கியம் நூலில் சோஷலிஸ யதார்த்தப் பார்வையுள்ள படைப்பு என சிலாகித்துள்ளார்.
இவரது முதல் சிறுகதை 1941 இல் பிரசண்ட விகடன் இதழில் வெளியானது. முதல்
புதினமான புயல் 1945 இல் வெளியானது.
இந்திய சுதந்திர
போராட்டத்தில் கலந்து கொண்டதனால் 1942 இல்
சிறைக்கும் சென்றார். 1944 இல் தினமணியில் உதவி ஆசிரியராகவும் பின்பு 1946 இல் முல்லை
இலக்கிய இதழிலும் பணியாற்றினார்.
திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியவர் .
வட இலங்கையில் சப்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவை
அவர்தான் “ ஆவூரான். “ சந்திரன்
.
நெடுந்தீவு பல விடயங்களில் புகழ்பெற்றது. உலகத் தமிழராய்ச்சிக்கு வித்திட்ட அருட்திரு. தணிநாயகம் அடிகளார் பிறந்த மண். அத்துடன் பல கலை, இலக்கியவாதிகளும் கல்விமான்களும்
சமூகப்பணியாளர்களும் தோன்றிய பிரதேசம்.
இங்கு 1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி சண்முகம் – பொன்னம்மா தம்பதியருக்கு ஏழாவது பிள்ளையாக பிறந்திருக்கும்
அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னரும், நெடுந்தீவையும் அங்கு வாழும் மக்களையும் மறந்துவிடாமல், தன்னால் முடிந்த உதவிகளையும் அம்மக்களுக்கு – குறிப்பாக
மாணவர் சமூகத்திற்கு வழங்கி வரும் ஒரு தன்னார்வத் தொண்டர்.
சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதுமே ஒரு படைப்பாளியின்
பிரதான நோக்கமாகவிருக்கும். அந்த நோக்கத்துடனேயே
எழுத்துலகில் பிரவேசித்த காலம் முதல் அயர்ச்சியின்றி இயங்கி வருகின்றார். அதனால் எமது
நெஞ்சத்துக்கும் நெருக்கமானார்.
நெடுந்தீவு ஆரம்ப பாடசாலையில் தனது தொடக்க கால கல்வியை ஆரம்பித்த
சந்திரன், பின்னர் பெற்றவர்கள் கிளிநொச்சி குமரபுரத்திற்கு இடம்பெயர்ந்தமையால், அங்கே
குமரபுரம் மகா வித்தியாலயத்தில் கல்வியைத் தொடர்ந்தார்.
தொழில் வாய்ப்பு பெற்று
1989 இல் மத்திய கிழக்கில் குவைத்துக்குச் சென்றவர்,
வாசிப்பு ஆர்வத்தையும் வளர்த்துக்கொண்டு இலக்கியப்பிரதிகளும்
எழுதத் தொடங்கினார்.
இவரது தொடக்க கால படைப்புகள் வீரகேசரியில் வெளிவந்துள்ளன. கவிதை,
கட்டுரை, சிறுகதை என்பன இவர் தேர்ந்தெடுத்த
துறைகள். தற்பொழுது தனது மணிவிழாக்காலத்தில் சின்னான் என்ற குறுநாவலையும் தனது
பூர்வீக ஊரைப் பின்னணியாகக்கொண்டு எழுதியிருக்கிறார்.
விரைவில் இந்த நூல் யாழ்ப்பாணம் ஜீவநதி வெளியீடாக வரவுள்ளது.
Poi Maan, an Australian-based Tamil feature film, will be released in theaters in Australia on the 20th of January, 2023.
உ
சிவமயம்
“நால்வகை யோனிகளுள் ஒரு யோனிவாய்ப்பட்டுப் பிறப்பவை யாவை அவையெல்லாம் பசுக்கள்,
அப்படிப் பிறத்தலில்லாதது யாது அது பதிப்பொருள் என்னும் இதுவொன்றே எளிதில் அவ்விரண்டுக்கும் தம்முள் வேற்றுமை அறியும் வண்ணம் நிற்பது.
ஆதலால், வேதம் புராணம் இதிகாசம் முதலிய நூல்களிலே மற்றைத் தேவர்களெல்லாம் அப்படிப் பிறந்திறத்தில் சொல்லப்படுதலாலும்,
சிவபெருமானுக்கு அது உண்டென்பது எங்காயினும் சொல்லப்படாமையாலும்,
அநாதி முத்தசித்துருவாகிய முழுமுதற்கடவுள் சிவபெருமானே என்பது தெள்ளிதிற்றுணியப்படும்.”
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்த 200வது ஆண்டு நிறைவு குறித்த ஐந்து நாட்கள் மாநாடு இறைவன் அருளால் நடந்தேறியுள்ளது. அந்த நிகழ்வுகளை கீழுள்ள பதிவுகளில் காணலாம்.
இந்நிகழ்வுகளை முழுமையாக கேட்டு நாமும், நம் எதிர்கால சந்ததியினர்களும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் காட்டிய வழி நிற்க இறைவனை பிரார்த்தனை செய்வோமாக!
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு முதலாம் நாள்
https://www.youtube.com/watch?
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு இரண்டாம் நாள்
https://www.youtube.com/watch?
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு மூன்றாம் நாள்
https://www.youtube.com/watch?
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு நான்காம் நாள்
https://www.youtube.com/watch?
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு ஐந்தாம் நாள்
https://www.youtube.com/watch?
“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”
தமிழ்பேசும் மக்களின் உரிமைக்காகத்தான் தொடர்ந்தும் போராடி
ஆலயங்களில் உற்சவங்களுக்காக
கொடியேறிவிட்டால் அதன்பிறகு வரும் திருவிழாக்கள் களை கட்டத் தொடங்கிவிடும்.
அப்போது யார் ( உபயகாரர் )
நடத்திய திருவிழா அதிவிசேடமானது என பக்தர்கள் பேசத் தொடங்கிவிடுவார்கள்.
பக்தி வருமோ இல்லையோ மக்களை
பரவசப்படுத்துவதற்காக அந்தத் திருவிழா உபயகாரர்கள் “ கெத்து “ காட்டத் தொடங்கிவிடுவார்கள்.
இலங்கையில் ஏதேனும் ஒரு
தேர்தல் நடக்கப்போகிறது என்ற அறிவித்தலை தேர்தல் ஆணையாளர் அறிவித்துவிட்டாராயின் வேடிக்கைகள்
பலவற்றை நாம் பார்க்க முடியும்.
அதனால், தேர்தல் என்பதும் ஒருவகையில் திருவிழாதான்!.
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கா,
தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சந்திப்புக்கு
அழைப்புவிடுக்கத் தொடங்கியவுடனேயே எங்கள் தமிழ்க்கட்சிகளின் சுயரூபம் தெரியத் தொடங்கிவிட்டது.
இலங்கை அரசியலில் நரி என
வர்ணிக்கப்பட்ட ஜே. ஆர். ஜெயவர்தனாவின் வாரிசாகவே வர்ணிக்கப்படும் இன்றைய ஜனாதிபதி
ரணில், தொடங்கியிருக்கும் பேச்சுவார்த்தையின்
மூலம், “ தமிழ் மக்களே… எனது அழைப்பினை, நீங்கள் ஆதரிக்கும் உங்கள் தமிழ் அரசியல் கட்சிகள்
எவ்வாறு உள்வாங்கியிருக்கின்றன.!? “ என்பதை இதோ பாருங்கள்…! “ என்று ஊடகங்களின் ஊடாகவே காண்பித்துவிட்டார்.
முதலில் நடக்கவிருப்பதாக
பேசப்படும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பற்றிய அறிவிப்பு வந்தவுடனேயே தமிழ் அரசியல் கட்சிகளின் உள்குத்து வேலைகள் தொடங்கிவிட்டன.
2023 ஆம் ஆண்டு பிறந்து மேமாதம் வந்துவிட்டால், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்திருந்த தமிழ் ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு பதினான்கு வருடங்களாகிவிடும். இக்காலப்பகுதியில் வடக்கில் எத்தனை கட்சிகள்? இருக்கின்றன…? என்று அவற்றுக்கு வாக்களிக்கத் தயாராகியிருக்கும் தமிழ் மக்கள் சிந்தித்து பார்த்திருக்கிறார்களா…? நினைவூட்டுவதற்காக சிலவற்றை இங்கே குறிப்பிடுகின்றோம். எண்ணிக்கொள்ளுங்கள்:
அதிகாரம் 1 : புறப்பாடு