அவரடியைத் தினம்பரவி ஆசிபெற்று வாழ்ந்திடுவோம் !

 


கவிஞர்  மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மெல்பேண் ...... அவுஸ்திரேலியா 

 

பெற்றெடுப்பாள் அம்மா பேணிடுவார் அப்பா


உற்றதுணை அப்பா உழைப்புமே அப்பா 

நற்றவற்றால் நமக்கு வாய்த்தவரே அப்பா

நானிலத்தில் என்றும் நமக்குத் தெய்வமவரே  

 

பக்குவமாய் இருக்க பாடம் அவராவார் 

தக்கவொரு குருவாய் தானவரும் இருப்பார்

எக்கணமும் எம்மை நினைப்பிலவர் வைப்பார் 

இப்புவியில் எமக்குத் தக்கதுணை அவரே 

 

தோழேற்றி எம்மை தூக்கிச் செல்வாரப்பா 


சுமை தாங்கியாக வாழ்ந்திடுவார் அப்பா 

ஆழமுடை அன்பை அகநிறைப்பார் அப்பா 

அகிலமதில் வணங்கும் அன்புத் தெய்வமவரே

 

ஏ.எல்.ராகவன் - எங்கிருந்தாலும்வாழ்க - கானா பிரபா


 “இவரின் கலைச்சேவையை மெச்சி ஒரு பாராட்டு விழாவை வைக்கணும்னு நானும் ராஜாவும் பேசிட்டிட்டிருந்தோம்.

ஆனால் அந்தப் பாக்கியம் நமக்குக் கிட்டல”

 

என்று வருந்தி அஞ்சலி பகிர்ந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் இதே நாள் (ஜீன் 19) கடந்த ஆண்டு கொடு நோய் கொரோனா நோய்த்தொற்று காரணமாக நம்மை விட்டு மறைந்த பாடகர் ஏ.எல்.ராகவன் அவர்களது மறைவில்.

 

தமிழ்த் திரையிசையில் மென் குரல் பாடகர் யுகத்தில் தனி முத்திரை பதித்தவர் ஏ.எல்.ராகவன் அவர்கள்.

பாடகராக அறிமுகமானதே ஒரு பெண் குரலாக, விஜயகுமாரி என்ற படத்தின் வழியாக. அந்தக் கணக்கில் பாடகராக 50 ஆண்டுகள் போன 2020 ஆம் ஆண்டோடு. தவிர நடிகராகவும் அதற்கு முன்பிருந்தே இயங்கியவர். ஏ.எல்.ராகவன் & எம்.என்.ராஜம் கலைத்துறை தாண்டி, வாழ்க்கையிலும் இணை பிரியா ஜோடியராக முன்னுதாரணமாக விளங்கியவர்கள்.

 

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 46 எழுத்தாளர்களில் எத்தனை கோணம்..? எத்தனை பார்வை…? பாரதி - தி. ஜானகிராமன் - ஏ.வி. எம். மனைவிமார் !! பெண்களின் குரலாக ஒலித்த பெண் எழுத்தாளரின் அந்திம காலம் ! முருகபூபதி

 


ஒரு தமிழ்த்திரைப்படத்தில்,   “ காதலிகளுக்காக நினைவுச்சின்னம் அமைத்த  காதலன்கள் பற்றி அறிந்துள்ளோம்.  ஆனால், காதலன்களுக்காக ஒரு செங்கல்லையாவது காதலிகள் நட்டுவைத்தார்களா..?   “ என்ற தொனியில் வசனமோ, பாடலோ வந்தது.

இதற்கு உதாரணமாக சாஜகான் , தனது காதல் மனைவி மும்தாஜுக்காக நிர்மாணித்த தாஜ்மகாலைச் சொல்வார்கள்.

பல எழுத்தாளர்கள் தங்கள் நூல்களில்  முன்னுரை எழுதும்போது , மனைவியையும் மறக்காமல் குறிப்பிடுவார்கள்.  அதில்  “ தப்பித்தல்  “  குணமும் உள்ளடங்கியிருக்கும்.

 “ நான் சமைத்துப்போடுவதால்தானே,  அதனைச்சாப்பிட்டுவிட்டு,  அது சமிபாடடைவதற்கு அவர்


இலக்கியம்  சமைத்துக்கொண்டிருக்கிறார்  “ என்பார் மனைவி.

பல தமிழ் எழுத்தாளர்களின் மனைவிமாருக்கு, தங்கள் கணவர் என்ன எழுதுகிறார்..? முகநூலில் எதனை நோண்டுகிறார்..? என்பதும்  தெரியாது.

இந்தப்பின்னணிகளுடன் இந்த அங்கத்திற்குள்  வருகின்றேன்.

1951 ஆம் ஆண்டு திருச்சி வானொலியில்,   என் கணவர் என்ற தலைப்பில் மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மா நிகழ்த்திய உரையில் ஒரு பகுதியை இங்கே தருகின்றேன்:

 “ ஒரு சம்பவத்தை என்னால் மறக்க முடியாது. மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. “இனி மிஞ்ச விடலாமோ?” என்று அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால்,  பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. ‘ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ?’ என்று  திகில் கொண்டேன். கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். ‘செல்லம்மா, இங்கே வா’ என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். ‘நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்’ என்றார். “கரும்புத் தோட்டத்திலே” என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம். மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.  “

இவ்வாறு வீட்டுக்குள் முடங்கியிருந்த அந்தப்பெண்ணை தனது மறைவுக்குப்பின்னர்  வெளியே வந்து வானொலியில் பேசவைத்தவர்  பாரதியார்.

திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் நினைவில் 20 ஆண்டுகள்

 


திரையிசைத் திலகம் கேவி மகாதேவன் அவர்கள் மறைந்து 20 ஆண்டுகளைத் தொடுகின்றது ஜூன் 21 ஆம் நாள். அவருடைய திரையிசையின் கூறுகளை, இசையை ஆழமாக நேசிக்கும் ரசிகர்களோடு படைத்த சிறப்பு நேரலை இது.




கந்தபுராணக்கலாசாரம் எங்கே சென்றது - அவதானி.



முன்பொருதடவை  பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள், “  யாழ்ப்பாண கலாசாரம் கந்தபுராணக் கலாசாரம் “  என்றார்.  அவர் தற்போது உயிரோடு இருந்திருப்பின், சமகாலத்தில் யாழ்ப்பாணமும் அது  தலைநகராக விளங்கும் வடமாகாணமும்  எவ்வாறு இருக்கிறது..? என்பதை பார்த்துவிட்டு,  “ போதை வஸ்து கலாசாரம்  “ என்று சொல்லியிருப்பாரா…?

நாம் எங்கிருந்து எங்கே செல்கின்றோம்..?

தமிழின விடுதலைக்காக ஆயிரம் ஆயிரம்  தமிழ் இளைஞர், யுவதிகள் தாங்கள் தொடர்ந்துகொண்டிருந்த கல்வியையும் இடையில் நிறுத்திவிட்டு,  களம் புகுந்து போராடி மடிந்தனர்.

அவ்வாறு மடிந்தவர்களையும்  மறைந்தார்கள் எனச்சொல்லாமல்  வித்தானார்கள்  என்றுதான் வர்ணித்து


அகவணக்கம் செய்தது,  எமது தமிழ் சமூகம்.

ஆனால், இன்று அத்தகைய சமூகம்,  கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், அதற்கு அடிமையானவர்கள், போதை வஸ்து கடத்துபவர்கள்,  அதன் பாவனையால் சீரழிந்துகொண்டிருப்பவர்கள் பற்றிய செய்திகளைதான் பார்த்துக்கொண்டிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்னர், ஜனாதிபதி பதவியிலிருந்த மைத்திரிபால சேனாநாயக்கா,   “  அரசாங்கத்திற்கு மதுவரியால் கிடைக்கும் வருமானம் கூடுதலாக வடபகுதியிலிருந்துதான் வருகிறது ! “  என்று சொன்னதை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.

தென்னிலங்கையில் பாதாள உலகக்கோஷ்டிகளின் அட்டகாசத்தின் பின்னணியிலும் போதைவஸ்துதான்  அடங்கியிருக்கிறது.

அதனால்,  போதை வஸ்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும்.  மரணதண்டனையும் தீர்ப்பாகவேண்டும் என்றும்  மைத்திரிபால சிறிசேன சொன்னார்.

அவ்வாறு அன்று சொன்னவருக்கு, புதிய அரசில் குறைந்தபட்சம் அமைச்சர் பதவி கூட கிடைக்கவில்லை.

தென்னிலங்கையில்  ஒரு நபர் நான்குவயதுக்குழந்தைக்கு மது அருந்தக்கொடுத்து, அதனை காணொளி வாயிலாக பதிவேற்றி வலைத்தளத்தில் பரவ விட்டுள்ளார். இது பேலியாகொடை பிரதேசத்தில் நடந்துள்ளது.

திருமுறைப் பாராயணம் 27/06/2021


படித்தோம் சொல்கின்றோம்: பேதங்கள் கடந்த மாற்றுச் சிந்தனையாளர் கலாநிதி ஏ. சி. எல் . அமீர்அலி எழுதியிருக்கும் சிந்தனைச்சுவடுகள் முருகபூபதி


லங்கை  வாழ்  முஸ்லிம் மக்களை  காலம் காலமாக   ஒரு வர்த்தக சமூகமாக  கருதி வந்தவர்களின் பார்வையை முற்றாக மாற்றியவர்கள் என்ற பெருமையைப்  பெற்றவர்களில்  அறிஞர் அஸீஸ்,  கலாநிதி பதியுதீன் முகம்மது ஆகியோரும் முதன்மையானவர்கள்.

  அறிவார்ந்த தளத்தில் இயங்கத்தக்க  இச்சமூகத்திடம் சந்தர்ப்பங்களை வழங்கிப்பாருங்கள் என்று தமது சிந்தனையிலும் எழுத்திலும் செயற்பாடுகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருப்பவர்களின் அடிச்சுவட்டில் வந்திருப்பவர்தான்  கலாநிதி  ஏ. சீ. எல். அமீர் அலி அவர்கள்.

மேற்கு அவுஸ்திரேலியாவில் மெடோக் பல்லைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் விரிவுரையாளராக


பணியாற்றியவரான அமீர் அலியின்  அரசியல் விமர்சனக் கட்டுரைகளும் ஆய்வேடுகளும் பிரசித்தம்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் இவர் எழுதிவரும் ஆக்கங்கள்  இலங்கை மற்றும்  வெளிநாட்டு  ஊடகங்களில்  தொடர்ந்தும் வெளிவந்து,  அரசியல் மற்றும் உலகப்பொருளாதாரம் குறித்து பேசிவரும் பலருக்கு உசாத்துணையாகவும் மிளிர்கின்றன.

சிலர் அமீர் அலியை ,  ஒரு மேற்குலக சிந்தனாவாதி எனவும் வர்ணிப்பவர்.

ஒருகாலத்தில் இலங்கையில்  இவரது ஆலோசனைகளைப் பெற்றவர்தான் முன்னாள் கல்வி அமைச்சர் ( அமரர் ) பதியூதின் முகம்மத்.

அவரது வாக்குமூலம் ஒன்றையும் இங்கே பதிவிடுவது பொருத்தமானது.

 நான் கல்வி அமைச்சராகக் கடமையாற்றிய காலத்திலே விரிவுரையாளர் அமீர் அலியை எனது அமைச்சுக்கு அழைத்து கல்வி விடயங்களில் பலதரப்பட்ட  ஆலோசனைகளைப் பெற்றிருக்கின்றேன்.

அவருடைய புத்திக்கூர்மையும், தூரதிருஷ்டி நோக்கும் பல விடயங்களில் எனக்கு பேருதவியாக இருந்தன.  சில ஆலோசனைகள் அந்தக்காலத்தில் புரட்சிகரமாக இருந்தபடியால் அவற்றை நடைமுறைப்படுத்தத் தயங்கினேன். ஆனால், பிற்காலத்தில் அந்த ஆலோசனைகளை நான் நடைமுறைப்படுத்த தயங்கியதற்காக கவலைப்படுகிறேன். “

திருநாவுக்கரசு நாயனார் தேவாரப்பண்ணிசை ஆரம்பம்

 


இலங்கைச் செய்திகள்

உறவுகளை தேடியலைந்து வரும் 92 உறவுகள் இதுவரை மரணம் 

வெள்ளவத்தையில் 73 கொரோனா நோயாளர் பதிவு

மேலும் 54 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 2,534 கொவிட் மரணங்கள்

யாழ்.மருத்துவபீட ஆய்வு கூடத்துக்கு ரூ. 4.8 மில். பெறுமதியான இயந்திரம்

கொழும்பிலிருந்து இந்தியா சென்ற கப்பலில் எண்ணெய் கசிவு; இந்திய கடலோர காவல்படை அவதானிப்பு

ஏறாவூர் சம்பவம் தொடர்பில் இராணுவம் ஒழுக்காற்று நடவடிக்கை


உறவுகளை தேடியலைந்து வரும் 92 உறவுகள் இதுவரை மரணம் 

வவுனியா மாவட்டத்தில் மட்டும் 12 பேர் உயிரிழப்பு

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலைந்த 92 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 12 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவுகள் தெரிவித்துள்ளன.

உலகச் செய்திகள்

 காசா நகர் மீது இஸ்ரேல் இராணுவம் மீண்டும் வான்வழி தாக்குதல்

166 நாட்களில் 20 இலட்சம் பேர் பலி; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஜி-7 மாநாடு நிறைவு: எலிசபெத் ராணியுடன் ஜோ பைடன் சந்திப்பு

அமெரிக்காவுடன் மோதலுக்கும் தயாராக வேண்டும்


காசா நகர் மீது இஸ்ரேல் இராணுவம் மீண்டும் வான்வழி தாக்குதல்

கடந்த மாதம் 10ம் திகதி இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட இந்த சண்டை இடைவிடாமல் 11 நாட்களுக்கு தொடர்ந்தது. இதில் இரு தரப்பிலும் சேர்த்து 250-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

சண்டை நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக காசா நகர் மீது இஸ்ரேல் இராணுவம் மீண்டும் வான்வழி தாக்குதலை நடத்தியது.

“தி.ஜானகிராமன் நூற்றாண்டு நிறைவு - ஒரு கலந்துரையாடல்”

 


இலக்கியவெளி  சஞ்சிகை

 

இணைய வழி  கலந்துரையாடல் - அரங்கு 8

 

 

“தி.ஜானகிராமன் நூற்றாண்டு நிறைவு - ஒரு  கலந்துரையாடல்”

நாள்:         திங்கட்கிழமை 28-06-2021

நேரம்:     

 ஆஸ்திரேலிய நேரம் (கிழக்கு) - மாலை 11.30 

இந்திய நேரம் -        மாலை 7.00           

இலங்கை நேரம் - மாலை 7.00    

கனடா நேரம் -         காலை 9.30         

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

வழி:          ZOOM செயலி, Facebook வழியாக

பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - ஒரு தாய் மக்கள் - ச. சுந்தரதாஸ் - பகுதி 3

.


1971 ஆம் ஆண்டு புரட்சி நடிகர் எம் ஜி ஆரின் நடிப்பில் 4 படங்கள் வெளிவந்தன இவற்றுள் வெழிவந்த ஒரே கருப்பு வெள்ளை படம் தான் ஒரு தாய் மக்கள். காரணம் இந்த படம் 1967 ஆம் ஆண்டளவில் தயாராகத் தொடங்கியது. எம்ஜிஆர் சரோஜாதேவி ஜெய்சங்கர் நடிப்பில் கே ஷங்கர் இயக்கத்தில் உருவான படம் இடையே நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் சில ஆண்டுகள் கழித்து தயாரானபோது சரோஜாதேவிக்கு பதில் ஜெயலலிதா கதாநாயகியானார் . ஜெய்சங்கருக்குப் பதில் முத்துராமன் வந்தார் டைரக்ஷன் பொறுப்பு கே சங்கரிடம் இருந்து நீலகண்டன் இடம் கொடுக்கப்பட்டது. இவ்வாறு இழுபட்ட படமே 1971 இல் வெளிவந்தது.

இந்தியில் கலரில் வெளிவந்து வெற்றிபெற்ற ஆய் மிலன்சி பேலா என்ற படத்தை தழுவி இந்தப் படம் உருவானது. இந்தியில் ராஜேந்திர குமார், சைராபானு , தர்மேந்திரா ஆகியோர் நடித்தனர். தமிழ்ப் படத்தை கலைவாணர் என் எஸ் கிருஷ்ணரின் மனைவி மதுரத்தின் சகோதரர் டீ ஏ துரைராஜ் படத்தை தயாரித்திருந்தார்.

கடந்த வாரம் தனது 88வது வயதில் காலமான சொர்ணம் படத்தின் வசனத்தை எழுதி இருந்தார். கலைஞர் கருணாநிதியின் பெரியப்பாவின் பேரனான சொர்ணம் கலைஞர் பாசறையில் உருவாகி வசனகர்த்தாவாக திகழ்ந்தவர. எம் ஜி ஆர் நடித்த 16 படங்களுக்கு வசனம் எழுதிய பெருமை சொர்ணத்தைச் சாரும். எம் ஜி ஆர் கருணாநிதி இடையில் ஏற்பட்ட பிளவின் பின்னர் அம ஜி ஆர் படங்களுக்கு எழுதும் வாய்ப்பு அவரிடமிருந்து பறிபோக காரணமானது.

எறிவளைதடு - Boomerang - ஜே ஜெயமோகன் அவர்களின் ஒரு படம்

ஒரு இலங்கை குடும்பத்தின் மூன்று தலைமுறைகளில் சமூக ஊடகங்களின் தாக்கங்களைக் காட்டும் படம். இந்த படம் வயதான பெற்றோரின் சிட்னியில் உள்ள சாதாரண வீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. 

எதிர்கால குறும்பட திட்டங்களுக்கு நீங்கள் நன்கொடை வழங்க விரும்பினால், தயவுசெய்து அவர்களின் வலைத்தளத்தைப் பார்வையிடவும்: www.Shobhanamcreations.com

இலங்கை என்றும் யாருக்குமே விலைபோகாத அடிபணியாத நாடாக நிமிர்ந்து நிற்க வேண்டுமென்பதே ஒவ்வொரு இலங்கையனுடைய ஆசையும் எதிர்பார்ப்புமாகும். -கந்தையா முருகதாசன் (ஏலையா க.முருகதாசன்) ஜேர்மனி


அன்புடன் சிங்கள சகோதரர்களுக்கு,இது உங்கள் மீதான பரிசுத்தமான அக்கறை கொண்ட அறைகூவற் பகிரங்கக் கடிதம். 

இக்கடிதத்தை வாசித்து அதில் உள்ள சாராசம்சத்தை உள்வாங்குவதும் உள்வாங்காது விடுவதும் உங்கள் விருப்பம். 

ஆனால் எதிர்காலத்தில் எதுவெல்லாம் நடக்கவிருக்கின்றதோ அதை முன்கூட்டியே அறிவதற்காக சிங்களவர் தமிழர் என்ற வேறுபாடின்றி நமெல்லோரும் இலங்கையர் என்ற ஒருமித்து இலங்கை என்ற இறைமையுள்ள நாட்டிலே வாழுகின்ற மக்கள் என்ற அத்திவாரம் கொண்டவர்கள் என்ற ரீதியிலே அக்கறையுடன் உங்களை நோக்கி எழுதப்படுகின்ற கடிதந்தான் இது. 

இலங்கையில் தீர்க்கப்படக்கூடாத அல்லது தீர்க்கப்படக்கூடாது என்ற நோக்கில் இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழரின் இனப் பிரச்சினையின் தாற்பரியத்தை தமிழர்கள் மட்டுமல்ல நீங்களும் அறிவீர்கள். 

ஓரிரு வருடங்களில் பேசித் தீர்க்கப்பட்டு மனமுண்டால் இடமுண்டு என்பது தமிழரும் சிங்களவரும் சகோதரர்கள் நமக்குள் ஏன் இவ்வளவு விரிசல் என்று ஆறஅமரச் சிந்தித்து நல்லிதயத்துடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையை நானா நீயா என்று கையிறுத்தல் போட்டியாக சிங்கள தமிழ் அரசியல்வாதிகள் மாற்றிவிட்டார்கள்.