தை மலர்ந்து வருக வருகவே!


பல்வைத்திய கலாநிதி  பாரதி இளமுருகனார்   
 


பொங்கல்தனை இனிமைபொங்கப்  பொங்கலோ பொங்கல்

     பொலிந்திடுக  என்றேபுத் தரிசி கொண்டு

பொங்கியதைப் புடவிவாழப் பொற்கதிர் வழங்கும்

     பொற்புமிகு பரிதிக்குப் படையல்செய்து

பொங்கிநிற்கும்  இந்நாளில் தமிழ ரெல்லாம்

     புகலரிய ஒற்றுமையை மனதிற் பொங்கிப்

பொங்குமின்பத்  தமிழ்த்தாயைநினைந்து வணங்கிப்

      போற்றிடவே தைமலர்ந்து வருக வருகவே!

 

 பழையபொருள் கழித்திடவே சேர்த்துத் தீயில்

        பலர்கூடி எரித்திடுவர் போகியன்று!

கழைவதற்கு  மனதிற்குள் பலபல இருந்தும்

        கழிவுகளைச் சிலர்என்றும் ஒழிப்ப தில்லை

உழைத்துழவர் பெற்றபுது அரிசி பொங்கி

        உயர்பண்பாம் நன்றிக்கடன் செலுத்து முன்பு

திழைத்திருப்போர் மனஅழுக்கை எரித்துப் போக்கிச்

       சீர்செய்யத் தைமலர்ந்து வருக வருகவே!

 

கருக்கட்டும் கவலைகளை களைந்தெறிதல் அவசியமே !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் ... அவுஸ்திரேலியா



ஆறுதலும் தேறுதலும் அனைவருக்கு மவசியம்

அன்புடனே அணைத்திடுதல் அனைவருக்கு மவசியம்
முகமலர வைத்திடுதல் முழுவாழ்வி னவசியம் 
இவை மனதிலிருத்திடல் என்றுமே அவசியம்  

வாழ்நாளைக் கணிப்பதற்கு வழியின்னும் பிறக்கவில்லை
வாழ்நாளைக் கூட்டுதற்கும் வழிவகைகள் தெரியவில்லை
வாழ்கின்ற நாளினிலே மனமுடையச் செய்யாமல் 
வாழ்கின்ற நாள்வரைக்கும் வாழ்த்தியே மகிழ்ந்திடுவோம் 

வாழ்நாளில் பண்டிகைகள் வந்தபடி    இருக்கிறது
வரவேற்று மகிழ்ந்திடவே மனமெல்லாம் துடிக்கிறது
சூழ்நிலைகள் மகிழ்வதனை துண்டாட  முயல்கிறது
துவழாத மனநிலையை எழுந்துவிடச் செய்திடுவோம் 

தொலைக்காட்சி பத்திரிகை தொலைதூரச் செய்தியெலாம்
வலையாகி சிந்தனையை வதைத்தபடி இருக்கிறது
காலநிலை மாறுபட்டு நோயதனைப் பெருக்கிறது
கருக்கட்டும் கவலைகளை களைந்தெறிதல் அவசியமே 

எழுத்தும் வாழ்க்கையும் அங்கம் 75 வணங்கச்சென்றவிடத்தில் குறுக்கே வந்த தெய்வம் ! தாயகத்திலிருந்து விடைபெற்ற அந்தக்கணங்கள் !! முருகபூபதி

.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

எழுத்தாளர் முருகபூபதி அவர்களின் எழுத்தும் வாழ்க்கையும் அங்கம் 75 இந்த வாரம் பிரசுரமாகின்றது.  தொடர்ந்து 75 வாரங்களாக எழுதிக்கொண்டிருக்கும் திரு முருகபூபதி அவர்களை தமிழ் முரசு ஆஸ்திரேலியாவின் சார்பிலும் தமிழ்முரசு ஆஸ்திரேலியா வாசகர்கள் சார்பிலும் வாழ்த்துகின்றோம். மெல்பேர்ண் நகரில் வசித்துக் கொண்டிருக்கின்ற எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் எத்தனையோ சிறுகதைகளையும், நாவல்களையும் விமர்சனகளையும் எழுதியவர் உலகப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் போன்றவைகளுக்கு எழுதிக் கொண்டிருக்கும் ஒரு மூத்த எழுத்தாளர். தொடர்ச்சியாக எழுத்துப்பணி இவரது வாழ்க்கையாக கொண்டிருக்கின்ற ஒரு எழுத்தாளர். தமிழ்முரசு ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து எழுத்தாளராக இருக்கின்ற திரு முருக பூபதி அவர்களுக்கு இந்த நேரத்தில் நாம் நன்றிகளை கூற விரும்புகின்றோம். இந்த நாட்டிலே முன்னெடுக்கப்பட்டு தமிழர்களுக்காக வாரம்தோறும் ஒரு பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் முரசை ஊக்குவிக்க வேண்டும், தான் அறிந்ததையும் தனக்கு தெரிந்த வற்றையும் மக்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற நல்லெண்ணம் கொண்ட இவர் தமிழ்முரசு அவுஸ்திரேலியா விற்காக கடந்த 12 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறார் இந்த எழுத்து ஊழியனின் எழுத்து சேவையை நாங்கள் மட்டுமல்ல அவுஸ்திரேலிய வாழ் தமிழர்கள் நிச்சயமாக பாராட்டியாக வேண்டும் இந்த 75ஆவது அங்கத்திலே அவரை பாராட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். நீடூழி வாழ வேண்டும் தொடர்ந்தும் தமிழ்ப் பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துகின்றோம் .

ஆசிரியர் குழு


வீரகேசரியில் பணி முடிந்து, ஆமர்வீதி சந்தியில் பஸ் ஏறி,



நீர்கொழும்புக்குத் திரும்புவதற்கு சுமார் ஒரு மணிநேரம்போதும்.  சிலாபம், புத்தளம்,  குளியாப்பிட்டி, செல்லும் பஸ்களில் தொற்றி ஏறிவிட்டால்தான் இது சாத்தியம்.

ஆமர் வீதியும் மகா வித்தியாலய மாவத்தை என்ற முன்னர் பாபர் வீதி என அழைக்கப்பட்ட வீதியும் இணையும் நாற்சந்தியைப்பற்றி அறிந்திருப்பீர்கள்.

அங்கிருக்கும் வீதிப்போக்குவரத்திற்கு வழிகாட்டும் சமிக்ஞை விளக்கில் சிவப்பு ஔிரும்போது , அத்தருணம் அவ்விடத்திற்கு புறக்கோட்டையிலிருந்து வந்து மெதுவாகத்  தரிக்கும் எங்கள் ஊர் பாதையில் செல்லும் பஸ் ஏதாவது ஒன்றில் தொற்றி ஏறிக்கொள்வேன்.

அவ்வாறு ஏறிச்செல்வதற்கு சாமர்த்தியம் வேண்டும்.  அந்தப்பழக்கத்தினால் வந்த வழக்கம்  1987 ஜனவரி 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது.

சுமார் ஒரு மணி நேரத்தில் நான் நீர்கொழும்பு பஸ் நிலையத்தில் வந்திறங்கியிருந்தாலும், வீடு சென்றடைய இரண்டு மணிநேரம் பிடிக்கும்.

இடையில் கடைத்தெரு வீதியில் சில முதலாளிமார் எனக்காக காத்திருப்பார்கள். அவர்கள் என்னிடமிருந்து மறுநாள் வீரகேசரியில் வெளிவரவிருக்கும் செய்திகளை சுடச்சுடக் கறந்துவிட வேண்டும் என்பதற்கான காத்திருப்புத்தான் அது.

காலத்தை வென்று வாழும் கலை இலக்கியவாதி அன்புமணி, இரா.நாகலிங்கம் சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவுஸ்திரேலியா.


அன்பிற்குரிய இரா. நாகலிங்கம் அண்ணன் அவர்கள் 2014 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி, மறைந்துவிட்டார் ன்ற செய்திினை அறிந் தபோது

ாங்க முடியாத துயரில் தவித்தேன்.  தான் புனைந்துகொண்ட "அன்புமணி" என்ற பெயருக்கேற்றவாறே எல்லோரிடத்தும் அன்புள்ளவராக வாழ்ந்த பெருமைக்குரியவர் அவர். தமிழ் இலக்கியத்தைத் தன் உயிரினும் மேலாக நேசித்த பெருமகன். ான் எழுதுவதுடன் மட்டுமன்றி, மற்றையோரை எழுத ஊக்குவிப்பதிலும், மற்றையோரின் படைப்புக்களை வெளிக்கொணர்வதிலும் அவர் ஆற்றிய பணிகள் அளவற்றவை, ன்னிகரற்றவை.

அன்புமணி அண்ணன் அவர்கள், மிகச்சிறந்த நிர்வாகி, நேர்மையான அரச அதிகாரி, என்றுமே சோர்வடையாத இலக்கிய ஊழியன், தனித்துவம் மிக்க படைப்பாளி என்னும் எல்லாவகையான சிறப்புக்களுக்கும் மேலாக, மனிதாபிமானம் மேலோங்கி நின்றதோர் உயரிய "மனிதனாக"வும் வாழ்ந்த செம்மல்!

“SPB பாடகன் சங்கதி” நூல் அறிமுகம் ஆசிரியர் : கானா பிரபா

SPB பாடகன் சங்கதி” என்ற நூல் தமிழ்த்திரையிசையில்


கோலோச்சிய மாபெரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் திரையிசைப் பயணத்தின் வரலாற்றை ஒரு ரசிகனின் பார்வையில் கண்டு பயணிக்கும் நூலாக வெளிவந்துள்ளது.

இந்த நூலில் 52 கட்டுரைகள் தாங்கி, 448 பக்கங்களோடு பல்வேறு இசையமைப்பாளர்கள், திரைத்துறைப் பிதாமகர்களோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது பயணம், இவற்றோடு SPB பாடிய அரிய பல பாடல் தொகுப்புகள், தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என்று பிராந்திய மொழிகளிலும் அவர் எவ்விதம் கொண்டாடப்பட்டு நேசிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார் போன்ற விடயங்கள் சம்பவ உதாரணங்களோடு பதியப்பட்டு வெளிக் கொணரப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் “அகநாழிகை” மற்றும் இதர நாடுகளில் “மடத்துவாசல்” பதிப்பங்கள் வழியாக இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கின்றது.

சாருஹாசன் 90 - கானா பிரபா



“எனக்கும் உனக்கும் இனிமேல் என்ன குறை

இருக்கும் வரைக்கும் படிப்போம் அன்புக் கதை”

https://www.youtube.com/watch?v=WwSOp5Nfb0c

ராமகிருஷ்ணராஜா இசையில் இந்த அழகான பாடலை இலங்கை வானொலியின் பொற்கால யுகத்தில் கேட்டு மகிழ்ந்தோர் மறந்திருக்க மாட்டார்கள். 

SPB பாடகன் சங்கதி நூலின் இறுதிக் கட்ட வரைபை மீளப் படித்துக் கொண்டிருக்கும் போது தான் அடடா இந்தப் பாடலை எப்படி மறந்தேன் என்று நினைத்துச் சேர்த்துக் கொண்டேன்.

இந்த இனிய பாடலுக்குப் பின்னால் சுவாரஸ்யமானதொரு விடயமும் இருக்கின்றது. குறித்த பாடல் இடம்பெற்ற “புதிய சங்கமம்” படத்தின் இயக்குநர் வேறு யாருமல்ல கமல்ஹாசனின் மூத்த சகோதரரும் நடிகருமான சாருஹாசன் தான். தன் மகள் சுஹாசினியை நாயகியாக்கி இயக்கிய இந்தப் படத்துக்குப் பின்னால் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் “புதிய சங்கமம்” படத்தின் தயாரிப்பாளர் பழம் பெரும் நாயகன் எம்.கே.ராதா.  இவர் பற்றி அதிகம் தெரியாத 2கே கிட்ஸ்க்கு ஒரு துணுக்குத் தகவல். எம்.ஜி.ஆர் அறிமுகமான “சதிலீலாவதி” படத்தின் நாயகன் எம்.கே.ராதா தான். தன்னுடைய மூத்த சகோதரனாகவே எம்.கே.ராதாவைப் போற்றியவர் எம்.ஜி.ஆர். இப்போது போய் நீங்கள் கூகிளிட்டால் எம்.கே.ராதாவின் காலில் விழும் எம்.ஜி.ஆர் படத்தைப் பார்க்கலாம். சரி மீண்டும் சாருஹாசனிடன் வருவோம்.

பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - சவாலே சமாளி - ச. சுந்தரதாஸ் - பகுதி 25

.
பொன்விழா ஆண்டில் இந்த படங்கள்என்ற இந்தப் பதிவு சென்ற ஆண்டில் வந்திருக்க வேண்டிய பதிவாகும். சில தாமதங்கள் காரணமாக அதை இந்த வருட ஆரம்பத்தில் பகிர்ந்து கொள்கின்றோம். அதற்காக எழுத்தாளருக்கு தமிழ் முரசின் மனமார்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திரு சுந்தரதாஸ் அவர்கள் சிட்னியில் வசிக்கின்ற ஒரு எழுத்தாளர் கட்டுரைகள் படங்கள் பற்றிய பார்வைகள், சினிமா சம்பந்தமான விடயங்கள் என்று இங்கே இருந்து கொண்டு பல பத்திரிகைகளுக்கும் எழுதி வருகின்ற ஒருவர். நீண்ட காலமாக தமிழ் முரசு அவுஸ்திரேலியாவிற்கு தொடர்ந்து எழுதி வருகின்ற ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் என்ற தலைப்பிலே கடந்த இருபத்தைந்து வாரங்களாக தொடர்ச்சியாக எழுதி இருக்கின்றார். வெள்ளி விழா காணும் இந்த எழுத்துக்கும் அதை தருகின்ற சுந்தரதாஸ் அவர்களுக்கும் எங்களுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். ஒரு சிறு பத்தியை , விமர்சனத்தை அல்லது பார்வையை எழுதுவதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்ற இந்த எந்திர உலகிலே இவர்களைப் போன்ற எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக தான் சார்ந்த சமூகத்திற்கு, தான் அறிந்ததை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்வதற்காக எழுதிக் கொண்டிருப்பது நம்மையெல்லாம் பெருமைப் படுத்துகின்றது. அவருக்கு தமிழ் முரசு சார்பிலும் தமிழ் முரசு வாசகர்கள் சார்பிலும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம்
ஆசிரியர் குழு


எந்த வேடத்தை கொடுத்தாலும் நடித்து தள்ளி விடக் கூடிய அசாத்திய திறமை கொண்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.இவருடைய 150வது படமாக 1971ல ் வெளிவந்த படம்தான் சவாலே சமாளி.மல்லியம் புரடக்சன்ஸ் சார்பில் மல்லியம் ராஜகோபால் இப் படத்துக்கு கதை வசனம் எழுதி தயாரித்து...
 
எந்த வேடத்தை கொடுத்தாலும் நடித்து தள்ளி விடக் கூடிய அசாத்திய திறமை கொண்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.இவருடைய 150வது படமாக 1971ல் வெளிவந்த படம்தான் சவாலே சமாளி.மல்லியம் புரடக்சன்ஸ் சார்பில் மல்லியம் ராஜகோபால் இப் படத்துக்கு கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கியும் இருந்தார்.நடிகை லட்சுமியை திரை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கே உண்டு.பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பரான இவர் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர்.சினிமா மீதான ஆசையால் கதாசிரியராக இவர் ஜீவனாம்சம் என்ற வெற்றி படத்தை உருவாக்கி லட்சுமியை திரை உலகிற்கு அறிமுகம் செய்தார்.பின்னர் லட்சுமி சிவகுமார் நடிப்பில் கஸ்தூரி திலகம் படத்தை இயக்கினார்.அதனைத் தொடர்ந்தே சிவாஜியின் 150வது படத்தை உருவாக்கும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது.கிடைத்த சந்தர்ப்பத்தை தவற விடவில்லை ராஜகோபால்.தன் திறமையை பயன் படுத்தி சவாலே சமாளி என்று படத்தை தயாரித்திருந்தார்.

படத்தின் கதை ஒன்றும் புதியதல்ல .ஏற்கெனவே எம் ஜி ஆர் நடித்து வெளிவந்த பெரிய இடத்துப் பெண் படத்தின் சாயலைக் கொண்ட பணக்கார ஆணவம் பிடித்த பெண்ணை கிராமத்து இளைஞன் அடக்கி ஆளும் கதைதான்.ஆனால் படத்தின் திரைக் கதையை அருமையாக அமைத்து அதற்கு ஏற்றாப் போல் கருத்துள்ள வசனங்களை எழுதி திறமையாக இயக்கி இருந்தார் ராஜகோபால். அது மட்டுமன்றி கதாப்பாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்ததிலும் அவரின் ஆற்றல் வெளிப்பட்டது.

கிராமத்து பண்ணையாருக்கு பணத்திமிர் பிடித்த சகுந்தலா என்ற மகளும் மூர்க்கனான ராஜவேலு என்ற மகனும் உள்ளனர்.பண்ணையாரிடமும் அவர் குடும்பத்திடமும் அடிமையாக சேவகம்செய்கிறார் அய்யாக்கண்ணு . அவரின் மகன் மாணிக்கமோ சுயமரியாதை உள்ளவன்.பண்ணையார் குடும்பத்துக்கு அடங்காதவன்.இதனால் சகுந்தலாவும் ராஜவேலுவும் அவனை பழிவாங்க துடிக்கிறார்கள்.ஆனால் மாணிக்கமோ தேர்தலில் பண்ணையாரை எதிர்த்து போட்டி இடுகிறான். தான் தோற்றால் தன மகள் சகுந்தலாவை மாணிக்கத்துக்கு திருமணம் செய்து வைப்பதாக சின்னப்ப பண்ணை சிங்காரத்தின் தூண்டுதலில் மக்கள் முன் ஒப்புக்கொள்கிறார் பண்ணையார் . தேர்தலில் மாணிக்கம் வெற்றி பெற நிலைமை சிக்கலாகிறது .

கற்பகதருவைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை இருபத்து நான்கு ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

                           

  ழம் விற்கும் கடைகள் எல்லா இடங்களிலும்


சாதாரணமாகவும் பெரிய அளவிலும் இருப்பதைக் காணுகின்றோம். அங்கு எல்லாவி தமான பழங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும். அப்படி வைக்கப்பட்டிருக்கும் பழங்கள் உள்நாட்டில் விளைந்த பழங்களாகவும் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட பழங்களு மாகவேதான் இருக் கும். அப்படி இருக்கும் பழங்களில் ஒரு பழம் மட்டும் இடம் பெற்றி ருக்காது. அந்தப் பழம் எந்தப்பழம் தெரியுமா அதுதான் எங்களின் மண்ணுக்குச் சொந்தமான " பனம்பழம் ". எங்கள் மண்ணின் பழம்.

எங்கள் அருகிலே கிடைக்கும் பழம். உணவாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பழம்.மரத்தில் ஏறிப்பறிக்காமலே கீழே விழுந்து கிடக்கும்பழம்.   ஆனாலும் அந்தப் பனம்பழம் பழக்கடைகளில் இடம்பெறாமல் இருக் கிறது என்பதை எண்ணக் கவலையாகவே இருக்கிறது.

பித்தளைக் குடம் - குறும்கதை கே.எஸ்.சுதாகர்

இரவு ஒன்பது மணி. வெறியுடன் பாட்டும் கச்சேரியுமாக வந்த சிவநாதன் தனது பெற்றோரின் வீட்டுப்படலையின் முன்பாக அச்சொட்டாக சைக்கிளுடன் விழுந்தான்.

“நாதன்... என்ன நடந்தது? மனிசியோடை சண்டையா?” தாயார் கேட்டபடியே தலையில் பிடிக்க, தகப்பன் காலில் பிடித்தார். அவர்களால் சிவநாதனைத் தூக்கமுடியவில்லை.

“அதென்ணண்டு இந்தக் குடிகாரர்கள் எல்லாம் சரியாக தமது வீட்டு வாசலுக்கையே வந்து விழுகினம்?” கேட்டபடியே முன்வீட்டுக்காரர்கள் உதவினார்கள்.

“என்னடா மனிசியோடை சண்டையா?” திரும்பவும் தாயார் கேட்க, “மா...மா..” என்றான். தகப்பன் ஒரு குடம் தண்ணீர் எடுத்துவந்து, நடுவீட்டுக்குள் சிவநாதனின் தலையில் ஊற்றினார். “குடம்... குடம்” என்று அரற்றியபடியே உறக்கத்திற்குப் போனான் சிவநாதன். மறுநாள் விடிந்தபோதுதான் முதல்நாள் என்ன நடந்தது என்பது அவனுக்கே நினைவுக்கு வந்தது.

சிவநாதனும் மாமாவும்---மனைவியின் தகப்பனார்---சாடியும் மூடியும் போல. சிவநாதன் கள்ளுக்கொட்டிலுக்குப் போனால், வரும்போது மாமாவுக்கு எடுத்து வருவான். மாமா போனால் மருமகனுக்கு. இருவரும் சேர்ந்து போனால், ஒருவரையொருவர் இழுத்து விழுத்தியபடி வேலி, பத்தையள் எல்லாம் சுகம்கேட்டு வீட்டுக்கு வந்து சேர்வார்கள். பார்ப்பவர்கள் கண்களுக்கு, ஒரு வண்டிலுக்கு இரண்டுபக்கமும் காளை மாடுகளைப் பூட்டியது போன்றிருக்கும். குடியாத வேளைகளில் இருவருமே சாதுக்கள். போதை தலைக்கேறினால் எதுவுமே தெரியாது. சிவநாதனின் மனைவியின் சொல் அங்கே எடுபடாது. அப்பாவிலும் கணவனிலும் மனமிரங்கி, சோற்றுடன் இறைச்சிக்கறி, கத்தரிக்காய் வெள்ளைக்கறி, வெங்காயச்சம்பல், அவித்த முட்டை என்பவற்றைப் பரிமாறுவாள். சாப்பிட்டு முடிய மாமனுக்கும் மருமகனுக்கும் சண்டை தொடங்கியது. ”சீதனம் தரேல்லை. இன்னும் வீடும் கட்டித் தரேல்லை. கண்டறியாத வாத்தி...” சிவநாதன் சொல்ல, “போக்கிரி... உனக்குப் பெம்பிளை காணுமெண்டுதானே வந்தனி” என்றார் மாமா.

பேர்த் பால முருகன் திருக்கோயில் - தை பொங்கல்

 


இலங்கைச் செய்திகள்

இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது

யாழில் புதிய வகை நுளம்பு கண்டுபிடிப்பு

யாழில் எரிவாயு பெற நீண்ட வரிசை

இலங்கை வரும் இலங்கையர்களுக்கு விமான நிலையத்தில் 24 மணி நேர தடுப்பூசி

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக எம். இளஞ்செழியன் கடமையேற்பு

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவனுக்கு பல்கலைக்குள் நுழையத் தடை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் திருகோணமலைக்கு விஜயம்


இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது

ஜீ.எல்.பீரிஸிடம் தெரிவித்ததாக ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிவு

கடினமான சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

உலகச் செய்திகள்

 சீன இராணுவ ஊடுருவல்; தாய்வான் கடும் எதிர்ப்பு

இங்கிலாந்து குடிவரவு குடியகல்வு சட்டம்; இந்தியர்களுக்குத் தளர்வு

கசகஸ்தான் பதற்றம்: ரஷ்யா தலைமை துருப்புகள் விரைவு

பாகிஸ்தான் எல்லை வேலி: தலிபான் எதிர்ப்பு

வடகொரியா ஏவுகணை வீச்சு

ரஷ்யப் பிரதமர் இந்தியா வருகை

பங்குச் சந்தை பெறுமதி: அப்பிள் நிறுவனம் புதிய சாதனை

இராணுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து சூடான் பிரதமர் இராஜினாமா



சீன இராணுவ ஊடுருவல்; தாய்வான் கடும் எதிர்ப்பு

சீனாவுடனான வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு தாய்வான் ஜனாதிபதி ட்சாய் இங் வென் தனது புத்தாண்டு உரையில் அழைப்பு விடுத்தார். சீனா தனது இராணுவ சாகசங்களை விரிவுடுத்துவதை கட்டுப்படுத்தும்படியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தருமாபுரம் அத்தீனம் தமிழ்நாடு, இந்தியா நடத்துகிற சைவ சித்தாந்த பாடநெறி (ஆங்கிலத்தில் )


மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள:

உலக சைவப்  பேரவை ஆஸ்திரேலியா

ங்கோ +61 406 637 013

சிங் +61 478 313 200