விளிப்புணர்வு மனெமெல்லாம் விசுவரூபம் எடுக்கவேண்டும் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா

          யாருக்கு இருக்கிறது 
                யாருக்கு இல்லையென்று
          யாருக்கும்   தெரியாது  
                 பாருக்குள் பரவிருக்கு 
          வேர்விட்டு  விருட்சமாய் 
                 ஆகிவிட்ட கொரனாவின்
          ஆபத்தை உணராமல்
                 அனைவருமே உலவுகிறார்  !

           மருந்துவந்து விட்டதென
                 செய்திதான்  வருகிறது 
          மாகொரனா தன்னளவில்
                 மலர்ச்சியுடன் திரிகிறது 
           விருந்துண்ண யாவருமே
                   விரும்பியே எழுகின்றார் 
           வில்லங்கக் கொரனாவை
                   விளங்காமல் திரிகின்றார் !


           மருத்துவர்கள் யாவருமே 
                 பலகருத்தை பகருகிறார் 
           உள்வாங்கி உளமிருத்த
                  யாவருமே தவறுகிறார் 
           பெருநோயோ மெளனமாய்
                  பரவுதலைத் தொடர்கிறது
            அதைமனதில் இருத்தாமல்
                  அனைவருமே திரிகின்றார் !

            நீறுபூத்த நெருப்பாக
                 கொரனாவா இருக்கிறது 
           யாருமதை மனங்கொள்ளா 
                  தாறுமாறாய் திரிகின்றார்
           அடுத்தவலை எழும்புதற்கு
                    ஆவலுடன் நிற்கிறது 
           அதைமனதில் கொள்ளாமல்
                   அனைவருமே திரிகின்றார்  !

           பகுத்தறிவு மனிதர்க்கு
                   கிடைத்த பெருவரமாகும் 
           பக்குவமாய் இருப்பதனை
                  மனமிருத்தல் அவசியமே 
           விளிப்புணர்வு மனெமெல்லாம்
                  விசுவரூபம் எடுத்துவிடின்
           வெருளவைக்கும் கொரனாவா 
                      விழிபிதுங்கி நின்றுவிடும்  ! 

No comments: