யுத்தகால இரவொன்றின் நெருக்குதல்:சிவரமணி

.

யுத்தகால கோரத்தால் கொல்லப்பட்ட சிவரமணியின் நினைவாக…

மே மாதம் 19ம் ஆம் திகதி 1991 ஆம் ஆண்டு சிவரமணி தற்கொலை செய்துகொண்டார்.


எங்கள் குழந்தைகளை
வளந்தவர்களாக்கி விடும்.
முகமற்ற மனித உடலும்
உயிர் நிறைந்த
அவர்களின் சிரிப்பின் மீதாய்
உடைந்து விழும் மதிற் சுவர்களும்
காரணமாய்
எங்களுடைய சிறுவர்கள்
சிறுவர்களாயில்லாது போயினர்.
நட்சத்திரம் நிறைந்த இரவில்
அதன் அமைதியை உடைத்து வெடித்த
ஒரு தனித்த துப்பாக்கி சன்னத்தின் ஓசை
எல்லாக் குழந்தைகளினதும் அர்த்தத்தை
இல்லாதொழித்தது.
எஞ்சிய சிறிய பகலிலோ
ஊமன்கொட்டையில் தேர் செய்வதையும்
கிளித்தட்டு மறிப்பதையும்
அவர்கள் மறந்து போயினர்.
அதன் பின்னர்
படலையை நேரத்துடன் சாத்திக்கொள்ளவும்
நாயின் வித்தியாசமான குரைப்பை இனம் காணவும்
கேள்வி கேட்காதிருக்கவும்
கேட்ட கேள்விக்கு விடை இல்லாதபோது
மௌனமாயிருக்கவும்,
மந்தைகள் போல எல்லாவற்றையும்
பழகிக் கொண்டனர்.
தும்பியின் இறக்கையை பிய்த்து எறிவதும்
தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி
எதிரியாய் நினைத்த நண்பனைக் கொல்வதும்
எமது சிறுவரின் விளையாட்டானது.
யுத்தகால இரவுகளின் நெருக்குதலில்
எங்கள் குழந்தைகள்
“வளர்ந்தவர்கள்” ஆயினர்.
-சிவரமணி-
——————————————–
சிவரமணிக்கு…:அஜித் சி. ஹேரத்

ஆண் அழகன் மிதுன்,(Mithun). -- ரமேஷ் நடராஜா

.


ஆண் பிள்ளை என்றால் Cricket , Football (Soccer ), பெண் பிள்ளை என்றால் பரதநாட்டியம் , சங்கீதம்  (இவை எல்லாம் pre uni , SWOT shop மற்ற tuitions எல்லாம் முடித்து , நேரம் இருந்தால் மட்டும்)  என்று இருக்கும் எமது சமுதாயத்தில் இதோ ஒரு வித்யாசமான இளைஞன்.

Mithun தேர்ந்து எடுத்திருக்கும் கலை body building . இளம் வயதினர் Gym சென்று உடலை மெருகேத்தி , பெண்கள் மத்தியில் ஒரு மிடுக்குடன் வலம் வருவது அந்த வயதிற்குரிய செயட்பாடுகள்  தான். ஊரில் அவ்வளவு Gym வசதிகள் இல்லாவிட்டாலும் எமது இள வயதில் நாமும் முறுக்கேத்தி திரிந்தவர்கள் தான்.   
( பெண்கள் திரும்பியே பார்க்கா விட்டாலும், அவர்கள் எல்லோரும் எங்களை பார்ப்பது போல் ஒரு மாயையில் திரிந்த நாட்கள் எல்லோர் வாழ்விலும் வந்து போய் இருக்கும்)

ஆனால் இந்த இளைஞன் , இந்த திறமையை ஒரு படி மேலே கொண்டு சென்று, ஆணழகன் போட்டிகளில் கலந்து கொண்டு எம்மவர்களின் திறமையை மற்றுமோர் களத்திற்கு எடுத்து சென்றுள்ளது.

நண்பர் ஒருவர் மூலம் Mithun இந்த திறைமை பற்றியும், அண்மையில் Shellharbour இல் நடந்த ஆணழகன் போட்டியில் இவர் 3ம் இடத்தை வென்ற செய்தியையும் அறிந்தேன். சின்ன ஒரு விடயத்தையும்/ வெற்றியையும் ஊதி பெரிதாக்கும் எம் மத்தியில், இந்த Mithun சலசலப்பு இல்லாமல் தனது வெற்றியை அமைதியாக வைத்து விட்டார்.  
Mithun அல்லது அவரது குடும்பம் எனக்கு அவ்வளவாக பளக்கப் பட்டவர்கள் அல்ல.

ராக சங்கமம் 2014 -31.05.2013

.





Shri Durga Devi Devasthanam
Raaga Sangamam - 2014
Application Form for Music (Vocal) Competition
 



சக்தி தொலைக்கட்சியில் வைசாலி யோகராஜா

.
இலங்கையில் சக்தி தொலைக்கட்சியில் இடம்பெறும்  junior super star போட்டியில் வைசாலி யோகராஜா யாழ்ப்பாண   தமிழ் சிறுமி  



சங்க இலக்கியக் காட்சிகள் 9 (செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

காட்சி 9


மகளைப்பார்! அவள் திறனைப் பார்!
அது ஓர் அழகிய வீடு. அங்கே செல்வச் செழிப்போடு வாழ்கின்ற வளம்மிக்க ஒரு குடும்பம். அந்தக் குடும்பத்தில் பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளை. அழகான பெண்பிள்ளை. அவளுக்குப் பருவம் வந்தது. காலாகாலத்தில் காதலும் பிறந்தது. அவளின் காதலனோ வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனுக்குப் போதியளவு வருமானமும் இல்லை. ஆனாலும், அவனும் அவளும் கண்களால் கதைபேசி, உள்ளங்கள் உறவாடித் திருமணமும் செய்துகொண்டனர்.
பிறந்த நாள்முதல் வறுமை என்றால் என்னவென்றே அறிந்திராத அவள், அவனோடு சென்று குடிசையொன்றிலே குடும்பம் நடாத்துகின்றாள். பெற்றோருடன் வாழ்ந்தபோது அவளுக்கு ஒருநாளும் பசித்ததில்லை. பசி எடுப்பதற்கு முன்னரே, அவளின் தாய் நேரம்பார்த்து அவளுக்கு உணவூட்டிவிடுவாள்;. செவிலித்தாயோ, அவள் சிறுபிள்ளையாயிருந்தபோது தேன்கலந்த பசும்பாலை அவளுக்கு ஊட்ட முயலும்போது அவள் திமிறிக் கொண்டு தத்தித் தத்தி ஓடுவாள். இவ்வாறு பசிஎன்பதே தெரியாமல் செல்வமாக வளர்ந்தவள் அவள்.

திரும்பிப்பார்க்கின்றேன் -முருகபூபதி

.
 ஈழத்து இலக்கியப்படைப்புகளுக்கு அடிக்குறிப்பு கேட்ட கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதன்

தமிழில்   புதுக்கவிதை    இலக்கியம்    அறிமுகமான     காலப்பகுதியில்  அதனை    வன்மையாக   எதிர்த்தவர்கள்   இரண்டுபேர்.
ஒருவர்    பாரதி   இயல்  ஆய்வாளர்   தொ.மு.சி ரகுநாதன்.    மற்றவர் கலைமகள்   இதழின்   ஆசிரியர்    கி.வா.ஜகந்நாதன்.    புதுக்கவிதை விடயத்தில்    இவர்களிடம்    மாறுபட்ட    கருத்துக்கள்   இருந்தன. இலக்கியக்கோட்பாடுகள்    குறித்தும்    நிரம்பவும்   வேறுபட்டவர்கள்.
ரகுநாதன்    ஒரு   கம்யூனிஸவாதி.    கி.வா.ஜகந்நாதன்    ஆத்மீகவாதி. ஜகந்நாதன்    எப்பொழுதும்   நெற்றியில்   திருநீறு   துலங்க சிவப்பழமாகக்காட்சியளிப்பவர்.    ரகுநாதன்    அப்படியல்ல.
கி.வா.ஜ.   என   அறியப்பட்ட   ஜகந்நாதன்    இந்துசமய   இலக்கியங்கள் பழந்தமிழ்    இலக்கியங்கள்   மற்றும்   இராமாயணம்   மகா   பாரதம்   குறித்தே அதிகம்    எழுதியவர்    பேசியவர்.   அத்துடன்    நாட்டார்    இலக்கியம்   சிறுகதை இலக்கியத்துறை    இலக்கிய    விமர்சனங்களிலும்   ஈடுபட்டவர்.  சிறந்த ஆத்மீக    சொற்பொழிவாளராகவும்   விளங்கியவர்.
தமிழ்த்தாத்தா    என்று   அழைக்கப்படும்    உ.வே. சாமிநாதய்யரின் மாணாக்கர்.   இரட்டை    அர்த்தத்தில்    சிலேடையாக    பேச வல்ல   கி.வா.ஜ. எங்கள்    நீர்கொழும்புக்கும்   சில   தடவைகள் வந்து   உரையாற்றியிருக்கிறார்.


இலங்கைச் செய்திகள்


புலிகளின் பாடல்களை தொலைபேசியில் வைத்திருந்தவர் கைது

இலங்கை எண்ணெய் அகழ்வு பணியில் பிரான்ஸ்

இசைப்பிரியா குறித்த புகைப்படங்கள் தொடர்பில் ஆய்வு செய்த பின்னரே முடிவு: இராணுவம்

வடக்கில் தமிழ் மக்களுக்கு உரிமைகள் இல்லை என்பதை ஜனாதிபதி நிரூபிப்பு

ஈழத்தமிழருக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் மோடியை நேரில் சந்தித்து வைகோ வலியுறுத்தல்

இரத்தினபுரியில் டெங்கு நோய் பரவும் அபாயம்

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு மூதாட்டி யாழில் கைது

===================================================================

புலிகளின் பாடல்களை தொலைபேசியில் வைத்திருந்தவர் கைது


19/05/2014   விடுதலைப் புலிகளின் பாடல்களை கையடக்க தொலைபேசியில் வைத்திருந்த ஒருவர் மட்டக்களப்பு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து கைப்பற்றிய கையடக்க தொலைபேசியில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம் சேமித்து வைக்கப்பட்டிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். நன்றி வீரகேசரி 



அப்பாவின் துப்பாக்கி -ஹினெர் சலீம்

.

குர்திஸ்தான் விடுதலையை மையமாக வைத்து, நாட்டு விடுதலைக்காக குர்தியர்கள் நடத்தும் போராட்டத்தைப் பற்றிய நாவலே அப்பாவின் துப்பாக்கி. சிறுவனான ஆசாத் தன் கதையைச் சொல்லும் விதமாக இந்நாவலின் கதை விரிகிறது. போராடும் அவர்கள் எத்தகைய முயற்சிகள் செய்கிறார்கள், அவர்களின் திட்டம் என்ன போன்றவை தெளிவாக விவரிக்கப்படாமல் நாவல் பயணிப்பது நாவலின் வாசிப்பில் நமக்கு ஒரு புரிபடாத் தன்மையைத் தருகிறது. இருந்தும் உலகெங்கும் இத்தகைய போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணரும் சந்தர்ப்பமாக இந்நாவலின் வாசிப்பனுபவத்தை எடுத்துக் கொள்ளலாம்.

தன் நாட்டுக்காகப் போராடும் தன் தந்தை, அண்ணன் மற்றும் பலரின் வாழ்க்கையை விவரம் புரியாத வயதிலிருந்து பார்த்துவரும் ஆசாத் பின்னாளில் அவனே அத்தகைய போராட்டத்திலும், அதன் சிக்கல்களிலும் உழன்று, போராட்டத்தினால் விளைவது ஒன்றுமில்லை என்றும், தான் செய்ய நினைப்பது முற்றாக வேறு என்றும் உணர்ந்து, சதாம் ஹீசேன் ஆட்சிக்குப் பிறகு இத்தாலிக்குச் சென்றுவிடுகிறான். இந்த இடைப்பட்ட காலங்களில் நிகழும் இழப்புகளையும், அவலங்களையும், துயரங்களையும் நாவல் பதிவு செய்கிறது.

சிட்னி முருகன் சைவநெறி மாநாடு 2014. 29,30,31 -08.2014

.
இதை பெரிதாக்கி பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யுங்கள்





படித்தோம் சொல்கிறோம் - ஸர்மிளா ஸெய்யத்தின் உம்மத் நாவல்

.
 இலங்கையின்  உள்நாட்டுப்போர்   முடிவடைந்திருந்தாலும்     பாதிக்கப்பட்டவர்கள்    கடக்கவேண்டிய     தூரம்    அதிகம்  என்பதை   உணர்த்தும்     ஸர்மிளா    ஸெய்யத்தின்     உம்மத்    நாவல்

                                                              
     சமீபகாலத்தில்   நான்   படித்த    சில    நாவல்கள்    யாவும்    சுமார் நாநூறுக்கும்    மேற்பட்ட     அல்லது     அதற்குக்கிட்டவாக    வரும் பக்கங்களைக்கொண்டிருந்தன.     இயந்திர    கதியில்    ஓடிக்கொண்டிருக்கும் புலம்பெயர்    சூழலில்    அத்தனை    பக்கங்களையும்   படித்து   முடிக்க தேவைப்படுவது    நேரமும்    ஆர்வமும்    பொறுமையும்    நிதானமும்தான்.
இன்றைய    யுகத்தில்    ஒரு    தேர்ந்த    வாசகனுக்கு    இந்த  நான்கும்   மிகவும்   அவசியம்    எனக்கருதுகின்றேன்.
இலங்கையில்   பல   ஆண்டுகளாக   நீடித்த   போர்   முடிந்து  இ ந்த   மே மாதத்துடன்     ஐந்து   ஆண்டுகள்   நிறைவடைந்துவிட்டன.    போரை தொடர்ந்து    நீடிப்பது   எவ்வளவு   பெரிய  கொடூரமோ   அந்தளவு கொடூரம்தான்     அது  முடிவடைந்து    பாதிக்கப்பட்ட    மக்கள்   தங்களை மீளக்கட்டமைத்துக்கொள்வதுமாகும்.
ஸர்மிளா    ஸெய்யத்தின்  முதலாவது    நாவல்   உம்மத் அந்தச்செய்தியைத்தான்    அழுத்தமாகப்பதிவுசெய்கிறது.     ஸர்மிளா ஸெய்யத்     இலங்கையில்     கிழக்கு   மாகாணத்தில்   முஸ்லிம் மக்களும் செறிந்து  வாழும்   ஏறாவூரில் 1982  இல்  பிறந்தவர்.   இதழியல்   கல்வி முகாமைத்துவம்     உளவியல்   துறையில்   பயின்றவர்.    பத்திரிகை ஊடகத்துறையில்    பணியாற்றிய    அனுபவம்   மிக்கவர்.    அத்துடன் சமூகச்செயற்பாட்டாளர்.
இந்தப்பின்புலத்தில்     அவர்   சிறகு  முளைத்த   பெண்  என்ற கவிதைத்தொகுதியையும்   முன்னர்    வெளியிட்டிருப்பவர்.
கவிதைத்தொகுப்புக்கு   சிறகு  முளைத்தபெண்   என்ற பெயரைச்சூட்டியிருப்பவர்    இந்த   உம்மத்   நாவலில்  தவக்குல்   என்ற சிறகு   முளைத்த  பெண்ணையே  படைத்துள்ளார்.   ஒரு    சுதந்திரப்பறவை பெண்ணாக    இருக்கும்பொழுது   எதிர்கொள்ளும்    நெருக்கடிகள்   சவால்கள் கொலை    அச்சுறுத்தல்கள்    புறக்கணிப்புகள்  -  அவளது   இயலாமை  தர்மாவேசம்   இரக்க   சிந்தனை    பாதிக்கப்பட்ட   பெண்களிடத்தில்   பரிவு பெற்றவர்கள்   சகோதரிகளிடத்தில்    வற்றாத   நேசம்    இவையாவும் இரண்டறக்கலந்த    முழுமையான    பாத்திர வார்ப்பு    தவக்குல்.
யோகா   இயக்கத்தில்  இணைந்து   போரில்    காலை   இழந்தவள். தெய்வானை   போராளியாகவிருந்து    இறுதியில்    சரணடைந்து விடுவிக்கப்பட்டு    அன்றாட    வாழ்வில்    இணையத்துடிப்பவள்.


இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 25 வருட நிறைவு

.
இலங்கை  மாணவர்  கல்வி  நிதியத்தின் 25 வருட நிறைவு வெள்ளிவிழா    (1989 - 2014)
 06-09-2014  சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில்
  (Noble Park Community Centre - Memorial Drive, Noble Park, Vic - 3174)




இலங்கையில்   முன்னர்   நீடித்த  உள்நாட்டுப்போரினால்   பெற்றவர்களை     இழந்த   ஏழைத்தமிழ்   மாணவர்களின்   கல்வி  வளர்ச்சிக்கு  கடந்த 1989 ஆம்   ஆண்டு   முதல்   அவுஸ்திரேலியா  உட்பட   பல    வெளிநாடுகளில் புலம்  பெயர்ந்து   வாழும்      அன்பர்களின்    ஆதரவுடன்   நிதியுதவி   வழங்கி   குறிப்பிட்ட   மாணவர்களின்   எதிர்காலம்  சிறப்படைய  சேவையாற்றிய  இலங்கை   மாணவர்   கல்வி   நிதியம்   இந்த  ஆண்டில்  (2014)   தனது   25   வருடங்களைப்பூர்த்திசெய்துகொண்டு    வெள்ளிவிழாவை நடத்தவுள்ளது.   
1.   இலங்கையில்  வடக்கு   கிழக்கு   மாகாணங்களில்    யாழ்ப்பாணம், கிளிநொச்சி,   வவுனியா,    முல்லைத்தீவு,    மன்னார்,    மட்டக்களப்பு, திருகோணமலை,   அம்பாறை    முதலான   மாவட்டங்களில்   போரினால்   பெற்றவர்களை    குடும்பத்தின்   மூல   உழைப்பாளிகளை   இழந்த   ஏழைத்தமிழ்   மாணவர்களுக்கும்    மற்றும்    இடப்பெயர்வினால்     புத்தளம்  கம்பஹா    மாவட்டங்களுக்கு   இடம்பெயர்ந்த    பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும்       கல்வி   நிதியம்   கடந்த   25   வருட  காலத்தில்   உதவியதுடன்   அவர்களின்   கல்வி    முன்னேற்றத்தையும்   அவதானித்து வந்துள்ளது.


வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்..குவைத் பற்றிய தொடர்கட்டுரை (1)

.
                                                                                                           வித்யாசாகர்


சாதாரண மனிதரின் கனவுகளுக்கும் கைகால் முளைக்கவைத்து வாழ்க்கையை வண்ணமாக்கிவிட்ட உலகநாடுகளுக்கு மத்தியில் தன்னை முதலிடத்திலேயே வைத்திருக்கும் மத்தியக் கிழக்கு நாடுகளுள் குவைத்தும் முதலான ஒரு நாடு என்றால்; அங்கே வந்து தனது வாழ்க்கையை விதைத்துக் கொண்டோரால் அதை மறுக்கமுடிவதில்லைதான்..
கலர் டிவியில் ஆரம்பித்த வண்ணமயமான கனவு வெளிநாட்டுக் கனவு. பிடிச்சோற்றில் போதை கலக்கும் சாராயத்தின் ஒவ்வொரு மூடியின் மணத்தையும் கால்மேல் கால்போட்டுக்கொண்டு நுகர்ந்துப்பார்த்த அதிகாரக் கனவு அது. பசி என்பதைக் மறந்து’ பணம் பணம் என்றே ஓடி’ இரத்தத்தை வியர்வையாய் சிந்திக்கொண்டிருக்கும் வலி தாளாப் பயணம் எங்களின் வெளிநாட்டுப் பயணம்..
அம்மா தாலியை அடகுவைத்து, அக்காவுக்குப் புதிய தாலிவாங்கி, தங்கைக்கு வரன் பார்த்து, இன்னும் தாலிக்குப் பின்னான சேதியெல்லாம் சேரச்சேர தனது வாழ்க்கையை உதிரும் முடிகளோடு உதிர்த்துக் கொண்ட வலியது.
.வீடூ கட்ட ஆசை, வீடு வாங்க ஆசை, மனைவாங்க ஆசை, பொருள் சேர்க்க ஆசை, ஆசை ஆசையென்று வயதுகளை அடுக்கி அடுக்கி வருடத்தை வெளிநாடுகளில் தொலைத்து விட்டு வறண்ட ஏக்கத்தில் கிடைத்த பாசத்தின் மிச்சத்தில் கடமையாகவே தனது திருமணத்தை நடத்திக்கொண்ட, நனைந்த பல தலையணையின் ஈரமது..
தொலைபேசி கண்ணீரில் நனைந்து, கடிதங்கள் நினைவுகளில் ஊறி, காற்றெங்கும் பரவிய ஏக்கத்தின் உச்சத்தில்; இதயம் நிறையாத பாசத்தின் மிச்சத்தில்; தீரா மனப்புண் துன்பமாகவே போகிறது; எங்களின் ஊர்விட்டுப் போதலின் துன்பம்..
இதலாம் கடந்தும் நாங்கள் வெல்லும் இடமொன்று உண்டு, அதுதான் நாங்கள் ஊர்போகும் விடுமுறைக் காலம்.

உலகச் செய்திகள்


மூழ்கிய தென்கொரிய கப்பல் தொடர்பில் கண்ணீர் சிந்தி மன்னிப்புக் கோரிய ஜனாதிபதி

சீனாவில் விழுந்த ரஷ்ய ஏவுகணையின் சிதைவு

உலகிலேயே விலையுயர்ந்த விவாகரத்து

மோடிக்கு ஒரு திறந்த மடல்

உக்ரைன் பிரச்னை: மீண்டும் போர்க்கப்பலை அனுப்புகிறது அமெரிக்கா

 இராணுவ கட்டுப்பாட்டில் தாய்லாந்து!

நமது அரசு ஏழை மக்களுக்கானது : நாடாளுமன்றில் மோடி

பிலிப்பைன்ஸ் பணிப்பெண் மீது சுடுநீரை வீசிய சவூதி எஜமானரின் தாய்

போகோ ஹராம் தீவிரவாதிகளின் தாக்குதலில் 48 பேர் பலி : நைஜீரியாவில் சம்பவம்

===================================================================

மூழ்கிய தென்கொரிய கப்பல் தொடர்பில் கண்ணீர் சிந்தி மன்னிப்புக் கோரிய ஜனாதிபதி

19/05/2014   தென் கொரிய ஜனாதிபதி பார்க் கெயுன் - ஹை கடந்த மாதம் மூழ்கிய சிவொல் படகு தொடர்பில் இன்று திங்கட்கிழமை தொலைக்காட்சியில் தோன்றி மன்னிப்புக் கோரினார். 
கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி சிவொல் படகு மூழ்கியதில் 286பயணிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் பலர் உயர் பாடசாலை மாணவர்களாவர். இந்தச் சம்பவத்தில் 18 பேர் தொடர்ந்து காணாமற் போன நிலையில் உள்ளனர். 

சினிமா விமர்சனம்

.



அனைவரும் எதிர் பார்க்கும் சின்ன பட்ஜெட் படங்களில் இந்த "பூவரசம் பீப்பி"யும் ஒன்று. இயக்குனர் கௌதம் மேனன் தான் முதலில் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது, ஆனால் அவருக்கு இருந்த கடன் சுமையால் தற்போது பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஷா தயாரித்து வெளியிட இருக்கிறார்.நம் பால்யத்தின் நினைவுகளை அழகாக செல்லுலாய்டில் காட்டும் படமாக தான் இது இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. ட்ரைலர் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே சிறுவர்கள் சிலர் பம்பரம் விளையாடுவதையும், இன்னும் சிலர் கிரிக்கெட் விளையாடுவதையும் காட்டி நம் ஏற்ற தாழ்வுகளை அழகாகவும் நெத்தியடியாகவும் சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ஹலிதா ஷமீன், அதுவும் இவர் ஒரு பெண் இயக்குனர் என்பதால் முதலில் இவருக்கு ஒரு பெரிய சல்யூட்.காதலுக்கு எல்லையே கிடையாது அது எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம், அப்படி இருக்க அது 10 வயதில் வந்தால் என்ன? 16 வயதில் வந்தால் என்ன? என்று சிறுவர்களின் பால்ய காதலை மிகவும் நேர்மையாக காட்டியிடுக்கிறார். என்னது சின்ன பசங்க படத்தில் காதலா ?? என்று உடனே திட்ட ரெடியாக வேண்டாம், ஒரு மனிதனின் உண்மையான காதலே இங்கு தான் ஆரம்பிக்கும் ஏனென்றால் எந்த தேவையும் எதிர் பார்க்காமல் முக்கியமாக காமத்தை எதிர் பார்க்காத காதல் தான் இது. அவர்களுக்கு இடையே உள்ள வெகுளித்தனமான நட்பை படம் பிடித்து இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.எப்போதும் பெரியவர்களை காட்டிலும் சிறுவர்கள் தான் கேள்வி கேட்பதிலும், பதில் சொல்பதிலும் வல்லவர்கள், அவர்கள் பேசுவது சிறுபிள்ளை தனமாக இருந்தாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்து இருக்கும். "எனக்கு என் பிரண்ட்ஸ்ன ரொம்ப பிடிக்கும், ஆனா என்னால தான் நல்ல பிரண்டா இருக்க முடில", "இதல்லா சின்ன பசங்க விஷயம் உங்களுக்கு தேவையில்லை", "ஆம்பலைங்கனா லைப் பாய் சோப் தான் போடனும்" போன்ற வசனங்கள் எல்லாம் ட்ரைலர் பார்த்து முடித்த பிறகும் நினைவில் நிற்பவை.அருள்தேவ்வின் இசை இப்போதும் மனதை விட்டு நீங்கவில்லை,தயாரிப்பாளர் ஆனதால் படத்திற்கு ஒளிபதிவாளரும் மனோஜ் தான், "நண்பன்" போன்று பெரிய நடிகர்களின் படங்களில் வேலை செய்து விட்டு இதில் இந்த சிறுவர்கள் கதாநாயகனாக நடிக்கும் படத்தில், அதுவும் அழகான கிராமத்தை படத்தில் கொண்டு வந்ததற்கு மனம் திறந்து பாராட்டலாம். கண்டிப்பாக ட்ரைலர் பார்த்த அடுத்த கணமே படத்தை பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு தோன்றும்.இந்த "பூவரசம் பீப்பி" வெள்ளித்திரையில் வெற்றியடைய "சினி உலகம்" சார்பாக வாழ்த்துகள். -




See more at: http://www.cineulagam.com/tamil/reviews-tamil/trailer/100106/#sthash.9AHyF32Y.dpuf