அனைவருமே புறப்படுவோம் அழுகுரலைத் தடுப்பதற்கு !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

 


        இல்லறத்தின் நல்லறமே இனிமையுடன் வாழுவதே

             இல்லறத்தில் பிள்ளைச்செல்வம்  எல்லோர்க்கும் பெருவரமே

       இல்லறத்தில் இணைவார்க்கு பிள்ளையில்லை எனும்பொழுது

              இல்லறமே இணைவார்க்கு இன்பமதை அளிக்காதே !

 

       மணமான மறுவருடம் மழலையினைக் காண்பதுதான்

           மகிழ்ச்சியது உச்சமாய் வையகத்தில் இருக்கிறது

       மழலையது முகம்பார்த்து மனமெல்லாம் நிறைவுபெறும்

             வாழ்வுதனை யாவருமே வாஞ்சையுடன் விரும்புகிறார் !


 

     இனிமையுடை வாத்தியங்கள் இசைகொடுத்து நின்றாலும்

           மழலைமொழி வள்ளுவர்க்கு மாவிசையாய் இருந்ததுவே

     கனிவுநிறை மழலைமொழி காதினிலே நுழைந்துவிடின்

              புவிமீது வேறின்பம் புலனேற்க  மறுத்திடுமே  !

 

    பிள்ளைவரம் வேண்டுமென்று பிராத்தனைகள் பலவாற்றி

            நல்லபடி தானதர்மம் நாளுமே ஆற்றிநின்று

     எல்லரிய விரதமெல்லாம் எப்படியோ கடைப்பிடித்து

           நல்லதொரு பிள்ளைவேண்டி நாளுமே வேண்டிடுவோம் !

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 42 வாழும்போதும் மறைந்த பின்பும் தமிழ் எழுத்தாளருக்கு கிடைக்கும் அங்கீகாரம் ! இனக் கலவரங்கள் கலையும் மேகங்களா…? முருகபூபதி



எமது மரியாதைக்குரிய  மூத்த படைப்பாளி    கி. ரா. அவர்கள் மறைந்திருக்கும்  காலப்பகுதியில் இந்த 42 ஆவது அங்கத்தை எழுதுகின்றேன்.

அவர் வாழும்போதும், மறைந்தபின்னரும் எவ்வாறு கொண்டாடப்பட்டார் என்பதை ஊடகங்கள் மற்றும் காணொளி வாயிலாக பார்த்திருப்பீர்கள்.

கி.ரா. தனக்கு எழுத்துலக அங்கீகாரம் வேண்டி அலைந்தவர் அல்ல.  மக்களின் மொழியில் எழுதி அவர்களின் ஆத்மாவை பிரதிபலித்து அவர்களின் வாழ்வை இலக்கியமாக்கியவர்.  மக்களின் அங்கீகாரம் பெற்ற, கல்லூரிகளில் படிக்காத மேதை.

ஒவ்வொருவரும் தமது பணியிலிருந்து ஓய்வுபெறும் காலம்  60 வயது எனக்கணக்கிட்டாலும்,  கி.ரா. அவர்களை அந்தவயதில்தான் ஒரு பணி, அதுவும் மாணவர்களுக்கு நாட்டார் இலக்கியம் பற்றி விரிவுரையாற்றுமாறு  கோரும் பணி புதுச்சேரி பல்கலைக்கழக நிருவாகத்திடமிருந்து வருகிறது.

அதற்காக அவர் ஆழமாக நேசித்த தனது கரிசல் மண்ணான இடைசெவல் கிராமத்தையும் விட்டு விடைபெற்றார்.  இறுதியில், அவர் மறைந்த பின்னர் அவரது பூதவுடல், அதே இடைசெவலில் தமிழக அரசின் மரியாதையுடன் தகனமாகியிருக்கிறது.

கி.ரா. வாழ்ந்த காலத்தில் அவரைத்தேடிச்சென்று பேசியவர்கள்,  அவரது படைப்புகள் குறித்த வாசிப்பு அனுபவங்களை பதிவேற்றியவர்கள், நேர்காணல் எழுதியவர்கள், அவர் பற்றிய  ஆவணப்படம் எடுத்தவர்கள் பலர்.

கோவிட்-19 - ஒரு தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா - வித்யாசாகர், குவைத்


வ்வொரு விதைக்குள்ளும்
ஒரு காடிருக்கும் என்பார்கள்
ஒவ்வொரு மனிதர்க்குள்ளும்
ஒரு தலைமுறை இருக்கிறது; இங்கே
மடிவது மனிதர்களல்ல இம்மண்ணின் விதைகள்,

கவலை விடு, நம்பிக்கைக் கொள்
பிணங்களுக்கு பூச்செண்டு யென்னும்
அவச்சொல் அழி,
மடிவது அத்தனையுங் குடும்பங்களென்று உணர்;
உயிர்ச்சொல் கொண்டு
நெஞ்சுக்குள் அடைமழையென சூழும்
கண்ணீரை அகற்று, மரணத்தை சபி;

மரபுரிமையா..? மரவுரிமையா..? மாறியது நெஞ்சம்…! மாற்றியது யாரோ….? அவதானி


யாழ்ப்பாணம் மாநகர மேயர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் மேற்கொண்ட முயற்சியால் சில அங்கத்தவர்களைக் கொண்ட  யாழ்ப்பாணம் மரவுரிமை மையம் என்ற அமைப்பு கடந்த வாரம் அமைக்கப்பட்டதாகவும், இதன் தலைவராக வரலாற்றுத்துறை பேராசிரியர் பரமு. புஸ்பரட்ணம் அவர்கள் தெரிவுசெய்


யப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது.

இந்த மையம், யாழ்ப்பாணத்தில் நீண்டநெடுங்காலமாக காணப்படும் மந்திரிமனை, சங்கிலியன் அரண்மனை முகப்பு , யமுனா ஏரி முதலானவற்றை பாதுகாத்து மீள் நிர்மாணம் செய்யும் நோக்குடன் செயல்படவிருப்பதாகவும் அந்தச்செய்தி  மேலும் கூறியிருந்தது.

இந்த அமைப்பின் அங்குரார்ப்பணக்கூட்டத்தின் படமும் வெளியாகியிருந்தது.

இது இவ்விதமிருக்க,  கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர்  மாதமும் மற்றும் ஒரு செய்தி படங்களுடன்  வெளியானதை யாழ். மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்

 “ தமிழ் மக்களின் கலை, கலாசாரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில், வடக்கில் “மரபுரிமை மையம்”  வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  “  என்றும் ஒரு செய்தி ஊடகங்களில்  2018 இல் வெளிவந்தது.

முன்னையது மரபுரிமை மையம், பின்னையது மரவுரிமை மையம்.

ஒரு எழுத்துத்தான் வித்தியாசப்படுகிறது.

முன்னையதை  சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் அங்குரார்ப்பணம் செய்துவைத்தவர் முன்னாள் வடமாகாண முதல்வர் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன்.

பின்னையதை கடந்த வாரம் அங்குரார்ப்பணம் செய்துவைத்திருப்பவர் சமகால யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன்.

"கரிசல் இலக்கியத்தின் தந்தை" கி.ராஜ நாராயணன் (கி.ரா) நினைவேந்தல்

 "கரிசல் இலக்கியத்தின் தந்தை" கி.ராஜ நாராயணன் (கி.ரா) நினைவேந்தல்

ATBC வானொலி மற்றும் வீடியோஸ்பதி காணொளி நேரலையில்
இடம் பெற்ற தொகுப்பைக் காண

உ.வே.சாமிநாத ஐயர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் !

 

 [ விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் உயர்வாய்வு த்துறையும் ( தமிழ்நாடு) - மெல்பேண் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்திய                            இணையவழிக் கருத்தரங்கில் ஆற்றிய உரை ]     

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் .... ஆஸ்திரேலியா  
     


          உ. வே.சா என்றால் - உழைப்பு வேகம் ,சாதனை என்றுதான் எடுத்துக் கொள்ள

வேண்டும். எங்கள் தமிழ் மொழியின் ஏற்றத்தைப்
 பறைசாற்ற இலங்கியங்கள் குவிந் திருக்கின்றன என்று - மேடை களில்  முழங்குகிறோம்.கருத்துக்களாய் கட்டு ரைகளை வரைந்து குவிக்கின்றோம்.பல்கலைக்கழகங்களில் பலவித  ஆரா ய்ச்சிகள் செய்து நூல்களாய் வெளியிடுகின்றோம். இப்படி யெல்லாம் நாங்கள் செய்வதற்கு ஆதாரமாய் ஆணிவேராய் இருப்பவரை நினைத் துப் பார்க்க வேண்டாமா ஆம் .... கட்டாயம் நினைத்துப் பார்க்கவே வேண்டும். அந்தப் பேராளுமைதான் உ.வே.சா என்று அழைக்கபடும் 
தமிழ்த்  தாத்தா டாக்டர்  மகாமகோபாத்தியாய சாமிநாத ஐயர் அவர்கள் ஆவார்

  உ.வே.சா என்னும் மூன்று எழுத்து தமிழ் வரலாற்றில் பதிந்து விட்ட மந்திரச் சொல்லாகும். தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராய்வார்க்கு ஆதார சுருதியாய் அமையும் மூல மந்திரம்  ஆகும். இம்மந்திரத்தை மறந்தால் எங்கள் தமிழன்னை கண்ணீர் வடிப்பாள். எங்கள் தமிழன்னை எங்களைத் தனது பிள்ளைகளென்றே எண்ணமாட்டாள்.

வேதசிவ தமிழ்முருகா விழிகள் திறவாய்!


      


……… பல்வைத்தி
 கலாநிதி பாரதி இளமுருகனார்

 

 

 



தமிழ்மொழியைக் கற்பதனால் பயன்தான் ஏதெனச்

   சரிபாதி கைவிட்டார் அறிந்துகொள் வீரே!

அழுகின்றேன்  மேலுமொரு இருபது வீதம்

   ஆங்கிலத்தைத் தமிழுடனே கலக்கின் றாரே!

நெகிழ்கின்றேன் கொச்சைத்தமிழ் பேசிடும் இவர்கள்

   நிச்சயமாய்த் தமிழ்எழுதி வாசிக்க மாட்டார்!

மகிழ்கின்றேன் முப்பதுசத  வீதப் பிள்ளைகள்

   மனதாரத் தமிழ்தன்னைப் படிக்கின் றாரே!

 

 

இந்தக்கால கட்டத்தில் இந்நிலை என்றால்

   இனிமேலே தமிழின்கதி எந்நிலை அடையும்!

சொந்தபந்த மெலாங்கூடிச் சபத மேற்றுத்

   தூயமொழி கலாசாரம் பண்பை எல்லாம்

சந்ததமும் பேணிடவே புலம்பெயர் தமிழர்

   சரித்திரம்ப டைப்போமெனச் சூழு ரைக்கச்

செந்தமிழை மாந்திமகிழ் செவ்வேள் முருகா

   திருவருளால் எம்மவர் கண் திறந்தி டாயோ?

 

 

அந்தமில்நல் வாழ்வியலை என்றோ உலகில்

   அறிந்துணர்ந்து ஓம்பியவர் தமிழர் அன்றோ?

முந்தையரின் நாகரிகம் எடுத்துக் காட்டாய்

   முடிசூடி நின்றகாலம் மறக்கப் போமோ?

வந்தவிளஞ் சமுதாயம் மறந்திடா(து) ஒம்பி

    வாழ்வதற்கு அறநூல்கள் வகுத்துப்; போந்த

விந்தைமிகு நெறிதொடர அருள்வி ரிக்க

       வெற்றிவேலா யுதனேநீ கடைக்கண் திறவாய்!

 

 

கொரனாவை விட கோரமான பொது மக்கள் மீதான தாக்குதல்

 .



உலகம் முழுவதும் அது இலங்கை இந்தியா என்று பிராணவாயு இல்லை மருந்து இல்லை என்று அவலக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த கொலைத் தாக்குதல் பற்றியும் பேசவேண்டி இருக்கின்றது என்ற மனவருத்தத்துடன் இந்த பதிவை தொடங்குகின்றேன். கூடவே இந்த பதிவிற்காக பயன்படுத்தப்படும் புகைப்படம் கூட எனக்கு கோரத்தின் தீவிரத்தை எடுத்துக் காட்டவே பயன்படுத்துகின்றேன். மற்றயபடி இந்தக் கருவிகள் உள்ள புகைப்பங்களை வெளியிடுவதில் அதிகம் உடன்பாடற்றும் இருக்கின்றேன். இனி விடயத்திற்குள் வருவோம்....
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காஸா பகுதியில் ஆட்சி செய்யும் ஹமாஸ் என்ற அடிப்படைவாத இயக்கம் நடாத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி என்று இஸ்ரேல் நடாத்திய தாக்கும் 140 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீன அப்பாவி மக்களை கொன்றொழித்துள்ளது. மூன்று குடியிருப்புக் கட்டத் தொகுதியை முழுமையாக தரை மட்டமாக்கிய தாக்குதலாக இது இருக்கின்றது.
உலகமே கொரானா என்னும் பேரிடரில் இருந்து மனித குலத்தைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் வேளையில் மக்களின் கவனம் எல்லாம் மருத்துவம்.. சிகிச்சை... வாழ்வாதாரம்... கொரனாத் தாக்குதலால் இறந்தவர்களை அடக்கம் செய்தல் என்று அல்லாடிக் கொண்டிருக்கும் வேளையிலும் இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் ரொம்பவும் வெறுக்கத்தக்கது கண்டனத்திற்குரியது.
மனித உரிமை பற்றி பேசும் பலரும் இது ஹமாஸ் என்ற 'பயங்கரவாத" இயக்கத்திற்கு எதிரான இஸ்ரேலின் 'நியாமான' தாக்குதல் என்று அப்பாவி மக்களின் கொலைகளை கடந்து செல்லும் வருதம் ஏற்படும் செயற்பாட்டை அதிகம் கொண்டிருக்கின்றனர்.
'பலமானவன்" சொல்வதே நியாயம் என்ற அறம் செத்த செயற்பாடாகவே இதனை நாம் பார்க்க முடியும். சில தினங்களுக்கு முன்புதான் இதே பாலஸ்தீன மக்களின் அவலம் பற்றிய ஒரு பதிவை இட்டிருந்தேன் அந்த அலை ஓய முன்பே இந்த மரண ஓலங்கள் ஏற்பட்டிருக்கின்றது. இதில் ஸ்தலத்தில் மரணமானவர்களுக்கு அப்பால் பல நூறு மக்கள் குற்றுயிராக வாழ்க்கை பூராக அங்கவீனர்களாக வாழப்போகும் அவலத்தை மனித குலம் பார்த்துக் கொண்டுதான் இருக்கப் போகின்றதா..?
இத் தாக்குதல் பாலஸ்தீனத்தில் மட்டும் அல்ல ஒட்டு மொத்த மத்தியதரைப் பகுதியிலும் மனித அழிவுகளை ஏற்படுத்தும் செயலாகவே நாம் பார்க்க முடியும். இது நமக்கு வரலாறு கூறி நிற்கும் செய்தியாகவும் இருக்கின்றது.
சற்று இந்த இஸ்ரேல் மத்திய கிழக்கு வரலாற்றையும் பார்ப்போம்....
தனது மூலதனத்தை சுரண்டல் மூலம் பெருக்க உலகம் பூராகவும் யுத்தங்களைச் செய்யும் ஏகாதிபத்திய சிந்தனையின் வெளிப்பாடாக மத்தியதரை பகுதியின் பிரதான வளமான எண்ணை வளங்களை சுரண்டுவதே இதற்கான முக்கிய காரணமாகும் இந்த யுத்தங்கள். இதற்கு மத்தியதரைப் பகுதியில் தமது செல்லப் பிள்ளையாக உருவாக்கி பாலூட்டி தாலாட்டி வளர்க்கப்பட்டதே சியோனிசம் என்ற இஸ்ரேல் ஆளும் வர்க்கமும் அது கையாளும் அணுகுமறையுயாகும்.

தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நாள்- மெல்பேர்ன், ஒஸ்ரேலியா- மே 18- 2021


முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலையின் 12-வது ஆண்டு நினைவேந்தலும் தமிழர் இனவழிப்பு நினைவுநாளும் 18-05-2021 செவ்வாய்க்கிழமையன்று ஒஸ்ரேலியா மெல்பேர்ண்நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

வன்ரெனா கங்கேரியன் சமூகநிலையமண்டபத்தில்


மாலை 6.30 மணிக்கு தமிழ்த் தேசியச்செயற்பாட்டாளர் செல்வன் பவித்திரன் சிவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வில் காலத்திற்குக்காலம் சிங்களப்பேரினவாதப்படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்கள் நினைவாக முதன்மைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. இந்த முதன்மைச்சுடரினை முள்ளிவாய்க்கால் பேரவலங்களை சந்தித்து மீண்டுவந்த செல்வி தமிழினி தவச்செல்வம் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத்தொடர்ந்து ஒஸ்ரேலியத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் திரு மேஷ் பாலாகிருஷ்ணர் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர் திரு தயாபரன் மகாலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்களப்படைகளின் மிலேச்சத்தனமான தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக வடிவமைக்கப்பட்ட நினைவுப்பீடத்திற்கு முள்ளிவாய்க்கால் பேரவலத்திலிருந்து மீண்டுவந்த மற்றுமொரு சகோதரி செல்வி காவேரி ஜெயக்குமார் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து பொதுமக்களும் நினைவுப்பீடத்திற்கு உணர்வுபூர்வமாக மலர்வணக்கம்செலுத்தினார்கள். தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.

இலங்கைச் செய்திகள்

யுத்தத்தின்போது பொதுமக்களும் இறந்ததை மறக்கலாகாது

துறைமுக நகரத் திட்டத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு

துறைமுக நகர சட்டமூலம் திருத்தங்களுடன் 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

காரைதீவில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு

தேசிய படைவீரர் 12 ஆவது ஞாபகார்த்த தினம் அனுஷ்டிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித், மனைவி ஜலனிக்கு கொரோனா தொற்று உறுதி





யுத்தத்தின்போது பொதுமக்களும் இறந்ததை மறக்கலாகாது

பாராளுமன்ற உரையில் சுமந்திரன் MP

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது பொதுமக்களும் இறந்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மற்றும் படையினர் இறந்ததை நினைவுபடுத்தியிருந்தார்.

சிட்னி துர்க்கா தேவஸ்தானத்தில் நடாத்தப்படவுள்ள திருமுறை பாராயணம் - 29/05/2021

 


இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ( 1988 – 2021 ) ஆண்டுப்பொதுக்கூட்டம்



அவுஸ்திரேலியாவிலிருந்து 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வருடாந்த ஆண்டுப்பொதுக்கூட்டம், சமகால இடைவெளிபேணல் நடைமுறைக்கு அமைவாக அண்மையில் இணைய வழி காணொளியூடாக நடைபெற்றது.

நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதி வரவேற்புரை நிகழ்த்துகையில் கடந்த வருடமும் இந்த வருடமும் மறைந்த நிதியத்தின் உறுப்பினர்கள் கலைவளன் சிசு. நாகேந்திரன், மற்றும் திருமதி சுகந்தி சஞ்சீவன் ஆகியோர் குறித்து நினைவுபடுத்திப் பேசினார்.

உலகச் செய்திகள்

 பைடனின் போர் நிறுத்த அழைப்புக்கு இடையே தொடர்ந்து உக்கிர தாக்குதல்

பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகெங்கும் பாரிய பேரணி

இஸ்ரேலின் காசா மீதான உக்கிர தாக்குதல் நீடிப்பு; பலி எண்ணிக்கை 200ஐ நெருங்கியது

போர் நிறுத்தத்திற்கான சமிக்ஞை இன்றி தொடர்ந்து உக்கிர மோதல்

போர் நிறுத்த எதிர்பார்ப்பு அதிகரிப்பு; மோதல் தணிவின்றி தொடர்ந்து நீடிப்பு

இஸ்ரேல் மற்றும் காசாவில் போர் நிறுத்தம் அமுல்: பலஸ்தீனர் வெற்றி கொண்டாட்டம்


பைடனின் போர் நிறுத்த அழைப்புக்கு இடையே தொடர்ந்து உக்கிர தாக்குதல்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையிலும் காசா மீது இஸ்ரேல் நேற்றும் உக்கிர வான் தாக்குதல்களை தொடர்ந்தது.

கடந்த மே மாதம் மோதல் வெடித்தது தொடக்கம் மூன்றாவது முறையாக கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்த பைடன், போர் நிறுத்தம் ஒன்றுக்கான தமது ஆதரவை வெளியிட்டுள்ளார். எனினும் வன்முறைகளை நிறுத்துவதற்கான கோரிக்கையை விடுக்க பைடன் தவறியுள்ளார்.

சிலையாகும் சரித்திரங்கள் : வீரபாண்டிய கட்டபொம்மன் – சிவாஜி – கி.ரா. முருகபூபதி



ள்ளுவர், கம்பன்,  இளங்கோ, பாரதி  முதலான  முன்னோடிகளை  நாம்   நேரில்  பார்க்காமல்  இவர்கள்தான் அவர்கள்     என்று     ஓவியங்கள்     உருவப்படங்கள்   சிலைகள்  மூலம்  தெரிந்துகொள்கின்றோம்.

 

இவர்களில்    பாரதியின்     ஒரிஜினல்   படத்தை  நம்மில்   பலர்     பார்த்திருந்தாலும்      கறுப்புக்     கோர்ட்     வெள்ளை தலைப்பாகை    தீட்சண்யமான   கண்களுடன் பரவலான    அறிமுகம்    பெற்ற  படத்தைத்தான் பார்த்துவருகின்றோம்.

 

அந்த  வரிசையில்   வீரபாண்டிய கட்டபொம்மனை  நடிகர் திலகம்  சிவாஜிகணேசனின்   உருவத்தில்   திரைப்படத்தில்      பார்த்து,  அவரது    சிம்ம கர்ஜனையை     கேட்டு  வியந்தோம்.

 

 பிரிட்டிஷாரின்   கிழக்கிந்தியக்கம்பனியை எதிர்த்து   அஞ்சாநெஞ்சனாகத் திகழ்ந்து  இறுதியில் தூக்கில் தொங்கவிடப்பட்ட வீரபாண்டிய    கட்டபொம்மன்  மடிந்த  மண்   கயத்தாறை கடந்து  1984  இல் திருநெல்வேலிக்குச்  சென்றேன்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் (SVT) - வைகாசி விசாகம் & சத்ரு சம்ஹாரா திரிசாதி ஹோமம் செவ்வாய் 25 மே 2021

 

வடிவம் மற்றும் உருவமற்ற தன்மையுடன், ஒரு ஆரம்பம் இல்லாமல், ஒன்று மற்றும் பல ஒளியின் நெடுவரிசையாக நின்றபோது, ​​ஆறு இரக்கமுள்ள முகங்களையும், பன்னிரண்டு கரங்களையும் கொண்ட, உலக மீட்பிற்காக முருகராக தெய்வீக அவதாரத்திற்கு வந்த உச்ச பிரம்மம். முருக பகவான் மிக உயர்ந்த தெய்வீக அவதாரம் தமிழ் மாதமான வைகாசி (மே நடுப்பகுதி - ஜூன் நடுப்பகுதி) நாளில் ஆஸ்டிரிஸம் அல்லது நக்ஷத்திர `விஷாகா'வில் நடந்தது. புனிதமான “விசாக நக்ஷத்ரா” என்பது வானத்தில் பிரகாசமாக பிரகாசிக்கும் மூன்று நட்சத்திரங்களின் கலவையாகும். இந்த நாளில்தான் முருக பகவான் இருண்ட சக்திகளை அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் உயர்ந்த பாதுகாப்பையும் ஞானத்தையும் வழங்கவும் வெளிப்பட்டார். 

SVT யில் “வைகாசி விசாகம்” திருவிழா 25 மே 2021 அன்று கொண்டாடப்படுகிறது. 
திட்டம்: முருக பகவனுக்காக சத்ரு சம்ஹார திரிசாதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபரதானா. 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் (SVT)

 ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி செவ்வாய் 25 மே 2021

விஷ்ணு, இந்த பூமியில் தீமையின் ஆட்சியை நிறுத்தவும், எல்லா இடங்களிலும் அமைதியையும் செழிப்பையும் கொண்டுவர பத்து அவதாரங்களை எடுத்ததாக அறியப்படுகிறது. நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காவது அவதாரமாகக் கருதப்படுகிறது, மேலும் அவர் தனது தீவிர பக்தரான பிரஹலாத் மற்றும் மனிதகுலத்தை தீமைகளின் பிடியிலிருந்து பாதுகாக்க ஹிரண்ய காஷிபு வடிவத்தில் அரை மனிதர் அரை சிங்கத்தின் வடிவத்தை எடுத்திருந்தார். ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி மே 25 செவ்வாய்க்கிழமை SVT யில் கொண்டாடப்படுகிறது. காலை 10.00 மணிக்கு அபிஷேகம் நிகழ்த்தப்படும், அதனைத் தொடர்ந்து லங்காரம், மகா தீபரதானை.

அபிஷேகம் - $ 101 
அர்ச்சனா - $ 20 
ஸ்ரீ நரசிம்மருக்கு மாலை - $ 82.50 
ஓம் ஸ்ரீ நரசிம்மய நமஹா !! 
ஓம் ஸ்ரீ பகவத்தே வாசுதேவய நமஹா !!!


https://www.svtsydney.org



பேர்த் பாலமுருகன் கோயில் வைகாசி விசாகம் விசேஷ தேர்த்திருவிழா 25/05/2021




 


சமூக ஊடகங்களின் வளர்ச்சி - யாழவன் தமிழ்ச்செல்வன்

  ஊடகங்கள் என்றால் என்ன? தகவல்களைப்  பரிமாற உதவும் சாதனங்களே ஊடங்கங்களாகும். தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருக்கின்ற எம் நாட்டில், சமூக ஊடகங்கள் என்பவை செய்திகளைப் பரிமாறுவதில்  பெரிய பங்கினை  வகிக்கின்றன. முற்காலத்திலே ஓலையிலும், துணியிலும் எழுதி, தூதுவர்கள் பறவைகள் மூலம் செய்திப் பற்றிமாற்றங்களை மேற்கொண்டனர். இன்று நவீன ஊடகங்கள் மூலம் ஒரு கணப்பொழுத்தில் உலகத்தின் மூலைமுடுக்குகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும்  தகவல்கள் சென்றடைகின்றன. இவ்வூடகங்கள் வழியாக  கல்வி,கலை, கலாசாரம், விஞ்ஞானம், விளையாட்டு, அரசியல் தொடர்பான செய்திகளையும், அறிவித்தல்களையும் மக்களால்  அறிந்து கொள்ள முடிகின்றது. மனித தகவல் தொடர்பு  பண்டைய காலங்களில் குகை, ஓவியங்கள்வரைபடங்கள், மற்றும் கல்வெட்டுகள்  மூலம் இடம் பெற்று வந்தன.