தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

கவி கண்ணதாசன் கடவுளின் வரமே !












மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா     



நீறுடை நெற்றி குங்குமப் பொட்டு 
உருத்திராட்ச மாலை உய்ர்ந்திடு தோற்றம்
நல்ல நிறமும் களையான முகமும்
நாட்டுக் கோட்டை நமக்கீந்த கொடையே 

ஆத்தீகம் அகத்தில் நிறைந்தே இருந்தது
அனைத்தும் கடவுளே அவரது நினைப்பே
எழுதிக் குவிக்க எண்ணம் எழுந்தது
ஏறினார் வண்டி சென்னையை நோக்கி 

அறிமுகம் இல்லா நிலையில் வந்தார்
ஆண்டவன் கருணையை நம்பியே நின்றார்
எழுதும் வாய்ப்பு இறையால் விளைந்தது
எழுதினார் எழுதினார் எழுதிக் குவித்தார்

செல்வ மகளும் சிதறிய கனவும்:


-சங்கர சுப்பிரமணியன்


 




அம்மாவின் சாயலிலே அப்படியே என்மகள்

இருப்பதாக

அக்கம் பக்கத்தில் ஆசையாய் பலரும்

சொன்னபோது

அள்ளி எடுத்தவளை அன்புடனே நான் 

உச்சி முகர்ந்தேன்

 

வெண்ணிலா வேண்டி அவள் விரும்பியே 

அழுதபோது

ண்ணீரில் பிம்பம் காட்டி கண்ணீரை நான்துடைத்தேன்

யானை மீது அம்பாரி போக அவள் ஆசைப்பட்டதுமே

நான் ஆனேன் யானையாக என் முதுகில் 

அவள் இருக்க

 

பட்டுச் சொக்காய் பாவடையில் பதவிசாய் நின்றவளும்

சட்டெனவே வளர்ந்தின்று தாவணியும்

அணிந்து நின்றாள்

தாண்டித் தாண்டியே பாண்டி விளையாடி 

வந்தவளும்

வேண்டாம் அதுவென்றே பல்லாங்க்குழி 

முன்னமர்ந்தாள்

பார்த்தேன்! இரசித்தேன்! பகிர்கிறேன்! - ---யசோதா தமிழ் வளர்த்த சான்றோர் விழா வர்ணனை தொடர்ச்சி

















சிவத்திரு நவநீத கிருஸ்ணபாரதியார்

விழா நாயகனான நவநீத கிருஸ்ணபாரதி அவர்களைப்பற்றிச் சிறப்புரை   ஆற்றுவதற்குத் திருமதி கலையரசி சின்னையா அவர்கள் மேடைக்கு அழைக்கப்பெற்றார்.

 



                     









திருமதி கலையரசி சின்னையா

"யாழ். சர்வகலாசாலையிலே சிரேட்ட விரிவுரையாளராகப் பணிபுரிந்து இளைப்பாறியவர் இவர். தனது பேச்சுத் திறனால் தமிழர்களிடையே ஒரு தனி இடத்தைப் பெற்று விளங்கிய இவர் வித்துவான் வேந்தனார் அவர்களின் மகளாவார்"  என்று விழாவின் தொகுப்பாளர் திருமதி சரோஜாதேவி அறிமுகப்படுத்தனார்.

கலங்கரை விளக்கம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 1965ம் ஆண்டு வெளிவந்த படங்களுள் ஏழு படங்கள் ஆள்


மாறாட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவான கதைக் களத்தைக் கொண்டிருந்தன. எங்க வீட்டுப் பிள்ளை, பஞ்சவர்ணக் கிளி, ஆசைமுகம், சாந்தி, இதயக் கமலம், நீ, என்ற வரிசையில் உருவான மற்றுமொரு படம்தான் கலங்கரை விளக்கம். 



இந்த மாதிரியான கதை என்றால் அதில் எம் ஜி ஆர் தான் இரட்டை

வேடத்தில் வருவார். ஆனால் இம்முறை அந்த வாய்ப்பு படத்தின் கதாநாயகி சரோஜாதேவிக்கு வழங்கப்பட்டது. இப்படி இரு வேடங்களில் நடிப்பதற்கு அவருக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் இரண்டரை இலட்சம் ரூபாய். அறுபது ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப் பட்ட இந்த ரேட் சரோஜாதேவிக்கு அன்று இருந்த மவுசை வெளிப்படுத்தியது. 


எம் ஜி ஆர் நடிப்பில் படகோட்டி படத்தை கலரில் எடுத்து விட்டு , இந்தப் படத்தை கறுப்பு வெள்ளையில் எடுத்தார் தயாரிப்பாளர் ஜி .என் . வேலுமணி. படத்தின் கதையை எழுதும் பொறுப்பு கதாசிரியர் மா . லட்சுமணனிடம் விடப்பட்டது. 1958ம் வருடம் ஆல்ப்ரெட் ஹிட்ச்கொக் ஆங்கிலத்தில் இயக்கிய வெர்டிகோ என்ற மர்மப் படத்தின் கதைக் கருவை எடுத்து தமிழ் படுத்தியிருந்தார் லட்சுமணன் . சும்மா சொல்லக் கூடாது , ஹிட்ச்கோக்கே கலங்கரை விளக்கத்தை பார்த்தால் கூட இது ஆங்கிலத்தில் தான் இயக்கிய படம் என்று நம்பியிருக்க மாட்டார். 


ஆறு பாடல்கள், மூன்று சண்டை காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் , சிவகாமியின் சபதம் நாவலின் இடைச் செருகல் இவை எல்லாம் வேர்ட்டிகோவில் இருந்தனவா என்ன! வேர்டிகோ என்றால் தலை சுற்றல் என்று அர்த்தம். தமிழ் படத்தை பார்த்திருந்தால் ஹிட்ச்க்கொக்கிற்கு அதுதான் ஏற்பட்டிருக்கும்!

இலக்கியவெளியின் நீலாவணன் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு

  https://youtu.be/wHw95C7WvmI?si=tzSMGfX_6tg1Bqo6




சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

28-06- 2025  Sat:  ETA presents Charity Night 2025 - Dinner Dance - Roselea Community Centre, Carlingford

13-07-2025 Sun: Laughing Go Laughing - comedy drama - Bryan Brown Theatre, cnr of Chapel and Rickard Roads, 80 Rickard Road, Bankstown NSW 2200 at 6 PM.

27-09- 2025  Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'

ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைதல்: உலகப் பொருளாதார தாக்கங்கள் மற்றும் இலங்கையின் வணிக எதிர்நோக்குகள்

 Published By: Digital Desk 2

22 Jun, 2025 | 11:55 AM

ஏ.ஜி. எஸ் சுவாமிநாதன் சர்மா
பட்டயக் கணக்காளர்
வரி, முகாமைத்துவ ஆலோசகர்

மத்திய கிழக்கு பெரும்பாலும் பதற்றமுள்ள பகுதியில் ஒன்றாகவே இருந்துள்ளது. சமீபத்தில் தீவிரமடைந்த ஈரான் –இஸ்ரேல் போரின் நிலை அந்தப் பதற்றத்தை மீறி ஒரு புதிய ஆபத்தான கட்டத்திற்குள் நம்மை இழுத்து செல்கின்றது. இஸ்ரேல் மீது மேற்கொண்ட வரலாற்றிலேயான நேரடி இயங்குதிரைகள் மற்றும் அதற்கான பதிலடி தாக்குதல்களின் பின்னணியில் இப்போர் நிலைமை வெறும் இடைக்கால முரண்பாட்டைவிட அதிக ஆபத்தானதாக மாறியுள்ளது. மனிதாபிமான பாதிப்புகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இதன் பொருளாதார தாக்கங்களும் கடுமையானவையே. குறிப்பாக, எரிபொருள் இறக்குமதியையே சார்ந்து இயங்கும் இலங்கை போன்ற நாடுகளுக்கு இது ஒரு மிகப்பெரிய சவாலாகும்.

போரின் தொடக்கக் காரணங்கள் என்ன?

2024 ஏப்ரலில், இஸ்ரேல் சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்தை விமான தாக்குதலின் மூலம் குறிவைத்தது. இதில் ஐ.ஆர்.ஜி.சி.யின் உயர் அதிகாரிகள் பலியாகினர். இதைத் தொடர்ந்து ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது 300  இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அனுப்பி தாக்கியது. பெரும்பாலான தாக்குதல்கள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் தடுக்கப்பட்டன. இருப்பினும், ஈரான் இப்போது நேரடியாக தலையீடு செய்யத் தயார் எனும் செய்தியை இது வெளிப்படையாகக் கூறியது.

இந்த தாக்குதலுக்குப் பதிலாக இஸ்ரேல், ஈரானின் விமானப்படைத் தளங்கள் மற்றும் உள்நாட்டு இராணுவ வசதிகளை குறிவைத்து தாக்கியது. இந்நிலையில் சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து போன்ற நாடுகள் அருகில் கண்காணிக்கின்றன. அமெரிக்கா, இதற்கிடையில் பாரசீக வளைகுடாவில் தனது இராணுவத்தை அதிகரித்துள்ளது.

உடனடி பொருளாதார தாக்கங்கள்

இலங்கைச் செய்திகள்

புதைக்கப்பட்ட எம்மவர் உயிருக்கு நீதிவேண்டும்-செம்மணியில் போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழில் போராட்டம் முன்னெடுப்பு

பல அரசியல்வாதிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் குறித்த விசாரணை

மலையக மக்கள் சிறுபான்மையினமா? தேசிய இனமா? இந்திய வம்சாவழியா? மலையகத் தமிழரா? ; யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேள்வி    

யாழில் போதைப்பொருளுடன் கணவர் கைது ; மனைவி தலைமறைவு

மலையக மக்களுக்கான காணி உரிமை கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்


புதைக்கப்பட்ட எம்மவர் உயிருக்கு நீதிவேண்டும்-செம்மணியில் போராட்டம் 

Published By: Digital Desk 2

20 Jun, 2025 | 08:04 PM

யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, “புதைக்கப்பட்ட எம்மவர் உயிருக்கு நீதி வேண்டும்” என்ற கோசத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு பகிரங்கமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்தக் கோரிக்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு மற்றும் பல சமூக அமைப்புகள், உரிமைப் பாதுகாப்பாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பெண்கள் குழுக்கள், மீனவர் சங்கங்கள், விவசாய அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்களால் வெள்ளிக்கிழமை (20) முன்வைக்கப்பட்டது.

உலகச் செய்திகள்

 அமெரிக்கா அணுஉலைகளை தாக்கியுள்ளது - ஈரானின் பிராந்திய அதிகாரிகள்

அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் - தலைநகரில் பல கட்டிடங்கள் சேதம்

சமாதானத்திற்கு வராவிட்டால் - எதிர்காலத்தில் மேலும் பல தாக்குதல்கள் - பல இலக்குகள் உள்ளன – டிரம்ப்

அரச பயங்கரவாதம் - இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து வடகொரியா சீற்றம்

காசாவில் உணவு வாகனங்களிற்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் டாங்கிதாக்குதல் - 45 பேர் பலி



அமெரிக்கா அணுஉலைகளை தாக்கியுள்ளது - ஈரானின் பிராந்திய அதிகாரிகள்

22 Jun, 2025 | 07:26 AM

அமெரிக்கா மூன்று அணுஉலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதை ஈரானின் பிராந்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இஸ்பஹான் நட்டன்ஸ் போர்டோ அணுஉலைகள் தாக்கப்பட்டிருக்கலாம் என பிராந்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

சில மணி நேரங்களுக்கு முன்பு கோம் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டு விரோத இலக்குகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து ஃபோர்டோ அணுசக்தி தளத்தின் ஒரு பகுதி எதிரி விமானப்படைகளால் தாக்கப்பட்டது ”என்று கோம் பிராந்தியத்தின் நெருக்கடி மேலாண்மை மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக  ஃபார்ஸ் மற்றும் ஐஆர்என்ஏ செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன

சிந்தனை அரங்கத்தில் சிறப்புரை

 


எதிர்வரும் 24.06.2025, இலங்கை நேரம் பி.ப. 3.00 மணிக்கு (அவுஸ்திரேலிய நேரம் : பி.ப.7.30) "திருக்குறள் காட்டும் காதலர் பார்வை" என்ற தலைப்பில் மெய்நிகர் நிகழ்வில்,  இடம்பெறவுள்ளது. 

மேலதிக விபரங்கள் கீழேயுள்ள பிரசுரத்தில் உள்ளன. 



ஆஷாட நவராத்திரி விழா: வியாழக்கிழமை 26 ஜூன் 2025 முதல் வெள்ளிக்கிழமை 4 ஜூலை 2025 வரை சண்டி ஹோமம்: ஞாயிற்றுக்கிழமை 29 ஜூன் 2025

 


சிட்னி துர்கா தேவி தேவஸ்தானத்தில்

வியாழக்கிழமை 26 ஜூன் 2025 முதல் வெள்ளிக்கிழமை 4 ஜூலை 2025 வரை நடைபெறும் சிறப்பு 9 நாள் ஆஷாட நவராத்திரி விழாவிற்கு
அனைத்து பக்தர்களும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்,
துர்கா தேவியின் அருள் மற்றும் ஆசிகளைப் பெறும் அரிய வாய்ப்பாக.

ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை
சிறப்பு மகா சண்டி ஹோமம் நடைபெறும்.

அன்னை துர்கையின் அருளைப் பெறும் பொருட்டு மகா சண்டி யாகத்தில் கலந்து கொள்ள
ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தானம் உங்களை அன்புடன் அழைக்கிறது.


தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக, வராஹி அம்மன் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய மங்களகரமான தேதி நிர்ணயிக்கப்பட்டவுடன்,  உங்களுக்குத் தெரிவிக்கப்படும்

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 51 “நூல்களைப் பேசுவோம்”


நாள்:
         சனிக்கிழமை 28-06-2025       

நேரம்:     

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30      

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

வழி:  ZOOM

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

நூல்களைப் பேசுவோம்:

இரா. வீரமணியின் “வாழ்க்கை எனும் மொழி விளையாட்டு” (தமிழில்  நவீனத்  திறனாய்வுக்  கோட்பாட்டு  வாசிப்பு”

(ஈதக) தொண்டு இரவு விருந்து நடனம் 28/06/2025

 


ஸ்ரீ மாணிக்கவாசகர் குரு பூஜை 29/06/2025


 



Laughing கோ Laughing 13/07/2025

 


சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி 27/09/2025