பணக்கார சுவாமி ஸ்ரீ பத்மநாபசுவாமி! - டாக்டர் எஸ். பத்மநாபன்


.


திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதிதான் உலகில் பணத்திற்கு அதிபதியாக இதுவரை கருதப்பட்டுவந்தார். ஆனால் அண்மையில் திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளைத் திறந்து அவற்றில் உள்ள பொருட்களைக் கணக்கெடுத்து பட்டியலிடுவதற்காக உச்ச நீதிமன்றம் நியமித்த ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்தது. அந்தக் குழுவின் கணக்குப்படி அந்த பாதாள அறைகளில் கிட்டத்தட்ட 2 லட்சம் கோடிக்கும் அதிகமான பொற்குவியல்களும் நவரத்தினங்களும் கிடைத்துள்ளன.
அதனால் திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதியை பணத்தில் மிஞ்சிவிட்டார்
திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி.

தமிழ் முரசு வாசகர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

.
தமிழ் முரசு வாசகர்களுக்கு ஆசிரியர் குழுவின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 26.10.2011


 

உன்னைத்தவிர....... சுஜா தாமு




எப்போதும் அமைதியான எனது விழிகள் 

உன்னைக் கண்டதும் பரபரப்பதை கண்டு 
உன்மேல் எனது பிரியத்தை புரிந்து கொண்டாள் அம்மா........
யாருக்காகவும் காத்திராத என் கால்கள் 
உன்னைக் காணவே கால்கடுக்க காத்திருப்பதை கண்டு 
உன்மேல் நான் கொண்ட நேசத்தை தெரிந்து கொண்டார் அப்பா....


ஏக்கம் கொண்ட மனதின் துயரையும் 
தூக்கமில்லா பொழுதுகளையும் கண்டதால்
உனக்கான என் அன்பினை புரிந்து கொண்டாள் அக்கா.....

Laughing' கோ Laughing 5 - 2011



எல்லாம் துறந்தவர்!‏ - படித்து சுவைத்தது



.
அந்த ஊருக்கு அருகாமையில் ஒரு துறவி வசித்து வந்தார்.
அவரது ஆன்மீகப் பணி  அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வண்ணம் இருந்தது. 
அவரது அறிவுரைகளை பெற மக்களின் கூட்டம் வந்தவண்ணமே இருந்தது. எல்லா மதத்தினரும் அவரது ஏற்று நடந்தனர்.
அதனால் அவரது புகழ் நாளுக்கு நாள் பெருகியது.
அதே ஊரில் ஒரு நாத்திகர் இருந்தார். அவரது கொள்கைப்படி துறவி ஒரு ஏமாற்றுக்கார வித்தகராகவே தெரிந்தார்.
துறவி ஒரு ஏமாற்றுப் பேர்வழியென்று அனைவருக்கும் தெரிவிக்கும் முயற்சியில் இறங்கினார்.
ஒரு நாள், துறவியை சந்திக்க காத்திருந்த பெரும் கூட்டத்தில் நாத்திகரும் அமர்ந்துகொண்டார்.
எல்லோருக்கும் கேட்கும் வண்ணம் துறவியிடம்,
ஐயா, இந்த ஊரில் தாங்கள் ஒருவர்தான் முற்றும் துறந்த  துறவி, ஞாநி என்று எல்லோரும் 
கூறுவது உண்மையா என்றார்.

வெள்ளைக்கொடி சம்பவத்தை ஒத்ததே கடாபியின் கொலை


  லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபியின் கொலைக்கும் இலங்கையின் வெள்ளைக்கொடி சம்பவத்துக்கும் ஒற்றுமைகள் தென்படுவதாக நியூயோர்க்கைத் தலைமையகமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேற்படி கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தி யத்துக்கான பணிப்பாளர் பிறட் அடம்ஸ் தெரிவித்திருப்பதாவது,

சிர்தே நகரில் கேர்ணல் கடாபி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் புரட்சிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

மாப்புக் குடுக்கோணுஞ் சாமீ... சிறுகதை


.
பெருமாள்முருகன்
ஊர் முழுக்கச் சாக்குருவியின் ஓலம். ஒரு மாதத்திற்குள் இது ஆறாவது சாவு. பெரியகாட்டுச் சொங்காக் கவுண்டர் கட்டுத்தரையில் தொடங்கி ஒவ்வொன்றாகப் பரவி மணக்காட்டு ராமசாமிக் கவுண்டர் காடுவரை வந்துவிட்டது. அரக்கத் தவளையின் தாவல்போலச் சாக்காடு. ராமசாமிக் கவுண்டர் பெண்டாட்டி பாவாயி வைத்த ஒப்பாரி இருளைக் கிழித்துக்கொண்டு போயிற்று. துக்கம் ஒவ்வொரு வீட்டுக் கதவின் முன்னும் நாயாய் முடங்கிப் படுத்துக்கொண்டு ஊளையிட்டது. சாக்காட்டின் அடுத்த தாவல் தம் வீட்டுக்குள்ளாக இருக்குமோ என்னும் கலக்கம் எல்லாரிடத்திலும் இருந்தது. பொழுது சாய்ந்த வேளையில் நடந்ததால் ஒரு எட்டில் போய் விசாரித்துவிட்டு வரலாம் என்று அந்த முன்னிரவிலேயே கையில் லாந்தரை எடுத்துக்கொண்டு போனார்கள். பாவாயியின் விரிந்த தலையும் அழுத கண்களும் அரற்றும் வாயும் யாரையும் கலங்கச்செய்துவிடும். இடையிடையே மாரில் படார்படாரென்று அடித்துக்கொண்டு கீழே புரண்டு கதறினாள்.
கன்று ஈனி ஒரு மாதம்தானிருக்கும். காளைக்கன்று என்பதால் வயிறு முட்டப் பால் குடிக்கவிட்டு வளர்த்தார்கள். வேலைக்குத் தோதாக இந்தக் கன்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். சுழி சுத்தம். இன்னும் தலைகுனிந்து ஒரு புல்லைக் கடித்துப் பார்க்கவில்லை கன்று. பால் குடிக்கும் தினவில் மண்ணை ருசிக்க ஆரம்பித்துவிட்டது. மண் தின்னவிடாமல் வாய்க்கூடை போட்டுக் காடு முழுக்கக் குதித் தோடவிட்டிருந்தார்கள். பொழுது கிளம்பும் வேளையில் எகிறித் துள்ளி ஓடும் அதன் ஆர்ப்பாட்டம் தாங்க முடியவில்லை. துள்ளிக் குதித்தால் தான் கால் வலுவாகும். ‘கன்னுக்குட்டியா குதிரயா இது? இப்பிடிப் புழுதி கௌப்புது’ என்று கேட்டவர்களிடம் ‘ஏப்ப சாப்பயாவா எங்கன்னுக்குட்டிய வளப்பன்?’ என்றார் கவுண்டர். இப்போது அது தாயைத் தேடி வர்வர்ரென்று கத்தியவண்ணம் இருந்தது. கன்றுக்குப் போக இரண்டு நேரமும் மூன்று நான்கு படி பால் பீச்சலாம்.

காட்டூன் கதா பாத்திரமாய்.....

Special OFFER

சர்வாதிகாரி கடாபி வீழ்ந்தார் (பட இணைப்பு)

 _

20/10/2011

இளம் வயதிலேயே பல வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் வகையில் தனக்கு இணையான தலைவர் எவரும் இருக்க முடியாது. எவ்வாறான வல்லரசுகள் வந்தாலும் அதற்கு இணையாக எனது நாட்டை வழி நடத்திச் செல்வேன் என்ற மன உறுதியுடன் நான்கு தசாப்த காலமாக லிபியாவை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த சர்வாதிகாரி முவம்மர் கடாபி மட்டுமா? அவரது இராச்சியமும் இன்றுடன் வீழ்ந்தது. பயம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்வென்று தெரியாமல் பல நாடுகளை கதிகலங்க வைக்கும் வகையில் தனது நாட்டு மக்களை தன் பிடியில் வைத்து ஆட்சி நடத்தி வந்த கடாபியின் வரலாற்றை சற்று பின்நோக்குவோம்...

உலகச் செய்திகள்

நேபாளத்தில் மலைப்பாதையிலிருந்து ஆற்றுக்குள் பாய்ந்து பஸ் விபத்து -41 பேர் பலி; 16 பேர் காயம்

யேமன் தலைநகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு:12 பேர் பலி

மத்திய அமெரிக்காவில் வெள்ளம்: மண்சரிவுகளில் சிக்கி 80 பேர் பலி

சோமாலிய தலைநகரில் கார் குண்டு தாக்குதல்

பாகிஸ்தான்ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமெரிக்கப் படைகள் குவிப்பு

கவனயீர்ப்பு நிகழ்வு பற்றிய அறிவித்தல்


.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தில் ,  இம்மாத இறுதியில் பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரில் பங்குகொள்வதற்காக அதன் அங்கத்துவ நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்குகொள்ளவுள்ளனர்.
நாடுகள் , அமைப்புக்கள் , நிறுவனங்களுக்கு இடையிலான சனநாயக விழுமியங்களைப்  பேணிப்   பாதுகாப்பதற்காக , நிறுவப்பட்ட பொதுநலவாய நாடுகளுக்கான இக்கூட்டத்தொடர், எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதிவரை முக்கியமான அமர்வுகளைக் கொண்டிருக்கின்றது.
இக் கூட்டத்தொடரில் சிறிலங்காவின் அதிபர்  மகிந்த ராஜபக்சவும் கலந்து  கொள்ளவுள்ளார். சனநாயகப் பண்பாடுகளை பேணிப்  பாதுகாப்பதற்காக நடைபெறவுள்ள  இக்கூட்டத்தொடரில்,  பாரிய போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்ப ட்டுள்ள ஒரு நாட்டின் அதிபர் பங்குகொள்வது பொதுநலவாயக்  கட்டமைப்பையே அவமதிப்பதாகும்.
சனநாயகப் பண்புகள் மீறப்படுகின்றபோது குற்றம் சாட்டப்ப ட்டுள்ள நாடுகளைப்  பொதுநலவாயக்  கட்டமைப்பிலிருந்து விலக்குவதே , கடந்த காலங்களில் பொதுநலவாயநாடுகளின் தலைவர்கள் எடுத்துவரும் தீர்மானங்களாக இருந்து  வந்திருக்கின்றன. தென்ஆபிரிக்கா , சிம்பாவே , பிஜி என இதற்குப்  பல உதாரணங்கள் உண்டு.

Her Majesty after touching down in Canberra.

Queen Elizabeth

புண்ணிய பூமி புட்டபர்த்தி


.

புட்டபர்த்தி, பிரசாந்தி நிலையம்

உலகெங்கிலும் பரவியுள்ள கோடிக்கணக்கான சாய் பாபா பக்தர்களின் புண்ணிய பூமியாக விளங்கும் புட்டபர்த்தி, 1926-ல் பகவான் சத்ய சாய் பாபா அவதரித்தபோது மிகச் சிறிய, யாரும் அறியாத கிராமமாக விளங்கியது.

சாய் பாபாவின் அவதார பூமியாகையால் இன்று உலகப் புகழ் பெற்று விளங்குகிறது.

ஆந்திர மாநிலம், அனந்தப்பூர் நகரத்திலிருந்து 97 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த கிராமம்.

யாழ்ப்பாணத்து நினைவுகள் - கட்டுரை


பக்தவத்சல பாரதி
இரண்டாயிரத்து ஒன்பது நவம்பரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் செல்ல நேர்ந்தது. அங்கு இரண்டு வாரங்கள் தங்கிச் சமூகவியல் துறையில் பயிற்றுவிக்கவும் கூடவே பேராசிரியர் கைலாசபதி நினைவுப் பேருரை ஆற்றவும் அழைக்கப்பட்டிருந்தேன். இலங்கையின் உலகப் புகழ்பெற்ற மானிடவியல் அறிஞர் கணநாத் ஒபயசேகராவின் தலைமாணாக்கர் பேராசிரியர், கலாநிதி என். சண்முகலிங்கன் அங்குத் துணை வேந்தராக இருந்து என்னை அழைத்தார்.
அந்தப் பயணத்தின்போது யாழ்குடா நாட்டின் சமூகத்தையும் பண்பாட்டையும் பற்றி நான் தெரிந்துகொண்டவை ஏராளம். எனது நினைவுக் குறிப்புகளிலிருந்து சிலவற்றை இங்குப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.
1
இலங்கையின் சமூக, சமய, மொழி, பண்பாட்டு உருவாக்கம் மிகவும் சிக்கலானது. அதை இனச்சார்பற்ற நிலையில் அறிவுபூர்வமாகவே அணுக வேண்டும். தீவின் பூர்வக் குடிகள் வேடர், நாகர், இயக்கர் ஆகியோரே. அவர்களின் தொடர்ச்சியாகத் தமிழர்கள், சிங்களவர்கள் புதிய இனங்களாக உருவெடுத்தார்கள்.
சிங்களவர்கள் திராவிட மொழிகள் பேசப்படும் தென்னிந்தியாவுக்கு அப்பால் உள்ள வட இந்தியாவிலிருந்து குடியேறியதாகக் கூறுகிறார்கள். சிங்களம் வட இந்தியாவுக்குரிய இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் சொல்கிறார்கள். இவர்கள் சிங்களம் பேசினாலும், திராவிட உறவுமுறையைப் பின் பற்றுகிறார்கள். பௌத்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள். கி ஷிலீஷீக்ஷீt பிவீstஷீக்ஷீஹ் ஷீயீ சிமீஹ்றீஷீஸீ எனும் மிகச் சிறந்த நூலை எழுதிய காட்ரிங்டன் என்பவர் “சிங்களவர்கள் வட இந்திய மொழியையும் தென்னிந்தியச் சமூக அமைப்பையும் கொண்டவர்கள்” என்பதை வெகுகாலத்திற்கு முன்பே நன்கு விளங்கப்படுத்தினார்.

பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

19/10/2011

ராஜீவ காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்து விட்டது.

ராஜீவ காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் "இலங்கையின் கொலைக்களம்' பிரிட்டிஷ் பராளுமன்றத்தில் "ஏற்றுக் கொள்ளபட்ட பொய்கள்' ஒரே தினத்தில் வெளியிடப்பட்டன

Friday, 14 October 2011

channel4இலங்கை யுத்தத்தின் இறுதிக்கட்டம் தொடர்பான சர்ச்சைக்குரிய ஒளிநாடாவான பிரிட்டனின் சனல் 4 தயாரித்த "இலங்கையின் கொலைக்களம், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை திரையிடப்பட்டுள்ள அதேசமயம் "ஏற்றுக்கொள்ளப்பட்ட பொய்கள்' என்ற இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஒளிநாடாவும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அதே தினத்தில் திரையிடப்பட்டுள்ளது.

சிங்களவர்கள் ஆகிய நாங்கள் - கொழும்பிலிருந்து சுனில ஜெயவர்தன

.
(article-1மோதல்கள் மற்றும் சமாதானம்அரசியல் மற்றும் ஆட்சி என்பனவற்றின் அடையாளம்)

ஒரு சிப்பியானது சூழலிருந்து துகள்களை உறிஞ்சியெடுத்து முத்துக்களை உருவாக்குகிறது. அப்படியில்லாமல் அது எல்லாத் துகள்களையும் வடிகட்டி வெளியேற்றியிருப்பின் அது ஒரு கீழ்நிலைப் பிறவியாகவே வாழவேண்டியது அதன் தலைவிதியாக எழுதப் பட்டிருக்கும்.

நாடுகடத்தல்கள், ஆக்கிரமிப்பு அலைகள், கைப்பற்றப்பட்ட அரசுகள் மற்றும் தனிமைப் படுத்தப்பட்ட பயணிகள் என்பனவற்றின் வழிகளில்தான் சிங்களமக்களின் இனப்பெருக்கம் இந்த ஸ்ரீலங்காத் தீவில் உருவானது என்பது புதிய தலைமுறைக்கு சொல்ல மறந்த ஒரு கதை. நாடுகடத்தப் பட்டவர்கள் வெற்றி கொள்ளப்பட்டவர்கள், மற்றும் ஏதிலிகள், சில உன்னதமானவர்கள் பெரும்பாலும் அப்படியல்லாதவர்கள் ஆகியோரின் பிள்ளைகள்தான் இவர்கள். முற்றுகைக்குள்ளாகியவர்கள், எதிர்த்து நின்றவர்கள். மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ஆகியோரை உறிஞ்சியெடுத்து ஒரு முத்து உருவாவதைப்போல உருவாக்கிப் பெற்ற கலவைதான் அவர்கள்.

இலங்கை தூதுவர் சமரசிங்கவை போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கவும்: அவுஸ்திரேலிய பொலிஸாரிடம் கோரிக்கை

18/10/2011

தளபதி அட்மிரல் திசேர சமரசிங்கவை போர்க்குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டுமென அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸாரிடம் கோரப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் தி ஏஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டவல்லுனர்களின் சர்வதேச ஆணைக்குழுவின் அவுஸ்திரேலிய பிரிவினால் அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸாருக்கு இக்கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. பொதுநலவாய வழக்குத் தொடுப்பு பணிப்பாளர், அவுஸ்திரேலிய பிரதமர் அலுவலகம், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கும் இம்மனு அனுப்பப்பட்டுள்ளதாக தி ஏஜ். தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமா

.
1. வேலூர் மாவட்டம்
நேர்மையான காவல் அதிகாரிக்கும் ஊழல் அரசியல்வாதிக்கும் நடக்கும் போராட்டம்தான் கதை. 
வழக்கமாய் 'காக்க காக்க' முதல் சமீபத்தில் பார்த்த எல்லா பொலிஸ் கதைகளைப் போல இதிலும் ஹீரோ உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு ப்ளாஷ்பேக் ஆரம்பிக்கிறது.

ஒரு குக்கிராமத்தில் விவசாயக்கூலியின்(ஜி.எம்.குமார்) மகன் ஐ.ஏ.எஸ் படிக்க ஆசைப்பட்டு, கடைசியில் ஐ.பி.எஸ் ஆகிறார். இதற்கு நடுவில் காதல், கல்யாணம் எல்லாம் முடிந்து வேலூர் மாவட்ட ஏ.எஸ்.பியாய் பதவியேற்கிறார். எல்லா தமிழ் பட பொலிஸ் ஹீரோ போல் இவர் செல் நம்பரை விளம்பரப்படுத்தி ஊருக்கே ராஜாவாகிறார். வழக்கம் போல அரசியல்வாதி வில்லன் அல்லக்கை, அரசியல்வாதி மந்திரி என்று வில்லன் கும்பல். இவர்களை எப்படி சமாளித்து வெற்றி பெறுகிறான் என்பதுதான் கதை.

'காக்க காக்க', 'சிறுத்தை' ஆகிய படங்களில் பார்த்ததைப் போல, அதே காக்கி கலர் கதைதான். எப்போதே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் தாமதமாக வெளிவந்திருக்கிறது. இதனால் பார்த்து பழகிவிட்ட கதைதானே என்று சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. கஞ்சி போட்ட காக்கிசட்டை போல் விறைப்பாகவும், சிடுசிடுவெனவும் வருகிறார் நந்தா. காவல் அதிகாரி அரசியல்வாதிகளைப் பார்த்து பக்கம் பக்கமாக வசனம் பேசுவதைப் பார்த்து இருக்கிறோம். ஆனால் இந்தப்படத்தில் காவல் அதிகாரி அதிகம் பேசாமல் செயலில் இறங்குவது சிறப்பு. கதாநாயகியாக நடித்திருக்கும் பூர்ணாவுக்கு பெரிதாய் ஸ்கோர் பண்ண ஏதுமில்லை. பார்க்கிறார், அழுகிறார், ரெண்டு டூயட் பாடுகிறார்.

அமைச்சராக ஒரு புது வில்லன் பார்க்க ஓகேவாக இருக்கிறார். அழகம் பெருமாள் மந்திரியின் முக்கிய அல்லக்கை கேரக்டர். இவர் குரலில் இருக்கும் நடிப்பு பாடிலேங்குவேஜில் இல்லாதது வருத்தமே. படத்தை ஆங்காங்கே கலகலக்க வைப்பது சந்தானம் மட்டுமே. நந்தாவின் தந்தையாக ஜி.எம்.குமார். எல்லா பாத்திரங்களும் இருந்தாலும் திரைக்கதையிலும், டுவிஸ்டிலும் புதுமை எல்லை. எல்லாம் பார்த்து பார்த்து சலித்து விட்ட சமாச்சாரங்கள்.

சுந்தர் சி.பாபுவின் இசையில் பெரிதாய் ஏதும் சொல்லிக் கொள்கிறார் போல இல்லை. ஒளிப்பதிவு பற்றியும் பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. எழுதி இயக்கியிருப்பவர் ஆர்.என்.ஆர். மனோகர். இதற்கு முன்பு மாசிலாமணி படத்தை இயக்கியவர். வழக்கமான மசாலா கதைதான் அதில் முடிந்த வரை சுவாரஸ்யத்தை தர முயற்சித்திருக்கிறார்.

படத்தில் முக்கியமான விஷயம் வேண்டாத இடத்தில் காதல் பாட்டுக்கள் போடாமல் சட்டு புட்டென காதல் காட்சிகளை முடித்தது. ஆங்காங்கே சிறு சிறு டயலாக்குகள் மூலம் காதலை, அன்பை சொன்னவிதம். எதிராளிகளை சமாளிக்கும் ஐடியாக்கள் எல்லாம் சுமார் ரகம் தான். பஸ்ஸில் ஹார்ட் அட்டாக் வந்தவருக்கு ஒண்ணுமில்லை வெறும் அஜீரணம்தான் என்று ஒரு ஆர்டினரி மாத்திரையை கொடுத்து விட்டு ஆஸ்பிட்டலில் சேர்ப்பது எல்லாம் ரொம்ப பழய விடயம் தான். மசாலாவிற்காக சேர்த்த குத்துப்பாட்டு ஆட்டம் படத்தின் தரத்தைக் குறைக்கின்றது.

நன்றி விடுப்பு


2. ரா ரா


ராயபுரத்திலும் ராயப்பேட்டையிலும் வசிக்கும் இரு குடும்பங்களுக்கிடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே கதை.

திருவள்ளுவர்தான் கடவுள், திருக்குறள்தான் தெய்வ வாக்கு என்று வாழ்ந்துகொண்டிருக்கும் பிராமண சமுகத்தைச் சேர்ந்த பொன்வண்ணனின் மகன் உதயாவுக்கும், ராயபுரத்தைச் சேர்ந்த ரவுடி ஆதித்யாவின் தங்கையான ஸ்வேதா பாசுவுக்கும் இடையே காதல் மலர்கிறது.

ஸ்வேதா பாசுவை பிராமணப் பெண் என்று நினைத்து காதலிக்கும் உதயா, அவரை தனது குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்தி திருமணத்திற்கு ஒகே வாங்கிவிடுகிறார். இதற்கிடையில் ஸ்வேதா பாசுவின் உண்மை நிலை தெரியவர என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கும் உதயா, தனது காதல் திருமணத்தில் முடிய வேண்டும் என்பதற்காக சொல்லும் பொய்களும், செய்யும் தில்லுமுல்லும்தான் படம். ஈரடிக்குறளைத்தான் தன் ஒரு வரிக்கதையாக்கி திரைக்கதை அமைத்து ரா ரா படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சாண்டில்யன். அறிமுகக்காட்சியில் 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்கிற குறளினை பொன்வண்ணன் ஆரம்பிக்க அதன் பிற்பாதியினை அவரது இல்லாளாக வரும் மீரா கிருஷ்ணன் பாடுவதாகக் காட்சி அமைத்ததில் இயக்குநரின் அனுபவம் மற்றும் முதிர்ச்சி வெளிப்பட்டு படம் பார்ப்பவர்களை தன் வசப்படுத்திவிடுகிறார் பாராட்டுகள்.

நீண்ட நாட்களாக நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த உதயா, இந்த படத்தின் மூலம் அந்த வாய்ப்பை தானாகவே ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். ஹீரோக்களுக்கு கடினமான விஷயமாக இருக்கும் கொமெடியை ரொம்பவும் கூலாக செய்துவிட்டு போகும் உதயாவின் பர்பாமன்ஸ் பாராட்டக்குரியது. உதயாவுக்கு நிச்சயம் 'ரா ரா' ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். நாயகி ஸ்வேதா பாசுவுக்கு பெரிதாக நடிக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும், கொழுக் மொழுக்கென்று வந்து ரசிகர்களின் கண்களை ஆக்ரமித்துவிடுகிறார். உதயாவிடம் பேச்சு கொடுத்து அவர் காசை காலிசெய்ய நினைத்து, அதில் தானே சிக்கிகொண்டு முழிக்கும் ஸ்வேதா பாசுவின் குழந்தைத்தனமான சிரிப்பில் ரசிகர்கள் மட்டுமல்ல கோடம்பாக ஹீரோக்களும் சிக்கிவிடுவார்கள் போலிருக்கின்றது.

திருக்குறளை பிரதானமாக எடுத்துக் கொண்டு கதை பண்ணினாலும் உதயாவுக்கும் - ஸ்வேதா பாசுவுக்குமான காதல்தான் 'ரா ரா'வின் முதுகெலும்பு. அப்படியிருக்கும் போது என்னடா ஒரு ரொமான்ஸ் சீனக்கூடக் காணோமே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது உதயாவிற்கும், ஸ்வேதாபாசுவிற்கும் இடையில் சில நொடிகளுக்கே வரும் ரொமான்ஸ் மொத்தப் படத்திற்கும் போதுமானதாக இருக்கிறது. கார் ஓட்ட டிரைவர் வேலைக்கு வருபவர்களிடம்கூட, உங்களுக்கு திருக்குறள் தெரியுமா? என்று கேட்கும் பொன்வண்ணனின் கதாபாத்திரம் கச்சிதம். ஸ்வேதா பாசுவின் தாத்தா கதாபாத்திரத்துடன் சேர்ந்து நகைச்சுவை எபிசோடுக்கு கியாரண்டி கொடுத்திருக்கிறார் சத்யன்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் யுகபாரதி எழுதி நரேஷ் ஐயர், சின்மயி பாடியிருக்கும் 'மயக்கிப்புட்டாளே என்னை..' என்ற பாடலின் முடிவில் வரும் பின்னணி இசையில் வரும் அந்த ரொமான்ஸினைத் தவறவிடாதீர்கள் அருமை சாண்டில்யன். அனுபவிச்சு எடுத்துருக்கீங்க தன் கணவர் உதயாவிற்காக 'ரா ரா' படத்தினைத் தயாரித்திருப்பதோடு மட்டுமல்லாமல் 'ரா ரா சென்னைக்கு ரா ரா' என்கிற பாடலையும் பாடியிருக்கிறார் கீர்த்திகா உதயா. அந்த திருக்குறள் பாடலை பள்ளிகளில்கூட ஒலிபரப்பலாம் போலிருக்கிறதே.

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று என்று அய்யன் வள்ளுவர் சொன்னதை மனதில் நிறுத்தி நல்லவற்றையே பேச, சிந்திக்க, செயல்படுத்த நம்மளை அறியாமல் நமக்குள் ஒரு வேட்கையைத் தூண்டும் படமாக 'ரா ரா' அமைந்திருக்கிறது.

நன்றி விடுப்பு