அதிசயம் - நோர்வே நக்கீரா

.


ஒளியின்றிப் பார்த்தேன்
ஒசையின்றின் கேட்டேன்
உணவின்றி உண்டேன்
தொடுகையின்றி உணர்ந்தேன்
வாடகையின்றி வாழ்ந்தேன்
உயிருக்குள் உயிரானேன்
அதிசயம்கள் அனைத்தும் 
தாயுள் மட்டும் தான்
தாயே அதிசயம் தான்

கருவறையுள் தான் கடவுள்
தாயெனும் கடவுளினுள் கருவறை
அதிசயங்கள் அனைத்தும்
தாயுள் மட்டும்தான்
தாயே அதிசயம் தான்

சிட்னி முருகன் ஆலயத்தில் திருக்கார்த்திகை விரதம் 05.12.2014

.




அவுஸ்திரேலியா மெல்பேணில் மாவீரர் நாள் நிகழ்வு – 2014

.

தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் 27 - 11 – 2014 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற இந்நினைவெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

உலகச் செய்திகள்


சிங்கப்பூரில் தமிழில் புதிய தேசிய கீதம்

மதத்தின் பெயரால் தீவிரவாதம் முன்னெடுக்கப்படுவதை கண்டிக்க வேண்டும்: பாப்பரசர் வலியுறுத்தல்

ஜ.எஸ். போராளி குழுத்தலைவரின் மனைவி மகன் கைது

சோமாலிய தலைநகரில் ஐ.நா. வாகனத்தை இலக்கு வைத்து தற்கொலை குண்டுதாரி தாக்குதல்: 4 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவில் விமான விபத்து :10 பேர் பலி

அவுஸ்திரேலியாவின் முதலாவது பெண் விமானி நியமனம்

இந்தியாவில் ஒபாமா மீது தாக்குதல் நடத்த திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

சிங்கப்பூரில் தமிழில் புதிய தேசிய கீதம்

02/12/2014 சிங்­கப்­பூரின் 50 ஆவது ஆண்டு சுதந்­திர தின விழா எதிர்­வரும் ஆண்டு கொண்­டா­டப்­ப­ட­வுள்ள நிலையில் அந்­நாட்டின் நான்­கா­வது உத்­தி­யோ­க­பூர்வ மொழி­யான தமிழில் புதிய தேசிய தின கீத­மொன்று ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

5 பேரை கொண்ட குழு­வினர் 6 மாதங்­க­ளை செலவிட்டு இந்த கீதத்­திற்­கான பாடலை எழு­தி­யுள்­ளனர்.
இதற்­காக மேற்­படி பாடல் உரு­வாக்க குழுவின் தலை­வ­ரான லோக­பி­ரியன் ரெங்­க­நா­த­னுக்கு 50,000 சிங்கப்பூர் டொலர் வழங்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி 

படித்தோம் சொல்கின்றோம் - கிரண்பேடி வரலாறு. - முருகபூபதி

.
செய்தியின்  பின்னால்  ஒரு  வீராங்கனையின்   வாழ்க்கைச்சரிதம்
நோபல் பரிசு  மறுக்கப்பட்ட  சிறைப்பறவை  தான் நேசித்த   சிறைக்கூண்டுக்கு  நோபல்  பரிசு பரிந்துரைக்கின்றார்.

நான்   துணிந்தவள் !   

                                                                      இந்திய  காவல்துறையில்  இணைந்த  முதல்  பெண்  என்று கருதப்படும்   கிரண்பேடி  தொடர்பான   செய்தியொன்று  அண்மையில் படிக்கக்கிடைத்தது.   இவரது  பெயர்  அடிக்கடி  ஊடகங்களில் அடிபடுவதனால்   அவர்  தமது  சுயவிளம்பரத்திற்காக  அதிரடி செயல்களில்   ஈடுபடுபவர்  என்று  அவரது  எதிரிகள்  விமர்சிப்பார்கள்.
ஆனால் -  அவர்  சுயபுகழ்  விரும்பி  அல்ல.  ஊழலுக்கும் மோசடிகளுக்கும்   எதிரானவர்.  மனிதநேயத்துக்கும்  மனித உரிமைக்கும்   குரல்  கொடுப்பவர்.  எத்தகைய  சவால்களையும்  மரண அச்சுறுத்தலாக   இருந்தாலும் கூட    எதிர்கொள்ளுவார்.
சில  வருடங்களுக்கு  முன்னர்  அண்ணா  ஹசாரே  நடத்திய ஊழலுக்கு   எதிரான  மாபெரும்  சத்தியாக்கிரக  போராட்டத்திலும் கலந்துகொண்டு  குரல்  எழுப்பி  தமது  ஆதரவை                   வெளிப்படுத்தி யவர்.  
பேரரசு  இயக்கத்தில்  நடிகர்  பார்த்திபன்   உட்பட  பலர்  நடித்துள்ள திகார்  என்ற  திரைப்படத்தின்  இசைகுறுந்தட்டு  வெளியீட்டு விழாவில்   கலந்துகொண்டவர்  ஒரு  காலகட்டத்தில்  திகார்  சிறையில்   பணியாற்றிய  கிரண்பேடி.
வழக்கமாக  சினிமா - அரசியல்  பிரமுகர்கள்  கலந்து கொள்ளும் இதுபோன்ற  விழாக்களில்   முன்னாள்   சிறைத்துறை  அதிகாரி  அதுவும்   ஒரு  வீராங்கனை   கலந்துகொண்டிருப்பது  முன்மாதிரியான தகவல்.

சங்க இலக்கியக் காட்சிகள் 32- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

கவலைப்படாதே தோழி! காதலன் சென்றது நல்ல வழி!

முல்லை நிலத்து மக்களின் தொழில் ஆடுமாடுகளை மேய்ப்பது. அதன் மூலம் கிடைக்கும் பால். தயிர், நெய் என்பவற்றை ஏனையோர்க்கு விற்று அல்லது பண்டமாற்றுச் செய்து தமக்குரிய பொருட்களை வாங்கி வாழ்க்கை நடத்துவதே அவர்களது வாழ்வியலாக இருந்தது. கோடைகாலத்தில் தம் மந்தைகளை மேய்ப்பதற்காகப் புல்தரைகளை நாடியும்ää நீர்நிலைகளைத் தேடியும் செல்லவேண்டிய தேவை ஆடவர்களுக்கு இருந்தது. அதனால் நாட்கணக்கில் வாரக்கணக்கில் மட்டுமன்றிää மாதக்கணக்கிலும் அவர்கள் தம் சொந்த இடத்தைவிட்டுத் தொலை தூரம் சென்று தங்கவேண்டி ஏற்படும். அப்போதெல்லாம் ஆடவரைப்பிரிந்த அரிவையர் தம் காதலர் திரும்பிவரும்வரை கவலையொடு காத்திருப்பார்கள்.

விழுதல் என்பது எழுகையே“ - பகுதி: 29 திருமதி. தேனம்மை லகஸ்மணன் --- கைதராபாத், இந்தியா



.
திருமதி.தேனம்மை லக்ஸமணன் பற்றிய அறிமுகம்
வசிப்பிடம்: கைதராபாத், இந்தியா (காரைக்குடி, சென்னை,தமிழ்நாடு)
இளங்கலை வேதியல் பட்டதாரி (B. Sc (Chemistry) முதுநிலை அரசியல் அறிவியல்  பட்டதாரி (M.A Political Science) 
புத்தக ஆசிரியர்,சுதந்திர எழுத்தாளர்,ஊடகவியலாளர், கவிஞர், வலைப்பதிவர்,சிறப்புப் பேச்சாளர்,வசனகர்த்தா,பாடலாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.
மூன்று புத்தகங்களின் ஆசிரியர்: “சாதனை அரசிகள்” (போராடி ஜெயித்த பெண்களின் சாதனைக் கதைகள்) “ங்கா” (குழந்தைக் கவிதைகள்) “அன்னப் பட்சி” (கவிதைத் தொகுப்பு)
தினமணி- காரைக்குடி புத்தகத் திருவிழா இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றமை, தினமலரில் 4 சிறுகதைகள், குங்குமத்தில் 4 சிறுகதைகள், புதிய தரிசனத்தில் 2 சிறுகதைகள் வெளியாகின.சிறந்த வலைப்பதிவாளராக 25 விருதுகளுக்கு மேல் வாங்கியமை.
இவருடைய வலைப்பதிவில்  கதை,கவிதை,கட்டுரை,சினிமா,புத்தக விமர்சனம்,நிகழ்வுப் பகிர்வுகள்,புத்தக வெளியீடுகள், போன்றவை வலைப்பதிவில் பதிவேற்றம் செய்தல் சமையல் குறிப்புகள், இளமைக்கால பள்ளிப்பருவ காலக் கவிதைகளை, சமையல் குறிப்புகளை வலைப்பதிவில் பதிவு செய்தல்.
இதுவரை 1500 கவிதைகளை எழுதியிருக்கிறார்.லேடீஸ் ஸ்பெசல், இவள் பதியவள்,சூரியக்கதிர்,நம் தோழி, குமுதம் பக்தி ஸ்பெஸல் ஆகியவற்றில் கட்டுரைகள் பேட்டிகள் கோலங்கள்.குங்குமத்தில் 4 சிறுகதைகள்,3 கவிதைகள் வெளிவந்துள்ளன.சமையல் குறிப்புகள்,உணவுக் குறிப்புகள் வெளிவந்துள்ளன.
குமுதத்தில் “அம்மா யானை” என்ற தலைப்பில் குழந்தைக் கவிதைகளும் 11 கைக்கூ கவிதைகளும் வெளிவந்துள்ளன.பூஜை அறைக் கோலங்கள் என்ற தலைப்பில் 300 கோலங்கள் வரை வெளிவந்துள்ளன.
குமுதம் கெல்த் ஸ்பெஸலில்( முரஅரவாயஅ ர்நயடவா ளுpநஉயைட ) “மேக்கப்பிற்கு பேக்கப”; என்ற தலைப்பில் இவரின் கருத்து வெளிவந்துள்ளது. ஆனந்தவிகடன் சொல்வனத்தில் 8 கவிதைகள் வெளிவந்துள்ளன. கல்கியில் 4 கவிதைகள் வெளிவந்துள்ளன. இந்தியா ருடேயில் ரஜனி பற்றி இவர் கூறிய கருத்து வெளிவந்துள்ளது. அவள் விகடனில் ஒரு கவிதை வெளியாகியுள்ளது.தேவதையில் ஒரு கவிதை வெளியாகியுள்ளது.மல்லிகை மகளில் இரு கவிதைகளும் 9 குட்டிக் கவிதைகளும் வெளியாகியுள்ளன.அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் “மெல்லினம்” இதழில் “பெண் மொழி”என்ற தலைப்பில் 30 கட்டுரைகளும், ஒரு கவிதையும் வெளிவந்துள்ளன.”இணையதள ப்ளாகர்”என்ற தலைப்பில் “நம் உரத்த சிந்தனை”இதழில் இவரைப் பற்றி வெளியாகி உள்ளது.
“சாதனை அரசி” “ங்கா” ஆகிய இவரின் நூல்கள் பற்றிய விமர்சனத்தை திருச்சி தினமலர்”பதிப்பிலும் இந்தியா ருடேயிலும்,லேடீஸ் ஸ்பெஸலிலும் வெளியிட்டுள்ளன.
இவ்விரு நூல்களும் பல்வேறு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் இடம்பெற்றுள்ளன.
மக்கள் தொலைக்காட்சியில் சாதனை அரசி நூல் பற்றிய விமர்சனம் இடம்பெற்றிருந்தது, கலைஞர் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி ஆகியவற்றின் நிகழ்ச்சிகளில் இவர் பங்கு கொண்டிருந்தார்
(குறிப்பு: திருமதி. தேனம்மை லக்ஸ்மணன் அவர்களின் கலை இலக்கிய பன்முகத்தளங்களில் இவரின் செயல்பாடுகள் வியப்பைத்தரும் அளவிற்கு மிக அதிகமாகவே உண்டு. அவற்றிலிருந்து பெறப்பட்ட சுருக்கமே இது.முழு விபரத்தையும் காலக்கிரமத்தில் “தமிழ் எழுத்தாளர் இணைய அகம் முகநூலில் வெளியிடுவோம்.)

தகவல் தொகுப்பு
பண்ணாகம் திரு.இக.கிட்ணமூர்த்தி 
திரு.எலையா முருகதாசன்  
(தமிழ் எழுத்தாளர் இணைய அகம்)

------------------------------------------------------------------------------
„விழுதல் என்பது எழுகையே“
பகுதி: 29    --- 5.12.2014
எழுதியவர்: திருமதி. தேனம்மை லகஸ்மணணன்  --- கைதராபாத், இந்தியா

பேராசிரியை மங்கையற்கரசி தருமசீலனை சந்திக்கும் ஆவல் ஏற்பட்டது. பத்மகலாவிடம் தொலைபேசி எண்ணை வாங்கி தருமசீலனிடம் தொடர்பு கொண்டு பேசி மறுநாள் சந்திப்பதாகச் சொல்லி இருந்தார். பேராசிரியை மங்கையற்கரசி சுவிசுக்கு வந்திருக்கிறார் என்பதை சீலனால் நம்பமுடியவில்லை. ஆச்சரியத்துடன் „எங்கை தங்கியிருக்கிறீர்கள் நான் வந்து சந்திக்கிறன்“ என்ற சீலன் பேராசிரியை மங்கையற்கரசியிடமிருந்து அவர் தங்கியிருந்த விடுதியின் பெயரையும் வீதியின் பெயரையும் கேட்டு அறிந்து கொள்ளுகிறான்.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

.
                நாவல் இலக்கியம்  அனுபவப்பகிர்வு


         13-12-2014  சனிக்கிழமை   மாலை  4.00 மணிக்கு    Mulgrave Neighbourhood  House  ( 36-42 Mackie Road, Mulgrave, Victoria -3170)    சமூக    மண்டபத்தில்  நடைபெறவுள்ள நாவல் இலக்கியம்  அனுபவப்பகிர்வு நிகழ்வில்  கலந்துகொள்ளுமாறு  இலக்கிய  ஆர்வலர்கள் அழைக்கப்படுகிறார்கள்.     கலந்துகொள்ளும்  இலக்கிய  ஆர்வலர்களும்  தமது  நாவல்  இலக்கிய   வாசிப்பு  அனுபவங்கள்  தொடர்பாக  கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
நாவல் இலக்கிய அனுபவப்பகிர்வில் கலந்துகொள்ள விரும்பும் அன்பர்கள் தாம் விரும்பிப்படித்த ஒரு நாவல் தொடர்பாக தங்களுடைய வாசிப்பு அனுபவத்தை ஐந்து நிமிடங்களுக்கு மேற்படாமல் தெரிவிப்பதற்கும் இந்நிகழ்ச்சியில் நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதனால் - தமது நாவல் வாசிப்பு அனுபவத்துடன் வருகைதருமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம்  வருடாந்தம்  தமிழ் எழுத்தாளர்   விழாவை  கலை  இலக்கிய  ஒன்றுகூடலாக நடத்திவருவதுடன்   அனுபவப்பகிர்வு  நிகழ்வுகளையும் ஒழுங்குசெய்து வருகிறது. கடந்த   காலங்களில்  சிறுகதை,  கவிதை  மற்றும்  தமிழ்  விக்கிபீடியா பயிலரங்கு  அனுபவப்பகிர்வுகளை   நடத்தியுள்ள  சங்கம் -  நாவல் இலக்கியம்   தொடர்பான   அனுபவப்பகிர்வையும்   நடத்தவுள்ளது. சங்கத்தின்  தலைவர்  Dr. நடேசனின்  தலைமையில்  நடைபெறவுள்ள நாவல்   இலக்கிய  அனுபவப்பகிர்வில்  இலங்கை  - தமிழக   நாவல்கள் புலம்பெயர்ந்தவர்களின்  நாவல்  இலக்கிய  முயற்சிகள்  மற்றும் மேலைத்தேய   பிறமொழி  நாவல்  இலக்கியம்  தொடர்பாகவும்  உரைகளும்  கலந்துரையாடலும்   இடம்பெறும்.
இந்நிகழ்ச்சியில் தேநீர் விருந்தும் இடம்பெறவிருப்பதனால் சிற்றுண்டிகள் வழங்குவதற்கு விரும்பும் அன்பர்கள் தொடர்புகொள்ளலாம்.
மேலதிக  விபரங்களுக்கு:  நடேசன் (தலைவர்)   0411 606 767 |  ஸ்ரீநந்தகுமார் (செயலாளர்)     0415 405  361


நிலைகொண்டு தமிழ்வாழும் நிமிடம் மட்டும் நீழாயுள் கொண்டதன்றோ? பாரதி பாடல்!

.
நிலைகொண்டு தமிழ்வாழும் நிமிடம் மட்டும்
  நீழாயுள் கொண்டதன்றோபாரதி பாடல்!
          ------  பல்மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி.
 

கலைமகளே பாரதியின் காதற் தெய்வம்!
         கவிதையென்றால் அவனுக்கோ வற்றா ஊற்று!
விலையறியா இலகுநடை பலரும் போற்றும்
        வித்துவத்தில் மலர்ந்திட்ட புரட்சிப் புதுமை  அலைகொஞ்சும் மணிகளைப்போல் அருஞ்சொற் கூட்டம்
        அவன்நாவின் ஏவலுக்கு இரங்கி ஏங்கும்!
நிலைகொண்டு தமிழ்வாழும் நிமிடம் மட்டும்
         நீழாயுள் கொண்டதன்றோபாரதி பாடல்!
 

கவிதைகளால் சங்கமமாகும் கவிதை தொடர்

.
கவிதைகளால் சங்கமமாகும் கவிதை தொடர். நீங்களும் இணைந்து கொள்ளலாம் .



‘கட்டியக்காரன்’. நாடகம் குறியீட்டுத் தளத்தில் - ந. முத்துசாமி

.


ந. முத்துசாமி எழுதி ப்ரஸன்னா ராமஸ்வாமி இயக்கிய ‘கட்டியக்காரன்’. நாடகம் குறியீட்டுத் தளத்தில் மட்டுமின்றி உண்மையிலேயே போலி முகங்களை அணிந்துகொள்ளத் தலைப்படும் சூழலின் நிர்ப்பந்தம் பற்றிப் பேசுகிறது. காட்சி ஊடகங்கள் எழுப்பும் மாயக் காம உலகம் நம் மீது தெளிக்கும் வசிய மருந்தின் விளைவாகக் கணவன் – மனைவி உறவு உள்ளிட்ட நமது அந்தரங்கம் யாவுமே பாவனைகளின் போர்வைக்குள் அடைக்கலமாகி விட்டதை நாடகம் உணர்த்துகிறது.
இன்றைய வாழ்வை நவீனத்துவ வசதிகளும் நெருக்கடிகளும் சூழ்ந்த பின்நவீனத்துவ வாழ்வு என்று சொல்லலாம். இதன் பல சிக்கல்களுக்கு அறிவியல் சார்ந்த தீர்வுகள் இல்லை. சமய நம்பிக்கைகளிலும் இதற்கு விடை இல்லை. நாம் செய்யத் தலைப்படும் ஒரு விஷயத்தை யார் நம்மிடம் கொண்டுவந்து சேர்த்தது என்பது நமக்கே தெரியாது. மாயக் கண்ணிகளால் ஆன தொடர் நிகழ்வின் ஒரு புள்ளிதான் நாம். நம் செயல்களுக்கு நாம் பொறுப்பும் இல்லை. அதன் விளைவுகள் மீது நமக்கு அதிகாரமும் இல்லை. தீர்வும் நம் கையில் இல்லை. காலத்தின் வலை நம் அனைவரையும் இறுக்கிக்கொண்டே இருக்கிறது. இந்த மாய வலையிலிருந்து விடுபட நம் பிரக்ஞையை மீட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. போலிக் குரல்கள், போலிப் படிமங்கள் ஆகியவற்றை இனம் கண்டு விலக்க வேண்டியிருக்கிறது. இது எந்த அளவுக்குச் சாத்தியமாகிறதோ அந்த அளவுக்குத்தான் நாம் விடுதலை பெற்றவர்களாக உணர முடியும்.
தனக்குப் பிடித்த நடிகையின் முகத்தைத் தன் மனைவிக்குப் பொருத்திப் பார்க்க விழையும் ஆண் மனத்தின் வேட்கையையும் அதைத் தூண்டும் சந்தைச் சூழலையும் இதனால் பெண்ணின் ஆன்மா கொள்ளும் அவமானத்தையும் ப்ரஸன்னா ராமஸ்வாமியின் நாடகம் வலுவாக நம் முன் நிறுத்துகிறது.

தமிழ் வித்தகர் தில்லைச்சிவன் - பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்

.
06.12.2014

"வேலணை வாழ் வித்தகரே'  என உயர்திரு சாலை இலந்திரயன் வேலணை அம்மன் கோவில் பாடசாலையில் இடம்பெற்ற திருமறை மகாநாட்டில் ஒலித்த கவி வரிகள் என் இளமைக் காலத்திலிருந்து இன்றும் ஒலிப்பதுண்டு...  ஓவியர் நாதனின் கைவண்ணத்தில் உருவான மண்டப முகப்பு அலங்காரம் இன்னும் கண்களில் தெரியுது. பண்டிதர் க.பொ.இரத்தினம் அவர்களுடன் இணைந்து தமிழ் இலக்கியப் பற்றுமிக்க "தில்லைச்சிவன்' இளைஞராக ஓடித்திரிந்து விழா ஏற்பாடுகளைக் கவனித்தார். நாம் அவர்பின் திரிந்து உதவி செய்ததும் இன்னும் நினைவுகளில் நிழலாடுகின்றன. 

சரவணையில் பிறந்த அமரர் சிவசாமி மாஸ்ரர் பன்முக ஆளுமை கொண்டவர். வெள்ளை வேட்டி தரித்த ஆசிரியர்களின் இளம் தலைமுறையினராகவும், பலமாற்றுச் சிந்தனைகளுக்கு வித்திட்டவராகவும், அவற்றைச் சமூகத்தில் படர விட்டவராகவும் விளங்கினார். சமூக மேம்பாடு பற்றியே சதா சிந்தித்தவர்.  ஆசிரியராக, தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்டவராக, சமூக சமய மேம்பாடுகளுக்காக உழைத்தவராக விளங்கிய இவர் கவிஞராகவும், தமிழ் எழுத்தாளராகவும் எமக்கு அறிமுகமாகியதோடு, தீவுப்பகுதியில் ஒரு எழுத்தாளர் குழாமை உருவாக்கியவர். இலக்கியத்தைச் சுவைத்தல், படிக்க வைத்தல், அவைபற்றி பேசுதல், விமர்சித்தல் போன்றவற்றின் ஊடாக ஒரு எழுத்தாளர் பரம்பரையை வேலணை, சரவணை, புங்குடுதீவு போன்றவற்றில் உருவாக்க உழைத்தார். 


இலங்கைச் செய்திகள்


வெவஸ்சை தோட்ட குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு நீதிபதி உத்தரவு

மண்மேடு சரிந்து விழுந்ததில் தாயும் மகளும் பலி

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 24 முறைப்பாடுகள் : கபே

புலிகளின் எல்பா சிறை கூடங்களின் இரகசியங்களை தேடுகிறது புலனாய்வு பிரிவு

பல்கலை மாணவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம்

 ''கருணை இருந்தால் சேர்ந்து வாழ்வோம்,இல்லையேல் செத்துமடிவோம்'' அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட லயன்களுக்கு மீண்டும் சென்ற மீரியபெத்த மக்களின் பரிதாபம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்பா சிறைக்கூடம் : இரண்டாம் கட்ட சாட்சி சேகரிப்பு

வெவஸ்சை தோட்ட குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு நீதிபதி உத்தரவு

02/12/2014  பதுளை வெவஸ்சை பெருந்தோட்டப்பிரிவில் மண்சரிவு  ஏற்படும் அபாயம் நிலவுவதால் அங்குள்ள பதினெட்டு தொழிலாளர் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி மகேசி பிரியதர்சினி த சில்வா வெவஸ்சை பெருந்தோட்ட முகாமைத்துவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

'பரட்டை'யை நினைவூட்டிய 'சேது'- கார்த்திக் சுப்புராஜிடம் ரஜினி நெகிழ்ச்சி

.

சிமோகாவில் நடைபெற்ற 'லிங்கா' படப்பிடிப்பின் போது நடிகர் கருணாகரன் உதவியோடு நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
தற்போது 'லிங்கா' திரைப்படம் டிசம்பர் 12-ஆம் தேதி வெளியாக இருப்பதால், ரஜினியோடு உரையாடியதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
"'லிங்கா' படம் வெளியாக இருப்பதால், எனது வாழ்க்கையின் அற்புதமான தருணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சிமோகாவில் நடைபெற்ற 'லிங்கா' படப்பிடிப்பின் போது தலைவரை சந்தித்து பேசினேன்.
'ஜிகர்தண்டா' படத்தை வெகுவாக பாராட்டினார். ஓட்டுமொத்த படக்குழுவினரின் உழைப்பை பாராட்டினார். எனது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மகத்தான பாராட்டு, "நான் சேது பாத்திரத்தை செய்ய விரும்பினேன்" என்று தெரிவித்தார். அதுமட்டுமன்றி சிம்ஹாவின் நடிப்பைப் பார்த்தபோது தனக்கு 'பரட்டை' கதாபாத்திரம் ஞாபகம் வந்ததாக தெரிவித்தார் ரஜினிகாந்த்.
'முள்ளும் மலரும்', 'பாட்ஷா' உள்ளிட்ட பல்வேறு படங்களில் தனது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நன்றி தலைவா! இது போதும். இச்சந்திப்பிற்கு உதவிய கருணாகரன் மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத 2 மணி நேரமாக அமைந்தது" என்று கார்த்திக் சுப்புராம் தெரிவித்துள்ளார்.

ஒமர் கய்யாம்: சுதந்திரச் சிந்தனையின் குரல்

.
போர்களின், துயரங்களின் உலகில் நமக்கு அத்தியாவசியமான மருந்துதான் ஒமர் கய்யாம். ஒமர் கய்யாம் மறைந்த தினம்: டிசம்பர்-4, கி.பி. 1131


ஒமர் கய்யாமை நம்முடைய காலத்தவராக ஆக்குவது எது? இரண்டு உலகப் போர்களின் பாதிப்பிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை நாம். உலகப் போர்களை விட பேராபத்துக்களை வெவ்வேறு வடிவில் தினமும் எதிர்கொள்ளும் நமக்கு, இறுதியில் இந்த வாழ்க்கை என்பதுதான் என்ன என்று பெரும் கேள்வி எழுகிறது. இதே போன்ற ஒரு கேள்விதான் முதல் உலகப் போரின்போதும் பலருக்கும் எழுந்தது. படித்த அமெரிக்கப் போர்வீரர்கள் பலரும், தவிர்க்கவே முடியாமல் போன அந்தப் போரில், மேற்குப் பிராந்தியம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தபோது அடிக்கடி உச்சரித்த வரிகள் இவை:
ஒன்றாக இணைத்துச் செய்யப்பட்ட கோப்பையின் பாகங்கள்/ அதை உடைப்பது குற்றம், குடிகாரனைப் பொறுத்தவரை;/ எத்தனையோ நுட்பமான தலைகள், கால்கள், கைகள்,/ யாருடைய அன்பால் இணைக்கப் பட்டன, யாருடைய வெறுப்பால் சிதைக்கப்பட்டன அவை?
போர் முனையில் மனித உயிர் துச்சமான நிலையில், மனித உடல்கள் சிதறிப்போய், உறுப்புகளெல்லாம் ஆங்காங்கே கிடக்கும் சூழலில், வாழ்க்கையின் பொருள் கேள்விக்குள்ளான நிலையில், கய்யாமின் வரிகள் அவர்களுக்குத் துணை வந்ததில் என்ன வியப்பு?
ஒமர் கய்யாமின் வாழ்க்கை

இளமையை சாகடிக்கும் ரியால்களும்,தீனார்களும்! - (கீழை ஜஹாங்கீர் அரூஸி)

.
இளமை இருபதில் பாலைதேசம் நோக்கிய பயணங்கள் பல எதிர்பார்ப்புகளோடு?
வருடங்கள் பல உருண்டோடியும் வறுமை நீங்கா குடும்பங்கள் அதிகமுண்டு.
வெளிநாட்டு மாப்பிள்ளை என்னும் மோகத்தில் பெண் கொடுத்தவர் பலர்.

கொடுப்பது ஆயிரமென்றாலும் அரபு நாட்டு பணமென்னும் வரட்டு கவுரவம் பார்ப்பவர் சிலர்.
அதனால் பலரின் இளமை வாழ்க்கை அரபு மண்ணிற்குள் புதைக்கப்பட்டு விட்டன.
ரியால்களும்,தீனார்களுமே பலரது வாழ்க்கைக்கு எதிரியாய் நிற்கிறது.
வெளிநாட்டு பணத்தை நேசிக்கும் அளவுக்கு கூட தம் கணவனை நேசிக்கா மனைவியரின் அணிவகுப்பு அதிகமாகிவிட்டது.
இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இரண்டு மாத விடுமுறை கால இல்லற வாழ்க்கையில் யார்?,யாரை புரிந்து கொள்ள முடியும்?
வெளிநாட்டு பொருட்களின் மீதான நேசத்திலேயே இரண்டு மாதங்களும் உருண்டோடி விடுவதால் கணவன் மனைவிக்கு இடையிலான புரிந்துணர்வில் சில இடைவெளி.
அதனால் தான் விவாகரத்து பெருகி விட்டதோ? 
ரியால்களும்,தீனார்களும் சிலரது வாழ்வில் வெளிச்சம் கொடுத்தாலும்,பலரது வாழ்வை இருளாக்கி விடுகிறது.
தலையில் வழுக்கையை கொடுத்த ரியால்களே!வயிற்றில் தொப்பையை கொடுத்த தீனார்களே!
உன்னை விட்டு பிரியும்போது மனதில் சோர்வையும்,உடம்பில் நோயையும் அல்லவா உடன் அழைத்து செல்கிறோம்.
என்று தணியும் எங்களின் விடுதலை தாகம்?

தமிழ் சினிமா - காடு

.

தமிழ் சினிமாவில் சில நாட்களாக புரட்சி வெடிக்கிறது. கம்னியூசம் தீ பறக்கிறது. இந்த கம்னியூச வெறி விஜய்யை மட்டும் இல்லை நம்ம விதார்த்தையும் விட்டு வைக்கவில்லை. அந்த வகையில் புதுமுக இயக்குனர் ஸ்டாலின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் படம் தான் இந்த காடு.


உலகின் மூன்றாம் உலகப்போர் என்று வந்தால் கண்டிப்பாக அது தண்ணீருக்காக தான் இருக்கும் என அறிக்கைகள் சொல்கிறது. தண்ணீர் வறட்சிக்கு முக்கிய காரணம் காடுகளை அழித்தல். காடுகளை தான் அழித்துவிட்டு அந்த காட்டை பாதுகாக்கும் மக்களையும் விரட்டி விட்டு, மரங்களை வெட்டுதல், விலங்குகளை கொல்லுதல் போன்ற சமூகத்திற்கு எதிரான செயல்களை சுட்டி காட்டுகிறது இந்தப்படம்.

கதை

விதார்த்-கருணா நம்ம தளபதி ஸ்டையில் நண்பர்கள். அவருக்கும் ஒன்று என்றால் இவர் கொதித்து எழுந்து விடுவார். அவர் செய்யும் தவறுகளை தான் ஏற்றுக்கொள்வார். இந்நிலையில் கருணா வனத்துறை அதிகாரியாக ஆக முயற்சி செய்து வருகிறார். இந்தப்பக்கம் விதார்த் வழக்கமான தமிழ் சினிமாவில் வருவது போல் பள்ளிக்கு செல்லும் பெண்ணுடன் காதல், பாட்டு இடையில் சிங்கம் புலி, காதலியின் அப்பா தம்பி ராமையாவுடன் சேட்டை என்று சுத்திக்கொண்டு இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் நண்பன் செய்யும் தவறுக்காக அவன் ரேஞ்சர் கனவு பலிக்க வேண்டும் என்பதற்காக பலியை இவர் ஏற்றுக்கொண்டு சிறைக்கு செல்கிறார். ஆனால், நண்பன் நம் மக்களுக்கே துரோகம் செய்தான் என்று தெரிய வருகிறது சிறையில். அங்கு தான் சமுத்திரக்கனியை சந்திக்கிறார் விதார்த்.


சிறையில் பூத்த சே குவராகவாக கைதியாக இருந்து கொண்டே புரட்சி வெடிக்க போதனைகள் சொல்லி முறுக்கு ஏற்றி விதார்த்தை வெளியே அனுப்புகிறார். பின் அந்த தீய சக்திகளுக்கு எதிராக போராடி எப்படி காட்டையும், காட்டு மக்களையும் காப்பாற்றுகிறார் என்பதே மீதிக்கதை.
நடிகர் நடிகைகள் இன்வால்மென்ட்

படத்தின் மொத்த பலமும் சமுத்திரகனி தான். வருவது 4 சீனாக இருந்தாலும் 40 முறை கைத்தட்டு வாங்கி விடுகிறார். விதார்த் வழக்கமான தன் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக ஜெயிலில் வரும் தாத்தா ஒருவர நடிப்பில் தூள் கிளப்புகிறார். கதாநாயகிக்கு பாட்டுக்கும், சைட்டுக்கும் மட்டும் தான். மற்றபடி பாரஸ்ட் ஆபிசர் நரேன், கருணா என அனைவரும் நல்ல நடிப்பை வழங்க்கியுள்ளனர்.
க்ளாப்ஸ்

படத்தின் முதல் க்ளாப்ஸ் வசனத்திற்கு தான். சில நாட்களுக்கு முன் பார்த்த இட்லி கம்னியூசத்தை விட காடு கம்னியுசம் மனத்திற்கு நெருக்கமாக உள்ளது. 'விலை உயர்ந்த பொருட்கள் அனைத்து நச்சு தான்', காடு என்பது நமது மூதாதயை நம் முன்னோர்களா வெட்டுறவன நீ வெட்டு' போன்ற வசனங்கள் சபாஸ் ஸ்டாலின். கே வின் பின்னணி இசை சூப்பர். உனக்காக தான் பாடல் மட்டும் கேட்கும் ரகம்.
பல்ப்ஸ்

முதலில் எடிட்டிங். எங்குமே திரையில் ஒட்டவே இல்லை. மேலும் தமிபி ராமையா, சிங்கம் புலி அன்கொவின் தேவைல்யில்லாத கா(மெ)டி. விதாரத் எழுத படிக்கவே தெரியாதுன்னு ஒரு சீன்ல சொல்றாரு , அப்பறம் எப்படி சமுத்திரகனி கொடுக்குற சே குவாரா புக் மட்டும் படிக்கிறாரு? இது மாதிரி அங்கங்கே லாஜிக் உதறல்.
மொத்தத்தில் காடு அனைவரும் பார்க்க (படிக்க) வேண்டிய ப(பா)டம் -



நன்றி  cineulagam