இறைவனிடம் கையேந்துங்கள் !


 
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் .... அவுஸ்திரேலியா  

 

     


   












  





     இறைவனிடம் கையேந் துங்கள் - அவன்

     இல்லையென்று சொல்லு வதில்லை

     கருணையுடன் கேட்டுப் பாருங்கள் - அவன்

     காட்சிதர மறுப்பது மில்லை 

 

      ஆணவத்தை அகற்றிப் பாருங்கள் - அவன்

      அரவணைக்கக் கரத்தை நீட்டுவான்

      நாணயாமாய் நடந்து பாருங்கள் - அவன்

      நாளுமெங்கள் அருகில் வந்திடுவான்

மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம் சிறையிலிருந்த காந்தி சுத்திகரித்த கழிவறையும் சுத்தப்படுத்த முனைந்த தேசமும் முருகபூபதி


இந்தியாவில்  குஜராத்  மாநிலத்தில்   போர்பந்தர்   என்னும்  ஊரில்    பிறந்த   குழந்தை   காந்தி   எப்படி மகாத்மாவானார்?

  எவ்வாறு    ஒரு    தேசத்தின்    பிதாவானார் ? என்பதற்கெல்லாம்    வரலாறுகள்    இருக்கின்றன.

  தற்காலக்குழந்தைகளுக்கும்  இனிபிறக்கவிருக்கும்
 குழந்தைகளுக்கும்  இப்படியும்  ஒரு மனிதர் இந்தியாவில்
 பிறந்து   -  வாழ்ந்து   - மறைந்தார்    என்று சொல்லிக்காண்பிப்பதற்கு  காந்தி பற்றிய   திரைப்படங்களும் ஆங்கிலத்திலும் அனைந்திந்திய   மொழிகளிலும் இருக்கின்றன.

 இந்திய  சுதந்திரத்திற்காக அகிம்சை  வழியில் உண்ணாவிரதப் போர்களையும் மௌனத்துடன்  உப்புச்சத்தியாக்கிரகப் போராட்டங்களையும்   நடத்தி நேற்று  வரையில்   இந்தப் போர்களை எதற்காகவும்    தொடரலாம்   என்ற    முன்னுதாரணத்தையும்    விதைத்துவிட்டுச்சென்றிருப்பவருக்கு                                                             02-10-2023 ஆம் திகதி    153   ஆவது  பிறந்த  தினம்.

 1869  ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி  பிறந்த  காந்தி எந்தத்தேசத்தின்  விடுதலைக்காக அறவழியில்  போராடினாரோ... அதே    தேசத்தின்   குடிமகன்   ஒருவனால் 1948 இல்  ஜனவரி  30 ஆம்  திகதி  சுட்டுக் கொல்லப்பட்டார்.

 ஈஸ்வர அல்லாஹ்   தேரே  நாம்...  எனப்பாடி    இந்து   -  முஸ்லிம் ஒற்றுமைக்காக    பாடுபட்டு    அந்த     ஒற்றுமைக்காகவே    தொடர்ந்தும் குரல்கொடுத்தமைக்காக  ஒரு  இந்துவான  நாதுராம்  கோட்சேயினால்    சுட்டுக்கொல்லப்பட்டார்.

 கோட்சேயின்    கழுத்தில்   தூக்குக்கயிறு    தொங்குவதற்கு     முன்னர் உனது   இறுதி விருப்பம்   என்ன ? - எனக்கேட்டபொழுது பாரதத்திலிருந்து   பிரிந்துபோன பாக்கிஸ்தானிற்குள் ஓடிக்கொண்டிருக்கும்  சிந்து  நதி   என்றைக்கு  மீண்டும் பாரதத்திற்குள்  திரும்பி  வருகிறதோ    அதற்குப்பின்னர்தான்   எனது அஸ்தி ( சாம்பல் )  கரைக்கப்படவேண்டும். அதுவே எனது  கடைசி விருப்பம்    எனச்சொல்லியிருக்கிறான்.

அதனால்,  அவனது  அஸ்தி  இன்னமும்  கரைக்கப்படவில்லை என்றும் தகவல்  உண்டு.

 பாரதநாடு  சுதந்திரம்  பெற்றவேளையில்  பாகிஸ்தானும்              பிரிந்தது. இரத்த   ஆறும்   ஓடியது.  இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும்   இந்தியா - பாகிஸ்தான்    உறவு    சுமுகமாகவில்லை.

இடைப்பட்ட  காலத்தில்   பாக்கிஸ்தானிலிருந்து                                    பங்களாதேஷும் பிரிந்தது.   

தள்ளாமையை மீறி என் ரஸனை `பால் வண்ணம்’ குறித்து கவிஞர், எழுத்தாளர், ஓவியர் வைதீஸ்வரன் அவர்களின் மதிப்புரை


இது ஒரு ஸ்வாரஸ்யமான, வாழ்க்கையின் பல்வேறு மனித அனுபவங்களின் இலக்கியப் பான்மையான சித்தரிப்புகளின் தொகுப்பு. சிறுகதையா... அல்லது சுய அனுபவங்களின் செறிவான நினைவு கூறலா என்கிற குழப்பம் அவ்வப்போது எழுந்தாலும் ஒரு தரமான படைப்பு என்பதில் ஐயமில்லை.


சுமார் இருபது வருடங்களுக்கு முன் இலங்கைப் போர் முடிந்து அதன் புகைக்கங்குகள் மெல்ல அணைந்து அடங்கிப் புழுங்கிக் கொண்டிருந்த தருணம் ஏராளமான மக்கள் அவதியும் துக்கமுமாக புலம்பெயர்ந்து கொண்ட வருஷங்களில் இலக்கியம் திசையறியாது குழம்பிப் போய் ஸ்தம்பித்துப் போனது. வருடங்கள் போகப் போக மக்களின்

புலம்பெயர்ந்த வாழ்க்கையின் புதிய அனுபவங்களின் சேகரங்கள் அவர்கள் உள்மனத்தில் வேரூன்றி கிளைத்து மனித இயல்பின் படைப்புணர்வை மெல்ல மெல்ல விசாலப்படுத்தி தற்போது சுதாகர் போன்ற நல்ல படைப்பாளிகள் மூலமாக நல்ல ஆவணங்களாக வெளிப்படுவதை நான் கண்டு வாசித்து மகிழ்ச்சி அடைகிறேன்

இவருடைய படைப்புகளில் வடிவச் சிறப்பு உள்ளது. எதையும் சேதிகளாகத் தெரிவிக்காமல் இயல்பான மன ஓட்டத்துடன் உணர்வுடன் வெளிப்படுத்துவது நல்ல கலைநேர்த்தி

எல்லாமே கற்பனை பூசிய நிஜ அனுபவங்களின் வெளிப்பாடு. காதல் மனித நேயம்..சாதுர்யம் வக்கிரம் சுயநலம் இயலாமை எல்லாவற்றுக்கும் இந்தக் கதைகள் நல்ல உதாரணங்கள்.

பால் வண்ணம் கதையை விட " நமக்கு நாமே " கதையை நான் ரஸித்தேன். 96 என்று ஒரு தமிழ்ப்படம் இதே நிறைவேறாக் காதலை அற்புதமான காட்சி யாக்கி இருந்தார்கள். கனவு காணும் உலகம் aborigin பிரச்சினையை இன்னொரு வித்தியாசமான கோணத்தில் பொதுவான டிப்படை மனிதநேயத்தை வெளிச்சமாக்கியது சிறப்பு.

பால் வண்ணம் வாசிக்க வேண்டிய தொகுப்பு. வாழ்த்துக்கள்



படித்தோம் சொல்கின்றோம்: மதுரையின் முழுமையான வரலாற்றை பேசும் அ. முத்துக்கிருஷ்ணனின் தூங்கா நகர் நினைவுகள் முருகபூபதி

தனது வாழ்நாட்களில் பெரும்பாலான பொழுதுகளை பயணித்துக்கொண்டே கடந்து செல்லும்  எழுத்தாளர், களப்பணியாளர், மனித உரிமை ஆர்வலர்,  மொழி பெயர்ப்பாளர், தேர்ந்த  வாசகர், தானும் இயங்கி, மற்றவர்களையும் இயங்கவைக்கும் ரஸவாதம் கற்றவர்,          அ. முத்துக்கிருஷ்ணன்.

எங்கள் அவுஸ்திரேலியாவின் நிரந்தர  இலக்கிய விருந்தினர்.  மெல்பனில் வாசகர் வட்டம் அமைப்பதற்கு தூண்டுகோளாகவிருந்தவர். இன்றளவும் அதன் பணிகளில் இணைந்திருப்பவர்.  உறவாடுவதற்கு எளிமையானவர். 

இத்தனை சிறப்பியல்புகளை கொண்டிருப்பவரின் மற்றும்  ஒரு வரவு,  தூங்கா நகர் நினைவுகள்.  மதுரையின் முழுமையான வரலாற்றையே இதனைப் படித்து நாம் தெரிந்துகொள்ள முடியும்.

விகடன் பிரசுரமாக வெளிவந்துள்ள இந்நூல், விரைவில் ஆங்கிலத்திலும் இதர இந்திய மொழிகளிலும் வெளிவரவிருக்கும்  நற்செய்தியும், அண்மையில் சென்னையில் நடந்த புத்தக திருவிழாவின்போது அறிய முடிகிறது. 

முதல், இடை, கடை என மூன்று சங்கம் வைத்து தமிழை வளர்த்த நான்மாடக்கூடலின் கதையை, வாசகர்களை கைப்பிடித்து அழைத்துச் சென்று சொல்லுமாப்போன்று எழுதியிருக்கிறார் முத்துக்கிருஷ்ணன்.  அவரது நீண்ட கால உழைப்பும், தேடுதலும் இந்நூலில் தெரிகிறது.  அவர்  சேகரித்து பதிவேற்றியிருக்கும் அரிய படங்களும், ஓவியங்களும் இந்த நூலுக்கு அணிசேர்த்துள்ளன.

கமல்ஹாசன்  எடுக்கவிருந்து பாதித் தயாரிப்போடு நின்றுவிட்ட  மருதநாயகம்  திரைப்படம் பற்றி அறிந்திருப்பீர்கள். அந்த மருதநாயகம்,  கான் சாகிப் ஆகிய பின்னர் மதுரையின் ஆளுநராகவிருந்து மேற்கொண்ட சேவைகள் முதற்கொண்டு,  பாண்டிய மன்னர்களுக்கு முற்பட்ட காலம் தொடக்கம், சுதந்திரத்திற்குப் பின்னர் மதுரையம்பதியில் நேர்ந்துள்ள மாற்றங்கள் பற்றியும் விரிவாகக் கூறும் நூல், என அழைப்பதை விட ஆவணம் என்றே சொல்லத்தோன்றுகிறது.

எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணனின் ரிஷிமூலம் எமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. மதுரையில் இவர் பிறந்திருந்தாலும், தனது இளமைப்பருவத்தை மும்பை மாநகரிலேயே கழித்திருக்கிறார்.  அதனால், இவரது தொடக்க கால பள்ளிப்படிப்பில், தாய் மொழி தமிழ் அந்நியமாகியிருக்கிறது. 1986 ஆம் ஆண்டிற்குப்பின்னர்தான் மீண்டும் மதுரையில் கால் பதிக்கிறார்.


பிறப்பால் தமிழரான இவர், தனது தாய்மொழியை தனது
21 வயதிற்குப்பின்னரே கற்றார் என்பதை அறியும்போது திகைத்துவிடுகின்றோம்.

எனினும்,  அவரது உள்ளார்ந்த தேடல், இன்று அவரை ஒரு கவனத்திற்குரிய தமிழ் எழுத்தாளராக அடையாளம் காண்பித்திருக்கிறது. அதற்கான மூலதனம் அவரது கடின உழைப்பும், அவர் மேற்கொண்டுவரும் பயணங்களும்தான்.

எழுத்துப்பணிகளுக்கு அப்பால், தொடர் வாசிப்பு,  தொல்லியல் – வரலாறு தொடர்பான ஆய்வுகள், மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போர்க்குரல், சுற்றுப்புறச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு இயக்கம், விளிம்பு நிலை மக்களின் நலன் சார்ந்த சேவைகள், உலகமயமாதல் முதலான துறைகளில் தீவிர கவனம் என பன்முக ஆற்றலும் ஆளுமையும் மிக்க முத்துக்கிருஷ்ணன்,  புது டெல்லியிலிருந்து தரைவழியாக சுமார் பத்தாயிரம் கிலோ மீற்றர் தூரம் பயணித்திருப்பவர்.

அவ்வாறு சென்று, பாலஸ்தீனத்தின் காசாவுக்கு வந்து திரும்பிய
சர்வதேச குழுவில் இடம்பெற்ற ஒரே ஒரு தமிழர் என்ற பெருமையையும் தனதாக்கிக்கொண்டிருப்பவர்.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 50 2002 இல் அவுஸ்திரேலியா தினத்தில் கிடைத்த விருது ! முருகபூபதி

இம்மாதம் 26 ஆம் திகதி அவுஸ்திரேலியா தினமாகும்.  அதற்காக


அரசு  பொதுவிடுமுறை வழங்கியது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரும் இந்நாளில் ஒருதடவை நான் எதிர்பார்க்காத நிகழ்வு ஒன்று நடந்தது.

 2002 ஆம் ஆண்டு  ஜனவரி  25 ஆம் திகதி.  அதாவது அவுஸ்திரேலியா தினத்துக்கு முதல்நாள் மாலை வேலை முடிந்து வீடு திரும்பி, களைப்போடு உறங்கிக்கொண்டிருந்தேன். மறுநாள் விடுமுறை என்பதால்,     “ அப்பாடா   என்றிருந்தது.

உறக்கம் கண்களை தழுவிக்கொண்டிருந்தபோது, கட்டிலுக்கு அருகிலிருந்த தொலைபேசி சிணுங்கியது.  மறுமுனையில் நண்பர் நல்லையா சூரியகுமாரன்.

இவர் கிழக்கிலங்கையில் கல்குடா தொகுதியின் முன்னாள்


பாராளுமன்ற உறுப்பினரும் , முன்னாள் அமைச்சருமான                      ( அமரர் ) நல்லையாவின் புதல்வர்.  இடதுசாரி சிந்தனை கொண்டவர். இங்கே தொழில் கட்சியிலும் அங்கம் வகிப்பவர். அத்துடன் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் மனித உரிமை செயற்பாடுகளிலும் ஈடுபாடுள்ளவர்.

என்னை  “ மச்சான்  “ என்றும் அழைப்பார்.  நாம் மெல்பனில் 1988 இல் உருவாக்கிய தமிழ் அகதிகள் கழகத்தின் ஸ்தாப உறுப்பினர்.  தமிழ் அகதிகளின் நலன்களுக்காக குரல்கொடுத்து வந்திருப்பவர்.

அவர் ஏன் அந்த மாலை வேளையில் எனக்கு கோல் எடுக்கிறார் என யோசித்தவாறே,   எப்படி சூரி…? என்ன விசயம்..?  “ எனக்கேட்டேன்.

 “ மச்சான் நாளைக்கு என்ன செய்கிறீர்…?   “ எனக்கேட்டார்.

 “ நாளை பொதுவிடுமுறை தினம்.  வீட்டில்தான் இருப்பேன்.  “ என்றேன்.

 “ மச்சான்,  நாளை காலை ஒன்பது மணிக்கு பண்டுரா பார்க்கிற்கு வரமுடியுமா..? நாளை இங்கே ஒரு கொண்டாட்டம் இருக்கிறது.   என்றார்.

 “ அப்படி என்ன கொண்டாட்டம்.?  என்ன விசயம் ?   என்று மீண்டும் கேட்டேன்.

 “ மச்சான்,   நாளைக்கு Australia Day . கட்டாயம் வாரும்.  உம்மை எதிர்பார்க்கின்றேன்.    என்று  வலியுறுத்தி சொல்லிவிட்டு , இணைப்பினை துண்டித்துக்கொண்டார்.

பிள்ளைகள்,  எனது குடும்ப நண்பர் வீட்டு பிள்ளைகளுடன் மறுநாள் நேரத்தை செலவிடவிருந்தனர்.  அவர்களை தொலைதூரத்திலிருந்த அந்த வீட்டுக்கு அழைத்துச்சென்று விட்டுவிட்டு, நான் மாத்திரம் பண்டுரா பூங்காவிற்கு சென்றேன்.

பூங்கா விழாக்கோலம் பூண்டிருந்தது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன.  அதன் பின்னர் டெரபின் மாநகர மேயர் உரையாற்றினார். அதனையடுத்து விருது வழங்கும் நிகழ்ச்சி என அறிவித்தார்கள்.

பெயர் சொல்லச்சொல்ல யார் யாரோ மேடைக்குச்சென்று விருதும் அழகான பெரிய பூச்செண்டும்  பெற்றுக்கொண்டார்கள்.

திடீரென எனது பெயர் அறிவிக்கப்பட்டு, நான் யார், மெல்பனில் என்ன செய்கின்றேன். எனது வாழ்வும் பணிகளும் எத்தகையது என்று அந்த மேயர்,  எழுதிவைத்திருந்த குறிப்புகளை வாசித்துவிட்டு, எனக்கும் விருது என அழைத்தார்.

எனது நீண்ட பெயரை ( Letchumanan Murugapoopathy )  சற்று சிரமப்பட்டு உச்சரித்தார் அந்த மேயர். 

மணி ஓசை - - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ் Inbox Das Suntheradas

 கோடீஸ்வரரான தந்தை தனக்கு பிறந்த அவலட்சணமான மகனை


பிறந்தவுடனே கொல்ல முனைகிறார்.ஆனால் ஒரு முதியவர் தடுத்து தானே அக் குழந்தையை வளர்க்கிறார்.குழந்தை வளர்ந்து வாலிபனாகி ஊருக்கும் உறவுக்கும் நல்லது செய்கிறான்.


ஆபத்தில் சிக்கும் தன் தம்பியையும் காப்பாற்றுகிறான்.அவனின் காதலும் கை கூட உதவுகிறான்.தாயும் தந்தையும் உயிரோடு இருந்தும் அவர்களின் அன்பும்,அரவணைப்பும் கிட்டாமல் மறைகிறான். அழகு என்பது உருவத்தில் இல்லை, உள்ளத்தில் தான் என்பதை உணர்த்துவதே படத்தின் கதை.

இந்த கதை சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்த தெய்வ

மகன் படத்தின் கதை போல் தோன்றும்.ஆனால் இதே கதை 1963ம் ஆண்டு மணி ஓசை என்ற பெயரில் படமானது. சிவாஜி ஏற்ற மூன்று கதா பாத்திரங்களையும் மணி ஓசையில் மூவர் ஏற்றனர்.பணக்கார தந்தையாக நடிகவேள் எம் ஆர் ராதாவும்,உடல் ஊனமுற்ற மகனாக கல்யாணகுமாரும்,இரண்டாவது மகனாக முத்துராமனும் நடித்தனர்.குறையுடன் பிறந்த குழந்தையை வளர்ப்பவராக வி நாகையா நடித்தார்.அதே வேடத்தை தெய்வ மகனிலும் அவரே ஏற்று நடித்திருந்தார் !

முதுகு வீங்கி,கூன் விழுந்து,விந்தி விந்தி நடக்கும் சிரமமான கதாநாயகன் பாத்திரத்தில் கல்யாணகுமார் நடித்திருந்தார்.கொடுத்த வேடத்தை அற்புதமாக செய்திருந்தார் அவர்.வெகுளித்தனமாக எல்லோரிடமும் பேசுவது,தம்பிக்காக திருட்டு பழியை ஏற்று தண்டனை அடைவது,தாத்தாவை காப்பாற்ற முரடனாக மாறுவது,தன் இயலாமை நினைத்து வருந்துவது என்று படம் முழுதும் வியாபித்திருந்தார் கல்யாணகுமார்.அன்று இருந்த நட்சத்திர நடிகர்களை பயன்படுத்தாது வளரும் நடிகரான கல்யாணகுமாரை நடிக்க வாய்த்த இயக்குனரை பாராட்ட வேண்டும்.

இவருடன் படம் முழுவதும் வருபவர் எம் ஆர் ராதா.வழமையான அலட்டல்,ஆர்ப்பாட்டம் இல்லாமல் அளவுடன் தன்னுடைய வில்லன் ரோலை செய்திருந்தார்.ஈவு இரக்கமில்லாத தந்தை அவர் வருவது ஆத்திரம் மூட்டினாலும் அவர் பேசும் வசனங்கள் அதனை அடக்குகிறது.அவருக்கு பணிந்து நடக்கும் மனைவியாக குமாரி ருக்மணி,மகனாக முத்துராமன்,அவரின் காதலியாக விஜயகுமாரி ஆகியோர் நடித்தனர்.இவர்களுடன் டீச்சராக புஷ்பலதா நடித்தார்.வளர்ந்து வரும் நடிகராக அறியப்பட்ட நாகேஷ் நகைச்சுவையை தனியாக கவனித்து சிரிக்க வைத்தார்.

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்

அதிகாரம் 5 : ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை.

 


இப்போது நந்தனும் புங்கும் பெயின்ரின் தரத்தை நிர்ணயிக்கும் குவாலிற்றி கொன்ரோல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஹெவின் என்னும் ஜெர்மன் நாட்டு மனிதர் குறூப்லீடராக இருந்தார். அறுபது வயதை நெருங்கும் நோமா என்ற நியூசிலாந்துப் பெண்மணியும், நட்டஷா என்ற கிறீக் நாட்டு இளம்பெண்ணும் ரீம்லீடர்களாக இருந்தார்கள்.

 ஒருமுறை வேலை சற்று முன்னதாக எல்லாப்பகுதிகளிலும் முடிவடைந்துவிட்டது. இரவு ஒரு மணி இருக்கும். வேலை செய்யுமிடத்தை துப்பரவு செய்துவிட்டு, ஒவ்வொருவரும் அவரவர் வேலையில் மூழ்கி இருந்தார்கள். புங் நிலத்தில், முதுகை சுவருடன் சார்த்தியபடி தனது ரெலிபோனில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தாள். வியட்நாமியர்கள் கொடுத்து வைத்தவர்கள். குள்ள உருவம் கொண்டதால் வளைந்து நெளிந்து வேலை செய்வார்கள். நினைத்த நேரம் நினைத்தபடி இருந்து எழும்புவார்கள்.

 அப்போது அங்கே ஜோசுவா வந்தான். அவன் இப்போது Electro Deposition (பிறைமர் அடிப்பதற்கு முன், இரும்பிற்கு மின்னால் பதியவைத்தல்) என்ற பகுதியின் குறூப்லீடராக இருக்கின்றான். சுற்று முற்றும் பார்த்துவிட்டு புங்கிற்கு முன்னால் குந்தி இருந்தான்.

 புங் ஆச்சரியப்படவில்லை. ஏற்கனவே அறிந்திருந்தாளா?

 அவன் அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான். வேறு எந்தப் பெண்ணிடமும் உருவாகாத ஒரு உணர்ச்சி. புங் உதட்டை ஒருபுறமாகச் சுழித்தாள்.

அரசியல்வாதிகளைப் பார்த்து மக்கள் கேள்வி கேட்கவேண்டிய நேரம் வந்துள்ளது ! அவதானி


இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 75 வருடங்களாகப் போகின்றது.  இந்த ஏழு தசாப்த காலத்திற்குள் எத்தனை தேர்தல்களை, எத்தனை அரசியல் தலைவர்களை,  அரசியலை வைத்து பிழைப்பு நடத்துபவர்களை மக்கள் பார்த்துவிட்டார்கள்.!?

முன்னர் ஒன்றாக இருந்த தலைவர்கள்,  பின்னர் பிளவுண்டு புதிய புதிய  அரசியல் கட்சிகளை உருவாக்கினார்கள்.  இந்த பிளவுகளையும் பிணக்குகளையும்  இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதலாக மக்கள் பார்த்து வருகின்றனர்.

பாராளுமன்றத் தேர்தல்,  இடைத்தேர்தல்,  ஜனாதிபதித் தேர்தல்,


மாகாண சபைத் தேர்தல், பிரதேச சபைத் தேர்தல், உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் என மக்கள் காலம் காலமாக கடந்த 75 வருடகாலமாக  பலதரப்பட்ட தேர்தல்களை பார்த்து வருகின்றனர்.

ஒருவகையில் இவை உற்சவங்களாகிவிட்டன. மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் நாட்டில் மற்றும் ஒரு குட்டித் தேர்தல், உள்ளுராட்சி மன்றங்களின் பெயரில் நடக்கவிருக்கிறது.

பல கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.  இனி, தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்களும், பேச்சாளர்களும் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்டு வருவார்கள். அத்துடன் சந்திக்கு சந்தி மேடைகள் அமைத்து ஒலிவாங்கியை பிடித்துக்கொண்டு முழங்கத் தொடங்குவார்கள்.  ஊடகங்களில் விளம்பரம் செய்வார்கள்.

வாக்குச்சாவடிக்கு நடந்து வரமுடியாத நோயாளர்களையும் வாகனத்தில் தூக்கி வந்து புல்லடி போடச்செய்வார்கள்.

இவ்வளவு காட்சிகளும் மீண்டும் நாட்டில் அரங்கேறப் போகின்றன.

ஆனால்,  மக்கள்  தேர்தல் காலத்தில் மாத்திரம் தம்மைத்தேடி வரும்  வேட்பாளர்களிடம் ஏதும் கேள்விகள் கேட்பார்களா..?    

  எமக்குரிய இந்தத் தேவைகளை செய்து தந்தால்தான் வாக்களிப்போம்   என மக்கள் அவர்களிடம் சொல்வார்களா..? அதற்காகவாவது வாய் திறந்து மக்கள் பேசுவார்களா…?  அல்லது வாங்க மச்சான் வாங்க , வந்த வழியைப் பார்த்து போங்க  - எனப் பாடுவார்களா…?

இதுவரையில் கேட்காதிருந்த மக்கள், இனியாவது கேட்கவேண்டிய காலம் வரவேண்டும்.  மக்களால் தெரிவாகி பராளுமன்றம், மகாண சபைகள், உள்ளுராட்சி மன்றங்களுக்கு இதுவரையில் சென்றவர்களின் வருடாந்த சொத்து மதிப்பு எவ்வளவு?   என்றாவது  வாக்காளர்கள் தம்மைத்தேடி வரும் அரசியல்வாதிகளிடம் இதுவரையில் கேட்டிருக்கிறார்களா..?

இலங்கை ஜனநாயக நாடு.  பேச்சுரிமையுள்ள நாடு.  வாக்களிக்கும் மக்களுக்கு கேள்வி கேட்கும் உரிமையும் இருக்கிறது.

ஒவ்வொரு இந்துவும் அறியவேண்டும் அதனை அணியவேண்டுமான பொக்கிசம். ருத்ராட்ஷத்தின் மகிமை


தனாசிவம் குருக்கள்
சிட்னி, அவுஸ்திரேலியா.



ருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை.
ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹாபேரானந்தத்தைத் தரும்
ருத்ராட்சம் அணிந்து ஒரு முறை எவ்வித
மந்திரம் கூறினாலும்,அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத்தரும்.
ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன்எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனைஅகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை.
ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?
சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது.
ருத்ராட்ஷம்.அதை அணிபவரை அவர் கண்போலக்காப்பாற்றுவார். 
எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்கவேணடும்
ஆப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம்அணியலாமா?
ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும ்அணியலாம். எல்லா
நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர்பருகும் போதும், உணவு உண்ணும் போதும், தூங்கும்போதும்
எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம்  அணிந்திருக்க வேண்டும் என்று சிவ பெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம்
தெரிவிக்கிறது. சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும்.
ருத்ராட்ஷத்தை பெண்கள்அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள்
குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியும் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும். ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும்.

செய்தி : அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த போட்டி முடிவுகள் சிறந்த நூல்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபா பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள் !


அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச் சங்கம் இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய இலக்கியப்போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன.

கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக  அவுஸ்திரேலியாவில் இயங்கிவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு  இலங்கையில் வெளியான நூல்களில் சிறந்தவற்றை தேர்வுசெய்து, அவற்றை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கத் தீர்மானித்திருந்தது.

இந்தத்  தீர்மானத்திற்கு அமைவாக குறிப்பிட்ட ஆண்டில் இலங்கையில் வெளியான சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை , மொழிபெயர்ப்பு முதலான ஐந்து துறைகளில் வெளியான நூல்கள், அவற்றை எழுதிய எழுத்தாளர்களிடமிருந்து கோரப்பட்டிருந்தன.

அதன்பிரகாரம் கிடைக்கப்பெற்ற நூல்களை தேர்ந்த இலக்கிய வாசகர்கள் படித்து,  பரிந்துரை செய்தவற்றிலிருந்து இறுதிக்கட்டத் தேர்வில் சிறந்த நூல்களாக தெரிவானவற்றுக்கு பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இம்முறை சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய துறைகளில் மூன்று நூல்கள் போட்டியில்  பரிசுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

நாவல், மொழிபெயர்ப்பு துறைகளில் இம்முறை எந்த நூலும் பரிசுக்குரியதாக தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

போட்டி முடிவுகளும் பரிசுத் தொகையும்

வேப்பமரமும் பவளம் ஆச்சியும்    ( சிறுகதை )

விவேகானந்தனூர் சதீஸ்  எழுதியது   - பரிசு -   ரூபா ஐம்பதினாயிரம்