தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைந்தார்

 தமிழ் அரங்கங்களில் கம்பீரமாக ஒலித்த நெல்லை கண்ணன்


அவர்கள் இன்று 19 ஆகஸ்ட் விண்ணேகினார். அவரை நான் 2016 ஆம் ஆண்டில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்திய நிகழ்வுக்காக வந்தபோது  வானொலி வழி பேசியிருந்தேன். 


அந்தப் பேட்டியைக் கேட்க


நெல்லை கண்ணன் அவர்களின் உரைகளைக் கேட்கும் போது பல
நூறு புத்தகங்களை ஒரு சேரப் படித்த திருப்தியும், ஞானமும் கிட்டுவதை உணர்ந்திருக்கிறேன்.
அவர் சின்னத்திரை வழியே "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" என்ற களம் வழியாக ஏராளம் இளையோரைத் தமிழைப் பிழையறவும், நெறிபடவும் பேச வழிகாட்டிச் சிறப்பித்திருக்கிறார். ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சிக்கு நிகரான வெற்றியை இந்த நிகழ்ச்சி கொடுத்ததே பல்லாயிரக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் அவர் வீற்றிருப்பதைப் பறை சாற்றியது.

நெல்லை கண்ணன் அவர்களை ஒரு தடவை சந்தித்துப் பேசினாலேயே போதும் என்றிருந்த எனக்கு அவரோடு சிறப்புப் பேட்டி எடுக்கும் பேறு கிட்டியது. சிட்னியில் நிகழவிருக்கும் இலக்கியச் சந்திப்புக்கான வரவேற்புப் பேட்டியை நெல்லை கண்ணன் ஐயா குறித்த வாழ்வியல் பின்புலம் சார்ந்த பேட்டியாக அமைத்துக் கொண்டேன். இருபது வருடத்தைத் தொடும் வானொலி ஊடகப் பணியில் மிகவும் மனம் விட்டுப் பேசக் கூடிய ஒரு ஆளுமையோடு இயல்பாக அமைந்த பேட்டியாக விளங்கியது சிறப்பு.

யாழ் மத்திய கல்லூரி சிட்னி கிளையினரின் இன்னிசை மாலை நிகழ்ச்சியில் பாட வரும் சூப்பர் சிங்கர் பாடகி புண்யாவுடன் ஒரு கலந்துரையாடல் செ. பாஸ்கரன்

 .





எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 27 ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால் ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால் வண்ணப் பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு ! முருகபூபதி


கடந்த 26 ஆவது அங்கத்தில் எதிர்வினைகளுக்குள்ளான  எனது இரண்டு படைப்புகள் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

லண்டன் ஈழகேசரியில் வெளியான ஆலயம் சிறுகதையும்,  கனடா நான்காவது பரிமாணம் இதழில் வெளியான இலக்கியவாதிகளும் போதனாசிரியர்களும் என்ற கட்டுரையும்தான் அவ்வாறு எதிர்வினைகளுக்குள்ளானவை.

கடந்த அங்கத்தை படித்திருந்த சில வாசகர்கள்,  தாம் குறிப்பிட்ட ஆக்கங்களை ஏற்கனவே படிக்கவில்லை எனவும், அவற்றின் இணைப்புகள் இருப்பின் அனுப்பிவைக்குமாறும் கேட்டிருந்தனர்.

முதலில் ஆலயம் சிறுகதையை இந்த அங்கத்தில் மீள்


பதிவிடுகின்றேன்.

தேசங்களை பொருளாதார நோக்கத்துடன் மக்களும் அரசுகளும் கவனித்தால், அந்தத் தேசங்கள் முன்னேறிவிடும். வளர்ச்சியிலும் தன்னிறைவு கண்டுவிடும்.

மதம், மொழி, இனம் சார்ந்து அல்லது அவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கும் நாடுகள், என்னதான் மதச்சார்பின்மையை கொள்கையளவில் வெளிப்படுத்தினாலும் உருப்படப்போவதில்லை.

கல்வியை உரியமுறையில் பெறமுடியாத கோடிக்கணக்கான குழந்தைகள் இந்தப் பூமிப்பந்தில் வாழ்கிறார்கள்.  பாடசாலைகளின் கூரைகளின் ஊடாக சூரிய பகவானையும் வர்ண பகவானையும் பார்த்துக்கொண்டிருக்கும் இலட்சோப இலட்சம் மாணவர்கள் குறித்து, இரண்டு பகவான்களுக்காகவும் பூசைகள் செய்துகொண்டு யாகம் வளர்ப்பவர்கள் சிந்திப்பதில்லை.

சமீபத்தில் இலங்கையில் ஒரு பாடசாலையில் அரச பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பாடசாலையின் கூரையிலிருந்து கொட்டும்  மழைநீருடன் போராடியவாறு எழுதினார்கள். அவர்களின் பாதங்களை மழைவெள்ளம் நனைத்தது.  சில மாணவர்கள் குடையை விரித்துப் பிடித்துக்கொண்டு ஒரு கையால் வினாக்களுக்கு விடை எழுதினார்கள்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஒரு பெண்பிள்ளை ருதுவானதும்  குதிரை – யானை  ,   ஆடல்,  பாடல் ஊர்வலத்துடன் கோலாகலமாக  நடந்த சடங்கு வைபவத்தை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.  இத்தனையையும் பார்த்து ஏக்கப்பெருமூச்சுவிடும் ஏழைக் குழந்தைகள் குறித்து எத்தனைபேர் கவலைப்படுகிறார்கள்.

காலம் கடந்து பிறந்திருக்கும் ஞானம் ! அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள உருவாகும் நிகழ்ச்சி நிரல் ! அவதானி


தேசியப்பட்டியல் ஊடாக ஒரே ஒரு நியமன ஆசனத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு, மீண்டும் பாராளுமன்றத்திற்குள் முதலில் எம்.பி. ஆகவும் பின்னர் பிரதமராகவும் அதன்பிறகு ஜனாதிபதியாகவும் -  சாதாரண ஆசனத்திலிருந்து சிம்மாசனம் வரையில் உயர்ந்திருக்கும் ரணில் விக்கிரமசிங்கா, அண்மையில் தனது அரசைக் காப்பாற்றிய முப்படைகளின் தளபதிகளுக்கும்  நன்றி தெரிவித்தார்.

உண்மையிலேயே அவர் நன்றி தெரிவித்திருக்கவேண்டிய மேலும்


சிலரது பெயர்களை   வெளிப்படையாகச் சொல்ல முடியாதிருக்கலாம்.

ரணில்,   ஜனாதிபதி பதவியை ஏற்ற  சில மணிநேரங்களில் ஒரு வெளிநாட்டு ஊடகர் அவரிடம்  “ நீங்கள் ராஜபக்க்ஷக்களின் நண்பர்தானே..?  “ எனக்கேட்டதும்,     இல்லை… இல்லை… நான் மக்களின் நண்பன்  “ என்றுதான் புத்திசாலித்தனமாகச் சொன்னார்.

இந்த சாதுரியத்தை அவருக்கு அரசியல் அரிச்சுவடியாகச் சொல்லிக்கொடுத்த அவரது மாமனார் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனாவுக்குத்தான் முதலில் நன்றி தெரிவித்திருக்கவேண்டும்.

ஜே. ஆர், பொதுத்தேர்தலில் விகிதாசார பிரதிநிதித்துவ முறையை அறிமுகப்படுத்தியதனால்தான் இன்று பல உதிரிக்கட்சிகளும் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு வாய்ப்பாக அமைந்தது.  கடந்த தேர்தலில் ஒரு ஆசனத்தையும் வெல்ல முடியாமல் படுதோல்வியடைந்திருந்த  ஐக்கிய தேசியக்கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியலில் வந்தவர்தான் ரணில் விக்கிரமசிங்கா.

நிறைவேற்று அதிகாரம் தற்போது ரணில் வசம் இருப்பதனால்,  தன்னையும், தனது ஐக்கிய தேசியக் கட்சியையும் மாத்திரமல்ல,  தனக்கு தற்போதைய சிறந்த வாய்ப்பினைத் தந்துவிட்டு, நாடுவிட்டு நாடு ஓடிக்கொண்டிருக்கும் கோத்தபாய ராஜபக்‌ஷவையும் அவரது  சகோதரர்களையும் அவர்களின் குடும்பத்தையும்  பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது வெளிப்படையானது.

ஜனாதிபதி ரணில்,  தனது நண்பர்கள் இலங்கை வாழ் மக்கள்தான் எனவும் சொல்லியிருப்பதனால்,  அந்த நம்பிக்கையை காப்பாற்றவும் கடினமாக உழைக்கவேண்டியிருக்கும்.

ரணில்,  மக்கள் வாக்களித்து இந்தப்பதவிக்கு வரவில்லை.  பாராளுமன்றத்திலிருக்கும் 134 அங்கத்தவர்களின் வாக்குகளினால்தான் சிம்மாசனத்தில் அமர்ந்து சிறப்புரையும் ஆற்றினார். அதனால், தனது பதவிக்காலத்தில்  அந்த 134 பேரின் நம்பிக்கையையும் காப்பாற்றவேண்டியவராகின்றார்.

காதலிக்க வாங்க - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 தமிழ் வாசகர்கள் மத்தியில் பிரபலமாகத் திகழ்ந்தவர் எழுத்தாளர்


தமிழ்வாணன்.இவர் எழுதிய மர்ம நாவல்களும்,தன முனைப்பு கட்டுரைகளும் இவரை பல்லாயிரக் கணக்கான வாசகர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தன.இவரின் கேள்வி பதில்கள் ஏராளமான வாசகர்களை இவருக்கு பெற்றுக் கொடுத்தது.எழுத்தாளராக திகழ்ந்து கொண்டே பாதிப்பகத் துறையிலும் ஈடுபட்ட இவர் மெதுவாக திரையுலகிலும் காலடி எடுத்து வைத்தார்.ஆரம்பத்தில் தெலுங்கில் வெளியான ஆக்சன் படங்களை தமிழில் டப் செய்து வெளியிட்டார்.அவ்வாறு வெளியிட்ட பிள்ளைப்பாசம்,துடிக்கும் துப்பாக்கி போன்ற படங்கள் இலாபம் தரவே அடுத்து தமிழில் படம் ஒன்றை தயாரிக்க முனைந்தார்.


அதன் விளைவாக 1972ம் ஆண்டு அவர் தயாரித்த படம் தான்

காதலிக்க வாங்க.மர்மக் கதை எழுத்தாளர் என்பதால் இந்தப் படத்தின் கதையும் மர்மக் கதையை கருவாக கொண்டிருந்தது.50 ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்ற சஸ்பென்ஸ் படம் என்றால் ஜெய்சங்கர்தான் கதாநாயகனாக நடிப்பார்.அதே போல் முழு ஒத்துழைப்பும் வழங்கக் கூடியவர் என்ற பெயரும் அவருக்கு இருந்தது.அந்த அடிப்படையில் ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்தார்.இவருடன் மேஜர் சுந்தரராஜன்,ஸ்ரீகாந்த்,தேங்காய் ஸ்ரீனிவாசன்,மனோரமா,விஜயகிரிஜா,ஆகியோரும் நடித்தனர்.ஆடுதுறை அரசு நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.

கதாநாயகியாக புதுமுகம் கவிதா நடித்தார்.இவருடன் ஹிந்தி நடன நடிகை ஷப்னமும் நடித்திருந்தார். இந்த கவர்ச்சி நடிகை ஷப்னத்துக்கு இவ்வாண்டு ஆகஸ்ட் 17ம் தேதி 80வது பிறந்த தினம் என்பது ஒரு கொசுறு தகவல் ஆகும்! இவர்கள் இருவரும் நடித்தார்கள் என்பதை விட கவர்ச்சியை தாராளமாக வழங்கினார்கள் என்று சொல்லலாம்.இவர்களின் கவர்ச்சியுடன் போட்டி போடுவது போல் ஒரு புலியும் படத்தில் நடித்தது.

ஏன் பெண்ணென்று... குறுநாவல் (5/6) கே.எஸ்.சுதாகர்

அதிகாரம் 5

“விவாகரத்து முடிஞ்சு அடுத்த கிழமையே கலியாணம் கட்டிட்டான்.


எங்கையெண்டு அலைஞ்சு கொண்டிருந்திருக்கிறான்  றாஸ்கல்சாய்வனைக் கட்டிலில் இருந்தபடியே தொணதொணத்தார் நேசம்.

“உவனென்ன வாத்தி. அதுவும் தோட்டக்காட்டுப் பள்ளிக்கூடத்திலை... மலைநாட்டிலை எத்தினை பெம்பிளப்பிளையள் மலையிலை இருந்து விழுந்து குதிச்சு செத்துதுகளோ? பொறு உவனுக்குச் செய்யிறன் வேலைமனதுக்குள் கறுவிக் கொண்டார்.

பத்மினியின் அக்கா விமலா எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் நைஜீரியாவில் இருந்து இலங்கை வந்தார். இந்தத்தடவை வரும்போது நான்கு பேராக வந்தார்கள். இரண்டு பெண்பிள்ளைகள் பிறந்திருந்தார்கள்.

அவர்கள் வந்திருந்த காலத்தில் நாட்டுப்பிரச்சினைகள் உக்கிரமடைந்து இருந்தன. இந்திய அமைதிப்படை வருவதற்கு சற்று முந்திய மாதங்கள். அவர்களால் வடபகுதிக்கு செல்ல முடியாமல் இருந்தது. கொழும்பிலே சிறிது காலம் இருந்தார்கள். விமலாவின் சித்தப்பா ஒருவர் கொழும்பில் இருந்தார். அவர்களின் குடும்பத்துடன் பொழுது கழிந்தது.

ஒருமுறை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு மனிதருடன் சித்தப்பா வந்தார். வந்தவர் தன்னை டேவிட் என அறிமுகம் செய்து கொண்டார். கிறிஸ்தவரான அவர் பழகுவதற்கு மிகவும் நல்லவராக இருந்தார். இந்திய வம்சாவளியைச் சார்ந்த அவர், தனக்கு பெற்றார் உற்றார் என்று ஒருவரும் இல்லை என்று சொல்லிக் கொண்டார். நண்பர்களுடன் கொட்டஹேனாவில் வசித்து வருவதாகச் சொன்னார்.

முக்காலத்தினூடாக முன்னோக்கி நகர்த்த உதவும் The Mystique of Kelani River நடந்தாய் வாழி களனி கங்கை நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் நூர் மஃரூப் முகம்மட்டின் மதிப்பீடு ( தமிழில் : விஜி இராமச்சந்திரன் )


குந்திதேவி தங்களுக்கு நேர்ந்த துயரங்களைச் சொன்னபோது, "எந்தவொரு நல்லொழுக்கமுள்ள மனிதனும் எல்லா நேரங்களிலும் நல்லொழுக்கத்துடன் வாழும் அளவுக்கு வலிமையானவனும் அல்ல, எந்த ஒரு பாவியும் எப்போதும் பாவத்தில் உழலும் அளவுக்கு மோசமானவனும் அல்ல. வாழ்க்கை என்பது ஒரு சிக்கலான வலை மற்றும் நன்மை, தீமை  இரண்டுமே செய்யாதவர்கள் உலகில் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் செயலின் விளைவை அனுபவிக்க வேண்டும். துக்கத்திற்கு வழிவிடவேண்டாம்". வியாசர் இவ்வாறு அவளை ஆறுதல்படுத்தினார். (சி.ராஜகோபாலாச்சாரியின் மகாபாரத மொழிபெயர்ப்பு)

 முருகபூபதியின் நினைவுப் பாதையில் அவர் எழுதியிருக்கும்


நடந்தாய் வாழி களனி கங்கை நூலில் அது கடந்த  பயணத்தை வாசிக்கும்போது ஏற்பட்ட அதே சிந்தனைத் தூண்டுதலும் வசீகரமும் மொழிபெயர்க்கும் போதும் ஏற்பட்டது. "நடந்தாய் வாழி களனி கங்கை” என்பது இலங்கை வரலாற்றின் அறியப்படாத வசீகரிக்கும் விபரங்களை அடக்கியுள்ளது . நீங்கள் கேள்விப்படாத நிகழ்வுகள், ஆச்சிரியமூட்டும் அல்லது அதிர்ச்சிக்குள்ளாக்கும் சில பகுதிகள் கூட இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் சேர்ந்து அந்தக்கால நினைவுகளையும் நாம் இலங்கையர்கள் என்ற நமது அடையாளத்தையும் மீட்டெடுக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

 கம்பீரமான களனி நதி மற்றும் ஆற்றங்கரைகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதையானது, வழி நெடுக ஓடி பல திருப்பங்கள், நெளிவுசுளிவுகள் என்று குறுக்கும் நெடுக்குமாக அதன் வழியை விரிக்கிறது. இது பல வியப்பூட்டும் அரசியல் தலைவர்கள் அவர்களின் சூழ்ச்சிகள், லட்சியங்கள், துரோகங்கள், படுகொலைகள் மற்றும் அவர்கள் விட்டுச் சென்ற மரபுகள் போன்ற சம்பவங்களை உள்ளடக்கியுள்ளது.  தெய்வங்கள் மற்றும் புராண பாத்திரங்கள், பிரமுகர்கள்அண்டை நாடான இந்தியாவில் இருந்து வந்த பிரபலங்கள் மற்றும் அமைதித் தூதர்கள், தீவில் அவர்களின் குறுகிய ஊடுருவல்கள் பற்றிய சுவாரசியமான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. தொழில்முனைவோர், பொழுதுபோக்கு  வித்தகர்கள், தேர்ந்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலை மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தி வளப்படுத்திய மூங்கில் மரங்கள், பழுப்பு காகித பைகள், பால்பாயிண்ட் பேனா மற்றும் பீடி முதல் சப்பாத்து வரையிலான பல சுவாரஸ்யமான குறிப்புகளையும் தன்னகத்தே கொண்டு அமையப்பெற்றுள்ளது. இவை அனைத்தும் நம் நினைவில் ஓடிச் சுழன்று களனி நதி போல் பாய்ந்து இறுதியாக கடலெனும் நம் உணர்வுடன் சங்கமிக்கிறது.

வாசிப்பு அனுபவப்பகிர்வு எழுத்தாளர் நடேசனின் புதிய நாவல் பண்ணையில் ஒரு மிருகம்


எழுத்தாளர் நடேசன் எழுதியிருக்கும் புதிய நாவல் பண்ணையில் ஒரு மிருகம் நூலின் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சி இம்மாதம்
27 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில்                  ( Zoom Meeting ) நடைபெறவுள்ளது.

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/88498364186?pwd=RCt2RDJVdHg5TXhVa1pRREV3aHBCZz09

Meeting ID: 884 9836 4186  Passcode: 150046

ஆஸ்திரேலியா - கன்பரா தமிழ் அரங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்ச்சியில், பண்ணையில் ஒரு மிருகம் நாவல் குறித்து ஆஸ்திரேலியாவிலிருந்து சாந்தி சிவக்குமார், இலங்கையிலிருந்து அனுஷா சிவலிங்கம், பிரித்தானியாவிலிருந்து கலா ஶ்ரீரஞ்சன், தமிழ்நாட்டிலிருந்து பேராசிரியர் ஜே.பி. ஜோசபின் பாபா ஆகியோர் தமது வாசிப்பு அனுபவங்களை சமர்ப்பிப்பர்.

நாவல் ஆசிரியர் நடேசன் ஏற்புரை வழங்குவார்.

நிகழ்ச்சி இணைப்பாளர் : முருகபூபதி

நேரம்:  ஆஸ்திரேலியா இரவு 8-00 மணி

                பிரித்தானியா  முற்பகல் 11 – 00 மணி

               இலங்கை – இந்தியா மாலை 3-30 மணி

இலக்கிய ஆர்வலர்களை இணைந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

                             கன்பரா தமிழ் அரங்கம்

                       பிரம்மேந்திரன் : 0404 412 251

இலங்கைச் செய்திகள்

இலங்கைக்கான நோர்வே அதிகாரியுடன் கலந்துரையாடல்

பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ஜனாதிபதியை சந்திப்பு

இலங்கைக்கு உதவ இந்தியா எப்போதுமே துணை நிற்கும்

ஜப்பானிடமிருந்து ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு 500 மில்லியன் யென் நிதி

இலங்கைச் செய்திகள்       சிறை செல்ல முன் தான் நடித்திருந்த திரைப்படத்தை பார்வையிட்ட ரஞ்சன் ராமநாயக்க

வரலாற்றில் முதற் தடவையாக யாழுக்கு அதிக ரயில் சேவைகள்


இலங்கைக்கான நோர்வே அதிகாரியுடன் கலந்துரையாடல்

6 தமிழ்க் கட்சித்தலைவர்கள் கூட்டாக பேச்சு

நோர்வே வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்கான விசேட அதிகாரி ஆன் கிளாட்டுடன் 6 தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடல் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றுள்ளது.

உலகச் செய்திகள்

ட்விட்டர் பதிவுகளுக்காக சவூதி பெண்ணுக்கு 34 ஆண்டு சிறை

உக்ரைனுக்கு அமெ. மேலும் 800 மில்லியன் டொலர் உதவி

உக்ரைனிய அணுமின் நிலையத்தில் ஐ.நாவின் செயற்பாட்டுக்கு இணக்கம்

ஐரோப்பாவை தாக்கிய புயலால் 12 பேர் பலி

இரண்டு ஏவுகணைகளை பாய்ச்சியது வட கொரியா

பிரிட்டனில் பணவீக்கம் புதிய உச்சம்


ட்விட்டர் பதிவுகளுக்காக சவூதி பெண்ணுக்கு 34 ஆண்டு சிறை

சவூதி அரேபியாவில் ட்விட்டர் பதிவுகளுக்காக ஒரு பெண்ணுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

34 வயது சல்மா அல் ஷெஹாப் பொது ஒழுங்கைச் சீர்குலைக்க முயன்றவர்களுக்கு உதவியதாக இம்மாதம் 9ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

777 Charlie தனிமையின் தோழமை - கானா பிரபா


 " உதேன், கட்டிவச்ச குழையெல்லாம் அப்பிடியே கிடக்குது?

,ஏன் சாப்பிடேல்லை?
இல்லாட்டால் இந்தா, இந்தக் கஞ்சியைக் குடி"

அப்பா தன் வளர்ப்பு ஆட்டுடன் கதைத்துக் கொண்டிப்பார்.

" அப்பா! வயசு போன காலத்தில ஏன் உந்த ஆடு வளர்ப்பு?" அங்கலாய்ப்போடு நான்.
" தம்பி! நீங்களெல்லாம் இங்கை இல்லாத குறைக்கு ஒரு ஆறுதலுமாச்சு"
என்று மெல்லச் சிரிப்போடு என் அப்பா சொல்வார்.

குடும்பத்தில் எல்லாப் பிள்ளைகளும் வெளியேறிய வெறுஞ் சூழலில்

இதுவொன்றும் புதிதல்ல எங்கள் ஊர்ப்பக்ம்.
ஒவ்வொருவரின் வளர்ப்புப் பிராணிகளும் வளர்ப்புப் பிள்ளைகள் போலே ஆகிவிடுவதுமுண்டு.

நேற்று 777 Charlie படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது என் நினைவோட்டம் ஈழத்தில் தனிமையில் இருக்கும் அந்த ஜீவன்களையும் தொட்டு விட்டு வந்தது.

ரூபவாஹினியின் ஆரம்ப காலத்துத் தொடரில் வந்த Lassie வீரதீர நாயும் நினைவுக்கு வந்து போனது.

எதிலும் பிடிமானம் இல்லாத, தன்னைப் பற்றிக் கூடக் கவலைப்படாதவன் வாழ்க்கையிலும் ஈரம் பொசியும் என்பதை மனிதனுக்கும், நாய்க்கும் இடையிலான பந்தம் வழியாக வெளிப்படுத்துகின்றது இந்தப் படைப்பு.

இலங்கை மாணவர் கல்வி நிதியம் ( 1988 – 2022 ) CSEF ஆண்டுப்பொதுக்கூட்டம்



அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் – இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும்
27 ஆம் திகதி ( 27-08-2022 ) சனிக்கிழமை மாலை  4-00 மணிக்கு மெல்பனில்,  வேர்மன் தெற்கு  சமூக  நிலையத்தில்  ( Vermont South Learning Centre - 1 Karobran Drive, Vermont South VIC 3133.) நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெறும்.

இலங்கையில் முன்னர் நீடித்த போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், வறுமைக்கோட்டின் கீழிருக்கும் மாணவர்களுக்கும் கல்வி சார்ந்த தேவைகளுக்காக உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் கடந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தின்  குறிப்புகளையும் ஆண்டறிக்கையையும் நிதியத்தின் செயலாளர் திருமதி விதுஷினி அருளானந்தம்  சமர்ப்பிப்பார். நிதிச்செயலாளர் செல்வி திவானா கிருஷ்ணமூர்த்தி நிதியறிக்கையை  சமர்ப்பிப்பார்.

துணை நிதிச்செயலாளர்  திரு.  விமல் அரவிந்தன், நிதிய உறுப்பினர் திரு. ரவி – ரவீந்திரன் ஆகியோர்,  நிதியத்தின் ஊடாக  பயனடையும் மாணவர்களின்  நிதிக்கொடுப்பனவு மற்றும் அவை  சார்ந்த நிருவாக நடைமுறைகள்  குறித்த விளக்கங்களை உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பர்.

கல்வி நிதியத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை நடைபெறவிருக்கும் ஆண்டுப்பொதுக்கூட்டத்திற்கு வருகை தருமாறு நிதியத்தின் பரிபாலனசபை அன்புடன் அழைக்கின்றது.

மாணவர்களுக்கு உதவ விரும்பும் அன்பர்கள் பின்வரும் இணைப்பில் தங்கள் விபரங்களை பதிவுசெய்துகொள்ளலாம்.

 https://csefund.org.au/membership/#account/join

----0----

சுப்பர் சிங்கர் பாடகர்களின் இசை அமுதம் 2022 - August 26 Friday