மரண அறிவித்தல்

 




சின்னக் கலைவாணர் நடிகர் விவேக் காலமானார்

Saturday, April 17, 2021 - 9:18am



- கொவிட் தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்கிறது ஒரு தரப்பு
- மறுப்புத் தெரிவிக்கிறது தமிழக அரசு

நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (17) காலமானார். மரணிக்கும்போது அவருக்கு வயது 59.

நேற்று (16) வெள்ளிக்கிழமை வீட்டில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். சிம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்ட அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார். அவரது உடல், சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்று அவருக்கு சிகிச்சை அளித்து வந்த சிம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் விஜயகுமார் சொக்கன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "காலை 11 மணியளவில் சுயநினைவிழந்த நிலையில், நடிகர் விவேக் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு அவரது குடும்பத்தினரால் கொண்டு வரப்பட்டார். அவரது உடல்நிலையை நிபுணர்கள் குழு பரிசோதித்தது. பின்னர் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் எக்மோ சிகிச்சையில் உள்ள விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது," என்று கூறப்பட்டிருந்தது.

விவேக் என்ற ஜனங்களின் கலைஞனின் ஓய்வு


கானா பிரபா 

ஈழத்து எழுத்துலக ஆளுமை "ஞானம்" தி.ஞானசேகரன் அகவை 80 இல்


கானா பிரபா



ஈழத்து எழுத்துலக ஆளுமை "ஞானம்" தி.ஞானசேகரன் அகவை 80 இல் கடந்த ஏப்ரல் 15

ஆம் திகதி காலடி எடுத்து வைத்தார்.

ஐம்பது வருடங்களைக் கடந்து ஈழத்தின் தனித்துவம் மிக்க எழுத்தாளராகத் திகழும் இவரின் இன்னொரு முகம் “ஞானம்” என்ற சஞ்சிகையைக் கடந்த 21 வருடங்களாகப் பிரதம ஆசிரியராக இருந்து தொடர்ந்து வெளியிட்டு வருவது. தற்போதைய சூழலில் வெளிவருகின்ற ஈழத்துச் சஞ்சிகைகளில் இதுவே இவ்வளவு தொடர்ச்சித் தன்மை கொண்ட சஞ்சிகை ஆகும்.
வைத்திய கலாநிதி தி.ஞானசேகரன் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கும் சமயம் அவரின் இலக்கிய வாழ்வு குறித்த நீண்டதொரு ஒலி ஆவணப்படுத்தலைக் செய்திருந்தேன். அந்தப் பகிர்வைக் கேட்க



 

நிலம் உள்ளார் மனமெங்கும் நலவுணர்வு எழ வேண்டும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  
மெல்பேண் ... அவுஸ்திரேலியா



கொண்டாடும் விழாக்கள் எல்லாம்
நன்றாக நடக்க என்று
மன்றாடி நிற்கும் மக்கள்
மனம் மகிழ்ந்து வரவேண்டும் 

வண்டாகப் பறந்த மக்கள்
வதைப்பட்டு நோய் வலைக்குள்
திண்டாடி தவித்து நிற்கும் 
சிக்கலெலாம் சிதற வேண்டும் 

கைகோர்த்துப் போக வேண்டும்
களியாட்டம் அமைய வேண்டும்
மெய்தொட்டு பழக வேண்டும்
விதம்விதமாய் உண்ண வேண்டும்

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் - 37 நாடக மேடை அனுபவங்கள்: கற்றதும் பெற்றதும் ! தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் ! முருகபூபதி

 


எனது  எழுத்தும் வாழ்க்கையும் தொடரில் , இந்த அங்கத்தை எழுதாமல் கடந்து  செல்லமுடியாது.  இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில் பங்களிப்பினை வழங்காத படைப்பாளிகளோ கலைஞர்களோ இருக்கமாட்டார்கள். 

அதனால் நானும் விதிவிலக்கல்ல.

மனனம் செய்வது வேறு,  கிரகிப்பது வேறு.  என்னால்


எதனையும் மனனம் செய்யமுடியாது.  ஆனால், மற்றவர்கள் பேசும்போது   அந்தப் பேச்சின் சாராம்சத்தை உள்வாங்கி, கிரகித்து மனதில் தேக்கிக்கொள்வேன்.

ஆரம்ப பாடசாலையில் படிக்கும்போது, எமது ஆசிரியர் நிக்கலஸ் அல்பிரட், ஒரு சமயம் மதுவிலக்கு வாரத்தை முன்னிட்டு, குடி கெடுக்கும் குடி என்ற நாடகத்தை எழுதி இயக்கும்போது, அதில் வரும் தாய் பாத்திரத்திற்கு  மாணவிகளை தெரிவுசெய்ய முயன்றபோது, எவரும் முன்வரவில்லை.

அவர்களை பெற்றவர்களும்  அதற்குச் சம்மதிக்கவில்லை. இறுதியில் அந்த அம்மா வேடத்திற்கு நான்தான் கிடைத்தேன்.

வெட்கத்துடன் நடித்தேன். எனது அம்மாவின் சேலையும் ரவிக்கையும், செயற்கையான கூந்தலும் கிடைத்தது.  எனது அக்கா எனக்கு ஒப்பனை செய்தார்.

குடிகார மகன் தொல்லை தாங்க முடியாமல், அந்தத்தாய் ஒரு வீட்டில் வேலைக்காரியாக தஞ்சமடைகிறாள். குடிப்பதற்கு பணம் தேடி அலையும் மகன், அந்த வீட்டில் திருடச்சென்றபோது,  இருட்டிலே தனது தாய் என்று தெரியாமல், அவளை கத்தியால் குத்திவிட்டு திருடுவதற்கு முயற்சிப்பான்.

சிந்திக்க வைக்கும் சிறப்பான சித்திரை !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ...... அவுஸ்திரேலியா

 

           

  கொண்டாட்டங்கள்  - வாழ்விலே புத்துணர்வை ஏற்படுத்தி உற்சா கமாய் இருப்பதற்கு நல்லதொரு வழி காட்டிகளாய் விளங்குகின்றன எனலாம். ஒவ்வொரு கொண்டாட்டங்களும் வருகின்ற வேளை அதாவது வருவதற்கு முன்னும் வந்த நிலையிலும் வாழ்விலே ஒரு வசந்தம் வந்து அமைவதை காணமுடிகிறது எனலாம். ஆனந்தம் வருகிறது ! அகமகிழ்வு வருகிறது ! வீடும் நாடும் விடிவு பெற்றது போல ஒரு எண்ணங்கூட உதயமாகிறது  எனலாம். அதனால்த்தான் ஆண்டுதோறும் கொண்டாட்டங்கள் அமைந்திருக்கின்றன. மாதத்தில் கொண்டாட்டம். வருஷத்தில் கொண்டாட்டம் என்று கொண்டாட்ட ங்கள் என்பது வாழ்விலே நிறைந்தே இருக்கிறது.நிறைந்தே இருக் கும் வண்ணம் சமூகக் கட்டமைப்பு வளர்ந்து வந்துள்ளது என்பதை மனமிருத்தல் அவசிய மானதேயாகும். அந்தவகையில் வரப்போகி ன்ற சித்திரைத் திருநாளைப் பற்றி எண்ணிப் பார்ப்பது பொருத்தமாய் இதுக்கு மென்று எண்ணுகிறேன்.

என்றுமே உன் சிரிப்பால் இருந்திடுவாய் வாழ் வெல்லாம் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மெல்பேண் .. அவுஸ்திரேலியா




சிரிக்க வைத்த கலைவாணா
சென்று விட்ட தேனையா
விவேகமுடன் கதை சொல்லி
விதம்விதமாய் படந் தந்தாய்

சிந்திக்க வைத்து நின்றாய்
சிறப்பாக படித்துச் சொன்னாய்
சந்திக்கு மரம் நட்டாய்
சளைக்காது ஓடி நின்றாய்

பாரதத்தின் பெரும் விருதாய்
பத்மஶ்ரீ நீ பெற்றாய்
பலபேரும் மெச்சும் வண்ணம்
பசுமைக்கு வழி வகுத்தாய்

இப்படி எல்லாமே பறிபோகப்போகிறதே ! பொன் குலேந்திரன் - கனடா

 

கண்ணீர்  வடித்தேன்  என்  காணி  நிலை  கண்டு.

கண்டு  கொள்ளவில்லை  அந்த கயவர்கள் .

கடை சியில் கண்டு  பிடித்தனர்     புத்தர் சிலையொன்றை .

 

இந்த  காணி    பௌத்த  சிங்காவர்கள்  வாழ்ந்த   காணி

இது  எப்படி  உனக்கச்   சொந்தமாகும்?   

 இது அவர்கள்  என்னை கேட்ட  கேள்வி



 வன்னி .jpeg

ஸ்வீட் சிக்ஸ்டி 8- நல்லவன் வாழ்வான் - ச சுந்தரதாஸ்

.  



அறிஞர் அண்ணாவை தன அரசியல் ஆசானாக வரித்துக் கொண்டவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவரின் பெயரிலேயே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி ஆட்சியைப் பிடித்தார். அண்ணாவின் வசனங்களை பேசி நடிக்க வேண்டும் என்ற ஆசையை எம்ஜிஆருக்கு ஏற்படவே அதன் பலனாக உருவான படம் தான் நல்லவன் வாழ்வான். எம் ஜி ஆரின் 50வது படமாக உருவான இதனை தயாரித்து இயக்கியவர் ப.நீலகண்டன்

இந்த படத்தின் மூலம்தான் எம்ஜிஆருக்கு ஏராளமான பாடல்களை எழுதிய வாலி முதன்முறையாக அவருக்கு பாடலை எழுதினார். சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் என்ற அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. அதேபோல் மிக அரிதாக இசையமைப்பாளர் டி ஆர் பாப்பா எம்ஜிஆரின் இந்தப் படத்திற்கு இசை அமைத்திருந்தார்.


இலங்கைச் செய்திகள்

ஜனாதிபதியினால் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி 

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

மாநகரை தூய்மையாக்கும் எனது பயணம் தொடரும்

அமெரிக்கத் தலையீட்டை கேட்கிறோம்

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு அரசியலமைப்புக்கு முரணானது


ஜனாதிபதியினால் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி 

ஜனாதிபதியினால் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி-President Issues Extraordinary Gazette notification Banning 11 Muslim organizations Linked to Extremist Activities Under the PTA

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்றைய திகதியிடப்பட்ட (13) குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கையொப்பத்துடன் வௌியடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 அமைப்புகளைத் தடை செய்ய சட்ட மாஅதிபர் கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தார். அவை அனைத்து அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகள் என்பதோடு, ஏனைய மதத்தைச் சேர்ந்த எந்தவொரு அமைப்புகளும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CTJ, ACTJ, SLTJ உள்ளிட்ட 11 அமைப்புகளை தடை செய்ய அனுமதி-11 Islamic Organization Including SLTJ ACTJ CTJ Connected to Extremist Actitivities

ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) எனும் பெயரில் வரும் அனைத்து உப அமைப்புகளின் பெயர்களும் அதில் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில்,

தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகள்

  1. ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ)
  2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ)
  3. சிறீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ)
  4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ)
  5. ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம்-ஈ-அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா
  6. தாறுல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குரான் மத்ரச மறுபெயர் தாறுல் அதர் அத்தபாவிய்யா
  7. சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) மறுபெயர் ஜம்இய்யா
  8. ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) மறுபெயர் அல் - தௌலா அல் - இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா
  9. அல்கய்தா அமைப்பு
  10. சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம்
  11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு

நூலைப் பற்றி நாலுவரி - துயிலாத ஊழ் -ஆழியாள்-



பத்துச் சமகால ஈழத்துச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பாக துயிலாத ஊழ் வெளிவந்திருக்கிறது. இக்கதைகளை அகரமுதல்வன் தேர்ந்து தொகுத்திருக்கிறார்.

 

தொகுப்பாசிரியர் மற்றும் படைப்பாளியின் நிலைப்பாடு/களுக்கு அப்பால், படைப்பு என்ன சொல்ல வருகிறது எதை, எப்படிப் பேசுகிறது என்று வாசிப்பதற்கும், உரையாடுவதற்குமான  பன்மைத்துவமிக்க ஒரு  பண்பாட்டு வெளியை  துயிலாத ஊழ் ஏற்படுத்தித் தருகிறது.

உலகச் செய்திகள்

இளவரசர் பிலிப் மறைவுக்கு UK இல் 8 நாட்கள் துக்கதினம் 

மியன்மாரில் 80க்கும் மேற்பட்ட போராட்டக்காரர் சுட்டுக்கொலை

ஈரானின் அணு உலை வெடிப்பை பயங்கரவாத செயலாக அறிவிப்பு

இளவரசர் இறுதிச் சடங்கு: அரச குடும்பத்தில் சர்ச்சை


இளவரசர் பிலிப் மறைவுக்கு UK இல் 8 நாட்கள் துக்கதினம் 

- 17ஆம் திகதி வின்சர் கோட்டையில் நல்லடக்கம்

பிரித்தானிய இளவரசரும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவருமான பிலிப் மறைவையடுத்து எதிர்வரும் 17ஆம் திகதி வரை துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீ ராம நவமி 21/04/2021

 

SRI VENKATESWARA TEMPLE(SVT)

1 Temple Road, Helensburgh, Sydney, NSW – 2508, Australia



விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமர், ராவணனின் அழிவுக்காக பூமியில் இறங்கினார். இந்து பாரம்பரியத்தில், ராமர் “மராயத புருஷோத்தமான்” என்று கருதப்படுகிறார், பரிபூரணத்தின் உயரத்தை எடுத்துக்காட்டுகின்ற ஒரு சரியான மனிதர், ஒரு மனிதனால் அடைய முடியும். தர்மத்தின் பாதுகாவலரும் ஆதரவாளருமான விஷ்ணுவின் மிக முக்கியமான அவதாரங்களில் ஒன்றாக அவர் கருதப்படுகிறார். அவர் நல்லொழுக்கத்தின் உருவகம் மற்றும் தர்மத்தை உறுதியாக கடைபிடிப்பது, அல்லது சரியான செயல். இறைவன் எஸ்.ஆர்.ஐ ராமர் சைத்ரா மாதத்தின் சுக்லா பக்ஷத்தின் (ஒன்பதாம் நாள்) “நவாமி திதியில்” பிறந்தார். அவரது மகிமையில் நாள் “ஸ்ரீ ராம நவமி” என்று கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவிற்கு ராமர் பெயரிடப்பட்டது, இது பொதுவாக ராமாயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தாய் சீதா தேவி, ஸ்ரீ லக்ஷ்மணா மற்றும் அஞ்சநேயா / ஹனுமான் ஆகியோரைக் குறிக்கும்.

இந்த ஆண்டு “ஸ்ரீ ராம நவமி” ஏப்ரல் 21 புதன்கிழமை  கொண்டாடப்படுகிறது.

கண்ணாதிட்டி குளத்தை பார்வையிட போனேன் - மைல்வாகனம் சூரியசேகரம்


 நான் வசிப்பது ராசாவின் தோட்ட வீதியில். குப்பை எடுக்க யாழ் நகரசபை ஒழுங்காக வருவதில்லை. எனது உக்கக் கூடிய/ உக்க முடியாத குப்பைகளை யாழ் நகர சபை சேகரிக்க ஒழுங்காக வருவதில்லை. ஆகவே வழமைபோல் இவற்றை சைக்கிளில் கண்ணாதிட்டி சேகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று கொடுத்து விட்டு அருகிலுள்ள கண்ணாதிட்டி குளத்தை பார்வையிட போனேன். இதன் அருகில் காளி கோயில் ஒன்று இருக்கிறது. படங்களைப் பார்க்கவும் கீழே.

இந்த குளத்தில் நடைபெற்று வரும் ஆக்கிரமிப்புகளை அவதானிக்கலாம்.
முதலில் கடவுளின் பெயரில் நடக்கும் ஒரு சர்வாதிகாரமான யாரும் கேட்க முடியாத ஆக்கிரமிப்பு, தேர்தரிப்பிடத்திற்கருகில்
இரண்டாவது CEB யின் ஆக்கிரமிப்பு (அவர்களால் கை விடப்பட்ட தூண்கள்)
மூன்றாவது ஆங்காங்கே பலராலும் குளத்திலும் குளத்தின் அருகிலும் போடப்பட்ட குப்பைகளும் கழிவுகளும் மற்றும் ரசாயன கழிவுகளும். பல்லாயிரக்கணக்கான மீன் வகைகள் உயிரிழந்து மீன் பிணங்களால் குளம் முழுவதும் நாறத் தொடங்கியது. குளத்தை சுற்றி வசித்த குடும்பங்களின் ஏகோபித்த மனு ஒன்றின் பின் மணிவண்ணன் தலைமையில் floating pontoon மூலம் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் நடை பெற்று வருகிறது.
நாலாவது இயற்கையின் ஆக்கிரமிப்பு, அழகான மிதக்கும் தாவரங்கள். இவை குளத்தின் நீரை ஆவியாக இழப்பதை தடை செய்யும் ( cuts down evaporation losses).
நகர சபையின் பராமரிப்பு வேதனைக்குரிய விடயம்.

ஸ்ரீ மீனாட்சி திருக் கல்யாணம் - ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலயம் - 25/04/2021



மீனாட்சி திருக் கல்யாணம் திருவிழா மீனாட்சி அம்மனின் தெய்வீக திருமணத்தை சிவபெருமானுடன் கொண்டாடுகிறது.மீனாட்சி திருக் கல்யாணம் புகழ்பெற்ற ‘சித்திரை திருவிழா’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும். இந்த திருவிழா சித்திரை  மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மீனாட்சி திருக் கல்யாணம் ஏப்ரல் 25 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.