மரண அறிவித்தல்

.
திரு செல்லையா செல்வராசா


                                      பிறப்பு : 15.12. 1955 — இறப்பு : 01.08 2017

.            
யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செல்வராசா அவர்கள் 01-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா(சித்த வைத்தியர்), சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிறேமா அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சினி, திவிக்கிரம்(றமணா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சின்னம்மா, காலஞ்சென்ற தங்கரத்தினம், சிவயோகம், தவச்செல்வம், செல்வராணி, தேவராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நடராசா, காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், குலசேகரம்பிள்ளை, மற்றும் ஆனந்த செல்வக்குமார், தவேந்திரலிங்கம், புஸ்பலதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவச்செல்வம் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61411894194
றமணா — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61425235051
சிறினிவாசன்(முகுந்தன்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61420612339
தேவராணி — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61468568229

நிழலாடும் நினைவு..! - பெருவை பார்த்தசாரதி

.
வாழ்க்கையெது இன்னதென்று வகுத்துச் சொல்ல
வாழ்வோடு நிழலாகவரும் நினைவுகள் வழியாகும்.!

நிலையிலா வாழ்வினில் நிழலாடும் நினைவலைகள்
நிம்மதிதரும்.! நினைவுப் பாதையில் ஒவ்வொன்றாக.!

முன்னிட்ட விதைகள் பன்னெடுங்காலம் கழிந்து
பின்னெடிய மரங்களாகி சுவாசம்தரு மிக்காலம்.!

பனங் காயிரண்டில் சிறிதாய்ச்சகடை கட்டியதை
பாங் காயுருட்டிப் பலமைல்கடந்த பாலபருவம்..!

கழுதைவாலில் பனைமட்டை கட்டி யோடவிட்டு
பொழுதைப் பகலில் வீணேகழித்த வாலிபக்குறும்பு.!

எதுகிடைக்கினும் காலாலே காததூர முதைத்தே
எத்திச்சென்று எங்கோ விட்டுவந்த இளமைக்காலம்.!

தட்டான் தும்பியைப் பக்குவமாய்ப் பிடித்துவந்து
பட்டத்தை யதன்வாலில் கட்டிப்பறக்க விட்டநேரம்.!

இன்பம் காணுவோமொரு துன்பத்திலே போலும்
துன்புறுத்தி மகிழவொரு ஓணான் கிடைத்தகாலம்.!

வெடிக்காத பட்டாசை வெகுவாய்ச் சேர்த்துவந்து
படித்த பேப்பரிலே புஸ்வானம்செய்த இளமைக்காலம்.!

பருவத்தில் துளிர்விடும் துடித்த இளஞ்சிலிர்ப்பால்
பருவமங்கை மேனியை பயத்தால்தொட்ட ஸ்பரிசம்.!

இலங்கையில் பாரதி - அங்கம் 27 - முருகபூபதி

.

பேராசிரியர் கைலாசபதி  இறுதியாக  எழுதிய முன்னுரை


                                                                 
பேராசிரியர் க. கைலாசபதி தமது வாழ்நாளில் ஆயிரக்கணக்கான பக்கங்களை தமது கையினாலேயே எழுதியிருப்பவர். அவருடைய நூல்களின் எண்ணிக்கையிலிருந்தும், பத்திரிகைகள், இதழ்கள், சிறப்புமலர்கள் மற்றும் ஏனைய  படைப்பாளிகளின் நூல்களுக்கு எழுதியிருக்கும்  முன்னுரைகளிலுமிருந்தும்  பல்லாயிரம்  பக்கங்களை அவர்  தமது கையெழுத்தினாலேயே  வரவாக்கியிருப்பதை அறிவோம்.
ஆனால், அவர் சொல்லச்சொல்ல எழுதப்பட்ட ஒரு முதல் உரை வெளிவந்த நூல்  பற்றி அறிந்திருப்போமா...?
அவர் கொழும்பு அரச மருத்துவமனை படுக்கையிலிருந்தவாறே சொல்லச்சொல்ல எழுதப்பட்ட முதல் உரைதான் அவரது இறுதி உரையாகவே  அமையும்  என்று  நாம்  எதிர்பார்த்திருக்கவில்லை.
அந்த உரையை அவர் 27-11-1982 ஆம் திகதி எழுதத்தொடங்கினார். ஆனால், எதிர்பாராத விதமாக அவரைத்தாக்கிய நோயின் உபாதையினால் அவரால் தொடர்ந்தும் எழுத முடியாமல்போனது. எனினும் தான் எடுத்த எந்தக்கடமையிலிருந்தும் தவறாமல் சிறந்த நிருவாகி  என்ற பெயரெடுத்த அந்த ஆளுமை எம்மிடத்தில் அந்தக்கடமையையும்  நிறைவுசெய்து தந்துவிட்டே, 06-12-1982 ஆம் திகதி தமது கண்களை நிரந்தரமாக மூடிக்கொண்டார்.


சுந்தரமூர்த்தி நாயனார் குருபூசை 06 08 17

.

Text Box: Sri Venkateswara Temple Association Inc.
Temple Road, Helensburgh, NSW 2508, Australia
Telephone :  (02) 4294 3224 (Please call between 19.30 to 21.30 hours)
Webpage: http://www.svtsydney.org                    Email: secretary@svtsydney.org

       பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
      ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
      வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி  ஊழிமலி திருவாத வூரர்திருத்தாள் போற்றி

Sundaramoorthy Nayanar Guru Pooja

All devotees are invited to attend this program and to participate in ‘Thevaram’ chanting. A copy of ‘Thirumurai’ book for chanting will be made available. Devotees may participate in the whole program or a part thereof at their conveniences

Date:        06/08/2017 - SUNDAY
Venue:     Shiva Temple complex

8:30 am:       Abhishekam, alankaram and maha deeparadhana  for Niruthi Valampuri Ganapathy followed by abhishekam for Moolavar & panchaloka  idols of Sundaramoorthy Nayanar(Sundarar) Chanting of Sundarar’s Thevaram.

12:30 pm:      Special Pooja for Sundarar’s panchaloka idol and procession

            within Siva complex Followed by Maha deeparathana

கவி விதை - 24 - பெறுமதி - -- விழி மைந்தன் --

.


சின்னஞ்சிறு கிளியாய், செல்வக்   களஞ்சியமாய்,  அந்த வீட்டில் ஒரு குழந்தை இருந்தது.

வண்டுக் கண்களை  அகல விரித்து வருவோரைப்பார்த்தது. 

மதுரக் கலசம்   சிந்தியது போல் மழலை மொழிந்தது. 

வானத்தில்  இருந்து வந்த குட்டித்தேவதை மண்ணில்  வளர்வதென  வளர்ந்து வந்தது.

தந்தையும் அன்னையும் வேலைக்குப்போகும் தனிக்குடித்தனம் அது. வேறு யாரும் கிடையாது வீட்டில். பொருட்செல்வத்தினால்  குறைவில்லை அவர்களுக்கு. பிள்ளைக்கு  என்றால் அள்ளிச்  செலவழிப்பார்கள். கேட்டதெல்லாம் வாங்கிக்  கொடுப்பார்கள். விளையாட்டுப் பொருட்களும், விரும்பிய  தின்பண்டங்களும், அழகிய  உடைகளும், அதிகமாகவே கிடைத்து வந்தன அந்தக் குழந்தைக்கு.

காலை விடிந்து, குழந்தை கண்மலர்கள்  திறக்கு  முன்பே தூக்கி  விடுவார்கள். அரைத்தூக்கத்தில் உடை  அணிவித்து, உணவூட்டி, அவசர அவசரமாய்ச் செவிலியர் வீட்டுக்கு அழைத்துச்  செல்வார்கள். அன்பு முத்தம் கொடுத்து இறக்கி விட்டுவிட்டு வேலைக்கு ஓடி விடுவார்கள்.   மாலையில் வந்து வீட்டுக்கு அழைத்து  வருவார்கள். வரும்போது, இனிப்புப்பண்டமோ, விளையாட்டுப்பொருளோ  கொண்டு வருவார்கள், ஒரு இலஞ்சம் போல!

வார இறுதிகள், கண்மூடித் திறக்க முன் மறைந்து விடும்.

சிறைக்குள் ரெஸ்­ரர் கடத்தல். நல்லூர் துப்பாக்கி சூட்டு சந்தேகநபரின் மனைவி



.

நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபருக்கு அவரது மனைவி ரெஸ்­ரர்  (மின்சாரம் பரிசோதிக்கும் கருவி ) ஒன்றினை பொதிக்குள் வைத்து கொடுக்க முயன்ற வேளை சிறைசாலை காவலர்களால் அது கைப்பற்றப்பட்டு உள்ளது.
யாழ்.சிறைச்சாலையில் தனி சிறைகூடத்திலேயே சந்தேகநபர் தனி நபராக தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். அந்நிலையில் சந்தேகநபரின் மனைவி சிறையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளவருக்கு உடைகளை வழங்க பொதி செய்து சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களிடம் கையளித்துள்ளார்.
அந்த பொதியினை சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் சோதனையிட்ட போது, அதனுள் இருந்து ரெஸ்­ரர் (மின்சாரம் பரிசோதிக்கும் கருவி ) ஒன்று மீட்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மனைவியை கடுமையாக எச்சரித்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் , கணவனை பார்க்க சிறைக்கு வருவதற்கும் தடை விதித்துள்ளனர்.
பின்னணி. 
நல்லூர் பின் வீதியில் கடந்த 22ஆம் திகதி மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்து இருந்ததுடன் , மற்றுமொரு மெய் பாதுகாவலர் காயமடைந்திருந்தார்.
அந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சிவராசா ஜெயந்தன் கடந்த 25ஆம் திகதி யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அதனை அடுத்து குறித்த நபரை யாழ்.நீதவான் முன்னிலையில் போலீசார் முற்படுத்திய போது சந்தேக நபரை எதிர்வரும் 8ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு இட்டு இருந்தார்.

Nantri குளோபல்  தமிழ்ச் செய்தி

நாநலம் 2017 (ஞாயிறு 06/08 - 5:30மணி) - -அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்-








திரையாண்ட கலைஞர் வைரமுத்து

.

எட்வர்டு மைபிரிட்ஸ் 1830-ல் அசைவுகளைப் படமாக்கினார். அதன் தொடர்ச்சியாகப் படச் சுருளை உருவாக்கினார் ஈஸ்ட்மென். படக் கருவியை உண்டாக்கினார் தாமஸ் ஆல்வா எடிசன். இப்படி மூவர் கூடிப் பெற்ற குழந்தையாய் சினிமா பிறந்தபோது உலகம் அறிந்திருக்காது, அத்தனை கலைகளையும் உள்ளிழுக்கப்போகும் ஆக்டோபஸ் கலை அதுவென்று. 1897-ல் சென்னை விக்டோரியா ஹாலில், தமிழர்கள் அதுவரை காணாத ஒரு கருவியினால் ‘அரைவல் ஆஃப் தி டிரெயின்’ (Arrival of the Train) படத்தை எட்வர்ட்ஸ் அறிமுகப்படுத்தியபோது, திகைப்பில் ஆழ்ந்த தமிழர்கள் அறிந்திருக்க மாட்டார்கள், அந்தக் கருவிக்குள் கருவாகித்தான் ஐந்து முதலமைச்சர்கள் தமிழகத்தை ஆளப்போகிறார்கள் என்று.
மெளன யுகம் முடிந்து பேசும் படம் பிறந்தபோது தமிழ் சினிமா பாடும் படமாகவே இருந்தது. தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ 1931-ல் வெளிவந்தபோது அதில் 50 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. 1934-ல் வெளிவந்த ‘பவளக்கொடி’யிலும் 50 பாடல்கள். ‘சீதா கல்யாணம்’ படத்தில் பாடல்களின் எண்ணிக்கை 22. 1936-ல் வெளிவந்த ‘நவீன சாரங்கதாரா’வில் 41. 1944-ல் ‘ஹரிதாஸ்’ 20 பாடல்களோடு வெளியானது. நடிகர்களே பாடகர்களாகவும் பாடகர்களே நடிகர்களாகவும் இயங்கிவந்த மேடை நாடகங்கள் திரைப்படத் தேரேறியபோதும் பாடல்கள் என்ற பண்ட மூட்டைகளை விட்டெறியவோ குறைத்துக்கொள்ளவோ முடியவில்லை. பாடல்கள் பெரும்பாலும் சம்ஸ்கிருதம் கொண்டே சமைக்கப்பட்டன. வெண்பொங்கலில் காணக் கிடைக்கும் மிளகுபோல சம்ஸ்கிருதத்துக்கு மத்தியில் தமிழ்ச் சொற்களும் ஆங்காங்கே தட்டுப்பட்டன. ‘வதனமே சந்த்ர பிம்பமோ - வசந்த ருது மன மோஹனமே - என் ஜீவப்ரியே ஷியாமளே - சாரசம் வசீகர கண்கள்’ என்றெல்லாம் இசைத்தன. வசனங்களிலோ பிராமண மொழியும் மணிப்பிரவாளமும் பின்னிப் பின்னிக் கொஞ்சிக் குலாவின.

இலங்கைச் செய்திகள்


பசில், நாமல், ஜோன்ஸ்டன் உள்­ளிட்ட 23 பேருக்கு  எதி­ராக எப்.சி.ஐ.டி.யினால் 12 வழக்­குகள் தாக்கல்

ஷிராந்தி ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்

15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு  : 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவுக்கு உரிமையானது

கனடாவில் ஆட்­க­டத்தல் குற்­றச்­சாட்டு நான்கு இலங்கைத் தமி­ழர்கள் விடு­தலை

மெய்ப்பாதுகாவலரின் பிள்ளைகளை தத்தெடுத்தார் நீதிபதி இளஞ்செழியன்

கறுப்புப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீங்கியது  

நீதிபதி இளஞ்செழியனின்  மெய்ப்பாதுகாவலர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் பொலிஸில் சரண்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிபதிக்கு ஆதரவு கோரி போராட்டம்


இந்திய தேசிய கீதம் உருவான வரலாறு - ராபியா குமாரன்,

.

(நான் எழுதி 2012ஆம் ஆண்டு சமரசம் இதழில் வெளியான கட்டுரை. ஜன கண மன, சாரே ஜஹான்சே அச்சா, வந்தே மாதரம் ஆகிய மூன்று பாடல்களின் பின்னணி, வரலாற்று நிகழ்வுகள், சர்ச்சைகள் ஆகியவற்றை அலசி எழுதப்பட்ட கட்டுரை. வந்தே மாதரம் பாடல் குறித்த சர்ச்சைகள் நாடு முழுவதும் எழுந்துள்ள நிலையில் இக்கட்டுரையை மீள்வாசிப்பு செய்வது அவசியம் என்று கருதுகிறேன்.)

1947, ஆகஸ்ட் 14 ஆம் நாள் இரவு. கடிகார முள் 11.59யைக் கடந்து 12.00 மணியை அடைந்தது.  சுதந்திரக் காற்று இந்தியா முழுவதும் வீசத் தொடங்கி, ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் சுவாசக் குழலையும் ஈரப்படுத்தியது.
நாடாளுமன்றத்தில் கூடியிருந்த அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களுக்கு மத்தியில் திருமதி. சுஸேதா கிருபாளினி மற்றும் டாக்டர். சுசீலா நய்யார் ஆகியோர்,
'சாரே ஜஹான்சே அச்சாஹ், ஹிந்துஸ்தான் ஹமாரா
ஹம் புல்புல்ஹேன் இஸ்கி, ஏ குல்ஸிதான் ஹமாரா..'
என்று பாடிய பாடல் இந்தியாவின் சுதந்திரத்தை பிரகடனம் செய்தது.

ஆம், சுதந்திர இந்தியாவில் தேசிய கீதமாய் முதன் முதலில் ஒலித்தது அல்லாமா முஹம்மது இக்பாலால் எழுதப்பட்ட, புகழ்பெற்ற இப்பாடலே...
தற்போது இந்தியாவின் தேசிய கீதமாக இருக்கும் 'ஜன கண மன' என்னும் பாடலுக்கு சென்ற டிசம்பர் மாதம் 27ஆம் தேதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவிட்ட நிலையில், இந்தியாவின் தேசிய கீதம் உருவான வரலாற்றை அலசுவதற்காகவே இக்கட்டுரை.

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னர் தேசிய கீதத்தை தேர்ந்தெடுக்கும் பொருட்டு மூன்று பாடல்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அவை,

இரவீந்திரநாத் தாகூர் எழுதிய, 'ஜன கண மன...'
பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய, 'வந்தே மாதரம்'
அல்லாமா முஹம்மது இக்பால் எழுதிய,  'சாரே ஜஹான்சே அச்சா' என்னும் பாடல்கள்.

இம்மூன்று பாடல்களின் பின்னணியை முதலில் பார்க்கலாம்.
காங்கிரஸின் எதிர்ப்பால் வங்கப் பிரிவினையை திரும்பப் பெற்று, உத்தரவு பிறப்பித்த மன்னர் ஐந்தாம் ஜார்ஜை வரவேற்கும் பொருட்டு 1911 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் எற்பாடு செய்யப்பட்டிருந்த காங்கிரஸின் மாநாட்டின் இரண்டாவது நாளான டிசம்பர் 27 அன்று  'ஜன கண மன' பாடல் முதன் முதலாகப் பாடப்பட்டது.

ஜெயமோகன் சிறுகதைக்கு சர்வதேசப் பரிசு!

.

தைவானிலிருந்து வெளிவரும் அஸிம்டோட் (Asymptote) இலக்கிய இதழ் உலக இலக்கிய மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்திவருகிறது. சமீபத்தில் இந்த இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசை வென்றிருக்கிறது ஜெயமோகனின் ‘பெரியம்மாவின் சொற்கள்’ சிறுகதை. இந்தக் கதையைத் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருப்பவர் சுசித்ரா ராமச்சந்திரன். 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட 215 சிறுகதைகளிலிருந்து ஜெயமோகனின் சிறுகதையை முதல் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுத்திருப்பவர் விமர்சகர் டேவிட் பெல்லோஸ்.
ஜெயராணி, திவ்யா பாரதிக்கு பெரியார் சாக்ரடீஸ் விருது!



பெரியாரியரும் பத்திரிகையாளருமான பெரியார் சாக்ரடீஸை நினைவுகூரும் வகையில் வழங்கப்பட்டுவரும் ‘பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது - 2017`க்குப் பத்திரிகையாளர் ஜெயராணியும் ஆவணப்பட இயக்குநர் திவ்யா பாரதியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வாழ்த்துகள்!

Gayatri Day 2017


இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் சமீபத்திய அறிக்கை.

.
இலங்கை மாணவர் கல்வி நிதியம்  - அவுஸ்திரேலியா (இணை)
                   CEYLON  STUDENTS  EDUCATIONAL  FUND  (Inc)
                  P.O.Box  317. Brunswick, Victoria, 3056, Australia
   kalvi.nithiyam@gmail.com                                           www.csefund.org
அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்த 2017 மே 10 ஆம் திகதி முதல் ஜூன் 12 ஆம் திகதி வரையில் இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் கம்பஹா பிரதேசங்களில் மேற்கொண்ட பணிகள் பற்றிய குறிப்புகள்:



அவுஸ்திரேலியாவில் கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் (Ceylon Students Educational Fund ), தனது பணியில் 29 ஆண்டுகளை நிறைவுசெய்துகொண்டு, தொடர்ந்தும் செயல்படுகிறது.
இலங்கையில் நீடித்த போரினாலும் இயற்கை அநர்த்தங்களினாலும்  தாய், தந்தையரை அல்லது குடும்பத்தின் மூல உழைப்பாளியை இழந்த ஏழைத்தமிழ்ச்சிறார்களின் கல்விக்கான தேவைக்கு உதவும் எமது நிதியம், கடந்த காலங்களில் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் குறித்தும் அக்கறை காண்பித்துவந்துள்ளது.
இலங்கையில் நடைபெறும் க.பொ.த. (சாதாரண தரம் ) (G.C.E O/L) க.பொ.த. (உயர்தரம்) (G.C.E A/L) பரீட்சைகளைத்தொடர்ந்து பல மாணவர்கள் தமது கல்வியை நிறுத்துவதையும் - தொழில் வாய்ப்புகளுக்காக  கல்வியை  இடைநிறுத்துவதையும் நிதியம் அவதானித்திருக்கிறது.
முடிந்தவரையில் நிதியத்தின் உதவிபெறும் மாணவர்கள் தமது உயர்கல்வியை பல்கலைக்கழகம்வரையில் தொடரவேண்டும், அல்லது தொழில்நுட்ப கல்வியை தொடரவேண்டும் என்பதே நிதியத்தின் உறுப்பினர்களின் விருப்பமாகும்.

உலகச் செய்திகள்


14 வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்

75 மைல் தூரம் பய­ணித்து எதி­ரி­களின் விமா­னங்­களை தாக்கக் கூடிய புதிய வகை ஏவு­கணை

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலகினார்

சற்றுமுன் மாலைதீவின் பாராளுமன்றம் இராணுவத்தால் அதிரடி சுற்றிவளைப்பு



பாழாகும் எம்.ஜி.ஆர். பங்களா! பரிதவிக்கும் அண்ணன் குடும்பம்!



.

"நினைத்ததை முடிப்பவன்' என்பது எம்.ஜி.ஆர். படத்தின் டைட்டில் மட்டுமல்ல, அவரது வாழ்க்கையும்தான். திரை நாயகனாக, தமிழகத்தின் முதல்வராக  நினைத்ததை முடித்தவர் எம்.ஜி.ஆர். ஆனால், நினைத்தும் நிறைவேறாத ஒன்று உள்ளது. அதற்கு சாட்சியமாக இன்னமும் இருக்கிறது, திருச்சி காவிரிக்கரையில் பாழடைந்திருக்கும் அந்த பங்களா. 
காவேரி கரையிருக்கு... கரைமேலே...

எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் காவிரிக்கரை என்பது முக்கியமானது. தந்தை இறந்ததால் இலங்கையிலிருந்து வந்த அவரது குடும்பம் தங்கியது, காவிரிக்கரையான கும்பகோணத்தில்தான். அங்குள்ள யானையடி பள்ளியில் எம்.ஜி.ஆரும் அவர் அண்ணனும் ஆரம்பப் பாடம் பயின்று, அதன்பிறகு நாடக மேடைக்குச் சென்றார்கள். திருச்சி காவிரிக்கரையில் பல நாடகங்களில் நடித்திருக்கிறார்கள். அந்தக் கரையில்,  தனது ஓய்வு காலத்தின் சில நாட்களை அங்கே கழிக்க வேண்டும் என எம்.ஜி.ஆரின் மனதில் ஆசை உண்டு. 

திராவிட கட்சிகளின் வரலாற்றில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட இடம் திருச்சி. இங்கே நடந்த தி.மு.கவின் இரண்டாவது மாநில மாநாட்டில்தான் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. சென்டிமெண்ட்டுகளில் நம்பிக்கையுடைய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வின் 2-வது மாநில மாநாட்டை திருச்சியில் நடத்தி திருப்புமுனையை உண்டாக்கினார். பிறகு தனதுஆட்சியின் நலத்திட்டங்களில் முக்கியமான சத்துணவுத் திட்டத்தையும் திருச்சியிலேயே  தொடங்கி வைத்தார். திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மாற்றப்போவதாக தனது ஆட்சிக் காலத்தில் எம்.ஜி.ஆர். அறிவித்தார். 

பயணியின் பார்வையில் --- அங்கம் 07 - முருகபூபதி

.
வடமாகாண சபை நிழல் யுத்தமும் - ஆயுத யுத்த    வலிகளின் வாக்குமூலமும்                                                              
   
                                                             

யாழ்ப்பாணம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில், மே மாதம் 20 ஆம் திகதி  யாழ். அரசாங்க செயலகத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஆதரவுடன் கல்வியைத்தொடரும் மாணவர்களின் ஒன்றுகூடலுக்கு செல்வதற்கு தயாராகிக்கொண்டிருந்தேன்.
அரியாலையில் தபால் கட்டைச்சந்தியில் எனக்கொரு குஞ்சியம்மா இருக்கிறார்கள். இவர்கள் பற்றி எனது சொல்லமறந்த கதைகள் நூலில் பதிவுசெய்துள்ளேன்.
அவர்களுடைய வீட்டிற்கு அருகில்தான் நடந்துசெல்லும் தூரத்தில் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் பணிமனை இயங்குகிறது.
இந்தத்  தன்னார்வத்தொண்டு நிறுவனம் பலவருடகாலமாக ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்துவருகிறது. இந்த அமைப்புத்தான் அவுஸ்திரேலியாவில் இயங்கும் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பு.
இதனை ஸ்தாபித்தவர்களில் ஒருவர்தான் தற்பொழுது வடமாகாண சபையின் தவிசாளர் திரு. சி.வி.கே. சிவஞானம். போர் முடிவுற்றபின்னர் இந்த அமைப்பு கொக்குவில் இந்துக்கல்லூரியில் 2010 ஜனவரியில் நடத்திய மாணவர் ஒன்றுகூடலுக்கு சிவஞானம்தான் தலைமைதாங்கினார்.
அவர் தேர்தலில் நிற்க தயாரானதும் இந்த அமைப்பிலிருந்து ஒதுங்கிக்கொண்டார். அவர்  மாகாணசபையில்  தவிசாளரானார். அவருடன் இணைந்து இந்த தன்னார்வத்தொண்டு நிறுவனத்தை இயங்கவைத்த திரு. பாலதாயனந்தன், சில வருடங்களுக்கு முன்னர் எமது பராமரிப்பிலிருக்கும் மாணவர்களுக்கு நிதிக்கொடுப்பனவு வழங்கிவிட்டு  திரும்புகையில் வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளினால் மோதுண்டு படுகாயமுற்றார்.
அதனைசெலுத்திவந்தவர்கள் கவால் துறையினர்.  அந்தவிபத்தைக் கண்டவர்கள் பாலதாயனந்தனை யாழ். மருத்துவமனையில் அனுமதித்தனர். சாட்சிகள் இருந்தும் காவல்துறைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை.  இச்சம்பவம் பற்றி அறிந்ததும், அவுஸ்திரேலியாவிலிருந்து தவிசாளர் சிவஞானம் அவர்களுடன் தொடர்புகொண்டு, பாலதயானந்தனுக்கு ஏதும் வழிகளில் உதவுமாறும் சொன்னேன்.


பாரத மாதாவின் எழுச்சி மகன்! - ரா.ந.ஜெயராமன் ஆனந்தி

.


தாயின் கருவில் தாயகம் காக்க..
உதித்து எழுந்த தலைமகனே!
தொப்புள் கொடி அறுத்து 
தேசியக் கொடி உன்னை இணைக்கும் என்று
தாயின் கண்ணீர் சொன்னது
புனித பூமியில் உதித்து மேலும்
புனிதம் சேர்த்த புனிதன் .. நீ!


அன்னை கொதிவிட்ட நேர்வாக்கு
அப்துல்கலாமின் தலைஎழுத்தை மட்டும் அல்ல
இந்தியாவின் தலையெழுத்தை அன்றே
நிருபித்தவள்.. இந்தியா உச்சம் தொடும் என..

விட்ட படிப்பை தொடரவிட்டது அக்காவின் கை வளையல்
அடகுகடையில் தத்தளித்தது
உந்தன் மனதையும் அடகு வைத்தாய்..
இந்தியா  வல்லரசாக வேண்டும்-என

கடைக்கோடி குடிமகன் 
அரசு பள்ளியில்-தன்
அசுர உழைப்பால்
உச்சம் தொடலாம் என உச்சம்
தொட்டுக்காட்டிய முதல் குடிமகன் நீ!!


விஞ்ஞானத்தை நாட்டிற்கும்
மெய்ஞானத்தை இளைஞர்களுக்கும்
விதைத்த பாரத மாதாவின் எழுச்சி மகன்.. நீ

வாழ்த்துக் கூறுவோம் ! - எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண்

.

         ஹப்பி பேர்த்டே  என்றுபாடும்
         கால மதை மாற்றுவோம்
         கன்னித் தமிழில் பாட்டுப்பாடி
         கலகலப்பை ஊட்டு வோம்
         அம்மா பாலில் எமக்குதந்த
         அன்னைத் தமிழைப் பாடுவோம்
         அன்னியத்தை அணைத்து நிற்கும்
         அவலம் அதைப் போக்குவோம் !

            கேக்கை வெட்டி விளக்கணைக்கும்
            கேளிக்கையை விரட்டு வோம் 
            நாக்கில் இனிமை சொட்டசொட்ட
             நல்ல தமிழைப் பாடுவோம்
            வீட்டில் உள்ள பெரியவரை
            வீழ்ந்து வணங்கி நின்றுமே 
            வாழ்த்து வாங்கி ஆசிபெற்று
             வளமாய் தமிழில் பாடுவோம் !

              அப்பா அம்மா அருகணைத்து
              அக மகிழ்ந்து பாடுவோம் 
              அக்கா அண்ணா தம்பியோடு
              அழகு தமிழில் பேசுவோம் 
              பக்குவமாய் இனிப்பு வழங்கி
              பலரும் மகிழப் பாடியே 
              செப்பமாகப் பிறந்த நாளை 
               சிறப்பாய் செய்து மகிழுவோம் !

தமிழ் சினிமா



மீசைய முறுக்கி


தன்னம்பிக்கையோடு நம்மால் முடியும் கனவு காணுங்கள் என அப்துல் கலாம் சொன்னதை போல இசையே வாழ்க்கை என்று நம்பிக்கையோடு களமிறங்கிய ஹிப் ஹாப் ஆதியின் வாழ்க்கையை மையமாக வைத்து அவரே இசையமைத்து நடித்து இயக்கிய படம் தான் மீசையை முறுக்கு.

http://dimg.zoftcdn.com/s1/photos/albums/photos/cinema/tamil/films/m/meesaya_m/ms/meesayamuruku_ms001/img/625.0.560.320.100.600.197.800.1600.160.90.jpgகதைக்களம்

விவேக்கின் இரண்டு மகன்களில் ஒருவர் ஆதி. சிறுவயதிலே இருந்தே குறும்புத்தனத்துடன் நண்பர்களோடு சுற்றி திரியும் நபர். ஆனால் இசை மீது சிறுவயதிலிருந்த ஆர்வம் அதிகம். ஸ்கூல் பருவத்திலிருந்தே நண்பன் விக்னேஷ் காந்துடன் தனது கலாட்டாக்களை அரங்கேற்றுவார்.
ஆதியின் சேட்டைகள் அதிகமானதால் விவேக் கோயம்புத்தூரில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் ஆதியை சேர்க்கிறார் அவருடன் விக்னேஷ் காந்தும் அதே கல்லூரியில் படிக்கிறார். ஒவ்வொரு இளைஞர்களின் கல்லூரி வாழக்கை மறக்கமுடியாதோ அதே போல் இவர்களின் கல்லூரிவாழ்க்கையும் ராக்கிங், சீனியர், ஜூனியர் சண்டைகள், ஆதியின் காதல், கல்ச்சரல் என்று ஆதியின் வாழ்க்கை நகர்கிறது.
அதே சமயம் தன்னுடைய இசைக்கான தேடுதலை கல்லூரி ஆண்டுவிழாவிலிருந்து தொடங்கிறார். இந்நேரத்தில் தான் கல்லூரி காலம் முடிந்து அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் போது Independant இசைமைப்பாளர் ஆக வேண்டும் என்று விவேக்கிடம் சொல்கிறார்.
மியூசிக் எல்லாம் வாழ்க்கைக்கு செட் ஆகாது என்று விவேக் சொல்ல, ஒரு வருடம் டைம் கேட்டு சென்னைக்கு கிளம்புகிறார். தன்னுடைய இசை கனவுக்கான வாழ்க்கையில் ஜெயித்தாரா? இடையில் பிரிந்த தன்னுடய காதல் ஜெயித்ததா? எப்படி சினிமாவில் இசைமைப்பாளர் ஆனார் என்பது தான் இந்த மீசையை முறுக்கு.

நடிகர், நடிகைகளின் பங்களிப்பு

ஆதி தன்னுடய இசை வாழ்க்கையின் வலிகளை மிகவும் தத்ருபவமாக நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலுக்கும் பின்னாடி ஒரு கதை வைத்தது இயக்குனராக ரசிக்க வைக்கிறது. தன் வாழ்க்கையை கண்முன் காண்பித்த விதம் ஒவ்வொரு இளைஞருக்கும் உத்வேகத்தை கொடுக்கும்,
நண்பராக வரும் விக்னேஷ் காமெடியில் கலக்கியுள்ளார், முக்கியமாக யூடுப் ஷாரா டைமிங் காமெடி சிறப்பு, படத்தில் நடித்த நண்பர்கள் அனைவருமே நன்றாக செய்துள்ளனர்.
ஹீரோயின் ஆத்மீகா காதலால் சிக்கித்தவிக்கும் காட்சிகள் மிக இயல்பு, யதார்த்தமான அப்பாவாக விவேக் சார் பிரதிபலிக்கிறார். வாழ்க்கை ஒரு நீச்சல் மாதிரி, நீந்தி தான் கத்துக்க முடியும், உன்னால் முடியும் அதே சமயம் படிப்பும் முக்கியம் என்று மகனுக்கு ஹீரோவாக திகழ்கிறார். விவேக் சார் நடித்ததில் இதுவும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரம்.

கிளாப்ஸ்

உத்வேகத்தை கொடுக்கும் திரைக்கதை,
ஆட்டம் போடவைக்கும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை
ஆதியின் வாழ்க்கையில் நடந்த உண்மை கதையை ரசிக்கும் விதம் கொடுத்தது

பல்ப்ஸ்

முதல் பாதியின் நீளம், கொஞ்சம் போர் அடிக்கும் பழைய காட்சிகள்
ஒர்க்கவுட் ஆகாத சில காமெடி காட்சிகள்
ஆதி இசையமைப்பாளராக ஜெயிக்க வேண்டும் என்று தன் வாழ்கையில் பட்ட கஷ்டத்தை இயக்குனராக காட்டியதில் ஜெயித்து விட்டார். முக்கியமாக கடைசியில் அந்த இரண்டு அடிமைகள் செம பினிஷிங் டச் (படம் பார்த்தவர்களுக்கு புரியும்)
மொத்தத்தில் இயக்குனராக மீசைய முறுக்கி ஜெயித்து விட்டார் ஆதி.
Direction:
Production:
Music:


நன்றி  Cineulagam