பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 07 ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதிக்குள், தேசியக் கொடியை ஏற்றிவைக்குமாறும் அமைச்சர் அனைவரிடமும் கேட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது தலைமையில், காலி முகத்திடலில், பெப்ரவரி 4 ஆம் திகதி காலை 9 மணி முதல் இடம்பெறவுள்ள  71 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வில், மாலை தீவு புதிய ஜனாதிபதி இப்றாஹீம் முஹம்மத் சாலிஹ், விசேட அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.