தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

காத்திடுவோம் வாருங்கள் !
























காதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … ஆஸ்திரேலியா




பண்பாடு கலாசாரம் காத்திடுதல் முக்கியமே
பண்பாடு கலாசாரம் கண்போன் றிருக்கிறது
கண்ணின்றி வாழ்தல் எண்ணவே முடியாது
கண்ணான கலாசாரம் காத்திடுவோம் வாருங்கள்

காட்டிலே திரிந்தோம் நாட்டை உருவாக்கினோம்
கடவுளை உணர்ந்தோம் கருணையை அறிந்தோம்
மனிதனாய் வாழ வழிகளும் கண்டோம் 
இலக்கியத்தை  இலக்கணத்தை எம்முடமை ஆக்கினோம்

பண்பாடு கலாசாரம் பலவாறு காத்தோம்
பாருலகில் பக்குவமாய் வாழவும் செய்தோம்
நாகரிக எல்லைக்குள் நச்சுக்குள் புகுந்திடவே
பண்பாடு கலாசாரம் பதறியே துடிக்கிறது

மிகைப்படுத்தும் மேதாவிகள்!

 


-சங்கர சுப்பிரமணியன்




நம்மில் சிலரைப் பார்த்திருப்போம் சாதாரணமாக பேசும்போது கூட மிகைப் படுத்தி பேசுவார்கள். எதுவானதாக இருக்கட்டும் அதில் முதன்மையாக இருப்பவர்போல் காட்டிக் கொள்வார்கள். ஆனால் அதில் துளிகூட உண்மை இருக்காது. இவர்களது தற்பெருமையை தாங்கவே இயலாது. இப்படிப்பட்டவர்கள் நமக்கு நண்பர்களாக வாய்த்துவிட்டால் நம் கதி அதோகதிதான்.

ஆரம்பத்தில் இவர்களது தற்பெருமைகளை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் போகப்போக கேட்டு கேட்டு புளித்துவிடும். ஒருவர் பெருமைக்கு உரியவராக இருப்பதில் தவறில்லை. ஆனால் அந்த பெருமை பிறர் நம்மைப் பற்றிக் கூறுவதாக இருக்க வேண்டும். தான் இறைச்சியுண்டது மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக எழும்பை மாலையாக அணிந்து சுற்றுவதுபோல் இருக்கக்கூடாது.

நண்பர்கள் ரகுவும் விமலும் ஒருநாள் மாலை மீனாட்சி அம்மனிடம் இத்தகையவர்களை மாற்றும்படி முறையிட்டார்கள். முறையிட்ட கையோடு தெற்குவெளி வீதியில் உள்ள அந்த பிரபலமான உணவகத்தில் நுழைந்தார்கள். அப்போது திரும்பவும் தற்பெருமை பற்றிய பேச்சு தொடரவே,

“அது அப்படித்தான். அவர்களைப்பற்றி குறைகூறவும் முடியாது”என்றான் ரகு.

“என்னடா இது. இப்பத்தான் அம்மனிடம் முறையிட்டோம் அதற்குள் அந்தர் பல்டி அடிக்கிறாயே”

“இல்லடா, பாவம் அவர்கள். அவர்களை யாரும் பாராட்டாததால் தம்மைத்தாமே பாராட்டி ஆறுதல் அடைவார்கள்”

“அதற்கு என்ன செய்வது? நாம் பிறரை பாராட்டினால்தானே மற்றவர்கள் நம்மைப் பாராட்டுவார்கள்” என்றான் விமல்.

இந்த பேச்சை இத்தோடு விடுவோம். நான் இப்போது இரண்டு மேதாவிகளைப் பற்றி சொல்கிறேன் கேள் என்ற ரகு கதையைத் தொடங்கினான். மிகவும் பிரபலமான புள்ளி விபர நிபுணர்கள் வாஷிங்டனில் இருந்து சிட்னியில் நடைபேறும் கலந்தாய்வு கூட்டமொன்றில் கலந்துகொள்ள விமானத்தில் பயணித்தனர்.

சிங்கப்பூர் தமிழரின் 200 ஆண்டு கால வரலாற்று ஆவணம்

 

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையமும் தேசிய நூலக வாரியமும் இணைந்து உருவாக்கிய ‘சிங்கப்பூர்த் தமிழர்க் கலைக்களஞ்சியம்’ மின்னூல், சிங்கப்பூரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உருவாகிய முதல் கலைக்களஞ்சியம் எனும் சிறப்பைப் பெற்றுள்ளது.

'சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியத்தை அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்னம் மின்தளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வெளியிட்டார். 200 ஆண்டு கால வரலாற்று ஆவணமான இது, சமூகம், கலை, பண்பாடு, கல்வி, அரசியல் என சிங்கப்பூர் தமிழ் மக்களின் வாழ்வியல் களம் குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளது.அதனைப் பார்வையிட 

இந்தப் பெரும்பணியின் முன்னணி செயற்பாட்டாளர்களாக இயங்கிய கலைக்களஞ்சியத்தின் தலைமை ஆசிரியர் திரு.அருண் மகிழ்நன் (ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழ் ஊடகம், பண்பாட்டுச் செயற்பாட்டாளர்) , துணை ஆசிரியர்கள் திரு.அழகிய பாண்டியன் (தேசிய நூலக வாரியத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவின் தலைவர்) ,  திரு.சிவானந்தம் நீலகண்டன் (எழுத்தாளர்) ஆகியோரோடு ஆஸி தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக எடுத்திருந்த 
நேர்காணலைச் செவிமடுக்க



உலகத் தமிழருக்கு ஒரு முன்மாதியான, பெறுமதியான  இவ் இணையக் கருவூலத்தின் பின்னால் உள்ள உழைப்பு, இதன் இயங்கு நிலை, புதிய தொழில் நுட்பத்தினை உள்வாங்கி நிகழ்த்தியிருக்கும் பல்பரிமாண முறைமை என்று தங்கள் அனுபவ உழைப்பை இந்தப் பேட்டியின் வழியாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

நாளை நமதே - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 

படத்தில் நடிப்பதற்கு உச்ச நடிகரை அணுகிய போது முதலில் அவர் மறுத்து விட்டார். இசையமைப்பதற்கு இசையமைப்பாளரை அணுகிய போது முதலில் அவரும் மறுத்து விட்டார். இயக்குவதற்கு டைரக்டரை முதலில் கேட்ட போது அவரும் ஆர்வம் காட்டவில்லை. இவ்வளவுக்கு பின்னரும் அதே நடிகர், மியூசிக் டைரக்டர், அதே இயக்குனர் பணியாற்ற படம் தயாராகி திரைக்கு வந்தது. அந்தப் படம் தான் நாளை நமதே. 


 ஹிந்தியில் வெளிவந்து அமோக வெற்றியை பெற்ற படம் யாதோங்கி

பாரத். இளம் நடிகர்களுடன் நடுத்தர வயதான தர்மேந்திராவும் நடித்த இப் படம் அப் படத்தின் படல்களுக்காகவும், இசைக்காகவும் நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடி சாதனை புரிந்தது. இந்த யாதோங்கி பாரத்தை தமிழில் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தயாரிப்பாளர் கே. எஸ். ஆர் மூர்த்திக்கு எப்படியோ ஏற்பட்டு விட்டது. அது மட்டுமின்றி படத்தை எம் ஜி ஆர் நடிப்பில் தயாரிக்க வேண்டும் என்ற ஆசையும் அவருக்கு தோன்றி விட்டது. யாதோங்கி பாரத் சென்னையில் நூறு நாட்கள் அல்ல, நூறு வாரங்கள் ஓடித் தள்ளியது. இவ்வாறு தமிழகத்தில் வெற்றி பெறும் ஹிந்தி படங்களை மீண்டும் தமிழில் எடுக்க முன் வருவோர் குறைவு. ஆனாலும் மூர்த்திக்கு ஓர் ஆசை . ஹிந்தி படத்துக்கு கிடைத்த வெற்றியை பார்த்து மிரண்டு போன எம் ஜி ஆர் தமிழில் தான் நடித்தால் சரியாக வருமா என்று ஆரம்பத்தில் தயங்கினார். ஆனாலும் மூர்த்தி அவரை சமாதான படுத்தி சம்மதிக்கவும் வைத்து விட்டார். 



மலையாளத்தில் படங்களை டைரக்ட் பண்ணி விருதுகளை பெற்றவர் கே. எஸ் சேதுமாதவன். இவருடைய ஓடையில் நின்னு, பனிதீர்த்தவீடு, மறுபக்கம், நம்மவர் போன்ற படங்கள் இந்திய தேசிய விருதுகளை சுவீகரித்து கொண்டன.ஆரம்ப காலத்தில் தமிழில் இவர் இயக்கிய பால்மனம், கல்யாண ஊர்வலம் இரண்டு படங்களும் சரிவர போகாததால் தமிழ் சினிமாவை விட்டு இவர் விலகியே இருந்தார். இந்த சேதுமாதவனின் சகோதரர்தான் மூர்த்தி. ஆனாலும் படத்தை இயக்க சேதுமாதவனுக்கு முதலில் இஷ்டம் இல்லை. நாளை நமதே தயாரிப்பு பற்றி எம் ஜி ஆரிடம் பேசப் போன மூர்த்தி தன்னுடன் சேதுமாதவனையும் அழைத்து சென்றார். சென்ற இடத்தில் படத்தை சேதுமாதவனா இயக்கப் போகிறார் என்று எம் ஜி ஆர் கேட்க மூர்த்தி ஆம் என்று சொல்லி விட்டார். இதன் காரணமாக சேதுமாதவன் எம் ஜி ஆர் படத்துக்கு டைரக்டரானார். 

திருப்பதி ஆண்டவர். நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்.


 மகா விஷ்ணுவே வெங்கடாசலபதிபாலாஜி என்ற பெயர்களில் திருப்பதியில் எழுந்தருளி உள்ளார். ஒருசமயம் மகாவிஷ்ணுவிற்கும் அவரது துணைவியான மகாலக்ஷ்மிக்கும் சிறிது சர்ச்சை ஏற்பட்டது.
அதனால் விஷ்ணு மனம் நொந்து ஒரு இடத்தில் போய் அமர்ந்துவிட்டார். இவரை சுற்றி கறையான் புற்று எழுந்துவிட்டது. ஒரு இடையனோ ஏதோ காரணத்தால் தன் கையில் உள்ள கோடரியால் கறையான் புற்றை தகர்க்க முனைந்தான். இதனால் மகாவிஷ்ணு காயப்பட்டு இரத்தம் வடிய ஆரம்பித்தது. உடனே பார்வதி தேவியார் பிரசன்னமாகி தனது தலை முடியில் ஒரு பகுதியை வெட்டி விஷ்ணுவின் வெட்டுக்காயத்தில் கட்டுப்போட்டார். இந்த செயலை நினைவு கூறும்   முகமாகவே பக்த கோடிகள் திருப்பதியில் தமது தலை முடியை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறார்கள் என்பதே ஐதீகம்.

 இவ்வாறு தனது தலைமுடியை காணிக்கையாக கொடுகக்க வரும் பக்தர்களின் தலை முடியை எடுக்க 1000 ஆண் நாவிதர்கள்,பெண்களின் முடியை எடுக்க 50 பெண் நாவிதர்கள் உண்டு.இவர்கள் ஷிப்ட் முறையில் நாள் பூராவும் தலை முடிகளை மழிக்கிறார்கள்.

குபேரனின் மருகரான திருப்பதி வெங்கடாசலபதியின் ஆடை ஆபரணங்கள் மிகுந்த படாடோபமானது,. அவரது முதல் கிரீடத்தை அவரது மாமனாரான குபேரனே அவருக்கு கொடுத்தார் என நம்பப்படுகிறது. நான் தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் The Hindu பத்திரிகையில் வெங்கடாசலபதிக்கு மிக உயர்ந்த ரக வைரங்கள் பதிப்பித்த கிரீடம், வைரத்திற்கு பெயர் பெற்ற பெல்ஜியத்தில் இருந்து தருவிக்கப்பட்டதாக படத்துடன் செய்தி பிரசுரமாகி இருந்தது, இதன்பெயர் வஜ்ஜிர கிரீடம். இது 28,367 வைரங்கள் பதிப்பிக்கப் பட்ட விலையுயர்ந்த அரிய கற்களால் ஆக்கப்பட்டது,. இதுதவிர வெங்கடாசலபதி 110 கிலோ எடை உள்ள ஆபரணங்களை அணிந்திருப்பார். அவரது அபய கரமான வைகுண்ட கஸ்தம் தங்கத்தினால் ஆனது. பல விலையுயர்ந்த முத்து,மாணிக்கம்,வைரம் , வைடூரியம் பதிக்கப்பட்டிருக்கும்  அவரது ஆடையான வேஷ்டியோ தங்கத்தினாலான நூலால் நெய்யப்பட்டிருக்கும். அதன் எடை மட்டும் 40 கிலோ,.

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

27-09- 2025  Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'

25-10-2025 Sat: சிட்னி துர்கா கோவிலில்  நிதி திரட்டும் இரவு விருந்து

26-10-2025 Sun: சிட்னி துர்கா கோவில்  மண்டபத்தில் தமிழர் விழா - துர்கா போட்டிகள் மற்றும் திருக்குறள் போட்டிகளுக்கான பரிசளிப்பும் நடைபெறும்

29-11- 2025  Sat: Australian Medical Aid Foundation proudly presents முத்தமிழ் மாலை

பாலஸ்தீனம் தொடர்பில் ஐக்கிய இராச்சியத்தின் நிலைப்பாடு ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது?

 Published By: Vishnu

05 Aug, 2025 | 02:43 AM

(ஸ்ரான்லி ஜொனி)

இஸ்ரேல் காசாவில் போர்நிறுத்தம் ஒன்றுக்கு இணக்கி, பெருமளவு மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு அனுமதிக்காவிட்டால்,  இரு அரசுகள் விதிமுறையின் அடிப்படையில் நீண்டகால சமாதானம் நோக்கிச் செயற்படுவதில் உறுதிப்பாட்டை காண்பிக்காவிட்டால், எதிர்வரும் செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரில் தனது அரசாங்கம் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்ராமெர் கடந்தவாரம் அறிவித்தார்.

மற்றைய நாடுகளின் அறிவிப்பு என்ன? 

செப்டெம்பரில் பாலஸ்தீனத்தின் அரசு அந்தஸ்தை (Statehood ) பாரிஸ்  அங்கீகரிக்கும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பிரகடனம் செய்த சில தினங்களில் ஸ்ராமெரின் அறிவிப்பு வந்தது. தங்களுக்கும் அதே நோக்கம் இருப்பதாக கனடாவும் போர்த்துக்கலும் கூட அறிவித்தன. 

காசாவில் 21 மாதகால போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்,இஸ்ரேல் அதன் மிகப்பெரிய இராஜதந்திர நெருக்கடிகளில் ஒன்றுக்கு முகங்கொடுக்கிறது. இஸ்ரேலின் பாரம்பரியமான நேச அணிகளான மேற்குலகின் பல நாடுகள் பாலஸ்தீனத்தின் அரசு அந்தஸ்து தொடர்பில் அனுகூலமான நிலைப்பாடுகளை கடைப்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. 

அங்கீகாரப் போக்கின் முக்கியத்துவம் என்ன? 

ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் ஏற்கெனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துவிட்டன.  இதுவரை பலம் பொருந்திய மேற்கு நாடுகள் அவ்வாறான அங்கீகாரத்தை எதிர்த்து வந்தன. இஸ்ரேல் -- பாலஸ்தீன முரண்நிலைக்கு காணப்படக்கூடிய இறுதி இராஜதந்திர தீர்வின் ஒரு அங்கமாகவே அத்தகைய அங்கீகாரம் அமையவேண்டும் என்று அந்த நாடுகள் காரணமும் கூறின. ஆனால், அந்த நிலைப்பாடு தற்போது மாற்றமடையத் தொடங்கியிருக்கிறது.

இலங்கைச் செய்திகள்

 அவுஸ்திரேலியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது : ஜனாதிபதியுடனான சந்திப்பில் அவுஸ்திரேலிய ஆளுநர்  நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் தெரிவிப்பு

திராய்க்கேணி படுகொலை ; 35 வது ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை - கண்ணீருடன் மக்கள்

செம்மணி மனித புதைகுழி தொடர்பில்சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும்-உமா குமரன்

செம்மணி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட சான்றுகள்: 200 பேர் பார்த்தும் எதுவும் அடையாளம் காட்டப்படவில்லை – சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா

செம்மணி மனிதப் புதைகுழி: மேலும் 6 எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டுபிடிப்பு



அவுஸ்திரேலியா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது : ஜனாதிபதியுடனான சந்திப்பில் அவுஸ்திரேலிய ஆளுநர்  நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் தெரிவிப்பு

07 Aug, 2025 | 09:50 PM

அவுஸ்திரேலிய ஆளுநர்  நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.

அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான 75 ஆண்டுகளுக்கும் மேலான நட்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இரு நாடுகளின் பரஸ்பர நன்மைக்காக தற்போதுள்ள ஒத்துழைப்புத் துறைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இங்கு விரிவாக  கலந்துரையாடப்பட்டன.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தெளிவான தலைமையின் கீழ் வெற்றிகரமான பயணத்திற்கு அவுஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவை வழங்க தயாராக உள்ளது என்று அவுஸ்திரேலிய ஆளுநர்  நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் வலியுறுத்தினார்.

உலகச் செய்திகள்

காசா நகரை முழுமையாக இஸ்ரேலிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் திட்டம்- இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி 

காசாவிற்குள் மனிதாபிமான உதவிகளை விமானம் மூலம் போட்டது கனடா -இஸ்ரேலிற்கு எதிராக கடும் குற்றச்சாட்டு

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: வீடுகளை அடித்துச் சென்ற பெருவெள்ளம் - ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

சிங்கப்பூர் தமிழ் மக்களின் 200 ஆண்டு கால வரலாற்று ஆவணம் வெளியிடப்பட்டது

இந்தியாவுக்கு வர்த்தக அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு



காசா நகரை முழுமையாக இஸ்ரேலிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் திட்டம்- இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி 

Published By: Rajeeban

08 Aug, 2025 | 08:21 AM

காசா நகரை இஸ்ரேலிய இராணுவத்தினரின முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவருவதற்கான பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் காசா நகரத்தை கைப்பற்றுவதற்கான திட்டம் குறித்தும் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான ஐந்து அம்ச திட்டம் குறித்தும் தெரிவித்துள்ளுத

காசா நகரை கைப்பற்றுவதற்கான திட்டத்தினை இஸ்ரேலிய இராணுவத்தினர் முன்னெடுப்பார்கள் அதேவேளை மோதல் இடம்பெறும் பகுதிக்கு வெளியே உள்ள மக்களிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி 27/09/2025



முத்தமிழ் மாலை 29/11/2025