நல்லிணக்கம் சமாதானம் நாட்டிலோங்கச் செய்திடுவோம் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ....... அவுஸ்திரேலியா


            வெறி   கொண்டு    அலைகின்ற  
                  நெறி  பிறழ்ந்த  கூட்டமதால் 
             கறை   படியும்  காரியங்கள் 
                    கண்  முன்னே  நடக்கிறது 
             பொறி புலன்கள் அவரிடத்து 
                    அழி என்றே சொல்லுவதால்
             குடி மக்கள் என்னாளும் 
                     கதி  கலங்கிப்   போகின்றார்   ! 


            மதம்  என்னும்  பெயராலே 
                  மதம் ஏற்றி  நிற்கின்றார் 
            சினம்  என்னும் பேயதனை
                    சிந்தை கொள  வைக்கின்றார்
            இனம் என்னும் உணர்வுதனை
                    இருப்பு கொள்ள வைக்குமவர்
             தினம் தீங்கு செய்வதிலே
                    திருப்தி  உற்று  திரிகின்றார்  !

த்தூ..




maxresdefault.jpg

னையோலை காலத்தை
தமிழாலே நெய்தோரே,
ஒரு பிடி தமிழள்ளி
உயிர்வரைக் குடித்தோரே;

பசுமாட்டு சாணந் தட்டி
பசி நெருப்பை தணித்தோரே,
சுரைக்காயில் சட்டிசெய்து
சம தர்மத்தை அளந்தோரே;

மரத்திலும் நதியிலும்
இறையச்சம் கண்டோரே,
கும்பிட்டப் படையலையும்
நான்கு காகத்தோடு தின்றோரே;

சிட்னியில் சித்திரைத் திருவிழா 2019


தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் சிட்னியில் உருவாக்கப்பட்டு தமிழரது ஆதாரக்கலைகளை புலம்பெயர் சூழலிலும் தான் தொடங்கிய  தினம்தொட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்மொழி மற்றும் கலைகளுக்கான ஆக்கபூர்வமான செயற்பாட்டைச் செய்து வருகின்றது. 

இந்த ஆண்டு எட்டாவது ஆண்டாகத் தனது சிட்னியில் சித்திரைத் திருவிழா எனும் பெருநிகழ்வை சிட்னியின் Blacktown Leisure Centre எனும் பெரும் உள்ளரங்கத்தில் நாள் முழுக்க தமிழர்களின் கொண்டாட்டமாக நிகழ்த்தியது. முன்னைய ஆண்டுகளைவிட ஒருபடிமேலே சென்று அரங்கம் நிறைந்த மக்களின் பேராதரவோடு கொண்டாடி மகிழ்ந்தது.

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் அனகன் பாபுவுடன் கழக உறுப்பினர்கள் சக நிகழ்ச்சித் தொகுப்பாளர் மகேஸ்வரன்  பிரபா, ஶ்ரீதரன் திருநாவுக்கரசு மற்றும் காந்திமதி தினகரன் ஆகியோர் நிகழ்வைத் திறம்பட நடத்தி முடித்தனர்.

ஆஸ்திரேலிய பொது தேர்தல் - ஆளுங்கட்சி மீண்டும் அபார வெற்றி


19/05/2019 ஆஸ்திரேலிய பொதுதேர்தலில் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆளுங்கட்சி மீண்டும் வெற்றிபெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா தேர்தல் - கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி

அவுஸ்திரேலியாவின் நவீன சிற்பி என்று வர்ணிக்கப்படும் பொப் ஹேய்க் (Bob Hawke) மறைந்தார்



அவுஸ்திரேலியாவின் 23 ஆவது பிரதமராக 1983 முதல் 1991 ஆம் ஆண்டு வரை செயலாற்றிய தொழிற் கட்சித் தலைவர் பொப் ஹேய்க் தனது 89 வது வயதில் நேற்று காலமானார்.

இவரது ஆட்சிக் காலத்தில் உலகப் பொருளாதார சமூகத்துடன் அவுஸ்திரேலியாவை இணைத்து இதன் வழி திறந்த பொருளாதார அமைப்பின் அடுத்த நிலைக்கு இட்டுச் சென்றதோடு, Medicare என்னும் அரச மருத்துவக் காப்பீட்டு முறைமையை அமுலாக்கி இந்த நாட்டின் குடிமக்களின் பெருவாரியான அபிமானத்தைப் பெற்றுக் கொண்டவர். சுற்றுச் சூழல் மீதான இவரின் கரிசனையும் அதன் வழியான செயற்பாடுகளும் குறிப்பிடத்தக்கவை.

ஒரு இலக்கியனின் பருதிப்பார்வை -- அங்கம் 03 ( முதல் பகுதி) காந்தீயவாதியாக வளர்ந்து - மார்க்ஸீய மனிதநேயவாதியாக மாறிய செ. கணேசலிங்கன் - முருகபூபதி


பொன்னாடையோ பூமாலையோ பாராட்டுகளோ வெண்கல வெள்ளித்தகடு விருதுகளோ விசேட பட்டங்களோ வேண்டாம் எனச்சொல்லும் ஒரு ஆக்க இலக்கியப்படைப்பாளி எமது தமிழ் சமூகத்தில் தொண்ணூறு  வயது கடந்தபின்பும் அயராமல் எழுதியவாறு இயங்கிக்கொண்டிருக்கிறார் என்றால்,  அவர் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கையின் மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கன்தான் என்று உறுதியாகப் பதிவுசெய்யமுடியும்.
2008 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன். சென்னையிலிருந்து ஒரு இலக்கிய அமைப்பிடமிருந்து கடிதம் வந்தது. அதில் தமிழகத்தில் வதியும் மூத்த எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்களுக்கு 75 வயது பிறந்துவிட்டது. அதனை முன்னிட்டு இலக்கிய நண்பர்கள் இணைந்து அவருக்கு பவளவிழா நடத்தவிருக்கின்றோம். அந்த விழாவில் வெளியிடுவதற்கு ஒரு மலரைத் தயாரிக்கின்றோம். நீங்களும் கணேசலிங்கன் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பவேண்டும். விரைவில் எதிர்பார்க்கின்றோம். என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நானும் தாமதிக்காமல் ஒரு கட்டுரையை எழுதி தபாலில் அனுப்பிவைத்தேன். மாதங்கள் பல கடந்தும் பவளவிழா நடந்த செய்தியோ மலர் வெளியான தகவலோ எனக்குக்கிடைக்கவில்லை. ஒரு நாள் கணேசலிங்கனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு  “ என்ன நடந்தது?  எனக்கேட்டேன்.
“ பிறப்பதும் இறப்பதும்
வயதுகள் கடப்பதும் இயற்கை – ஆனால் வாழ்வை அர்த்தமுடன் கடப்பதுதானே உன்னதம். எதுவுமே வேண்டாம் உங்கள் அனைவரதும் அன்பு மாத்திரம் போதும்   “ எனச்சொல்லி அன்புக்கட்டளை இட்டேன். – என்று இரத்தினச்சுருக்கமாக பதில் தந்தார்.

பயணியின் பார்வையில் - அங்கம் 07


" சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்

முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது"

                                                                             கவியரசு கண்ணதாசன்
திரைப்படங்களின் பெயர்களை விடுதலை இயக்கங்களுக்கு சூட்டிய இளைஞர்கள் புகலிடத்தில் யாருக்கு பெயர் சூட்டுகிறார்கள்?

                                                                             முருகபூபதி

அலைகள் ஓய்வதில்லை, விடியும் வரை காத்திரு, பயணங்கள் முடிவதில்லை, தூரத்து இடிமுழக்கம், எங்கேயோ கேட்ட குரல் --- இந்தப்பெயர்கள் யாவும் முன்னர் வெளிவந்த திரைப்படங்கள்தான்.
ஆனால், இந்தப்படங்களின் பெயர்களை 1980 களில் ஆயுதம் ஏந்திய தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களுக்கும் வடபகுதி தமிழ் இளைஞர்கள் சூட்டியிருந்தார்கள் என்பது  உங்களுக்கு நினைவிலிருக்கிறதா?
எனக்கு இந்த சுவாரசியங்களை சொல்லித்தந்த ஒரு இளைஞர் கூட்டம் யாழ்ப்பாணம் அரியாலையில் இருந்தது.
எனது வாழ்வில் யாழ்ப்பாணம் அரியாலைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. 1963 இல் தொடங்கிய இந்த உறவு பல தொடர்கதைகளை உள்ளடக்கியது.
நானும் எனது மாமா மகன் முருகானந்தனும் எங்கள் ஊரில் அன்றைய ஆறாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்று யாழ்ப்பாணத்திலிருக்கும் கச்சேரிக்கு அருகாமையில் செல்லும் நாவலர் வீதியில் அரியாலையில் அமைந்திருந்த ஸ்ரான்லிக்கல்லூரியில் அனுமதிபெற்றோம்.
அதற்கு முன்னர் நீர்கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் பாதையில் வரும் சிலாபம், உடப்பு, முன்னேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு அப்பால் சென்றதேயில்லை.  யாழ்ப்பாணத்தையோ   பனைமரத்தையோ தரிசித்திருக்கவில்லை.
அரியாலை புங்கன் குளத்திற்கு அதிகாலைவேளையில் வந்து தரித்துச்செல்லும் கொழும்பிலிருந்து வரும்  இரவு  தபால் ரயில் வண்டி எழுப்பும் ஓசையின்போது,  ஸ்ரான்லிக்கல்லூரி ஆண்கள் விடுதியில் துயில் எழும்பும் எனக்கு வீட்டின் ஏக்கம் வரும். அடுத்த தவணை விடுமுறை வரும் நாட்களை மனம் எண்ணத்தொடங்கும். நாம் அங்கு படிக்கத்தொடங்கிய காலத்தில்தான் அதன் பெயர் கனகரத்தினம் மத்திய கல்லூரியாக மாற்றப்பட்டது.

மக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார்! - வ.ந.கிரிதரன்


மக்கள் இலக்கியம் படைத்த வித்துவான் வேந்தனார்!
 இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் வித்துவான் வேந்தனாரின் எழுத்துலகப்பங்களிப்பு முக்கியமானது. அவரது நூற்றாண்டு விழாவையொட்டி நூற்றாண்டு விழாமலர் 548 பக்கங்கங்களைக் கொண்ட விரிவான நூலாக வெளியாகியுள்ளது. அம்மலரில் வெளியான எனது கட்டுரையிது. மலரைச் சிறப்பாக வெளியிட்ட அவரது மகனும், கவிஞரும் , நண்பருமான வேந்தனார் இளஞ்சேய் அவர்கள் இதன் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார். வாழ்த்துகிறேன். . -

வித்துவான் வேந்தனாரைப் பற்றி எனது மாணவப் பருவத்திலேயே எனக்கு மிகுந்த மதிப்பிருந்தது. வித்துவான்களில் அவர்  சமுதாயப் பிரக்ஞை அதிகமுள்ள, முற்போக்கான வித்துவான். பாரதியின் வழிவந்த மரபுக் கவிஞரான அவர் சிறந்த குழந்தைக்கவிஞர்களிலொருவராகவும் தென்பட்டார். அவரது மானுட விடுதலைக்  கவிதைகளில் தொனிக்கும் முற்போக்குக் கருத்துகளெல்லாம் அவற்றைத்தான் எனக்கு எடுத்தியம்பின. பண்டிதர்கள் என்றாலே பழமைவாதிகள் என்றோர் எண்ணம் நிலவுவதுண்டு. ஆனால் இதற்கு விதிவிலக்காகத் திகழ்ந்த பண்டிதர்களில் வித்துவான் வேந்தனார், எழுத்தாளர் சொக்கன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். வித்துவான் வேந்தனார் அவர்கள் பழமையின் சிறப்பம்சங்களைப்பேணிய அதே சமயம், புதுமையின் சிறப்பம்சங்களையும் உள்வாங்கி இலக்கியம் படைத்தவர்; மக்கள் இலக்கியம் படைத்தவர்.


வேந்தனாரைப்பற்றி விரிவாக அறியும் சந்தர்ப்பம் என் வாழ்க்கையிலேற்பட்டதற்கு முக்கிய காரணம் அவரது புத்திரர்களிலொருவரான வேந்தனார் இளஞ்சேய். நான் யாழ் இந்துக்கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்த சமயம் என் வகுப்பில் என்னுடன் ஒன்றாகக் கல்வி பயின்ற மாணவர்களிலொருவர். என் பதின்ம வயதுகளில் இளஞ்சேயும், நானும் அடிக்கடி வாசிப்பதற்காக ஒருவருக்கொருவர் எம்மிடமுள்ள நூல்களை இரவல்கொடுப்பதுண்டு. பல சந்தர்ப்பங்களில் யாழ் இந்து  மகளிர் கல்லூரிக்கண்மையிலிருந்த அவரது இல்லத்துக்குச் சென்றதுண்டு. அக்காலகட்டத்தில் வேந்தனார் இளஞ்சேய் அவர்கள் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார்.  இன்று தந்தையைப்போல் எழுத்துலகிலும் தன் எழுத்தாற்றலைக் காட்டி வருகின்றார். தந்தையாரின் படைப்புகளைத் திரட்டி , நூல்களாகத்தொகுத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்து வருகின்றார். வாழ்த்துகின்றேன்.

சிலப்பதிகார மகாநாட்டையொட்டி வெளியிடப்படும் மலருக்கு கட்டுரைகள் - 15/07/2019







திருஞானசம்பந்தர் குரு பூசை 26/05/2019

Om Nama Shivaaya  


 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி 

ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி 

வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி 

ஊழிமலி திருவாத வூரர்திருத்தாள் போற்றி 

இலங்கைச் செய்திகள்


யாழ் பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் : 10 பெண்கள் உள்ளிட்ட 85 பேர் கைது

மினுவாங்கொடையில் 12 கடைகள் முழு­மை­யாக தீக்­கிரை, பள்ளிவா­ச­லுக்கும் பலத்த சேதம்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பகுதியில் சிரமதானம் !

விடுதலை புலிகள் மீதான தடையை நீடித்தது இந்தியா!

முல்லைத்தீவில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பிரார்த்தனை

நிச்சயமாக நான் போட்டியிடுகின்றேன்- கோத்தபாய ராஜபக்ச

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி

சிறுமியின் பொதுச்சுடருடன் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

ஜிகாதி பயங்கரவாத்தை ஒழிக்க இலங்கையுடன் கைக்கோர்க்கும் அமெரிக்கா - இந்தியா

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்- ஜெரமி கொர்வின்

”பத்தாண்டுகள் நிறைவில் போரினால் பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தவறியிருக்கிறது ”

ஈஸ்டர் தாக்­குதல்  ; உயிரிழந்தோருக்கு 119.3 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈடு!

யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் ; பிரித்தானியா, கனடா, அமெரிக்கா இரங்கல்!



யாழ் பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை!


17/05/2019 சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட  யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உலகச் செய்திகள்


தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான மியன்மார் ஏர்லைன்ஸ் !

இந்தியாவில் தனது கிளையை தொடங்கிய ஐ.எஸ்...!

இந்தியாவிற்கு மாத்திரமே:அமெரிக்கா உறுதி

பாரிய பொருளாதார சிக்கலை எதிர்நோக்கியுள்ள பாகிஸ்தான்

 ஈரானுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை

அமெரிக்கா தொலைத்தொடர்பு துறையில் அவசர நிலை  பிரகடனம்:ட்ரம்ப் அறிவிப்பு


தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான மியன்மார் ஏர்லைன்ஸ் !

13/05/2019 மியான்மர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான யு.பி - 103 என்ற விமானம், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

JCC OBA - Isai Thendral - 26/05/2019


தமிழ் சினிமா - அயோக்யா திரைவிமர்சனம்


தெலுங்கில் சூப்பர்ஹிட் ஆன டெம்பர் படத்தினை தமிழில் ரீமேக் செய்து அயோக்கியா என்கிற பெயரில் தற்போது வெளிவந்துள்ளது. படம் எப்படி இருக்கு? வாருங்கள் பார்ப்போம்.
கதை:
சென்னையில் சட்டவிரோதமாக பல தொழில்கள் செய்து வரும் காளிராஜன் (பார்த்திபன்), தனக்கு இடைஞ்சலாக எந்த போலீசும் வரக்கூடாது என்பதற்காக மோசமான ஒரு இன்ஸ்பெக்டரை கொண்டுவரும்படி மினிஸ்டரிடம் கேட்கிறார். அவரும் கர்ணன் (விஷால்) தூத்துக்குடியில் இருந்து சென்னை நீலாங்கரைக்கு ட்ரான்ஸ்பர் செய்கிறார்.
பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையில் இருப்பவர் விஷால். முதலில் பணம் வாங்கிக்கொண்டு பார்திபனுக்கு உதவினாலும், ஒரு சமயத்தில் விஷால் பார்திபனின் 4 தம்பிகள் சேர்ந்து ஒரு பெண்னுக்கு செய்த கொடூரம் பற்றி தெரிந்து கொதித்தெழுகிறார்.
அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி ஆதாரம் திரட்டி அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா என்பது தான் மீதி படம்.
படத்தை பற்றிய அலசல்:
தினம்தோறும் பெண்கள் மீது நடக்கும் குற்றங்கள் பற்றி செய்திகள் வந்தவண்ணம் இருந்தாலும் அதை தடுக்க மிக கடுமையான தண்டனை மட்டுமே ஒரே வழி என்பதை வலியுறுத்தியுள்ளது படம்.
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் டெம்பர் படம் பார்த்தவர்களுக்கு விஷாலை அந்த ரோலில் பொறுத்தி பார்க்க சற்று சிரமம் இருக்கலாம். இருந்தாலும் விஷாலின் நடிப்பு முதல் பாகத்தில் நெருடலாக இருந்தாலும், இரண்டாவது பாகத்தில் பாராட்டும் அளவுக்கு உள்ளது.
தெலுங்கு படத்தை அப்படியே செராக்ஸ் காபி எடுத்திருந்தாலும், கிளைமாக்ஸில் பெரிய மாற்றத்தை செய்துள்ளனர். வசனங்களும் கிட்டத்தட்ட தெலுங்கில் இருந்து எடுத்தது தான் என்றாலும் பல வசனங்கள் படம் பார்ப்பவர்களை நிச்சயம் யோசிக்கவைக்கும்.
ஹீரோயின் ராஷி கண்ணாவுக்கு படத்தில் பெரிய வேலை இல்லை. விஷாலின் போலீஸ் ஸ்டேஷனில் நேர்மையான ஏட்டாக இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் ஈர்த்துள்ளார். நடிகர் பார்த்திபனின் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.
கிளாப்ஸ்:
- தற்போது சமூகத்திற்கு தேவையான கதை. கதை தான் இந்த படத்தின் முதல் ஹீரோ.
- கிளைமாக்ஸ் ட்விஸ்ட்
- குறை சொல்ல முடியாத அளவுக்கு இருந்த ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை.
- விஷால் நடிப்பு
பல்ப்ஸ்:
- பரபரப்பே இல்லாமல் செல்லும் முதல் பாதி படம் என்பதை தவிர குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு படத்தில் பெரிய மைனஸ் எதுவும் இல்லை.
மொத்தத்தில் அயோக்யா தற்போதைய சமூகத்திற்கு சொல்லப்படவேண்டிய முக்கிய கதை.
நன்றி CineUlagam