உயில் – கவிதை - பரீட்சன்

.
உச்ச நவீனத்தின் பிந்திய காலத்தில் ஒரு பாம்பு
நூற்றாண்டுகளுக்கு முந்திய வரலாற்றுப் பதிவுகளை
தன் இறக்கையில் சுமந்து பறக்கும்
புறாவின் புரிதலை பரீட்சிக்க விரும்பி
உள்ளடக்கத்தை வாசிக்குமாறு கேட்டால்
இது அழிந்து போன மனித மொழியொன்றால்
எழுதப்பட்ட உயில் என்று கூறி  காலம் கடந்து வாழும்
காற்றிடம்  உதவும் படி இரைஞ்சும்
அனைத்தும் என் படைப்புகளே என்று பறைசாற்றும்
இறைவனுக்கு தனி உரிமம் கொண்டாடியும்
பற்களுக்கு இடையிலுள்ள சதைத்துண்டின்
ஓசையில் பிரிந்தும் அழிந்துபோன ஒரு  நிமிர்ந்து
நிற்கும் பாக்கியம் பெற்ற இரண்டு கால்
இனமொன்றின் காலச்சுவடு என்று காற்று மொழிந்த
போதுதான் புரிந்து கொண்டன
ஏன் மொழியும் மதமும் நம் முன்னோரால் காட்டில்
தடை செய்யப் பட்டன என்று

"புங்குடுதீவு" சிதைவுறும் நிலம் - கானா பிரபா

.

"இந்த மண் என் கால்களின் கீழ் உள்ள தூசிப்படலமல்ல எனது உணர்வார்ந்த பிடிப்பின் தூர்ந்து போகாத உயிர்த்தளம்" கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்களின் கவி மொழிகளைப் பதித்தவாறே மெல்ல விரிகிறது "புங்குடுதீவு - சிதைவுறும் நிலம்".

ஈழத்தில் போர் முற்றிய காலத்தில் மெல்ல இந்த மண்ணுக்குப் பிரியாவிடை கொடுத்து 25 ஆண்டுகளை நிறைவு செய்த சந்ததி இன்று உலகின் எட்டுத் திக்கும் சிதறுண்டு குடி கொண்ட நிலையில் இந்த மண்ணிலிருந்து எழும் குரலாக வெளிப்பட்டிருக்கிறது இந்த ஆவணப் படம்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் தாயகம் நோக்கிய என் திடீர் விஜயத்தில் கிடைத்த நான்கு நாட்களில் ஒரு மதியப் பொழுதை இந்த ஆவணப் படத்தின் முதல் திரையிடலில் வந்து கலந்து கொள்ளுமாறு படத்தின் இசையமைப்பாளராகப் பங்கேற்ற சகோதரன் மதீசன் கேட்டிருந்தார். ஆவணப் படம் காண்பிக்கும் ஆனைக்கோட்டையில் இருக்கும் யாழ்ப்பாண அரங்கக் கலைக் கழகத்துக்குப் போகிறேன். அங்கே தொழில் நுட்பக் கோளாறுகளால் திரையிடல் தாமதப்பட, நேரச் சிக்கலால் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு. ஆனாலும் இந்தப் படைப்பைப் பார்க்க வேண்டும் என்ற தீரா வேட்கை என்னுள் இருந்தது. கண்டிப்பாக இந்தப் படைப்பு முக்கியமானதொன்றாக இருக்கும் என்ற என் உள் மன உந்துதலே அதற்கான காரணம். ஆறு மாதங்கள் கழித்து நேற்று "புங்குடுதீவு - சிதைவுறு நிலம்" என்ற இந்தப் படைப்பைப் பார்த்து முடித்ததும், ஒரு நேர்த்தியான ஆவணப் படத்தைப் பார்த்தோம் என்ற திருப்தியை மேவு இந்தப் படைப்பின் வழியே வெளிப்பட்ட புங்குடுதீவு மண்ணின் குமுறலின் தாக்கத்துடனேயே இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இலங்கைச் செய்திகள்


நாமலுக்கு விளக்கமறியல்.!

அயதுல்லா - பிரதமர் சந்திப்பு

பொறிமுறை அமைக்கப்படும் போது எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் ; அமெரிக்கா தெரிவிப்பு

இலங்கையில் முதல் முறையாக இடம்பெற்ற ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் உயர்மட்ட மாநாடு

சுற்றுலா துறை அபிவிருத்தி ; எந்த காணியையும் வழங்க தயார் கிழக்கு முதல்வர் !!

யாழ். பல்கலையில் கலவரம் : வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களும் மூடல்

கதிர்காமம் சென்ற தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் !!

யாழ் பல்கலைக்கழத்தின் விஞ்ஞானபீடம் காலவரையறையின்றி மூடல் : சிங்கள மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறவும்





லண்டன் தமிழ் நாடக விழாவின் வெள்ளி விழா 1991 - 2016 23 07.2016

.
நான்கு நாடகங்கள்
க.பாலேந்திராவின் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் லண்டன் தமிழ் நாடக விழாவின் வெள்ளி விழா 1991 - 2016









பிரதேச மொழி வழக்கில் பேசி நடித்து அசத்திய மரைக்கார் ராமதாஸ் மறைந்தார் - முருகபூபதி

.
ஈழத்து  ' கோமாளிகள் ' - மரைக்காரின்  கலைப்பயணம் தமிழகத்தில்  அஸ்தமனம்
இலங்கை    கலையுலகின்  மைந்தனுக்கு நினைவஞ்சலிப்பகிர்வு
       

                                                       
பட்டி  தொட்டி  எங்கும்  ஒலித்த "  அடி   என்னடி  ராக்கம்மா  பல்லாக்கு நெளிப்பு "  பாடல்  இடம்பெற்ற  பட்டிக்காடா  பட்டணமா  படமும்  அவ்வாறே  அன்றைய  ரசிகர்களிடம்  நல்ல  வரவேற்பு  பெற்றது.
1972  இல்  வெளிவந்த   இந்தப்படத்தில்  இன்றைய  முதல்வர் ஜெயலலிதாவுடன்  சிவாஜி   நடித்தார்.   அடங்காத  மனைவிக்கும் செல்வச்செருக்கு  மிக்க  மாமியாருக்கும்  சவால்விடும்  நாயகன்,  தனது   முறைப்பெண்ணை  அழைத்து  பாடும்  இந்தப்பாடல் அந்நாளைய    குத்துப்பாட்டு  ரசிகர்களுக்கு  விருந்து  படைத்தது. விமர்சன    ரீதியாகப்பார்த்தால்  அந்தப்படமும்  பாடலும் பெண்ணடிமைத்தனத்தையே   சித்திரித்தது.

உலகச் செய்திகள்


டேவிட் கேமரூன் புதன்கிழமை இராஜினாமா செய்கிறார் ; இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் தெரேசா மே

சோமாலியாவில் இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் ; 22 பேர் பலி

அமெரிக்க நீதிமன்ற வளாகத்தில் கைதி திடீர் துப்பாக்கிச் சூடு : 3 பேர் பலி

ஈராகில் கார்குண்டு வெடிப்பு ; 11 பேர் பலி

டேவிட் கெமரூன் சற்றுமுன் இராஜினாமா செய்தார்

பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேசா மே சற்றுமுன்னர் பதவியேற்பு

சிரிய அகதிகள் தங்கியிருந்த முகாம் மீது வான் தாக்குதல்; 17 பேர் உயிரிழப்பு

தெரேசா மேயின் புதிய அமைச்சரவை

பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல் : 80 பேர் பலி,100 க்கும் மேற்பட்டோர் காயம்

துருக்கியில் இராணுவப் புரட்சி முடிவு ; 754 பேர் கைது

பிரான்ஸ் தாக்குதலைக் கொண்டாடிய ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள்

இராணுவ புரட்சியை முறியடித்த மக்கள் ; வெளியானது வியப்பூட்டும் படங்கள்

அமெரிக்காவில் பொலிஸாரின் மீது முகமூடியணிந்த நபர் துப்பாக்கி பிரயோகம்



ஜூலை 15. பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள்.- ப.கண்ணன்சேகர்,

.


அரசியல் தூய்மையின் அடித்தள பாடமாய்
      அறவழி பாதையின் அரியதொரு தலைவரே!
முரண்பாடே இல்லாமல் முற்றிலும் நேர்மையாய்
       முத்திரை ஆட்சியின் முத்தான முதல்வரே!
தரமான திட்டத்தால் தமிழகத்தை வளமாக்கிய
       தன்னிகர் இல்லாத தென்னாட்டு காந்தியே!
வரமான கல்வியை வறியோரும் பெற்றிட
        வள்ளலாய் உதவிய வையக தெய்வமே!

வெற்றியும் தோல்வியும் வேறென கருதாது
        வேண்டிய உதவியை வருவோர்க்கு செய்தவர்!
சுற்றமும் சொந்தமும் சட்டத்தின் முன்னாடி
         சாய்ந்திட செய்யாமல் சமமாக பார்த்தவர்!
பற்றற்ற வாழ்வினை படித்திட்ட மேதையாய்
         பாரினில் புகழ்ந்திட பணியாற்றி வாழ்ந்தவர்!
தற்புகழ்ச்சி கொள்ளாமல் தன்னலம் காணாமல்
         தவவாழ்வின் எளிமையை தரணியில் கொண்டவர்!

விடுதலை போராட்ட வேள்வியில் கலந்திட
        வெள்ளையர் ஆதிக்க விலங்கினை கண்டவர்!
வீடுவாசல் சொத்தின்றி வெறுமனே வாழ்வினை
        விதைத்திட பொதுநலனில் வித்தாக மாறியவர்!
மேடுபள்ள அரசியலில் மேன்மைமிகு தலைவரென
        மேதினியில் கறைபடா மேலோராய் திகழ்ந்தவர்!
தேடுகின்றோம் தினந்தோறும் தெய்வீக தலைவனை
        திரும்பவும் வருவாரா தேம்பிட கேட்கின்றோம்!

நோர்வே தாய்க்கு பிறந்த தமிழ் பிள்ளைகள் அழகாக தமிழ் பேசுகிறார்கள்

.

சிவசிந்தனை ஆகமவாரிதி சிவஸ்ரீ முனைவர் S. P. சபாரத்தின சிவாசாரியார்

.

வாய்த்துள்ளாய் குலவிளக்காய் ! - எம் .ஜெயராமசர்மா... மெல்பேண்

.

        செம்பவள வாய்திறந்து 
        சிரித்துநிற்கும் உன்முகத்தை
        தினமுமே பார்த்திருந்தால் 
        சிந்தனையே தெளிந்துவிடும்
        வந்தநோவும் ஓடிவிடும்
        வலியனைத்தும் மறைந்துவிடும்
        எந்திருவே உனையணைத்து
        என்னாளும் இன்புறுவேன் !

        முழுநிலவு வடிவான
        அழகுநிறை உன்முகத்தை
        முத்தமிட்டு முத்தமிட்டு
        மூழ்கிடுவேன் மகிழ்ச்சியிலே
        கொழுகொழுத்த கையாலே
        குறும்புநீ செய்கைகையிலே
        ஒழுகிவரும் இன்பமதை
        உள்ளமெலாம்  நிரப்பிடுவேன் !

தமிழ் சினிமா


தில்லுக்கு துட்டு

தில்லுக்கு துட்டு(வீடியோ இணைப்பு) - Cineulagam
தமிழ் சினிமாவில் ஒரு வழக்கம் உண்டு, ஒவ்வொரு ஹீரோவும் கட்டாயம் ஒரு படத்திலாவது போலீசாக நடிப்பார்கள். அது போல இப்போது இருக்கும் trend ஓரு பேய் படத்திலாவது நடிக்க வேண்டும், இந்த வரிசையில் தற்போது சந்தானம் நடித்து வந்திருக்கும் பேய் படம் தில்லுக்கு துட்டு.

கதை

சிவன் கொண்டை மலை என்ற ஒரு மலையில் ஒரு அமானுஷ்ய பேய் பங்களா அங்கு பேய் எப்படி வந்தது என்பதற்கு ஒரு flash back. பின் சென்னையில் சந்தானத்துக்கும் ஷனாயாவிற்கும் காதல். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரின் குடும்பத்தினரும் அந்த பங்களாவிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
அங்கு எதற்காக செல்கிறார்கள் பேய் இவர்களை என்ன செய்தது என்பதை காமெடி கலாட்டாவாக சொல்லியிருக்கும் படம் தான் இந்த தில்லுக்கு துட்டு.

படத்தை பற்றிய அலசல்

இனிமே ஹீரோதான் என பட்டையை கிளப்பி வரும் சந்தானம், இப்படத்திலும் இவருக்கு சூட் ஆகும் கதாப்பாத்திரத்தில் கலக்கியுள்ளார், காமெடி டான்ஸ் ஃபைட் என எல்லா ஏரியாவிலும் பவுண்டரி விலாசுகிறார். ஷனாயா பார்க்க அழகாக இருக்கிறார் நடிப்பிலும் குறை சொல்லும் படி இல்லை. காமெடி படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு ராஜேந்திரனை புக் செய்து விடலாம் போலும் இப்படத்திலும் செம பெர்ஃபாமன்ஸ் கொடுத்து அப்லாஸ் அள்ளுகிறார்.
நானும் ரௌடிதானுக்கு பிறகு ஆனந்த் ராஜிற்கு வெயிட்டான ரோல் அதிலும் காமெடி பண்ணரேன்னு நான் பழைய வில்லன்றத மறந்துறாத என சொல்லும் இடம் மாஸ்! இவ்வளவு காமெடி நடிகர்கள் இருந்தாலும் கருனாஸும் தனித்து தெரியும் அளவில் சிரிப்பு காட்டுகிறார்.
மாமனார் மருமகனாக வரும் சௌரப் ஷுக்லா, T M கார்த்திகின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. வாராவாரம் வரும் காமெடி பேய் படங்கள் இதுவும் ஒன்று என்றாலும் இதனின் பலமே எல்லா நகைச்சுவைகளுக்கும் ஆடியன்ஸிடம் இருந்து நல்ல ரெஸ்பாண்ஸ் வருகிறது.
படத்தின் ஆரம்பத்தில் சீரியஸ் பேய் படம் போல ஆரம்பித்தாலும் பின்னர் காமெடி திரைக்கதை மூலம் சரவெடியை கொளுத்தி விடுகிறார் இயக்குனர் ராம்பாலா. படத்தின் எந்த கதாப்பாத்திரதிற்கு யார் பொருத்தம் என நல்ல casting அமைததும் படத்தின் பலம்.
பின் இரண்டாம் பாதியின் ஆரம்பம் சற்று மெதுவாக அரம்பித்து பின் சுதாரித்து படம் நகர்கிறது. ஆனால் படத்தில் ஹீரோ என்ன செய்கிறார், திபத்திய சாமியாருக்கு தமிழ் மிக எளிதாக வருவது, ஊரையே அடித்து போடும் உக்கிரமான பேய் இவர்களின் விளையாட்டில் பங்கேற்கிறது என பல லாஜிக் மீறல்களும் இருக்கதான் செய்கிறது.
தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம். தன் மகள் விரும்பும் காதலனை குடும்பத்தோடு வீட்டுக்கு வர சொல்லி அவமானப்படுத்துவது போன்ற காட்சிகள் எல்லாம் இன்னும் எத்தனை காலத்துக்கு பாஸ்! என்னதான் இது பேய் படம் என்றாலும் இதில் பேய்கே guest role தான்.
தமனின் இசையில் பாடல்கள் படத்தோடு பார்க்க நன்றாக உள்ளது, பிண்ணனி இசை படத்திற்கு பலம் சேர்கிறார். தீபக் குமார் பாடியின் ஒளிப்பதிவு ஒரு பக்கம் மிகவும் colorful ஆகவும் இன்னொரு பக்கம் பேய் பங்களாவில் இருட்டிலும் திகில் காட்டுகிறது.

க்ளாப்ஸ்:

படத்தின் காமெடிக்கு பஞ்சமே இல்லை, அனைத்து நடிகர்களும் அவர்களின் பங்கை மிச சரியாக செய்துள்ளனர். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் பங்கு பாரட்டத்தக்கது.

பல்ப்ஸ்:

தேவையற்ற சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம். லாஜிக் மீறல்களிலும் சில க்ளீஷேக்களையும் அதிக கவனம் செலுத்தி குறைத்திருக்கலாம்.
மொத்ததில் தில்லுக்கு துட்டு முழு பைசா வசூல்!

ரேட்டிங்: 2.75 / 5  நன்றி  cineulagam.