மவுண்ட் றூயிட் தமிழ்க் கல்வி நிலையம் கவி அரங்கமும், கதை கூறலும் – சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்வு - பரமபுத்திரன்

 

மவுண்ட் றூயிட் தமிழ்க் கல்வி நிலைய நிர்வாகத்தினர்  கடந்த 04/05/2024 சனிக்கிழமை சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்வாக கவி அரங்கமும், கதை கூறலும் எனும் நிகழ்வினை ஒழுங்கு செய்து நடாத்தி இருந்தனர். அன்றைய நாள் மாலை நான்கு மணிக்கு மவுண்ட் றூயிட் தமிழ்க்கல்வி நிலையம் இயங்கும் கொலிற்றன் அரசுப்பள்ளி மண்டபத்தில் இந்நிகழ்வு தொடங்கியது. பள்ளியின் நிர்வாக இணை உறுப்பினர் சிங்கநாயகம் சிவசங்கர், மற்றும் ஆசிரியர் செல்வராஜி இரங்கநாதன் ஆகியோர்   மங்கள விளக்கினை ஏற்றி நிகழ்வினைத் தொடக்கி வைத்தனர். இந்நிகழ்வில் கவிபாடல், கதை கூறல் என்பவற்றுடன் தலைவர் உரை, அதிபர் உரை, கருத்துரை, நன்றியுரை என்பனவும் இடம்பெற்றன. நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், நிர்வாகத்தினர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். 

 


மாணவர்களின் கற்றல் மட்டுமன்றி, கற்றவற்றைப் பயிற்சியும் செய்ய வேண்டும். தமிழர் பழக்கவழக்கங்கள், கொண்டாட்ட நிகழ்வுகள்  என்பவற்றை அறியவேண்டும் என்பதற்காக பொங்கல், குடும்ப குதுகல நாள், பேச்சுப்போட்டி, வாணிவிழா, புத்தாண்டு சிறப்பு நிகழ்வு போன்ற பல நிகழ்வுகளை செய்வது மவுண்ட் றூயிட் தமிழ்  கல்வி நிலையத்தின் வழமை.  அந்தவகையில் சித்திரைப் புத்தாண்டு சிறப்பு நிகழ்வும்  நடைபெற்றது. பள்ளியின் நிர்வாக உபதலைவர் கௌரீஸ்வரன் கந்தசாமி தொடக்க நிகழ்வுகளை நடத்திச் சென்றார். மங்கள விளக்கேற்றல், அதனைத்தொடர்ந்து தமிழ்மக்களின் மண்ணுக்காக உயிர் ஈந்த மக்களுக்கான  அகவணக்கம் செலுத்தி உரைகள் தொடங்கின.

 




 



இன்று வெளியிடப்பட்ட ஈழவாணியின் "மூக்குத்திப்பூ" திரைப்பட முன்னோட்டம் .

 .

இலங்கை தமிழர்களின் திரைப்படங்கள் பல அண்மையில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இப்போது R . தினேஷின் "எதுவும் கடந்து போகும்" திரைப்படம் அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப் பட்டு Reading cinema வில் ஓடிக்கொண்டிருக்கின்றது. அத்தோடு ரஞ்ஜித் ஜோசப்பின் 'ஊழி' திரைப்படமும் 

ஓடிக்கொண்டிருக்கின்றது. நல்லது அல்லது சரியில்லை என்பவற்றிற்கு அப்பால் இலங்கைத் தமிழர்களின் திரைப்பட துறையும் மீண்டும் உயர முயல்கின்றது. நீண்ட காலங்களாக முடங்கிக் கிடந்த இந்த துறையானது இப்போது ஆர்வத்தோடு எழுகின்றது. பல இளைஞர்களும் யுவதிகளும் பல துறைகளிலும் இதனால் வேலை வாய்ப்பை பெறுகின்றார்கள் . 

கண்கண்ட தெய்வமாய் நிற்கிறாள் அம்மா !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா


மனமுருகி மனமுருகி மன்றாடி நின்று
தினமுமே தனைவருத்தி விரதமெலா மிருந்து
அனுதினமும் ஆண்டவனை அகமார எண்ணி
அவனியிலே நாம்பிறக்கக் காரணமே அம்மா 

பாசமே அம்மா பக்குவமே அம்மா
நேசமே அம்மா நிறைவுமே அம்மா
வாசமே அம்மா மலருமே அம்மா
ஆசையாய் எம்மை அரவணைப்பாள் அம்மா 

மழையிலே குடையாவாள் வெயிலியே நிழலாவாள் 
மனத்திலே எமைத்தாங்கி வாழ்வுக்கும் துணையாவாள்
தினையளவு துன்பமும் தீண்டாதெமைக் காப்பாள்
திசைகாட்டும் விளக்காக ஒளிவிட்டு அவளிருப்பாள் 

வளவகோன் பாவை மங்கையற் கரசியார் !

 









மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்           
மெல்பேண் ... அவுஸ்திரேலியா 


பாண்டிய மன்னன் பரமனை மறந்தான்
பூண்டிடு வினையால் சமணம் புகுந்தான்
சைவத்தை இகழ்ந்திடு சமணச் சிந்தனை
உள்ளம் இருத்தினான் உவகை எய்தினான்

ஆட்சியில் சமணம் அரசபை சமணம்
நோக்கிடும் இடமெலாம் சமண மடங்கள்
காற்றிலே சமணம் காவிலும் சமணம்
நாட்டிலே சமணம் விரிந்துமே நின்றது

பெண்ணை அழகை சமணம் வெறுத்தது
கல்லும் கனியும் இசையை வெறுத்தது 
அறத்தை முதலாய் ஆக்கியே நின்றது
அறந்தான் நெறியென சமணம் அறைந்தது

கொண்டாடி மகிழ வேண்டிய அன்னையர் தினம்

                                               சிவஞானச் சுடர் பல் வைத்திய கலாநிதி   

                                         பாரதி இளமுருகனார்

                                          (வாழ்நாள் சாதனையாளர்)










மூத்த பிரசைகள் பார்த்து மகிழ்ந்திட

முத்தமிழ்க் கும்மி அடித்திடுவோம்

முத்தமிழ்க் கும்மி அடித்திடுவோம்- கையைக்

கோத்துநாம் ஆடியே அன்னையர் தினமதிற்

கூடிக் குலவி மகிழ்ந்திடுவோம்!

கூடிக் குலவி மகிழ்ந்திடுவோம்!

                                          (மூத்தபிரசைகள்)

வேற்றின  மக்களும் வாழுமிந் நாட்டிலே

விரும்புநல் ஒற்றுமை காத்திடுவோம்

விரும்புநல் ஒற்றுமை காத்திடுவோம் - என்றும்

கூறுபோட் டேஎமை இனமதம் பிரித்திடாக்

கொள்கை வளர்த்திடக் கும்மியடி

கொள்கை வளர்த்திடக் கும்மியடி

                                            (மூத்தபிரசைகள்)

சங்கஅங் கத்தவர் தனித்துவம் காத்துநாம்

சரித்திரம் படைத்திடக் கும்மியடி

சரித்திரம் படைத்திடக் கும்மியடி - என்றும்

மங்காப் புகழ்கொண்ட தங்கத் தமிழ்தனை

மறந்துவா ழோமெனக் கும்மியடி

மறந்துவா ழோமெனக் கும்மியடி


(மூத்தபிரசைகள்)

முதல் சந்திப்பு: கலைக்குடும்பத்தின் வாரிசு கலையரசி சின்னையா ! வளரிளம் பருவம் முதல், புகலிட நாடுகள் வரையில் இலக்கியம் பேசும் ஆளுமை ! ! முருகபூபதி


எனக்கு அப்போது பன்னிரண்டு வயதிருக்கும். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருந்த ஸ்ரான்லி கல்லூரி                             ( பின்னாளில் இக்கல்லூரி கனகரத்தினம் மத்திய கல்லூரி என பெயர் மாற்றம் பெற்றது ) ஆண்கள் விடுதியிலிருந்து ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன்.

நவராத்திரி காலத்தில் நடந்த கலைமகள் விழாவில் ஒரு பெரியவர் கல்வி, செல்வம், வீரம் பற்றி பேசினார்.  அவர்தான்  வித்துவான் வேந்தனார் என்று கல்லூரி அதிபர் மண்டலேஸ்வரன் அறிமுகப்படுத்தினார்.

 “ வித்துவான் வேந்தனார், கொழும்புத்துறை ஆசிரியப்பயிற்சிக் கலாசாலையிலும் விரிவுரையாளராகப்பணியாற்றியவர்.   என்று அவரிடம் கற்ற எழுத்தாளர் தெணியான்,  பின்னாட்களில் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் வித்துவான் வேந்தனார் குழந்தை இலக்கியத்திற்கு வளமூட்டியவர். அவரது

 “ காலைத்தூக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக்காய்ச்சிச் சீனி போட்டுப் பருகத் தந்த அம்மா,

பள்ளிக்கூடம் விட்டபோது பாதி வழிக்கு வந்து
துள்ளித் குதிக்கும் என்னைத்தூக்கித் தோளில் போடும் அம்மா… 

என்ற பாடலை நாம் ஓசைநயத்துடன் பாடமுடியும். இலங்கையில் பல தமிழ்ப்பாடசாலைகளில் ஆரம்ப வகுப்பு படித்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்த பிரபல்யமான பாடல் !

அன்னையர் தினம்

 




தங்கம்மா அப்பாக்குட்டி

 


தங்கம்மா அப்பாக்குட்டி (07 /01/1925 – 15 /06 /2008)

தங்கம்மா அப்பாக்குட்டி சிவபதம் எய்தி இப்பொழுது 16 வருடங்கள் ஆகின்றன. சிவஞானச் செல்வியாய் - செஞ்சொல்லரசியாய் தன்னலமற்ற சேவையில் சிகரமாய் விளங்கித் திருத்தக வாழ்ந்து சிவனடி காலும் சிவசோதியிற் கலந்தவளை நினைவுகூர்வதில் மனநிறைவடைகிறோம்.         

 

அஞ்சாத நெஞ்சுடனே வீராங் கனையாய்

   அற்புதநற் சிந்தனையைச் செயலில் வடித்துத்

தஞ்சமென உனையடைந்தோர்  தன்மானத்துடன்

   தருமமென வாழவைக்க இரவு பகலாய்த்

துஞ்சாது உழைத்துயர்ந்தாய்! தூமணி துர்க்கா

   துரந்தரியே உன்பணியை நீவளர்த் ததொண்டன்

விஞ்சுபுகழ் ஆறுதிரு முருகனெ னுமந்தணன்

   வெகுசிறப்பாய் ஆற்றுகிறான் வெற்றி உனதே!

 

குணம்படைத்தோர் நற்செயல்கள் ஆற்றி நிற்கக்

   கொற்றவையே உன்வாழ்க்கை பாடஞ் செப்பும்!

பணம்படைத்தோர் மனிதநேயம் கொண்டு சேவை

   பலசெய்ய உன்தியாகம் உந்து சக்தி!

எணங்கொண்டோய்!; எம்மீசன் பொன்னார் திருவடி ;

   இணைந்திருந்து நல்லாசி அருள்வாய் தாயே!

கணப்பொழுதும் மறவோம்நாம் காலங் காலம்

   கண்ணிமைபோல் உன்னினைவைக் காத்து வாழ்வோம்!

 

களமும் புலமும் ஒரே மாதிரியாய்

 May 8, 2024


முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினைந்தாவது நினைவு கூரல் அண்மித்து வருகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் கடந்த பதினைந்து வருட காலத்தை திரும்பிப் பார்த்தால் அனைத்திலும், வெறுமையே மேலோங்கி யிருக்கின்றது. தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்துவதாக கூறிக்கொள் ளும் கட்சிகளால் ஒன்றுபட்டு, கருத்தொருமித்து, ஒரு அரசியல் நிலைப்பாட்டுக்காக ஒன்றுபட்டுச் செயல்பட முடியவில்லை. தாயக அரசியல் நிலைமையை ஒரு வரியில் கூறுவதனால், தமிழ்த் தேசிய கட்சிகள் என்றாவது ஒன்றுபட்டுச் செயலாற்றுமா? இந்தக் கேள்வியுடன் நாட்கள் நகர்கின்றன. புலத்தை திரும்பிப் பார்த்தால் அங்கும் இதே நிலைமைதான்.
கனேடிய தமிழ் காங்கிரஸ் அமைப்பை கைப்பற்றும் அணியொன்று உருவாகியிருக் கின்றது. அதே வேளை, நாடு கடந்த அரசாங்கத்துக்குள் பதவி மோதல்கள் பேசு பொருளாகியிருக்கின்றன. கடந்த பதினைந்து வருடத்துக்கு பின் னரும் கூட, புலம்பெயர் சூழலில் பதவிக்காக அடிபடுகின்றனர் என்றால் – இந்த சமூகம் உருப்படுவதற்கான வழியிருக்கின்றது என்று எவ்வாறு நம்புவது? ஜனாதிபதித் தேர்தலில், ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று எண்ணுகின்ற போது, அது சாத்தியமா என்னும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இதற்குப் பின்னால் யார் இருக்கின்றனர் என்று கேள்வி கேட்கப்படுகின்றது? அவ்வாறாயின் கடந்த பதினைந்து வருட காலமாக முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் அனைத்துக்கும் பின்னால் யார் இருந்தனர்? அவைகள் எல்லாவற்றுக்கும் பின்னால் தூய நோக்கங்கள் இருந்திருக்கின்றது என்பதற்கு என்ன ஆதாரம்? தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்றால் – அதனை நிரூபிப்பதற்கான முயற்சிகளை கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? அந்த அச்சத்தின் பின்னணி என்ன?

மூத்த எழுத்தாளர் கே. கணேஷ் நூற்றாண்டு


இலங்கையின்  மூத்த படைப்பிலக்கியவாதியும், மொழிபெயர்ப்பாளரும்,  பாரதி இலக்கிய இதழை முன்னர் வெளியிட்டவருமான தலாத்து ஓயா கே. கணேஷ்                                           ( 1920 – 2004 ) அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, அன்னாரின் புதல்வி திருமதி ஜெயந்தி சங்கர்  சிறப்பு மலர் வெளியிடவிருக்கிறார்.

( அமரர் ) கே. கணேஷ் அவர்களுடன் இலக்கிய நட்புறவிலிருந்த எழுத்தாளர்களிடமிருந்தும் கே. கணேஷ் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றி அறிந்தவர்களிடமிருந்தும்  ஆக்கங்கள் கோரப்படுகின்றன.

  அன்னாரின் படைப்புகள் குறித்தும் இம்மலருக்கு எழுதலாம்.   

நூற்றாண்டு மலருக்கு ஆக்கங்கள் அனுப்பவிரும்பும் அன்பர்கள்
பின்வரும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.

                                          jayanthireap@yahoo.com

தாயின் மடியில் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 

1963ம் வருடம் எம் ஜி ஆர் நடிப்பில் கடவுளைக் கண்டேன் என்ற படத்தை தயாரிக்கத் தொடங்கினார் பாலன் பிக்சர்ஸ் அதிபர் கே ஆர் பாலன். படத் துவக்க விழாவிலே அவருக்கும் , எம் ஜி ஆருக்கும் ஒத்துப் போகாமல் போகவே படத்தில் இருந்து எம் ஜி ஆர் கழன்று கொண்டார். அதனைத் தொடர்ந்து கல்யாணகுமாரை கதாநாயகனாக நடிக்க வைத்து படத்தை தயாரித்து வெளியிட்டார் பாலன். தி மு க வின் அனுதாபியான இவர் எதோ ஒரு விதத்தில் கலைஞர் கருணாநிதிக்கு உறவினரும் கூட. இதன் காரணமாக மீண்டும் பாலனுக்கும் , எம் ஜி ஆருக்கும் இடையில் சுமுக உறவு ஏற்றப்பட்டு மீண்டும் இணைந்து படம் தயாரிப்பது என்று முடிவானது. இதற்கென அன்னை பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் உருவாகி அதன் மூலம் தயாரான படம் தான் தாயின் மடியில்.


ஒருவனுக்கு எத்தனை செல்வங்கள் இருந்தாலும் , பெற்ற தாயின் அன்பும் , அரவணைப்பும் இல்லாவிட்டால் அவன் அனைத்தையும் இழந்தவனாகிறான் என்பதை கருவாகக் கொண்டு படத்தின் கதை உருவானது.


செல்லச் செழிப்புடன் பெற்றோர்கள் இன்றி வளரும் ராஜா பந்தயக் குதிரையை செலுத்தும் ஜாக்கியாக பணியாற்றுகிறான். அவனுக்கும் செல்வந்தர் பூபதியின் மகள் ஜீவாவுக்கு இடையில் கண்டதும் காதல் ஏற்றப்படுகிறது. ஜீவாவை தன் மகன் ஜம்புவுக்கு மணமுடித்து தர சதித் திட்டம் தீட்டும் சிகாமணி குதிரை ரேஸில் ராஜாவுக்கு விபத்து ஏற்றப்பட சதி செய்கிறான். காலில் அடிபட்டு ஓய்வில் இருக்கும் ராஜாவுக்கு தன் தாய் யார் என்ற உண்மை தெரிய வருகிறது. அது மற்றுமன்றி தன்னுடைய தாயை கெடுத்து வஞ்சித்தவன் யார் அதிர்ச்சியான என்ற தகவலும் கிடைக்கிறது. அத் தகவல் அவனும் ஜீவாவும் சகோதரர்கள் என்று பேரிடியாக செய்தியை சொல்கிறது. தன்னுடைய பிறப்பின் உண்மை இரகசியத்தை ராஜா தெரிந்து கொண்டானா என்பதே கதையின் மீதி.


“தொ. மு. சி. ரகுநாதனின் பன்முக ஆளுமை”

 தொ.மு.சி.ரகுநாதனின் ஆய்வுப்பங்களிப்பு - உரைபேராசிரியர் பா.ஆனந்தகுமார்



தொ.மு.சி.ரகுநாதனின் “இலக்கிய விமர்சனம் - உரைபேராசிரியர் .பஞ்சாங்கம்



களமும் புலமும் ஒரே மாதிரியாய்

 May 8, 2024


முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினைந்தாவது நினைவு கூரல் அண்மித்து வருகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் கடந்த பதினைந்து வருட காலத்தை திரும்பிப் பார்த்தால் அனைத்திலும், வெறுமையே மேலோங்கி யிருக்கின்றது. தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்துவதாக கூறிக்கொள் ளும் கட்சிகளால் ஒன்றுபட்டு, கருத்தொருமித்து, ஒரு அரசியல் நிலைப்பாட்டுக்காக ஒன்றுபட்டுச் செயல்பட முடியவில்லை. தாயக அரசியல் நிலைமையை ஒரு வரியில் கூறுவதனால், தமிழ்த் தேசிய கட்சிகள் என்றாவது ஒன்றுபட்டுச் செயலாற்றுமா? இந்தக் கேள்வியுடன் நாட்கள் நகர்கின்றன. புலத்தை திரும்பிப் பார்த்தால் அங்கும் இதே நிலைமைதான்.
கனேடிய தமிழ் காங்கிரஸ் அமைப்பை கைப்பற்றும் அணியொன்று உருவாகியிருக் கின்றது. அதே வேளை, நாடு கடந்த அரசாங்கத்துக்குள் பதவி மோதல்கள் பேசு பொருளாகியிருக்கின்றன. கடந்த பதினைந்து வருடத்துக்கு பின் னரும் கூட, புலம்பெயர் சூழலில் பதவிக்காக அடிபடுகின்றனர் என்றால் – இந்த சமூகம் உருப்படுவதற்கான வழியிருக்கின்றது என்று எவ்வாறு நம்புவது? ஜனாதிபதித் தேர்தலில், ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று எண்ணுகின்ற போது, அது சாத்தியமா என்னும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இதற்குப் பின்னால் யார் இருக்கின்றனர் என்று கேள்வி கேட்கப்படுகின்றது? அவ்வாறாயின் கடந்த பதினைந்து வருட காலமாக முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் அனைத்துக்கும் பின்னால் யார் இருந்தனர்? அவைகள் எல்லாவற்றுக்கும் பின்னால் தூய நோக்கங்கள் இருந்திருக்கின்றது என்பதற்கு என்ன ஆதாரம்? தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்றால் – அதனை நிரூபிப்பதற்கான முயற்சிகளை கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? அந்த அச்சத்தின் பின்னணி என்ன?

உலகச் செய்திகள்

 எகிப்துடனான உதவிகள் வரும் ரபா எல்லையை கைப்பற்றியது இஸ்ரேல்

ரபா எல்லைக் கடவை

போர் நிறுத்த பேச்சுக்கு மத்தியில் காசாவில் தொடர்ந்தும் தாக்குதல்

ரபா மீதான படையெடுப்பு திட்டம் இஸ்ரேலுக்கான ஆயுதங்களை இடைநிறுத்த பைடன் எச்சரிக்கை: தொடர்ந்தும் தாக்குதல்

ரஷ்ய ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற விளாடிமிர் புடின்

கொவிட் தடுப்பு மருந்தை மீளப் பெற்றது அஸ்ட்ராசெனகா

காசா போர் நிறுத்தப் பேச்சு உடன்பாடு இன்றி முடிவு: ரபாவில் கடும் தாக்குதல்



எகிப்துடனான உதவிகள் வரும் ரபா எல்லையை கைப்பற்றியது இஸ்ரேல்

ஹமாஸ் இணங்கிய போர் நிறுத்தத்திலும் இழுபறி

May 8, 2024 6:00 am 

காசாவின் தெற்கு நகரான ரபா மீது இரவு முழுவதும் சரமாரித் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலிய இராணுவம் அங்குள்ள எகிப்து மற்றும் காசாவுக்கு இடையிலான ரபா எல்லை கடவையை நேற்று (07) கைப்பற்றியதோடு இஸ்ரேலிய டாங்கிகள் ரபாவுக்குள் மேலும் முன்னேறி வருகின்றன.

இலங்கைச் செய்திகள்

வியாஸ்காந்த் தனது கிரிக்கெட் பயணத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும்

மன்னாரில் பனை மரங்களின் மகத்துவத்தை கூறும் நுங்கு விழா

யாழில். அதிகரித்த வெப்பத்தால் ஒருவர் உயிரிழப்பு

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு செப். 17 முதல் ஒக்.16 வரை

தமிழகத்தில் 58,200 இலங்கை அகதிகள்

அகில இலங்கை தமிழ் மொழித் தினம் – 2024; புதிய விதிமுறைகளுடன் இம்முறை போட்டிகள்




வியாஸ்காந்த் தனது கிரிக்கெட் பயணத்தில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும்

வடக்கு மாகாண ஆளுநர் வாழ்த்து

May 10, 2024 5:31 am 

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு  வடக்கு மாகாணம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

பெர்த் பால முருகன் கோவில் - ஆண்டு நிதி திரட்டும் இரவு உணவு: ஞாயிற்றுக்கிழமை, 02/06/2024