.
சிட்னி முருகன் ஆலயத்தில் இடம்பெறும் கும்பாபிசேகத்தித்கான மூன்றாம் நாள் விழாவினை கீழே காணலாம் 26 . 01 . 2012


                                                                                                     photos by Gnani
.
சிட்னி முருகன் ஆலயத்தில் இடம்பெறும் கும்பாபிசேகத்தித்கான இரண்டாம் நாள் விழாவினை கீழே காணலாம் .25 . 01 . 2012

  
















நீ மூழ்கி இறந்த இடம்




நீரோடை அணைக்கட்டில் அமர்ந்து
நீ்ரினுள் பாதங்களை அமிழ்த்தியவாறு பார்த்திருந்தேன்
தன்போக்கில் பாய்ந்தோடும் இராட்சத ஓடையை
பிள்ளைப் பருவ நினைவுகளின் நீர்க்குமிழிகள் மிதந்து வந்திட

நீர் வடிந்தோடும் இடத்தில்
பார்வையில் பட்டும் படாமலும்  அலைந்தவாறு
மாலை மயங்கும் ஒளியின் கீதத்தை இசைக்கிறது
பேய்ப் பட்சியொன்று
சொண்டினால் காவி வந்த இரவை
இராட்சத ஓடையின் மருதமரக்கிளைகளிடையே இட்டு
சடசடவெனச் சிறகடித்துப்  பறந்து செல்கிறது

நீரோடைக்கரையில்
மந்தைகளின் வழித்தடம் ஒன்றில்
பல நூறு, ஆயிரம் குளம்புகளின் தேய்ந்து போன தடயங்கள்
அதனிடையே
அக்கரைக்குச் சென்றதேயன்றி
இக்கரைக்கு மீண்டும் வந்ததற்கான அடையாளங்களின்றிய
பிள்ளையொன்றின் பாதச்சுவடுகள்,
பல தசாப்தங்கள் கடந்தனவாய்....

சிட்னி தமிழர் ஒன்றுகூடல் - மழை காரணமாக பின்னர் நடைபெறும்

.

மறதி - அ. முத்துலிங்கம்


.
கதவு பூட்டியிருந்தது. வீட்டுக்குள் செல்லவேண்டும் என்றால் கதவை திறக்க வேண்டும். கதவை திறக்கவேண்டும் என்றால் திறப்பை துவாரத்தினுள்  நுழைக்கவேண்டும். அதற்கு முதலில் திறப்பை கண்டுபிடிக்கவேண்டும். அது மனைவியின் கைப்பையில் கிடந்தது.  மனைவியின் அதே கைப்பையில் வேறு 256 பொருட்களும் வசித்தன. மனைவி கைப்பையை வாசலில் கவிழ்த்து கொட்டி திறப்பைத் தேடத் தொடங்கினார். அதற்கு குறைந்தபட்சம் பத்து நிமிடம் பிடிக்கும். தானாகவே பூட்டிக்கொள்ளும் அந்தக் கதவுக்கு முன்னே நாங்கள் நின்றோம். திறப்பை எடுத்து பையிலே வைக்கவில்லை என்பது பின்னர் ஞாபகத்தில் வந்தது. இது எல்லா வீடுகளிலும் நடப்பதுதான்.

என்னுடைய நண்பர் ஒருவர் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் தன்னுடைய விமானத்துக்காக காத்திருந்தார். மறுபடியும் விமானம் மூன்று மணி நேரம் தாமதமாகும் என அறிவிப்பு வந்தது. அவருடைய மடிக்கணினி மின்கலன் கடைசி நிலையை எட்டியிருந்தது. விமான நிலைய மின்வாயில் வயரைப் பொருத்தி கணினிக்கு மின்னேற்றினார். திடீரென்று அறிவிப்பு வர தன் கைப்பையை தூக்கிக்கொண்டு அவசரமாகப் புறப்பட்டு விமானத்தில் ஏறிவிட்டார். விமானம் பறக்கத் தொடங்கிய பின்னர்தான் அவருக்கு கம்புயூட்டரை விமான நிலையத்தில் விட்டுவிட்டு புறப்பட்டது ஞாபகத்துக்கு வந்தது.

தென்றலின் முப்பெரும் விழா

.

இலங்கைச் செய்திகள்

.
கிருஷ்ணாவின் இன்றைய வடபகுதி விஜயத்தின் போது...(பட இணைப்பு)

மூன்று சட்டமூலங்களை வாபஸ் பெற்றது அரசாங்கம்

இந்தியா திரும்பினார் அமைச்சர் கிருஷ்ணா

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க யாழ்ப்பாணம் சென்றோர் தடுத்து நிறுத்தப்பட்டனர்

யாழ்.பல்கலைக்கழக பொறியியல் பீடம் கிளிநொச்சியில்; அமைச்சரவை அங்கீகாரம்

புங்கிரிய தோட்ட மோதலில் 6 பேர் காயம் 4 வீடுகள், 2 கடைகள் சேதம்; பஸ் நொருக்கப்பட்டது துவக்குச் சூட்டில் தோட்ட இளைஞன் காயம்



உலகவங்கி விடுத்துள்ள அபாய எச்சரிக்கை


ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு வழக்கிலிருந்து விடுபாட்டை வழங்குகிறது அமெரிக்கா

கிருஷ்ணாவின் இன்றைய வடபகுதி விஜயத்தின் போது...(பட இணைப்பு) - 18/01/2012

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று வட பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொண்டதுடன் அங்கு இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.

இதற்கமைய கிளிநொச்சியில் இன்று காலை மாவட்ட வைத்தியசாலைக்கான உபகரணங்களைக் கையளித்ததுடன் இந்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்பட்ட சிவபாத கலையகத்தைத் திறந்து வைத்தார்.

இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகளுக்கான உறுதிப்பத்திரங்களை இதன்போது உரியவர்களிடம் கையளித்துள்ளார்.

இந்நிகழ்வுகளில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா மற்றும் ஏனைய அதிதிகள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டனர்.



மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் - துருக்கிச் சிறுகதை



அஸீஸ் நேஸின்
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

            அவர் இறுதியாக சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு அவர் நாடுகடத்தப்பட்டார். அந்தப் பிரதேசத்துக்கும் அம் மக்களுக்கும் அவரொரு புதியவராக இருந்தார். அவர் சிறையிலிருந்த போது அவரது மனைவியால் அவர் விவாகரத்து செய்யப்பட்டிருந்தார்.

            அவரது எல்லா எதிர்பார்ப்புக்களும் சிதறுண்டு போயிருந்தன. வாழ்க்கையைக் கொண்டு செல்லப் போதுமான பணம் கூட அவரிடமிருக்கவில்லை. வேலையொன்றைத் தேடிக் கொண்டு, அமைதியான வாழ்க்கையொன்றைக் கழிப்பதற்கு அவர் நிரந்தரமாக அரசியல் வெளியிலிருந்து விலகிக் கொள்வாரா?

            எல்லாவற்றுக்கும் முதலில் அவர் ஓர் இருப்பிடம் தேடி நடந்தார். அவர் நாடுகடத்தப்பட்டிருக்கும் பிரதேசத்திலிருந்த நகரத்தில் மட்டுமல்ல, நகருக்கு வெளியேயும் கூட வீடொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு அதிக வாடகையைச் செலுத்தவேண்டியிருக்கும். வாடகையைச் செலுத்தத் தவறினால், வீட்டின் உரிமையாளன் வந்து தொந்தரவு செய்வான் என்பதனால் அவ்வாறான சந்தர்ப்பமொன்றுக்கு முகம்கொடுக்க அவர் விரும்பவில்லை. ஆனாலும் அவரது பழைய தட்டச்சுப் பொறியையும் உடைந்து சிதறிப் போயுள்ள வீட்டுத் தளபாடங்கள் சிலவற்றையும் வைப்பதற்கு ஓரிடத்தைத் தேடிக் கொள்ளவே வேண்டும். மிருகக் காட்சிசாலைக்கு புதிதாக வந்துள்ள விலங்கொன்றைப் பார்க்க வருவதுபோல், தன்னைப் பார்க்கவும் மக்கள் வருவார்களெனச் சந்தேகித்த அவர் அமைதியானதொரு வாழ்க்கை நடத்த எண்ணினார். அதனால் அவர் அப் பிரதேசத்தினொரு மூலையில் மக்களின் நடமாட்டமே இல்லாத ஒரு பகுதியிலிருந்த வீடொன்றின் ஓர் அறையை வாடகைக்கு எடுத்தார்.

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 5) வித்யாசாகர்

.
வாணி அந்த இருட்டிலும் ஓடிச்சென்று காய்கறிகள் அரிசி மண்ணெண்ணை எல்லாம் வாங்கிவந்து சமைத்து அப்பாம்மாவிற்கு உணவு பரிமாறி, அவர்கள் உண்டபின் தானும் உண்டுவிட்டு அப்பாவின் புதிய எழுத்துக்களை எல்லாம் சேகரித்து பத்திரமாக எடுத்துவைப்பதற்காக ஒவ்வொன்றினையாய் எடுத்து படித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஜானகியம்மாள் உணவுண்டு மருந்தும் சாப்பிட்டுவிட்டு ஒருபக்கமாக திரும்பிப் படுத்துக்கொண்டு வாசலுக்குவெளியே தெரியும் படர்ந்த இருட்டை அகலப் பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளே உயிர்பிரியும் ஒரு வலியிருப்பதையோ இதயம் அழுந்த வலிப்பதையோ சொல்லி ஜானகிராமனை நோகடிக்க அவள் விரும்பவில்லை.

ஜீரணிக்க முடியாத சுமையை இதயத்தில் சுமந்திருந்த ஜானகிராமனுக்கு இறைவனை சபிக்கும் சிந்தனைக் கூட அற்றுப் போய் மனைவியின் பழைய நினைவுகளை எல்லாம் ஏனோ அசைப்போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார்.

வாணி வீடெல்லாம் சுற்றிச் சுற்றிப் பார்த்தாள். முற்றம் வாசல் கூரை என இங்குமங்குமாய் திரிந்தாள். கூரையின் மத்தியில் தொங்கும் எரியாத மின் விளக்கு மின்சாரக் கட்டணம் கூட செலுத்தியிராததை அவளுக்கு நினைவுபடுத்தியிருக்கக் கூடும்போல், வெளிச்சம் வேறு மிக சன்னமாக இருந்தது. ஒரேயொரு விளக்கே வீட்டின் நடுமரத்தின் அருகில் வைக்கப்பட்டிருக்க உள்பக்கம் அண்டியிருந்த இருட்டை விரட்ட இன்னொரு சிறிய விளக்கொன்றை எடுத்து திரிநீக்கி கொளுத்தினாள். அது திரி எரிந்து உடனே அணைந்து போக, ஆட்டிப்பார்த்து அதிலும் மண்ணெண்ணெயில்லை என்பதை அறிந்தாற்போல் அப்பாவைத் திரும்பிப் பார்க்கிறாள். அப்பா “வேறு மண்ணெண்ணெய் இல்லைம்மா, இந்த வீட்டில் ஒரு விளக்கு எரிவதே எங்களுக்கு சூரியன் வீட்டில் பூத்ததுக்கு சமமில்லையா” என்கிறார்.

உலகச் செய்திகள்

.
கொஸ்டா கொன்கோர்டியா விபத்து: மேலும் 5 சடலங்கள் மீட்பு (பட இணைப்பு)

தேர்தலில் போட்டியிட ஆங் சான் சூகி வேட்பு மனு தாக்கல்



ஆப்கான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 7 பேர் பலி ; 8 பேர் காயம்

 கொஸ்டா கொன்கோர்டியா விபத்து: மேலும் 5 சடலங்கள் மீட்பு (பட இணைப்பு)



கவின் 18/1/2012

கொஸ்டா கொன்கோர்டியா உல்லாசக் கப்பல் விபத்தில் உயிரிழந்த மேலும் 5 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து அவ் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சுமார் 29 பேரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் 14 பேர் ஜேர்மனிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் மற்றையோர் இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா, பேரு மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சடலங்களைத்தேடும் பணியில் இத்தாலிய சுழியோடிகள் மற்றும் மீட்புப்பணியாளர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.

கொஸ்டா கொன்கோர்டியா (Costa Concordia) இத்தாலியைச் சேர்ந்த கொஸ்டா குரூஸ் நிறுவனத்தின் உல்லாசப் பயணிகள் கப்பல் ஆகும்.

இது கடந்த 13 ஆம் திகதி 4200 பேருடன் பயணித்துக்கொண்டிருக்கும் போது இத்தாலியின் கிகிலியோ தீவுக்கருகில் பாறை ஒன்றுடன் மோதியதில் கப்பல் சரிந்து ஒரு பகுதி மூழ்கியது.

எனினும் இதில் பயணித்த அநேகமானோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

தமிழ் சினிமா

உச்சிதனை முகர்ந்தால்


இது அற்புதங்களும் ஆச்சர்யங்களும் நிறைந்த கற்பனைத் தேவதைகளின் கதை இல்லை. எல்லாச் சாத்தான்களாலும் சபிக்கப்பட்டிருக்கும் ஒரு யதார்த்த தேவதையின் கதை.

இலங்கையில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை ஈழத் தமிழினத்தின் ஆன்மாவில் ஆழமாகப் படிந்த ஒரு வடுவை, திரைக்காவியமாக்கியுள்ளார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்குள் புகுந்த சிங்கள இனவெறி இராணுவம் நடத்திய கொடூரமான காம வெறியாட்டத்தில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட 13 வயது சிறுமி, தான் கர்ப்பமுற்றிருப்பதை அறியாமலேயே தமிழ்நாட்டிற்கு தன் தாயுடன் வந்து தஞ்சமடைகிறாள். அவளையும் அவளது தாயாரையும் மானுட உணர்வுள்ள ஒரு பேராசிரியர்(சத்யராஜ்) தனது குடும்பத்தின் ஒரு அங்கமாக வைத்து பாதுகாக்கிறார்.



அவரது மனைவி, (சங்கீதா) அந்த சிறுமியின் மீது அளவற்ற பாசத்தைப் பொழிந்து வளர்க்கிறார். அவளுடையத் தாய் அந்தக் கருவை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட, அது அந்தச் சிறுமியின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்பதால் முயற்சியைக் கைவிடுகின்றனர். பேராசிரியர் குடும்பத்தில் நிலவும் அன்பில் அவர்களுக்கிடையே அழுத்தமான உறவு ஏற்படுகிறது. அந்தச் சிறுமியின் வயிற்றிற்குள் இருந்த கருவும் வளர்கிறது.

வயிற்றில் வளரும் குழந்தையுடன் வலம் வரும் சிறுமியின் தந்தை, ராணுவத்தால் கொல்லப்பட, அதை மகளிடம் சொல்லாமல் இலங்கைக்கு செல்கிறார் தாய். சத்யராஜும், சங்கீதாவும் சிறுமியை காக்கின்றனர். இந்நிலையில், சங்கீதாவும் நீண்ட காலத்திற்குப் பிறகு கர்ப்பமாகிறார். அவரைப் பார்க்க வரும் அம்மா, சிறுமியின் கர்ப்பத்தைக் கண்டு அதிர்ந்து, சத்தம் போடுகிறார். தன்னால்தானே பிரச்சினை என்று வருந்தும் சிறுமி, யாரிடமும் சொல்லாமல், வெளியேறுகிறார். அவளை திருநங்கை ஒருவர் காப்பாற்றுகிறார். பிறகு அந்தச் சிறுமிக்கு எய்ட்ஸ் நோய் பரவியிருப்பது தெரிகிறது.
சிங்களவன் கற்பழித்து குழந்தையை மட்டுமல்ல, உயிரைக் கொல்லும் நோயையும் கொடுத்துள்ளான் என்று தெரியவர, முடிவு என்ன என்பது மனதை உருக்கும் இறுதிக்காட்சி. அதிர வைக்கும் பரிதாபத்துக்குரிய சிறுமி வேடத்தில் வரும் நீநிகா, படத்தின் நாயகி. வெடிச்சத்தம் கேட்டும், விமானம் பறப்பதைப் பார்த்தும், தன்மீது குண்டு வீசுகிறார்கள் என்று நினைத்து பயப்படும்போது, கரைய வைக்கிறார். பிஞ்சு வயிற்றில் கர்ப்பத்தைச் சுமந்துகொண்டு, வீட்டிலுள்ள செல்லப்பிராணிக்கு பெயரிட்டு கொஞ்சுவதாகட்டும், தோட்டத்துக்கு நீர்ப்பாய்ச்சி ரோஜாக்களை வளர்ப்பதாகட்டும், புறாக்களுக்கு தீனி போடுவதாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் பரிதாபத்தை அள்ளுகிறார்.

அவரது இலங்கைத்தமிழ்ப் பேச்சு, இனிக்கிறது. இந்தியாவுக்கு பாஸ்போர்ட், விசா இல்லாமல் தேடி வந்த சிறுமிக்கும், அவளது தாயாருக்கும் அடைக்கலம் கொடுக்கும் தம்பதியராக சத்யராஜ், சங்கீதா மனதில் நிற்கின்றனர். நீநிகாவின் கர்ப்பம் தெரிந்ததும் தானே அவளுக்கு இன்னொரு தாயாக மாறும் சங்கீதாவின் நடிப்பு யதார்த்தம்.

பொலிசாக வரும் சீமான், டாக்டர்களாக வரும் நாசர், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் ஆட்டோ டிரைவர் அருள்மணி மனதில் பதிகிறார்கள். பி.கண்ணன், அழகிய மணவாளனின் ஒளிப்பதிவு கைகொடுத்துள்ளது. இமான் இசையில் 'உச்சிதனை முகர்ந்தால்' பாடல் இனிய மெலடி. தமிழருவி மணியனின் வசனங்களில் அனல் பறக்கிறது.

தமிழர்கள் படும் அவஸ்தையை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். என்றாலும், 13 வயது சிறுமிக்கு தான் கர்ப்பமான விஷயம் தெரியாதா என்ன? சிறுமியை பரிசோதிக்கும் டாக்டர்கள், ஆரம்பத்திலேயே அவளுக்கு நோய் இருப்பதைக் கண்டறியாதது எப்படி என்பது உட்பட எழும் ஏராளமான கேள்விகளை விட்டுவிட்டுப் பார்த்தால் உச்சிதனை முகரலாம்.


ராஜபாட்டை

சொத்து வாங்குறதுல மக்கள் எவ்வளவு ஜாக்கிரதையா இருக்கணும் என்பதை சொல்லும் கதை.

சினிமாவில் எப்படியாவது வில்லனாகிவிட வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் விக்ரம், அதற்காக சினிமாவில் கிடைத்த ஜிம் பாய் வேலையை செய்துகொண்டு தனது வில்லன் லட்சியத்தை நோக்கிய வாழ்க்கையை ஓட்ட, லேண்ட் மாஃபியாவால் பாதிக்கப்பட்ட விஸ்வநாதன், விக்ரமிடத்தில் தஞ்சம் அடைகிறார்.

பொது மக்களின் நிலமோ அல்லது புறம்போக்கு நிலமோ எதுவாக இருந்தாலும், தனக்கு பிடித்துவிட்டால் அதை வளைத்துப் போடும் பெண் அரசியல்வாதியிடம், விஸ்வநாதன் நடத்தி வரும் அனாதை ஆஸ்ரமம் சிக்கி சின்னாபின்னமாகிறது. நல்ல விலைபோகும் அந்த இடத்திற்காக ஒட்டு மொத்த ஆதரவற்ற சிறுவர்களையும் நடுத்தெருவில் நிறுத்தும் அரசியல்வாதியை எதிர்க்கும் விக்ரம், எப்படி அவரை அழித்து இடத்தை மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

சீயான் விக்ரம் எத்தனை திறமையான நடிகரோ, அதே அளவுக்கு தனக்கான கதைகளை அவரால் தேர்வு செய்ய இயலாதவர் என்பதை 'மஜா', 'ராவணன்', இப்போது 'ராஜாபாட்டை' என அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

முகத்தில் முதுமைக்கான சுருக்கங்களை வாங்கிக் கொண்டிருக்கும் விக்ரம், தன்னை ஒரு சினிமா ஸ்டண்ட் மேன் கதாபாத்திரத்தில் பொருத்திக் கொண்டு, வில்லன்களை வேட்டையாடும் கதையில் நடித்தால் சும்மா பிச்சுகிட்டு போகும் என எதிர்பார்த்திருக்கிறார்.

ஆனால் கதைக்களம் எவ்வித சீரியஸ்நெஸூம் இல்லாமல் நில அபகரிப்பைப் பற்றி மிக பலகீனாமாக ஜல்லியடிக்கிறது. அது ஏதோ, தக்ஷிணா மூர்த்தி என்ற தனிப்பட்ட கிழவரின் கருணை இல்லம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதுபோல தேங்கி விடுவதால் விக்ரம் என்ற மாஸ் ஹீரோ நிஜமாகவே மொத்த படத்திலும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆகிவிட்டார்.

தன்னிடம் அடைக்கலமாக அழைத்து வரும் முதியவர்( இயக்குனர் விஸ்வநாத்) தக்ஷிணா மூர்த்தியின் கருணை இல்ல நிலத்தை அக்கா(சனா) அபகரித்துக் கொள்ள, இது போன்ற அபகரிப்புகளை வாப்பா மூலம்தான் அக்கா செய்கிறார் என்பதை அறிந்து, அவரைக் கடத்தி, தனது சினிமா செட் சிபிஜ அலுவலகத்தில் வப்பாவை வைத்து பல்வேறு கெட்-அப்புகளில் வந்து அவரை சிபிஐ அதிகாரி போல விசாரித்து வீடியோ ஆதாரத்தை உருவாக்குகிறார் ஸ்டண்ட் பாய் அனல் முருகனாக நடித்திருக்கும் விக்ரம்.

ஸ்டண்ட் பாய் என்பதற்காக வில்லன்களின் அடியாட்களை பதினைந்து நிமிட இடைவெளியில் கைநரம்பு புடைக்க அடித்துக் கொண்டே இருக்கிறார். அய்யோ! இப்போ சண்டை வரப்போகுது என்று நாம் பயந்தால் நிஜமாகவே அந்தரத்தில் பாய்ந்து அடிக்கிறார் விக்ரம். சண்டைக்காட்சிகளில்கூட அவருக்கு குளோஸ் அப்புகளை அதிமாக வைத்து, அவருக்கு வயதாகி விட்டது என்று காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

படத்தில் விக்ரம் போட்டிருக்கும் கெட்-அப்புகள் நன்றாக பொருந்தியிருக்கும் நிலையில் அவைகளை வைத்து இரண்டாவது பாதியை ஜமாய்த்திருந்தால் குறைந்தது விக்ரம் ரசிகர்களையாவது திருப்திப் படுத்தியிருக்கலாம்.

தீக்ஷா சேத், ஒரு படத்தில் ஹீரோயினின் தோழி எவ்வளவு காட்சிகளில் வருவாரோ அதை விடவும் குறைவான காட்சிகளில் வந்துபோகிறார். பாடல்களையும் மற்ற மூன்று பேர் பகிர்ந்துகொண்டதால், அதிலும் அம்மணிக்கு வஞ்சகம்தான். மொத்தத்தில் தீக்ஷா சேத், ஊருகாய் போலத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

காமெடிக்கென்று தனி டிராக் இல்லையென்றாலும், டைரக்டர் ஆசையில் திரியும் தம்பி ராமையாவோடு விக்ரம், காமெடியையும் கவனித்துக் கொள்கிறார். திருந்தும் வில்லனாக அவினாசும், திருந்தாத வில்லனாக ப்ரதீப் ராவத்தும் தங்கள் பங்கை செய்கிறார்கள்.

அக்கா கதாபாத்திரம் அழுத்தமில்லாமல் படைக்கப் பட்டிருப்பதால் அதை விக்ரம் சாகடித்தால் படம் இன்னும் சொம்பையாகிவிடும் என்று நினைத்த இயக்குநர், அதை மிகப்பழைய டெக்னிக் மூலம் கொன்றுவிட்டு, இதுதாண்டா க்ளைமாக்ஸ் எனும்போது ரசிகர்கள் காசுபோச்சே என்று தியேட்டரில் கதறுகிறார்கள்.

இவ்வளவு மொக்கையான க்ளைமாக்ஸூக்கு பிறகு தனது தோழிகள் ரீமா சென், ஸ்ரேயா இருவரோடும் விக்ரம் ஆடும் குத்தாட்டம் எதற்கென்று தெரியவில்லை. அந்த பாடலின் பல்லவி முடியும்வரைகூட பார்க்க பொறுமையில்லாமல் வெளியேறுகிறார்கள் ரசிகர்கள்.

யுவன் சங்கர்ராஜா ஆக்ஷன் படத்துக்கு என்ன தேவையோ அதை பின்னணி இசையாகவும், பாடலாகவும் கொடுத்திருக்கிறார். மதியின் ஒளிப்பதிவும் அப்படியே. சினிமா வில்லன்களுக்கு பின்னால் நிற்கும் ஜிம் பாய்களுக்கும், சண்டைக் கலைஞர்களுக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது என்கிற ஒரு வரி மெசேஜ் சொல்ல, மசாலாவை அதிகமாகத் தூவியிருக்கிறார் இயக்குநர்.

நன்றி விடுப்பு