நான் ரசித்த மானி இன்னிசை மாலை2019 - செ .பாஸ்கரன்
.
மானிப்பாய் மகளிர் மற்றும் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க சிட்னி கிளையினரின் வருடாந்த நிகழ்வான மானி இன்னிசை மாலை 2019 சனிக்கிழமை 26.10.2019 இரவு Bowman மண்டபத்தில் சரியான நேரத்திற்கு ஆரம்பமானது. நிகழ்ச்சியை இளம் அறிவிப்பாளர் சிவாஞ்சலி ரட்ணசீலன் மிக அழகாக ஆரம்பித்துவைத்தார் .
இந்து கிறிஸ்துவ மத பாடல்களும் தேசிய கீதம் கல்லூரிக் கீதங்கள் பாடப்பட்டு மங்கல விளக்கேற்றப் பட்டது. தொடர்ந்து திரு கிருஸ்னானந்தன் தலைமை உரையை சுருக்கமாகவும் அழகாகவும் ஆற்றினார். சிறப்புரையை பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த Janaki perairavar அழகாக தமிழிலும் ஆங்கிலத்திலும் கொடுத்தார்.
அதனைத்தொடர்ந்து Dr. ராஜலிங்கம் ராஜயோகன் நெறிப்படுத்திய பாடல் போட்டி நிகழ்வு மிககவும் நேர்த்தியாக இடம் பெற்றது. நான்கு பிரிவுகளாக இந்தப் பாடல் போட்டிகள் இடம்பெற்றது. அத்தனை போட்டியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் பாடி சபையினரின் பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டார்கள். இந்த பாடல் போட்டி நிகழ்வுகளை சிட்னியின் சிறந்த அறிவிப்பாளரும் அவுஸ்திரேலிய தமிழ் ஒபரப்புக் கூட்டுத் தாபனத்தின் ஒலிபரப்பாளருமான திரு A J ஜெயச்சந்திரா மிகவும் அழகாகவும் சுருக்கமாகவும் தொகுத்து வழங்கியது சபையினரை கவர்ந்திருந்தது.
மானிப்பாய் மகளிர் மற்றும் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க சிட்னி கிளையினரின் வருடாந்த நிகழ்வான மானி இன்னிசை மாலை 2019 சனிக்கிழமை 26.10.2019 இரவு Bowman மண்டபத்தில் சரியான நேரத்திற்கு ஆரம்பமானது. நிகழ்ச்சியை இளம் அறிவிப்பாளர் சிவாஞ்சலி ரட்ணசீலன் மிக அழகாக ஆரம்பித்துவைத்தார் .
இந்து கிறிஸ்துவ மத பாடல்களும் தேசிய கீதம் கல்லூரிக் கீதங்கள் பாடப்பட்டு மங்கல விளக்கேற்றப் பட்டது. தொடர்ந்து திரு கிருஸ்னானந்தன் தலைமை உரையை சுருக்கமாகவும் அழகாகவும் ஆற்றினார். சிறப்புரையை பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த Janaki perairavar அழகாக தமிழிலும் ஆங்கிலத்திலும் கொடுத்தார்.
அதனைத்தொடர்ந்து Dr. ராஜலிங்கம் ராஜயோகன் நெறிப்படுத்திய பாடல் போட்டி நிகழ்வு மிககவும் நேர்த்தியாக இடம் பெற்றது. நான்கு பிரிவுகளாக இந்தப் பாடல் போட்டிகள் இடம்பெற்றது. அத்தனை போட்டியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் பாடி சபையினரின் பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டார்கள். இந்த பாடல் போட்டி நிகழ்வுகளை சிட்னியின் சிறந்த அறிவிப்பாளரும் அவுஸ்திரேலிய தமிழ் ஒபரப்புக் கூட்டுத் தாபனத்தின் ஒலிபரப்பாளருமான திரு A J ஜெயச்சந்திரா மிகவும் அழகாகவும் சுருக்கமாகவும் தொகுத்து வழங்கியது சபையினரை கவர்ந்திருந்தது.
ஆனந்தமாய் தீபாவளி அமைகவென வேண்டிநிற்போம் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .... அவுஸ்திரேலியா
தித்திக்க தித்திக்க பட்சணங்கள் செய்திடுவோம்
மொத்தமுள்ள உறவுகளை முகமலர்ச்சி ஆக்கிடுவோம்
அத்தனைபேர் ஆசியையும் அன்புடனே பெற்றிடுவோம்
சித்தமதில் சினமதனை தேக்கிவிடா நாமிருப்போம்
செருக்கென்னும் குணமதனை சிறகொடியப் பண்ணிடுவோம்
அர்த்தமுடன் தீபாவளி அமைந்திடவே வேண்டுமென
அனைவருமே ஆண்டவனை அடிதொழுது பரவிநிற்போம் !
புத்தாடை உடுத்திடுவோம் புத்துணர்வும் பெற்றிடுவோம்
பெற்றவரைப் பெரியவரை பெரும்பேறாய் போற்றிடுவோம்
கற்றுணர்ந்து நாமிருக்க காரணமாய் ஆகிநிற்கும்
நற்றவத்து ஆசான்கள் பொற்பதத்தைப் பணிந்திடுவோம்
குற்றங்குறை சொலுமியல்பை கொடுந்தீயால் எரித்திடுவோம்
குதர்க்கமிடும் குணமதனை குழிதோண்டிப் புதைத்திடுவோம்
சொற்களிலே சுவையிருத்தி சுகம்பெறவே வாழ்த்திடுவோம்
அர்த்தமுடன் தீபாவளி அமைந்திடுமே அனைவருக்கும் !
செயல்வடிவமும் நம்பகத்தன்மையும்

26/10/2019 ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்தத் தேர்தலில் எந்த வேட்பாளர் வெற்றிபெறப் போகின்றார்? என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இத்தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ உள்ளிட்ட ஏனைய சில வேட்பாளர்களுக்கும் சிறுபான்மைக் கட்சிகள் ஆதரவு வழங்கி வருகின்றன. மலையகக் கட்சிகளைப் பொறுத்தவரையில் தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித் பிரேமதாசவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோத்தபாயவிற்கும் பூரண ஆதரவினை தெரிவித்துள்ளன என்பதும் தெரிந்த விடயமாகும். இக்கட்சிகள் மலையக மக்களின் நலன்கருதி வேட்பாளர் களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றன. இது ஒருபுறமிருக்க பிரதான கட்சிகள் மலையக மக்களின் அபிவிருத்தி கருதி தன்னகத்தே எத்தகைய கொள்கைகளைக் கொண்டிருக்கின்றன என்பது குறித்தும் நாம் ஆழமாகக் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. மேலும் கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாகக் கூறும் வேட்பாளர்கள் தேர்தல் வெற்றியின் பின்னர் எவ்வாறு நடந்துகொள்ளப்போகின்றார்கள்? வாக்குறுதிகள் செயல்வடிவம் பெறுமா? அல்லது காற்றில் பறக்கவிடப்படுமா? என்ற நியாயமான சந்தேகத்தினையும் பலர் எழுப்பி இருக்கின்றனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி காலமானார்!
.


ஈழத்தின் பிரபல பெண் எழுத்தாளரும் இலங்கையின் தொல்லியலில் பெண் ஆய்வாளர் என்ற பெருமையினையும் கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி க.தங்கேஸ்வரி இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது 67வது வயதில் இன்று மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தங்கேஸ்வரி அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாக இரண்டு சீறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
2004ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் ஐந்து வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டவர் 2010ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளீர்க்கப்படாமையினால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
வெற்றிக்கு வித்திடும் பௌத்த மேலாதிக்கம்

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் மூன்று முக்கிய விடயங்களில் சுற்றிச் சுழல்கின்றது. இராணுவ நலன்களை முதன்மைப்படுத்திய தேசிய பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, சிறுபான்மை இன மக்களின் தேவைகள், கோரிக்கைகள் புறக்கணிப்பு என்ற மூன்று விடயங்களுக்கான பரப்புரைகள் தீவிரமாக முடுக்கிவிடப் பட்டிருக்கின்றன.
ஜனாதிபதி தேர்தல் என்பது மிக முக்கியமானது. நாட்டின் அதிஉயர் அரச தலைவர் ஜனாதிபதியை நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நேரடி வாக்களிப்பு மூலம் தெரிவு செய்வது. இவ்வாறு தெரிவு செய்யப்படுகின்ற ஒருவர் கட்சி அரசியல் நலன்களுக்கு அப்பால் தேசிய அளவில் பொதுவானவராக அனைத்து மக்களினதும் நலன்களைப் பேணி பாதுகாப்பவராகச் செயற்பட வேண்டும்.
மழைக்காற்று - தொடர்கதை ( அங்கம் – 07 ) - முருகபூபதி
அந்த வீட்டுக்கு வந்து
ஒருவாரத்தில், அங்கிருப்பவர்களின் இயல்புகளை அபிதா ஓரளவு புரிந்துகொண்டாள். அவர்களின்
உணவு மீதான ருசிபேதம்தான் முதலில் அவளால் புரிந்துகொள்ளப்பட்டது.

அனைவரும் வீட்டிலிருக்கும்
நாட்கள் வார இறுதியில்தான் வரும். அந்நாட்களில் அவர்கள் துயில் எழுவதற்கும் தாமதமாகும்.
கற்பகம் ரீச்சர் மாத்திரம் சனிக்கிழமைகளில் அபிதா எழுந்துவிடும் நேரத்தில் துயிலை களைத்துவிடுவாள்.

குடும்பத்தில் ஒரே மகள்.
சொந்த மச்சானையே திருமணம் செய்யவேண்டும் என்ற வற்புறுத்தலினால், ஜெர்மனியிலிருந்த ஒருவனுக்கு
வாழ்க்கைப்பட்டு சென்றவள். அங்கு சென்றபின்னர்தான் அவளுக்கு அவன் பற்றி பல தகவல்கள்
கிடைத்தன.
ஏற்கனவே ஒரு ஜெர்மன்காரியுடன்
Living together ஆக வாழ்ந்துகொண்டிருப்பவன். அது தெரியாமல் கழுத்தை நீட்டியிருக்கும் கற்பகம்
ரீச்சர், ஜெர்மன் டோட்மன்டிற்குச் சென்று ஒரு மாதத்திற்குள் அவன் கட்டிய தாலியை கழற்றி எறிந்துவிட்டு, நாடு
திரும்பியவள்.
அவளுக்கு தரப்பட்ட சீதன
வீட்டில் இப்போது இருப்பது அவனது தங்கைக்காரி. மூன்று மாத சம்பளமற்ற லீவில் சென்று மீண்டமையால்
வாழ்வாதாரத்திற்கு ஆசிரியப்பணியாவது எஞ்சியிருக்கிறது.
“ ஏன் வந்துவிட்டீர்கள்…? “ என்று கேட்டவர்களுக்கு ஜெர்மனியின் குளிரையும்
அங்கு கொட்டும் பனியையும் காரணமாகச்சொன்னவள் கற்பகம் ரீச்சர்.
வாழ்வை எழுதுதல் 01 பலருக்கு இலக்கிய அடையாளம் வழங்கியவரிடத்திலிருந்து கற்றதும் பெற்றதும் வெள்ளீய அச்சு எழுத்துக்களில் மலர்ந்து, கணினி யுகத்திலும் மணம்வீசிய மல்லிகை! - முருகபூபதி

நீர்கொழும்பிலிருந்து ஆறாம்தர புலமைப்பரிசில் பெற்று அக்கல்லூரி ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து படித்துக்கொண்டிருந்தபோது, ஒருநாள் எங்கள் விடுதியின் சார்பில் அவரை அழைத்து, கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மேடையேற்றி பேசவைத்தார்கள்.

எனக்குத் தெரியாத சங்கானை
சாதிக்கலவரம் பற்றியும் ஆப்ரகாம் லிங்கன் பற்றியும் அவர் அன்று பேசியது மாத்திரமே இன்றும்
நினைவில் தங்கியிருக்கிறது.
அந்த வருடம் 1963.

அதன்பின்னர் 1975 ஆம் ஆண்டுவரையில் யாழ்ப்பாணத்தையே நான் திரும்பிப்பார்க்கவில்லை. சுமார்
பத்தாண்டுகளின் பின்னர் என்னை யாழ்ப்பாணம் நோக்கி திரும்பிப் பார்க்கவைத்தவர்தான் அவர்.

எனது வாழ்வின் திருப்பங்களுக்கு
பலர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர்தான் அவர்.
1971 ஆம் ஆண்டு வேலை தேடும் படலத்திலிருந்தவேளையில் அவர் எங்கள் ஊருக்கு வந்திருந்தார்.
எழுத்தாளர் நீர்கொழும்பூர் முத்துலிங்கம் வீட்டில் அவரை மீண்டும் சந்தித்தேன். அப்பொழுதும்
அவர் தூய வெள்ளைவேட்டி, வெள்ளை நெஷனல்தான் அணிந்திருந்தார். அவர் பெரும்பாலும் விரும்பி
அணிந்த ஆடைகள்தான் அவை. எவருக்கும் அவர் அந்த ஆடையுடன் தோன்றியதுதான் நினைவிலிருக்கும்.
1971 ஆம் ஆண்டு மீண்டும் அவரை நான் சந்தித்தபோது அவர்
மல்லிகை மாத இதழின் ஆசிரியராகியிருந்தார். அதனை அவர் 1966 இல் ஆரம்பித்தவர். நான் மல்லிகையின் வாசகனாக மாறியிருந்தேன். நீர்கொழும்பு கடற்கரையில்
அவருடன் நீண்டநேரம் இலக்கியம் பேசியிருக்கின்றோம். அவ்வாறு பேசியபொழுதொன்றில்தான் மல்லிகை
நீர்கொழும்பு பிரதேச மலர் பற்றிய யோசனை வந்தது.
1972 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அந்த மலர் வெளிவந்தது.
முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ ஈழத்து இலக்கியச்சிற்றிதழ்களில் பாரதியின் தாக்கம் எத்தகையது…?
( கொழும்பு தமிழ்ச்சங்கம் விநோதன்
மண்டபத்தில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் சமர்ப்பித்த மதிப்பீட்டுரை)
( கடந்த வாரத் தொடர்ச்சி )

“ ஆடுதல்
பாடுதல் சித்திரம் கவி
யாதியினைய கலைகளில்
உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர்
பிறர்
ஈன நிலைகண்டு
துள்ளுவார். “
என்ற வரிகளைத் தாங்கிவந்த மல்லிகை இதழின்
ஆசிரியர் டொமினிக் ஜீவா, 1966 ஆண்டிலிருந்து
நீண்டகாலம் அதனை வெளியிட்டு, சாதனை படைத்தவர். 1966 முதல் மல்லிகையில் பாரதியியல் ஆக்கங்கள்
ஏராளமாக வெளிவந்துள்ளன.
இலங்கைப் படைப்பாளிகள் மட்டுமல்ல, தமிழகத்தவர்களும்
அடிக்கடி பாரதிபற்றி மல்லிகையில் எழுதியுள்ளார்கள். சிறு சஞ்சிகைகளில் பாரதி ஆய்வு| என்ற கட்டுரையை மல்லிகையில் பேராசிரியர் கைலாசபதி,
பாரதி நூற்றாண்டு காலத்தில் எழுதியிருந்தார்.
பேராசிரியர் கைலாசபதி, மல்லிகையில் எழுதிய இலங்கை கண்ட பாரதி என்ற கட்டுரையை
தமிழ் நாட்டின் தாமரை இதழ் மறுபிரசுரம்
செய்தது.
‘பாரதியின்
தத்துவ ஞானம்’ என்ற தலைப்பைக் கொண்ட இந்தக் கட்டுரைத் தொகுதியில் பாரதியின் பன்முகப்
பரிமாணங்களைச் சுட்டிக் காட்டுகிறார். 1950
களில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டபோது,
ப. ஜீவானந்தம் இலங்கையில் தலைமறைவாக வாழ்ந்தார். இலங்கையில்
கண்டியில் கே. கணேஷ் அவர்களது
இல்லத்தில் தங்கியிருந்தவர் . அக்காலகட்டத்தில் மலையகத்திலும் பலகூட்டங்களில்
கலந்து கொண்டவர். அதன்பின்னர்
யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலத்திலும்
பல கூட்டங்களில் கலந்து
கொண்டவர். பாரதியின்
கருத்துக்களைப் பரப்பியவர்.
“ வெள்ளத்தின் பெருக்கைப்போல்
கலைப் பெருக்கும் கவிப்பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவிகொள்வர் "
இலங்கை மாணவர் கல்வி நிதியம் (1988 – 2019 ) அவுஸ்திரேலியா
இரக்கமுள்ள அன்பர்களுக்கு
உருக்கமான வேண்டுகோள்

இதுவரையில் நூற்றுக்கணக்கான அன்பர்களின்
ஆதரவுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவிய கல்வி நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்பான காணோளிக்காட்சியும் மாணவர்களின் முன்னேற்றம் பற்றிய தகவல் அமர்வும்
இடம்பெற்ற இந்நிகழ்வில் 2019 – 2020 ஆண்டறிக்கை
மற்றும் நிதியறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இலங்கை மலையகத்தில் தெரிவுசெய்யப்பட்ட
வறுமைக்கோட்டிலும் குடும்பத்தின் மூல
உழைப்பாளியை இழந்தும் வதியும் ஏழைத்தமிழ் மாணவர்களுக்கும் கல்வி நிதியம் உதவ
முன்வந்திருப்பது குறித்தும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைச் செய்திகள்
ஞானசார தேரருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு
இலங்கையில் கடற்படையின் பல இரகசிய முகாம்கள்- முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்பு -திருகோணமலை இரகசிய முகாமிற்கு கோத்தாபய பல தடவை சென்றார்- சர்வதேச அமைப்பு அதிர்ச்சி அறிக்கை
இலங்கை நீதித்துறையின் மாபெரும் தோல்வி குறித்து யஸ்மின் சூக்கா கவலை
எனது தந்தையை 2009 மே 17 ம் திகதியே இறுதியாக பார்த்தேன்- பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தமிழ் சிறுமி உருக்க உரை- வீடியோ இணைப்பு
முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் மனித எச்சங்கள் மீட்கும் நடவடிக்கை முன்னெடுப்பு
உலகச் செய்திகள்
முகநூலில் முஸ்லீம்களை அவமதிக்கும் பதிவு – பங்களாதேசில் வன்முறை
19 மணிநேரம் தொடர்ந்து பயணித்து நியூயோர்க்கிலிருந்து சிட்னி சென்ற விமானம்
பிறிக்ஸிட் உடன்படிக்கை குறித்து மீண்டும் வாக்கெடுப்பை நடத்த வலியுறுத்தல்
மீண்டும் கனடாவின் பிரதமராகின்றார் ஜஸ்டின் ட்ரூடோ
39 சடலங்கள் லொறியொன்றில் மீட்பு- பிரித்தானியாவில் அதிர்ச்சி
பெல்ஜியத்திலிருந்து வந்த குளிரூட்டப்பட்ட கொள்கலன்- பிரிட்டனில் அதனை பொறுப்பேற்ற லொறி சாரதி- உள்ளே உடல்கள் தொடர்கின்றது மர்மம்
பிரிட்டனில் கொள்கலனிற்குள் சடலமாக மீட்கப்பட்டவர்கள் சீன பிரஜைகள்?
எங்கள் மகள் பிரித்தானியா செல்வார் எங்கள் வறுமை மாறும் என நினைத்தோம்- கொள்கலனிற்குள் சிக்கினார் என கருதப்படும் யுவதியின்தந்தை
என்னால் சுவாசிக்க முடியாமல் உள்ளது நான் மரணித்துக்கொண்டிருக்கின்றேன் -வியட்நாமிய பெண் குறுஞ்செய்தி-கொள்கலனிற்குள் மரணித்திருக்கலாம் என அச்சம்
முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கையில் ரஷ்ய – துருக்கி ஜனாதிபதிகள் கைச்சாத்து
பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்தரதாஸ் பகுதி 17
சிவந்தமண்
1969ம் ஆண்டு பொருட்செலவுடன் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட படங்களில் ஒன்று சித்ராலயாவின் சிவந்தமண். பிரபல கதாசிரியரும் டைரக்டருமான ஸ்ரீதர் இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார். 69ம் ஆண்டு தீபாவளிக்கு இப்படம் வெளிவந்தது.


இது நடந்து நான்காண்டுகள் கழித்து இதே கதையை மீண்டும் வண்ணப்படமாக ஸ்ரீதர் தயாரித்து டைரக்ட் செய்யத் தொடங்கினார். கதாநாயகனாக சிவாஜி ஒப்பந்தமானார். கதாநாயகியாக காதலிக்க நேரமில்லை புகழ் காஞ்சனா தெரிவானார். இவர்களுடன் நம்பியார், நாகேஷ் சாந்தகுமாரி, ரங்கராவ், ஜாவர் சீதா ராமன், சச்சு, முத்துராமன், என்று பலர் நடித்தார்கள்.
படத்திற்கு சிவந்தமண் என்று பெயரிடப்பட்டது. நிறைய பொருட்செலவில் எடுப்பதினால் படத்தை வெளிநாடுகளிலும் படமாக்குவதற்கு ஸ்ரீதர் தீர்மானித்தார்.
அந்த வகையில் பாரிஸ், ரோம், லண்டன், ஆரிச் ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் நகரங்களில் படமெடுப்பது என தீர்மானமானது. அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக குறைந்த கலைஞர்களுடனேயே இந்த நாடுகளுக்கு ஸ்ரீதர் பயணமானார்.
சிவாஜி மிகக்குறைந்த மேக்அப்புடனேயே வெளிநாட்டில் படமான காட்சிகளில் தோன்றினார். சிவாஜி காஞ்சனா இருவரையும் தவிர ஏனைய நடிகர்கள் அனைவரும் இந்தியாவிலேயே ஸ்டுடியோவில் நடித்தார்கள்.

சர்வாதியாக வில்லன் நம்பியார் நடித்திருந்தார் என்பதை விட பாத்திரமாகவே மாறியிருந்தார்.

ஓளிப்பதிவாளர் பாலகிருஷ்ணனின் கைவண்ணம் படம் முழுதும் வியாப்பித்திருந்தது. பம்பாயில் இருந்து வந்த சாந்திதாஸ் படத்திற்கான பிரம்மாண்டமாக அரங்குகளை அமைத்திருந்தார். அன்றும் இன்றும் மறக்கமுடியாத இசையை படத்திற்கு அள்ளி வழங்கியிருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

சிவாஜியின் சாட்டையடிக்கு ஏற்ப காஞ்சனா ஆடும் பட்டத்துராணி பாடல் அதற்கான காட்சி எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலினிமை எல்லாம் ரசிகர்களை பரவசமாக்கின. இந்தப் பாடலுக்கு மட்டும் எம்.எஸ்.வி. 120 வாத்தியங்களை பயன்படுத்தியிருந்தார். கர்நாடக மேற்கத்திய, அரபிய இசை என பலவித இசையை விஸ்வநாதன் இப்படத்திற்கு வழங்கியிருந்தார்.
படத்தின் சண்டைக் காட்சிகளை அமைத்தவர் எம்.ஜி.ஆரின் ஸ்டன்ட் மாஸ்டர் சியாம்சுந்தர். புரட்சித் தலைவராக படத்தில் நடித்த சிவாஜி வசனங்களில் மட்டுமன்றி முகபாவங்களினாலும் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தினார். ஸ்ரீதரைப் பொறுத்த வரை சிவந்தமண் அவருடைய திரையுலக பயணத்தில ஒரு தடமாகும்!
50 ஆண்டுகளுக்கு முன் இப்படம் திரையிடப்பட்ட போது இலங்கை தமிழ் ரசிகர்கள் ஐரோப்பிய நாடுகளை படத்தில் பிரமிப்புடன் பார்த்து பார்த்து ரசித்தார்கள். சில ஆண்டுகளில் யுத்தம் தீவிரவாதம் காரணமாக இலங்கை சிவந்தமண் ஆனது. அதனைத் தொடர்ந்து இலட்சக் கணக்கான தமிழர்கள் லண்டன் சூரிச் பாரிஸ் என்று புலம் பெயர்ந்தார்கள். சிவந்தமண் படத்தில் பார்த்த இடங்களை நேரில் பார்த்து அங்கு வாழ்கிறார்கள். ஆனாலும் ஒரு காலத்தில் ஊரில் பார்த்த படமும் அனுபவமும் மறக்குமா!
தமிழ் சினிமா - பிகில் திரை விமர்சனம்
தளபதி விஜய் படங்கள் என்றாலே உலகம் முழுவதும் தமிழர்களிடத்தில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களை கொடுத்த அட்லீ பிகில் மூலம் மூன்றாவது முறையாக கைக்கோர்க்க, இன்று உலகம் முழுவதும் பிகில் சுமார் 4000 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸாகியுள்ளது. எங்கு திரும்பினாலும் இன்று ஒரே பிகில் பேச்சு தான், அப்படியான பிகில் சத்தம் ஓங்கி ஒலித்ததா? என்பதை பார்ப்போம்.
கதைக்களம்

அப்படியிருக்க அவரை ஒரு கும்பல் எப்போதும் கொலை செய்ய துரத்துகிறது. அப்போது எதிர்ப்பாராத விதமாக தமிழ்நாடு பெண்கள் அணி கோச் விஜய்யின் நண்பர் தாக்கப்படுகின்றார்.
அதனால் அந்த புட்பால் டீமிற்கு கோச் செய்ய முடியாமல் போக, அந்த இடத்திற்கு ஒரு டைமில் ஒட்டு மொத்த ஸ்டேட்டையும் கலக்கிய விஜய்யை கோச் ஆக சொல்கிறார்.
ஆனால், அவரை ஏற்க மறுக்கும் பெண்கள், அவர்கள் மனதில் வென்றதோடு, அந்த அணியையும் விஜய் எப்படி வெல்ல வைக்கின்றார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
விஜய்..விஜய்..விஜய் மட்டும் தான், அவர் ஒருவரை நம்பி தான் படம் என்றாலும், இத்தனை நட்சத்திரங்கள் இருந்தும் விஜய் மட்டுமே தான் முழுப்படத்தையும் தோளில் சுமக்கின்றார். ஆட்டம், பாட்டம் என்று ஜாலியாகவும் சரி, தன் புல்லிங்கோ முன்னேற வேண்டும் என்று கத்தியை எடுத்த ராயப்பனாகவும் சரி தொட்டதெல்லாம் கோல் தான்.
ஆனால், ராயப்பன் கதாபாத்திரம் அப்பாவாக இல்லாமல் அண்ணனாக காட்டியிருந்தால் இன்னும் தூளாக இருந்திருக்கும். ஏனெனில் விஜய்க்கு வயதான கதாபாத்திரம் கொஞ்சம் கூட செட் ஆகவில்லை, அதிலும் நயன்தாரா அவரை அப்பா என்று கூப்பிடுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்டது, சிங்கப்பெண்ணே பாடல் எல்லாம் பட்டித்தொட்டியெல்லாம் ஹிட் அடித்தாலும் படமாக பார்க்கும் போது அங்கும் இங்கும் எமோஷ்னல் ஒர்க் ஆகியுள்ளதே தவிர படம் முழுவதும் ஒரு நிறைவு இல்லை.
அதிலும் படத்தின் முதல் பாதி ஒரு கட்டத்தில் பொறுமையை சோதித்து அட புட்பால் மேட்சுக்கு போங்கப்பா என்று சொல்ல வைக்கின்றது. அதே நேரத்தில் மேட்ச் வரும்போது எட்ஜ் ஆப் தி சீட் வருவோம் என்று பார்த்தால் மாற்றி மாற்றி கோல் அடிக்கிறார்களே தவிர நமக்கு எந்த ஒரு ஆர்வமும் வரவில்லை, இதற்கு சக்தே இந்தியாவும் ஒரு காரணம்.
படத்தில் தன்னை கோச்சாக ஏற்றுக்கொள்ள விஜய் போடும் போட்டி, ஆசிட் அடிக்க பெண்ணிடம் பேசும் காட்சிகள், கிளைமேக்ஸில் தன் அணியை திட்டி வெறுப்பேற்றுவது, அதிலும் அந்த குண்டம்மா விஷயம் என இரண்டாம் பாதி முழுவதும் கைத்தட்டலுக்கு குறைவில்லாத காட்சிகள். இவை முதல் பாதியிலும் இருந்திருக்கலாம்.
மேலும் விஜய் காமெடி செய்யும் போது சென்னை ஸ்லாங்கில் பேசுவது, சீரியஸாக பேசும் போது நார்மல் தமிழில் பேசுகிறார். புல்லிங்கோவை கௌரவப்படுத்துகிறோம் என்று தொடர்ந்து தமிழ் சினிமா கிண்டல் மட்டுமே செய்து வருகின்றது.
படத்தின் மிகப்பெரிய பலம் விஷ்ணுவின் ஒளிப்பதிவு, செம்ம கலர்புல் காட்சிகள், ரகுமானின் பின்னணி இசை மாஸுக்கு கைக்கொடுக்கவில்லை என்றாலும் எமோஷ்னல் காட்சிக்கு சூப்பர். ரூபன் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டு இருக்கலாம்.
க்ளாப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி, அவை தான் விஜய் ரசிகர்களுக்கான படம்.
படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள்.
டீசரில் மோசமாக தெரிந்த சிஜி காட்சி திரையில் நன்றாகவே உள்ளது.
பல்ப்ஸ்
படத்தின் முதல் பாதி, ராயப்பன் கதாப்பாத்திரம் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம்.
கதிர், நயன்தாரா, ஆனந்த் ராஜ் என பல நட்சத்திரங்கள் எதற்கு என்றே தெரியவில்லை.
போட்டிகளில் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்.
மொத்தத்தில் தெறி, மெர்சலை ஒப்பிடுகையில் பிகில் சத்தம் கொஞ்சம் குறைவு தான். நன்றி CineUlagam
Subscribe to:
Posts (Atom)