‘மே 18’ அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ‘தேசிய நினைவேந்தல் நாள்’நிகழ்வுகள்

.

ஈழத்தமிழர்கள் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்திய மே மாதத்தின் துயரநாட்களையும் அப்பேரிடர் மத்தியிலும் மண்ணோடு இணைந்துநின்று மரணித்த எம் உறவுகளையும் விடுதலைக்காக விலையான எம் தேசத்தின் புதல்வர்களையும் நினைவுகொள்ளும் நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவில் சிட்னி, மெல்பேண் நகரங்களில் நடைபெற்றுள்ளன.

சிங்கள அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் தமினப்படுகொலை நாள் தேசிய நினைவேந்தல் நாள்’நிகழ்வு அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் மே மாதம் 18ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.00 தொடக்கம் மாலை 6.30 வரை மெல்பேர்ண் நகரின் மத்தியில் அமைந்துள்ள State Library முன்றலில் நடைபெற்ற நினைவேந்தல் நாள் நிகழ்வில் 500 இற்கு மேற்பட்ட இந்த நிகழ்வில் மெல்பேர்ன் வாழ் தமிழ் மக்களும், தமிழீழத்துக்கு ஆதரவான வேற்றின மக்களும் கலந்துகொண்டனர்.


சிட்னி சைவ மன்ற பரிசளிப்பு விழா

.
சிட்னி சைவ மன்றம நடாத்திய அறிவுப்போட்டி 2012    இல் பங்குபற்றி பரிசில்கள் பெற்ற பிள்ளைகளுக்கு சென்ற ஞாயிற்றுகிழமை பரிசில்கள் வழங்கப்பட்டது . பரிசில்கள் பெ று ம் பிள்ளைகளை கீழே உள்ள  படங்களில்  காணலாம் .


அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தடம் பதிக்கும் 11ம் ஆண்டு. 11k; Mz;L.


.

அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது பத்தாவது ஆண்டை நிறைவு செய்து கொண்டு பதினொராவது ஆண்டிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. ஆயல 15ம் திகதி இந்த பதிய ஆண்டிற்குள் புத்துணர்வோடு தடம்பதித்துள்ளதில் நேயர்களும் அறிவிப்பாளர்கள் தயாரிப்பாளர்கள் நிர்வாகிகள் என்போரும் மகிழ்வோடு நினைவு கூர்ந்தார்கள். உயர்ந்த இலட்சியத்தோடும் ஒழுங்கு நெறியோடும். மக்கள் மனங்களில் தடம் பதித்து நிறைவான தரமான நிகழ்வுகளை உள்ளடக்கி இலக்கியம் ஆன்மீகம் அறிவியல் ஜனரஞ்சகம் என பல்முக பார்வைகளோடு நடைபயிலும் இந்த வானொலியில் 75 இற்கும் மேற்பட்ட தொண்டர்கள் அறிவிப்பாளர்களாகவும் தயாரிப்பாளர்களாகவும் தொழில்நுட்பவியலாளர்களாகவும் பணிபுரிகின்றார்கள் என்பது வியக்கவைக்கும் உண்மையாக உள்ளது. நேயர்களின் ஒத்துளைப்பும் ஊக்கமும் தொண்டர்களின் சளைக்காத உளைப்பும் இந்த சாதனையை படைக்கின்றது என்றால் அது மிகையாகாது.

காயங்களிலிருந்து ஒளிரும் புன்னகை -


ஸ்ரீலங்கா இனவாத அரசு தமிழ்த் தேசத்தின் இருப்பைச் சிதைத்து, தமிழ்ப் போராளிகளை நிராயுதபாணியாக்கி, தனது ஆயுத பலம் கொண்டு அடக்கிவிடக் கடுமையாகப் பிரயத்தனப்பட்ட சூழலில் தமிழ், சிங்களப் பேரினவாதத்தின் கால்களுக்குக் கீழே துப்பாக்கி முனையில் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்ட இனமான முஸ்லிம்களின் வலிகளும் அலறல்களும் 1980களின் பிற்பகுதியில் நவீனக் கவிதையாகப் பரிணமித்தது. வதையுண்ட மனித வாழ்வின் அவலங்களைப் பாடும் இக்கவிதைகள் வாழ்வுக்கும் இறப்புக்குமிடையிலான மையத்திலிருந்து எழுகின்றன. துயருற்று அலையும் மனித ஆன்மாக்களின் குரலாக ஒலிக்கும் இவை கொடுமைகள் நிறைந்த அவலப்பரப்பின் அனுபவங்களையும் அவற்றை எதிர்கொண்ட முறைகளையும் எடுத்துரைக்கின்றன. மீள முடியாத புதைகுழிக்குள் சிக்குண்டு பேரிடருக்குள் அகப்பட்டுத் துக்கித்து வாழும் மக்களின் அனுபவச் சூட்டில் மிளிரும் இக்கவிதைகள் ஈழத்தின் பொய்மையான மாயத்திரைகளைக் கிழிக்கின்றன. காலங்காலமாக மனிதத் தியாகங்களினூடாகக் கட்டி எழுப்பப்பட்ட புனித பிம்பங்களைத் தகர்க்கின்றன. சிதைவின் அழிபாட்டிலிருந்து எழும் இக்குரல் காலத்தின் பக்கங்களில் மனித வாழ்வின் அபத்தங்களை எழுதிச் செல்கிறது.

சிட்னி தமிழ் அறிவகத்தின் சேவையில் திரு லோகேந்திரன் - செ.பாஸ்கரன்


.

சிட்னி தமிழ் அறிவகம் நீண்டகாலமாக சிட்னியில் இயங்கிவரும் ஒரு தமிழ் நூலகம் மாத்திரமல்ல ஒரு ஆவண காப்பகமாகவும் இயங்கிவருகிறது. சுழற்ச்சி முறையில் தலைவர் செயலாளர் செயற்குழு அங்கத்தவர்கள் என்று ஆட்கள் மாறிக்கொண்டிருப்பார்கள். அவர்களை அவ்வப்போது நடைபெறும் அறிவக ஆண்டுவிழாக்களில் காணக்கூடியதாகவும் இருக்கும். ஆனால் பெரும்பாலும் மாறாமல் இருப்பவர்கள் தொண்டர்களாக இந்த அறிவகத்தை திறந்து வைத்திருந்து புத்தகங்களை பரிவர்த்தனை செய்யும் சில நல்ல மனிதர்கள்தான். இவர்கள் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரு நாட்களோ கடமைபுரிவார்கள். பெரும்பாலும் வயதில் மூத்தவர்களாக இருக்கின்றார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் சேவை பலருக்கு தெரியவராமலே இருந்துவிடுகின்றது. இவர்களில் சிலரோடு தமிழ்முரசிற்காக பேசவேண்டும் என்று பல நாட்கள் நினைத்திருந்தபோதும் நேரம் பொருந்திவருவது சிரமமாகவே இருந்தது. அண்மையில் ஒருவாறு நேரம் ஒதுக்கி அங்கு சென்றபோது அன்றய நாளின் தொண்டராக இருந்தவர். திரு சிவக்கொழுந்து லோகேந்திரன் அவர்கள்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 12 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா

.                                                                    
                                                                                               யாழ் எஸ். பாஸ்கர்

அவுஸ்திரேலியாவில் 12 ஆவது எழுத்தாளர் விழா கடந்த  13.05.2012 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பேணில். பிறஸ்ரன் நகர மண்டபத்தில், திருவள்ளுவர் அரங்கில், அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் தலைவர் பாடும்மீன் சு. சிறிகந்தராசா அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கப்படவிருந்த விழா சீரற்ற காலநிலை காரணமாக 2.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு இரவு 9.30 வரை இடைவேளையின்றித் தொடர்ந்து நடைபெற்றது. இடையே பார்வையாளர்களுக்குச் சிற்றுண்டியும், விழா முடிவில் இரவு உணவும் வழங்கப்பட்டன.

ஓவியர் ஞானம், கலைவளன் சிசு நாகேந்திரம், கவிஞர் இளமுருகனார் பாரதி, எழுத்தாளர் மாத்தளை சோமு, தமிழறிஞர் திருநந்தகுமார் ஆகியோர் மங்கள விளக்கேற்றி வைக்க, விழா இனிதே ஆரம்பமானது. செல்வி சாகித்தியா வேந்தன், செல்வி அபிதாரினி சந்திரன், செல்வி சமுத்திராசிறி பத்மசிறி, செல்வன் ஆரூரன் மதியழகன் ஆகிய மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தினை மிகவும் இனிமையாகப் பாடினார்கள். தாயகத்தில் உயிர் நீத்த மக்களுக்காக ஒருநிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து செல்வி மோசிகா பிரேமதாச செல்வி சிறிசேகா பிரேமதாச சகோதரிகளின் இசைப்பாடல் இடம்பெற்றது. மீன்பாடும் தேன்நாட்டைப் பற்றிய அவர்களின் பாடல் இன்பத்தேனாகச் செவிகளிலே பாய்ந்தது.

இலங்கைச் செய்திகள்

.
தனியார் பஸ் நடத்துநர், சாரதி மீது இராணுவத்தினர் தாக்குதல்

ஏறாவூர் அல்.அக்சா கிராமத்தில் குடிசைகளுக்கு தீ வைப்பு

சகலவித இனவாதத்தையும் நிராகரிக்கிறோம்

ஊடகங்களில் இனவாதம் தலைதூக்க இடமளிக்க வேண்டாம் - ஜனாதிபதி

சரத் பொன்சேகா பிணையில் விடுதலை


தனியார் பஸ் நடத்துநர், சாரதி மீது இராணுவத்தினர் தாக்குதல்

14/5/2012

ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து தனியார் பஸ் நடத்துநர் ஒருவரும் சாரதி ஒருவரும் இராணுவத்தினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.



ஜெயமோகனின் தேசப்பற்று! அவமானப்படுத்தப்படும் ஈழத்தமிழர்கள்.

.
இவர்களுக்கு உண்மையாகவே வாசகர்களிடம் இருந்து கடிதம் வருகிறதா, இல்லை இவர்களே வாசகர் பெயர்களில் தமக்குத் தாமே கடிதம் எழுதுக் கொள்கிறார்களா தெரியவில்லை! காரணம் இந்த கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தற்புகழ்ச்சி  ரொம்ப ஜாஸ்தி தான்!

வழமை போலவே, சில நாட்களுக்கு முன்னர் ஜெயமோகன் தனது பக்கத்திலே வாசகர் கடிதங்கள் சிலவற்றை பிரசுரித்து அதற்க்கு பதிலளித்திருந்தார். அதாவது, குறித்த வாசகர்கள் இலங்கைக்கு சென்ற இந்திய "அமைதிப்படையில்" பணியாற்றியவர்கள் என்றும், தாம் பணியாற்றிய காலத்தில் தம் சக வீரர்கள் மிக இதய சுத்தியுடன் நடந்து கொண்டதாகவும், ஈழத்திலே தமிழர் வாழ் பிரதேசங்களிலே பாலாறும் தேனாறும் ஓட பெரும் பிராயத்தனம் செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். அதற்க்கு மேலாக மனிதாபிமான நடவடிக்கை என்று வேறு அதை அவர்கள் விழித்திருந்தார்கள்!
மாறாக இந்திய அமைதிப்படை ஈழத்திலே கொலைகளும் கற்ப்பழிப்புக்களும் செய்ததாக கூறப்படுவது வெறும் அவதூறு, அது அரசியல் பிரச்சாரம் மட்டுமே என்று கூற, அதை ஆமோதிப்பது கணக்காய் ஜெயமோகன் அவர்களும் தனது கருத்துக்களை கூறி, தன் காது, கண், மூக்கு வழியாக வழியும் தேசப்பற்றை நிரூபிக்க முயன்றிருந்தார்.

இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்னதாக நிகழ்ந்த அநியாயங்களை வெறும் அவதூறுகள் என கூறி நாலு பேர் நியாயப்படுத்த, அதற்க்கு தாளம் தப்பாமல் ஜெயமோகனும் பக்கவாத்தியம் வாசிக்கிறார்!

இந்திய அமைதிப்படையின் கொடூரமான அக்கிரமங்ககள் அரங்கேறிய  மண்ணிலே, அந்த சம்பவங்களை அனுபவித்து வாழ்ந்த  மக்கள் மத்தியிலே வாழ்ந்த எமக்கு இது எவ்வளவு பெரிய அராஜகமாக, இருட்டடிப்பான செயலாக  தோன்றும்!

தொடரும் கனவுலகில் வலி சுமக்கும் நூலக நினைவுகள்


.
                                                                                                        முருகபூபதி

(முன்குறிப்பு:- யாழ். பொதுநூலகம் எரிக்கப்பட்டு 31 வருடங்கள். குறிப்பிட்ட அதிர்ச்சி நினைவில் எழுதப்படும் கட்டுரை)

File:Jaffna library.jpgஎனக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும். நீர்கொழும்பில் எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் புத்தளவெட்டு வாய்க்காலும் (டச்சுக்கார்கள் தமது கோட்டைக்குச்செல்வதற்காக தமது ஆட்சிக்காலத்தில் உருவாக்கியது) இந்து சமுத்திரமும் சங்கமிக்கும் முன்னக்கரை என்ற இடத்திற்குச்சமீபமாக வாழ்ந்த டேவிட் மாஸ்டர் என்பவரிடம் கணிதம் படிப்பதற்காக (ரியூசன் வகுப்பு) சென்றுவருவேன்.
நீர்கொழும்பு பழைய பஸ்நிலையத்தை கடந்துதான் முன்னக்கரைக்குச்செல்லவேண்டும். அந்தப்பாதையில் நீர்கொழும்பு மாநகர சபையின் பொது நூலகம் அமைந்திருந்தது. ரியூசன் முடிந்து வரும் மாலைநேரங்களில் என்னை அறியாமலேயே எனது கால்கள் அந்த நூலகத்தின் வாசலை நோக்கி நகர்ந்துவிடும். அங்கே குமுதம், கல்கண்டு, கல்கி, ஆனந்தவிகடன் உட்பட இலங்கைப்பத்திரிகைகளையும் படித்துவிடுவேன். மு.வரதராசனின் பெரும்பாலான நாவல்களையும் அங்குதான் படித்தேன்.

வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு 34 வெல்லும் சொல்

.
அப்பா: ஞானா.......வழக்கமாய் நீ அல்லாட்டில் சுந்தரிதான் என்னைக் கேள்வி கேக்கிறது. இன்டைக்கு நான் உன்னை ஒரு கேள்வி கேக்கப் போறன். நீ கட்டாயம் பதில் சொல்லித்தான் ஆகவேணும்.

ஞானா: என்ன கேள்வி அப்பா......கேளுங்கோ பாப்பம்.

அப்பா: அதாவது வந்து ஞானா, எனக்குத் திருக்குறளிலை உள்ள விருப்பத்தினாலை, என்ரை மகளும் படிக்கட்டும் எண்டு ஒரு திருக்குறள் புத்தகத்தை வாங்கியந்து தந்தன். நீ இப்ப திருக்குறளை நல்ல நாட்டமாய்ப் படிக்கிறாய். இதாலை உனக்கு என்ன பிரையோசனம் எண்டு நினைக்கிறாய்?

ஞானா: அப்பா திருக்குறளைப் படிக்கத் தொடங்கின போது இதாலை என்ன பிரயோசனம் எண்டுதான் நினைச்சனான். ஆனால் படிக்கப் படிக்கத்தான் அப்பா தமிழ் மொழியின்ரை அடி அத்திவாரம் மௌ;ள மௌ;ள எனக்குப் புரியுது.

புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை

 _

புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குவதற்காக குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து வெளிநாடு சென்ற பலர் இலங்கைப் பிரஜாவுரிமையை இழந்துள்ளனர். இவர்கள் மீண்டும் இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்தத் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றுக்கொண்ட புலம்பெயர் இலங்கையருக்கு மீண்டும் இலங்கைப் பிரஜாவுரிமையை இலகுவாக பெற்றுக்கொள்ள இது வசதியாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்

பாரதிதாசனின் குடும்பவிளக்கு -புதிய மாதவி

.

கவிஞர் கனகசுப்புரத்தினம் என்கிற பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் என்றே அறியப்படுகிறார். அதில் எனக்கு எவ்விதமான கருத்து வேறுபாடும் இல்லைதான்.
பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்துவரல் முயற்கொம்பே
(சஞ்.ப.சா. தொ.1)
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!
(பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி)
என்றெல்லாம் பெண் விடுதலையைப் பேசியவர்தான் பாரதிதாசன்.
ஆனால் அது என்னவொ தெரியவில்லை,
. பாரதிதாசனின் குடும்பவிளக்கு கவிதை
வரிகளை வாசித்தப் பின் முதல் முதலாக எனக்கு ஏற்பட்ட ஓர் உணர்வு இதோ இதை எழுதும் இந்த நிமிடம் வரை நேற்றைய என் மறுவாசிப்பு வரை அப்படியே மாறாமல் இருப்பது மட்டுமல்ல, சில நெருடல்களையும் ஏற்படுத்தவே செய்கிறது.
பாரதிதாசனின் இலட்சியப் பெண், குடும்பவிளக்கு எப்படி சித்தரிக்கப்படுகிறாள்
என்பதைக் காண்போம்.
 அதிகாலையில் எழுந்திருக்கிறாள்.
 கோலமிடுகிறாள்
யாழெடுத்து இசை மீட்டுகிறாள், வாழிய வையம் வாழிய என.
 தூங்கிக்கொண்டிருக்கும் பிள்ளைகளைத் துயில் எழுப்புகிறாள்.
அதன் பின்,
பால்கறந்தாள்,
பாத்திரம் தேய்த்தாள்
அடுப்பறையில் அப்பம் சுட்டாள்
கொத்தமல்லி காபி போட்டாள்


விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகம்

.


விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகம்
(Whittlesea Tamil Association  )

மெல்போர்ணில் வடபகுதியில் இயங்கும் வானமுதம்" தமிழ் ஒலிபரப்புச் சேவையை நடாத்திவரும் விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் 20.05.2012 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 01.00மணக்கு Epping Memorial Hall இல் அமைந்துள்ள Funtion room இல் நடைபெற்றது. கடந்த ஆண்டு தலைவராக இருந்த திரு.எட்வேட் மரியதாசன் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது. அவர் தனதுரையில் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கைகள் செயற்பாடுகள் பற்றியும் ‘வானமுதம்’ ஒலிபரப்புச் சேவையின் வளர்ச்சி பற்றியும்ரூபவ் ஒலிபரப்புச் சேவையை ஏற்படுத்தித் தந்த Plenty Valley FM88.6 நிர்வாகத்திற்கும்ரூபவ் அவுஸ்திரேலிய மாநிலங்கள்ரூபவ் மற்றும் நியூசிலாந்து வாழ் தமிழ் இல்லங்களுக்கு சேவையைத் தனதூடாகக எடுத்துச் செல்லும் 24 மணி நேர தமிழ் ஒலிபரப்பு வானொலியான "இன்பத் தமிழ்" வானொலிக்கும் அதன் ஸ்தாபகர் திரு.பாலசிங்கம் பிரபாகரனுக்கும்ரூபவ் சகல வானொலி நேயர்களுக்கும் நன்றி கூறினார்.

மௌனம் கலைகிறது 11 - நடராஜா குருபரன்


.

கடத்தலும் - கடத்தலின் பின்னணிகளும் - மௌனம் கலைகிறது 11 - நடராஜா குருபரன்

கடத்தலும்  - கடத்தலின் பின்னணிகளும் - மௌனம் கலைகிறது 11 - நடராஜா குருபரன்
அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒருவரென்பதற்காக ஊடகதர்மம் வளைந்து கொடுக்க வேண்டுமென்று அன்றைக்கேநினைத்த ஒருவர் இன்றைக்கு ஊடக அமைச்சராக இருப்பது இலங்கையினதும் எங்களினதும் துரதிஸ்டம்.ஆனால் பல்வேறு தரப்பினருக்கும் களங்களை வழங்குவதன் மூலமே மக்கள் உண்மைகளையும் யாதார்த்தத்தையும் உணர்ந்துகொள்ள முடியுமென்று நம்புகிறவனாக  அன்றைக்கே நானிருந்தேன்
எனது முந்தைய தொடரில் என்னையும் இலங்கை அரசேகடத்தியது எனத் தெரிவித்திருந்தேன்இலங்கை அரசாங்கத்தின் குறிப்பாகப் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கிவரும் பல்வேறு புலனாய்வுக் குழுக்களில் ஒன்றே என்னைத் துணை ஆயுதக்குழு ஒன்றின்உதவியுடன் ஓகஸ்ட் 2008 இல் என்னைக் கடத்திச் சென்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பதவிக்கு வந்தபின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்து யுத்தம்  ஆரம்பித்தது.  யுத்தம் ஆரம்பித்த சில மாதங்களுக்குள்கொழும்பில் கடத்தப்பட்ட முதலாவது ஊடகவியலாளனாக நான் இருந்தேன்.

உலகச் செய்திகள்

.
சீனாவில் புயலுடன் கூடிய மழை ; 40 பேர் பலி
நேபாள விமானம் இமாலயத் தொடரில் விபத்து: 15 பேர் பலி
பிரான்ஸ் ஜனாதிபதியாக ஹொலன்டே பதவியேற்பு
சோமாலிய கடற்கொள்ளையர் மீது ஐரோப்பிய படை தரைவழி தாக்குதல்
சீனாவில் புயலுடன் கூடிய மழை ; 40 பேர் பலி

வடமேற்கு சீனாவில் புயலுடன் கூடிய மழை காரணமாக 40 பேர் பலியாகியுள்ளனர்.

கொன்ஸு மாகாணத்தை தாக்கிய மேற்படி புயலையடுத்து 18 பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்தப் புயலால் 350,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 30,000 பேர் வீடு வாசல்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கவலை. -குட்டிக்கதை


.
செல்வந்தர்  ஒருவருக்கு எப்போதுமே கவலை. ஒரு நாள் அவர், துறவி ஒருவரைச் சந்தித்தார்.
""சுவாமி! பணம் நிறைய வைத்துள்ளேன்.ஆனாலும் மனதில் நிம்மதியில்லை. கவலையைப்  போக்கவும் நிம்மதி பிறக்கவும்  வழி சொல்லுங்கள்,'' என்றார்.
""உன்னிடம் பணம் நிறைய இருக்கிறதல்லவா! கடமையுணர்வுடன், எதிர்பாராமல் மனப்பூர்வமாக தானம் செய்,'' என்றார் துறவி.
செல்வந்தரும்  தானம் செய்ய ஆரம்பித்தார். தினமும் துறவியைச் சந்தித்து, ""சுவாமி! இன்று ஆயிரம் ரூபாய் தானம் செய்தேன், இன்று பள்ளிக்கூடத்துக்கு பத்தாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்தேன், இன்று ஒரு ஏழை ஒருவருக்கு  பசுமாடு வாங்கிக் கொடுத்தேன், இன்று ஆலயத்திற்கு  நூறு லிட்டர் எண்ணெய் வாங்கிக் கொடுத்தேன், இன்று பத்துப்  பேருக்கு அன்னதானம் வழங்கினேன், இன்று ஏழைகளுக்கு    உடுப்பு வழங்கினேன் ஆனாலும், பலன் ஏதும் தெரியவில்லையே,'' என்று சொல்வார்.
துறவி சிரிப்பாரே தவிர பதில் சொல்லமாட்டார்.
ஒருமுறை லட்சம் ரூபாயை அநாதை இல்லத்திற்கு தானம் செய்துவிட்டு துறவியிடம் வந்தார்.
""சுவாமி! ஒருவேளை குறைந்த தானம் செய்ததால், என் மனதில் நிம்மதி வரவில்லை என நினைத்து, இன்று அதிக பணத்தை தானம்    செய்தேன். ஆனால், மனம் என்னவோ சஞ்சலத்தில்தான் இருக்கிறது,'' என்றார்.
துறவி அவரிடம், ""வெயிலில் போய் சற்று நில்லும்,'' என்றார்.செல்வந்தரும் நின்றார். கால் சுட்டது. ""சுவாமி, கால் சுடுகிறதே,'' என்றார்.
""உமது நிழல் தரையில் விழுகிறதா?'' என்றார் துறவி.

அமெரிக்காவுடனான இராணுவ உறவு குறித்து அவுஸ்திரேலியாவிடம் சீனா அதிருப்தி


16/05/2012

சீனா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சரிடம் ஆஸி - அமெரிக்க இராணுவ உறவு குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஆஸி. வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற பொப் கர் முதல் முறையாக சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போது அவர் சீன வெளியுறவு அமைச்சர் யஸ் ஜெய்ச்சி மற்றும் துணை ஜனாதிபதி லி கெக்கியங் ஆகியோரை சந்தித்து இருநாட்டு வர்த்தக உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தமிழ் சினிமா


.
கலகலப்பு

கும்பகோணத்தில் 3 தலைமுறையாக நடத்தப்பட்டு வந்த பழைமை வாய்ந்த ஹோட்டல் மசாலா கபே.
மூன்றாவது தலைமுறையில் வாழும் நாயகன் விமல் காலத்தில் நொடிப்பு நிலையை சந்திக்கிறது. இதை இயக்குனர் சுந்தர்.சி தனது நகைச்சுவை பாணியில் திறம்பட சொல்லியிருக்கிறார்.
நாயகன் விமல் கொஞ்சம் நேர்மையாளன்.. இவரது தம்பி சிவா. அண்ணனுக்கு நேரெதிர். அந்த ஹோட்டலில் சுகாதாரமில்லை என்று சொல்லி நோட்டீஸ் அனுப்பும் நகராட்சி ஹெல்த் இன்ஸ்பெக்டர் அஞ்சலியை முதலில் ஜொள்ளுவிட்டு, பின்பு காதலில் விழுகின்றார்.
அப்போதுதான் ஜெயிலுக்கு இன்பச் சுற்றுலா சென்றுவிட்டு அடுத்த டூட்டிக்காக வெளியில் வந்திருக்கும் சிவா, நேரே ஹோட்டலுக்கு வர, அங்கேயிருக்கும் தலைமை சமையற்காரர் வி.எஸ்.ராகவனின் பேத்தி ஓவியாவை பார்த்து காதல் செய்கிறார்.
விமலுக்கு வட்டிக்கு கடன் கொடுத்தே ஓய்ந்து போயிருக்கும் இளவரசு ஒரு பக்கம் விமலை துரத்திக் கொண்டிருக்கிறார். ஹோட்டல் இருக்கும் இடத்தை விலைக்குக் கேட்கும் நகைக்கடைக்காரர், லோக்கல் இன்ஸ்பெக்டர் மூலம் காய் நகர்த்துகிறார்.
ஊரில் இருக்கும் தனது தாத்தா மண்டையைப் போடும் சூழலில் இருப்பதால் தனக்குத் திருமண ஏற்பாடுகள் நடப்பதால் உடனே வந்து என்னை தள்ளிக் கொண்டு போகும்படி அஞ்சலி விமலை அழைக்கிறார்.
அஞ்சலியை கட்ட நினைக்கும் முறைமாமன் சந்தானத்தை முதலில் காக்கா பிடித்து, பின்பு உண்மை தெரிந்து தப்பிக்க முயன்று முடியாமல், தாத்தாவும் செத்துப் போக நொந்து போய் ஊர் திரும்புகிறார் விமல். இந்த இடைவெளியில் லோக்கல் இன்ஸ்பெக்டர் மங்காத்தா ஆட்டத்தில் ஹோட்டல் இடத்தை சிவாவிடம் இருந்து தட்டிப் பறிக்கிறார்.
இதற்கிடையில் பஞ்சு சிவா, தனது நகைக்கடையில் இருந்த வைரங்களை சேப்டியாக பத்திரப்படுத்திவிட்டு கடையை கொளுத்திவிடுகிறார். இன்சூரன்ஸ் கிடைக்கும்வரையில் பணம் பத்திரமாக இருக்கட்டுமே என்று சொல்லி தனது வீணாப் போன மச்சினனிடம் கொடுத்து கும்பகோணத்துக்கு அனுப்ப, அந்த வைரம் அடங்கிய செல்போன் ஒரு கட்டத்தில் விமல்-சிவாவிடம் வந்து மாட்டுகிறது.
இந்த விடயமும் இன்ஸ்பெக்டருக்கு தெரிய வர அவரும் வைரத்தை ஆட்டையப் போட நினைக்கிறார். இரட்டையர்கள் ஹோட்டலை மீட்டார்களா..? வைரத்தின் கதி என்ன என்பதைத்தான் சுவையான திரைக்கதையின் மூலமாக போரடிக்காமல் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி.
முதல் சில நிமிடங்கள்வரையிலும் படம் மெதுவாகத்தான் நகர்கிறது.. அதிலும் ஓவியாவின் அறிமுகமும் சப்பென்று இருக்க.. என்னடா இது என்று முணுமுணுக்க வைத்தது.
மிர்ச்சி சிவாவின் என்ட்ரியும், அதனைத் தொடர்ந்த காட்சியிலேயே இளவரசுவை பொலிஸ் இன்ஸ்பெக்டரிடம் மாட்டிவிடும் காட்சியில் தொடங்கும் கலாட்டா கலகலப்பு.. இறுதிவரையில் அவ்வப்போது வந்து, வந்து போய்க் கொண்டு படத்தை நிறைவு செய்துவிட்டது..!
விமலுக்கு வழக்கம்போல இயல்பான நடிப்புதான்..! உணர்ச்சிகரமாக இவர் நடிக்க வாய்ப்பே இல்லை என்னும்போது இது போன்று நடிப்பு தேவையில்லாத கேரக்டரில் வெளுத்துக் கட்டிவிட்டு போய்விடுவதே சாலச் சிறந்தது..!
விமலுக்கு இருக்கும் இன்னொரு பிளஸ் பாயிண்ட் சாதாரணமாகவே காமெடி டைமிங்சென்ஸ் மிகச் சரியாக வருகிறது.. இதையே பாலோ செய்துவிட்டு போக வேண்டியதுதான்..!
மிர்ச்சி சிவாவின் அட்டூழியம்தான் சந்தானம் வரும்வரையிலும் படத்தில் ஒன்ற வைத்தது..! வந்த முதல் நாளே ஓவியாவுக்கு ரூட்டு விடுவதில் தொடங்கி, ஓவியாவுக்காக பர்தா அணிந்து கடையில் புகுந்து ஆட்டையைப் போடும் காட்சி, ஹோட்டலை நவீனப்படுத்தப் போவதாகச் சொல்லி பழமையான உணவு வகைகளுக்காக கடையை கொள்ளையடிப்பது.. இதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் அவர் பேசும் டைமிங் டயலாக்குகள் குபீர் சிரிப்பு ரகம்..!
ஓவியாவும், அஞ்சலியும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தும் இருக்கிறார்கள். 'காட்டி'யும் இருக்கிறார்கள்..! இரண்டு நடிகைகள் ஒரு படத்தில் நடிக்கும்போது, இப்படி, அப்படி நடிக்க வைக்க சித்து விளையாட்டை விளையாடுவார்கள் படக் குழுவினர்.
ஆனால் அப்படியெதுவும் இல்லாமலேயே இந்த இரண்டு தாரகைகளுமே அந்தப் பாடல் காட்சியின் போது அணிந்திருந்த காஸ்ட்யூம்ஸ்களை தாங்களேதான் தெரிவு செய்தார்களாம்.. இனிமேல் நாம் பேசி பயனில்லை..! இது அவர்களின் பிஸினஸ் பிரச்சினை..! எப்படியாவது டாப் லெவலுக்கு சம்பளத்தை லட்சங்களில் பெற வேண்டும் என்ற அவர்களது ஆசை நிறைவேற வாழ்த்துவோம்..!
ஓவியாவைவிடவும் அஞ்சலி மிகவும் ரசிக்க வைக்கிறார். தான் யார் என்பதை சொல்லாமலேயே விமலிடம் சிக்கிக் கொண்டு தப்பிப்பது.. பின்பு விமலை மடக்குவது என்ற காட்சிகளில் அவரது பார்வை ஒன்று போதும்.. கவிழ்வதற்கு.. விமல் கவிழ்ந்ததில் தப்பில்லை.. சரியான கேரக்டர் ஸ்கெட்ச்.. இதற்கேற்றாற்போல் நடிகர், நடிகைகளை செலக்ட் செய்து ரசிகர்களுக்கு கிக் ஏற்றியிருக்கிறார்கள்..!
இடைவேளைக்குப் பின்பு ஆட்டத்தில் குதிக்கும் சந்தானத்தின் அலப்பறை இறுதிவரையிலும் சக்கை போடு போடுகிறது..! அவருடைய உதவியாளர்களுக்கு வைத்திருக்கும் பட்டப் பெயர்களும்.. சண்டைக்குக் கிளம்பும்போது மாத்திரை போட்டுட்டு வரவா என்று சிரியா மூஞ்சிகளையும் சிரிக்க வைத்துவிடும் டயலாக்குகளும்.. மனோபாலாவுடன் அவர் பேசும் எகத்தாள பேச்சுக்களும் செம.. செம..!
அஞ்சலி கை நழுவிய பின்பு அவர் சொல்லும் அந்த மொட்டை மாடி டயலாக் ஏ ஒன்..! படத்தின் டிரெயிலரிலேயே அனைவராலும் ரசிக்கப்பட்டது..! ஆனாலும் இவர் இப்படி வாயை வைத்தே எத்தனை நாளைக்கு குப்பை கொட்ட முடியும் என்பதும் தெரியவில்லை.. வைகைப்புயலின் நீண்ட மெளனத்தில் முத்துக் குளிப்பது சந்தானம் மட்டுமே..! வாழ்க..!
பஞ்சு சுப்புவின் ஆட்கள் இன்னொரு பக்கம் விமல் அண்ட் கோ-வை துரத்த.. இந்த இம்சை தாங்க முடியாமல், போலீஸையும் உள்ளே இழுத்துப் போட்டுவிட்டு திரைக்கதையில் பரமபதம் ஆடியிருக்கிறார்கள்.. ஸ்டோரி டிஸ்கஷன் டீமுக்கு எனது பாராட்டுக்கள்..!
பாடல்களில் சந்தேகமே இல்லாமல் இவளுக இம்சை தாங்க முடியலை டாப்புதான்..! ஆனால் பாடல் காட்சிகளே இம்சையாக இருப்பதுதான் கொடுமை..! எப்படியோ இளசுகளை சிக்க வைத்தாகிவிட்டது.. வசூலை அள்ளிவிடுவார்கள்..!
யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் இப்படியொரு மோசம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை..! என்னதான் டைட் ஷெட்யூல் என்றாலும் அதற்காக நைட் எபெக்ட் காட்சிகளை இப்படி பகலில் எடுத்து லைட்டை குறைத்து ஷோ காட்டுவது..? எத்தனை படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள்..? கொஞ்சமாவது யோசித்திருக்க வேண்டாமா..? ஒரே நாள் இரவில் அனைத்தையும் எடுத்திருக்கலாமே..? ஆனாலும் அஞ்சலி தப்பிக்க நினைக்கும் காட்சியும், அதைத் தொடர்ந்து கார் சேஸிங் காட்சிகளும் நல்ல நகைச்சுவையைத் தந்தன..!
பொதுவாகவே சுந்தர் சியின் படங்களில் ஒரே வீட்டில் பலரும் கைகளில் தடியுடன் சுற்றி சுற்றி வருவார்கள். இதில் கொஞ்சம் வித்தியாசமாக காரில் பவனி வர வைத்திருக்கிறார்.. வெல்டன்..!
சுந்தர் சி.க்கு இது 25-வது படம். வாழ்த்துகள்.. நான் முன்பே குறிப்பிட்ட அந்த ஆபாச வசனங்களை மட்டும் நீக்கிவிட்டு பார்த்தால், இது நல்ல காமெடி படம்தான்..! சந்தேகமேயில்லை..! சுந்தர் சி.க்கு இப்படம் பொருளாதார ரீதியாகவும், கோடியில் பணத்தைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. வெறுமனே யு சர்டிபிகேட் மட்டும் வாங்கியிருந்தால், கூடுதல் வரியையும் சேர்த்து சம்பாதித்திருக்கலாம்..! ம்.. போகட்டும்.. அடுத்தப் படத்தில் பார்த்துக் கொள்ளலாம்..!
சுந்தர் சி. நடிக்கப் போகாமல், இது போன்று திரும்பவும் படங்களை இயக்கத் தொடங்கினால், காமெடியை விரும்பும் ரசிகர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்..!
நடிகர்கள்: விமல், சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா, ஜான் விஜய், இளவரசு
இசை: விஜய் எபினேஸர்
ஒளிப்பதிவு: யு.கே.செந்தில் குமார்
மக்கள் தொடர்பு: ஜான்சன்
தயாரிப்பு: யு.டிவி, அவ்னி சினிமேக்ஸ்
இயக்கம்: சுந்தர்.சி
நன்றி விடுப்பு
பிரான்ஸ் பட விழாவில் 5 மாத குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய்


கேன்ஸ் பட விழா பிரான்சில் இன்று 16 ஆம் திகதி தொடங்குகிறது. இந்தப் பட விழாவில் 4 இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. அவற்றில் மூன்று படங்கள் அனுராக் காஷ்யாப் தயாரித்த படங்கள் ஆகும். கேன்ஸ் பட விழாவில் நடிகர் அர்ஜுன் ராம்பால், மனைவி மெஹர், ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

நடிகை ஐஸ்வர்யா ராய் தனது 5 மாத குழந்தையான ஆராத்யாவுடன் கலந்து கொள்கிறார். 38 வயதாகும் ஐஸ்வர்யா ராய், கேன்ஸ் பட விழாவில் கலந்து கொள்வது இது 11 வது தடவையாகும்.

சில ஆண்டுகள் கேன்ஸ் பட விழா குழுவின் விளம்பர தூதராக ஐஸ்வர்யா ராய் பணியாற்றி இருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த கேன்விஸ் பட விழாவின்போது ‘ஹீரோயின்’ என்ற படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய் ஒப்பந்தமானார்.

பின்னர் அந்த சினிமா படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ஐஸ்வர்யா ராய் கர்ப்பிணியாக இருப்பதால் அவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அந்த படத்தில் கரீனா கபூர் நடித்தார். கேன்ஸ் பட விழாவில் நடிகை சோனம் கபூரும் கலந்து கொள்ள உள்ளார்.

nantri thinakaran

விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகம்





((Whittlesea Tamil Association )




மெல்போர்ணில் வடபகுதியில் இயங்கும் ~~வானமுதம்" தமிழ் ஒலிபரப்புச் சேவையை நடாத்திவரும் விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் 20.05.2012 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 01.00மணக்குEpping Memorial Hall இல் அமைந்துள்ள Funtion room இல் நடைபெற்றது. கடந்த ஆண்டு தலைவராக இருந்த திரு.எட்வேட் மரியதாசன் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது. அவர் தனதுரையில் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கைகள் செயற்பாடுகள் பற்றியும் ‘வானமுதம்’ ஒலிபரப்புச் சேவையின் வளர்ச்சி பற்றியும், ஒலிபரப்புச் சேவையை ஏற்படுத்தித் தந்த Plenty Valley FM  88.6 நிர்வாகத்திற்கும், அவுஸ்திரேலிய மாநிலங்கள், மற்றும் நியூசிலாந்து வாழ் தமிழ் இல்லங்களுக்கு சேவையைத் தனதூடாகக எடுத்துச் செல்லும் 24 மணி நேர தமிழ் ஒலிபரப்பு வானொலியான ~~இன்பத் தமிழ்" வானொலிக்கும் அதன் ஸ்தாபகர் திரு.பாலசிங்கம் பிரபாகரனுக்கும், சகல வானொலி நேயர்களுக்கும் நன்றி கூறினார்.
மேலும் தனதுரையில் கடந்த ஆண்டு பதவியிலிருந்து அயராது உழைத்த சகல நிர்வாக உறுப்பினர்களுக்கும், தமிழ்ச்சங்கம், வானொலிச் சேவை இரண்டும் உதயமாக வித்திட்டவர்களில் ஒருவரும், ஆரம்ப காலத்துச் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றி தற்போது சிட்னியில் வசித்துவரும் திரு.விக்டர் சென்ஜோர்ஜ் அவர்களுக்கும், ஆரம்பகால தலைவராக இருந்த பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசாவிற்கும், வானமுதம் ஒலிபரப்புச்சேவையின் சகல அறிவிப்பாளர்களுக்கும், தேர்தல் அதிகாரியாக செயற்படும் திரு.செல்லத்துரை பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும், சகல விற்றில்சீ தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சி நிரலின் படி சங்கத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டது. நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதன் குறை நிறைகள் ஆராயப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. திரு.செல்லத்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் தேர்தல் அதிகாரியாக இருந்து புதிய ஆண்டுக்குரிய நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்து வைத்தார். அடுத்த ஆண்டுக்குரிய புதிய நிர்வாக உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் திரு.வில்லியம் இராஜேந்திரம்.
உபதலைவர் திரு.நவரத்தினம் அல்லமதேவன்.
செயலாளர் திரு.தியாகராஜா சாம்பசிவம்.
பொருளாளர் கலாநிதி திருமதி.கௌசல்யா அன்ரனிப்பிள்ளை
சங்க உறுப்பினர்களாக
திருமதி.நீனா டேரியஸ்
திரு.எட்வேட் அருள்நேசதாசன்
பாடும்மீன் சு.ஸ்ரீசந்தராசா
திரு.எட்வேட் மரியதாசன்
திரு.ஜோசெவ் நிரோஷ்
திருமதி.நிருத்தசொரூபி தர்மகுலேந்திரன்
திரு.ஸ்ரீரங்கநாதன் ஸ்ரீரஞ்சன் ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.
மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட திரு.வில்லியம் இராஜேந்திரம் வானமுதம் வானொலிச் சேவை, விற்றில்சீ தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிக் கூறியதுடன், யாவருக்கும் நன்றி தெரிவித்தார். மீண்டும் நடப்பாண்டுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட திரு.தியாகராஜா சாம்பசிவம் சங்கத்தினதும், வானொலியினதும் வளர்ச்சியில் தொடர்ந்து அரும்பாடுபட வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துரைத்ததோடு தன்னுடன் செயல்ப்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். திரு.மனுவேற்பிள்ளை அன்ரன் நியுட்டன், திரு.ஜோசெவ் நிரோஷ், திரு.எட்வேட் அருள்நேசதாசன் ஆகியோர் சங்கத்தின் வளர்ச்சிக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன் தொடர்ந்து அனைவருடைய ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தி தமது பங்களிப்பையும் நல்குவதாகக் கூறியிருந்தார்கள். அவுஸ்திரேலியாவில் அழகிய தமிழ் அமுது படைத்து, இனிய மணம் பரப்பும் வானமுதத்தின் சேவையைத் தொடர்ந்து வளர்க்கவும், பல்லினக் கலாச்சார மாநிலமான மெல்போர்ணில் தமிழ் பேசும் மக்களின் மொழி, கலை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்கும் விற்றில்சீ தமிழ்ச் சங்கம் வளரவும்,  தொடர்ந்து அதன் பணி மூலம் அனைத்து மக்களும் பயன் பெறவும் வாழ்த்தினார்கள்.
இறுதியாகத் தமிழ்ச்சங்கத்தின் புதிய செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட திரு.தியாகராஜா சாம்பசிவம் நன்றியுரை கூறினார். ஆண்டுக் கூட்டத்தின் முடிவில் சிற்றுண்டிகள், தேநீர் வழங்கப்பட்டன.
அத்துடன் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தினர் இத்தரணியில் வாழும் அனைத்துத் தமிழ்ப் பேசும் மக்களின் ஆதரவையும் நாடி  நிற்கின்றனர். விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தில் இணைய விரும்புபவர்கள் அதன் நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளவும்.
ஆண்டுப் பொதுக்கூட்டம் இனிதே நிறைவேறியது. வாழ்க தமிழ்.
நவரத்தினம் அல்லமதேவன்