மனமெலாம் மாறல் வேண்டும் ! [ எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் ]

.
   
     உள்ளத்தில் உறுதி வேண்டும்
     உண்மையாய் நடத்தல் வேண்டும்
     கள்ளத்தை போக்க நாளும்
     கடவுளை வேண்டல் வேண்டும் 

     பள்ளத்தில் வீழ வைக்கும்
     பதரென நிற்பார் எல்லாம்
     மெள்ளவே திருந்தி வாழ
     உள்ளத்தை திருத்தல் வேண்டும்

     தெள்ளிய அறிவு வேண்டும்
     தேர்ந்தநல் உறவு வேண்டும்
     உள்ளமாம் கோவில் தன்னுள்
     ஒழுக்கத்தை இருத்தல் வேண்டும் 

திருக்குறள் போட்டியில் பல மாணவர்கள் பங்குபற்றினார்கள்



துர்கை அம்மன் ஆலயத்தின் தமிழர் மண்டபத்தில் சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றத்தினால் இன்று (08.03.2015) நடாத்தப்பட்ட திருக்குறள் போட்டியில் பல மாணவர்கள் பங்குபற்றினார்கள் . வருடம் தோறும் நடைபெறும் இந்த போட்டி 1.30மணிக்கு ஆரம்பமாகி 4.30 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பங்கு பற்றிய மாணவ செல்வங்களையும் நடுவர்களையும் தமிழ் இலக்கிய கலை மன்றத்தினரையும் பெற்றோர்களையும்   கீழே உள்ள படங்களில் காணலாம் .

சிட்னி Event சினிமா Burwood இல் மகா மகா தமிழ் திரைப்படம்

.


சிட்னி Event சினிமா Burwood  இல் March 7ம் திகதி 5.30 , 9.00 மணிக்கும்  8ம் திகதி 5.30 மணிக்கும்  காண்பிக்கப் பட உள்ளது மகா  மகா  தமிழ் திரைப்படம்.  நம்மவர் ஒருவரால் நெறியாள்கை செய்யப்பட்ட திரைப்படம் இதுவாகும்.
"மகா மகா" திரைப்படம் காதலும் த்ரில்லரும் கலந்த தமிழ் படம். இந்த படம் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட படம். சிட்னி மற்றும் அதன் அருகே உள்ள ஒரு சின்ன டவுனில் இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது.

மகா மகா படத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள பல நடிகர் மற்றும் நடிகைகள் முதன் முறையாக நடித்து இருக்கிறார்கள்.  மேலும் நிழல்கள் ரவி, அனுபமா குமார், மற்றும் மீரா கிருஷ்ணன் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.

இந்த திரைபடத்தில் "மதராசபட்டினம்" மற்றும் "I" திரைப்படத்திற்கு அடுத்து ஒரு ஆங்கில பெண் கதநாயாகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் மணிரத்தினம் இயக்கிய "பாம்பே"  திரைப்படத்திற்கு படதொகுபிற்காக (Editing) இந்தியாவில் நேஷனல் அவார்ட் பெற்ற சுரேஷ் ஆர்ஸ், பனியாற்றி உல்லார். மேலும் சங்கர் இயக்கிய "காதலன்"   திரைப்படத்திற்கு சவுண்ட் எபக்ட்ஸ்க்காக  (Sound Effects) இந்தியாவில் நேஷனல் அவார்ட் பெற்ற முருகேஷ், மகா மகா படத்தில் பனியாற்றி உல்லார்.


ஈழப்போராட்ட முன்னோடி கி.பி.அரவிந்தன் இழப்பில்

.

kipi

ஈழப்போராட்டத்தின் முன்னோடிப் போராளியாக, கவிஞராக, சமூகப்பணியாளராக அறியப்பட்ட கி.பி.அரவிந்தன் அண்ணரது இழப்பைச் சற்று முன்னர் அறிந்து மிகுந்த துயர் கொள்கின்றேன்.
இனவாத அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளம்பிய மாணவர் புரட்சியின் ஆரம்ப வித்துகளில் ஒருவர் இவர். 
அரவிந்தன் அண்ணர் பத்து வருடங்களுக்கு முன்னர் எனது ஊடகத்துறையின் ஆரம்ப காலத்தில் ஈழத்து அரசியல் சார்ந்த பல நிகழ்ச்சிகளுக்கு முதுகெலும்பாக இருந்து உதவியவர். குறிப்பாக 2005 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை பல்வேறு ஈழ நடப்புகள் சார்ந்த வானொலிப் பகிர்வுகள் எப்படி அமைய வேண்டும்  என்பதற்கான தூண்டுகோலாக இருந்து உதவியவர்.

பல அரசியல், கலை இலக்கிய ஆய்வாளர்களது தொடர்பை ஏற்படுத்தித் தந்தவர்.பேராசிரியர் சிவத்தம்பிக்கான சிறப்பு ஒலி ஆவணத் தொகுப்பைச் செய்ய வேண்டும் என்று சொல்லி இதற்குத் தகுந்தவர்களை அடையாளப்படுத்தி அந்தப் பகிர்வு சிறப்பாக அமைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி உதவியவர். 

துர்கா தேவி தேவஸ்தான அலங்கார திருவிழா படங்கள்

.

துர்கா தேவி தேவஸ்தான அலங்கார திருவிழா  பத்தாம்    நாள் மாசிமக 
தீர்த்தோற்சவம் 


சிட்னியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தான பத்தாம்  நாள்அலங்கார திருவிழா   தீர்த்தோற்சவம்  மாசிமக நன்னாளான 04.03.15 இல் மிகவும் சிறப்பாக நடை பெற்றது . அம்மன்     வீதி உலா வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.


March 6 முதல் EVENT சினிமா BURWOOD ல் "எனக்குள் ஒருவன்."

.
காதலில் சொதப்புவது எப்படி?, உதயம் NHS, தீயா வேலை செய்யனும் குமாரு, ஜிகிர்தாண்டா போன்ற வெற்றிப் படநாயகன் சித்தார்த்தின் அடுத்தபடைப்பு எனக்குள் ஒருவன். March 6 முதல் EVENT சினிமா BURWOOD ல் 







சங்க இலக்கியக் காட்சிகள் 42- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்ää  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

வந்தான் காண முடியவில்லை
வந்ததை அவளும் அறியவில்லை

அது அருவிகள் நிறைந்த ஒரு மலை நாடு. பள்ளைத்தை நோக்கிப் பாய்ந்தோடி வரும் அருவிகளுக்கு அங்கே பஞ்சமில்லை. மலைச் சாரல்களிலே எங்கு பார்த்தாலும் மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த மலர்கள் வண்டுகளையும்ää தும்பிகளையும் தேனருந்த வாவாவென்று அழைப்பதுபோல இதழ்களை விரித்து மணம் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

'நானே எரிய போறேன்; நகை எதுக்குப்பா?' உயிர் கரையும் நேரத்திலும் உருகிய பெண்: 'கவுரவ கொலை'யில் கண்ணீர் காட்சி!

.
முதலில் கௌரவ கொலை என்ற சொல்லை பத்திரிகைகள் நீக்கவேண்டும் இது கௌரவ கொலை அல்ல சாதி வெறிக் கொலை 
Tamilmurasuaustralia 

சிவகங்கை: 'பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு' என்பது பெற்றோரை புறக்கணிக்கும் பிள்ளைகளை பற்றிய பழமொழி. ஆனால், பெற்ற மனமும், சில நேரங்களில் இறுகிய பாறையாகிப் போகும் என்பதற்கு, சிவகங்கை உடைகுளத் தில் நடந்த, 'கவுரவக் கொலை' சாட்சி. 
காதலியாய் உருவெடுத்தாள் தமிழ்ச்செல்வி; அவளுக்கு எமனாக உருவெடுத்தார் தந்தை தங்க ராஜ். இன்னும் சில நிமிடங்களில் உயிர் கரைந்து காற்றில் கலக்கப் போகிறது... அந்த தருணத்தில், எந்த ஆன்மாவும் இப்படி நினைத்திருக்காது; தமிழ்ச்செல்வியை தவிர. 'நானே சாகப் போறேன்... என் நகையை கழற்றி தம்பி, தங்கச்சியிடம் கொடுங்கப்பா' என்றாள் தந்தையிடம். அந்த இடத்திலாவது, 'கல்லான' தந்தை கரைந்திருக்க வேண்டும்; மனிதர், அசையவில்லை!

உலகச் செய்திகள்



நமிபியா ஜனாதிபதிக்கு உலகின் பெறுமதிமிக்க தனிநபர் விருது

உக்ரேனில் மோதல்களில் 6,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

ஈராக்கில் ஐ.எஸ். போராளிகளால் நால்வருக்கு துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றம்

சிசிலிக்கு அப்பால் மூழ்கிய குடியேற்றகளின் படகு : 10 பேர் உயி­ரி­ழப்பு

அமெரிக்க நியூயோர்க் நகரில் விமானம் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று விபத்து




நமிபியா ஜனாதிபதிக்கு உலகின் பெறுமதிமிக்க தனிநபர் விருது


02/03/2015 பதவியை விட்டு வெளியேறி செல்லும் நமிபியா ஜனாதிபதி ஹிபிகெபுன்ஜி பொஹம்பாவுக்கு உலகின் மிகப் பெரிய பெறுமதிமிக்க தனிநபர் விருதான ஆபிரிக்க தலைமைத்துவத்துக்கான மொ இப்ராஹிம் விருது வழங்கப்பட்டுள்ளது.

விழுதல் என்பது எழுகையே" - பகுதி 40 காசி.வி. நாகலிங்கம் யேர்மனி

.
இவர் யாழ் -பொன்னாலையை பிறப்பிடமாக கொண்டவர்  தனது ஆரம்பகல்வியை பொன்னாலை வரதராசப்பெருமாள் வித்தியாசாலையிலும்   உயர்கல்வியை யாழ்-விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரத்த்pலும் கற்றார.; அதன்பின்   சங்கானை -ப.நோ.கூட்டுறவுச்சங்க தலைமை அலுவலகத்ததில் பணியில் ஈடுபட்டார். தமது  மாணவர்களின் நன்மைகருதி  -ரியூட்டறி அமைத்து கல்வி கற்பித்துவந்த காலத்தில் நாட்டு சூழ்நிலைகாரணமாக யேர்மனிக்கு 1979ம் ஆண்டு வந்தடைந்து. அக்காலத்தில் இருந்து எழுத்துத்தறையில் ஆர்வம் கொண்டார் அதன்பயனாக 1988 இல் யேர்மனியில் ,,வண்ணத்துப்பூச்சி,, என்னும் சஞ்சிகையை 2000ம் ஆண்டுவரை வெளியிட்டார். ஆந்த காலத்தில் 10 நாவல்களை எழுதி வெளியிட்டார்.
கடலில் ஒரு படகு  - சிறகொடிந்த பறவை மீண்டும் சிறகடித்தபோது - விடியலில் மலர்ந்த பூக்கள்-2000, - விழிகளைநனைத்திடும் கனவுகள் 2001 - வீட்டுக்குள் வந்த வெள்ளம் 1996, -சொந்தமும் சோதனையும் 1990 - ஒட்டாதஉறவுகள 2003 -மனங்கலங்கிய மன்னன் 1988 - வாழ நினைத்தால் வாழலாம் 2007 - புதிய திருப்பம்  1988 - அவன் காட்டிய வழி 1988 -அழாத உலகம் (நாடகம்)  1992; 

அரச மரம் ( சிறுகதை ) - கனகலதா - சிங்கப்பூர்

.                                                                    

முதலில்   சில  கணங்கள்  என்ன  பேசுவது  என்று  மலருக்குத் தெரியவில்லை.    முதல்நாள்  பேராசிரியரின்  உரையைக் கேட்டதிலிருந்து   அவர்   மீது  மலருக்கு  அளவுகடந்த  மரியாதை உண்டாகி இருந்தது.   அவரிடம்  மேலும்  பேசும்  ஆர்வத்தில்  அவரது பரபரப்பான   அட்டவணையில்    எங்களுக்குச்  சிறிது  நேரம் ஒதுக்கக்கேட்டிருந்தோம்.     காலையில்  என்ன    சாப்பிட்டீர்கள்...? இன்றைய  உங்களது  திட்டம்  என்ன...? அண்மையில்   என்ன வாசித்தீர்கள் ...? என்று   மெல்ல  உரையாடலைத்  தொடங்கி இயல்பான   நிலையில்   பல  விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த மலர்  திடீரென்று   கேட்டார்
 “இந்த  அரச  மரம்  உங்களைச் சங்கடப்படுத்தவில்லையா...?”
ஒரு  கட்டில் -  அதைச் சுற்றி  மூன்றடி  இடைவெளி நாற்காலியுடன் கூடிய   குட்டி  மேசை  மிகச்  சிறிய  குளியல் -கழிவறை -  பொருட்கள்   வைக்க  ஒரு  சிறு  அலுமாரியுடன்  இருந்த  அந்த அறையை   மூன்று  ஸ்டார்  ஹோட்டல் தகுதியுடையதாக்கிக்கொண்டிருந்தது    வாசலைப் பார்த்திருந்த  சற்றுப் பெரிய    ஒற்றைச் சன்னல்.
சன்னலை  முழுவதுமாக  ஆக்கிரமித்திருந்தது  அரச மரம்.   அறைக்குள்   நுழைபவர்  பார்வை   நேர்  கோட்டில்  சென்றால்    அந்த மரத்தில்தான்    நிலைகுத்தும்.
கட்டடங்களும்   கடைகளும்  மக்களும்  நிறைந்திருந்திருக்கும் சிராங்கூன்    சாலைப் பகுதியில்  ஒரு   பெரு மரமும்  அதன்    பசுமையும்    மட்டுமேயான   வெளிக்காட்சியுடன்  அறை    அமைவது மிக    அபூர்வமானது.

கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கனகராயன்குளம் சிறுமி சரண்யாவின் மரணம்:

  துரித விசாரணைக்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் கோரிக்கை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா:-

கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கனகராயன்குளம் சிறுமி சரண்யாவின் மரணம்:

கனகராயன்குளம் மன்னகுளம் சந்தியைச் சேர்ந்த பாடசாலை மாணவியின் மரணம் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கபட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் வவுனியா மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர்களும் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவியான 15 வயதுடைய செல்வராசா சரண்யா என்ற சிறுமி சிவராத்திரியை முன்னிட்டு, தெரிந்தவர்களுடன் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குச் சென்றதாகவும், இரண்டு தினங்கள் கழித்து திரும்பி வந்த அவர், சுகயீனம் காரணமாக மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேல் வைத்தியத்திற்காக, கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

முதல் பெண் மருத்துவர் கல்விக்கூட அனுபவங்கள்

.

மகளிர் தினம் இன்று . பெண்கல்வி பெற்ற வரலாறு அன்று --உங்களுக்காக.இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களுள் ஒருவரும், தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவருமான டாக்டர் முத்துலெட்சுமி (ரெட்டி) அவர்கள், அந்நாளின் தடைகளைத் தாண்டி கல்வி கற்ற வரலாறு. அவருடைய சுயசரிதை நூலிலிருந்து...‏

சந்து பொந்துகளில் பள்ளிக்கு!
திரையிட்ட குதிரை வண்டியில் கல்லூரிக்கு!
டாக்டர் முத்துலட்சுமியின் கல்வி கற்ற அனுபவங்கள்

இன்று பெண்கள் வின்வெளி பயணம் வரை சுலபமாக சென்று வருகின்றனர் .
பெண்கள் இல்லா துறையோஇஅலுவலகமோ இன்று கிடையாது.ஆனால் இதே நிலை ஒரு 60 ஆண்டுகளுக்கு முன்னர்.?
பெண்கள் வீட்டு வாசல் அருகே கூட நிற்க இயலா நிலை. அன்று ஒரு பெண் பள்ளி இகல்லூரி சென்று படித்ததும்இமருத்துவராக மாறி பணியாற்றியது எவ்வளவு புரட்சிகரமானது.
மகளிர் தினம் இன்று .
பெண்கல்வி  பெற்ற  வரலாறு அன்று உங்களுக்காக.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களுள் ஒருவரும்இ தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவருமான டாக்டர் முத்துலெட்சுமி (ரெட்டி) அவர்கள்இ அந்நாளின் தடைகளைத் தாண்டி கல்வி கற்ற வரலாறு. அவருடைய சுயசரிதை நூலிலிருந்து...


Dandenong நூலகத்தில் தமிழ் பகுதி -- செந்தில்

.

 இன்று மதியம்(07/03/15) Dandenong நூலகத்தில்   தமிழ் பகுதி மாநகர சபை உறுப்பினர் கெவின் மத்தியுவால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கபட்டுள்ளது. அவர் அங்கு உரையாற்றும் போது இம்மாநகரம் தமிழ்மக்கள் கூடிய பகுதி ஆகவே தமிழ் பகுதியை திறந்துள்ளோம் என கூறினார். இதனை விரிவு படுத்துவது எங்கள் கடமை ஆகவே நீங்கள் எல்லோரும் அங்கு சென்று தமிழ் புத்தகங்களை வாசித்து உங்கள் கருத்துகளை அவர்களுக்கு தெரிவிக்கவேண்டும் .அப்படி தெரிவித்தால் அவர்கள் மேலும் தமிழ் நுல்களை வைப்பார்கள்.மெல்பேனில் உள்ள எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை அவர்களிடம கொடுக்கலாம். இதனால் மற்ற தமிழ் மக்கள் உங்கள் நூல் களை  வாசிக்க முடியும்.


சம்பிரதாயம் என்ன சொல்கிறது….சிறுகதை - நவீனன்

.

என் அன்புத் தந்தை காவலுர் ராசதுரை க்கு சமர்ப்பணம்
என்ன சில நாட்களாய்; வேலயில காணயில்லை? என்று கேட்டான் தவசீலன் வீதியில் தன் நண்பன் குணசிங்கத்தைக் கண்டதும்.
இல்லை சித்தப்பா சிறி லங்காவிலிருந்து வந்திருக்கிறார் அதுதான் என்றான் குணசிங்கம்.
அவர் வந்தால் என்ன? என்று கேட்டான் தவசீலன்.
இல்லை சிலகாலம் நான் வீட்டில்தான் இருக்க வேண்டும். என்;றான் குணம் பெருமூச்சுடன்.
ஏனடா? என்று கேட்டான் தவசிலன்.
சற்று பின்வாங்கியபின்னர் சொன்னான் குணம்: அவர் என்ன தேத்தண்ணீ போடமாட்டார். சமைக்கத் தெரியாது! கடைக்குப் போகமாட்டார்….நான்தான் எல்லாம் செய்து கொடுக்க வேண்டும்!
தவசீலனுக்குத் தூக்கிவாரிப்போட்டது.

தன்னைத் தானே தபாலில் அனுப்பிய மனிதர்

ரெக் ஸ்பியர்ஸ் 1964-இல் தனது தபால் பயணத்தை தொடங்க முன்னர் லண்னில்

1960-களில் ஆஸ்திரேலிய தடகள வீரர் ரெக் ஸ்பியர்ஸ்லண்டனிலுருந்து விமானத்தில் செல்ல போதிய பணம் இல்லாமல், தன்னைத் தானே ஒரு மரப்பெட்டியில் வைத்து ஆஸ்திரேலியாவிற்கு விமானத்தில் பயணப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.
தனது மகளின் பிறந்த நாளுக்குள் தான் வீட்டுக்குச் செல்லத் தீவிரமாக முயன்றும், அது முடியாமல் போகவே இந்த வழியை தான் தேர்ந்தெடுத்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பவம் நடந்து அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆன நிலையில், தனது இந்த சுவாரஸ்யமான பயண அனுபவம் குறித்து அவர் இப்போது நினைவு கூர்ந்திருக்கிறார்.
ஈட்டி எறியும் விளையாட்டு வீரரான ரெக் ஸ்பியர்ஸ் தன் விளையாட்டுக்குத் தடையாய் இருந்த காயத்தில் இருந்து மீண்டு டோக்யோவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் பங்குகொள்ள விரும்பினார்.

ஞானம் சஞ்சிகையின் 175வது சிறப்பிதழ்

.
ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்
 948 பக்கங்களில் வெளியாகியுள்ள இச்சிறப்பிதழில் 50 கட்டுரைகள், 75 சிறுகதைகள், 126 கவிதைகள், 2 நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.
2000ஆம் ஆண்டுமுதல் வெளியாகும் ஞானம் சஞ்சிகை தனது 50வது இதழைப் பொன்மலராகவும், 100வது இதழை ஈழத்து நவீன இலக்கியச் சிறப்பிதழாகவும், 150வது இதழை ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழாகவும் வெளியிட்டது. தற்போது ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.

ஞானம் வெளியிட்ட சிறப்பிதழ்களில் இதுவே அதிகூடிய கனதி கொண்டது. ஒரு சிறப்பிதழை வெளிக்கொண்டு வருவது என்பது மிகவும் கடினமான பணி. விடயதானங்களைச் சேகரித்தல், ஒழுங்குபடுத்துதல், வடிவமைத்தல் முதல்கொண்டு புத்தக உருவாக்கம் வரை ஞானம் சஞ்சிகையினரின் கடின உழைப்பு மலரில் தெரிகின்றது. ஒவ்வொரு பக்கமும் செதுக்கிய சிற்பம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளமை என்னைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றது. சிறுகதைகள் கவிதைகளின் தெரிவில் சமூகப் பயன்பாடு, அழகியல் நேர்த்தி காணக்கூடியதாக உள்ளது.

பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.சி சக்தி காலமானார்.


பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.சி சக்தி ( 76) சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் பலர் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 4 நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்திருந்தவர் திடீரென மாத்திரையை எடுத்துக் கொண்ட போது ஏற்பட்ட மூச்சுத் திணறலால், நேற்று சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது..
ஆர்.சி சக்தி மறைவு குறித்து தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர். இவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் எனத் தெரிகிறது.

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி பெற்ற மாணவர்கள் அனைவரும் பட்டதாரியாகினர்.

.
அவுஸ்திரேலியாவில்   இயங்கும்  இலங்கை   மாணவர் கல்வி   நிதியத்தின்  உதவி  பெற்ற  கிழக்கு  பல்கலைக்கழக மாணவர்கள்   அனைவரும்  பட்டதாரியாகினர்.
 விரைவில்  பட்டமளிப்பு  விழா.
சிலர்  தொழில்   வாய்ப்பு  பெற்றனர்,   சிலர்  மேற்கல்வி தொடருகின்றனர்.
பயனடைந்த    மாணவர்கள்  கல்வி  நிதியத்திற்கு பாராட்டு


 
 இலங்கையில்  நீடித்த  முப்பது  ஆண்டுகால  போரினாலும்  2004  ஆம்  ஆண்டு  இறுதியில்  கிழக்கிலங்கையில்  நிகழ்ந்த  சுனாமி கடற்கோள்    அநர்த்தத்தினாலும்  பெரிதும்  பாதிக்கப்பட்ட  மாணவர்கள்    பலர்  கிழக்கிலங்கை   பல்கலைக்கழகத்தில் பயின்றவாறு    அவுஸ்திரேலியாவில்  இயங்கும்  இலங்கை   மாணவர் கல்வி   நிதியத்தின்  புலமைப்பரிசில்களை  பெற்றனர்.

அவுஸ்திரேலியாவிலும்    ஏனைய  சில  நாடுகளிலிருந்தும்  உதவும் இரக்கமுள்ள    அன்பர்களின்  தொடர்ச்சியான  ஆதரவினால் இலங்கையில்    போரில்  பாதிக்கப்பட்ட  ஆயிரக்கணக்கான  வறிய நிலையிலிருந்த    மாணவர்கள்  பயனடைந்தனர்.
கிழக்கு    பல்கலைக்கழகத்திலும்  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும்  யாழ். பல்கலைக்கழக  வவுனியா வளாகத்திலும்      மற்றும்  கொழும்பு    பல்கலைக்கழகங்களிலும்    இந்நிதியத்தின்  உதவி  பெற்ற  பல மாணவர்கள்    தற்பொழுது  பட்டதாரிகளாகி  தொழில்  வாய்ப்பு    பெற்றுள்ளனர்.    மேலும்   சில மாணவர்கள்   வெளிநாடுகளுக்கு  தொழில்  வாய்ப்பு  பெற்று புலம்பெயர்ந்தனர்.


இலங்கைச் செய்திகள்



தமிழ் மக்கள் நம்பும் வகையில் விசாரணை அமைய வேண்டும்

துமிந்த சில்வாவுக்கு எதிராக குற்றப்பத்திரம்

யோசித்தவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது

தமிழ் மக்கள் நம்பும் வகையில் விசாரணை அமைய வேண்டும்

04/03/2015 இலங்கை அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உள்­ளக விசா­ரணை பொறி­மு­றை­யா­னது நம்­ப­க­ர­மா­கவும் சர்­வ­தேச தரத்தின் அடிப்­ப­டை­யிலும் அமை­ய­வேண்டும். அத்­துடன்
உள்­ளக செயற்­பாடு நம்­ப­க­ர­மாக உள்­ள­தாக கடந்த கால யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் கரு­த­வேண்டும். இதனை அவர்கள் வலி­யு­றுத்­தினர் என்று இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட ஐக்­கிய நாடு­களின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவி செய­லாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தெரி­வித்தார்.

எதிர்­வரும் செப்­டெம்பர் மாத­மா­கும்­போது உள்­ளக விசா­ர­ணையில் முன்­னேற்­றத்தைக் காட்­டு­வ­தாக அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­துள்­ளது. எனவே செப்­டெம்பர் மாத­தத்தில் முன்­னேற்­றத்தைக் காட்­டு­மாறு அர­சாங்­கத்­துக்கு கூறு­கின்றோம். உறுப்பு நாடுகள் இதனை பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன என்றும் அவர் குறிப்­பிட்டார்.

குடிதண்ணீரும் குடாநாடும் - செல்வி வசந்தினி ஜீவரத்தினம்,

.


குடிதண்ணீருக்காக மக்கள் ஒற்றைக் குடத்துடன் இடுப்புடைய பல நூறு கிலோ மீற்றர்கள் பயணிக்கின்ற காலத்தில் வீட்டின் எல்லையோரம் வட்டக்கிணறு, துலா உழண்டி என பங்குக் கிணறுகளுடன் பங்குபோட்டு அள்ளிப் பருகிய இனம் எம் இனம்.

கால ஓட்டத்தில் பங்குக்கிணறுகள் பாழ். கிணறுகள் ஆகிப்போக வீட்டுக்குள் கிணறு ஊற்றெடுக்க ஆரம்பித்தன. சொந்தமண், சொந்த நீர், எம் உயிர், எம் தண்ணீர் என அள்ளிப்பருகி தாகம் தீர்த்துக் கொண்டது முழுக் குடாநாடும்.
இத்தனைக்கும் பூமி மாதாவைக் குளிர்விக்க ஓடிய நிலத்தடி நீர் ஓடையே எமக்கெல்லாம் வரப் பிரசாதமாகிக்கிடந்தது. ஆனால் குடிதண்ணீரில் கழிவு கலந்ததாகக் கூறி இன்று ஏன் ஊரெங்கும் போர்க்கொடி, ஊடகமெங்கும் செய்தி. உலகெங்கும் ஆர்ப்பாட்டம். ஏன் இந்த அவலம்?
"தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே'' என்றான் ஆதித் தமிழன். ஆனால் இன்றோ பழ மொழிகள் பாழ்படும் அளவுக்கு கிணற்றுத்தண்ணீர் கறுப்பாகிப் பாழாகிக் போய்விட்டது.
குடாநாட்டில் குடித்தொகைச் செறிவுக்கு முக்கியமான காரணமாக அமைவது நிலத்தடி நன்னீர் வளமே. அதுவும் இல்லாதுவிடின் எப்போதே குடாநாட்டின் வரலாறு முடிந்திருக்கும். 

கோத்தா முகாம் என்ற ஒன்று இல்லை ; முன்னாள் கடற்படை தளபதி

.

கோத்தா முகாம் என்ற பெயரில் எதுகுமில்லை. இது கடற்படையினருக்கு சேறுபூசுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பொய் பிரச்சாரம் என முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.   அண்மையில் தமிழ்  தேசியக் கூட்டமைப்பின்  பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்பிரேமச்சந்திரன் கோத்தா முகாம் குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.   இதனையடுத்து முன்னாள் கடற்படைத்தளபதியிடம் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியிருந்தது. அதற்குப் பதிலளிக்கும்  போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.   அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,      கோத்தா என்ற பெயரில் கடற்படை முகாம் இருப்பதாக நான் அறிந்த வரையில் இல்லை.   இது கடற்படையினருக்கு சேறுபூசுவதற்காக எவரோ மேற்கொண்டு வரும் பொய் பிரச்சாரம்.உண்மையை வெளியிட வேண்டிய தேவை எனக்கு உள்ளது.    விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் கடற்படையினர் முக்கிய 


இலங்கையின் கடன் கோரிக்கையை IFM நிராகரிப்பு

  குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு

இலங்கையின் கடன் கோரிக்கையை IFM நிராகரிப்பு
 இலங்கையின் கடன் கோரிக்கையை சர்வதேச நாணய நிதியம் நிராகரித்துள்ளது. இலங்கைக்கு புதிதாக கடனுதவிகளை வழங்க முடியாது என அறிவித்துள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக பெற்றுக்கொள்ள உத்தேசித்திருந்தது.

கடந்த அரசாங்கத்தின் கடன் கொடுப்பனவுகளை ஈடு செய்யும் நோக்கில் இவ்வாறு புதிய அரசாங்கம் கடன் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் சீனாவிடம் பாரியளவில் கடன் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் இந்தக் கடன் தொகையில் ஒரு தொகுதியை மீள செலுத்துவதற்கு குறைந்த வட்டியில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளது.

இலங்கையின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கடந்த மாதம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் கடன் பெற்றுக்கொள்ள முயற்சித்திருந்தார். இலங்கையில் உடனடி பொருளாதார நெருக்கடிகள் எதுவும் கிடையாது எனவும் இதனால் கடன் வழங்குவது சாத்தியமில்லை எனவும் சர்வதேச சர்வதே நாணய நிதியம் அறிவித்தள்ளது.

2009ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கையின் அந்நிய செலவாணி தொகை சாதகமான நிலைமையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது. தென் ஆசியாவில் துரித கதியில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னணி வகிப்பதாகத் தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமா


காக்கி சட்டை




தமிழ் சினிமாவில் ஒரு முழுமையான ஹீரோ ஆகவேண்டும் என்றால் கண்டிப்பாக அவர் போலிஸ் வேஷம் கட்டினால் தான் முடியும் என்பது எழுதப்படாத விதி போல. அந்த வகையில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயனையும் விட்டு விடுமா? இந்த ஆசை. எதீர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஜாலி பையனாக நடித்த இவர், காக்கிசட்டை அணிந்து இந்த படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் வெற்றி கூட்டணியுடன் களம் கண்டுள்ளது காக்கிசட்டை. இதில் புதிதாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் அதிர்ஷ்ட ஜோடி ஸ்ரீதிவ்யாவும் இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு.
கதைக்களம்
கான்ஸ்டபிளாக தன் வாழ்க்கையை தொடங்கும் சிவகார்த்திகேயன் எப்படியாவது இன்ஸ்பெக்டர் ஆகவேண்டும் என முயற்சி செய்து வருகிறார். ஆனால், இதற்காக இவர் பெரிதாக முயற்சி ஏதும் எடுக்காமல் இமான் அண்ணாச்சியுடன் சேர்ந்து ஜாலி அரட்டை அடித்து வருகிறார். ஒரு திருடனை பிடிக்கும் முயற்சியில் ரயில்வே ஸ்டேஷனில் ஸ்ரீதிவ்யாவை பார்க்கும் இவருக்கு பார்த்தவுடன் காதல் தான்.
இதை தொடர்ந்து ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்ரீதிவ்யா வீட்டிற்கு சிவகார்த்திகேயன் செல்ல, அவர்கள் குடும்பத்திற்கு போலிஸ் என்றாலே பிடிக்காது என்று அறிந்து கொண்டு, தான் வேலை தேடும் இளைஞன் என்று பொய் சொல்லி ஸ்ரீதிவ்யாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். இவருடன் ஜாலியாக டூயட், காமெடி என தன் வழக்கமான நகைச்சுவை பலத்துடன் அடித்து தூள் கிளப்புகிறார் சிவகார்த்திகேயன்.
ஆனால், இவர் கண்ணில் அவ்வப்போது படும் சில குற்றங்களை, மேல் அதிகரியான பிரபுவிடம் சொல்ல, அவர் இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவா, பிரபுவிடம் முறையிட ‘உன்னால முடிஞ்சா தொட்டு பார்த்தாலே ஷாக் அடிக்கிற மாதிரி ஒரு கேஸ் கொண்டு வா’ என சிவா மீசையை பிரபு முறுக்கிவிடுகிறார். இதை தொடர்ந்து யதார்த்தமாக சிவகார்த்திகேயன் ஒரு சிறுவனின் விபத்தை கண்டு, அதை தொடர்ந்து அவனை காப்பாற்ற முயற்சி செய்யும்போது பல திடுக்கிடும் உண்மைகளை கண்டுபிடிக்கிறார்.
வெளி மாநிலங்களில் இருந்து பிழைப்புக்கு வரும் சிறுவர்களில் தாய், தந்தை இல்லாதவர்களை டார்க்கெட் செய்து, அவர்களை மூளைச்சாவு அடைய செய்து, உடல் உறுப்புகளை திருடுகிறது ஒரு பெரிய கும்பல். இந்த நெட்வொர்க்கை சிவா கண்டுபிடிக்க, இதில் பிரபு, தன்னுடன் வேலை பார்க்கும் போலிஸ் இன்ஸ்பெக்டர் என பலரை இழக்கிறார். இந்நிலையில் இந்த நெட்வொர்க்கின் அடுத்த குழந்தை கடத்தல் திட்டத்தை சிவா கண்டுபிடிக்கிறார். இதை அவர் தடுத்து நிறுத்தினாரா? அந்த வில்லனை எப்படி பழி வாங்குகிறார் என்பதே மீதிக்கதை.
நடிகர், நடிகைகள், டெக்னிஷியன் பங்களிப்பு
சிவகார்த்திகேயன் ஒரு முழு ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். படத்தில் ஆரம்பத்தில் மாஸ் ஹீரோவிற்கான தோரணையில் அறிமுகமாகி, காமெடி, சண்டை, ஆட்டம், பாட்டம் என அனைத்து ஏரியாக்களிலும் கில்லி தான். என்ன, விஜய், ரஜினியின் மேனரிசங்களை அடுத்த படத்தில் கொஞ்சம் குறைத்து கொள்ளலாம். ஸ்ரீதிவ்யா, பாட்டுக்கு மட்டும் வந்து சென்றாலும், ஒரு சில காட்சிகளில் ஹீரோவிற்கு உதவி செய்து போகிறார்.
காமெடிக்கு என்று தனி ட்ராக் அமைக்காமல் இமான் அண்ணாச்சியை கதையின் ஓட்டத்திலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள். பிரபு கொஞ்ச நேரம் வந்தாலும் தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்கிறார். வில்லனின் உருவம் தான் ஒல்லி என்றாலும், நடிப்பில் மிரட்டியிருக்கிறார். மயில்சாமி, மனோபாலா கூட்டணி காமெடி நன்றாகவே உள்ளது.
அனிருத்தின் இசையில் ஐயம் சோ கூல், காதல் கண் கட்டுதே பாடல்கள் மட்டும் நன்றாக உள்ளது. பின்னணி இசையில் செம ஸ்கோர் செய்திருக்கிறார். ஆனால், அதிக சத்தம் காது வலிக்கிறது. மேலும், கொஞ்சம் வேகத்துடன் இசை வேண்டும் என்றால் வேலையில்லா பட்டதாரி, செண்டிமெண்ட் இசைக்கு எதிர்நீச்சல், இந்த படங்களில் இருந்து கொஞ்சம் வெளில வாங்க அனிருத்.
க்ளாப்ஸ்
சிவகார்த்திகேயன் தனி ஆளாக நம்மை கவர்ந்து செல்கிறார், குறிப்பாக காதல் மற்றும் பாடல் காட்சியில் அனைத்து தரப்பு மக்களையும் கவர்கிறார். இமான் அண்ணாச்சியின் காமெடி நன்றாகவே உள்ளது. பட்டுக்கோட்டை பிரபாகர் படத்தின் வசனத்தை சிறப்பாக எழுதியுள்ளார்.
அதிலும் போலிஸ் எப்படியிருக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் பேசும் வசனம் எல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது. ஒரு சில இடங்களில் அனிருத்தின் பின்னணி இசை நன்றாக உள்ளது. ஒளிப்பதிவு மிகவும் நேர்த்தியாக, குறிப்பாக சேஸிங் காட்சியில் அனல் பறக்கிறது.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி கொஞ்சம் நெளிய வைக்கிறது, என்ன தான் விறுவிறு என்று சென்றாலும், ஏதோ காரணத்தால் திரைக்கதை கொஞ்சம் தள்ளாடுகிறது. மேலும், சில வாரங்களுக்கு முன் வெளிவந்த என்னை அறிந்தால் படத்திலும் இதே கான்செப்ட் என்பதால் தியேட்டரிலேயே கொஞ்சம் கமெண்ட் எழுகிறது.
மொத்தத்தில் சிவகார்த்திகேயன் காக்கிசட்டையில் காலரை தூக்கி விட்டுள்ளார், இதற்காகவே நாமும் ஒரு முறை இந்த சட்டையை அணியலாம்.
ரேட்டிங்-2.75/5

நன்றி  cineulagam