எல்லாமாக இருப்பவர் - சௌந்தரி கணேசன்

என் அப்பா

என் வாழ்க்கையின் சாகசம்

என் பிரபஞ்சத்தின் நட்சத்திரம்

அவர் முக்கியத்துவம்பற்றி

நான் சொல்லாத நாளில்லை

 

நான் சிறுமியாக இருந்தபோது

அவர் என்னோடு இருந்தார்

 

என்னை நன்றாக நேசித்தார்

என் ஆரோக்கியத்தை கவனித்தார்

ஓர் அன்புக் கடலை பரிசளித்தார்

 

நான் குமரியாக மாறும்போதும்

அவர் என்னோடு இருந்தார்

 

என் குறைகளை அனுமதித்தார்

என் தெரிவுகளைச் சரி செய்தார்

என் முயற்சிக்குத் துணை நின்றார்

 

நான் சுயமாக நின்ற போது

அவர் என்னோடு இல்லை

 

வடிவழகா வேலவனே வழிசமைப்பாய் எங்களுக்கு !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் --- அவுஸ்திரேலியா 


காவடிகள் ஆடிவரும் கந்தனது சன்னதியில்
கரங்குவித்து அடியவர்கள் கந்தன்முகம் காணநிற்பார்

ஆறுமுகன் விதிவர ஆதவனும் வரவேற்பான்
அரோகரா எனுமொலியோ ஆகாயம் தொட்டுவிடும்

ஆதவனின் ஒளியணைக்க ஆறுமுகன் அருள்சுரந்து

அசைந்துவரும் தாமரையாய் அரன்மகனும் வந்திடுவார்
தேரடியில் திரண்டிடுவர் தெரிசனத்தைக் காண்பதற்கு
ஆறுமுகன் தேரேற அழகுடனே வந்திடுவார்

ஊரெல்லாம் நல்லூரான் உவந்துவரும் தேர்காண
வெண்மணலில் விதைத்துவிட்ட  நன்மணியாய் நிறைந்திருப்பார்
தேர்வடத்தைத் தொட்டுவிட்டால் செய்தவினை அகலுமென
தொட்டுவிட  அடியார்கள் கிட்டக்கிட்டச் சென்றிடுவார்

எழுத்தும் வாழ்க்கையும் அங்கம் 57 ஊடகவியலாளர்களுக்கு பத்துக்கட்டளைகள் ! செய்தி மொழிக்கும் கதை மொழிக்குமிடையே வேறுபாடுகள் !! முருகபூபதி


எனது எழுத்துலக வாழ்க்கை பற்றிய இந்தத் தொடரை எழுதும் காலப்பகுதியில்  இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் – சிங்கள – ஆங்கில நாளேடுகளும்,  இணைய இதழ்களும் தினம் தினம் எனது மின்னஞ்சலுக்கும் வாட்ஸ் அப்பிற்கும் வந்துகொண்டிருக்கின்றன.

அனைத்து ஊடகங்களிலும் கண்ணுக்குத் தெரியாத எதிரிபற்றிய செய்திகள்தான் ஆக்கிரமித்துள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து காலைக்கதிரும் ஈழநாடுவும் மற்றும் வார இதழ் தீம்புனலும்  எனது மின்னஞ்சலுக்கு தவறாமல் வந்துவிடும். நானும் அவற்றை படித்துவிட்டு,  பலருக்கும் பகிர்ந்துகொள்வேன்.

அந்த வாசகர்கள்,  நான் வாழும் அவுஸ்திரேலியாவிலும், மற்றும்  இலங்கை, இந்தியா, அமெரிக்கா, உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் வசிக்கிறார்கள்.

கொழும்பில் வதியும் எனது நீண்டகால நண்பர் – பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் -  ஶ்ரீதரசிங், எனது வாட்ஸ் அப்பிற்கு இலங்கையில் வெளியாகும் அனைத்து  -  மும்மொழி  நாளேடுகளையும்  தமிழக இதழ்களையும் அனுப்பிவிடுவார்.

இவற்றை  சமகால நெருக்கடிகளுக்கு மத்தியிலும்  அயராமல் நடத்திவரும் நிறுவனங்களுக்கும் ஆசிரியர்களுக்கும், ஆசிரிய பீடத்தில் பணியாற்றுபவர்களுக்கும்,  பிரதேச நிருபர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் கூறியவாறே இந்த 57 ஆம் அங்கத்திற்குள் பிரவேசிக்கின்றேன்.

ஆண்டவனுக்கு ஐந்தொழில் இல்லையா? - பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

 .

எங்கும் கொரோனா என்பதே பேச்சு

எல்லா உலகமும் பதற்றமாய் ஆச்சு

சுங்கக் கடவைகள் சுறுசுறுப்பாச்சு

சோதனை கணத்திலே உயிரே போச்சு



சொந்தக் காரர் எதிரே வந்தாலும்

சுகம் விசாரிக்கவும் பயப்படும் சோகம்

எந்தக் காலமும் வந்ததே இல்லை

இதுவோ உலகின் அழிவுக்கு எல்லை?


கையை குலுக்கினோம் கட்டிப் பிடித்தோம்

காதருகே ரகசியம் பேசி மகிழ்ந்தோம்

சைகை காட்டித் தழுவிக் களித்தோம்

தள்ளிநின் றிப்போ பேசவும் தயக்கம்


போருக்கு நடுவிலும் ஊருக்குள் இருந்தோம்

புலத்தினைத் பிரிந்தும் உறவினைத் தொடர்ந்தோம்

பாருக்குள் பற்பல நாடுகள் புகுந்தோம்

பங்கருக் குள்ளேயும் பலரோடு ஒளித்தோம்


சுற்றங்கள் ஒன்றாய் இருப்பது வளப்பம்

சோகத்தில், சுகத்தில் கூடுதல், வழக்கம்

பெற்றோரும் பிள்ளையை அணைக்கவே தயங்கும்

பேரிடர் வேறுண்டா இப்போது வரைக்கும்?

தந்தையர் தினம் - நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர்

   

புலம்பெயர்ந்து வாழும் எம்மவரும் தந்தையர் தினம் கொண்டாடுவது வழமையாகிவிட்டது. இதுவோ எமது பண்பாட்டிற்கு புதியது. நல்லவை எங்கிருந்தாலும் அவற்றைப் பின்பற்றுவது வரவேற்க வேண்டியதே.

தந்தையர் தினம் என்றதும் எனது சிந்தனையில் தோன்றிய சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நாம் தந்தையாரையோ அல்லது அவரைப் போன்ற பெரியவர்ளையோ கண்டால் எழுந்து நின்று மரியாதை செலுத்துவோம். பெரியவர்களின் முன் புகைப்பிடிக்கக் கூடாது. அப்படி தற்செயலாக அவர் வர நேர்ந்தால் அதை மறைத்து விடுவார்கள். காலுக்கு மேல் கால்போட்டு அமரக்கூடாது. மரியாதை கருதி இவற்றையெல்லாம் செய்தவர்கள் இன்று அருகி வருகிறார்கள்.

எனது சினேகிதி ஒருத்தியின் குடும்பம் சிட்னியில் உள்ள வென்ற்வெத்வில்லில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள், தாய் தந்தையருடன் மூன்று தலைமுறையினர் ஒன்றாகவே வாழ்ந்து வருகிறார்கள். இவர்கட்கு 16 வயதில் ஒரு மகள் உண்டு. எமது பண்பாடுகளைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு ஜப்பானியப் பெண் வந்துள்ளதாகக் கூறினாள். வருமுன், தமது குடும்பத்தினர் அனைவரையும்பற்றி அக்கறையுடன் விசாரித்து அறிந்து வைத்திருந்தாகவும், வந்து சேர்ந்ததும் முதலில் அப்பெண்ணின் தாத்தாவைப் பார்க்க வேண்டும் என்றாளாம். தாத்தாவைக் கண்டவள், அவருக்கு ஒரு பரிசுப் பொருள் கொடுத்து வணங்கினாளாம். அவள் மற்றவர்களுக்கு கொண்டு வந்த பொருட்களைவிட அப்பரிசே மிக விலையுயர்ந்த சிறந்த பரிசாக இருந்ததாம். வீட்டில் உள்ள மூத்தவருக்கே முதலில் மரியாதை செலுத்த வேண்டும் என்பது இந்திய, ஜப்பானிய, சீன, இலங்கை பௌத்த மதத்தினரான சிங்களவரிடமும் உண்டு.

எனது நண்பர் ஒருவர் ஆபிரிக்காவில் உள்ள Tanzania என்னும் நாட்டின் விவசாய இலாகாவில் பணிபுரிந்தார். அவரது அலுவலகம் ஓர் ஆபிரிக்கரின் கீழ் இயங்கி வந்தது. காலையில் அந்த அதிகாரியின் அறையை சுத்தம் பண்ண ஓர் வயது முதிர்ந்தவர் வருவாராம். உடன் அந்த அதிகாரி இருக்கையை விட்டு எழுந்து பெரியவரை நோக்கி வந்து, காலை வணக்கம் என அவர்கள் மொழியில் கூறி, பெரியவரே உமது பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன் எனக் கூற, பெரியவரும் உனக்கு என் ஆசீர்வாதங்கள் எனக் கூறுவாராம். இது தினம் காலையில் நடைபெற்றதாக நண்பர் கூறினார்.

நினைவில் வாழும் அருட்தந்தை மரியசேவியர் அடிகளார் - முருகபூபதி


ன்பால் அனைவரையும் அரவணைத்த பண்பாளர் கலைத்தூது அருட்தந்தை மரியசேவியர் அடிகளார், இப்பூவுலகைவிட்டு மறைந்தாலும்  அவரால் நேசிக்கப்பட்ட மக்களாலும் நண்பர்கள் மற்றும் கலை, இலக்கியவாதிகளினாலும்  மறக்கப்பட முடியாத அற்புதமான பிறவி.

தனது சமயப்பணிகளுக்கும் அப்பால், தமிழ்க்கலை வளர்த்த கர்மயோகி. தேடல் மனப்பான்மையுடன் அவர் தேடியது பணம், பொருள் அல்ல.

எங்கள் தமிழின் தொன்மையைத் தேடியவர். “ தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்  “ என்ற கூற்றுக்கு அமைய, தான் தேடிப்பெற்றதையும் கற்றுக்கொண்டதையும் தமிழ்மக்களுக்கு நினைவூட்டிச்சொல்லிவந்த பெருந்தகை.

 “கன்னித் தமிழ் வேர்களுக்குள் முத்தெடுப்போம் , காலமெல்லாம் முத்தம் பதிப்போம்.  “ என்ற தாரகமந்திரத்துடன், இலங்கையில் திருமறைக் கலாமன்றத்தை தங்கு தடையின்றி இயக்கிவந்தவர்.

 “ மனிதநேயமொன்றையே இவரிடம் காணமுடிகிறது. கலை என்ற புனிதமான பாதையில் மனிதநேயம் என்ற ஒளியைத்தேடி,  பூரணத்துவமான பாதையில் சலசலப்பின்றி தெளிந்த நீரோடைபோல் தனது பயணத்தை தொடர்பவர்  “ என்று 1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மல்லிகை கலை, இலக்கிய மாத இதழில் இவர் பற்றி பதிவாகியிருந்தது. அந்த இதழின் முகப்பை அலங்கரித்தவர் மரியசேவியர் அடிகளார்தான்.  அட்டைப்பட அதிதியாக இவர் பற்றிய பதிவை பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன் எழுதியிருந்தார்.

கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை ஆறு ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா
                                   

 இரண்டு தாத்தாக்களை நாங்கள் மறந்துவிட முடியாது. ஒருவர்

எங்கள் ஈழத்
 தவரான தங்கத் தாத்தா சோமசுந்தரப்புலவர். மற்றவர் தமிழ் நாட்டினைச் சேர் ந்த உ.வே.சா என்று அழைக்கப்படும் உத்தமதானபுரம்  வேங்கட  சுப்பையர்  சாமிநாத ஐயர் அவர்கள். ஈழத்துத் தாத்தா கற்பகதருவாம் பனைக் கென்றே    “ தாலவிலாசம் “  பாடிப் பனையினை வியந்து நின்றார். பனையின் ஓலையினை எங்கள் தங்கத்தாத்தா.........

     ஐந்து வயதினிற் கையி லெடுக்கின்ற

                வரிவரி யேடு முதலாக
     முந்து பலகலை யாகம மோலையில்
             முன்ன மெழுதினார் ஞானப்பெண்ணே

என்று பனை ஓலையின் பிறப்பாகிய எங்களின் ஓலைச் சுவடிகளை மனமிரு த்தும் வகையில் பாடிப் பதித்ருக்கிறார்.இந்தியத் தாத்தாவோ  பனையின் கொடையான பனை ஓலையால் அமைந்த ஏடுகளை ஊரூராய்ச் தேடிச் சென்று எமக்களித்து உயர்ந்து நிற்கிறார்.

   எங்கள் முன்னோர்கள் மெஞ்ஞானத்திலும் உயர்ந்து நின்றார்கள்.  விஞ்ஞான  த்திலும் உயர்ந்தே இருந்திருக்கிறார்கள். அவர்களின் அருமையான ஒரு தெரி வுதான் கற்பகதருவாய் பனையினை எடுத்தது எனலாம். பனையின் சாதாரண ஓலையினை உற்று நோக்கி அதனை சிந்தனைகளைப் பதிவிடும் ஒன்றாக மாற்றிட நினைந்தமையை வியக்காமல் இருந்திட முடியுமா ! அவர்களிடம் தோன்றிய அந்தச் சிந்தனை அறிவியலின் விளைவு என்றுதானே கொள்ள முடிகிறது. குறைந்த செலவில் நிறைந்த பயனையுடைய அவர்களின் தேடலும் , அதற்காக அவர்களின் நாடலுமாகிய நிலையினை எண்ணி எண்ணி வியந்து நிற்கிறோம் அல்லவா !
  எத்தனையோ வகை இருக்க , எத்தனையோ மரமும் இலைகளும் இருக்க பனையின் இலையை அதாவது அதன் ஓலையினை எப்படித்தான் தேர்ந் தெடுத்தார்களோ தெரியவில்லை. அந்தத் தெரிவினால் எங்களுக்கு சிந்தனைச் செல்வங்களும் கிடைத்தன. கற்பகதருவாம் பனையும் எங்கள் வாழ்வியலுடன் இணைந்து போயும் விட்டது என்பதைக் கருத்திருத்துதல் கட்டாயமாகும்.

பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - நான்கு சுவர்கள் - ச. சுந்தரதாஸ் - பகுதி 11

.





நட்சத்திர நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி இருவரையும் வைத்து படம் எடுக்காமல் தனது கதை வசனம் மீதான திறமையை மட்டும் நம்பி படம் எடுத்து சாதனை படைத்தவர் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர். கருப்பு வெள்ளைப் படங்களாகவே இயங்கிக் கொண்டிருந்த அவருக்கு 1971 ஆம் ஆண்டு முதன் முறையாக ஈஸ்ட்மென் கலரில் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம்தான் நான்கு சுவர்கள்.

கலர்ப்படம் என்பதாலோ என்னவோ தனது வழமையான பாணியில் இருந்து மாறி ஆக்சன், கவர்ச்சி நடனம், கண்கவர் காட்சிகள் என்று தன் பார்வையை வேறு பக்கம் திருப்பி இருந்தார் பாலச்சந்தர். இதற்கு வசதியாக ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று இதரு கதாநாயகர்களை படத்தில் இரட்டை நாயனமாக பொருத்திக் கொண்டார். ஏராளமான படங்களில் நடித்திருந்த ஜெய்சங்கருக்கு இதுவே இரண்டாவது விண்ணப் படமாக அமைந்தது. வெளிப்புறக் காட்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படப்பிடிப்பை கடற்கரை அழகை பருகக்கூடிய கோவாவில் கொண்டார்கள் ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணனின் கேமரா கோவாவின் அழகை வாரிக் கொண்டது

சமுதாயத்தில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மனிதர்களை அரவணைத்து அவர்களுக்காக ஒரு கிராமத்தை உருவாக்கி அங்கே அவர்களை ரவியும் ராஜாவும் குடியேற்றுகிறார்கள். ஒற்றுமையுடன் செயற்படும் அவர்களுக்கு மத்தியில் வாணி குறுக்கிடுகிறாள் . அவளுக்கும் ரவிக்கும் இடையே காதல் உருவாக ராஜாவுக்கும் ரவிக்கும் இடையே மோதல் உருவாகிறது , இதனால் கிராமம் பல சமூக சீர்கேடுகளை சந்திக்கின்றது.

சீட்டுக்காரி – சம்பவம் (5) கே.எஸ்.சுதாகர்


“கடையளுக்கு ரொயிலற் ரிசு வந்திட்டுதாம். நான் வேலை விட்டு வரேக்கை எல்லாம் முடிஞ்சு போம். நீ போய்க் கொஞ்சம் வாங்கி வை” ராசு சாம்பவிக்கு ரெலிபோனில் சொன்னான்.

கொரோனாக் காலம். சாம்பவி மாஸ்க்கை அணிந்துகொண்டாள். பிறாமை எடுத்துக் கொண்டாள்.

`பிறாம்’ என்பது குழந்தைத் தள்ளுவண்டி. சாம்பவி தன் மூன்று பிள்ளைகளையும், பிறந்தது முதற்கொண்டு அவர்கள் நடக்கத் தொடங்கும் வரையும், அதற்குள்ளே வைத்துத்தான் இழுத்து வந்தாள். சொப்பிங் சென்ரர் போவதென்றாலும் சரி, பூங்காவென்றாலும் சரி அதுவே அவளுக்குக் கை கொடுத்தது. பிள்ளைகள் இன்று வளர்ந்து, பல்கலைக்கழகம் வரை சென்று வேலையும் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். இருந்தாலும் சாம்பவி அந்தப் பிறாமைக் கைவிடவில்லை. இன்றும் மாதம் ஒரு தடவையாவது பிறாமுடன் சொப்பிங் சென்ரர் போய் வராவிட்டால் சாம்பவிக்குப் பத்தியப்படாது. அவள் பிறாமுடன் புறப்படும் காலம் நேரம் பற்றி யாராலும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது.

ஊருக்கு ஊர் மீட்பர்கள் தேவை - அவதானி


கடந்த இருபது மாதங்களுக்கும் மேலாக முழு உலகையும் அச்சுறுத்தி, இலட்சக்கணக்கானோரை பலியெடுத்து வந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனோ, தற்போது தனது குடும்பத்திலிருந்து டெல்டா என்ற மற்றும் ஒரு திரிபடைந்த வைரஸுடன் கோரத்தாண்டவமாடிக்கொண்டிருக்கிறது.

இனிவரும் காலங்களில் இந்த வைரஸ்களுடன் போராடும் வாழ்வுக்கு எம்மை பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டிய தேவையையே அவை எமக்கு உணர்ந்தியுள்ளன.

அணுவாயுதங்களுக்காகவும் எறிகணைகளுக்காகவும்  கொடிய உயிர்கொல்லிகளான ஆயுதங்களுக்காகவும்  பல வல்லரசுகள் தமது வருடாந்த பாதுகாப்பு செலவீனங்களுக்கு பெருந்தொகையான நிதியை  ஒதுக்கிவந்தன.

அந்த வல்லரசுகளிலிருந்த ஆயுதத்தரகர்கள், அடுத்தவேளைக்கு கையேந்தும் ஏழை நாடுகள் உட்பட  மூன்றாம் உலக நாடுகளுக்கும்  ஆயுதங்களை விநியோகித்துவந்தனர்.

பதிவுப் படிவம் Registration Form 4 தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் அவர்களால் நடத்தப்படும் திருமுறைப் பண்ணிசைத் திருத்தல முற்றோதல்

 


சற்றே மாறுதல் செய்யப்பட்ட பதிவுப் படிவம் கீழே தரப்பட்டுள்ளது.

 

'உறுதி மொழிதருவது பற்றிச் சிலர் தயக்கம் காட்டியதாக அறிந்தோம். ஆதலால் சுவாமிகளின் அறிவுரைப்படிஅதனை மாற்றியுள்ளோம். தயங்கியவர்கள் தைரியமாக இம்முற்றோதலில் இணைவார்கள் என நம்புகிறோம்.

 

முன்னர் பதிவு செய்து கொண்டவர்கள் மீண்டும் இப்படிவத்தினை அனுப்பத் தேவையில்லை. 

சைவ சித்தாந்தச் சரபம் / சித்தாந்தச் சைவ செம்மணி/ சைவ .சு. இராமலிங்க சுவாமிகள் ஐயா அவர்களது இணையத்தள பதிவுகள் - அருளுரைகள்

 இறைவன் திருவருளால் சைவ சித்தாந்தச் சரபம் / சித்தாந்தச் சைவ செம்மணி / சைவ .சு. இராமலிங்க சுவாமிகள் ஐயா அவர்களது கிடைக்கப் பெற்ற ஒருசில இணையத்தள பதிவுகளை - அருளுரைகளை பகிர்ந்து கொள்கின்றேன்.

நாம் எல்லோரும் (அடியேன் உட்பட) இவை அணைத்தினையும் முக்கியமாக தொடர் சொற்பொழிவுகளையும்விரிவுரைகளையும் முழுமையாக கேட்டு பலனடைய இறைவனை பிரார்த்தனை செய்வோமாக!.

 

இவற்றை நிறைவு செய்ய பல மாதங்கள்வருடங்கள் ஆகலாம் என்பதனால் அடியார்கள் தங்கள் கணனியில் வைத்துப்பேணும் முகமாக இணைப்பாகவும் உள்ளது.

10-09-2021 விநாயகர் சதுர்த்தி

 


நியூஸிலாந்து கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் இலங்கையில் விசாரணை

 Saturday, September 4, 2021 - 8:42pm

நியூஸிலாந்து கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் இலங்கையில் விசாரணை-Sri Lanka Police Investigating About Attacker of New Zealand-Auckland

நேற்றையதினம் (03) நியூஸிலாந்தின் ஒக்லண்டில் கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்ட நிலையில் கொல்லப்பட்ட இலங்கையர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் ஆப்கானிஸ்தானில் நடந்தவை!

 Saturday, September 4, 2021 - 6:16pm

ஆப்கானிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு தலிபான்களுக்கு இப்போது உள்ளது. அந்நாட்டையே முடக்கி விடக் கூடிய பயங்கரமான பாதுகாப்பு மற்றும் படுமோசமான பொருளாதார பிரச்சினைகளுக்கு தலிபான்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள்.

இலங்கைச் செய்திகள்

உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி கலாபூஷணம் சிதம்பரநாதன் காலமானார் 

இலங்கையில் ஊரடங்கு செப்டெம்பர் 13 வரை மேலும் 7 நாட்கள் நீடிப்பு

நயினாதீவு உற்சவம் இவ்வருடம் இல்லை

அரசிலிருந்து விலகும் எந்த முடிவும் இல்லை

மேலும் 145 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 9,951 கொவிட் மரணங்கள்

யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளராக மீண்டும் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி

சிறப்பாக செயற்படும் எம்.பியாக சாணக்கியன்



உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி கலாபூஷணம் சிதம்பரநாதன் காலமானார் 

உலகப் புகழ்பெற்ற நாதஸ்வர சக்கரவர்த்தி   சிதம்பரநாதன் நேற்றுக் காலமானார்.  அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நாதஸ்வர வித்துவான் சிதம்பரநாதன்,  தவிற்காரர் செல்லத்துரையின்  மகனாவார். இவர் தமது நாதஸ்வரக் கலையைக் கும்பழாவளை ஆலயத்தில் இளமைப்பருவத்திலேயே ஆரம்பித்தார். இவருடைய தந்தையாரும் கும்பழாவளை ஆலயத்தில் தவிற்கலையில் ஈடுபட்டிருந்தவர். தந்தையாருடன் இணைந்து கலைத்தொண்டு பேணிய இவர் நாதஸ்வரக் கலையில் மிக நாட்டங் கொண்டவராக விளங்கினார். அக் காலத்தில் பிரபல நாதஸ்வரக் கலைஞராகவிருந்த மாவிட்டபுரம் இராசாவிடம் சாஸ்திர ரீதியில் நாதஸ்வரம் பயின்றார்.

உலகச் செய்திகள்

இடா புயல்: நியூயோர்க் நகரத்தில் அவசர நிலை

இடா புயலினால் அமெரிக்காவில் திடீர் வெள்ளம்: 44 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஒடுக்கப்படும் பெண்கள்

புதிய அரசை அறிவிக்கத் தயாராகும் தலிபான்கள்: பெண்கள் ஆர்ப்பாட்டம்

நாட்டை விட்டு வெளியேற ஆப்கான் எல்லைகளில் பெரும் மக்கள் கூட்டம்

காசாவில் இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் பலஸ்தீனர் உயிரிழப்பு

‘மூ’ கொரோனா திரிபு பற்றி கண்காணிப்பு



இடா புயல்: நியூயோர்க் நகரத்தில் அவசர நிலை

இடா வெப்பமண்டல புயல் காரணமாக கடும் மழை மற்றும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நியூயோர்க் நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நகரில் வரலாறு காணாத மழை காரணமாக கொடிய வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு வீதிகள் மோசமான நிலையில் இருப்பதாக மேயர் பில் டி பிளசியோ தெரிவித்துள்ளார். சுரங்க ரயில் நிலையங்கள், வீடுகள் மற்றும் வீதிகளில் நீர் நிரம்பி இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இணையவழி இனிய இலக்கிய சந்திப்பு - 12/09/2021