தேசமே போற்றும்வண்ணம் திகழ்ந்தனர் விபுலாநந்தர் !

 



















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ....அவுஸ்திரேலியா 




மட்டுநகர் வாவியிலே மீன்கள் பாடும் 
மகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும்
கட்டழகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும்
களனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும்

இட்டமுடன் கமுகு தென்னை ஓங்கிநிற்கும்
இசைபாடிக் குயில்களெங்கும் மயக்கி நிற்கும்
எத்திக்கும் இயற்கைவளம் தன்னைப் பெற்ற
எழில் பெற்ற இடமே கிழக்கிலங்கையாகும் ! 

ஈழத்தின் கிழக்காக இருக்கின்ற காரைதீவில்
ஞானமாய் வந்துதித்தார் நம்துறவி விபுலாநந்தர்
துறவியாய் ஆனாலும் தூயதமிழ் துறக்காமல்
அமைதியாய் பணிசெய்து அவருயர்ந்தார் இமயமென !

இறையின் நினைப்பை இருத்துவோம் மனத்தில்

 

இயற்றியவர்:  

சிவஞானச்சுடர் 

பல்வைத்திய கலாநிதி பாரதி

இளமுருகனார் வாழ்நாட் சாதனையாளர்                                                       



 

                                                    


 

 









இறைவனின் நினைப்பை இருத்தியே மனதால்

குறைவிலாப் பூசையை நிறைவுற இயற்றிடப் 

பிறையொடு கங்கை சூடிய பெம்மான்

நறையிலா வாழ்வினை முறையொடு நல்குவன்!

 

ஐம்பூ தங்களால் ஆன உடம்பிலும்

அநாதியாய்த் தொடரும் அழிவிலா உயிரிலும்

மெய்யென ஒன்றாய் உடனாய் வேறாய்

விமலன் உளனெனச் சைவம் விளம்புமே!


நல்வினை செய்தும் வல்வினை செய்தும்

நாளும் பொழுதும் இறைவனின் பெயரைச்

சொல்லிச் சொல்லி உய்ந்தவர் கோடி!

தோன்றாத் துணையாய் தொடர்பவன் சிவனே!

Strathfield நாடாளுமன்ற உறுப்பினர் திரு. Jason Yat-Sen LI, MP பேரப்பிள்ளைகள் தினம் மற்றும் தமிழ்மூத்த குடிமக்கள் சங்கத்தின் பங்களிப்பை பாராளுமன்றத்தில் அங்கீகரித்தார்,

அவர் ஆற்றிய உரையைக் கேட்பதற்கு தயவுசெய்து இங்கே அழுத்தவும்  ---> காணொளி

Tamil Senior Citizens' Association

Mr JASON LI (Strathfield) (19:23): I recognise the Grandchildren's Day celebration held this month by



the Tamil Senior Citizens' Association, a cherished annual event that brings generations together in a vibrant celebration of Tamil heritage, family and community spirit. Each year the grandchildren of Tamil seniors are invited to showcase their talents through music, dance, speech and performance. The energy, pride and cultural richness on display are reflected not only in the talents of the younger generation but also in the deep roots of tradition, identity and connection nurtured by the Tamil community. I commend the Tamil Senior Citizens' Association executive team, led by president Mr Arumugam Perumynar and secretary Mr Coomaraswamy Karunasaladeva, for their continued dedication to creating inclusive intergenerational spaces where language, culture and community thrive. Grandchildren's Day exemplifies the importance of passing on cultural heritage with pride and joy. I thank Tamil Senior Citizens' Association for its ongoing commitment to enriching the lives of seniors and families in the Strathfield community and beyond.


நைந்த வாழ்வை நிமிர்த்து – அன்பு ஜெயா பா வகை: கலி மண்டில மண்டிலம்.

வாழ்க்கையினில் ஏற்றமொன்றே வாடிக்கை இல்லைதானே!

தாழ்வென்பதும் நம்வாழ்வில் தவிர்க்கவுமே இயலாதே!

தாழ்வினிலே தளராதே! தவிர்த்திடவே போராடு!

வாழ்க்கையெனில் வெற்றிதோல்வி வந்துபோகும் மறவாதே!   (1)

 

என்றுமில்லை வென்றோரோ எப்போதும் தோற்றவரோ!

இன்றையநம் வாழ்வினிலே இயற்கைதானே வெற்றிதோல்வி!

ஒன்றுமாற்றி ஒன்றுவரும் உலகவாழ்வின் உண்மையீதே!

இன்றுதோற்போர் நாளைவெல்வர் இறைவனவன் எழுதியதே!   (2)

 

தோல்வியில்தான் நடைபயின்றாய், தூளிவிட்டே இறங்கிவந்தே!

தோல்விகண்டு நைந்திடாதே தொடர்வதுமே வெற்றிதானே!

தோல்விக்குப் பின்னுண்டே தொடர்கின்ற படிப்பினையே!

தோல்விதந்த படிப்பினையில் தொடர்முயற்சி வெற்றியுண்டே!  (3)

 

கலைஞராய் அறிஞராய் துறவியாய் மிளிர்ந்த அடிகளார்

 





   










மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
 
மேனாள்  தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண் ...... அவுஸ்திரேலியா 

 

    உலகிலை பிறக்கின்ற மனிதரெலாம் உயர்வு நிலையினை அடைந்து விடுவதுமில்லை. இலட்சியம் பற்றிச் சிந்திக்கும் நிலை பலரிடம் காணப்படுவதும் இல்லை. பிறந்தோம் வாழுகிறோம் என்னும் பாங்கில் இருப்பவர்கள் தான் பல பேர்களாக இருக்கிறார்கள். வாழும் காலத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள இயலாமல் பிரச்சினைகள் வழியில் சென்று அதனுடன் ஒத்துப்போய் இருப்பவர்களும் இருக் கிறார்கள். அதேவேளை நமக்கு ஏன் இந்தப் போராட்டம். வருகின்ற பிரச்சினைகளை புறந்தள்ளி விட்டு  விட்டு தானாக ஒதுங்கி நமக்கேன் இந்தச் சிக்கல் ஒதுங்குவதுதான் மேலென எண்ணி இருப்பவர்களும் இருக்கிறார்கள். என்னதான் பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு அவற்றுக்குத் தீர்வு கண்டு அந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைக் காணும் முயற்சியில் ஈடுபட்டு  முற்போக்காளர்களாக சமூகச் சிந்தனையாளர்களாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

   மூன்றுவகையான சிந்தனை செயற்பாடு மிக்கவர்கள் சமூகத்தில் காணப்ப டும் வேளை இவர்களில் எந்த வகையினரை சமூகம் நினைத்து பார்க்கும் என எண்ணுகின்ற பொழுதுதான் மனிதவாழ்வின் அர்த்தம் தெரியவரும். பிரச்சினைகளுடன் ஒத்துப்போய் கையாலாகாத நிலையில் இருப்போரையோ அல்லது பிரச் சினைகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் நமக்கேன் என்று புறந்தள்ளி ஒதுங்கிப் போகின்றவர்களையோ யாரும் எக்காலத்தும் நினைத்துப் பார்க்கவே மாட்டார்கள். சமூகத்தின் பிரச்சினைகளை எதிர்கொண்டு அவற்றுக்கு உகந்த தீர்வுகளைக் கண்டறிந்து அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு சமூக உணர்வினை உள்ளத்துள் இருத்திக் கொண்டு வாழ்ந்தவர்கள்தான் எல்லோராலும் எக்காலத்தும் நினைவு கூரும் நிலை க்கு நிற்பார்கள் என்பது மிகவும் முக்கிய கருத்தெனலாம். இந்த வகையில் பார்க்கும்வேளை ஈழத்தின் கிழ க்கில் காரைதீவில் தோன்றிய சுவாமி விபுலானந்த அடிகளார் வந்து நிற்கிறார் எனலாம். 

பவளவிழா காணும் படைப்பிலக்கியவாதி பேராசிரியர் ஆசி. கந்தராஜா ! பல்வேறு இலக்கியவிருதுகளைப்பெற்ற தாவரவியல் அறிஞர் ! ! முருகபூபதி

மது தமிழ் சமூகத்தில்  தமது தொழில்சார் அனுபவங்களை


படைப்பிலக்கியத்தில் வரவாக்கியிருப்பவர்கள் மிகவும் குறைவு.

எனினும், தமிழர்கள்  புலம்பெயர்ந்த  நாடுகளில், குறிப்பாக அவுஸ்திரேலியாவில் எம்மத்தியில் வாழும் விலங்கு மருத்துவர் நொயல் நடேசன், மற்றும் தாவரவியல் பேராசிரியர் ஆசி. கந்தராஜா ஆகியோர், தாம் சார்ந்திருந்த தொழில் துறையில் தாம் கற்றதையும், பெற்றதையும் புனைவுசாரா பத்தி எழுத்துக்கள் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

இவ்வாண்டு தனது பவளவிழாவை கொண்டாடும் பிரபல எழுத்தாளரும், பேராசிரியருமான ஆசி. கந்தராஜாவுக்கு எனது  மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறே இந்தப் பதிவை எழுதுகின்றேன்.

எனக்கு அவரை கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் நன்கு தெரியும். 


அவரது எழுத்தாற்றலையும் பேச்சாற்றலையும் அறிந்திருந்திருந்தமையால், 1997ஆம் ஆண்டு எனது எழுத்துலக பிரவேச வெள்ளிவிழாக்காலத்தில் மெல்பனில் நடந்த விழாவுக்கு அவரை தலைமை தாங்குவதற்கு அழைத்திருந்தேன்.

அந்த விழா மெல்பன் வை. டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் அவரது தலைமையில் நடந்தபோது,  மூத்த எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை, கவிஞர் அம்பி, ஓவியர் கே.ரி. செல்வத்துரை, அண்ணாவியார் இளைய பத்மநாதன் ஆகியோர்  பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அன்று முதல் கந்தராஜா அவர்கள் மெல்பன் கலை, இலக்கிய வட்டாரத்திலும் நன்கு அறிமுகமானவர்.  சிட்னி இலக்கியப் பவர் அமைப்பிலும் இணைந்திருந்தார்.  அண்ணாவியார் இளைபத்மநாதனின்  ஒரு பயணத்தின் கதை கூத்திலும் பங்கேற்றிருந்தார். அந்தக் கூத்து மெல்பனில் அரங்காற்றுகை செய்யப்பட்டபோதும் வருகை தந்திருந்தார்.

சிட்னியில் தமிழ் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்ட வேளையில் அங்கிருந்த தமிழ் அறிஞர்கள், கல்விமான்களுடன் இணைந்து  செயல்பட்டவர்.

கந்தராஜா,  இலங்கை வடபுலத்தில் கைதடி கிராமத்தில் 1950 ஆம் ஆண்டு, புராண இதிகாசங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்த  தமிழ் ஆசான் ( அமரர் ) ஆறுமுகம் சின்னத்தம்பி – முத்துப்பிள்ளை தம்பதியரின் செல்வப்புதல்வனாகப் பிறந்தார்.

அவுஸ்திரேலியா – இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி வவுனியா மாவட்ட தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 37 வருடங்களாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அனுசரணையுடன்  புலமைப்பரிசில் உதவியை பெற்றுவரும்  மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு  இவ்வாண்டும் வழங்கப்பட்டது.

 கடந்த வாரங்களில்  யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட மாணவர்களுக்கு யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஊடாகவும்,

அண்மையில் வவுனியா மாவட்ட மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு நிகழ்வு,  இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வவுனியா தொடர்பாளர் அமைப்பான

நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பின்    Voluntary Organization for Vulnerable Community Development (VOVCOD ) தலைவர் திரு. த. கணேஷ் தலைமையில்,  குறிப்பட்ட பணிமனையில் நடைபெற்றது.

சாதித்துக் காட்டிய எங்கட பெடியள் ❤️❤️❤️ கானா பிரபா


மூன்று மணி நேரம் கடந்த நிகழ்ச்சி, அரங்கமே வயது வேறுபாடின்றி ஆர்ப்பரித்துக் கொண்டாடும் காட்சி.

இதெல்லாம் தென்னிந்திய நட்சத்திரங்களைக் கண் கொண்டு பார்த்த அனுபவங்கள்.

ஆனால் ஈழ மண்ணின் இளவல்கள், எந்தவிதமான வர்த்தக அடையாளமும் இன்றி, இன்று சமூக வலைத்தளத்தையே தம் கருவியாகக் கொண்டு ஒட்டுமொத்த உலகத் தமிழரையே மயக்கி வைத்திருக்கிறார்கள் என்பதற்குச் சாட்சியம் பறைந்தது, ஐரோப்பிய மண்ணினைத் தொடர்ந்து ஆஸியில் மெல்பர்ன், அடலெய்ட், பேர்த் தொடர்ந்து சிட்னி என்று நான்கு நகரங்களில் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிய இன்னிசைத் துள்ளல்.
இப்படிய ஒரு சேர ஆஸி நகரங்களில் நம்மவர் நிகழ்த்திக் காட்டுவதும் கூடப் புது வரலாறு.

சொல்லிசையைக் கையில் எடுத்துக் கொண்டு, உள்ளார்த்தம் பேசும்

வரிகளைப் பார்வையாளர்களிடமேயே ஊகிக்க வைத்துத் தமிழர் மொழி, இனம் மீதான காதலைக் கடத்துவது என்பது புதியதொரு உத்தி. அதை வெற்றிகரமாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் என்பதைச் சான்று பகிர்ந்தது, அவையோர் அந்த மொழி ஊடாடல்களினூடே நமக்காக உயிர்ப்பூச் சொரிந்த அந்தத் தேசப் புதல்வர்களை நினைத்து ஆர்ப்பரித்த போது.

வாகீசன் ராசையா, திஷோன் விஜயமோகன், அட்விக் உதயகுமார் மூவருமே முப்பரிமாணங்கள். ஒவ்வொருவரும் தனித்தனியாக ஆனால் கூட்டாக இணைந்தாலே ஒரு மாயாஜாலத்தை மேடையில் நிகழ்த்த வல்லவர்கள் என்று காட்டியது அவர்கள் சுரந்த பாடலும், ஆடலும்.

இப்படியான நிகழ்ச்சிகளில் தம்முடைய கச்சேரியையும் பாருங்கள் என்று கூப்பாடு போடும் ரசிகப் பெருமக்களும் இருப்பார்கள். சில சமயம் மேடையை மேவி அவர்கள் அந்த நிகழ்ச்சியைச் சின்னாபின்னப்படுத்தி விடுவார்கள். ஆனால் இங்கே நடந்ததோ வேறு. சபையோரை அடக்கி ஆண்டார் வாகீசன். அவர்களோடு பேச்சுக் கொடுத்து நான் உங்கட பெடியன் என்ற உரிமையோடு அந்நியம் களைந்து அன்னியோன்யம் ஆக்கினார்.

அனுபவப்பட்ட பாடகர், இசைக் கலைஞர்களுக்கே இம்மாதிரியான சூழல் கைவரப் பெறுவது கடினம். ஆனால் இந்த இளம் வயதில் மதி நுட்பமாகப் பேசிக் கட்டுக்குள் கொண்டு வந்தது சபாஷ் போட வைத்தது.
தேவைப்படும் போது வந்து ஆடிச் சிறப்பித்த நடன மாந்தர், பொருத்தமான ஒளிக் கலவை, முரண்டு பிடிக்காத ஒலியமைப்பு என்று எல்லாமே கச்சிதமாக இயங்கியது.

ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 


தமிழ் படங்களுக்கு தமிழில் தான் பேர் வைக்க வேண்டும் என்ற தீவிர நியதி நிலவிய 60 ம் ஆண்டுகளில் ஆங்கிலப் பெயரைக் கொண்டு ஒரு படம் வெளிவந்தது. அந்தப் படம்தான் ஹலோ மிஸ்டர் ஜமீன்தார். படத்தின் பேரே இது ஒரு காமெடி படம் என்பதை சொல்வது போல் அமைந்திருந்தது. உண்மையும் அதுதான். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதே சமயம் ஓரளவுக்கு செண்டிமெண்டலையும் தடவி படத்தை எடுத்திருந்தார்கள்.
 
படத்தின் பேர்தான் ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் என்றால், படத்தை

தயாரித்து டைரக்ட் செய்தவரும் ஜமிந்தாரைப் போன்ற குண இயல்புகளைக் கொண்டவர்தான். கே. ஜே . மகாதேவன் என்ற திரைப் பிரமுகரால் படம் உருவாக்கப்பட்டது. இந்த மகாதேவன் திரையுலகில் நீண்ட கால அனுபவம் கொண்ட ஒருவராவார். இவரது தந்தை கே எஸ் ஜெயராம் ஐயர் மைலாப்பூரில் வசித்த ஒரு பிரபல கிரிமினல் வழக்குகளுக்கு ஆஜராகும் வக்கீலாவார். தன்னுடைய மகன் மகாதேவனும் தன்னைப் போல் வக்கீலாக வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை லண்டனுக்கு சென்று சட்டக் கல்வி பயின்று வர அனுப்பினார் அவர். ஆனால் பல காரணங்களால் மகாதேவன் வக்கீலாகவில்லை. அதற்கு பதில் அவர் கவனம் சினிமாத் துறையின் பக்கம் திரும்பியது. பிரபல டைரக்டர் கே. சுப்பிரமணியம் இயக்கிய கல்கியின் நாவலான தியாக பூமியில் கதாநாயகனாக இவர் நடித்தார். அதனைத் தொடர்ந்து ஜெமினி ஸ்டுடியோவில் சேர்ந்து படம் இயக்கும் வித்தைகளை எஸ் எஸ் வாசன், கே ராம்நாத் ஆகியோரிடம் கற்றார். சந்திரலேகா படம் தயாரான போது ரஞ்சன் நடித்த கொடுங்கோலன் வேடத்துக்கு இவர் பேர் முதலில் தெரிவானது. ஆனால் இவரது மென்மையான முகம் அவ் வேடத்துக்கு பொருந்தாது என்பதால் அவர் நடிக்கவில்லை.

நடை அழகு – குறுங்கதை - கே.எஸ்.சுதாகர்


குக்கிராமம் ஒன்றை நோக்கி பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பயிலும் மாணவியர் கூட்டமொன்று புறப்பட்டது. சாந்தி அவர்களிற்கு தலைமை வகித்தாள்.

திரு! எங்குமே திருவின் படைப்புகளைப் பற்றிய பேச்சுத்தான். இலக்கியத்தில் திரு புகழ்பூத்த எழுத்தாளராகிவிட்டார். அவரது 'நியூ வேவ்' பாணியிலான நடை இளைஞர் கூட்டத்தைக் கவர்ந்து கொண்டது. நேற்றுக்கூட வானொலியில் திருவின் 'பழைய பானைக்குள் புதிய கள்ளு' என்ற இசையும் கதையும் ஒலிபரப்பாகியிருந்தது.

அவரைச் சந்திப்பதற்காகத்தான் அந்தக்கூட்டம் ஆலாய்ப் பறந்து கொண்டிருந்தது. காதல் சுவை சொட்டும் கள்ளு, சாந்தியைக் கவர்ந்திருந்தது. அவள் திருவின் படைப்புகளை ஆய்வு செய்து கலைத்துறையில் பட்டம் பெற இருக்கின்றாள். அவளை ஆய்வு செய்வதற்காக மற்றைய நால்வரும்.

ஐந்து பெண்களும் சைக்கிளில் சவாரி செய்து 'சடின் பிறேக்' போட்டு திருவின் வீட்டிற்கு முன்னால் புழுதி கிழப்பினார்கள். புழுதி அடங்குவதற்கு முன் நாய் ஒன்றின் ஆரவாரம் தொடங்கியது. படலை திறந்து கிடந்தபடியால் உள்ளே புகுந்தார்கள். உள்ளேயிருந்து ஒரு நாய் ஓடிவந்தது. மாமரத்திற்குக் கீழே இருந்த ஒருவன் 'றெக்ஸ் றெக்ஸ்' என்று அதைக் கூப்பிட்டான். அவர்கள் பாவாடையை இழுத்துப் பிடித்தபடியே சைக்கிளை மாமரத்திற்குக் கிட்ட ஓரம் கட்டினார்கள். முற்றத்தில் புளுக்கொடியல், மிளகாய் வத்தல், ஊறுகாய் என்பன காய்ந்து கொண்டிருந்தன. மாமரத்திற்குக் கீழே மரக்குற்றி ஒன்றின்மீது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் அவற்றிற்கு காவலாக அமர்ந்திருந்தான். பக்கத்திலே கொஞ்சம் குறுணிக்கற்கள். அவன் அந்தப் பெண்களை நிமிர்ந்து பார்த்தான். பரட்டைத்தலை. 'சேவ்' செய்யப்படாத முகம். கசங்கிய ஆடை. பாக்கு வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தான்.

"நாங்கள் றைற்ரர் திருவை மீற் பண்ணவேணும்."

சத்தமில்லை. மீண்டும் கொஞ்சம் இறுக்கமான தொனியில் வந்தவர்களில் ஒருத்தி கேட்டாள்.

`பறவைகள்’ நூல் அறிமுகம் - கே.எஸ்.சுதாகர்


மாலினி அரவிந்தன் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது கனடாவில் வசிக்கின்றார். கணக்காளராகவும், அதே நேரத்தில் பீல் பிராந்தியக் கல்விச் சபையில் சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ்ப் பகுதி ஆசிரியராகவும் கடமை புரிகின்றார். பல இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ள இவரின் படைப்புகள் கனடா உதயன், தமிழர் தகவல், தினக்குரல் பத்திரிகை, ஞானம் / இனியநந்தவனம் / வெற்றிமணி சஞ்சிகைகளில் வந்திருக்கின்றன.


`பறவைகள்என்ற இந்தத் தொகுப்பில் 10 சிறுகதைகள், 2 சிறுவர் கதைகள், 8 கட்டுரைகள் அடங்கியுள்ளன.

பத்து சிறுகதைகளில், சில குறுங்கதைகள் என்ற வகைமைக்குள் அடக்கப்படக் கூடியன. புலம்பெயர் நாடுகளில் வெவ்வேறு இனம், மதம், கலாசாரம் கொண்ட பின்னணியில் வாழும் இருவர், ஒருவருக்கொருவர் துணை தேடும்போது ஏற்படும் சிக்கல் தன்மையை பறவைகள் சிறுகதை பிரதிபலிக்கின்றது. `எனக்கொரு சினேகிதி’ சிறுகதையானது, காதல் என்பது இதுதான் என்று இலக்கணம் வகுக்கும் கதை. `புளிமாங்காய்’ என்ற கதை மிகவும் சிறப்பாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. கனடா பெண் எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதிய `நீங்காத நினைவுகள்’ என்ற தொகுதியில் இடம்பெற்ற கதை இது.

சிறுவர் சிறுகதைகளில் `கனவு நினைவாக வேண்டும்’ என்ற சிறுவர் கதை ஒரு அறிவியல் கதை ஆகும். வேற்றுக்கிரக வாசிகளின் அன்ரனாக்களை - பூமியிலே இருக்கும் லேடி பேர்ட், நத்தை போன்றவற்றுடன் ஒப்பிடுகின்றது இந்தக் கதை. கதையை ஒரு கனவு என்று சொல்லாமல், இடையில் நிறுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து.

`மர்ம மாலைஎன்ற தொடர் சற்றே வித்தியாசமானது. பெயருக்கு ஏற்றவாறு அமேசன் காடுகளில் நடக்கும் தொடர் மர்மமாக இருந்தது. கனடாவில் பிறந்து வளர்ந்த 18 சிறுவர்களுடன் நூல் ஆசிரியரும் சேர்ந்து தொடரை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கின்றார்கள். மொத்தம் 20 அத்தியாயங்கள் கொண்ட இத்தொடரின் முதல் - இறுதி அத்தியாயங்களை நூலின் ஆசிரியர் எழுத, ஒவ்வொரு சிறுவர்களும் அந்தத் தொடரை வாசிக்கத் தூண்டும் வகையில் மிக அழகாக எழுதியிருந்தார்கள். நூல் ஆசிரியர் அவர்களை வழிநடத்தி தானும் எழுதியிருப்பது சிறப்பு. இந்தத் தொடரின் இறுதி அத்தியாயமும், நடந்தவை அனைத்தும் கனவு என்று சொல்லவருவது ஏமாற்றமாக உள்ளது.

ஊதியம்



சங்கர சுப்பிரமணியன்.





நான் ஒரு நடிகன். பெரிய நடிகன் என்று சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும் கை நிறைய சம்பாதித்து எல்லோருக்கும் தெரிந்தவன். எல்லோருக்கும் உதவியதால் சேர்த்து வைக்காமல் வறுமையில் வாழ்பவன்,


அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் வாய்ப்பை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். ஒரு நாள் அந்த பிரபலமான நகைச்சுவை நடிகர் என் வீடு தேடி வந்தார்.

"என்ன தம்பி எவ்வளவு பெரிய நடிகர் நீங்க, இந்த ஏழையின் வீடு தேடி வந்திருகிறீர்களே?" என்றேன்.

"ஒன்னுமில்ல அண்ணே! ஒரு சிறிய வேடம் இருக்கு. அதில் நடிக்க முடியுமா என்று கேட்டு விட்டு போகலாம் என்று வந்தேன்" என்றார்.

"இன்று நான் உள்ள நிலையில் வீடு தேடி வந்து இதைக்கேட்கணுமா, தம்பி?" என்றேன்.

"ரொம்ப மகிழ்ச்சி அண்ணே, நாளை படப்பிடிப்புக்கு வந்துடுங்க," என்று நேரத்தயும் படப்பிடிப்பு தளத்தயும் சொல்லி விட்டு சென்றார்.

 

அவர் சென்றதும் அப்படியே பிரமித்து அதே இடத்தில் இருந்தேன். என் மனைவி என்னை உலுக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தாள்.

 

"என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்படி பித்து பிடித்தது போல் இருக்கீங்க?"

"இல்ல, எவ்வளவு பெரிய மனிதர் நம் வீடு தேடி வந்து நடிக்க கூப்பிட்டுட்டு போறாரே என்று நினைத்துப் பார்த்தேன். அப்படியே உறைந்து போனேன்."

"எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லைங்க," என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

இலங்கைச் செய்திகள்

இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் : உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசி - தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு

இலங்கை பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காதவரை சர்வதேச நீதியே அவசியமானது ; வெளிநாட்டு அரசாங்கங்கள் தொடர்ந்தும் தடைகளை விதிக்கவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

ஆனையிறவு உப்பளத்தில் 'ரஜலுணு' என்ற பெயரில் அரசாங்க உப்பு உற்பத்தி இன்று ஆரம்பம் !

தையிட்டி விவகாரம் என்பது 16 காணிக்காரர்களின் பிரச்சினை மாத்திரமல்ல,இது திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நீங்களும் இதற்கு ஆதரவோ –என்ற சந்தேகம் எழுக்கின்றது-; தேசிய மக்கள் சக்தியின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் காணி உரிமையாளர்



இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் : உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

Published By: Digital Desk 3

28 Mar, 2025 | 11:03 AM

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரவின் அழைப்பின் பேரில் நரேந்திர மோடி 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 முதல் 4 ஆம் திகதிகளில் தாய்லாந்தின் பேங்கொக்கிற்கு விஜயம் மேற்கொள்வார். அதனை தொடர்ந்து, ஏப்ரல் 4 முதல் 6 திகதிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார்.

உலகச் செய்திகள்

 கருங்கடலில் யுத்த நிறுத்தத்திற்கு இரு தரப்பும் இணக்கம் என அமெரிக்கா அறிவிப்பு - தடைகளை முதலில் நீக்கவேண்டும் என ரஸ்யா தெரிவிப்பு

கனடா தேர்தலில் சீனாரஷ்யா இந்தியா தலையீடு: உளவு அமைப்பு குற்றச்சாட்டு

இடிபாடுகளிற்குள் இருந்து அலறல்களை இன்னமும் கேட்க முடிகின்றது -மியன்மாரின் மீட்பு பணியாளர்

மியன்மார் பூகம்பம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக அதிகரிப்பு!

அமெரிக்காவுடனான ஆழமான உறவுகளின் யுகம் முடிவிற்கு வந்துவிட்டது - கனடா பிரதமர்

செங்கடல் பகுதியில் கடலில் மூழ்கியது சுற்றுலாப்பயணிகளின் நீர்மூழ்கி- ஆறுபேர் பலி



கருங்கடலில் யுத்த நிறுத்தத்திற்கு இரு தரப்பும் இணக்கம் என அமெரிக்கா அறிவிப்பு - தடைகளை முதலில் நீக்கவேண்டும் என ரஸ்யா தெரிவிப்பு

Published By: Rajeeban

26 Mar, 2025 | 01:57 PM

கருங்கடலில் யுத்தநிறுதத்தைகடைப்பிடிப்பதற்கு ரஸ்யாவும் உக்ரைனும் இணங்கியுள்ளன.

சவுதிஅரேபியாவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று மூன்று நாட்களின் பின்னர் இந்த வாக்குறுதியை இரண்டு நாடுகளும் அமெரிக்காவிற்கு வழங்கியுள்ளன.

இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அமெரிக்கா இரண்டு தரப்பினரும் தொடர்ந்தும்நிரந்தர சமாதானத்தை நோக்கி பாடுபடவுள்ளனர் என தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி