போய்வா... கவிதை - ரமேஸ்

.


சில நினைவுகள்
நெஞ்சை அழுத்திய போது
கண்ணீரில் நீந்துவேன்

உன்னுடன்
போன் பண்ணி
கதைக்கும் போது
உள்ளத்தின்
கனம் குறைந்து
இதயம் இலேசாகும்
சந்தோசப்படுவேன்

உன்னைப் பிரியப்போகிறேன்
என்ற எண்ணத்தைக்கண்டு
இதயத்தின் வலி உணர்ந்து
கவிதை எழுதும் பேனாவை விட
கண்ணீர் முந்திக்கொள்கிறது

நியூ சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு - இனிய தமிழ் மாலை - 2012


                                                                                        
படப்பிடிப்பு  சோதி

தொகுப்பு: தி. திருநந்தகுமார்
ஜேம்ஸ் ரூஸ் பாடசாலை சிட்னி தமிழர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் பாடசாலை. ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி அப்பாடசாலை நோக்கி நம்மவர்கள் பெருமளவில் சென்றமைக்குக் காரணம் வேறொன்று. முதல் நாளில் இருந்தே மண்டபம் பரபரப்பாக இருந்தது. உபயம்: ஈஸ்வூட் தமிழ்க் கல்வி நிலையம்.  முதல் நாள் மாலையே மேடை அலங்காரம், ஒத்திகை என அமர்க்களப்பட்டது மண்டபம். அதற்கிடையில் பாலர் மலர் தமிழ்ப் பாடசாலை நண்பர்கள் மண்டபம் முழுதும் கதிரைகளை இல்லை இருக்கைகளை நிரப்பிவிட்டனர். விழா அன்று மாலை மண்டப வாயிலில் சிறிய, எளிமையான ஆனால் அழகான கோலமும் நிறைகுடமும் வந்தோருக்குக் வரவேற்புக்கூறியது.
பிற்பகல் நான்கு பதினைந்திற்கே சிறுவர்களும் பெரியோர்களுமாக வரத்தொடங்கிவிட்டனர். என்ன காரணம் என்று சொல்லவில்லையா? ஆமாம். நியூ சவுத் வேல்ஸ் தமிழ்ப் பாடசாலைகள் கூட்டமைப்பு நாடாத்திய இனிய தமிழ் மாலை தான் அன்று. சில வருடங்களாக பரீட்சைகள், செயலமர்வுகள், பாடநூல் வினியோகம் என மட்டுமே செயற்பட்ட பாடசாலைகள் கூட்டமைப்பு இவ்வருடம் எல்லாப் பாடசாலைகளையும் ஒன்றிணைத்து இனிய தமிழ் மாலை என்ற பெயரில் நடத்திய கலைவிழா தமிழ்ப் பாடசாலை சமூகத்திற்கே ஒரு உற்சாக பானம் என்றால் அது மிகையல்ல. 

கதைத்தொகுப்பின் கதை (சிறுகதை) -

.

முருகபூபதி – ஆஸ்திரேலியா


வீடு மாறுவதைப்போல் சிரமமான வேலை வேறு எதுவும் இல்லை என்பது எனது மனைவியின் அனுபவம். வீட்டுத்தளபாடங்களை  அடுக்கிக்கட்டி சுமந்து ஏற்றி ட்றக்கில் அனுப்பினாலும், புதிய வீட்டுக்குச்சென்றதும் அவற்றை இறக்கிப்பிரித்து வைக்கவேண்டிய இடங்களில் வைத்து புதிய வீட்டை சீர்செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் சொல்வதும் சரிதான். அனுபவித்துப்பார்த்தால் உண்மை  புரிந்துவிடும்.
இன்னும் இரண்டு வாரத்துக்குள் புதிய வீட்டுக்குச்செல்லவேண்டும். அதற்கிடையில் அத்தியாவசிய சமையல் பாத்திரங்கள் மற்றும் உடைகள். தலையணைகள், போர்வைகள், சோப்பு, சீப்பு, ஷம்பு, டவல் முதலான குளியலறை சாதனங்கள் தவிர்த்து ஏனைய அனைத்தையும் பெட்டிகளில் அடுக்கினோம்.

சிலம்பொலி செல்லப்பனின் சொற்பொழிவு

.

இலக்கிய அரங்கும் நூல் வெளியீடும்

.

உலகச் செய்திகள்

.
                               ஈரான் ஒரு வருட காலத்திற்குள் அணு ஆயுதமொன்றை தயாரிக்கும் வல்லமையை பெற்றுவிடும்

பாகிஸ்தானில் வெள்ளம்: 422 பேர் பலி 

ஐ.நாவுக்கான ஆபிரிக்க ஒன்றியத்தைச் சேர்ந்த சமாதான தூதுவர்கள் 4 பேர் படுகொலை

தென் சூடான் மீது சர்வதேச மன்னிப்புச் சபையினால் மீண்டுமொரு பாரிய குற்றச்சாட்டு

ஈரான் ஒரு வருட காலத்திற்குள் அணு ஆயுதமொன்றை தயாரிக்கும் வல்லமையை பெற்றுவிடும்

ஈரானானது ௭திர்வரும் ஒரு வருட காலத்துக்குள் அணு குண்டொன்றை தயாரிக்கக் கூடிய நிலையில் உள்ளதெனவும் ௭னவே அது தொடர்பில் சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கையை ௭டுக்க வேண்டும் ௭னவும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெட்டான்யாஹு வலியுறுத்தியுள்ளார்.
193 அங்கத்தவர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் வியாழக்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஈரானின் அணுசக்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் அபாய ௭ச்சரிக்கை பிறப்பிக்கப்பட வேண்டும் ௭ன அவர் கூறினார். ஈரான் அணு ஆயுதமொன்றை தயாரிப்பதற்கு போதுமான அளவு யுரேனியத்தை செறி வூட்டுவதை தடுத்து நிறுத்துவதற்கான காலம் கடந்து கொண்டிருப்பதாக அவர் தெரி வி த்தார்.


சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருது

.

இவ்வருடத்துக்கான அரச இலக்கிய சாகித்திய விருது விழா கடந்த 30.09.2012 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கை, வெயங்கொட, பத்தலகெதர, சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 2011ம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கான விருதுகளும், சான்றிதழ்களும், பணப் பரிசுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன.

இனிய தமிழ்மாலை 2012 என்பார்வையில் -மேளின் ஜேசுரட்னம்

.


மண்டபத்திற்குள் நுழையும் போதே அங்கு ஒலித்துக் கொண்டிருந்த நாதஸ்வர, மேள, தாள இசை மனதிற்கு இதமாக இருந்தது. மண்டபம் பெற்றோர்களாலும், தமிழ்ப் பாடசாலை மாணவர்களாலும், பார்வையாளர்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சிகள் பிற்பகல் 5.15 மணியளவில் ஆரம்பமாகின. இளம் தலைமுறையைச் சேர்ந்த ஆசிரியர்களான தினேஷாவும், தணிகைராஜனும் வரவேற்புரையை தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆற்றினார்கள். அதைத் தொடர்ந்து மங்கள விளக்கை, Nளுறு தமிழ்ப் பாடசாலைக் கூட்டமைப்பின் தலைவர் கதிர்காமநாதன் ஜெகநாதனும், தமிழ்ப் பாடசாலைகளின் நிர்வாகத் தலைவர்களும் ஏற்றி வைத்தார்கள். பின் தமிழ் மொழி வாழ்த்தும், அவுஸ்திரேலிய தேசிய கீதமும் மாணவர்களால் பாடப்பட்டதைக் தொடர்ந்து, தமிழுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த, அனைத்து உறவுகளுக்காக ஒரு நிமிட மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் இனிய தீபாவளி சந்திப்பு!

.


தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும்
இனிய தீபாவளி சந்திப்பு! நாள்: 2012 நவம்பர் மாதம் 17ம் நாள் சனிக்கிழமை
இடம்: துர்க்கை அம்மன் ஆலய கலாசார மண்டபம் நேரம்: மாலை 6 மணி
கலை நிகழ்ச்சிகள் மற்றும் இந்திய தமிழ் அறிஞர்கள்  கலந்து கொள்ளும்
மாபெரும் சிறப்பு சிரிப்புவெடி பட்டி மண்டபம்.

இலங்கைச் செய்திகள்

.
தீர்க்கமான தருணம்.

கொழும்புவிற்கு மனம் திறந்த மடல்

கிழக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று ஆரம்பம்

இந்திய அரசின் வீடமைப்புத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள்

இலங்கைத் தமிழர்கள் விவகாரம்: தி.மு.க. தலைவருக்கு பிரதமர் மன்மோகன் கடிதம்

கிழக்கு மாகாண சபையில் தமிழர்களுக்கு ஏன் பதவி எதுவும் கிடைக்கவில்லை? விளக்குகின்றார் துரை

தீர்க்கமான தருணம்.
சுகு-ஸ்ரீதரன்
தமிழ் தரப்பினால் முஸ்லிம் மக்களுடன் சேர்ந்து ஒரு மாகாண சபையை கிழக்கில் உருவாக்கமுடியவில்லை. இது மிகவும் பலவீனமான நிலையாகும். சமூக அக்கறை இருக்குமானால் இதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு பரிகாரம் காணப்படவேண்டும்
நில அபகரிப்பு  இராணுவமயமாக்கல் சிவில் நிர்வாகத்தில் படையினர் தலையீடு போன்ற நிலைமைகளில் இது மிகவும் முக்கியமானது. தவிர மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்வதற்குப் பதில் மத்தியை நோக்கி நகர்த்துவதென்பது திட்டமிட்ட முறையில் வெளிப்படையாகவே நிகழ்கிறது. கிழக்குமாகாண ஆளுனர் எப்போதும் மக்களால் தெரிவு செய்யப்பட்;ட பிரதிநிதிகளிடம் அதிகாரங்கள் போவதை விரும்பாதவர். கடந்த மாகாண சபையின் மீது அவரின் செயற்பாடுகள் அதற்கு சாட்சி. அது அவரின் சித்தமல்ல . ஆண்டவனின் சித்தப்படி அவர் நடக்கிறார். மாகாண சபையின் அன்றாட செயற்பாடுகளுக்கான அதிகாரங்கள் கூட அவற்றிடம் இல்லை.  இது முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட கடந்த மாகாண சபை உறுப்பினர்களது அனுபவம்.
எது எவ்வாறெனினும் இம்முறை மாகாண சபை அதிகாரப்பரவலாக்கலுக்காக குரல் எழுப்பும் மேடையாகவே காணப்படும். அது அவ்வாறிருக்க வேண்டிய தேவையுள்ளது. இந்தியா, உலகம் 13வதற்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குமாறு இங்கு இருப்பதை பிடுங்குவதற்கான நிலைமைகளே காணப்படுகின்றன.
13 வதற்கு அப்பால் என்னும் போது அது ஒற்றை ஆட்சி கடந்ததாக இருக்கவேண்டும். தற்போதைய அனுபவங்கள் தரும் பாடமும் அதுதான். ஜனாதிபதி , பாராளுமன்றம், நீதித்துறை இவற்றின் சுயாதீனம் பாரதூரமாக பாதிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை சட்டம் ஒழுங்கு ஆகியன அரசியல் மயப்பட்டு அராஜகம் தாண்டவமாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே ஒற்றை ஆட்சியின் கீழான அதிகாரப்பரவலாக்கல் நடைமுறையில் வரும் பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தினுடாக தீர்வுகாணலாம் என்றும் அர்த்தப்படுகிறது.
ஆனால் இலங்கையில் நீதித்துறை இருக்கும் நிலையில் இது மிகவும் கடினமானது. எனவே ஒற்றையாட்சிக்கு அப்பால் சென்றே தீர்வு காணவேண்டும்.தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேச்சுவாhத்தை நடத்தும் போது இந்த ஒற்றையாட்சி அமைப்பை நீக்குவது பற்றிய கலந்துரையாடல் முக்கியமானது.
அரசியல் மயப்பட்டு இன சமூக நிலைமைகளை கருத்திற்கெடாமல் நீதித் துறை செயற்படுமிடத்து அதற்கு நிhபந்திக்கப்படுமிடத்து பேரினவாத நியாயங்கள் பாராளுமன்றத்தில் செல்வாக்குச் செலுத்தும் வரை ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப்பரவலாக்கல் சிறுபான்மைச் சமூகங்களுக்கு சாத்தியமில்லை. ஓட்டைப் பாத்திரத்தில்  தண்ணீர் அள்ளுவது போலத்தான் இருக்கும்.

சொல்லமறந்த கதைகள் -13


நம்பிக்கை
முருகபூபதி – அவுஸ்திரேலியா
jothidam லண்டன் பி.பி.ஸி தமிழ் ஓசையில் சில வருடங்களுக்கு முன்னர் நான் கேட்ட செய்தி இது:
இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் புதிய அதிபர் தெரிவாகுவார் என்று தமது சிங்கள சோதிட சஞ்சிகையில் எழுதியிருந்த சந்திரஸ்ரீ பண்டார என்னும் ஒரு சோதிடர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார்.
 இந்தச்செய்தி என்னைச்சற்று வியப்பில் ஆழ்த்தியது.
 ஆனால் சில செப்டெம்பர்கள் கடந்துவிட்டன. இலங்கை அதிபரின் தலைமையிலான கூட்டணிதான் இந்த ஆண்டு செப்டெம்பர் நடந்த மூன்று மாகாண சபைத்தேர்தலிலும் வெற்றியை தக்கவைத்துள்ளது. அதிபரும் தொடர்ந்து பதவியில்தான் இருக்கிறார்.

’’சாத்திரம் அன்று சதி..!’’ -

.

                 ’’சூத்திரனுக்கொரு நீதி-தண்டச்
                          சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
                    சாத்திரம் சொல்லிடுமாயின் -அது
                           சாத்திரம் அன்று சதியெனக் கண்டோம்’’
                                                -பாரதி ‘உயிர் பெற்ற தமிழர் பாட்டு’’
முதமாய்ப் பொழிந்து கொண்டிருக்கும் நிலவொளியில் அதன் இனிமையும் குளுமையும் கூட உணர்வில் பதிவாகாத ஒரு மோன நிலையில் தன்னை மறந்த ஒரு மௌனத் தவத்தில் ஆழ்ந்தவனாய் அரண்மனை மேல் மாடத்தில் நின்றுகொண்டிருக்கிறான் இராமன்.எதிரே வெள்ளி ஓடையாகச் சலசலத்து ஓடும் சரயு ஆறு அவனுள் பல எண்ணக்குமிழிகளை அடுக்கடுக்காகக் கிளர்த்தியபடி வேதனைப்பள்ளத்தாக்குகளின் விளிம்புகளுக்கே அவனை இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.

இருபதுக்கு20 உலகக் கிண்ண போட்டி

இலங்கையை வீழ்த்தி முதல்முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது மேற்கிந்திய அணி
By M.D.Lucias
2012-10-07
இருபதுக்கு20 உலகக் கிண்ண போட்டியில் இலங்கையை வீழ்த்தி முதல் முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது மேற்கிந்திய அணி.
இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் புதிய சம்பியன் பட்டத்திற்கான இறுதி போட்டியில் இலங்கை-மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று பலபரீட்சை நடத்தின.

பயிற்சி ஆட்டம் மற்றும் சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் இவ்விரு அணிகள் ஏற்கனவே சந்தித்திருந்தன. ஆனால் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய அணியை வீழ்த்தி இருந்தது. அது மாத்திரம் இன்றி, இருபதுக்கு20 போட்டி
வரலாற்றில் மேற்கிந்திய தீவுகள் அணி இதுவரை இலங்கையை வெற்றி கொண்டதே இல்லை. இலங்கை அணியுடன் மோதியுள்ள 4 ஆட்டங்களிலும் மேற்கிந்திய அணிக்கு தோல்வியே பரிசாக கிடைத்திருந்தது. ஆனால் அந்த வரலாற்றை மேற்கிந்திய அணியினர் இன்று மாற்றியமைத்து விட்டனர்.
12 அணிகள் பங்கேற்ற இந்த உலக கிண்ணத் தொடரில் நடப்பு சம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சம்பியன் இந்தியா ஆகிய அணிகள் சூப்பர்-8 சுற்றுடனும், மற்றுமொரு முன்னாள் சம்பியன் பாகிஸ்தான் அரையிறுதியுடனும் வெளியேற்றப்பட்டன. இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

தமிழ் சினிமா

தாண்டவம் 

பார்வையில்லாமல் தானே ஒரு ஒலியை எழுப்பி அதை செவி மூலம் கேட்டு செவிகளை கண்ணாக பயன்படுத்தும் திறன் உடையவர் விக்ரம்.
சாலையோரம் நின்றிருக்கும் இவரை டாக்சி டிரைவரான சந்தானம் காரில் ஏற்றிச் செல்கிறார். ஒரு இடத்தில் இறக்கிவிட்டு அவருக்காக சந்தானம் காத்திருக்கிறார்.
காரில் இருந்து இறங்கி சென்ற விக்ரம் ஒருவரை கொலை செய்து விட்டு மாயமாகிறார். இந்த கொலையை லண்டன் பொலிஸ் அதிகாரியான நாசர் விசாரணை செய்கிறார்.
முதலில் அங்கு நின்றிருந்த காரை வைத்து சந்தானத்தை பிடித்து விசாரிக்கின்றனர். விசாரணையில் இவர் அப்பாவி என்பதை உணர்ந்து நாசர் விட்டுவிடுகிறார்.
லண்டன் அழகியாக தெரிவாகும் எமி ஜாக்சன் உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என ஒரு தனியார் நிறுவனம் கேட்டுக் கொள்கிறது.
இதற்காக போலியாக சமூக சேவையில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு ஒரு முதியோர் இல்லத்தில் புகைப்படம் எடுக்கும் பொழுது விக்ரமை சந்திக்கிறார் எமி.
இந்த சந்திப்பினால் விக்ரம் மீது அனுதாபம் ஏற்படுகிறது. அது காதலாக மாறுகிறது. இதனால் விக்ரமை பின் தொடர ஆரம்பிக்கிறார் எமி ஜாக்சன்.
இதற்கிடையே மீண்டும் அடுத்தடுத்து இரண்டு கொலைகளை செய்கிறார் விக்ரம். இதில் ஒரு கொலைக்கு மீண்டும் சந்தானம் காரிலேயே செல்கிறார்.
விக்ரமை இறக்கி விட்டுவிட்டு காரிலேயே காத்திருக்கும் சந்தானத்தை பொலிசார் மீண்டும் விசாரணைக்கு அழைத்துக் செல்கிறார்கள். விசாரணையில் சந்தானம் பேப்பரில் வந்த விக்ரம் புகைப்படத்தை காண்பித்து, இவன்தான் காரில் வந்தான் என பொலிசாரிடம் தெரிவிக்கிறார்.
ஒரு கட்டத்தில் எமி ஜாக்சனுக்கும் விக்ரம்தான் கொலைகாரன் என்பது தெரிய வருகிறது. பொலிஸ் விக்ரமை துரத்துகிறது. ஆனால் லட்சுமி ராய் பொலிசாரிடம் இருந்து விக்ரமை தப்பிக்க வைக்கிறார்.
விக்ரமை பொலிசில் பிடித்துக்கொடுக்க முயற்சிக்கும் எமி ஜாக்சன் மற்றும் சந்தானத்திடம் விக்ரமின் பிளாஷ் பேக்கை சொல்கிறார் லட்சுமி ராய்.
இந்திய அரசின் உளவுப்பிரிவில் விக்ரம் மற்றும் ஜெகபதி பாபு இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
விக்ரமுக்கு ஒரு கூரியர் வருகிறது. அது அவருடைய திருமண அழைப்பிதழ். ஊருக்குச் செல்லும் இவர் திருமணத்தை நிறுத்த முயற்சிக்கிறார்.
அங்கு திருமண பெண்ணான அனுஷ்காவை கண்டதும் மனம்மாறி திருமணம் செய்து கொள்கிறார்.
திருமணம் முடித்து வருவதற்குள் இந்தியாவில் ஒரு மோசமான வெடிகுண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்ற செய்தி உளவுத்துறைக்கு தெரிய வருகிறது. இந்த வழக்கை ஜெகபதி பாபுவிடம் ஒப்படைக்கப்படுகிறது. இவர் பணத்துக்கு ஆசைப்பட்டு தேச விரோத செயலுக்கு உடந்தையாகிறார்.
தன்னுடைய அலுவலகத்தில் இதற்கு யாரோ உடந்தையாக இருப்பதை அறிந்த விக்ரம், அமைச்சரிடம் பேசி இந்த வழக்கை தன் வசம் எடுத்துக் கொள்கிறார்.
இதற்காக லண்டன் செல்லும் விக்ரம், அங்கு தீவிரவாதியாக முத்திரை குத்தப்படுகிறார். அப்பொழுது இதற்கு காரணமான சதிகார கும்பலை பார்த்து விடுகிறார்.
இதற்கு உடந்தையாக இருப்பது ஜெகபதி பாபு என்பதையும் தெரிந்து கொள்கிறார். உடனே ஜெகபதி பாபுவை சரணடைய சொல்கிறார் விக்ரம்.
ஆனால் ஜெகபதி பாபு, உன் மனைவி உன்னைப் பார்க்க நாளை காலை லண்டனில் உள்ள பாலம் அருகே வருவார் என்று சொல்லி போனை துண்டித்து விடுகிறார்.
மறுநாள் விக்ரம் அனுஷ்கா இருவரும் சந்திக்கிறார்கள். அப்போது பாம் வெடித்து அனுஷ்கா இறந்து விடுகிறார், விக்ரமுக்கு கண் போய் விடுகிறது.
இத்தனைக்கும் காரணமான ஜெகதிபாபுவை பழி தீர்த்தாரா? தான் நிரபராதி என்பதை நிரூபித்தாரா? எமி, விக்ரம் மீது கொண்ட காதல் என்ன ஆனது? என்பதே மீதி கதை.
விக்ரம் காசி படத்தையடுத்து பார்வையற்றவராக நடித்த இரண்டாவது படம். காசியில் கிராமத்து வேடத்தில் நடித்தார்.
இதில் ஹை-டெக் பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எமி ஜாக்சன் இளமைத் துள்ளலோடு வந்து துள்ளாமல் நடித்திருக்கிறார்.
அனுஷ்கா வரும் காட்சிகள் அனைத்தும் அருமை. விக்ரம்- அனுஷ்கா இருவரும் சந்திக்கும் காட்சிகளும், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு காதலை சொல்ல முயற்சிக்கும் காட்சிகள் அழகு.
சந்தானம் வரும் காட்சிகள் அனைத்தும் கலகலப்பூட்டுவதாக உள்ளது. பொலிஸ் அதிகாரியாக வரும் நாசர் ஐ-பேடு பயன்படுத்துவதின் முக்கியத்துவத்தை அழகாக காண்பித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் ரகம். லண்டனை அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா.
இயக்குனர் விஜய், தாண்டவத்தை எதிர்பார்த்த அளவுக்கு தராதது விக்ரம் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம்.
நடிகர்: விக்ரம், நாசர், சந்தானம், ஜகபதி பாபு, கோட்டா ஸ்ரீனிவாச ராவ்.
நடிகை: அனுஷ்கா, எமி ஜாக்சன், லட்சுமி ராய், சரண்யா.
இயக்குனர்: விஜய்.
இசை: ஜி.வி. பிரகாஷ்.
ஒளிப்பதிவு: நிரவ் ஷா.

நன்றி விடுப்பு