கொரோனா மீது முதியோருக்கு கூடுதல் எச்சரிக்கை அவசியம்!




கொரோனா பேரழிவில் இருந்து உலகம் முற்றாக மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என்பதே சர்வதேச நிபுணர்களின் கருத்தாக உள்ளது. பழைய நிலைக்கு திரும்புவதை விட கொரோனாவில் இருந்து தப்பிக் கொள்வதே பெரும் சவாலாக உள்ளது.
கொரோனா அனைத்து வயதினரையும் தாக்குகிறது என்றாலும் வயதானவர்கள்தான் இதனால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். இதுவரை கொரோனாவால் உலகம் முழுவதும் இறந்தவர்களில் 60 சதவீதத்தினருக்கும் மேலானவர்கள் 50 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட சிறுநீரக நோய், நாட்பட்ட நுரையீரல் நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கொரோனா தாக்கினால் அவர்களை குணப்படுத்துவதற்கு வைத்தியர்கள் போராட வேண்டியுள்ளது.
வயதானவர்கள் கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படுவதற்கு முதல் காரணம் அவர்களின் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம்தான். அவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத இந்தக் காலங்களில் அவர்களின் அன்றாட உடல் இயக்கங்கள் முற்றிலும் தடைப்பட்டுள்ளன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு பல்வேறு விதமான உடல் பிரச்சினைகளும், வலிகளும் ஏற்படலாம். அதேசமயம் சமூகத்தில் இருந்து விலகியிருப்பது அவர்கள் மனநிலையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
இந்த கடினமான காலத்தில் அனைவரும் குறிப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்கும் முதியவர்கள் வழக்கமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது மிகவும் முக்கியமானதாகிறது. வயதானவர்களுக்கு ஆரோக்கியமான இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் வயது தொடர்பான பிரச்சினைகளை சமாளிப்பதற்கு இது அவசியமாகும்.
பெரும்பாலான வயதானவர்கள் உடற்பயிற்சி செய்யும் போது வீழ்ந்து விடுவதால் உண்டாகும் காயங்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள், இதனால் உடல் செயல்பாடுகளிலிருந்து விலகி இருக்கிறார்கள்.

கொரோனா தொற்று எதிரொலி வெளிநாட்டுப் பயணம் சாத்தியமா? சுற்றுலா வணிகம் எப்போது சீரடையும்? - பி.ஆர்.ஜெயராஜன்


 (இக்கட்டுரையை எழுதியுள்ள திரு பி.ஆர்.ஜெயராஜன் ஓர் வழக்குரைஞர் மட்டுமல்ல. ஏராளமான சட்ட நூல்களை தமிழில் எழுதி, தமிழக அரசு விருது பெற்ற சட்டக் கல்வியாளரும் ஆவர்.  மேலும் புதுச்சேரி பல்கலைக்கழக வணிக மேலாண்மை புலத்தில் சுற்றுலாவியல் துறையில் பட்டமும் பெற்றவர்.)

            கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று நாம் வீட்டில் அடங்கி அமர்ந்துள்ளோம். இதனால் அரசு உட்பட அனைவரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றோம்.
கொரோனாவும் உலக போக்குவரத்தும் :
            எளிதில் தொற்றிப் பரவி மரணத்தையும் விளைவிக்கக்கூடிய அபாயத்தைத் தரும் "கோவிட் 19" எனப்படும் இந்த புதிய கொரோனா வைரஸ் கிருமியை முறியடிக்க நம்மிடம் தற்போதிருக்கும் மருந்துகள் யாவும் (1) விலகியிரு (2) விழிப்புடன் இரு (3) வீட்டிலேயே இரு என்பதேயாகும்.
            இவ்வாறு இருந்தாலே இந்த தொற்றிப்பரவலை கண்டிப்பாக தடுத்துவிட முடியும். தொற்றிப்பரவுவதை கட்டுக்குள் கொண்டுவந்து விட்டால், கொரோனா வைரஸ் இருப்பவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களை சிகிச்சையளிப்பதும் எளிமையாகும். 
            தற்போது வீட்டிலேயே அடங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த முடக்க வாழ்வு எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும், சமூகத்துடன் வழக்கமாக பழகி வாழும் வாழ்க்கைக்கு நாம் எப்போது செல்ல முடியும் என்ற இந்த வினாக்களுக்கு எல்லாம் இனி வரும் நமது வாழ்க்கை முறையும், வருங்காலமும்தான் படிப்படியாக பதில் சொல்லக்கூடியதாக அமையும்.
            குறிப்பாக போக்குவரத்து மற்றும் மக்கள் கூட்டமாக கூடுவது என்ற இரண்டையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பது அரசின் ஆய்வுக்குரிய மிகப் பெரும் விடயங்களாகும்.


எழுத்தாளர் ராஜ ஶ்ரீகாந்தன் படைப்புகளினூடே கொணரும் நினைவுப் பகிர்வு



ஈழத்து எழுத்தாளர் அமரர் ராஜ ஶ்ரீகாந்தனின் நினைவு தினம் ஏப்ரல் 20 ஆம் திகதியாகும்.

தன்னுடைய 55 வருட வாழ்வியலில் ஈழத்து இலக்கியத்தில் மறக்கமுடியாத படைப்பாளுமையாகக் கொள்ளப்படுபவர்.

ராஜ ஶ்ரீகாந்தன் அவர்களது மொழி பெயர்ப்பு இலக்கியமான அழகு சுப்ரமணியம் படைத்த ஆங்கில இலக்கியத்தின் தமிழ் வடிவம்  “நீதிபதியின் மகன்” (சாஹித்திய மண்டலப் பரிசு பெற்றது), ஈழத்தின் ஒடுக்கப்பட்ட சனங்களின் குரலாகச் செயற்பாட்டு இயக்கத்தை நிறுவிய சூரன் அவர்களது வாழ்வியலின் பதிப்பாக்கம், மற்றும் இவரது சிறுகதைத் தொகுதியான “காலச் சாரளம்” ஆக்கியவை குறித்த குறு அறிமுகங்களோடு ஒரு காணொளிப் பகிர்வை ஆக்கியளிக்கின்றேன்.


அன்புடன் 
கானா பிரபா

இப்போதே நீபோனால் நிம்மதி அடைவார்களாம் -----------பாகம் 4 - பரமபுத்திரன்


உண்மையைக்  கொரொனா உரைத்திடல் வேண்டும்  
உருவாக்கம்  சீனா  உருப்படாது என்பர்  
அவனி முழுவதும் சரியாய் அடைந்தாய்
ஊருக்குள் திரிய தடையிலை எனினும்
பாருக்குள் சுற்ற  சீட்டுகள் கேட்பர்
கடவு  அனுமதி விமானம் என்றவர்  
துளைத்துத்  துளைத்துக்  கேள்விகள் தொடுப்பர்
பயணப் பெட்டிகள் பார்வைகள் செய்வர்  
விமானத்தில் பயணிக்க தடைகள் போடுவர்  
கப்பலில் போனால் கலைச்சுப் பிடிப்பர்
அகதியாய் உயிருடன் புறப்பட்டும்  கூட  
கடலில் பலபேர் இறந்தே போனார்
அதையும் தாண்டி வந்தவர் பலரோ
அகதி முகாம்களுள் அடைபடல்  ஆனார்
எப்படி இவற்றை கடந்துநீ  வந்தாய்
உள்ளுக்குள் ஆரும் உதவி செய்தவையோ
காசு கொடுத்துநீ  களவாய்  வந்தாயோ
கள்ளமாய் முகவர் கடத்தி வந்தனரோ
என்னமோ நீபெரும் கெட்டிக் காரன்
எல்லோர் கண்ணையும் ஏய்த்துக்  கடந்தாய்

மரத்தை வெட்டாதே மானுடத்தை மாய்க்காதே - வித்யாசாகர்!


தாய்ப்பால் வாசம் போலவே


மரத்தின் பச்சைவாசமும் புனிதம் மிக்கது
எனது அண்ணன் தம்பிகள்
அக்காத் தம்பிகள் போல அருகாமை

மரங்களும் உறவு மிக்கவை

மரங்களிடம் பேசுங்களேன்
மரங்களும் பேசும்

மரங்களின் மொழி மனதின் மொழியாகும்

மனதின் மொழி மறந்தோரே
மரங்களை வெட்டுகையில்

வீழ்வது மரங்கள் மட்டுமல்ல நாமும் தானே?

உங்களுக்கு தெரியுமா


மரங்கள் தான் நமக்கு முன்னோர்

மரம் தான் நமக்கு கூடு
மரம் தான் மேசை
மரம் தான் ஆடை

மரம் தான் பாடையும்;


சுவீட்சிக்ஸ்டி - கைராசி - சுந்தரதாஸ்

.


தனக்கு மருத்துவம் செய்யும் வைத்தியர்  நல்ல கைராசிக் காரராக   இருக்கவேண்டும் என்று எந்த நோயாளியும் விரும்புவார், அதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு டாக்டருக்கும் நேசுக்கும் இடையில் தோன்றும் காதலை வெளிப்படுத்திய படம் தான் 1960 இல் வெழிவந்த கைராசி.  

ஏவிஎம் நிறுவனத்தில் நீண்டகாலமாக தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய வாசு மேனன் தனது வாசு பிலிம்ஸ் நிறுவனத்தை தொடங்கி உருவாக்கிய கைராசியில் ஜெமினி,  சரோஜா தேவி , எம்ஆர் ராதா,  எஸ் வி சகஸ்ரநாமம்,  தங்கவேலு ராஜம்மா ஆகியோர் நடித்திருந்தனர்.  

ஊரில் பல திருட்டுக்களை செய்துவரும் குமாரை பிடிக்க ஹெட் கான்ஸ்டபிள் சுந்தரம் தீவிரம் காட்டுகிறார், ஆனால் அவர் மீது வீண்பழி சுமத்தி பதவியை இழக்க வைப்பதுடன்  சிறைக்கு அனுப்புகிறார் குமார்.  சுந்தரத்தின் மனைவி தன் குழந்தை மோகனுடன் நிர்க்கதியாகி,  மோகனை செல்வந்தர் ஒருவருக்கு சுவீகாரம் கொடுக்கிறார்.  போலீசுக்கு பயந்து வெளிநாட்டுக்கு ஓடும் குமாரின் தாயில்லா மகளான சுமதியை வளர்க்கும் பொறுப்பு சுந்தரத்தின் மனைவியை சேர்கிறது. 


மழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 32 - முருகபூபதி


ஞ்சுளாவும் சுபாஷினியும் வீட்டுக்குள் வரும்போது, சமையலறையிலிருந்து எழுந்த நண்டுக்குழம்பின் வாசனையை நுகர்ந்தவாறு  “ பிரமாதம் அபிதா  “ என்று ஏககாலத்தில் சொன்னார்கள்.
இரண்டு வேறு வேறு குணாதிசயம் கொண்டிருப்பவர்களிடமிருந்து ஒரே வார்த்தை ஏககாலத்தில் பிறக்கும் அதிசயத்தை அபிதா ரசித்தாள்.
 “ இரண்டுபேரும் நண்டுக்குழம்பை ருசிக்க வராமல், நேரேபோய் குளித்துவிட்டு வாங்க… ஏன் இவ்வளவு நேரம். நானும் அய்யாவும் வெளியே போனோம் கெதியா வந்திட்டம்.  நீங்கள் இரண்டுபேரும் கடைத்தெருவில் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தீங்களா..? இன்னும் ஐந்து நிமிடத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு வந்துவிடும்.  தப்பினீர்கள்.  இல்லையேல்  நிகும்பலையூர் பொலிஸ் உங்களையும் கொண்டுபோயிருக்கும்.  பேப்பர் பார்ப்பதில்லையா, ரெலிவிஷனில் சொல்வதை கேட்பதில்லையா..?  ஊரடங்கில் நடமாடி பிடிபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுது தெரியுமா..?  அபிதா தொடர்ந்து பேசினாள்.
 “ பிடிபட்டாலும் உங்கட பெயரை அந்த இன்ஸ்பெக்டரிடம் சொன்னால் விட்டுவிடுவான் “   என்றாள் மஞ்சுளா.
“  விட்டுவிடுவான் என்று சொல்லாதடீ… விட்டுவிடுவார் என்று மரியாதையகச் சொல்லு மஞ்சு.  “  என்று கண்சிமிட்டியவாறு சொன்னாள் சுபாஷினி.
அதனைக்கேட்டுக்கொண்டு முகநூலில் மூழ்கியிருந்த ஜீவிகாவும் உரத்துச்சிரித்தாள்.  வெளியே விறாந்தாவிலிருந்து பத்திரிகை படித்துக்கொண்டிருந்த சண்முகநாதனும் அந்த சிரிப்பின் பின்னணியை அறிந்து கொள்வதற்காக எழுந்து வந்தார்.
அவருக்கு அபிதா, அந்த வீட்டுக்கு வந்த முதல்நாளை நினைவுபடுத்திய ஜீவிகா,  தொடர்ந்து சிரித்தாள். 

எல்லோரின் வாழ்வினிலும் இதுதானே நியதி ! கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


             பல்லில்லா வாய் பஞ்சடைந்த கண்கள் 
                 மெல்லவே முடியாமல் உள்வாங்கும் உணர்வு 
            சொல்ல நினைத்தாலும் சொல்வரா வறுமை
                  எல்லோரின் வாழ்வினிலும் இதுதானே நியதி  ! 

            பிறந்த குழந்தையாய் ஆகிவிடும் நிலைமை
                  பேச்சொலியைக் காது கேட்காத கொடுமை 
            காலிருந்தும் நடக்கத் துணைதேடும் நிலைமை
                  யாவருக்கும் வாழ்வில் வருந்தானே ஒருநாள்  ! 

             அழகான முடிகள் உதிர்ந்துகொண்டே போகும் 
                   கருங்கூந்தல் அனைத்தும் வெண்மேகம் ஆகும் 
             முத்தான பற்கள் அத்தனையும் மறையும் 
                     இத்தனையும் எல்லோர் வாழ்வினிலும் நடக்கும்  ! 

              அன்புபாசம் என்றும் அமர்ந்திருக்கும் மனத்தில்
                    அதற்குமட்டும் தளர்வு வருவதில்லை வாழ்வில்
              தளர்வுவர முன்னர் கொடுத்துவிட  நினையார் 
                   தம்வாழ்வின் முடிவில் உணர்ந்திடுவார் உண்மை  ! 

              இளமையெனும் காலம் கிடைக்கின்ற  தருணம் 
                     உளமகிழச் செய்ய உதவிடுதல்  நன்றே 
              பொருளெண்ணி வாழ்வில் பொறுப்பின்றி நடந்தால்
                     சருகான பிறகு சிதறுண்டு போவோம்  ! 

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் - - அங்கம் 09 அதிபர் அருளானந்தம் தந்த இன்ப அதிர்ச்சி!


டுநிலைப்பள்ளியிற் படிக்கும்போது,  ஆங்கிலம் – தமிழ் – சிங்களம் – லத்தீன் ஆகிய மொழிகளைப் பயில்வதற்கு எனக்கு வாய்ப்பிருந்தது. எல்லாப் பள்ளிகளிலும் அன்று அவ்வாய்ப்பு இருக்கவில்லை.
#   பிரபல ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளைப் படித்தும் மனனஞ்செய்தும் வகுப்பில் ஓதியும் அனுபவம் பெறச்சந்தர்ப்பம் இருந்தது. அதேவேளை, நளவெண்பா, நன்னெறி, இன்னா நாற்பது, இனியவை  நாற்பது, திருக்குறள், போன்ற தமிழ்ச் செய்யுள்களையும் கற்று ஓதுதற்கு வசதி  இருந்தது.
 சிரேஷ்ட வகுப்புகளில், அறிவியற் பாடங்களுடனும் கணித பிரயோக கணித பாடங்களுடனும் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடங்களையும் பயில்வதற்கு பாடத்திட்டம் வாய்ப்பளித்தது. கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற தமிழ் இலக்கியங்களையும், ஷேக்ஸ்பியர், சார்ள்ஸ் டிக்கன்ஸ், ரெனிசன் போன்ற ஆங்கில  இலக்கிய கர்த்தாக்களின் படைப்புகளையும் இளமைப்பருவத்தில் ஏககாலத்தில் கற்பதற்கு அன்றைய பாடவிதானம் இடமளித்தது. அதனால், அன்று நாம் பெற்ற  கற்றல் அனுபவம் மிகப்பரந்து விரிந்திருந்தது.

அம்மாப் பேச்சு (வித்யாசாகர்) கவிதை !


சொல்லிலடங்கா சுகமெனக்கு
எப்போதுமே அவள்தான்,
அவளுக்கு மட்டும் தான்
அது நானாக மட்டுமே இருக்கிறேன், அவளுக்கு
எப்போதுமே நான் அதீதம் தான்;

சொல்லைக்கடந்த சுகம் எனக்கு
அவளைவிட வேறென்ன? அவளுக்கான
சொற்கள் மட்டுந் தான் என் மூச்சு
அவளுடைய ஒற்றைப் பெயரை யாசித்து தான்
எனக்கான மீதநாட்களே நீள்கின்றன
அவள் சொல்லிலும் இனிய சொல்லாள்
இதயத்திலும் ஆழம் உள்ளாள்;

அவளைப்போல்
எவர்க்கும் வேறு தெய்வம் பெரிதில்லை
அவளின் சிரிப்பிற்கு ஈடாக
எங்களுக்கு ஒரு மருந்தேயில்லை
ஆயிரம் சொர்கத்தின்
ஒற்றைக் கூடாரம் அவள்;
அவளைத் தாண்டி என்னிடம்
பேச மொழியில்லை
பாட தமிழில்லை
எனக்கு உயிருள் நிறைந்த ஒற்றை உயர்ச்சொல்
அவள் தான்; அது அம்மா,

அம்மாவின் நாட்கள்
அவள் கட்டும் புடவையைப் போன்றே
அழகானவை;
அவளுக்கென்ன அத்தனை அழகு
கம்பீரம்
நடமாடும் நதி போலவள்;

1869 Poem - By Kathleen O’Mara:

.

Poem written in 1869, reprinted during 1919 Pandemic.



And people stayed at home
And read books
And listened
And they rested
And did exercises
And made art and played
And learned new ways of being
And stopped and listened
More deeply
Someone meditated, someone prayed
Someone met their shadow
And people began to think differently
And people healed.
And in the absence of people who
Lived in ignorant ways
Dangerous, meaningless and heartless,
The earth also began to heal
And when the danger ended and
People found themselves
They grieved for the dead
And made new choices
And dreamed of new visions
And created new ways of living
And completely healed the earth
Just as they were healed.

Reprinted during Spanish flu Pandemic, 1919
.
Photo taken during Spanish flu
.

இலக்கியத்திற்கு அப்பால் மல்லிகை ஜீவா நேசித்த பறவை - முருகபூபதி


யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியில் (இன்றைய கனகரத்தினம் கல்லூரி) நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த (1962 )காலத்தில் எங்கள் ஆண்கள் விடுதியின் சார்பாக ஒரு நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்டிருந்த டொமினிக் ஜீவாவை வெள்ளை நேஷனல், வெள்ளை வேட்டியுடன்தான் முதல் முதலில் பார்த்தேன். இந்த ஆடைகள் அவருடைய தனித்துவமான அடையாளமாகவே இன்றுவரையில் இருந்துவருகிறது.
அப்பொழுது அவர் எழுத்தாளராக இருந்தார். ஏறக்குறைய பத்து ஆண்டுகளின் பின்னர் அவரை 1971 இல் நீர்கொழும்பில் எதிர்பாராதவிதமாக சந்தித்தபொழுது,  அவர் மல்லிகை இதழின் ஆசிரியராகவே எனக்கு அறிமுகமாகி,  அன்று முதல் எனது பாசத்துக்குரிய நேசராகவும் குடும்ப நண்பராகவும் திகழ்கின்றார்.
என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியது மல்லிகை ஜீவாதான் என்பதை தொடர்ச்சியாக பதிவுசெய்துவருகின்றேன். அவர் பற்றிய விரிவான மல்லிகை ஜீவா நினைவுகள்   நூலையும்                                                      2001 இல் எழுதியிருக்கின்றேன். அதற்கு முன்பும் பின்னரும் அவர் பற்றிய பல கட்டுரைகளை பத்திரிகைகள், இலக்கியச்சிற்றேடுகள், இணைய இதழ்களிலெல்லாம் எழுதியுள்ளேன். அவை இலங்கை, தமிழகம், கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா முதலான நாடுகளிலிருந்து வெளியான ஊடகங்களில் பதிவுபெற்றுள்ளன.

படித்தோம் சொல்கின்றோம்: தாமரைச்செல்வியின் உயிர்வாசம் ( நாவல்) அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையிலிருந்து படகில் வந்த மக்களின் வாழ்வியல் கோலம் ! - முருகபூபதி


தற்காலத்தில் கொரோனா என்ற நாமத்தை  முழு  உலகமும் சுமந்துகொண்டிருக்கிறது! அதே சமயம்    அகதி என்ற நாமத்தை சுமந்துகொண்டிருப்பவர்கள் உலகெங்கும்   நெடுங்காலமாக வாழ்ந்துவருகின்றனர்.
இரண்டு நாமங்களும் மறையவேண்டும். எனினும், உலக அரங்கில் மறக்கமுடியாத, மறைக்கமுடியாத தடங்களாகவே  அவை இரண்டும் நிலைகொண்டிருக்கும்.
பசுமைநிறைந்த வயல் வெளிகளையும், போர்க்காலத்தில் காடுறைந்த மக்களையும், கொல்லப்பட்ட உறவுகளைப்பார்த்து  அழுவதற்கும் நேரம் இல்லாமல், இடம்பெயர்ந்து ஓடியவர்களையும், வன்னிபெருநிலப்பரப்பில் வாழ்ந்த ஆச்சிமாரையும் ,  அவர்களின் வாழ்வுக்கோலங்களையும் பற்றி இதுவரையில் எழுதிவந்திருக்கும் தாமரைச்செல்வி, அவுஸ்திரேலியாவுக்கு கனவுகளை சுமந்துகொண்டு  படகுகளில்  வந்து வலிகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும்  ஈழத்தமிழர்களின் கதையை எழுதியிருக்கிறார்.
அவருடைய  உயிர்வாசம் என்ற புதிய நாவல், ஏறக்குறைய  ஐநூறு பக்கங்களுக்கும் மேல்  விரிகிறது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்தவர்களின் ஆசைகள் நிராசையாகிவிடலாகாது என்ற அவதிதான்  இந்நாவலின் பக்கங்களில் இழையோடியிருக்கும்  நாம் நுகரும் வாசம்!
காந்தன், மதி, செந்தில், செழியன், சுதா, இளங்கோ, தேவகி, தவம், உருத்திரன், கார்த்தி, செல்வி, செபமாலை, பார்த்தி, நிரஞ்சன், பரஞ்சோதி, குழந்தைகள் துஷி, சாரா உட்பட பலரதும் அகதிவாழ்வுக்கதைகளின் ஊடே நகர்ந்து விரியும் நாவல். அவர்களின் கதைகள் 500 பக்கங்களில் எழுதித்தீராதவை!

ஈழத்து நாவல் இலக்கிய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு ஆக்கம் : ஞா.டிலோசினி ( கிழக்குப்பல்கலைக்கழகம் )


Fiction என ஆங்கிலத்தில் வழங்கப்படும் பதம் தமிழில் புனைகதை எனப்படுகிறது. புனைகதை என்ற புதிய இலக்கிய வடிவம் நாவல் (Novel) , சிறுகதை ( Short story ) ஆகிய இரண்டையும் குறிக்கின்றது. புனைகதைகள் மேற்குலகில் இருந்து தமிழுக்கு  அறிமுகமாகின.
நிலமானிய முறையின் வீழ்ச்சி, கைத்தொழில், பொருளாதாரத்தின் எழுச்சி, விடுதலைப் போராட்டங்கள், சுதந்திர உணர்வு, கல்வி மேம்பாடு காரணமாக புதிய இலக்கிய வடிவமான புனைகதைகள் தோன்றலாயின.
புனைகதை வடிவங்களாகிய நாவல், சிறுகதை இரண்டும் காவிய உரைநடைப் பண்பில் இருந்து அமைப்பிலும், பொருளிலும் மாறுபட்ட இலக்கிய வடிவங்களாக விளங்குகின்றன.
19 ஆம் நூற்றாண்டிலேயே தமிழில் புனைகதை இலக்கியம் தோன்றியது. இதற்கு முன்னர் கதை கூறும் மரபு தமிழில் இருந்துள்ளது. ஐரோப்பியர் தமது சமயத்தைக் கீழைத்தேச நாடுகளில் தமிழர்களிடையே பரப்புவதற்கு தமிழைக் கற்றனர். இங்கிருந்த படித்த மத்தியதர வர்க்கத்தினர் மேல்நாட்டு புதிய இலக்கியங்களைக் கற்றனர். இவர்களால் தமிழுக்குக் கொண்டுவரப்பட்ட புதிய இலக்கிய வடிவமாக இப்புனைகதைகள் விளங்குகின்றன. வேறு மொழிகளில்  இருந்த புனைகதைகளையும் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளனர்.

இலங்கைச் செய்திகள்


பொலிஸாரின் கடமைக்கு இடையூறு; ரஞ்சன் ராமநாயக்க கைது

காரைதீவில் அம்பியூலன்சில் மருந்து விநியோகம்

ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது

யாழ். மாவட்டத்தில் 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

புத்தளத்தில் மினி சூறாவளி; 245 வீடுகள் சேதம்

கொரோனா இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் ஏப்ரல் 20 வரை ஊரடங்கு

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது; சட்டத்தரணிகள் சங்கம் IGP இற்கு கடிதம்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு; ஏனைய பகுதிகளில் மு.ப. 5 - பி.ப. 8 வரை தினமும் தளர்வு



பொலிஸாரின் கடமைக்கு இடையூறு; ரஞ்சன் ராமநாயக்க கைது








பொலிஸாரின் கடமைக்கு இடையூறு; ரஞ்சன் ராமநாயக்க கைது-Ranjan Ramanayake Arrested for Obstucting Duties of Police Officers

உலகச் செய்திகள்


கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஸ்பெயின்

இந்தியாவில் மே 03 வரை ஊரடங்கு நீடிப்பு

"நிதி வழங்கப்படாது" : "இது தருணம் அல்ல"

ஏழை நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களை இரத்துச் செய்யுங்கள்

கொரோனாவுக்கு மத்தியில் தென் கொரிய தேர்தல்; ஆளும் கட்சி வெற்றி

கொரோனா தடுப்பு ஊசி கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகலாம் 



கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஸ்பெயின்




நாட்டுப்பற்றாளர் நாளை முன்னிட்டு தமிழ்த்திறன் போட்டிகள்


தாயகவிடுதலைக்காக உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் 32வது நினைவு நாளையும், தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவு நாளையும் ஒன்றுகூடி நினைவுகொள்வதற்கான காலச்சூழல் இல்லாத நிலையில், அனைவரும் தனித்திருந்து, தேசவிடுதலைக்காக தம்வாழ்வை அர்ப்பணித்த நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் உள்ளங்களில் நினைவில் இருத்தி நினைவுகூருமாறு அனைவரையும் அன்புடன் வேண்டுகின்றோம்.

கொறானா வைரஸ் என்ற தொற்றுநோய் காரணமாக உலகமே மிகவும் நெருக்கடியான நிலையில்  இருக்கின்றது. எனினும் போராட்டமே வாழ்வாகவும் வாழ்வே போராட்டமாகவும்  கடந்துவந்த எமது மக்களின் இந்த துயரநிலையும் கடந்துசெல்லும் என நம்பிக்கையோடு செயற்படுவோம்.

இந்தவேளையில் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளை முன்னிட்டு, வீடுகளில் தனிமைப்பட்டு இருக்கும் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் இளையோரிடையே தமிழ்த்திறன் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.

தமிழ்த்திறன் போட்டி

1. கருப்பொருள்
                i.      அவுஸ்திரேலியாவின் வரலாறு
               ii.      அவுஸ்திரேலியாவில் தமிழர்களின் பங்களிப்புகள்
             iii.      தாயக மக்களுக்கான எமது பங்களிப்புகள்
              iv.      தமிழர் வரலாறு
               v.      எனது எதிர்காலம்