வல்லமையின் குரல் நலிந்தால் வளவுக்குயில் பாடாது. -வல்வை சகாறா

.

எழுச்சி கொள்க கவிஞர்களே!
தாயகமூச்சு எமக்கில்லையா?
ஆயிரம் தடைகளை ஆரும் போட்டாலென்ன?
உன்னிப் பெருமூச்செடுத்து உறவணைக்க எழுந்திடுக.

நோயுண்ணும் உடல் நலித்தும்,
பேயுண்ணும் உணர்வொழித்தும்,
தாய் நிலத்தின் வேதனையை - எம்
தோள் தாங்காதிருக்கும் பாழ்வாழ்வு எங்களது என
வரலாற்று பதிவேட்டில் பதிவிக்கப் போகிறோமா?
கூடாது... கூடவே கூடாது.

முற்றத்து மணற்பரப்பில்
முழுமதியின் எழிலொளியில்,
சுற்றம் சூழப் புற்பாய் போட்டமர்ந்து பேசி,
அடிவளவு மூலையிலே படர்ந்த
முல்லைச் சொதி மணக்கும்
கவளச் சோறெண்ணி,
ஏக்கங்களை மட்டுமே எமதாக்கி,
பனிநிலங்களில் உயிர் தொய்ய வாழ்கிறோமே....
விட்டுவிடுவோமா?

தாய்நிலத்தில் ஏறி நின்று அந்நியன் கூத்தாட
வாயொடுக்கி, மெய் நடுக்கி விதியென்று கிடந்திடவோ?....
புலம்பெயர்ந்து கிடந்தாலும் புலன் மாறக்கூடாது.

அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற தேசிய தமிழின அழிப்பு நினைவுநாள் நிகழ்வுகள்


"வன்னிப் பேரவலத்தின் நினைவுகளை " மே மாதம் 18ம் திகதி புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் கடந்த 2009ம் ஆண்டு மேமாதத்தில் நிகழ்ந்த பேரழிவை நினைவுகூரும் 4ம் ஆண்டு நிகழ்வுகள் நடைபெற்றன. அந்தவகையில் இந்நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை (18–05-2012) அவுஸ்திரேலிய மெல்பேண் நகரில் அவுஸ்திரேலியாவின் தமிழர் அமைப்புக்கள் சார்பில் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவால் ஓழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மரணித்துப்போன எம்முறவுகளை நெஞ்சில் நிறுத்தி குரலடங்கிப்போயுள்ள தாயக மக்களின் குரலாக, பல நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் கடும் குளிர் மழையிலும் பெருமளவில் திரண்டு வந்து, இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.


கிராமத்திலிருந்து நகரத்துக்குப்பெயர்ந்த தமிழச்சி -முருகபூபதி –

.
கிராமத்திலிருந்து நகரத்துக்குப்பெயர்ந்த வனப்பேச்சி தமிழச்சி தமிழகப்படைப்பாளிகளுக்கு இலங்கை இதழ்கள் வழங்கும் களம் முன்னுதாரணமானது.  முருகபூபதி – அவுஸ்திரேலியா



கடந்த எட்டு ஆண்டுகளுக்குள் (2005 -2013) நான் மூன்றுதடவைகள் சந்தித்த தமிழச்சியின் ஆற்றலும் ஆளுமையும் தோழமையும் அவரின் வளர்ச்சியினூடே எனக்குத்தென்பட்டவை. கட்டிடக்காட்டினுள் வாழத்தலைப்பட்டபோதிலும் உள்ளார்ந்தமாக  நேசித்த கரிசல்காட்டின் நினைவுகளுடன் அந்த மண்ணின் மக்களை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் அவர்  தற்கால தமிழக  இலக்கிய சூழலில்  நிரம்பவும் பேசப்படுபவர். 


2005 இல் சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக அவுஸ்திரேலியாவுக்கு தனது முனைவர் பட்ட ஆய்விற்காக வந்தபோது முதல் முதலில் சந்தித்தேன்.
2009 இல்  தி.மு.க.வின் இளைஞர் அணி மாநாட்டை திருநெல்வேலியில் கொடியேற்றி தொடக்கிவைத்த அவரது அரசியல் பிரவேசத்தைக்கண்டேன்
2013 இல் கரிசல்காட்டின் வாசம் நிரம்பிய சில நூல்களின் படைப்பாளியாக பார்க்கின்றேன்.

மெல்பேணில் தொடங்கிவைக்கப்பட்ட தமிழர் இனவழிப்பு புகைப்படக் கண்காட்சி



அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் ஞாயிற்றுக்கிழமை (19-05-2013) அன்று தமிழர் இனவழிப்பை நினைவுபடுத்தும் புகைப்படக் கண்காட்சி தொடங்கிவைக்கப்பட்டது. மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கப்பட்ட இந்நிகழ்வு தமிழ் ஏதிலிகள் கழகத்தைச் (Tamil refugee Council) சேர்ந்த Ron Guy தலைமையில் இடம்பெற்றது.

இக்கண்காட்சியில், முள்ளிவாய்க்கால் பேரழிவின் இறுதிக்காலப்பகுதியில் எடுக்கப்பட்ட, இதுவரை வெளிவராத புகைப்படங்களும் போரின் பின்னான எமது மக்களின் அவல வாழ்வை வெளிப்படுத்தும் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்படங்கள் அனைத்தும் முள்ளிவாய்க்கால் காலப்பகுதி தொடக்கம் கடந்த ஆண்டின் இறுதிவரை தமிழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பின் சாட்சியமாக உள்ளன. இப்படங்களில் பெரும்பாலானவற்றைப் படம்பிடித்து பாதுகாப்பாக அந்த ஆவணங்களை அவுஸ்திரேலியா வரை கொண்டு வந்து சேர்ந்த்தவரும் நேரடியாக இக்கண்காட்சித் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டார்.

வைகாசி விசாகமும் முருகப் பெருமானும்



வைகாசி விசாகம் தேர்த் திருவிழா  25 - 05 - 2013 

Sri Bala Murukan-Perth 


வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் வரும் புனிதமான பௌர்ணமியை 'வைகாசி பூர்ணிமாஅல்லது'வைசாகி பூர்ணிமாஎன்று அழைக்கின்றனர்அந்தப் பௌர்ணமி அன்று மேலே விரிந்திருக்கும் ஆகாயம்பிரகாசமாக இருக்கும் ஆகாய வெளியில் வெள்ளியைப் போல மின்மினுக்கும்தன்னுடைய உடலை வெளிக்காட்டியபடி மெல்ல சந்திரன் வெளி வந்து ஆகாயத்தில் உள்ள வெள்ளை மேகங்கள் மீது மெல்லத் தவழும் பொழுதுஆகாயங்கள் அதற்கு வணக்கம் கூறி வரவேற்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகின்றதுஇது இயற்கையின்அற்புதங்களில் ஒன்றாகும்இப்படியாக நமக்குப் புரியாத வகையில் இதமான வெளிச்சத்தை வழங்கியபடி வெளிவரும் சந்திரனின் பௌர்ணமி தினம் புத்த மதத்தினருக்கும் இந்துக்களுக்கும் விஷேமான தினமாகும்.
'விசாகன்எனப்படும் முருகனின் பிறந்த நட்சத்திரமே 'விசாகம்என்பதினால் அது மிகவும் புனிதமான தினமாகக்கருதப்படுகின்றதுவிசாக நட்சத்திர தினத்தின் அன்று மூன்று நட்சத்திரங்கள் ஒன்று சேர்வதினால் ஆகாயம் ஒருநுழை வாயிலைப் போலத் தெரிகின்றது

3 பிள்ளைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய் தற்கொலைக்கு முயற்சி

.

Thanduíkulamமனநலம் பாதிப்படைந்ததாகக் கூறப்படும் தாயொருவரால் அவரது மூன்று பெண் பிள்ளைகளும் கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவமொன்று வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது குழந்தைகளை கிணற்றில் வீசிய மேற்படி தாய், பின்னர் தானும் கிணற்றில் குதித்துள்ள போதும் அவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாண்டிக்குளம் பாடசாலை வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து அழுகுரல் கேட்பதை அடுத்து அயலவர்கள் இன்று காலை ஓடிச்சென்று அவ்வீட்டின் கிணற்றை பார்த்தபோது தாயொருவர் மூன்று பிள்ளைகளை கிணற்றில் போட்டுவிட்டு தானும் கிணற்றில் வீழ்ந்து கிடந்ததை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து அயலவர்கள் உடனடியாக தாயாரை மீட்டெடுத்துள்ளனர். எனினும் வி. லதுர்சிகா (வயது 6) சன்சிகா (2 வயது) மற்றும் நிதர்சிகா 1 வயது) ஆகிய மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதை அவதானித்ததை அடுத்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலக்கிய சந்திப்பு ; சிந்தனைகளின் சங்கமம்! 26.05.13

.



இலங்கைச் செய்திகள்


அடை மழையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

திருமலை துறைமுகத்தில் பாகிஸ்தான் யுத்தக் கப்பல்

கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட வினை

தமிழ் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த பிக்குகளுக்கு யாழில் சான்றிதழ் வழங்கி வைப்பு


சட்டவிரோத காணி சுவீகரிப்பிற்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல்

மடு திருத்தலத்திற்கான புகையிரத சேவை ஆரம்பம்

தமிழினி அடுத்த மாதம் விடுதலை; வடமாகாண தேர்தலிலும் போட்டி?


=====================================================================

அடை மழையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

15/05/2013 வடக்கு கிழக்கில் கரையோரப்பகுதிகளை தாக்கியிருந்த மகாசென் சூறாவளியுடன் மலையகத்தில் அடைமழை காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஹட்டனில் வௌ்ளத்தில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 1115 குடும்பங்களைச்சேர்ந்த 4 ஆயிரத்து எண்ணூறுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்து 700 க்கும் அதிகமானோர் கோவில்கள், பாடசாலைகள் மற்றும் பொதுத்தலங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தற்காலிகமாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஹட்டன் டிக்கோயாவைச்சேர்ந்த அம்ரித்தா (வயது 7), அவரது பாட்டியான சிவபாக்கியம் (வயது 65) லிந்துலை வலகாகொலனியைச்சேர்ந்த போல்ராஜ் ஷெரோ (வயது 4) ஆகியோரும் மாத்தறை மாவட்டத்தின் திகாகொட, பொலநறுவை திபுலகல மற்றும் கண்டி பஸ்பாகே பொரல ஆகிய பகுதியைச் சேர்ந்த தலா ஒவ்வொருவரும் என மொத்தமாக இதுவரையில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை டிக்கோயாவைச் சேர்ந்த கமலேஷ்வரி (வயது 42) என்ற பெண்மணி நீரில் மூழ்கி காணாமற் போயுள்ளார்.
இதில் போல்ராஜ் ஷெரோ என்ற சிறுமி மண்மேடு சரிந்து வீட்டின்மீது விழுந்ததையடுத்து வீட்டின் சுவர் உடைந்து வீழ்ந்ததில் புதையுண்டு இறந்துள்ளார்.

சைவசமய அறிவுத்திறன் தேர்வுக்கான பரிசளிப்பு விழா 2013 26.05.13

.

உலக சினிமா : Khamosh Pani

.

சாதத் ஹசன் மாண்டோவின் சிறுகதை அடிப்படையாக கொண்ட குறும்படங்களின் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள், "காமோஷ் பாணி" படம் என்னை மேலும் பாதித்தது. குழந்தைகள் பிறப்பது பெற்றோர்களுக்கு சந்தோஷமாக இருக்கலாம். ஆனால், ஒரு நாடு பிறக்கும் போது பல மக்கள் மனதில் வேதனைகளையும், வலியையும் கொடுத்து தான் பிறக்கிறது. அப்படி வலிகளும், வேதனையோடு மட்டுமல்லாமல் கலவரத்தில் பிறந்த தேசம் இந்தியா - பாகிஸ்தான். அதன் பின்னனியில் கதைக்களம் இல்லை என்றாலும், அதன் வேதனையில் உருவாக பெண்ணின் கதை தான் "காமோஷ் பாணி".


1979ல் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் சர்கி கிராமத்தின் நடக்கும் கதை. அம்மா ஆயிஷாவின் அன்பு, புல்லாங்குழல் இசை, சுபைதா என்ற பெண்ணின் காதல், நண்பர்கள் என்று எல்லோரைப் போலவே சந்தோஷமான இளைஞனாக இருக்கிறான் சலீம். ஆனால், அவனது அம்மா ஆயிஷாவுக்கு கிணற்றை நோக்கி நினைவுகள் செல்லும். அமைதியான கிணற்று நீர் இரண்டு நாடு பிரிந்ததற்கு சாட்சியாக இருக்கிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் டி.எம்.சௌந்தரராஜன்

.

TMSதிரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் கீழே தவறி விழுந்தார். இதனால் பின் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை முடிந்து, கடந்த இரு நாள்களுக்கு முன்புதான் வீட்டிற்கு வந்தார். இதையடுத்து, சனிக்கிழமை காலை அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சௌந்தரராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மகன்கள் பால்ராஜ், செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.

___________________________________________________________________________________________________________

உருப்படியான விஷயம்...

.
ந்த விஷயத்துக்காக மாமா அத்தனை அலட்டி, தன்னையும் விரட்டி உடனடியாக போய் அறிவுரை சொல்லத் தொடங்கினரோ அந்த விஷயத்தை அவரே இப்படி கைகழுவுவார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை கிஷோர். சே, சொதப்பிட்டாரே!


சாயங்காலம் கிஷோர் வந்து, மாமா, நம்ம மகேஷ் அவங்கப்பாவை முதியோர் இல்லத்தில கொண்டு போய் சேர்க்க எல்லா ஏற்பாடு பண்ணிட்டான்! என்று சொன்னதும் அவர் பதைபதைத்ததைப் பார்க்க வேண்டுமே? கையிலிருந்த கண்ணாடித் டம்ளரை நழுவ விட்டு... 'ஓ, மை!' என்றொரு அலறல் இட்டு... சேர்த்திட்டானா?”

இன்னும் இல்லை. நாளைக்கு...

கிளம்பு, கிளம்பு, உடனே அவனைப் பார்த்து எடுத்து சொல்லி அப்படி செய்துடாம தடுக்கணும்!

யெஸ், நானும் அவனைப் பார்த்துப் பேசி அவன் மனசை மாத்தணும்னுதான் உங்களிடம் விஷயத்தை சொல்லி உங்களையும் அழைச்சிட்டுப் போக வந்தேனாக்கும்!

அதற்குள் அவர் காரை ஸ்டார்ட் பண்ணியிருந்தார்.

போன இடத்திலும், வாங்க, உட்காருங்க, பிரேமா, ஸ்னாக்ஸ் எடுத்திட்டு வா! எத்தனை நாளாச்சு உங்களைப் பார்த்து! என்றவனை மேற்கொண்டு ஒரு வார்த்தை பேச விடவில்லை.

அப்பா விஷயமா நீ ஏதோ முடிவெடுத்திருக்கேன்னு கேள்விப்பட்டேன் அதான் ஓடிவந்தேன். நான் சொல்லப் போறதைக் கொஞ்சம்கவனி... கிடு கிடுவென்று ஆரம்பித்தார்.

அதற்குள் பிரேமா பிளேட் நிறைய காரா பூந்தி கொண்டு வந்து வைத்தாள்.

அவர் ஒவ்வொரு பாயிண்டாக அழுத்தமாக சொல்ல ஆரம்பிக்க கிஷோரும் கூடவே தன்னுடையவற்றை எடுத்து இயம்பலானான். மகேஷ் இவர்கள் சொன்னதை கேட்டு மௌனமாக தலையசைத்துக் கொண்டிருந்தான். 

நாலைந்து நிமிஷம் போயிருக்கும். மாமா பேச்சை குறைத்துவிட்டு,கிட்டத்தட்ட நிறுத்திவிட்டு சுவாரசியமாக காரா பூந்தியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் ரசித்து மென்று தின்பதைப் பார்த்து இவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது. காட்டிய ஜாடையையோ விட்ட முறைப்பையோ அவர் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

உலகச் செய்திகள்


அன்னையர் தினத்தன்று கொடூரம்!

பாக். தேர்தல்: நவாஸ் ஷெரீப் வெற்றி!

நவாஸ் ஷெரீப்பின் அழைப்பை நிராகரித்த மன்மோகன் சிங்



==================================================================


அன்னையர் தினத்தன்று கொடூரம்!

13/05/2013 அமெரிக்காவின் நிவ் ஒர்லியன்ஸ் பகுதியில் அன்னையர் தினத்தையொட்டி நேற்று இடம்பெற்ற பாதயாத்திரையொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 2 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், இதில் 3 பேர் ஈடுபட்டிருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

சிட்னி சைவமன்ற அறிவித்தல்கள்

.


பயணியின் பார்வையில் -15 -- முருகபூபதி

.
சாட்சியங்களுடன் தொடரும் வரலாறு

07122012143நடந்தவைகளுக்கு சாட்சிகள் இல்லையென்று நம்புவது மனதின் அறியாமை. எல்லாச்சம்பவங்களுக்கும் சாட்சி இருக்கின்றன.” சமீபத்தில் நான் படித்த எஸ்.ராமகிருஷ்ணனின் துயில் என்ற நாவலில் மேற்படி வார்த்தைகளை ஒரு பாத்திரம் பேசுகிறது.

பயணியின் பார்வையில் 15ஆவது அங்கத்தை எழுதும்பொழுது அந்த வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. சம்பவங்கள் காலப்போக்கில் நினைவிலிருந்து மறந்துபோகலாம். ஆனால் அந்தச்சம்பவங்களுடன் தொடர்புடைய வேறு ஒருவருக்கோ அல்லது தெரிந்த ஒருவருக்கோ மறந்துவிட்டது என்ற முடிவுக்கு நாம் வந்துவிடமுடியாது. இலங்கையில் நீடித்த போரில் பாதிக்கப்பட்டவர்களது வாழ்வில் நடந்த சம்பவங்கள் காலப்போக்கில் மறந்துபோகலாம்.

மனக்காயங்கள் காலத்தினால் குணமாகலாம். ஆனால் சாட்சியங்கள் மரணிக்காது. ராமகிருஷ்ணனின் அந்தப்பாத்திரம் பேசுவது போன்று சாட்சிகள் இல்லவே இல்லை என்று சாதிப்பது மனதின் அறியாமைதான்.

வன்னி பெருநிலப்பரப்பில் போரின் சாட்சியங்கள் தடயங்களாகவே இருக்கின்றன. போரிலே எதிரும் புதிருமாக இருந்த இரண்டு பெரிய தலைவர்களின் படங்கள் ஓரிடத்தில் சாட்சியங்களாக இருக்கின்றன. அவர்கள் வேறுயாருமல்ல… இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷவும், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும்தான்.

காற்றுவெளி மின்னிதழ்



அன்புடையீர்.

வணக்கம்.
காற்றுவெளி மின்னிதழ் சிறு சஞ்சிகை சிறப்பிதழை வெளியிட உள்ளது.
எனவேசிறு சஞ்சிகைகள் பற்றிய கட்டுரை ஒன்றை புதிதாக (வேறெங்கும் வெளிவராத) அனுப்புங்கள்சிறு சஞ்சிகை பற்றிய அறிமுகத்தையும் அனுப்பலாம்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:
  mullaiamuthan@gmail.com
நட்புடன்,
முல்லைஅமுதன்

ம .லெ.தங்கப்பா நேர்காணல்

.




ங்கப்பா தெளிதமிழ்வாணர். தனித் தமிழில் தமிழுலகுக்கு படைப்புகளைத் தந்த பாவாணர். பெருஞ்சித்திரனாருக்குப் பின் அத்தடத்தில் பயணிக்கும் இவரது சங்க இலக்கியப் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு அகில இந்திய அளவில்

மொழியாக்கத்துக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. "கர்ஸ்ங் ள்ற்ஹய்க்ள் ஆப்ர்ய்ங்' எனும் இந்நூலினை லண்டன் பெங்குவின் நிறுவனம் செம்பதிப்பாக வெளியிட்டுள்ளது.

படைப்பு மற்றும் மொழிபெயர்ப்புத் துறையில் தனித்துவத்துடன் திகழும் அவரது நேர்காணல் இதோ.

இந்திய அளவில் மொழியாக்கத்துக்கான விருது பெற்றதை எப்படி உணர்கிறீர்கள்?

இச்செய்தியைக் கேட்க என் நண்பர் கோவேந்தன் இல்லையே என்றுதான் உணர்கிறேன். ஏனெனில் அவர்தாம் இதில் என்னிலும் பன்மடங்கு மகிழ்ச்சி அடைவார். என்னைப் பொறுத்தவரை எதையும் வாழ்வியல் பார்வையோடு பார்ப்பவன் ஆதலால், ஒன்று கிடைத்தமைக்கு மகிழ்வதும் கிடைக்காமைக்கு வருந்துவதும் என் இயல்பில் இல்லை. ஆயினும் ஒரு சரியான மதிப்பீடு என்பது மனதுக்கு நிறைவு தருகின்றது. காய்தல், உவத்தல் அற்ற மதிப்பீட்டுக்கு நன்றியுணர்வு கொள்ளாமல் என்னால் இருக்க முடியாது. இதன் வாயிலாக, இந்த நூல் வழி, தமிழிலக்கியம் மேலும் பலர் கவனத்தை ஈர்க்க வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. குடத்து விளக்காக இருந்த என்னை வெளியே கொண்டுவந்திருப்பது இவ்விருதின் செயலாகும்.

மொழிபெயர்ப்பில் உங்களுக்குத் தூண்டுகோலாயிருந்தவர் யார்- எவர்?

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்க யாரும் எனக்குத் தூண்டுகோலாக இருந்ததில்லை. ஆர்வத்தால் நானே மேற்கொண்டேன். தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தூண்டுகோலாயிருந்தவர்களுள் ஒருவர் என் உழுவலன்பர் பாவலர் த. கோவேந்தன் ஆவார்.

ஆங்கிலத்தில் நானே சொந்தமாகப் பாடல் எழுதத் தொடங்கியிருந்த காலம். 1957-ல் கோவேந்தனை வேலூரில், அவர் நடத்தி வந்த "வானம்பாடி' பாட்டிதழ் தொடர்பாக நான் சென்று கண்டபொழுது "தமிழ்ப் பாடல்களை ஆங்கிலத்தில் பெயர்க்க முடியுமா?' என்று வினவினார். "இதுவரை செய்ததில்லை. ஆயினும் செய்யலாம். முடியும்' என்றேன். "வானம்பாடி' இதழுக்கு பாரதிதாசன் பாடல்கள், சங்க இலக்கியப் பாடல்களை மொழிபெயர்த்து விடுக்க வேண்டினார்.


வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் -வித்யாசாகர்

.
சி ஒரு பெருங்கொடுமை. பசியொரு உயிரோடு கொல்லும் மரணத்திற்குச் சமம். ஜீவராசிகள் வாழ்வதன் காரணத்தை உடல்மையமாக சோதித்துப் பார்த்தால் கடைசியில் வயிற்றிற்காக மட்டுமே வாழ்வதாக ஒரு பதில்கூட கிடைப்பதுண்டு. மரணத்தின் வேர் எதுவென்று காட்ட ஒரு சொட்டுத் தண்ணீராலோ அல்லது ஒரு பிடி உணவாலோகூட முடிந்துவிடுகிறது. பசியின் கொடுமையால் மட்டுமே மிருகங்கள் மிருகத்தைக் கொல்கிறது. மனிதனும் தனது அறிவுத் தந்திரத்தால் மனிதனையே கொல்கிறான். பசி மனிதனை பகுத்தாராய விடுவதில்லை. வயிறு இழுத்துப் பிடித்துக்கொள்ளுமந்த வேதனையிலிருந்து தனை விடுவித்துக்கொள்ள கொலை கொள்ளை வழிப்பறி என எல்லாமே மனிதனுக்கு ஆயுதமாகிவிடுகிறது. பசியொன்றே மனிதனுக்கு நல்லதையும் கெட்டதையும் ஒருசேரக் கொடுத்த கடவுள்..
அப்படிப்பட்ட பசியை இன்று நாம் எப்படி மனிதத் தன்மையற்ற இடத்தில் வைத்திருக்கிறோம்? இருப்பவர் தின்பதும் இல்லாதவர் பட்டினியால் சாவதும் முறையென்று வகுக்க எப்படி நம் மனங்களில் ஈரம் வற்றிப்போனது? தர்மம் பற்றி சிந்திக்கத்தெரிந்த மனிதன் தண்டனை’ பாகுபாடு’ சுயனலமென உயிர் கொன்றுக் குவிக்க பசியை ஆயுதமாக்கிக் கொண்டது எத்தனைப் பெரிய குற்றம்?

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரின் வீசா ரத்து



அவுஸ்திரேலியாவில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரின் வீசா ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலியல் குற்றச் செயல் ஒன்றுடன் தொடர்புடையதாக குறித்த புகலிடக் கோரிக்கையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிட்னி பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் ரீதியாகத் தாக்கியதாக குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 21 வயதான தக்சன் செல்வராஜா என்ற இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளரின் வீசா இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளருக்கு தற்காலி வீசா வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டக் காரணத்தினால் வீசா விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெறவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது  நன்றி வீரகேசரி 
.

சிட்னியில் உலகத் தமிழ் மாநாடு





பார் புகழ் தமிழகத்தின், உலகத் தமிழ்ச் சங்கமும், ஆர்வமோடு தமிழ்வளர்க்கும் ,சிட்னியின் தமிழ் இலக்கியத் தமிழ் மன்றமும் இணைந்து, 2013 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 06 ஆம் தேதியும், செப்டம்பர் மாதம் 07 ஆம் தேதியும், செப்டம்பர் மாதம் 08 ஆம் தேதியும் - ஆக மூன்று  நாட்களில் தமிழ் மாநாடு ஒன்றை நடத்த உள்ளது.

தமிழ் இலக்கிய கலை மன்றத்தின் அன்பான வேண்டுகோள் -7,8/9/2013





அன்புடையீர் வணக்கம்

சிட்னியில் உலகத் தமிழ் மாநாடு – தமிழர் மண்டபம், 21 Rose Crescent, Regents Park
பார் புகழ் தமிழகத்தின், உலகத் தமிழ் சங்கமும், ஆர்வமோடு தமிழ் வளர்க்கும் சிட்னியின் தமிழ் இலக்கியக் கலை மன்றமும் இணைந்து 2013ஆம் ஆண்டு,செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதியும் , செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதியும்      , செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதியும்       - உலகத் தமிழ் மாநாடு ஒன்றை சிட்னி Regents Park  தமிழ் மணக்கும்  தமிழர் மண்டபத்தில் நடத்தவுள்ளது.
உலகத் தமிழர்களை ஒன்று படுத்தி, உலகப் பொதுமறையை மேன்மைப் படுத்தி, உலகோர்க்குத் தமிழ் இலக்கிய நயம் கூற, நமது இளைய தலைமுறைக்கு தமிழின் மகிமையை எடுத்துரைக்க உன்னத மாநாடொன்றை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தானம் - நிதி சேகரிப்பு





தமிழ் சினிமா

யாருடா மகேஷ் 

"யாருடா மகேஷ்" படத்தின் தலைப்பைப் போன்றே வித்தியாசமும், விறுவிறுப்புமான கதையம்சத்துடன் வெளிவந்திருக்கும் இப்படமும், இதன் காட்சியமைப்புகளும் "யாருடா இந்தப்படத்தின் இயக்குனர் என்று கேட்க வைக்கும் ரகமென்றால் மிகையல்ல.
கதைப்படி சோம்பேறி கதாபாத்திரமான சிவா என்னும் சந்தீப்புக்கு, தன் கல்லூரியில் படிக்கும் சிந்தியா எனும் டிம்பள் மீது காதல்.
நண்பன் வசந்த் எனும் செம்புலி, ஜெகனின் காதலி உதவியுடன் டிம்பளை உஷார் பண்ணும் சந்தீப், கல்லூரி இறுதி தேர்வில் பத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறாமல் போகிறார்.
அவரது காதலி, டிம்பளோ கல்லூரியின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று அடுத்த விமானத்திலேயே அமெரிக்கா பறக்கிறார்.
இதில் அதிச்சியாகும் சந்தீப், அரியர்ஸை கிளியர் செய்து அடுத்த ஆறு மாதத்திற்குள் அமெரிக்கா போய் காதல் வளர்ப்பார் எனப் பார்த்தால், ஆறு வாரத்திற்குள்ளாகவே அமெரிக்காவில் இருந்து டிம்பள் ரிட்டர்ன் ஆகிறார். காரணம், சந்தீப்பின் கரு, டிம்பளின் வயிற்றில் வளருவது தான்.
அச்சச்சோ, அப்புறம்? அப்புறமென்ன...? நாயகன், நாயகியின் அப்பா-அம்மாக்கள் ஆரம்பத்தில் ஈகோ மோதலில் இறங்கி, அதன் பின்னர் வேறு வழியின்றி சம்மந்தி ஆகின்றனர். குழந்தை பிறக்கிறது.
குழந்தையோடு, குழந்தையாக விளையாடியபடி காலத்தை தள்ளும் நாயகன் சந்தீப்பை திருத்த, நாயகி டிம்பள் தன் கஸின் பிரதரும், மனநல மருத்துவருமான ஸ்ரீநாத்துடன் சேர்ந்து கொண்டு செய்யும் அதிர்ச்சி வைத்தியம் தான் "யாருடா மகேஷ்" படத்தின் அதிர்ச்சியும், ஆச்சர்யமான, கலகலப்பும், கலாய்ப்புமான மீதிக்கதை.
சிவா என்னும் கதாப்பாத்திரத்தில் சந்தீப், தனது முந்தைய படமான "மறந்தேன் மன்னித்தேன்" படத்தை காட்டிலும், "யாருடா மகேஷ்" படத்தில் யாருடா சந்தீப் எனக் கேட்கும் அளவிற்கு கேஸீவலாக நடித்து ஜொலித்திருக்கிறார்.
டிம்பள் செமயூத்புல், கிளாமர் அப்பீல்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவர், நயன்தாரா, காஜல் அகர்வாலை எல்லாம் கூடிய விரைவில் ஓரங்கட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
நம் கண்களுக்கு மட்டுமல்ல, தன் கண்களிலும் எத்தனை கவர்ச்சி விருந்து வைக்கிறார்.
நாயகன் நண்பர் வசந்தாக வரும் செம்புலி ஜகன் இனி, டபுள்மீனிங் ஜகன். மனநல மருத்துவராக வரும் ‌கொமெடி ஸ்ரீநாத், மகனிடம் மேற்படி சி.டி. கேட்கும் நாயகனின் அப்பா லிவிங்ஸ்டன், அம்மா உமா பத்மநாபன், சுவாமிநாதன், சிங்கமுத்து உள்ளிட்ட எல்லோரும் "யாருடா மகேஷ்" படத்தை தங்கள் கலர்புல் கொமெடிகள் மூலம் தூக்கி நிறுத்தியிருக்கின்றனர்.
புதியவர் கோபிசுந்தரின் புதுமையான இசையும், ராணாவின் இனிமையான ஒளிப்பதிவும், சத்தியநாராயணனின் பளிச் படத்தொகுப்பும், ரா.மதன்குமாரின் எழுத்து-இயக்கத்தில், "யாருடா மகேஷ்" படத்தை மீண்டும் ஒருமுறை "பாருடா" என்று நம்மை தூண்டி விடுகின்றன.
நன்றி விடுப்பு