3வது சர்வதேசச் சிலப்பதிகார மாநாடு 2024





ஆறு அமர்வுகளும் சிறப்பாக நடைபெற்றன. ஒவ்வொரு காண்டத்தையும் இந்த அமர்வுகள் விழக்கியது குறிப்பிடத்தக்கது. 4 வெளிநாட்டுப் பேச்சாளர்களும், உள்நாட்டுப் பேச்சாளர்களும் சொற்பொழிவாற்றினார்கள்.  கீழே படங்களைப் பார்க்கவும். 


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 50 ஆண்டுகள்

 


ஆடும் மயிலேறி முருகா ஓடி வருவாயப்பா?


சங்கர சுப்பிரமணியன்.




மருதநில மன்னன் என்பவனும் நீ
தமிழ்க்குடி காத்த கோமானும் நீ

தேவர்களின் படைத்தளபதியும் நீயென
எல்லோரும் சொல்கின்றாரே ஐயா

நீ எங்களைக் காப்பாற்றி வந்த தலைவன்
மருதமண்ணின் மைந்தனன்றோ ஐயா

தேவர்களைக் காத்திடவும் வந்த நீ
தேவர்களைக் காக்கும் தேவனா?

இடைப்பட்ட கோள் ஏதிலும் தங்கி
இங்குமங்கும் பயணிக்கிறாயோ?

தூணிலும் துரும்பிலும் இருப்பதுபோல்
நீயும் மாறிவிட்டாயா மாவீரா

அங்குமிங்கும் இருப்பேன் என்று நீயும்
அவ்வாறு இருக்கின்றாயோ ஐயா

எவருக்கு உதவி தேவையென்றாலும்
நீயும் காத்தருள்வாய் கந்தையா

ரவிவர்மாவின் “திரைக்கு வராத சங்கதி”

 


ஈழத்து இலக்கிய உலகில் ஊடகப் பரப்பில் இருந்து கொண்டு இலக்கியம் சமைத்தோரில் பரவலான எழுத்துகளை வெளிப்படுத்திய வகையில் ரவிவர்மா தனித்துவமானவர்.

ஈழத்து எழுத்துலகில் உலக சினிமா அளவுக்கு இந்திய சினிமா அதுவும் குறிப்பாகத் தமிழ் சினிமா குறித்த சங்கதிகள் பேசப்படுவது அரிது எனலாம். அதை ஒரு தீண்டத்தகாத சமாச்சாரமாகவும் பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் நூற்றாண்டு தொடப்போகும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஆச்சரியமானதும், சாதனைக்குரியதுமான பக்கங்கள் பலவுண்டு. அத்தோடு இலக்கியத்தரமான படைப்புகளைக் காட்சி ஊடகம் வழி பரந்து விரிந்த பாமர உலகுக்குக் கொண்டு சென்ற வகையில் தமிழ் சினிமாவின் ஆச்சரியப் பக்கங்கள் பலவுண்டு.

ரவிவர்மாவின் “திரைக்கு வராத சங்கதி” யில் அவர் கொடுத்த கட்டுரைகளைப் படித்தாலேயே போதும், முன் சொன்னதன் நியாயம் புரியும்.

சினிமாக் கட்டுரைகளில் ஆய்வு, வரலாற்றுத் தன்மை இவற்றில் மிக ஆழமான பின்புலத்தோடு இருந்தாலொழிய சினிமாக் கட்டுரைகளில் ரவிவர்மா கையாண்டிருக்கும் தொடர்ச்சித்தன்மையும், ஒன்றிலிருந்து இன்னொன்றைத் தொடர்புபடுத்தி எழுதும் வல்லமையும் இலகுவில் கிடைக்காது.

இந்தக் கட்டுரைகளில் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன் நடந்த சங்கதிகளைத் தற்காலத்தோடும், கடந்த் தசாப்தத்தோடும் இணைத்து எழுதும் பண்பும், அவற்றின் மெய்த்தன்மையும் ரவிவர்மாவின் எழுத்துகளின் பலம் எனலாம்.

சாகித்திய ரத்னா விருது பெற்ற பெண் ஆளுமை ' யாழ்நங்கை' அன்னலட்சுமி இராஜதுரை முருகபூபதி

ங்கையில் அண்மைக்காலத்தில் சில அதிசயங்கள்


நிகழ்ந்துள்ளன.  நீண்ட இடைவெளிக்குப்பின்னர் ஒரு பெண் பிரதமராகியிரு;க்கிறார்.

அவர்தான் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய. அத்துடன் இருபதிற்கும் மேற்பட்ட  பெண்கள் இலங்கை நாடாளுமன்றத்திற்கு  புதிதாக தெரிவாகியிருக்கிறார்கள்.

இச்செய்திகளின் பின்னணியில் தற்போது மற்றும் ஒரு இலக்கியச் செய்தி வெளியாகியிருக்கிறது.

நாம் அன்னக்கா என பாசமுடன் அழைக்கும் இலங்கையின் மூத்த படைப்பாளியும் பத்திரிகையாளருமான  திருமதி அன்னலட்சுமி இராஜதுரை அவர்களுக்கு  இம்முறை சாகித்திய ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது.

செய்தி அறிந்தவுடன், அவரைத் தொடர்புகொண்டு வாழ்த்தியதையடுத்து அவர் பற்றிய இந்தக்குறிப்புகளை


எழுதுகின்றேன்.

இதற்கு முன்னர் இந்த உயரிய தேசிய விருது தமிழர் தரப்பில் ஆண்களுக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது.  இம்முறை இந்த கௌரவத்திற்கு  ஒரு தமிழ்ப்பெண் ஆளுமை தெரிவாகியிருக்கிறார்.  இவரை பரிந்துரைத்தவர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.

ஒரு பெண் ஏழுதசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்தும்  ஊடகத்துறையில் நிலைத்து நிற்கிறார் என்றால்,  அவர் யார்...? என்ற கேள்வியைத்தான் முன்னைய - இன்றைய  தலைமுறை  வாசகர்கள் விழியுயர்த்திக் கேட்பார்கள். அப்படி  ஒருவர்  தமிழ்ப் பெண்ணாக  தமிழ் ஊடகத்துறையில் அமைதியாக  பணிதொடருவதென்பது மிகப்பெரிய  ஆச்சரியம். சாதனை.

அவர்தான்  திருமதி  அன்னலட்சுமி  இராஜதுரை.  இலக்கிய  உலகில் தொடக்ககாலத்தில்  யாழ்நங்கை  என   அறியப்பட்ட  இவரை  1972 முதல்  நன்கு  அறிவேன்.   இவ்வளவு காலமும்  அவருடன்  நான்  முரண்படாமல்  அவருடன் உறவைப்பேணிவருவதற்கும்   என்னைப் பொறுத்தவரையில் அவர்மீதான    நல்ல மதிப்பீடுகளே  அடிப்படை.

அவர் வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராக இணைந்த  1962 ஆம் ஆண்டு நான் படித்தது ஆறாம் வகுப்பில்.  அதன்பின்னர் அவரை  முதல் முதலில் சந்தித்தது 1972 இல். அக்காலப்பகுதியில்தான் எனக்கு வீரகேசரியின்  நீர்கொழும்பு  பிரதேச நிருபர் வேலை கிடைத்தது.

அப்போது   இலக்கியப்பிரதிகளை படிக்கும் ஆர்வமும் துளிர்த்தமையினால்  அன்னலட்சுமி  அவர்களின்  முதல்  நூல் விழிச்சுடரை  அவரிடம்  கேட்டு வாங்கிப்படித்தேன்.  இரண்டு குறுநாவல்களின் தொகுப்பு விழிச்சுடர்.

திருமாங்கல்யம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 வெண்ணிற ஆடை மூலம் 1965ல் தமிழ் திரைக்கு அறிமுகமான


ஜெயலலிதாவுக்கு 1974ல் திருமாங்கல்யம் கிட்டியது. ஆம் ஒன்பது ஆண்டு கால அவகாசத்தில் தனது நூறாவது படமாக திருமாங்கல்யம் படத்தில் அவர் நடித்தார். தனது நூறாவது படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தும் வகையிலும் , தன்னுடைய பாத்திரத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலும் , வண்ணப் படமாகவும் இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்த ஜெயலலிதா இவற்றுக்கு ஏதுவாக தெரிவு செய்த படம்தான் திருமாங்கல்யம்.

 
வசந்த மாளிகை என்ற பிரம்மாண்டமான வெற்றி படத்தை தயாரித்த

விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் சார்பில் அதன் தயாரிப்பாளரான டி . ராமநாயுடு இந்தப் படத்தை தயாரித்தார். படத் தயாரிப்பு வகையில் பணத்தை பற்றி கவலைப் படாமல் தாராளமாகவே செலவு செய்து படத்தை அவர் தயாரித்தார். பிரம்மாண்டமான செட், நவீன ஆடைகள், காட்சியமைப்பு என்று எதிலும் அவர் பின்வாங்கவில்லை. ஆனால் படத்தின் கதை விஷயத்தில் தான் அவர் கோட்டை விட்டார் என்று சொல்ல வேண்டும்.
 
தன்னுடன் கல்லுரியில் ஒன்றாக கல்வி பயின்ற சீதாவை முரளி ஒருதலை பட்சமாக காதலிக்கிறான். அவளை கல்யாணம் செய்யவும் தீர்மானிக்கிறான். ஆனால் சீதாவோ முரளியை தன்னுடைய சகோதரனாக எண்ணுகிறாள். முரளியின் அண்ணன் தியாகுவோ சீதா பணத்துக்கு ஆசைப்பட்டு முரளியை மணக்க ஆசைப்படுகிறாள் என்று தப்புக் கணக்கு போடுகிறான். இதனால் சீதாவுக்கு மயக்க மருந்து கொடுத்து அசந்த நேரத்தில் அவளில் கழுத்தில் திருமாங்கல்யத்தை கட்டி விடுகிறான்! மயக்கம் தெளிந்ததும் தியாகு தனக்கு திருட்டுத் தாலி கட்டி விட்டதை அறிந்து அதிர்ச்சியடைகிறாள் சீதா. விஷயம் வெளி வந்தால் குடும்பத்துக்கு தியாக்குவால் ஆபத்து வரும் என்று அஞ்சி தாலியை மறைத்து வாழ்கிறாள்.

ஆற்றுகைகளைப் புரிந்துகொள்ளுதலும் பகுத்தாய்தலும்”- உரை: பேராசிரியர் சி. மௌனகுரு

 


இலங்கைச் செய்திகள்

பா.உ அர்ச்சுனாவின் பிடியாணையை மீளப்பெற உத்தரவு

ஃபெஞ்சல்: இலங்கை வானிலை தாக்கம் படிப்படியாக குறைகிறது

ரூ. 170 பில்லியன் மதிப்புடைய 500 கி.கி. ஐஸ்; கைதான இலங்கையர்


பா.உ அர்ச்சுனாவின் பிடியாணையை மீளப்பெற உத்தரவு 

- சட்டத்தரணி ஊடாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலை

November 28, 2024 3:46 pm 

வாகன விபத்தை ஏற்படுத்தி சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாதமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

உலகச் செய்திகள்

போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் குண்டு மழை

போர்க் களத்தில் வெல்வதால் பயனில்லை: ஜோ பைடன்

நிஜ்ஜார் கொலை: மோடி, தோவலுடன் தொடர்புபடுத்தும் அறிக்கைகளை மறுத்த கனடா 



போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் குண்டு மழை 

November 29, 2024 6:00 am 

லெபனானில் போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் எல்லைப் பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி இருப்பதோடு காசாவில் தொடரும் தாக்குதல்களில் நேற்றும் மேலும் 22க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கார்த்திகை சோம வாரங்கள் திங்கட்கிழமைகள் 18 & 25 நவம்பர் + 2 & 9 டிசம்பர் 2024 108 சங்காபிஷேகம் பகவான் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரருக்கு (சிவன்) திங்கள் 9 டிசம்பர் 2024

 








பிரபஞ்சத்தின் காரணமான தெய்வீக குருவான உமாவின் (பார்வதி) இறைவனை நான் வணங்குகிறேன். பாம்புகளால் அலங்கரிக்கப்பட்டு, புலித்தோலை அணிந்த, அனைத்து உயிரினங்களுக்கும் இறைவனாகிய இறைவனை வணங்குகிறேன். சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று கண்களாகவும், விஷு அருகிலிருக்கும் இறைவனை வணங்குகிறேன். அனைத்து பக்தர்களுக்கும் அடைக்கலமானவரும், வரங்களை அளிப்பவருமான சிவசங்கரரை வணங்குகிறேன்.

பாவங்களை நீக்கி, மனதையும் உடலையும் புத்துணர்ச்சியடையச் செய்து, வளமான வாழ்க்கையை அனுபவிக்க சிவபெருமானின் மாற்றும் ஆற்றல் தமிழ் மாதமான கார்த்திகையில் (நவம்பர்-நவம்பர் முதல் டிசம்பர் நடுப்பகுதி வரை) ஏராளமாக கிடைக்கிறது. சாஸ்திரங்களின்படி, இந்த புனித மாதத்தில், சிவன் தன்னை எல்லையற்ற நெருப்பாக வெளிப்படுத்தினார். திங்கட்கிழமையை ஆளும் கிரக சந்திரன் (சமஸ்கிருதத்தில் சோமா என்று அழைக்கப்படுகிறது), சிவனுடன் ஒரு சிறப்பு தொடர்பு உள்ளது, இது சோமேஸ்வரா என்றும் அழைக்கப்படுகிறது (பிறைச் சந்திரனை தனது மேட்டட் முடியில் அணிந்தவர்). திங்கட்கிழமைகள் எப்போதும் சிவனுக்கு மிகவும் உகந்தவை, மேலும் கார்த்திகை சோமாவரம் என்பது கார்த்திகை மாதத்தில் வரும் ஆண்டின் நான்கு சிறப்புமிக்க திங்கட்கிழமைகளைக் குறிக்கிறது.

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 43

 


“ஆற்றுகைகளைப்  புரிந்துகொள்ளுதலும்  பகுத்தாய்தலும்”

(Performance Understanding and analysing)

 உரை:   பேராசிரியர்  சி. மௌனகுரு

 ஒருங்கிணைப்பு:   வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ்

நாள்:         சனிக்கிழமை 30-11-2024       

நேரம்:     

 இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 8.30      

இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30 

 வழி:  ZOOM

 Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

மேலதிக விபரங்களுக்கு: -   அகில்  001416-822-6316