.
Photos by C.Paskaran |
ஒரு இனத்தினுடைய முகவரி அந்த இனத்தினுடைய மொழியும், கலையும், கலாச்சாரமும் பண்பாடும் ஆகும்.
நமது இளம் தலைமுறையினர் பல்கலாச்சார சூழலில் வாழ்ந்தாலும் எமது மொழி, எமது கலை போன்றவற்றில் பாண்டித்துவம் பெறுவது மிகவும் பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.
12 May 2019 ஞாயிறு அன்று செல்வி கேஷிகா அமிர்தலிங்கம் அவர்களின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் Parramatta Riverside theatre ல் சரியாக 5.30 மணிக்கு கேஷிகாவின் தம்பி திவ்யேஷின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது.
கேஷிகா, திரு திருமதி அமிர்தலிங்கம் சாரதா தம்பதிகளின் புதல்வி ஆவார்.
சங்கீத ஆசிரியை திருமதி புஸ்பா ரமணா அவர்களிடம் முறைப்படி சங்கீதம் பயின்ற கேஷிகா பின்பு கானக்குயில் ஶ்ரீமதி Binni Krishnakumar ஐ தனது குருவாக ஏற்று ஒரு இளம் பாடகியாகத் தன்னை வளர்த்துக் கொண்டவராவார்.
'மாதே மலயத்வாஜா' என்ற விருத்தத்துடன் ஆரம்பித்த நிகழ்ச்சி கணபதியே,
ஆனந்த நடமாடுவார் போன்ற
பாடல்களுடன் தொடர்ந்தபோது வரப்போகும் பாடல்களுக்கான எதிர்பார்ப்பு கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் சற்று அதிகரித்தது.
தொடர்ந்து பாபநாசம் சிவனின் தோடி ராகத்தில் அமைந்த பிரபல 'கார்த்திகேயா' என்ற பாடல் மற்றும் துரிதகதியில் அமைந்த வாத்தியங்களின் பிரயோகங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன.
அதைத் தொடர்ந்து சுவையான உணவை ரசிகர்கள் ருசித்தபின் மீண்டும் மண்டபம் நிறைந்தது.
Photos by C.Paskaran |