நிட்டூரம் வாராமல் நீகாப்பாய் முருகா ! [ கந்தசஷ்டி சிறப்புப் பிரார்த்தனை ]


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... ஆஸ்திரேலியா 



அருமறை போற்றிடும் அரனார் மைந்தா

அரக்கரை அழித்தாய் அருளையும் கொடுத்தாய் 
முரணுடைய மனத்தை பொரிதிடும் குணத்தை
கறையுடை வாழ்வினைக் களைந்திடச் செய்தாய் !

உருகிடும் அடியார் உளமுறை முருகா
மருளவே நோய்கள் மாநிலம் பெருகுது
மடிகிறார் பலபேர் மயங்கிறார் தினமும் 
கருணையின் உருவே கடைக்கண் காட்டு  !

நரபலி எடுத்திடும் நாடகம் நடத்திறார்
நயமுடன் நடப்பதை நாளுமே மறக்கிறார் 
பக்தியின் பக்கமே வந்திட மறுக்கிறார் 
பரமனின் புதல்வா  பாடத்தைப் புகட்டு  ! 

நெஞ்சை தொட்ட தமிழ் சினிமா ஜெய் பீம் - செ .பாஸ்கரன்

 .


நல்ல சினிமாக்களை தேடி அலைபவர்களுக்கு மீண்டும் தமிழ் சினிமா கைகொடுத்திருக்கிறது. சூரியா ஜோதிகா இணைந்து தயாரித்து வெளியிட்ட ஒரு திரைப்படம் தான் ஜெய் பீம். பெயரைக் கேட்டபோது ஏனோதானோவென்று இருந்தது ஆனால் எனக்கு பிடித்த நல்ல நடிகரான சூர்யா இதில் இருக்கிறார் என்ற காரணத்தினால் அந்த தலைப்பை பொருட்படுத்தாமல் திரைப்படத்தை பார்த்தேன் அங்காடித் தெரு, அசுரன், கர்ணன் அந்த வரிசையிலே ஜெய் பீம் இருக்கின்றது.


 வழமை போல அடிமட்ட மக்கள் படும் துயரத்தை சொல்லுகின்ற ஒரு கதைதான் இந்த கதை. ஹீரோக்களை முன்னிறுத்தி அவர்களால் அந்த மக்கள்

காப்பாற்றப்படுவதாக காட்டிவிடும் சினிமாவுக்கு மத்தியிலே இந்த சினிமா யதார்த்தத்தை முன்னிறுத்தி மனதை ஊடுருவி செல்கிறது. உண்மை கதை என்று ஆரம்பத்திலேயே குறிப்பிடுகின்றார்கள். 1995 என்று அதையும் குறிப்பிட்டு திரைப்படம் அசைந்து செல்கின்றது.


கள்ளர்கள், இருளர்கள் என்று சாதிப் பட்டியலிட்டு போலீசார் செய்கின்ற அக்கிரமங்களை எடுத்த எடுப்பிலேயே காட்டி எம்மை கோபத்துக்கு உள்ளாக்கி விடுகின்றது திரைக்கதை. ஒரு நாட்டை திருத்துவதற்கு, ஒரு டிபார்ட்மென்ட்டை திருத்துவதற்கு, ஒரு ஊரைத் திருத்துவதற்கு ஒரு மனிதன் போதும் என்று என்னுள் பலமுறை எண்ணிப் பார்த்து இருக்கின்றேன், அப்படி ஒருமனிதன் நம் நாட்டிட்கு கிடக்கமாட்டானா என ஏங்கி இருக்கிறேன். சிங்கப்பூரை எண்ணி பார்த்திருக்கின்றேன், ஒரு தனி மனிதனால் மாற்றப்பட்ட நாடு, ஜெமன் என்ற அரபு நாட்டை பார்த்திருக்கிறேன் நாசரால் மாற்றப்பட்ட ஒரு நாடு, கியூபாவைப் பார்த்திருக்கின்றேன் பெடல் காஸ்ரோ என்ற மனிதனால். சேகுவேரா என்ற மனிதனால் உலகிற்கே டாக்ட்டர்களைக் கொடுக்க முடிந்தது. இவை ஆழமாக மனதில் பதிந்தது .நம் நாட்டிற்கும் நடக்காதா என்று கற்பனை பண்ணிக் கொண்டே இருப்பேன்.


எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 66 1986 இல் யாழ்.கோட்டையில் முடக்கப்பட்ட இராணுவமும் - காவல் அரணில் விழித்து நின்ற போராளிகளும் ! கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள் ! ! முருகபூபதி


சமதர்மப்பூங்காவில் தொடருக்கு  வரவேற்பிருந்தது.  அதனை தொகுத்து புத்தகமாக்குமாறு சிலர் சொன்னார்கள். 

ஆனால், அது சாத்தியமானது, நான் அவுஸ்திரேலியா வந்தபின்னர்தான் !

சோவியத் நாட்டிற்கு  அதிபர்  கொர்பச்சேவ்  காலத்தில் நாம் சென்றிருந்தோம்.  அங்கு  படிப்படியாக நேர்ந்த மாற்றங்களை அவதானித்தேன்.

நாம் தங்கியிருந்த இஸ்மாயிலோவா நட்சத்திர விடுதிக்கு மாஸ்கோவிலிருந்து படிக்கும் இலங்கை மாணவர்கள் சிலர் வந்து சந்தித்தனர்.

அவர்களுடன் உரையாடியபோது சில விடயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது.

நாம் அங்கே சென்றிருந்தபோது,  ஒரு அமெரிக்கன் டொலருக்கு வங்கியில் ஏழு ரூபிள்கள் சோவியத்  நாணயம் தரப்பட்டது. இதுபற்றி அம்மாணவர்களிடம் சொன்னபோது,   எம்மிடம் தந்தால்,  “ தாங்கள் பத்து ரூபிள்கள் தரமுடியும்      என்றனர்.

 “ உங்களுக்கு எதற்கு அமெரிக்க டொலர்கள்..?   எனக்கேட்டேன்.

பாரதி தரிசனம் - அங்கம் 09 பிரிட்டிஷ் இந்தியாவில் பாரதியை தேடிச்சென்ற உளவாளியின் டயறிக் குறிப்பு ! பாரதிக்கு ஏன் நோபல் விருது கிடைக்கவில்லை…? முருகபூபதி


மேதாவிலாசம் மிக்க பலருக்கும் அற்பாயுள்தான் !  அத்தகைய அபூர்வமனிதர் பாரதியார் குறித்து இன்றும் பேசப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.  அந்தக்காரணங்களை ஆராயப்புகும்போது, உலகின் உயர்விருது எனக்கருதப்படும் நோபல் விருது அவருக்கேன் வழங்கப்படவில்லை..?  என்ற ஆதங்கமே எமக்கு  மேலோங்குகிறது.

 

வறுமையில் வாடியபோதும்  “ வீழ்வேன் என நினைத்தாயோ..?  “ என்று வீம்போடு பேசியவர் பாரதியார்.  விருதுகள், பட்டங்களைத் தேடி ஓடாதவர். பாரதி பட்டம்கூட அவரது பால்ய காலத்து கவியாற்றலுக்காகத்தான் வழங்கப்பட்டது. அதுவே இறுதிவரையிலும் நிலைத்து நிற்கிறது. 

பாரதி மறைந்து,  இறுதி ஊர்வலத்தில் அவரது பூதவுடல் நகர்ந்தபோது உடன் வந்தவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்பார்கள்.  அந்த எண்ணிக்கைகூட பதினைந்தைத்  தாண்டாது! 

 அவர் தனது முப்பத்தொன்பது ஆண்டு கால வாழ்க்கையில் பதினேழு ஆண்டுகாலத்தை பொதுவாழ்க்கைக்கு அர்ப்பணித்தவர் என்று பாரதி இயல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.  அந்தப் பொதுவாழ்வில்தான் அவர் கவிஞராகவும் அதேசமயம் பத்திரிகையாளராக, மொழிபெயர்ப்பாளராக,  பாடசாலை ஆசிரியராக, அரசியல் மாநாடுகளில் பங்கேற்றவராக பிரிட்டிஷாரின் அடக்குமுறையிலிருந்து தப்பி புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தவராக – இறுதியில் சிறைவாசம் அனுபவித்தவராக அலைந்துழன்றிருக்கிறார்.  

எனினும் அவருடைய அசாத்திய துணிவும் தர்மாவேசமும்  எச்சந்தர்ப்பத்திலும் குறைந்துவிடவில்லை. அத்துடன் கேலியும் கிண்டலும் அங்கதமும் இழையோட பேசவல்லவர்.  தன்னை கவர்ந்துசெல்ல வரும் காலனையும்       “ எட்டி உதைப்பேன்  “ என்று ஆக்ரோஷமாக குரல் எழுப்பியவர். மகாத்மா காந்தி சென்னைக்கு வந்தவேளையில்,  அவர் இருந்த இல்லத்திற்கு அத்துமீறிப்பிரவேசித்து, தான் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒழுங்கு செய்திருக்கும் பொதுக்கூட்டத்திற்கு வரமுடியுமா...? எனக்கேட்டவர்.

வாரியார் சுவாமிகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் ! [ நவம்பர் ஏழாந்திகதி வாரியார் சுவாமிகள் நினைவுநாள். அதனைக் கருத்திருத்தி இக்கட்டுரை அமைகிறது ]]

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் ---- அவுஸ்திரேலியா 

 

   வீணை படித்திருந்தால் வித்துவானாய் மேடைகளில் இசை

நிகழ்
 சிகள் செய்த படியேதான் இருந்திருக்க வேண்டி வந்திருக்கும். ஆனா ல் இறைவனின் ஆணை வேறாக இருந்ததால் பாதை மாறியது. பய ணமும் மாறியது.சைவமும் தமிழும் கைபிடித்து நின்றது. கலியுகத் தெய்வம் கந்தப் பெருமான் தன்னுடைய  கடைக்கண் பார்வையில் வைத்திருக்கும் நிலையும் உருவாகியது.இப்படி யெல்லாம் யாருக்கு நேர்ந்தது  என்று எண்ணிடத் தோன்றுகிறதல்லவா ! வேறு யாரு மல்ல ..... பேச்சாலும் ,
 எழுத்தாலும்,   கதைகளா லும்இசையாலும் எம் மையெல்லாம் தன்பக்கம் ஈர்த்து நின்ற வாரியார் சுவாமிகளே !
    கிருபானந்த வாரியார் என்னும் பெயரினை நாங்கள் சாதாரண மாகவே பார்க்கிறோம். அந்தப் பெயருடன் சுவாமிகள் என்பதையும் சேர்த்து அழைத்து விட்டு அத்துடன் நின்று விடுகிறோம். ஆனால் அந்தப் பெயரின் அர்த்தத்தை நாங்கள் எவருமே எண்ணியே பார்ப்ப தில்லை. 'கிருபை என்றால் 'கருணை ; ' ஆனந்தம்      இன்பம் ;  ' வாரி என்றால் பெருங்கடல் இப்பொழுது - "கிருபானந்த வாரியார் " என் னும் பெயரினை எண்ணிப் பாருங்கள். மலைப்பாக இருக்கிற தல்லவா ! இவருக்கு இப்பெயர் கருவிலேதான் உருவாகி இருக்க வேண் டும் என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது.கருணையே உருவமா கக் கொண்டே அவர் விளங்கி னார்.கருணை உருவில் இருந்தே பிரச ங்களை ஆற்றினார்.அனைவரையும் கட்டிப் போட்டார். கருத் துக்களை வழங்குவதில் கடலாகாவே இருந்தார்.அவரின் செய்கைகள் அத்த னைக்கும் ஏற்றதாக அவரின் பெயரும் அமைந்து வந்திருக்கிறத ல்லவா ! இதைத்தான் - நினையாது முன்வந்து நிற்கினும் நிற்கும் - எனையாளும் ஈசன் செயல் என்பதா !

மெய்நிகரில் மூன்று நாட்கள் தமிழ் எழுத்தாளர் விழா ! அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த நிகழ்வு !! இம்மாதம் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பம் !!! முருகபூபதி

அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கிய முயற்சிகளை மதிப்பீடு செய்யும்போது அவற்றுக்கான ஊற்றுக்கண் திறந்து மூன்று தசாப்தங்களுக்கு மேலாகியிருப்பதையும் அவதானிக்கமுடிகிறது.

தமது தாயகத்தில் கலை, இலக்கிய, ஊடகத்துறைகளில் ஈடுபட்டவர்கள் புகலிடம் நாடி இங்கு வந்த பின்னரும் உள்ளார்ந்த ஆற்றல்கள் வற்றிப்போகாமல் இயங்கியமையால் தமிழ் கலை , இலக்கிய படைப்புலகத்தில் அவுஸ்திரேலியாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்ததாக விளங்குகிறது.

 அவுஸ்திரேலியாவில்  தமிழ் கலை, இலக்கியம், இதழியல், வானொலி ,  தொலைக்காட்சி முதலானவற்றை மதிப்பீட்டிற்குட்படுத்தும்போதுதான்  புலம்பெயர் இலக்கியம்   இங்கும் உலகளவிலும் எவ்வாறு பேசுபொருளானது என்பதையும் அறியமுடியும்.

இந்தியாவிலிருந்து ஒரு காலத்தில் இலங்கைக்கும் ஃபிஜி மற்றும் ஆபிரிக்காவிற்கும் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றிருந்தாலும், இலங்கையிலிருந்து தொழில் நிமித்தமும் கல்வியின் பொருட்டும் ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தாலும், 1983 இல் இலங்கையில்  இனவாத வன்செயல் வெடித்ததன் காரணமாக தமிழர்களில் நிகழ்ந்த பாரிய புலப்பெயர்வின் பின்னர்தான் அவர்கள் மத்தியிலிருந்த கலை, இலக்கிய வாதிகளின் இயக்கத்தினால் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பேசுபொருளானது.

இந்த வரலாற்றுப் பின்னணியில் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கடந்த இரண்டு தசாப்த காலமாக முன்னெடுத்துவரும் தமிழ் எழுத்தாளர் விழா இயக்கம், சமகால கொரோனோ பெருந்தொற்றினால், சமூக இடைவெளியை பேணி முதல் தடவையாக மெய்நிகரில்  இம்முறை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிள்ளை வளர்ப்பும் விளையாட்டுப் பொருட்களும் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

 .

இன்று இரு பெற்றோரும் தொழில் பார்க்கும் மத்தியதர குடும்பங்களே பெருகி வருகிறது. கணவன் என்பவன் வருவாய் தேடி உழைப்பவன். இல்லாள் அல்லது இல்லத்தரசி அவன் உழைத்துக் கொண்டுவரும் சம்பாத்தியத்தில் வீட்டை நிர்வகிப்பவள்; குடும்பத்தைப் பராமரிப்பவள் என்பதெல்லாம் இன்று பழங்கதையாகி விட்டது. இன்று இல்லாள் ( இல்லத்தை ஆள்பவள் ) என்ற பதம் அர்த்தமற்றதாகி விட்டது.

பெற்றோர் இருவரும் சம்பாதிக்கும் குடும்பங்களில் பிள்ளைகளும் அதற்கேற்ப ஒரு புதிய சூழலில் வளர்கிறார்கள். ஒருவர் உழைக்கும் குடும்பத்தில் ஓரளவு பணப்பற்றாக்குறை இருப்பதற்கு இடமுண்டு. இன்னும் சரியாகச் சொல்வதானால் அதிகப்படியான ஆடம்பரங்களுக்குப் பற்றாமை என்பதே சரியானது. இதனால் ஒருவர் சம்பாதிக்கும் குடும்பங்கள் ஆடம்பரமற்ற வாழ்வை வாழ்ந்து வந்தனர். பிள்ளைகளின் எண்ணிக்கையும் ஒன்றோ இரண்டாகவோ தான் இருந்தது. இதனால் பிள்ளைகளுக்காகச் செலவு செய்ய இவர்களிடம் பணம் போதுமாக இருந்தது.

இன்றய தலைமுறைச் சிறார்கள் புதிய வசதிகளை அனுபவிக்கும் ஒரு புதிய தலைமுறையாக உருவாகி வருகிறார்கள். இந்தப் புதியத் தலைமுறைப் பெற்றோரிடமும் பணம் இருப்பதால் வேலை விட்டு வந்து பிள்ளைகளின் நன்மை கருதி அவர்களை வெவ்வேறு பட்ட வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது வழமையாகி விட்டது. சில 8, 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் சங்கீதம், உதைப்பந்தாட்டம், கூடைப்பந்து, நீச்சல், பரதநாட்டியம் என 4 அல்லது 5 வேறுபட்ட கலைகளைக் கற்று வருகிறார்கள். எனினும் இவைகள் அனைத்திலும் அவர்கள் தேர்ச்சிபெற்றவர்களாக வருவார்களா என்பது சந்தேகமே.

மூன்று தீய குணங்களை வெற்றி கொண்டால் உயர்நிலையும், வெற்றிகளும் அடையலாம்

 Friday, November 5, 2021 - 12:10pm

- கந்தசஷ்டி விரதம் காட்டும் வாழ்க்கை நெறி

சந்திர மாதம் (சந்திரனின் சுற்றை அடிப்படையாகக் கொண்டது), சௌரமாதம்(சூரியன் சஞ்சரிப்பதை அடிப்படையாக கொண்டது) என இருவகையாக காணப்படுகின்றது.

கந்தசஷ்டி விரதம் சந்திர மாதத்தை அடிப்படையாகக் கொண்டு சுக்கில பட்ச (வளர்பிறை) பிரதமை தொடங்கி சஷ்டி ஈறாகிய ஆறு திதிகளும் உள்ளடக்கியதாக முருகக் கடவுளின் அருள் வேண்டி அனுஷ்டிக்கும் விரதமாகும். சப்தமி திதியில் பாரணை செய்து விரதத்தை முடித்தல் வேண்டும்.

குரு ஐயாவின் தனித்துவமான விழாவில் வாசிக்கப்பட்ட வாழ்த்து பா

 


கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை பதினைந்து ]

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

   கூரையானது.குடையானது. வேலியானது. விளைநிலத்திற்குப்


பசளையும் ஆகியது பனை ஓலை.பல நிலைகளில் பயனாகியிருந்த பனை ஓலை - தன்னளவில் மட்டுமே நின்றுவிடாமல் - தன்னைத் தாங்கி நின்ற மட்டையினையும் காட்டி 
அதனையும் எடுத்து உங்களுக்கு என்ன தேவையோ அதற்கு ஏற்றாற் போல பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி - பனை மட்டையினை வழங்கிவிட்டு பனை ஓலை ஒதுங்கிக் கொண்டது.

  பனை மட்டை என்றதும் அதனைச் சாதாரணமாக எண்ணி விடக் கூடாது. பனை என் றாலே பயன் என்பதுதான் அர்த்தமாகும்.அந்த நிலையில் பனை மட்டையும் அர்த்தம் பொதிந்ததாகத்தானே அமையும். பனையில் ஓலையினைத் தாங்கி இருப்பது பனை மட்டை. ஓலை வெட்டும் பொழுது ஓலையுடன் பனை மட்டையும் சேர்ந்தே வந்துவிடும். வீடு வேயவும் பல பொருட்களைச் செய்யவும் பனை ஓலையினை வெட்டிய பின்னர் - பநை மட்டை மட்டும் தனியே விடப் பட்டிருக்கும்.தன்னுடன் இணைந்து வளர்ந்து இருந்து வந்த ஓலை - அதனை விட்டு விட்டுப் போய்விட்டதே என்னும் ஏக்கம் பனை மட்டை க்கு இருந்தாலும் அது - அதனைக் காட்டிக் கொள்ளாமல் தன்னால் என்ன முடியுமோ அதனைக் கொடுத்து ஆறுதல் அடைந்தே இருக்கும்.ஓலையினின்றும் அகற்றப்பட்ட மட்டை - ஓலமிடுவதேயில்லை. உதவும் வரை உதவிக்கொண்டே இருக்கும். இதற்கும் காரணம் அது பனையினின்றும் வந்த ஒரு அங்கம் அல்லவா ! கொடுக்கும் குணத்தை நிறையவே கொண்டிருக்கும் பனையின் மட்டைக்கும் அந்தக் குணம் அமைந்துதானே இருக்கும்! 

கனடாவில் 87 வயதில் முதுகலை பட்டம் பெற்ற இலங்கை மூதாட்டி

 Sunday, November 7, 2021 - 6:00am

கனடாவில் 87 வயதில் முதுகலை பட்டம் பெற்ற இலங்கை மூதாட்டி வரதலெட்சுமி சண்முகநாதன்-87 Year Old Sri Lankan Woman Earns Masters Degree in Canada-Varathaledchumy Shanmuganathan

- வாழ்நாளில் இன்னும் இலட்சியங்களைக் கொண்டுள்ளதாக கூறுகின்றார்

இலங்கையைச் சேர்ந்த 87 வயது மூதாட்டி ஒருவர் கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற மூத்த மாணவி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். வரதலெட்சுமி சண்முகநாதன் என்ற இவர் 4,000 மாணவர்களில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவராக விளங்குகின்றார். அவர் கடந்த செவ்வாய்க்கிழமை பட்டம் பெற்றார்.

“அரசியல் அறிவியலில் ஏதாவது செய்ய வேண்டும் என்பது வாழ்நாள் முழுவதும் லட்சியமாக இருந்து வருகிறது. என் வாழ்நாள் முழுவதும் நான் அரசியல் மற்றும் அரசியல் அறிவியலில் ஆர்வமாக இருந்தேன்”என்று வரதலெட்சுமி சண்முகநாதன் கூறினார்.

பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - திருமகள் - ச. சுந்தரதாஸ் - பகுதி 19

 .




தமிழ் திரையுலகில் மிக மூத்த இயக்குனர்களில் ஒருவராகத் திகழ்ந தவர் ஏ எஸ் ஏ சாமி.இலங்கையைசேர்ந்த பட்டதாரியான இவர் தமிழகம் 

சென்று  பில்ஹணன் என்ற  வானொலி நாடகத்தை எழுதி அதில்அன்றைய சூப்பர் ஸ்டார் எம் கே தியாகராஜ பாகவதர் நடித்து அந்த நாடகம் மிக பிரபலம் அடைந்தது.இவரின் திறமையை அடையாளம் கண்டு கொண்ட ஜூபிட்டர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிபர்களாக சோமு மொஹிதீன் இருவரும் சாமிக்கு தாங்கள் தயாரிக்கும் படங்களை இயக்கும்வாய்ப்பை வழங்கினார்கள்.


அந்த வகையில் 1947ல் உருவான ராஜகுமாரி படத்தை சாமி டைரக்ட் 

செய்தார்.இந்த படத்திற்கு உதவிவசனகர்த்தாவாக பணியாற்ற வந்தவர்தான் கலைஞர் மு கருணாநிதி.முதல் முதலாக எம் ஜீ ஆருக்குகதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு இப் படத்தின் மூலமாகத்தான் சாமியின் பலத்த சிபாரிசின் மூலம்கிட்டியது.ராஜகுமாரியின் வெற்றியைத் தொடர்ந்து அபிமன்யு,கற்புக்கரசி,துளிவிஷம்,தங்கப்பதுமை,கைதிகண்ணாயிரம்,நீதிபதி,அரசிளங்குமரி,முத்துமண்டபம் போன்ற அவர் இயக்கிய படங்கள் நல்ல வரவேற்பைபெற்றன.அதிலும் அறிஞர் அண்ணா எழுதி இவர் இயக்கிய வேலைக்காரி புரட்சிப் படமாக ரசிகர்களைகவர்ந்தது.இவ்வாறு பல படங்களை இயக்கிய சாமி 1971ல் இயக்கிய படம்தான் திருமகள்.


மூத்த நடிகர்களான ஜெமினி ,பத்மினி,இருவருடன் இளைய நடிகர்களான சிவகுமார் ,லட்சுமி,ஏ வி எம்ராஜன்,ஆகியோரும் படத்தில் நடித்தனர்.இவர்களுடன் நாகேஷ் ,சுந்தரராஜன்,எஸ் வரலக்ஷ்மி,எம்பானுமதி ,பேபி ராணி  ஆகியோரும் படத்தில் இடம் பெற்றனர் .


ராஜு,ராதா இருவரும் தொட்டதெற்கெல்லாம்  சண்டை  போடும்  மனமொத்த  காதலர்கள்.பொருளாதாரரீதியில் கஷ்டப்படும் தன் நண்பனும் சக                    மாணவனுமான  ராமுவை தன் வீட்டிற்கே கூட்டி வந்து தன்னுடன்தங்க        வைதது பராமரிக்கிறான் ராஜு.இதை அவன் அண்ணி கல்யாணி விரும்பாவிட்டாலும் விட்டுவிடுகிறாள்.ராஜு ராமு ,ராதா மூவரும் நட்புடன் பழகுகிறார்கள்.ராஜு ராதா இருவருக்கும் திருமண நாளும்நிச்சயிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடக்கும் சமயத்தில் அந்த விபரீதமான சம்பவம் நடந்துவிடுகிறது.எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.


ஜெய் பீம் - கானா பிரபா

 


நேற்றுப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தவன் பாதி வழியில் நிறுத்தி விட்டேன். அதற்கு மேல் பார்க்கும் மன வலிமையும் இருக்கவில்லை. மனித உரிமை மீறல்களைக் கண்டும், அதை அனுபவித்த சக மனிதர்களோடு வாழ்ந்து பழகியும் இந்தப் படைப்பு ஏதோ புண்ணைக் கிண்டிக் கிளறுமாற் போலொரு உணர்வு.


ஆனால் படுக்கைக்குப் போகு முன் இந்தச் செய்தி கண்ணில் பட்டது

மதுபுட்டிகளை பொறுக்கும் குழந்தைகள்.. பள்ளிக்கு அனுப்பி வைத்த சமூக ஆர்வலர்.. பழங்குடியின இருளர் மக்களுடன் தீபாவளி!


என்னடா இதுவென்று மனதின் ஓரத்திலேயே ஒட்டிக் கொண்டிருந்தது.

இலங்கைச் செய்திகள்

 சி.வியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

சீரற்ற காலநிலையால் இதுவரை ஐவர் மரணம்

பண்டாரவளை சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் 51 பேருக்கு கொரோனா

வடக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த இராணுவத்தினரின் பங்களிப்பு

தொடரும் மண்சரிவு அச்சுறுத்தல்

நகரங்களுக்கிடையேயான கடுகதி சேவை திங்கள் முதல்



சி.வியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பிரதமரின் மலையகத்துக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரனை யாழ்ப்பாணத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடினர். குறித்த சந்திப்பின் பின் கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான்,

உலகச் செய்திகள்

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் 

ஹைப்பர்சொனிக் ஏவுகணைகளை உருவாக்குவதில் இந்தியா, பிரான்ஸ் அடங்கலான நாடுகள் தீவிர கவனம்

கொவிட் தொற்றுக்கு மாத்திரை; முதல் நாடாக பிரிட்டன் அங்கீகரிப்பு

 சீனாவில் கொரோனா கட்டுக்கடங்காது பரவல்

கடன் சுமை மிகுந்த நாடாக பாகிஸ்தான்



வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் 

குத்துவிளக்கேற்றி பைடன் தம்பதி வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் குத்து விளக்கேற்றி தீபாவளியைக் கொண்டாடினார்.

பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்துக்களும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய வேளையில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் அமெரிக்காவில் அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் தன் மனைவியுடன் வெள்ளை மாளிகையில் குத்து விளக்கேற்றி தன்னுடைய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

சிட்னி துர்கா கோயில் ஸ்கந்த சஷ்டி - சூரசம்ஹாரம் 10/11/2011; திருக்கல்யாணம் 11/11/2011

 


05/11/2021 முதல் 11/11/2021 வரை சிட்னி துர்கா கோயில் ஸ்கந்த சஷ்டியைக் கொண்டாடுகிறது.  சூரசம்ஹாரம் 10 நவம்பர் 2021 புதன்கிழமை மாலை 05:30 மணி முதல் நடைபெறுகிறது.  சுப்ரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீ வள்ளி மற்றும் தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் 11 நவம்பர் 2021 வியாழன் அன்று இரவு 07:00 மணி முதல் நடைபெறுகிறது.