அன்னையர் தின வாழ்த்துக்கள் - தமிழ்முரசு

.

உலகில் உள்ள, இல்லாமல் போன அனைத்து அன்னைகளுக்கும் எமது அன்னையர் தின வாழ்த்துக்கள்




மரண அறிவித்தல்

.                                         
                                                                                                திரு .கணேஷ் சொக்கலிங்கம்


நோத் பரமாற்றாவில் வசித்தவரும், சிட்னி முருகன் ஆலயம், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஈழத் தமிழர் கழகம் ஆகியவற்றில் தன்னார்வத தொண்டராக சமூகப் பணியாற்றியவருமான கணேஷ் சொக்கலிங்கம் அவர்கள் மே  மாதம் 4 ம் திகதி திங்களன்று இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலம் சென்ற முருகேசு சொக்கலிங்கம், சிவபாக்கிவதி சொக்கலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,  கலாவதி சொக்கலிங்கம், மதனி தேவி ராஜநாயம்,  யோகன் சொக்கலிங்கம்,  பஞ்சு  சொக்கலிங்கம் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடன் மே மாதம்  9 ம்  திகதி சனிக் கிழமை காலை 10 மணி
முதல் 11 மணிவரை வெஸ்ட் சப்பேல் றோக்வூட்டில் இறுதி மரியாதைக்கு
வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து 11 மணி முதல் 12 மணிவரை இறுதிக்
கிரிகைகள் இடம் பெறும்.
தற்போது நாட்டில் நிலவும் கட்டுபாடுகளுக்கு அமைய இறுதிக் கிரிகைகள் இடம்  பெறுவதனால்  கட்டுப்பாட்டுகளுக்கு அமைவாகவே பார்வையாளர்கள் அஞ்சலிக்கு அனுதிகப்படுவார்கள்.

உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இவ் அறிவித்தலை ஏற்றுக்
கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகின்றீர்கள்.
மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்.

மா. மகிந்தன் 0421 496 123
ராம்  0422 067 890

அன்னையரின் அர்ப்பணிப்பு, தியாகத்தைப் போற்றுவோம்!





நாளை சர்வதேச அன்னையர் தினம்
சர்வதேச அன்னையர் தினம் மே மாதம் 10ம் திகதியான நாளை அனுஷ்டிக்கப்படுகின்றது. இத்தினத்தில் எமது நாட்டிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுவது வழமையாகும். ஆனால். இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அன்னையர் தின நிகழ்வுகளை நடத்த முடியாமல் உள்ளது.
அன்னையரின் தியாகங்களை போற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் உட்பட பல நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழமை.
‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பார்கள்
ஒரு குடும்பம் நிறைவுடன் வாழ்வதற்கு தாய் சுமக்கும் பாரங்கள் அதிகம்.
பிள்ளைகளை வளர்ப்பது, அவர்களின் கல்வி வளர்ச்சி, திருமணம் முடித்துக் கொடுத்தல் போன்ற அனைத்து விஷயங்களையும் சுமக்கின்ற இரும்புப் பெண்ணாகவே தாயானவள் செயற்படுகின்றாள்.
மலையகத்தினைப் பொறுத்தவரையில் குடும்பப் பெண்களின் சுமை மிகவும் அதிகமாகும். இடி மின்னல் தாக்குதல், மழை, காற்று, குளவி மற்றும் சிறுத்தை தாக்குதல் உள்ளிட்ட உயிர் அச்சத்திற்கு மத்தியில் தாய் ஒருத்தி படுகின்ற வேதனைகள் அதிகம். குடும்ப வருமானத்திற்காக மலையகத் தாய்மார் தங்களையே உருக்கியபடி பாடுபடுகின்றனர்.
இவ்வாறான அன்னையர்களுக்கு எந்தளவிற்கு குடும்பத்திலும் சமூகத்திலும் மதிப்பு அளிக்கப்படுகின்றது என்பதனை பார்க்கின்ற போது வேதனையே தோன்றுகின்றது.
மலையகத்தில் அன்னையர்களின் துயர் துடைக்கப்படுவது அவசியம். அன்று அன்னை மடியினை தலையணையாக பயன்படுத்திய பிள்ளைகள் இன்று ஸ்மார்ட் போனை தெய்வமாகப் போற்றுகின்றனர்.

கொரோனாவின் கோரப் பிடியால் நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதாரம் முற்றாக முடக்கம்





உழைப்பினை உதிரமாக்கி உலகத்தை காக்கும் உலக தொழிலாளர்களுக்கான தினம் வருடந்தோறும் மே மாதம் முதலாம் திகதி கொண்டப்படும் என்பது யாவரும் அறிந்ததே. இவ்வருடம் இத்தினமும் உலகம் முழுவதும் கொண்டாடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போய்விட்டது. காரணம் கொவிட்-19 என்ற புதிய ஆட்கொல்லி வைரஸ் உலகம் முழுவதையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்ட காரணத்தலே ஆகும்.
இவ்வருட உலக தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதற்காக கடந்த வருட திட்டங்கள் யாவும் வெறும் கனவாக மாறி விட்டது. இது ஒருபுறம் இருக்க கொவிட்-19 காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை நடுத்தர வருமானத்தை சார்ந்த நாடாகும் அதாவது அபிவிருத்தி அடைந்து வரும் வரிசையிலே காணப்படுகின்றது. ஆய்வு அறிக்கைகளின் பிரகாரம் இலங்கை தற்பொழுது உயர் பட்ச வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கும் பொருளாதாரத்திலே முன்னிலை வகிப்பதற்கும் பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது தொழிலாளர்களின் அல்லது வேலை செய்பவர்களின் வருமானமாவது இதுவரையிலும் உயரவில்லை என்பதே இதிலிருந்து வெளிப்படும் உண்மையாகும். தொழிலாளருக்கு போதிய சம்பளம், வருமானம் என்பன இன்று வரையிலும் கேள்விக்குறியாகவே உள்ளது. அதேபோல அகில இலங்கை ரீதியில் கடந்த தசாப்த காலத்திற்கும் தற்போதைய சூழ்நிலைக்கும் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது.
ஒரு சிறிய நாட்டில் சமூகம் பெறும் வருமானத்தில் அரைவாசியில் உணவிற்காக செலவிடப்படுகின்றது. அதேபோல இலங்கையிலும் மிக குறைவான வருமானம் பெறும் சமூக அமைப்பு உணவிற்காக செலவிடும் அதேவேளை எதிர்கால நலன்கள் விசேடமாக கல்வி, வீட்டு வசதி போன்றவற்றிக்கு செலவிடப்படுவதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் மிகக் குறைந்த வருமானம் பெறுவோருக்கும் அதுபோல உயர்ந்த வருமானம் பெறுவோருக்கும் இடையில் ஒரு நடுத்தரப் பிரிவினர் இருக்கின்றனர். இவர்கள் நடுத்தர வருமானம் பெறுவோர் என்ற கூட்டத்தில் உள்ளடக்கப்படுவர். தற்போதையை சூழ்நிலையில் இலங்கையில் இந்த நடுத்தர, இடைப்பட்ட வருமானம் பெறுபவர்களே மிக அதிகளவில் காணப்படுவதாக தொகை மதிப்பு புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.

எழுத்தாளர்சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”சிறுகதை ஒலிப்பகிர்வு - கானா பிரபா

.

எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”

#ஈழத்தவர்_கதை_கேட்போம்

சிறுகதை ஒலிப்பகிர்வு

ஒலி வடிவம் : சங்கீதா தினேஷ் பாக்யராஜா


ஈழத்து எழுத்தாளர்களது தேர்ந்தெடுத்த சிறுகதைகளை அவர்களது எழுத்தின் தனித்துவத்தைக் காட்டவெண்ணிக் குரல் பகிர்வுகளாகத் தொடரும் முயற்சியின் அடுத்த படைப்பு இது,

எழுத்தாளர் சுதாராஜ், இவரின் இயற்பெயர் சிவசாமி இராஜசிங்கம் என்பதாகும். ஈழத்தின் மிக முக்கியமான சஞ்சிகைகளான சிரித்திரன், மல்லிக்கை உள்ளிட்டவைகளிலும், வீரகேசரி உள்ளீட்ட பல்வேறு பத்திரிகைகளிலும் சிறுகதைகள், நாவல்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்ப்பிரியா ( 1952 – 2020) தமிழ்ப்பிரியா மறைந்தார் - அஞ்சலிக்குறிப்பு இலங்கை வானொலியில் நேயர்களிடத்திலும் ஈழத்து இலக்கியத்தில் வாசகருடனும் இணைந்திருந்தவருக்கு பிரியாவிடை ! முருகபூபதி முருகபூபதி

ழத்து  எழுத்தாளர் தமிழ்ப்பிரியா  இம்மாதம்    07 ஆம் திகதி பிரான்ஸிலிருந்து விடைபெற்றுவிட்டார்.

தமிழ்ப்பிரியா, இலக்கியம் மாத்திரம் படைத்துக்கொண்டிருந்தவர் அல்ல. அதற்கு அப்பாலும் மனிதநேயச்செயற்பாடுகளில் தன்னார்வத் தொண்டராகவும் தன்னை ஈடுபடுத்தி வந்திருப்பவர். இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடத்திலிருந்து வாழ்வாதார உதவிகளை வழங்கிய கருணை உள்ளம் கொண்டவர்.

வீரகேசரி பத்திரிகையில் நான் பணியாற்றிய காலத்தில்,  தமிழ்ப்பிரியாவின்  எழுத்துக்கள் அச்சில் வரும்போது அவற்றை ஒப்பு நோக்கியிருக்கின்றேன். எம்முடன் பணியாற்றிய மட்டக்களப்பு கிரானைச்சேர்ந்த  திரு. கனகசிங்கம் ( தற்போது – அவுஸ்திரேலியா சிட்னியில் வசிப்பவர் )  பொன்னரி என்ற புனைபெயரில் ஓவியங்களும் வரைந்துகொண்டிருந்தார்.

கொழும்பிலிருந்து வெளியான சுதந்திரன் பத்திரிகையின் மற்றும் ஒரு வெளியீடான சுடர் மாத இதழின் ஆசிரியராகவும் கனகசிங்கம் இயங்கியபோது,  தமிழ்ப்பிரியாவின் படைப்புகள் சுடரில் வெளிவந்து பார்த்திருக்கின்றேன்.

தொலைக்காட்சியின் வருகைக்கு முன்னர் இலங்கை மக்கள் அனைவருக்கும் இலங்கை வானொலிதான் சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக விளங்கியது.
 அதில் ஒலிபரப்பான இரண்டு  சேவைகளும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவை.  வர்த்தக சேவையும் தேசிய சேவையும் கடல் கடந்து  தமிழ்நாட்டு நேயர்களையும் பெரிதும் கவர்ந்தது.

இலங்கைச் செய்திகள்


தமிழ் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு தொடர்பில் TNA கலந்துரையாடல்

கைதான கற்பிட்டி நபரின் அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்கள் மீட்பு

மே 11 முதல் இயல்பு நிலையை கொண்டுவருவது குறித்து ஆராய்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; கொரோனா கட்டுப்பாட்டு முறைகளுடன் எளிமையாக அனுஷ்டிக்கப்படும்

பிரித்தானிய அமைச்சரான ரணில் ஜயவர்தன

அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கப்பட்டோர் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய பெயர்

அவுஸ்திரேலியாவிலிருந்து மேலும் 272 பேர் வருகை



தமிழ் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு தொடர்பில் TNA கலந்துரையாடல்




தமிழ் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு தொடர்பில் TNA கலந்துரையாடல்-TNA Special Meeting With Mahinda Rajapaksa at Wijerama
பிரதமருடன் TNA பிரத்தியேக சந்திப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று (04) பிற்பகல் விஜயராம மாவத்தையிலமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பது குறித்தும் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவும் இதன் போது முக்கியமாக ஆராயப்பட்டதாக அறிய வருகிறது.

உலகச் செய்திகள்


அமெரிக்க எதிர்ப்பையும் மீறி உலக சுகாதார ஸ்தாபனம் சீன அரசுக்கு பாராட்டு

அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு மலேரியா மாத்திரை பலன் அளிப்பதாக தகவல்

வௌவால்களை ஆராயும் சீனப் பெண்ணை​ விசாரிக்க அமெரிக்கா வலியுறுத்தல்

இத்தாலியில் 2 மாத ஊரடங்கு தளர்வு

கொரோனா: அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு சீனா பதிலடி

ஆதாரமின்றி குற்றம் சாட்டக் கூடாது: அமெரிக்காவுக்கு ஐ.நா. கண்டனம்

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது இத்தாலி

கொரோனா வைரசுக்கு எதிரான போரின் அடுத்த கட்டத்தில் அமெரிக்கா இருக்கிறது

கொவிட்-19: கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில் 'இரண்டாவது அலை' தாக்கம் பற்றி கடும் எச்சரிக்கை



அமெரிக்க எதிர்ப்பையும் மீறி உலக சுகாதார ஸ்தாபனம் சீன அரசுக்கு பாராட்டு





சுவீடசிக்ஸ்டி - அடுத்த வீட்டுப் பெண் - சுந்தரதாஸ்

.


தமிழில் புராதன கதைகள், சரித்திர கதைகள், சமூக கதைகள் என பல படங்கள் உருவாகிய காலத்தில் நகைச்சுவை கதைகளையும் கொண்டு முழுநீள ஹாஸ்ய படங்களும் உருவாகிக் கொண்டிருந்தன. அவ்வாறு 1960ம் ஆண்டு உருவான படம் அடுத்த வீட்டுப் பெண்.

ஆரம்பத்தில் வங்காள மொழியிலும், பிறகு தெலுங்கிலும், பின்னர் தமிழிலும் இந்தக் கதை படமாக்கப்பட்டது. அம்மாயி என்ற பெயரில் தெலுங்கில் உருவான இப்படத்தில் நடித்த அஞ்சலிதேவி தமிழ் படத்திலும் கதாநாயகியாக நடித்தார். படத்தை அஞ்சலி பிக்சர்ஸ் சார்பில் அவரின் கணவர் பிரபல இசையமைப்பாளர் ஆதிநாராயண ராவ் தயாரித்தார்.

வசதி மிக்க குடும்பத்தைச் சேர்ந்த மன்னார் என்ற இளைஞனுக்கு அடுத்த வீட்டுப் பெண்ணான நீலா மீது காதல் பிறக்கிறது. நீலாவோ ஆடல் பாடல்களில் நாட்டம் கொண்டவள், போதாக்குறைக்கு  துடுக்கானவளும் கூட, வெகுளியான மன்னாருக்கு சுத்தமாக பாட வராது இதனால் தன் நண்பர்களை காதலுக்கு உதவும் படி கேட்கிறார்.மன்னார் வாயசைத்து பாவனை செய்ய நண்பன் மறைந்திருந்து பாடுகிறான். நீலா மன்னார்தான் பாடுவதாக எண்ணி அவனை காதலிக்கிறாள் .

இப்படி அமைக்கப் படட கதையில் பிரபலமான பல நகைச்சுவை நடிகர்கள் நடித்திருந்தார்கள். மன்னாராக டி ஆர் ராமச்சந்திரநும் அவரின் நண்பர்களாக கே ஏ தங்கவேலு, ஏ கருணாநிதி , சட்டாம்பிள்ளை வெங்கடராமன் , பிரண்ட் ராமசாமி ஆகியோர் நடித்தனர்.இவர்களுடன் கே சாரங்கபாணி,முத்துலட்சுமி ,பக்கிரிசாமி ஆகியோரும் உள்ளனர்.


கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -11 கற்பித்தலுடன் மாணாக்கரை நல்வழிப்படுத்துதலும் சமுதாயப்பணிதான்


யாழ். பரியோவான் கல்லூரியிலிருந்து  பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பிருந்தும், எனது குடும்பத்தின் நிலைமையினால் நான்  அந்த வாய்ப்பினை  இழந்தேன்.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் அம்பி மாஸ்டராக நான் புதிய அவதாரம் எடுத்தபோது,  மாணவர் ஒழுக்கத்தையும்  கவனிக்கவேண்டிய Discipline Master  என்ற பணியும் என்மீது சுமத்தப்பட்டது.
தகுதியுள்ள மாணவ – மாணவிகளை மாணவர் தலைவர்களாக நியமித்து, ஒழுங்குமுறை நிலைநாட்டும் முயற்சியில் மாணவர்களையும் ஈடுபடவைக்கும் பொறுப்பு என்மேற் சுமத்தப்பட்டது.
நான் படித்த கல்லூரியிலே மாணவர் தலைவனாகப்பெற்ற அனுபவமும் அதிபர் அருளானந்தம் வழங்கிய சான்றிதழும் இளமையிலேயே எனக்கு அப்பொறுப்பைச் சுமத்தின எனலாம்.
ஒழுங்கு முறையை நிலைநாட்டுதற்குச் சிறந்த வழி, போதனையும் கட்டுப்பாடும் மட்டும் அல்ல. நடத்தையால் முன்மாதிரி காட்டுதலே முதலில் தேவை என்பதை நான் உணர்ந்தேன்.
அதனால், அக்காலப்பகுதியில் புகைபிடிக்கும் பழக்கம் உள்ள நான், பாடசாலையிலும் மாணாக்கர் முன்னிலையிலும் புகைப்பதை நிறுத்தினேன். பாடசாலைக்கு நேரத்துக்கு வரவேண்டும். அதைச்சொல்வதிலும் பார்க்க நாமே அதைச்செய்தல் வேண்டும். மணி அடித்துச் சில நிமிடங்களுள் வகுப்பறைக்குச் சென்று பாடத்தை துவங்கவேண்டும். இப்படிச் சில செயல்களைச் செய்ததன் மூலம் ஒழுங்கு முறையை நிலை நிறுத்த முடிந்தது.
பரமசாமி வாத்தியார், பீற்றர் சோமசுந்தரம் ஆகியோர் காட்டிய வழியையும் நான் விரைவிலேயே தொடர்ந்தேன். வட இலங்கை ஆசிரியர் சங்கம் நடத்திய ஜே.எஸ். சி பரீட்சைக்கும் சிரேஷ்ட தராதர எஸ்.எஸ்.சி. பரீட்சைக்கும் தயாராகிய எனது வகுப்பு மாணாக்கருக்கு இலவசமாக வகுப்புகள் நடத்தி மனநிறைவு பெற்றேன். மற்றைய ஆசிரியர்களின் வகுப்பு மாணாக்கரும் விரும்பிவந்து படித்தனர் என்பது பெரும் மனநிறைவு தந்தது.

விளக்கிவிடும் வீணர்களைக் கழுவேற்ற வேண்டும் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... ஆஸ்திரேலியா


அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 13 - பவுனி அல்லது சவணிக்கை


பவுனி அல்லது சவணிக்கை
அமைப்பு
மத்தளம் போன்ற உருண்ட வடிவத்தில் உடுக்கையைவிட பெரிதான இக்கருவியின் ஒருதலை சிறுத்தும், மற்றொன்று பெருத்தும் காணப்படுகிறது. சிறுத்த தலைப்பகுதியில் உடும்புத்தோல் போர்த்தப்பட்டுள்ளது. பெருத்த தலைப்பகுதி திறந்தநிலையில் இருக்கிறது. தோலின் மையப்பகுதியில் சிறிய ஓட்டையிட்டு, அதில் ஒரு நரம்பால் முடிச்சிட்டு, அதன் எதிர்நுனி திறந்த தலைப்பகுதி வழியாக வெளியில் வருகிறது. இடதுகையால் அந்த நரம்பை இறுக்கமாக இழுத்துப் பிடித்துக்கொண்டு, வலதுகையின் விரலால் அந்த நரம்பைச் சுண்ட, அந்த அதிர்வு தோலில் எதிரொலித்து, உடுக்கையை மீறிய உக்கிரமான நாதம் வெளிப்படுகிறது. மற்றொரு விரலில் சிறு சலங்கையை மாட்டிக்கொள்வதால் அந்தக் கலவையிசை இசைக்கப்படும் இடத்தில் அருளைச் சுரக்கிறது.

பொறுப்புடனே நடந்துநாம் போக்கிடுவோம் கொரனோவை ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... ஆஸ்திரேலியா



வாழ்நாளை வரமாக்கி சேவையாற்றும் மருத்துவர்கள்                                                 
மனவுளைச்சற் குட்பட்டு தற்கொலைக்கு முயலுகிறார்                                                
மதுகுடிக்கும் பெருங்குடியர் மதுகிடைப்ப தில்லையென                                           
மனவுளைச்சற் காளாகி தற்கொலைக்கு போகின்றார்                                                 

உயிரெடுக்கும் மதுவதனை உயர்வெனவே கருதுகிறார்                                          
உயிர்கொடுக்கும் மருத்துவரை உணரவவர் மறுக்கின்றார்                                               
உயிர்பறிக்கும்  கொரனோவின் உக்கிரத்தை அறியாமல்                                          
உயர்குடியர் மதுவதனை நாடுவதே  வியப்பாகும் !

கூழ்குடிக்க வழிகாணா அலைகிறது ஒருகூட்டம்                                             
கும்மாளம் அடிப்பதற்குத் துடிக்கிறது மறுகூட்டம்                                               
குடிக்கமது இல்லையெனக் குதிக்கிறது பெருங்கூட்டம்                                           
அழித்திவிடும் கொரனோவோ அதுபாட்டில் பெருகிறது                                           

சுற்றுலா கவிழ்ந்ததென்று சுற்றுவார் அலறுகிறார்                                              
சுயநினைவு இல்லாமல் திரிகிறார் ஒருகூட்டம்                                                 
கற்பனையில் மூழ்கிடுவார் கஞ்சாவை நாடுகிறார்                                                 
கருவறுக்கும் நினைப்போடு கொரனோவோ வருகிறது  !                                          

அப்பா எனும் ஆயிரஞ் சிரிப்பு - வித்யாசாகர் - கவிதை!


டித்தாலும் திட்டினாலும்
முண்டம் முண்டமென மண்டையில் கொட்டினாலும்
அப்பா வீட்டிலிருக்கும் நாட்கள் தான்
எங்களுக்கு வசந்தமான நாட்கள்..

அப்பா கையில் அடி வாங்குவது
அவ்வப்பொழுது இறந்து பிறப்பதற்கு சமம்..

நம்மை புதிதாகப் பெற்றெடுக்க
அனுதினமும் நெஞ்சில் சுமக்கும் அம்மாக்களாகவே
நிறைய அப்பாக்களும் இருக்கிறார்கள்..

கூடேறும் பூக்கள்... (அணிந்துரை) வித்யாசாகர்!!


நானிலம் போற்றும் நன்மகளின் பாட்டு..

வாழ்க்கையின் திசை வெவ்வேறாக இருப்பதுபோல கவிதையின் ஆழமும் சுவையும் கூட மனிதர்களையொத்து வெவ்வேறாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் எழுதும் கவிதைக்கு புதுப்புது முகங்களும் கடலாழ அர்த்தங்களும் கூட விளங்குவதுண்டு. இதுநாள் வரை அவர்களுக்கு வலிப்பதையும் பிடித்ததையும் கூட அவர்கள் நாக்கின்மீது நின்று தாங்களாகவே ஆண்கள்தான் அதிகம் பேசிக்கொண்டிருந்தோம்இப்போது அந்த இடைச் சுவர் உடைந்து அவர்கள் நேராகவே பேசும் காலம் மிகச் சிறப்பானதாக அமைந்திருக்கிறது.

அவர்களுக்கு எப்படி எது பிடிக்கும், அவர்களுக்கு எது மாறானது, எது நேரானது என அனைத்து எழுதா குறைகளையெல்லாம் இனி பெண்களே எண்ணற்றோர் எழுதும் பொற்காலமிதில்; நல்முத்து ஒன்று சிப்பிக்குள்லிருந்து ஓடுடைத்து வெளிவந்தாற் போல நம் கவிஞர் இறையாளும் வந்திருக்கிறார்.

மழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 35 முருகபூபதி


ஞ்சுளாவின் அறையிலிருந்து ஒலித்த கர்ணகடூரமான வார்த்தைகள் வீட்டின் கூடத்தில் ஷோபாவில் உறங்கிக்கொண்டிருந்த ஜீவிகாவின் துயிலையும் கலைத்துவிட்டது.  அதுவரையில் அவள் இனிமையான கனவில் சஞ்சரித்துக்கொண்டிருந்தாள்.
“  அபிதா… அது என்ன சத்தம்..? மஞ்சுளா  இந்தக் காலைவேளையில் யாரைத் திட்டிக்கொண்டிருக்கிறாள்.  என்ன பேசினாலும் யாரோடு பேசினாலும்,  நிதானமாக பேசச்சொல்லுங்கள்.  காலங்காத்தாலை நல்ல வார்த்தைகள்தான்  அவளின்ட வாயில் இருந்து வருது.  “ 
“   மஞ்சுளா மிகவும் கோபத்தில் இருக்கிறா. இடையில் நான் போய் ஏதும் சொன்னால், என்னையும் வேறு திட்டுவா அம்மா.  “ என்ற அபிதா தயக்கத்துடன் மஞ்சுளாவின் கதவைத்திறப்பதற்கும்,  “  ஏய் மஞ்சுளா… பிளீஸ் ஸ்டொப்  “  என்று ஜீவிகா கத்துவதற்கும் ஒத்திசைவாகியது.
மஞ்சுளா, கைத்தொலைபேசியை கட்டிலில் வீசி எறிந்துவிட்டு, அறையினுள்ளே பிரவேசித்த அபிதாவிடத்தில்  பாய்ந்து விழுமாப்போல் கர்ஜித்தாள்.
 “ எல்லாம் உங்களால் வந்த வினை.  நீங்கள் உங்கட வேலையை மாத்திரம் இங்கே பார்த்துக்கொண்டிருந்தால் போதும். எதற்காக  அந்த தேவடியாள் போன் எடுத்தபோது பேசினீங்க… நீங்கள் பேசியபடியால்தான் நான் இங்கேதான்  இருக்கிறேன் என்பது அந்தத் தோறைக்கு உறுதியாகத் தெரிந்திருக்கிறது.  அந்த ரிங்டோன் வந்தது எனது போனுக்கு. நீங்கள் ஏன் வந்து எடுத்துப்பேசினீங்க…. சொல்லுங்க…?  “
அபிதா விறைத்தவாறு தலைகுனிந்து நின்றாள்.  இவ்வளவுகாலமும் கனிவோடும் பரிவோடும் தன்னோடு பேசிய மஞ்சுளாவா இப்போது, இந்த காலைப்பொழுதில் இப்படி  அபசுர சுப்ரபாதம் இசைப்பது.  பெற்றவளின் செய்கை இந்த மனதை எவ்வளவு தூரம் காயப்படுத்தி குறுகவைத்துள்ளது..? மஞ்சுளா பாவம்தான்.  தாயின் ஆதரவோ,  தந்தையின் பக்க பலமோ இல்லாமல் தனிமரமாகிவிட்டாள்.
மஞ்சுளா வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தவாறு நிலைக்கண்ணாடி முன்னால் நின்று தலையை கோதி சரிசெய்து வண்ணாத்திப்பூச்சி வடிவத்திலிருந்த கிளிப்பை பொருத்தினாள்.
தனக்குப்பின்னால் தலைகுனிந்தவாறு நிற்கும் அபிதாவைப்பார்த்ததும் மஞ்சுளாவின் கோபம் சற்று தணிந்தது. 
“  வெறி சொறி அபிதா “ என்று மஞ்சுளா சொன்னபோது,  அபிதாவின் கண்களிலிருந்து இரண்டு சொட்டு துளி விழுந்ததை அவதானித்தாள்.

முகத்தை அலங்கரிக்கும் முகக்கவசம் அமெரிக்க அதிபரும் சாமானிய மக்களும் ரஸஞானி


முழுஉலகையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸிற்கு மத்தியில்  அதனை எதிர்கொள்வதற்கான தேவைகளும் அதிகரித்துவருகின்றது.
கடந்த  காலங்களில்,  வல்லரசுகள்  தங்கள்  வலிமையை  ஆயுதபலத்தின் ஊடாக  காண்பித்து, எதிரிநாடுகளை அச்சுறுத்தி வந்தன.
தங்கள் நாடுகளின் சுதந்திர தினக்கொண்டாட்டங்களின்போது நடத்தும் ஊர்வலங்களில் ஆயுதப்படையினரின் அணிவகுப்பிற்கு முதன்மையை வழங்கி,  கனரக ஆயுதங்களை காட்சிப்படுத்தும்  ஊர்திகளைக்காண்பிப்பதன் மூலமும் தங்கள் பலத்தை வெளியுலகிற்கு காண்பித்து வந்தன.
கடந்த 2019 ஆம் ஆண்டு  முடிவுற்ற வேளையில்,   “  உங்கள் வசம் இருப்பது கண்ணுக்குத் தெரியும் மனித உயிரைக்குடிக்கும் போராயுதங்கள், இதோ  பார் மனித குலத்தையே இனம் – மதம் – மொழி – சாதி வேறுபாடின்றி கொன்றழிக்கத்தக்க ஆயுதம் கண்களுக்கு புலப்படமால் வந்திருக்கின்றேன்  “ என்று தனது கோர முகத்தை காண்பிக்காமல் வந்து  தொற்றியிருக்கிறது இந்த வைரஸ் கிருமி!
கடந்துவிட்ட  2019 ஆம் ஆண்டில் மாத்திரம்  இந்த வல்லரசுகள் முடிவுறாமல் நடத்திவந்த நீடித்த போருக்கு மாத்திரம் செலவிட்ட தொகை :  383,400,000,000,000 என்று புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

ஊடக அறிக்கை: 8-5-2020 இலங்கையில் நல்லாட்சிக்கான அவுஸ்திரேலியாவின் அனுசரணை அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கை


Australian Advocacy for Good Governance in Sri Lanka Inc.
ශ්‍රී ලංකාවේ යහපාලනය සඳහා වූ ඔස්ට්‍රේලියානු සහයෝගිතාව
இலங்கையில் நல்லாட்சிக்கான அவுஸ்திரேலிய அனுசரணை இணை
Reg No. A0062162S

கொவிட்-19 பரவிக்கொண்டிருப்பது மிகத்தெளிவாக இருந்த வேளையிலும், உலக சுகாதார அமைப்பு உலகளாவிய நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியிருந்த போதிலும், இலங்கை ஜனாதிபதி பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து –– அதுவும் அரசியலமைப்பு அனுமதிக்கும் அதி முதல் தினமான பங்குனி 2 இல் கலைத்து –– பொதுத்தேர்தலுக்கு உத்தரவிட்டார். எனினும் கொரொனா தொற்றினால் மக்கள் எதிர்கொண்டுள்ள பாரிய சுகாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணைக்குழு தேர்தலை ஏப்ரல் 25 இல் இருந்து ஜுன் 20 இற்கு தள்ளிப்போட்டது. தற்போதைய சூழ்நிலையில், சுதந்திரமும் நியாமுமான தேர்தல் ஒன்று இடம்பெற முடியுமா என்ற கவலை பல்வேறு அரசியல் கட்சியினர் மத்தியில் காணப்படுகிறது.
இன்றைய இடைக்கால அரசு சுகாதார நெருக்கடியை பொதுத் தேர்தலில் அரசியல் லாபம் பெறுவதற்குப் பயன்படுத்துவதாகத் தோன்றுகிறது. கொடிய கொரோனாவைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமுலில் இருந்தபொழுது, அரசாங்கத்துடன் இணைந்துள்ள அரசியல் கட்சிகள் வீட்டுக்கு வீடு பிரச்சாரங்களையும் கூட்டங்களையும் நடத்தி தமது தேர்தல் வெற்றியை மேம்படுத்தினர். அரசுசார் அரசியல்வாதிகள் கொவிட்-19 நிவாரணப் பொதிகளை நாடு பூராவும் வினயோகித்திருந்ததும் பரவலாக அறியப்பட்டதே. நாட்டில் மிகவும் வறுமைப்பட்ட பலவீனமான மக்களிடமிருந்து அரசியல் லாபம் பெற செய்யப்பட்ட ஓர் தரக்குறைவான கட்டாயப்படுத்தலாக –– ஏன் லஞ்சமாகவே –– பலரும் இதைப் பார்க்கிறார்கள். இதுபோன்ற கேள்விக்குரிய நிவாரணம் மற்றும் நிதியுதவித் திட்ட்ங்களைக் கண்டிப்பவர்கள், கடுமையான போலீஸ் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற ஜனநாயகத்தில் அரசாங்கம் எப்போதும் “மக்களின், மக்களால், மக்களுக்காக” ஆனதாய் இருத்தல்வேண்டும். இலங்கையில் எப்போதாவது மக்களை முன்னிறுத்த சிறந்ததோர் நேரம் இருந்திருக்குமாயின், அது இப்பொழுதுதான். ஓர் அரசாங்கம் ஆளப்படுவோரின் ஒப்புதலுடன் இருப்பது அவசியம் மட்டுமல்லாது (இவ்வரசாங்கம் அதை இன்னும் பரிசோதிக்க வேண்டியுள்ளது), தனக்கு வாக்களித்தவர்களை மட்டுமின்றி, ஏனைய வாக்காளர்களையும் அவர்தம் பிரதிநிதிகளையும் மதித்து நடத்தல் வேண்டும்.

VIC LANKA COVID AID அறிவித்தல்