விக்ரோரியா மாநிலத்தில் இரண்டு பிள்ளைகள் பரிதாபமாக மரணம்
                                                                                                                  செய்தித்தொகுப்பு : கரு

சென்ற ஞாயிற்றுக்கிழமை மே மாதம் 30ம் திகதி விக்ரோரியா மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் இரண்டு பிள்ளைகள் இறந்திருப்பதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 9 வயதும் 7 வயதும் நிறைந்த சகோதரர்கள் மூரூப்னா என்னும் இடத்தில் வசித்துவந்தவர்கள் ஆவர். இவருடைய தாயார் 29 வயதுள்ளவர் தனது பிள்ளைகளைக் கொலை செய்திருக்கலாம்
எதிர்பார்த்தது போல சென்ற கிழமை வரி உயர்த்தப்படவில்லை.
                                                                                                   செய்தித்தொகுப்பு : கரு
வட்டி வீதத்தை ஏற்றாமல் 4.5 வீதத்தில் விட்டுவிட்ட மத்திய வங்கியின் முடிவு வீடு கடன் வைத்திருப்போர் எல்லோருக்கும் மனநிம்மதியைக் கொடுத்தது. வட்டி வீதம் எப்படி ஏறி இறங்கியிருப்பதை கீழே பார்க்கவும்


                                                பிறந்தநாள் வாழ்த்து

                                          செல்வி அபிதாரணி சந்திரன்

மெல்பேர்ண் HAMPTON PARK ஐச் சேர்ந்த அபிதாரணி சந்திரன் அவர்கள் தனது 6 வது பிறந்தநாளை தனது இல்லத்தில் விமர்சியாக கொண்டாடுகின்றார்.


இவரை அம்மம்மா,அப்பா, அம்மா அண்ணா துவாரகனும், பெரியம்மாமார் பெரியப்பாமார், மாமாமார், மாமிமார், அண்ணாமார் அக்காமார் துளசி அன்ரி, சித்தப்பா, மச்சாள்மார், நண்பர்கள் அனைவரும் மாணிக்க விநாயகர் அருள் கொண்டு எல்லாப் புகழும் பெற்று பல்லாண்டு வாழ்க என அபிதாரணியை வாழ்த்துதகின்றனர்.
லெநொக்ஸ் கெட்(Lennox Head )அழிவுக்குரிய இடமாக நியமிக்கப்பட்டுள்ளது.

ஆகக்குறைந்த சம்பளம் வாரத்துக்கு 26 வெள்ளிகளாக உயர்வு



லெநொக்ஸ் கெட்(Lennox Head )அழிவுக்குரிய இடமாக நியமிக்கப்பட்டுள்ளது

நேயர்  ஒருவர் படித்ததில் பிடித்தது

மாரடைப்பைத் தடுக்கும் வெள்ளைப் பூண்டு.


வெள்ளைப் பூண்டு அபூர்வ மருத்துவ சக்தி படைத்தது. அதன் பெருமையைத் தமிழர்கள் நீண்ட நெடுங்காலமாகவே அறிந்திருந்தார்கள். வெள்ளைப் பூண்டின் தாயகம் மத்திய ஆசியாவாகும்;.

சேக்ஸ்பியர் காலம் வரை ஆங்கிலேயர்களுக்கு வெள்ளைப் பூண்டு உவப்புத் தரவில்லை. இந்தியாவிற்கு வெளியே முதன் முதலில் வெள்ளைப் பூண்டை உபயோகித்தவர்கள் எகிப்தியர்கள்.
மரண அறிவித்தல்
                                    திரு பஸ்தியாம்பிள்ளை அன்ரனிப்பிள்ளை


                                                                  இறப்பு:05.06.2010
இளவாலையை பிறப்பிடமாகவும் Seven hills Australia வை வசிப்பிடமாகவும் கொண்ட  இளைப்பாறிய அதிபர்
                             திரு பஸ்தியாம்பிள்ளை அன்ரனிப்பிள்ளை
                              05 .06 .2010 மதியம் இறைவன் திருவடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் , பெரியவிளானைச சேர்ந்த தருமர் நீக்கிலாப்பிள்ளை ஞானப்பு தம்பதிகளின் அன்பு மருமகனும் ,அருளம்மாவின் அன்புக் கணவரும், கொன்சிலா மதுபாலா (Seven hills ),காலஞ்சென்றவர்களான கிறிஸ்ரி பாலேந்திரா, ருவிங்கிள் பாலேந்திரா வின் பாசமிகு தந்தையும், ஜெறோம் எமிலியானஸின் அன்பு மாமனாரும்,சந்தியாப்பிள்ளை பஸ்தியாம்பிள்ளை, மரியாம்பிள்ளை பஸ்தியாம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிறின் சகானா, இவோன் இன்பனா,மெரின் ஆரணா ஆகியோரின் தங்கத்தாத்தாவும் ஆவார்

அன்னாரின் புகழுடல் 09.06.10 புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை Sunny Holt Rd, Blacktown, Gardian Funeral Palar இல் பார்வைக்காக வைக்கப்படும்

இறுதிச்சடங்குகள் 10.06.10 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு Grantham Rd Seven hills இல் அமைந்துள்ள Our lady of Lourdes  தேவாலயத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து King St Minchinbury
Pine Grove சேமக்காலையில் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்ரார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்
தொடர்புகளுக்கு: மதுபாலா (02) 9920 4900
                                     ஜெரோம் 0425 233 287
பகவத் கீதை    - நியமங்கள்





ஹரே கிருஷ்ணா!


அனைவருக்கும் வணக்கம். போன வார கட்டுரை குறித்து தங்கள் கேள்விகள் அனைத்திற்கும் நன்றி! நான் இந்தப் பகுதியில் எழுதுவது தங்களுக்கு எந்த அளவு புரிகின்றது என்பதை நான் தெரிந்து கொள்ள உங்கள் கருத்துக்களும் கேள்விகளும் மிக அவசியம். தாங்கள் எதாவது குறிப்பிட்ட தலைப்பு குறித்து நான் எழுத வேண்டும் என்று கருதினால் தயங்காமல் எனக்கு தெரிவியுங்கள்.

சபிக்கப்படுவது உண்மைதானோ
                                                                                                                      அப்பு சிவா



கொட்டை எழுத்தில் 'குழந்தை தொழிலை ஒழிப்போம்'
கீழே அதில் பாதியில் 'இங்கனம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு இயக்கம்'
வயிற்றுப் பிழைப்புக்கு போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்தவனுக்கு வயது இன்றோடு எட்டு

****

இது வரவேற்பறை, இது படுக்குமறை
இது படிக்குமறை, இது பூஜையறை
இது நன்றியுள்ள ஜிம்மியின் அறை
ஆனால், அம்மா அப்பா அறை அடுத்த தெருவில் இருக்கும் முதியோர் இல்லத்தில்

****

திங்கட்கிழமை இவள் ஒருவனுக்கு ரம்பை
செவ்வாய்க்கிழமை அடுத்தவனுக்கு ரதி
அடுத்த நாள் மற்றொருவனுக்கு தேவதை
வயிற்றைக் கழுவதற்காக அடிக்கடி வயிற்றை கழுவும் இவள் பெயர் விலை மாது.
வில்லாவூட் அகதி முகாமில் பிறந்த தமிழ்ப்பிள்ளை
ஒரு வருடத்திற்கு முன் படகு மூலம் வந்த தமிழ் அகதிகள் கிறிஷ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டார்கள். பின்னர் இவர்கள் வில்லாவூட் அகதி முகாமிற்கு மாற்றப்பட்;டார்கள். கடந்த ஏப்ரல் மாதம் மூன்று குழந்தைகள் தடுப்பு முகாமில் பிறந்துள்ளார்கள். பிள்ளை பிரசவத்திற்கு மட்டும் தாய்மார்கள் மருத்துவநிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பிள்ளைகள் பிறந்து சில நாட்களில் மீண்டும் தடுப்பு முகாமிற்கு கொண்டு வரப்பட்டார்கள்.
உஷா ஜவாகரின் நூல் வெளியீட்டு விழா 12.06.2010

சிட்னியில் வசிக்கும் எழுத்தாளர் உஷா ஜவாகர்   அவர்களின் "சிதைகிறதே செந்தமிழ்" என்னும் கவிதை நூலும் "குறும்புக்கார இளவரசியும் கனிவான தேவதையும்" என்னும் சிறுவர் கதைகள்  நூலும் அமரர் 
ச.ஏகாம்பரநாதனின்   இந்துமதம் ஓர் ஆழமான பார்வை என்ற நூலும் ஜூன் மாதம் 12 ம்  திகதி 6 .30 மணிக்கு சிட்னியில் Homebush High School மண்டபத்தில் திரு திருநந்தகுமார் தலைமையில் வெளியிடப்பட இருக்கிறது.

இளமையின் இயல்பும், முதுமையின் ஏக்கமும்!



சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் புறத்திணை சார்ந்தவை இரண்டு. அவை புறநானூறும், பதிற்றுப்பத்தும் ஆகும்.
பதிற்றுப்பத்து சிறப்புப் பார்வையில் சேர மன்னர்கள் பற்றிய வரலாற்றுப் பதிவாய் அமைந்தது.

புறநானூறு, கடவுள் வாழ்த்து உள்பட 400 அகவற்பாக்களைக் கொண்டது. இதனைத் தொகுத்தோர், தொகுப்பித்தோர் பெயர்கள் தெரியவில்லை. இத்தகைய சீரும் சிறப்பும் வாய்ந்த புறநானூற்றில் 243ம் பாடலாக இடம் பெற்றிருப்பது தொடித்தலை விழுத்தண்டினார் பாடல்,
கீதவாணி விருதுகள் 12 June 2010


பக்கம் புரண்ட பட்டறிவுப்  புத்தகம் "தீட்சண்யம் "

நாங்கள் பேசுவதில்லை
அதனால்
நாங்கள் ஊமைகளென்பதல்ல
நாங்கள் பேசுவதில்லை
ஏனெனில்
நீங்கள் ஊமையாகி விடுவீர்களென்பதால்
“தீட்சண்யன்” என்னும் எஸ்.ரி.பிறேமராஜன்

இன்னும் மனதில் ஆறாக்காயமாக இருக்கின்றது, போன வருசம் இதே நாட்களில் மெல்ல மெல்ல ஒவ்வொன்றாய்த் தொலைந்து போனதுவும், எல்லாம் தொலந்து இன்று வெறும் சூன்ய வெளியில் வெறித்து நிற்பது போல. போராட்டத்தைப் போஸ்ட்மாட்டம் பண்ணி ஆளாளுக்கு ஆய்வுகளும், நுண்ணிய ஆராய்ச்சிகளும்
பூவும் பொட்டும்    (சிறுகதை)

                                                                                    உஷா ஜவாகர் ஆஸ்திரேலியா


ஆஸ்திரேலியாவில் சிட்னியில் அமைந்துள்ள பிளேமிங்டன் (Flemington ) பிள்ளையார் கோயிலை நோக்கி 'விர்' என்று ஒரே சீரான வேகத்துடன் தன் புத்தம் புதிய காரை மிகவும் பெருமிதத்துடன் செலுத்திக் கொண்டிருந்தாள் விஜயகௌரி ammaa
விஜயகௌரி அம்மாளுக்கு சுமார் எழுபது வயது மதிப்பிடலாம் போன்று தோன்றியது.
தலைக்கு 'டை' அடித்திருந்தாலும் அந்த டையையும் மீறி வெளியே தெரிந்த நாலைந்து வெள்ளிக் கம்பிகள் அவளது வயதை பறைசாற்றிக் கொண்டிருந்தன.


மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில் மன்றம் சிட்னி குழுவினர் பெருமையுடன் வழங்கும் மருதடியான் கான நடனாஞ்சலி 13 .06 .10

பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டு தீயூட்டப்பட்டார்

மெல்மேன் நகரத்தின் கிழக்குப்பகுதியில் தனது சிநேகிதியை கத்தியால் குத்தியபின் அவளை காரோடு சேர்த்து எரித்துள்ளான். சென்ற செவ்வாய்க்கிழமை ஐ_ன் மாதம் 1ம் திகதி காலை 8.30 மணியளவில் ஒரு பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் தீயூட்டப்பட்ட அப் பெண் உடம்பு முழுவதும் எரிந்த நிலையில்