என்றுமே விரும்பி நான் இருக்கின்றேன் ! - மகாதேவஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா

image1.jpeg
கற்றிடும் நூல்களால் பெற்றிடும் பயனினை நற்றுணை என்று நான் நினைக்கின்றேன் 
மற்றவர் முகமதில் மகிழ்ச்சியை கண்டிட  நித்தமும் விரும்பி நான் இருக்கின்றேன் !

சொற்களை என்றுமே இனிமையாய் பேசிட எண்ணி நான் சொற்களைத் தேடுவேன் 
அடுத்தவர் மனத்தினில் அமர்ந்திடும் சொற்களால் அவர் அகம் நிறைந்திட்டால் மகிழுவேன் !

வேற்றுமை காட்டிடும் சொற்களை என்றுமே விரும்பி நான் பார்ப்பது இல்லையே 
சாற்றிடும் அத்தனை சொற்களும் நாளுமே  சங்கடம் வரா வண்ணம் வழங்குவேன் !

வள்ளும் தந்திடும் கருத்தினை நாளுமே மனம் அதில் இருத்தியே வாழ்கிறேன் 
என்மனம் நிறைந்திடும் கருத்தினை ஈய்ந்திட  என்றுமே  விரும்பி நான்  இருக்கிறேன் !

















சாதுக்களின் சாணக்கியம்: பொன் குலேந்திரன்



காலத்தோடு மாறும் மதம் கலந்த
அரசியல், சாணக்கியம்,
இன்று புது பரிணாமம் எடுக்கிறது.
இதை இந்தியா, இலங்கையில் காணலாம்
மதம் என்பது ஒரு போதை மருந்து,
காரல் மார்க்ஸ் சொன்னது உண்மை.
சிங்களம் மட்டுமே என்ற பிக்கு,
ஒப்பந்தங்களை கிழித்து எறிந்த பிக்கு,
இப்போ தமிழ் மேல் தோன்றிய திடீர் பற்றினால்
கல்முனையில் தனித்தமிழ் பிரதேசம் கேட்டு
உண்ணாவிரதம் இருக்கிறான் சாது .
வடக்கும் கிழக்கும் ஓன்று இணைய,
சாது உண்ணாவிரதம் இருக்கலாமே,
செய்வானா?

தமிழர் பிரதேசங்களில் பௌத்த கொடியை ஏற்றுவது எதை வெற்றிகொண்டதன் கொண்டாட்டம்?


21/07/2019 இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனதில் இன்னும் மாறாத ரணமாய் இருக்கும் கறுப்பு ஜூலை சம்பவம் இடம்பெற்று 36 வருடங்கள் கடந்து விட்டன. ஜூலை கலவரத்தால் உயிர் மற்றும் பொருளாதார சேதங்களுக்கு முகங்கொடுத்த தமிழ் மக்களில் பலர் நாட்டின் பல பாகங்களுக்கு இடம்பெயர்ந்த அதே வேளை, பலர் குடும்பங்களுடன் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்து விட்டனர்.
கறுப்பு ஜூலை கலவரங்களில் சுமார் 3 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதமாக்கப்பட்ட அதேவேளை  சிங்கள காடையர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகளின் விபரங்கள் பூரணமாக  வெளிவரவில்லை.
இக்கலவரத்தில் சிறைக்குள் இருந்த தமிழ்க் கைதிகளும் கொடூரமாகக் கொல்லப்பட்டமை தான் இனவாதத்தின் வெறியாட்டத்தின் உச்சமாகப் பார்க்கப்பட்டது. 25 ஆம் திகதி வன்முறை உச்சமுற்றிருந்த சந்தர்ப்பத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் 35 தமிழ்க் கைதிகளும் 27 ஆம் திகதி 18 கைதிகளும் கொல்லப்பட்டனர்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக  கட்டவிழ்த்து விடப்பட்ட மிக மோசமான சம்பவமாக கறுப்பு ஜூலை கலவரங்கள் விளங்குவதற்குக் காரணம் பாதிக்கப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையாகும். 1956 கலவரத்தில் கிழக்கு மாகாணத்தில் 150 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இரண்டு வருடங்கள் கழித்து 1958 இல் இடம்பெற்ற கலவரத்தில் 300 தமிழர்களும் 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்துக்குள் இடம்பெற்ற கலவரத்தில் 300 தமிழர்களும் கொல்லப்பட்டனர்.
ஜூலை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈட்டை பெற்றுத்தருவதற்கு பல வருடங்கள் எடுத்தன . இடம்பெற்ற சம்பவத்துக்கு அரசாங்க தரப்பிலிருந்து எவரும் பொறுப்பேற்காத அதேவேளை அச்சந்தர்ப்பத்தில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி இறுதி வரை இச்சம்பவத்துக்கு மன்னிப்பு கோரவில்லை என்பது முக்கிய விடயம்.
மன்னிப்பு கோரிய சந்திரிகா
94 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தனது இரண்டாவது பதவி காலத்தின்போது 2001 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தைப் பற்றிய அறிக்கை ஒன்றை கோரி உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்தார். பின்னர் 2004 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தை நினைவு கூர்ந்த அவர் சகல சிங்கள மக்களினதும் அரசியல் பிரதிநிதிகளினதும் சார்பாக தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

ஆசியா எனும் பணக்கார நாடுகளின் குப்பைத் தொட்டி - கானா பிரபா



“இங்கிலாந்திலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையம் சேர்ந்த  மருத்துவக் கழிவுக் கொள்கலன்கள் (biomedical waste)”
இந்த வாரம் இலங்கைச் செய்திகளில் முக்கிய இடத்தைப் பிடித்த ஒன்று. இந்தச் செய்தியை வைத்து நேற்று வரை சமூக வலைத்தளங்களில் களமாடி விட்டு ஓய்ந்து விட்டார்கள் இணையப் போராளிகள். ஆனால் இந்த மாதிரியானதொரு செயற்பாடு இன்று நேற்றல்ல ஆண்டுக் கணக்காக தென்னாசியா மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் கரையொதுங்கியதும் அந்தந்த நாடுகள் மனமொத்து இதுவரை காலமும் அவற்றை ஏற்றுக் கொண்டதும் தான் உறைக்கும் உண்மை. ஆனால் இந்தக் கழிவுகள் மறுசுழற்சிக்கான (recycling) உள்ளீடுகள் என்ற போர்வையிலேயே இதுவரை காலமும் கடல் கடந்து பயணித்து வந்துள்ளன.
இந்த மாதிரித் தம் கழிவை ஆசிய நாடுகளுக்கு அனுப்பும் வகையில் ஐரோப்பிய யூனியன் அங்கத்துவ நாடுகள் முதல் நிலையில் இருப்பதாக BBC செய்தி ஸ்தாபனம் உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால் உலகளாவிய அளவில் ஒற்றை நாடாகப் பிற நாடுகளுக்குக் குப்பையைக் கடத்தும் முதல் நிலை நாடாக ஹிஹி வேறு யார் இந்த உலகப் போலீஸ்காரன் அமெரிக்காவே விளங்குகிறது.

இலங்கைக்கு மட்டும் 12 தடவைகள், 130 கொள்கலன்களில், 27, 685 மெட்ரிக் தொன் தொழிற்சாலைக் கழிவுகள் இம்முறைமை மூலம் அனுப்பப்பட்டுள்ளவாம். இவையெல்லாம் நாடுகளுக்கிடையில் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு, பரஸ்பர புரிந்துணர்வுடன் இலங்கை போன்ற நாடுகளின் தலையில் கொட்டப்படும் குப்பைகள்.
இம்முறை வசமாகப் பிடிபட்ட மருத்துவக் கழிவுக் கொள்கலனை இலங்கையில் பொறுப்பேற்ற நிறுவனம், வழக்கமாக இங்கிலாந்திலிருந்து மறு சுழற்சிக்காக மெத்தைகள், விரிப்புகளை வழக்கமாக இறக்குமதி செய்யும் நிறுவனமாம். தேசிய சூற்றாடல் சட்ட விதி 47, 1980 இன் பிரகாரம், அச்சுறுத்தல் மிகுந்த கழிவுகளை இறக்குமதி செய்வோர் “சுற்றாடல் பாதுகாப்பு உரிமத்தை (Environmental Protection License பெற்றிருக்க வேண்டும். எனவே பிடிபட்ட கொள்கலன்களைத் திருப்பி அனுப்புவதோடு , பிடிபட்ட தனியார் நிறுவனம் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

பிரதமரின் கூற்று சாத்தியமா?


17/07/2019 எட்­டாக்­க­னி­யாக உள்ள அர­சியல் தீர்வை இன்னும் இரண்டு வரு­டங்­க­ளுக்குள் எட்­டி­விட முடியும்  என்ற பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அறி­விப்பு, சில­ருக்கு காதில் தேன் வந்து பாய்ந்­தது போன்ற உணர்வை ஏற்­ப­டுத்தி இருக்­க லாம். 
ஏழு தசாப்­தங்­க­ளாகப் புரை­யோடிப் போயுள்ள இனப்­பி­ரச்­சி­னை­யினால் நாடு எண்­ணற்ற பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்­தி­ருக்­கின்­றது. நாட்டின் பொரு­ளா­தாரம், மக்­களின் சீரான வாழ்­வியல், பல்­லின மக்­க­ளி­டை­யே­யான நல்­லி­ணக்கம், நல்­லு­றவு, சுக­வாழ்வு, ஐக்­கியம் போன்ற பல பிரச்­சி­னை­க­ளுக்கு நாளாந்தம் முகம் கொடுக்க வேண்­டிய நிலை­மைக்கு மக்கள் ஆளா­கி­யி­ருக்­கின்­றார்கள். 
தீர்க்­கப்­ப­டாத இனப்­பி­ரச்­சி­னையை முத­லீ­டாகக் கொண்டும், அதனைப் பல்­வேறு வழி­களில் திரித்தும், வகுத்தும், பெருப்­பித்தும் சந்­தர்ப்­ப­வாத அர­சி­யல்­வா­திகள் சுய­லாப அர­சி­யலை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

நடேசன் எழுதிய இரண்டு நாவல்கள்: கானல் தேசம் - உனையே மயல்கொண்டு - மதிப்பீடு : சி. செல்வராசா - சிட்னி




ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் . 1972-76 வரை பேராதனைப்பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில் நிறையச் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகளும் வாசித்து மகிந்தேன்.

அதன் பின்னர்,  அரசறிவியலில் சிறப்புத்தேர்ச்சி பெற்று 1977-87 வரை பத்தாண்டுகள் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்தபோதோ அல்லது 1987 இல்  அவுஸ்திரேலியா வந்து கடந்த 32 வருடங்களாக இந்த நாட்டில் வாழ்கின்றவேளையிலோ இந்த அரசறிவியல் மற்றும் இலங்கை அரசியல் பற்றி வாசித்து எழுதியது மட்டுமே.
 
நாவல், சிறுகதை, கவிதை பெரிதாக வாசித்து இன்பம் பெறவில்லை. இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பின் நண்பர் நொயல் நடேசனின் “கானல் தேசம்” பற்றி அறிந்து அதை ஆவலுடன் வாங்கி வாசித்தேன்.

இலங்கை அரசியலுடன்,  அதுவும் ஆயுதப்போராட்ட அரசியலுடன் இணைந்த கதை என்பதால் ஆர்வத்துடன் வாசிக்கத்தொடங்கினேன். பல்வேறு உலக விளையாட்டுப்போட்டிகளைப் பார்க்கும் குழப்பங்களுக்கு மத்தியில் வேகமாக வாசித்து முடித்தேன்.

தன்மைக்குத் திருப்தியாக இருந்தது . “ இந்த மிருக வைத்தியரா இப்படி எழுதியிருக்கிறார்? ” என்று வியந்து போனேன்.

சண்டைக் காலத்தில் ஊரில் சீவிக்காதுவிட்டாலும் ஊரில் இருந்தவர்போல் இடங்கள், நிகழ்வுகள், போராளிகள் போராடிய இடங்கள், அவர்கள் நடத்திய வதைமுகாம்கள், சித்திரவதைகள் மேலும் வெளிநாடுகளில் இயக்கங்களின் ஆதரவாளர்கள்/ அடியாட்கள் செய்த திருகுதாளங்கள் , பணமோசடிகள் என்பவற்றோடு அரசாங்கங்களின் உளவு வேலைகள் எனப் பல்வேறு தகவல்களை நாவலினூடாக அவர்   சொல்லும்விதம் அதில் நாவலின் கதையோட்டம் இரசனை குழம்பிவிடாமல் பார்த்துக்கொண்டு கதையை நகர்த்திச்செல்லும் உத்தி என்பன மிகவும் சிறப்பாக அமைந்து ஒரு நல்ல நாவலை , அதுவும் நம் வாழ்வோடு இரண்டறக்கலந்த ஒரு பக்கத்தைப் பின்நோக்கிப் புரட்டிப்பார்க்க  நடேசனின் “கானல் தேசம்” எனக்கு உதவியது.

“எல்லாப் பொடியளும் எந்த இயக்கம் என்று பாராமல் எமக்கு விடுதலை பெற்றுத்தரத்தானே போனவங்கள். அவங்களில ஒருபகுதியை இன்னொருபகுதி சுட்டுத்தள்ளி அழித்தது எந்தவிதத்திலும் நியாயமான செயல் அல்ல, இதுவே எம் இனத்தின் அழிவின் ஆரம்பம் ஆகும்”   என்பது என் கருத்து.   

நடேசனின் “கானல் தேசம்” நாவலை வாசித்து முடித்ததும் அவரது மற்றொரு நாவலான “உனையே மயல் கொண்டு”  என்ற நாவலை வாசித்தேன். இது எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. எம்மில் பலருக்கு ஏற்பட்ட பல நிதர்சனமான அனுபவங்கள் இந்த நாவலில் இழையோடுவதனால் மிக நெருக்கமாக எம்கதையை நாமே வாசிப்பதுபோல் நாவலை வைக்க மனம் இல்லாமல் வாசித்தேன்.

அரைநூற்றாண்டுக்கும் மேலாக அயராது எழுத்தூழியத்தில் ஈடுபடும் ஊடகவியலாளன் ‘ எஸ்தி ‘ “ வீழ்வேனென்று நினைத்தாயோ? வீழ்ந்தாலும் எழுந்திருப்போம்! “ ஊடகத்திரு “ எஸ்தி 50 + “ மலர் தந்த மலரும் நினைவுகள் - முருகபூபதி


  அன்பிற்கினிய நண்பர் பூபதி அவர்கட்கு ,
நீண்ட….. நீண்ட….. காலத்திற்குப் பின்னர் தங்கள் கடிதம் படித்து நேரில் கண்டு உரையாடிய மகிழ்வடைந்தேன். “  எனத் தொடங்கும்  05-08-1999 ஆம் திகதி  எழுதப்பட்ட  ஒரு கடிதம் எனக்கு தபாலில் வந்திருந்தது.  கனடாவிலிருந்து வந்திருந்த அக்கடிதத்தை எழுதியவர் எனது நீண்ட கால நண்பர் எஸ்.தி என எம்மால் அழைக்கப்படும் மூத்த  ஊடகவியலாளர் எஸ். திருச்செல்வம்.
இவருக்கும் எனக்குமிடையே நட்பு மலர்ந்த காலம் 1980 களாயிருக்கலாம். அவர் எனக்கு முன்பே ஊடகத்துறையில் பிரவேசித்தவர். அவரது பெயருடன் (By line) வெளிவந்த பல முக்கியமான தலைப்புச்செய்திகளுடன் அன்றைய தினகரன் நாளேட்டினை எனது பாடசாலைப்பருவத்திலேயே படித்திருக்கின்றேன்.
அவரது ஊடகப்பணிக்கு அரைநூற்றாண்டு காலம் வயதாகிவிட்டது. அதனை முன்னிட்டு கனடாவில் நடந்த சேவை நலன் பாராட்டுவிழாவினை முன்னிட்டு வெளியிடப்பட்ட  ஊடகத்திரு  ‘ எஸ்தி 50 + ‘ என்ற நூலும் கடிதங்கள் என்ற  2001 ஆம் ஆண்டு வெளிவந்த எனது நூலும் எனது மேசையில் கணினிக்கு அருகிலிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன.
‘ எஸ்தி 50 + ‘ மலர்,  எஸ்தியின் வாழ்வையும் பணிகளையும் பலரதும் கருத்துக்களுடன் ஆவணப்படுத்தியிருக்கிறது. இற்றைக்கு இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் எஸ்தி எனக்கு எழுதிய கடிதம் அவரது திறந்த மனதை படம்பிடித்துக்காண்பிக்கிறது.
கொழும்பில் 1980 காலப்பகுதியில் நாம் வாரம்தோறும் சந்திப்போம். அங்கு அவர் கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள் என்ற அமைப்பை உருவாக்கி பல கலை, இலக்கிய ஊடகம் சார்ந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார்.
இச்சந்திப்புகளை பெரும்பாலும்  பம்பலப்பிட்டி கிறீண்லண்ட்ஸ் உணவு விடுதியிலும்  சாந்திவிஹார் உணவுவிடுதியிலும்  தமிழ்ச்சங்கத்திலும் நடத்துவார். ஆழிக்குமரன் ஆனந்தன் பாராட்டு நிகழ்வு, மூத்த பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் பிரிவுபசார விழா, பேராசிரியர் சு. வித்தியானந்தன் மணிவிழா, பாரதி நூற்றாண்டு விழா உட்பட பல நிகழ்ச்சிளை அழகாக ஒருங்கிணைத்திருப்பார்.
இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு  பாரதியார் சம்பந்தப்பட்ட பல அரிய ஒளிப்படங்களை தருவித்து காட்சிப்படுத்தி,  எஸ்தி நடத்திய பாரதி நூற்றாண்டு விழா மிகவும் சிறப்பானது!
பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு அக்காலப்பகுதியில் தினகரன் பிரதம ஆசிரியராக பணியாற்றிய ( அமரர் ) இ. சிவகுருநாதன் தலைமை தாங்குவார். அவர் சுவாரசியமான மனிதர். அவர் தலைமை தாங்கினால் சபையில் சிரிப்பொலிக்கு குறைவிருக்காது. பேச்சாளர்களையும் சபையோரையும் அங்கதச்சுவையால் அரவணைத்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார்.
அவரையும் மறக்காமல்  ‘எஸ்தியின் குருநாதர்கள் வரிசையில் ‘ எஸ்தி 50 + ‘ மலரில் படத்துடன் நினைவூட்டியிருக்கிறார்கள் மலர்க்குழுவினர்.
ஏனையவர்கள்: கலைச்செல்வி ஆசிரியர் சிற்பி சரவணபவன் – யாழ். ஈழநாடு ஆசிரியர் கே.பி ரன்.
‘ எஸ்தி 50 + ‘ மலரில் -    திருச்செல்வத்தை நினைக்கும்போதெல்லாம், இவருக்கு எப்படி தினமும் 24 மணிநேரத்திற்கும் மேல்,  மேலும் நேரம் கிடைக்கிறது? !  “ என்று ஆச்சரியப்படுகிறார் கனடாவிலிருக்கும் இலக்கிய நண்பர்   அ. முத்துலிங்கம்.
இந்த ஆச்சரியம் எனக்கு எஸ்தியுடன் உறவாடிய இலங்கைத் தலைநகர் வாழ்க்கையிலேயே வந்துவிட்டது.

பயணியின் பார்வையில்- அங்கம் 15 மூன்று நாடுகளில் எழுத்தூடாகப் பயணித்து அயராது இயங்கும் சீவகனின் வாழ்வும் பணிகளும் வலிசுமந்த தமிழரை ஆவணப்படுத்தும் மனிதநேயச்சீவன் ! - முருகபூபதி


வவுனியாவிலிருந்து  அக்கறைப்பற்று நோக்கிச்செல்லும் இ.போ. ச. பஸ்ஸில்   புறப்பட்டு, மதியம் மட்டக்களப்பை வந்தடைந்தேன்.
 
நண்பர் செங்கதிரோன் கோபால கிருஸ்ணன், பஸ் தரிப்பிடம் வந்து அழைத்துச்சென்றார்.  இவர் பற்றி ஏற்கனவே சில பத்திகள் எழுதியிருக்கின்றேன். கலை, இலக்கிய ஆர்வலர். அத்துடன் அரசியல் பிரக்ஞை மிக்கவர். கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஸ்தாபகர்.

அதனால், அவருடன் அரசியலும் பேசமுடியும். கவிஞர் காசி. ஆனந்தனின் துணைவியாரின் சகோதரியைத்தான் இவர் மணமுடித்திருக்கிறார். எனினும் அரசியல் சிந்தனைகளில் மாறுபாடுகொண்டிருப்பவர்கள்.

மட்டக்களப்பில் கடந்த சில வருடங்களாக வெளியாகும் அரங்கம் வார இதழின் ஆசிரியர் நண்பர் பூபாலரட்ணம் சீவகன், தமது பணிமனையில் எனக்காக ஒரு இலக்கிய சந்திப்பினை ஒழுங்குசெய்திருந்தார்.

கிளிநொச்சியில் மகிழ் பதிப்பகம் வெளியிட்ட எனது சொல்லத்தவறிய கதைகள் நூலையும் அறிமுகப்படுத்துவதற்கு முன்வந்திருந்தார். முடிந்தவரையில் புதுமுகங்களை பேசவைக்கவும் என்று அவரிடம் கேட்டிருந்தேன்.
 
அதற்கு முன்னர் சீவகன் குறித்த அறிமுகத்தை இங்கு பதிவுசெய்வது பொருத்தமானது.  இவரும் எங்கள் தமிழ் ஊடகக்குடும்பத்தின் அங்கத்தவர்.

இவரது ஊடகப்பயணமும் பள்ளமும் மேடும் கொண்ட கரடுமுரடான பாதையில்தான் நகர்ந்திருக்கிறது. எனினும் சீவகன் ஓய்ந்து ஒளிந்துவிடவில்லை.

இலங்கை , தமிழக வாசகர்களுக்கு பரிச்சியமான பெயர் சங்கானையைச்சேர்ந்த வி. சி. குகநாதன். இவர் தமிழகம் சென்று திரைப்படத்துறையில் ஈடுபட்டு பல வசூழ் வெற்றிப்படங்களை தந்தவர்.  1968 இல் வெளியான எம்.ஜி.ஆர். நடித்த புதியபூமி திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியதைத்தொடர்ந்து இவருக்கு தமிழ்த்திரையுலகில் ஏறுமுகம்தான். பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி பல வெற்றிப்படங்கள் தந்தவர்.

நண்பர் சீவகனின் ஊடகப்பயணம், தமிழகத்தில்   வி.சி. குகநாதனின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு தயாரிப்பு மேற்பார்வையாளராகத்தான்  ஆரம்பித்தது.

ஆனால், அதனை திரைப்படத் துறைசார்ந்த தொழில் முறைத் தொழிலாகக் கொள்ள முடியாது. குகநாதனின் தம்பியான நல்லைஆனந்தன் சீவகனின்  ஆசிரியர். அவருக்கு துணையாகத்தான்  இவர்  அங்கு பணியாற்றியிருக்கிறார்.

அதன்பின்னர், இலங்கை வந்து, 1995 ஆம் ஆண்டில்
வீரகேசரியில்  செய்தியாளனாகச் சேர்ந்தார்.  அங்கு   ஆசிரிய பீடத்திலிருந்த  ஆ.சிவநேசச்செல்வன் , நடராஜா,  மற்றும் பொன். ராஜகோபால் ஆகியோரின் பயிற்சியில் வளர்ந்தவர்.  இவருக்கு   செய்திகளை எழுதும் முறையில் பயிற்சி தந்தவர்கள்   நடராஜாவும்  தனபாலசிங்கமும்தான் என்று இன்றளவும் நன்றியோடு நினைவு கூருகிறார் சீவகன்.  

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியவரும் சில ஈழத்து திரைப்படங்களில் தோன்றியிருப்பவருமான  இரா. பத்மநாதன்தான் சீவகனுக்கு ஒளிப்படக்கலையை பயிற்றுவித்தவர்.   அதன் தொடர்ச்சியாகத்தான் வீடியோ  தயாரிப்பு தொழில் நுட்பங்களிலும் தேர்ச்சி பெற்றார். 

How Sri Lankans Are Preserving History, One Manuscript At a Time

.

Poongulaly Balagobalan

Reporter


KALVIYANKADU, SRI LANKA — Ratnasabapathy Ponnaiah slides between wooden cupboards in his home, plucking bottles of ground herbs and natural oils from the racks.
With bottles in hand, he sits at a table and opens a large book, turning the pages to reveal herbal remedies, notes on diseases and diagrams of plants. Some pages are in his handwriting. Others have been printed.
The information in the book was once available in greater detail, with more precise information, says Ponnaiah, an ayurvedic physician who practices a centuries-old form of traditional herbal medicine and healing still popular in Sri Lanka.
For more than a dozen generations, families like Ponnaiah’s passed down the secrets of their practices on dried palmyrah leaf manuscripts.
In his home in Kalviyankadu, Ponnaiah had 50 bundles of manuscripts, each containing 50 to 75 individual documents which collectively addressed specific types of ayurvedic treatment. One bundle held instructions for treating broken bones and fractures; another addressed heart-related ailments. There was a separate bundle for blood disorders.
Those manuscripts were his most prized possessions.


expand image
expand slideshow
Ratnasabapathy Ponnaiah, a physician who practices a traditional form of herbal medicine called ayurveda, examines remedies at Siddha Ayurvedic Dispensary in Kalviyankadu.
Poongulaly Balagobalan, GPJ Sri Lanka

இலங்கைச் செய்திகள்


கன்னியா விகாரை விவகாரம் ; போராட்டதிற்க்கு தென்கயிலை ஆதீனம் அழைப்பு

பிரதமர் ரணில் யாழ் விஜயம்

கன்னியா போராட்டத்திற்கு தடை 

ஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன ?

நந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பிக்கு மீண்டும் அடாவடி - நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம்

தமிழர் மீது கன்னியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வவுனியாவில் போராட்டம்

கன்னியா விகாரை நிர்மாணித்தல் விவகாரம் ; ஜனாதிபதி மனோவிடம் கூறியது என்ன ?

கன்னியா விவகாரம் ; பொலிஸார் மீது குற்றம் சுமத்தும் பொது அமைப்புக்கள்

ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச கூட்டமைப்பு தீர்மானம் 

கன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் :விஷேட குழு அமைத்து தீர்வு காண்போம்  - ஜனாதிபதி உறுதி 

மலையகத்தில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சி தோட்ட மக்களால் முறியடிப்பு

5ஜி கோபுரங்கள் வேண்டாம் ; யாழ் மாநகர சபையை முற்றுகையிட்டுப் போராட்டம்

யாழில் துப்பாக்கிப் பிரயோகம் :  ஒருவர் பலி 

கொடிகாம இளைஞனே பலி



கன்னியா விகாரை விவகாரம் ; போராட்டதிற்க்கு தென்கயிலை ஆதீனம் அழைப்பு

15/07/2019 திருகோணமலையின் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புராதன பிள்ளையார் ஆலயம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புத்தர் சிலை அமைப்பட்டு வருகின்றது.

உலகச் செய்திகள்


ஹொங்ககொங் அரசின் தலைவரை பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

 "ஈரானுடனான  அணுசக்தி உடன்படிக்கையை தனிப்பட்ட காரணங்களுக்காக கைவிட்ட ட்ரம்ப்" 

இந்திய விமானங்களுக்கு அனுமதியளித்த பாகிஸ்தான்!

அமெ­ரிக்கா நெருப்­புடன் விளையாடுகிறது - ஈரான்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக அடையாள ரீதியான கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

ஈராக் முதல் யேமன் வரை ஈரானின் ஆளில்லா விமானங்கள்- புதிய அச்சத்தில் அமெரிக்கா

ஐரோப்பிய ஒன்றிய ஆணையக தலைவராகமுதல் தடவையாக பெண் தெரிவு

சூடானில் வர­லாற்று முக்­கி­யத்­துவமிக்க அதி­காரப் பகிர்வு உடன்­ப­டிக்கை

ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது அமெரிக்கா

பிரிட்டனின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியது ஈரான்

ஈரான் கைப்பற்றிய கப்பலில் சிக்கியுள்ள 18 இந்தியர்கள்!



ஹொங்ககொங் அரசின் தலைவரை பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

15/07/2019 ஹொங்ககொங் அரசின் தலைவர் கேரி லாம் பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Policemen scuffle with protesters inside a shopping mall in Sha Tin District in Hong Kong on July 14, 2019.

Youth Sydney Music Festival 27/07/2019





தமிழ் சினிமா - தி லயன் கிங் திரை விமர்சனம்


ஹாலிவுட் சினிமாவில் வால்ட் டிஸ்னியின் பங்கு மிக முக்கியமானது. பல படங்களை அவர்கள் எடுத்திருந்தாலும் கார்டூன் வகையை சார்ந்த அவர்களின் படங்களுக்கு என்றும் ஒரு தனி வரவேற்பு இருக்கும். அந்த வகையில் ஏற்கனவே நம்மில் பலரும் பார்த்திருந்த தி லயன் கிங் தற்போது புதுப்பொலிவுடன் வந்திருக்கிறது. இனி சிங்க ராஜாவை பார்க்க காட்டிற்குள் செல்வோமா...

கதைக்களம்

பெரிய வனத்திற்கு ராஜாவாக முஃபாஸா என்னு சிங்கம் இருக்கின்றது. அதன் வாரிசாக குட்டி சிங்கம் சிம்பா. சிம்பாவுக்கு தோழியாக லாலா. தனக்கு பின் தன் மகன் தான் காட்டின் இளவரசன் ஆகவேண்டும் என கனவு சிங்க ராஜாவுக்கு. இதற்காக மகனுக்கு சில சூட்சமங்களை சொல்லி புரிவைக்கிறார்.
இவரின் அரசாட்சியின் கீழ் காட்டு மிருகங்கள், பறவைகள் என அனைத்தும் சில இயற்கை விதிமுறைக்குட்பட்டு சிறப்பாக வாழ்கின்றன. ஆனால் மயான பூமி என்ற ஒன்றில் பெரும் அச்சுறுத்தல் ஒன்று இருக்கின்றது.
சந்தோசமாக போய்க்கொண்டிருக்கையில் திடீரென சிம்பாவுக்கு பெரும் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறது. அதனை காப்பாற்ற முஃபாஸா வர பெரும் சூழ்ச்சியில் சிக்கிக்கொள்கிறது.
இறுதியில் முஃபாஸா இறந்துவிட, தன் அப்பாவின் சாவுக்கு தான் காரணம் என்ற மனவேதனையில் திக்கு தெரியாத இடத்திற்கு செல்கிறது. காட்டில் திடீர் ஆட்சி மாற்றம், முஃபாஸாவின் மரணத்திற்கு காரணம் யார், சிம்பா என்ன ஆனது?? முஃபாஸா கனவு நிறைவேறியதா?? என்பதே இந்த தி லயன் கிங்.

படத்தை பற்றிய அலசல்

தி லயன் கிங் முன்பே நாம் சிறு வயதில் பார்த்திருப்போம். ஆனால் சினிமாவில் இப்போது தொழில் நுட்பம் நவீனமாக வளர்ந்து விட்டது. அதில் முழுக்க முழுக்க அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தற்போது வெளியாகிறது என்ற செய்தியே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டது எனலாம்.
2019 ல் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளில் மீண்டும் வெளியாகியுள்ளது. பெரியவர்கள் கூட இந்த படத்தை காணும் ஆர்வத்தில் தியேட்டர்களுக்கு வந்திருப்பது தெரிகிறது.
தி லயன் கிங் பல முக்கிய நடிகர்களின் குரல் தாங்கி வந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே. அதிலும் குறிப்பாக பறவையின் குரலாக காமெடி நடிகர் மனோபாலா வந்திருப்பது இண்ட்ரஸ்டிங்.
ஆபத்தில் மாட்டிக்கொண்ட குட்டி சிம்பாவை காப்பாற்றும் குரலாக வந்த காமெடி நடிகர்கள் ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோரின் எண்ட்ரி காட்சிகளுக்கு சூப்பரான ஓப்பனிங்.
வளர்ந்த சிம்பாவின் குரலாக வந்த சிம்பாவுக்கு நடிகர் சித்தார்த் டப்பிங் பேசியுள்ளார். படத்தில் உலகில் எதுவும் நமக்கு சொந்தமல்ல ஆனால் இயற்கையை பாதுகாப்பது நம் கடமை என மெசெஜ் முக்கியமானது.
படத்திற்கான பின்னணி இசை, காட்சிகள் நகர்வு, கதை கோர்ப்பு என திட்டமிட்டு அழகான படைப்பாக கொடுத்திருப்பது நன்று.

கிளாப்ஸ்

மனோ பாலா, ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோரின் காமெடிகள்.
தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடியான கதை ஸ்கிரிப்ட்.
அலட்டல் இல்லாத இயல்பான வசனங்கள்..

பல்ப்ஸ்

இவ்வளவு செய்தவர்கள் இடைவேளை விசயத்தில் கோட்டை விட்டது ஏனோ?? மைண்ட் டிஸ்டர்பிங்.
மொத்தத்தில் தி லயன் கிங் கலர்ஃபுல்லான காட்டு பயணம். டிஸ்கவரி சானலையே தூக்கி சாப்பிட்டிடும் போலயே...
நன்றி   CineUlagam