நான் இப்படி அழுததில்லை




நான் இப்படி ஒருநாளும் அழுததில்லை.
அப்போ நாட்டு நிலமையும் தாய் வீட்டையும் தம்பி காந்தனையும் நினைத்து சோகத்தோட கண் கலங்கினால் ஆதவன் ஓடிவந்து முகத்துக்கு முனால் நின்று அதைப்பற்றிப்  கேள்விக்கு மேலே கேள்வி கேட்டு என்னைக் குடைந்து போடுவார். அதோட அவரும் அப்ஸற் ஆகி விடுவார்.
அவுஸ்ரேலியாவிற்கு அவர் கப்பலில் தான் வந்தவர். அவருக்கு பாபு தான் கப்டன் “கூக்அதால அவர் தான் வந்த கப்பலையும் பாபுவையும் படமாக வரைந்து சிவரில் மாட்டி இருக்கிறார்.

நான் அவரின் பொன்சரில் விமானத்தில் வந்தனான். வந்து ஆறு வருடம் குழந்தை இல்லை. அங்கு நேசரி ரீச்சர் எண்டதால ஒரு வருடம் கோர்ஸ் செய்து போட்டு ஆண்டு இரண்டுப் பிள்ளைகளுக்கு 5 வருடமாகப் படிப்பிக்கிறன். அதால எனக்கு ஒவ்வொரு வருடமும் ஒரே வயதுப் பிள்ளைகள் என்ர வகுப்பில இருக்கிறதால எனக்கு பிள்ளை இல்லை என்ற குறை என்ர மனதை வாட்டுறதில்லை.

சேக்கிழார் விழா 17 - 06 - 2012

.
Add caption

சமரசங்களுக்குட்படாத சுதந்திர மனிதன் ஏ.ஜே. கனகரட்னா சில நினைவுகள் - முருகபூபதி

.
 இந்திரா காந்தி கொல்லப்பட்ட செய்தியை எனக்கும் மல்லிகை ஜீவாவுக்கும் முதலில் சொன்னவர் ஏ.ஜே. கனகரட்னா. யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியார் வீதியையும் காங்கேசன்துறை வீதியையும் இணைக்கும் அக்காலத்தில் பிரசித்திபெற்ற மூத்திர ஒழுங்கையினுள் மல்லிகை அலுவலகம் அமைந்திருந்தது.
(தற்போது இந்த ஒழுங்கையினுள்தான் தினக்குரல் பத்திரிகையின் யாழ். அலுவலகம் அமைந்துள்ளது)
 1983 வன்செயல் கலவரம் என்னையும் குடும்பத்தினரையும் தற்காலிகமாக யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயரவைத்திருந்தது. வன்செயலைத்தூண்டிவிட்ட அன்றைய ஜே.ஆரின் ஆட்சியாளர்கள் அந்தப்பழியை மக்கள் விடுதலை முன்னணி உட்பட இடதுசாரி இயக்கங்களின் மீதும் சுமத்திவிட்டு தார்மீகம் பேசிய காலம். பலர் தலைமறைவாகவேண்டியிருந்தது. நான் குடும்பத்தினரின் நிர்ப்பந்தங்களினால் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் அரியாலையில் சிறிதுகாலம் தங்கியிருந்தேன்.

அன்புடன் கெளதமி..! --தமிழ்மகன்


.


கமல்ஹாசனுடனான புரிதல், மார்பக புற்றுநோயில் இருந்து தாம் மீண்டு வந்த அனுபவம் ஆகியவற்றை மனம் திறக்கிறார் நடிகை கெளதமி.

"நம்மவர்' படத்தில் கமல்ஹாசனுக்கு கேன்சர் இருப்பது போலவும் அவருக்குக் கெளதமி துணையாக இருப்பது போலவும் காட்சிகள் இருக்கும். அது அவர்களின் நிஜவாழ்க்கையின் ஒத்திகையாக அமைந்துபோனது காலத்தின் விளையாட்டு. நிஜத்தில் கெளதமிக்கு கேன்சர். கமல் உடனிருந்தார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மீண்டு வந்திருக்கும் கெளதமியைக் கமலின் அலுவலகத்தில் சந்தித்தோம். 

எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை? என்ற எளிமையான கேள்வியோடு (பதில் அத்தனை எளிமையானது அல்ல!) பேட்டியை ஆரம்பித்தோம். 

நல்லதாக நடந்தாலும் அவ்வளவு நல்லதாக நடக்கவில்லை என்றாலும் வாழ்க்கை இனிமையானது. அழகானது. அதை அப்படியே எதிர்கொள்வதில்தான் எல்லா ஆனந்தமும் ஒளிந்திருக்கிறது. தத்துவமாகப் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் பொதுவாக எந்தத் தத்துவத்தையும் படிப்பதில்லை. படித்து தெரிந்து கொள்வது என்னை மேலும் குழப்பிவிடுகிறது. என் சொந்த வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்கள், அம்மா- அப்பாவின் அடுத்தடுத்த மரணம். 

விண் நட்சத்திரம் முதல் சினிமா நட்சத்திரம் வரை


..



எல்லா காலத்துக்குமான பொதுவான உண்மைகள் என்று ஏதேனும் இருக்க முடியுமா? அப்படி ஒன்று இருப்பதாகச் சொன்னால் அது எத்தனை பெரிய பொய்யாக இருக்கும்?

நாம் பார்த்துக் கொண்டிருக்கிற நட்சத்திரங்கள் சில இப்போது இல்லாமல் இருக்கலாம். அதாவது நாம் பார்க்கிற இடத்தில் அவை இருக்கின்றன. ஆனால் அவை இருக்கும் இடத்தில் அவை இல்லை.

எத்தனையோ ட்ரில்லியன் பில்லியன் மைல் தொலைவில் உள்ள நட்சத்திரங்களின் ஒளி நம்மை வந்து அடைவதற்கு பல லட்சம் ஆண்டுகள் ஆகின்றன. வந்து சேர்வதற்கான இந்த இடைப்பட்ட காலத்தில் நட்சத்திரம் அழிந்துபோயிருக்கலாம். ஆனால் அதன் ஒளி நம்மை வந்து சேர்ந்த வண்ணமிருக்கிறது. அதாவது அது அழிந்த பல லட்சம் ஆண்டுகளுக்கு பிறகும் இல்லாத நட்சத்திரத்தை நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

அதே போல் நாம் உருவாகி, வாழ்ந்து, சண்டை போட்டுக் கொண்டிருக்கும் இந்த சூரிய மண்டலம் எங்கோ ஒரு நட்சத்திரத்தின் பார்வையில் இன்னும் உருவாகாமலேயே இருக்கலாம். அதாவது சூரியனின் கதிர் வீச்சு இன்னும் அந்த நட்சத்திரத்தை எட்டாமல் இருக்கலாம்.

அதாவது காலம் இடைவெளியைச் சார்ந்ததாக இருக்கிறது.

இப்படியாக ரிலேட்டிவிட்டி தியரி பற்றி சுமார் நூறு ஆண்டுகளாகச் சொல்லிச் சொல்லி போரடித்துப் போனதாக சிலர் சலித்துக் கொண்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு மிச்சம் இருக்கத்தான் செய்கிறது. (எல்லா காலத்துக்குமான பொதுவான உண்மைகள் இல்லாதது போலவே எல்லா காலத்துக்குமான பொதுவான ஆச்சரியங்களும் இல்லைதானே? )

இலங்கைச் செய்திகள்

 முல்லைத்தீவில் தமிழர்களின் வளங்கள் தொடர்ந்தும் படையினராலும், அரசியல்வாதிகளாலும் ஆக்கிரமிப்பு மீட்க ஒன்றுபடுமாறு மக்கள் கோரிக்கை

 இறுதிப் போரில் கைவிடப்பட்ட வாகனங்கள் தென்னிலங்கை மக்களின் பாவனையில்  யாழ்நகர் நிருபர்

வடமராட்சியில் கைதான கடற்றொழிலாளர் சங்க முன்னாள் தலைவர் நாலாம் மாடியில்

 சம்பந்தன் அவர்களின் தலையாய கடமை

 கடந்த காலத்தை  மீளக் கொணரலாமா?

சச்சின் இன்று (4/6/2012) எம்.பியாக பதவியேற்பு

.
இந்திய கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார்.

39 வயதான சச்சின் டெண்டுல்கர் மேல்சபை உறுப்பினராக கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். சச்சின் டெண்டுல்கருடன் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட நடிகை ரேகா மற்றும் தொழிலதிபர் அணு அகா ஆகியோர் ஏற்கனவே பதவி ஏற்று கொண்டனர்.

ஐ.பி.எல்.போட்டி தொடரில் சச்சின் கலந்து கொண்டதால் பதவி ஏற்காமல் இருந்தார். இப்போட்டி முடிவடைந்ததையடுத்து இன்று அவர் பதவி ஏற்றார்.

வானொலி மாமா நா.மகேசனின்குறளில் குறும்பு 37 - அறுதொழிலோர்



அப்பா:    சுந்தரி, இவள் எங்கடை மகள் ஞானா, அண்டைக்கு தேடி எடுத்துக் கொண்டு வந்துதான் அந்தக் குறளைக் கேட்டிருக்கிறாள்.

சுந்தரி:     ஒம் அப்பா அவள் எப்போதும் ஏதாவது புரட்சியாய்த்தான் கேள்வி பேட்பாள்.
    எந்தக் குறளை அப்பா கேட்டவள். நான் மறந்துபோனன்.

அப்பா:    கொடுங்கோன்ம எண்ட அதிகாரத்திலை 560 வது குறள் சுந்தரி,

        “ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நு}ல்மறப்பர்
        காவலன் காவா னெனின்.”

சுந்தரி:     ஓம் அப்பா இப்ப ஞாபகம் வருகுது. போன முறை ஆபயனைப் பற்றிப் பேசின
    னாங்கள்.

உலகச் செய்திகள்

 

* இந்தோனேஷியாவில் கடுமையான நிலநடுக்கம்

* தைவானில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியது

* மியன்மார் அரசியல் சீர்திருத்தங்களின் எல்லைகளைப் பரிசோதிக்கும் சூகி

* வைரவிழா கொண்டாட்டம் முடிவடைந்த நிலையில்      பொதுநலவாயத்தின் அடுத்த இலக்கு என்ன?  

* சிரியாவில் தொடரும் அசாத் ஆதரவுப் படையின் வெறியாட்டம்: குழந்தைகள் உட்பட 78 பேர் பலி

* அமெரிக்காவை மிரட்ட ரஷ்யா - சீனா கூட்டாக போர் பயிற்சி


தமிழ் சினிமா

இஷ்டம்

பார்த்தவுடன் காதல்! புரிதல் வரும் முன்னே கல்யாணம்! கல்யாணத்திற்குள் நுழையும் தவறான கலாச்சாரம்! அவசியம் ஏற்பட்டால் தவிர்க்க முடியாத விவகாரத்தை வழக்கமான ஒன்றாக்கிவிட்ட திருமணங்களுக்கு அறிவுரை சொல்ல இஷ்டப்பட்டிருக்கிறார்கள்.
விமல் ஐ.ஐ.டி.யில் படித்து விட்டு வேலை தேடுகிறார். நிஷா அகர்வாலும் அதே முயற்சியில் இருக்கிறார்.
இருவருடைய முதல் சந்திப்பு சாதாரணமாக இருந்தாலும், அதற்கடுத்த சந்திப்புகள் அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்துகிறது.
ஒருகட்டத்தில் இவர்களுக்குள்ளே நடைபெறும் இந்த மோதல் காதலாக மாறுகிறது. அதேவேகத்தில் கல்யாணமும் செய்து கொள்கிறார்கள்.
இருவருக்கும் இல்லாத புரிதலால் திருமணத்திற்கு பின் முதல் சண்டையிலேயே பிரிந்துவிட முடிவு செய்து, விவகாரத்துக்கு முயற்சிக்கிறார்கள்.
விவாகரத்து கிடைப்பதற்கு முன்பே இருவரும் இன்னொரு கல்யாணத்திற்கு தயராகிறார்கள். முடிவு, இருவர் மனதிலும் கொஞ்சமேனும் ஒட்டியிருக்கும் தமிழ் கலாச்சாரத்தோடு அமைகிறது.
ஐ.டி. டாப்பராக விமல். மனிதருக்கு பழக்கமே இல்லாத ஏரியா என்பதால் தடுமாறியிருக்கிறார். இருந்தாலும் சந்தானத்திடம் கஞ்சத்தனம் காட்டுவதிலும், இளம் கணவனாக அவசரம் காட்டுவதிலும், கோபத்தில் வார்த்தையை விடுவதிலும், முடிவெடுக்க முடியாமல் கியூப்பை திருகிக்கொண்டே இருப்பதிலும் விமல் சரியாக செய்திருக்கிறார். நடனமும் நன்றாக ஆடியிருக்கிறார்.
நிஷா அகர்வால் ப்ரெஷ்ஷான முகம். விமலிடம் போனில் கடலை போடும் போது, இன்னொரு நண்பனை வெயிட்டிங்கில் விடுவதும், இருவரிடமும் அம்மாவிடம் பேசுகிறேன் என்று கதை விடுவதும் தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத கதாநாயகியை காட்டியிருக்கிறார்கள்.
அதேபோல், இளம் மனைவியாக நெருக்கம் காட்டுவதிலும், விமலின் சந்தேக வார்த்தைக்கு பதிலுக்கு பதில் மடக்குவதிலும் அசத்தல்.
படத்தில் பெரிய பிளஸ் சந்தானம். அதை அவர் சரியாக செய்திருக்கிறார். ஒவ்வொன்றுக்கும் அவர் அடிக்கும் பஞ்ச் நம் வயிற்றை பதம் பார்த்துவிடுகிறது. சிக்கனை பெட் வைத்து நாயோடு சீட்டு விளையாடுவதெல்லாம் நினைத்து நினைத்து சிரிக்கிற காமெடி.
விமலின் அம்மாவாக வரும் யுவராணி, நமோ நாராயணன், சார்லி ஆகியோர் அவ்வப்போது வந்து போனாலும் மனதில் நிற்கிறார்கள்.
தமனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் என்பதை நிரூபித்திருக்கிறார்.
சேகர் ஜோசப்பின் ஒளிப்பதிவில் பாடல்களில் இளமை தெரிகிறது. பெரும்பாலும் இண்டோர்க்குள்ளேயே காட்சியமைப்பு இருந்தாலும் யதார்த்தமான வெளிச்சத்தில் ஒன்ற வைக்கிறார்.
படத்தின் இன்னொரு முக்கிய அம்சம், இயக்குனர் பிரேம் நிஸாரின் வசனம். ஆம்பளைங்க மட்டும் பொண்ணு பாக்கணும்னு வந்து பொண்ணுங்களை செலக்ட் பண்ணுவாங்க. நாங்க மட்டும் பாய்பிரெண்ட் வைத்து ஒருத்தனை செலக்ட் பண்ணக்கூடாதா? என்பது போன்ற வசனங்கள் ஆங்காங்கே பளீச்சிடுகிறது.
அழுத்தமே இல்லாத காட்சிகளில் விமல், நிஷா அகர்வாலின் காதல் பிரிவு, கல்யாண முறிவு, க்ளைமாக்ஸ் ஆகியவை ரசிகர்களை உணர்வோடு ஒன்ற வைக்கவில்லை. லேடிஸ் ஹாஸ்டலை காட்சிப்படுத்தியதில் நம்பகத் தன்மையே இல்லை.
மற்றபடி திரைக்கதை அமைப்பிலும், இளமையான காட்சிகளிலும் இஷ்டம் பார்க்கக்கூடிய படம்.
நடிகர்: விமல், அனிப் குமார், சந்தானம், சார்லி.
நடிகை: நிஷா அகர்வால், யுவராணி, உமா பத்மநாபன்.
இயக்குனர்: பிரேம் நிஸார்.
இசை: எஸ்.தமன்.
ஒளிப்பதிவு: சேகர் வி.ஜோசப்.


MailPrint



மனம் கொத்தி பறவை

சென்னையில் இருந்து இரண்டு வருடம் கழித்து சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார் நாயகன் கண்ணன். இவரைக் கண்டு சிலர் விழுந்தடித்து ஓடுகிறார்கள்.
அப்போது கண்ணன் "இவர்கள் என் நண்பர்கள். ஏன் விழுந்து அடித்து ஓடுகிறார்கள்" என்று பிளாஷ்பேக் சொல்கிறார்.
கண்ணன், தனது வீட்டிற்கு எதிரில் இருக்கும் ரேவதியை ஒருதலை பட்சமாக காதலிக்கிறார். ரேவதியின் தந்தை காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். இவருடன் கண்ணனும் இணைந்து வேலை பார்க்கிறார்.
தந்தையின் கணக்கு வழக்குகளை ரேவதி பார்த்துக்கொள்கிறாள். இதனால் இருவரும் தினமும் சந்திக்கவும், பேசவும் நேரிடுகிறது. இதனை கண்ணன் தன் நண்பர்களிடம், 'நானும் ரேவதியும் உயிருக்கு உயிராக காதலிக்கிறோம். நான் இல்லாமல் ரேவதியால் ஒரு நொடி கூட இருக்க முடியாது' என்று பொய் சொல்லி நண்பர்களை ஏமாற்றி வருகிறார்.
ஒரு கட்டத்தில் ரேவதியின் தந்தை அவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமண நாளையும் குறித்து விடுகிறார். இதை அறிந்த கண்ணன், ரேவதியிடம் சென்று 'நான் உன்னை காதலிக்கிறேன் என்பது உனக்குத் தெரியும். இருந்தும் ஏன் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டாய்' எனக் கேட்க, ரேவதியோ 'நான் உன்னை காதலிக்கவில்லை. சிறு வயதில் இருந்து பழக்கம் என்பதால் நட்புடன் பழகினேன்' என்று சொல்கிறார்.
இதனால் மனமுடைந்து போகும் கண்ணன் ரேவதியின் திருமணத்திற்கு முந்தைய நாள் குடித்து விட்டு நினைவில்லாமல் மயங்கி கிடக்கிறார். இதனைக் கண்ட நண்பர்கள் ரேவதியுடன் கண்ணனை சேர்த்து வைக்க வேண்டும் என்று திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு ரேவதியை மயக்க மருந்து கொடுத்து கடத்துகிறார்கள்.
நாயகன், நாயகி மயக்கத்தில் இருப்பதால் காலையில்தான் விழிக்கிறார்கள். விழுத்தவுடன் நாயகி 'ஏன் என்னை கடத்தி வந்தீர்கள்' என சத்தம் போடுகிறார். அப்போதுதான் ரேவதி கண்ணனை காதலிக்கவில்லை என்று அவரது நண்பர்களுக்கு தெரியவருகிறது.
ஏற்கனவே ரேவதியின் சகோதரர்கள் வெட்டு, குத்து என்று அலைபவர்கள் நம்மை உயிரோடு விடமாட்டார்கள் என்று அஞ்சி, அவரது நண்பர்கள் அனைவரும் கண்ணன் மற்றும் ரேவதியோடு கேரளாவிற்கு சென்று விடுகிறார்கள். அங்கே தனக்குள் இருக்கும் காதலை கண்ணனிடம் ஒப்புக் கொள்கிறார் ரேவதி.
ரேவதியின் அண்ணன் கேரளா சென்று ரேவதியை தன்னோடு வருமாறு அழைக்கிறார். அவர் வரமறுக்கவே, கண்ணனை சொந்த ஊருக்கு இழுத்து வருகிறான்.
கண்ணனை மீட்க ஊருக்கு வரும் நண்பர்கள் தாக்கப்படுகிறார்கள். கண்ணனையும் அவர்கள் தாக்கி அவமானப்படுத்துகிறார்கள். இதனால் கண்ணன் குடும்பம் சென்னைக்கு வருகிறது.
சென்னை சென்று திரும்பும் கண்ணன் ரேவதியை கைப்பிடித்தானா? என்பது மீதிக்கதை.
கண்ணன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் எதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளிலும், தனது நண்பர்களிடம் ரேவதி என்னை காதலிக்கிறார் என்று பொய் சொல்லும் காட்சிகளிலும் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ரேவதியாக நடித்துள்ள ஆத்மியா அழகான நடிப்பில் இயல்பான பெண்ணாகத் தெரிகிறார். திரையில் காண்பதற்கு அழகாக தெரிகிறார்.
கண்ணனின் நண்பர்களாக நடித்துள்ள பரோட்டா சூரி, ஆடுகளம் நரைன், சிங்கம்புலி, மூர்த்தி, ஸ்ரீநாத் ஆகியோர் நாயகனுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி படத்திற்கு கலகலப்பை கூட்டுகிறது. குறிப்பாக நாயகியை கடத்தி விட்டு மாட்டிக்கொண்டு முழிக்கும் காட்சிகள் அனைத்தும் திரையரங்கில் சிரிப்பலையில் அதிர்கிறது.
ரேவதியின் அண்ணனாக நடித்திருக்கும் ரவிமரியா வில்லத்தனத்தில் மட்டுமின்றி நகைச்சுவையிலும் கலக்கியுள்ளார்.
இமானின் இசையில் பாடல்கள் சிறப்பு. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள எழில், படத்தை முழுக்க முழுக்க நகைச்சுவையுடனும், விறுவிறுப்புடனும் நகர்த்தியுள்ளார்.
மனம் கொத்தி பறவை மொத்தத்தில் ரசிகர்களின் மனங்களை கவரும் பறவை
நடிகர்: சிவகார்த்திகேயன், சூரி, இளவரசு.
நடிகை: ஆத்மியா.
இயக்குனர்: எஸ்.எழில்.
இசை: டி.இமான்.
ஒளிப்பதிவு: சூரஜ்நல்லுசாமி.


நன்றி விடுப்பு