27/04/2018 வடகொரிய தென்கொரிய தலைவர்கள் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பினை மேற்கொண்டுள்ளனர்.
வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் அமைந்துள்ள இராணுவசூன்ய பிரதேசத்தில் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் கிம் ஜொங் அன்னும் மூன் ஜேயும் சிரித்தபடி கைகுலுக்கியுள்ளனர்.
வடகொரியா தென்கொரிய தலைவர்கள் சிரித்தபடி வேடிக்கையாக பேசியபடி நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
நாங்கள் சமாதானம் மற்றும் இரு கொரியாக்கள் மத்தியிலான உறவுகள் குறித்த புதிய வரலாறு எழுதப்படும் அத்தியாயத்தை இன்று ஆரம்பித்து வைத்துள்ளோம் என வடகொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை தென்கொரிய தலைவருடனான தனிப்பட்ட சந்திப்பின்போது மோதல் வரலாற்றை முடிவிற்கு கொண்டுவருவதற்காகவே இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளதாக  வடகொரிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நள்ளிரவில் ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டு தூக்கத்தை குழப்பியற்தாக மன்னிப்பு கேட்பதாகவும் வடகொரிய ஜனாதிபதி வேடிக்கையாக தென்கொரிய ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.  நன்றி வீரகேசரி