அஞ்சலிக்குறிப்பு சகலகலா வித்தகர் கலாநிதி தம்பி ஐயா கலாமணி விடைபெற்றார் !- முருகபூபதி

 .

கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை  அதிகாலை  நான் வதியும் புறநகரத்திலிருந்து மெல்பன் நோக்கி பயணத்தை தொடங்கிய வேளையில்,  சிட்னியிலிருந்து இலக்கிய நண்பரும் வானொலி ஊடகருமான கானா. பிரபா தொலைபேசியில் தொடர்புகொண்டு,  நண்பர் கலாமணி மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தியை பகிர்ந்துகொண்டபோது அதிர்ந்துவிட்டேன்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 02 ஆம், 03 ஆம் திகதிகளில் எனது சில பொழுதுகள்  வடமராட்சியில் அவருடன்  கரைந்தது.

அவர் தனது இரண்டாவது புதல்வனின் வீட்டிலிருந்து, மூத்த புதல்வன் பரணீதரனின் இல்லத்தில் நடந்த எனது சினிமா: பார்த்ததும் கேட்டதும் புதிய நூலின் ( ஜீவநதி வெளியீடு ) வெளியீட்டு அரங்கிற்கும் வருகை தந்தார்.

மறுநாளும் அவருடன் உரையாடிக்கொண்டிருப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போதும் அவர் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கவில்லை.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலரது ஆய்வேடுகளை பரிசீலித்துக்கொண்டுதானிருந்தார்.

சில உடல் உபாதைகளுக்கு மத்தியிலும் அவர் உற்சாகமுடன் பேசிச்சிரித்து உரையாடி மகிழ்ந்தார்.

எனது குடும்பத்தின் நட்பு வட்டத்தில் நீண்டகாலம் இணைந்திருந்த ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்ட துயரத்துடன் இந்த அஞ்சலியை பகிர்ந்துகொள்கின்றேன்.

கடந்த 10 ஆம் திகதியே இலங்கை நேரம் மாலையில் அன்னாரது இறுதி நிகழ்வும் நிறைவெய்திவிட்டது.

அவரது மூத்த புதல்வன் , ஜீவநதி ஆசிரியர் பரணீதரனை தொடர்புகொண்டு,  எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தபோது,   தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் ஒரு மனநிறைவான செய்தியையும்  அறிந்தபின்னரே அவர் விடைபெற்றிருக்கிறார் என்ற தகவலும் கிடைத்தது.

கலாமணியின் கடைசிப்புதல்வர், பெற்றவர்களினதும் மூத்த அண்ணன்மாரினதும் செல்லம்,  மதனாகரன், பட்டப்படிப்பினை நிறைவுசெய்து வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளர் பணியில் இணைந்துவிட்டார் என்பதே அந்த நற்செய்தி.

மதனாகரனுடனும் இதர இரண்டு புதல்வர்கள் மற்றும் அன்புத்துணவியாருடனும் கலாமணி அவுஸ்திரேலியா சிட்னியில் சிறிது  காலம் தனது  ஆய்வுப்பட்டத்திற்காக வாழ்ந்த காலப்பகுதியில் செல்வன் மதனாகரன் மழலைக்குரலில் பேசிக்கொண்டிருந்த குழந்தை.

ஒரு நல்ல தந்தைக்கு, சிறந்த குடும்பத்தலைவனுக்கு தனது  பிள்ளைகள் பற்றிய நற்செய்திகள்தான், இறுதிக்காலத்திலும் ஊக்கமாத்திரை.  மருத்துவமனை தரும் மருந்து மாத்திரைகள் உடல் நலத்தை பேணிவந்தாலும், பிள்ளைகள்  பேரக்குழந்தைகள் பற்றிய நற்செய்திகள்தான்  உள நலத்திற்கு சிறந்த ஊக்க மாத்திரை.

நண்பர் கலாமணி பற்றிய நினைவுகள் எனக்கு பசுமையானவை.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 94 மெல்பன் தமிழ் மூத்த பிரஜைகள் ஒன்றுகூடலில் “ பூமராங் “ மின்னிதழ் அச்சு வடிவில் அறிமுகம் ! முருகபூபதி




சில வருடங்களுக்கு முன்னர் லண்டனிலிருந்து நண்பர் ஈ.கே. ராஜகோபால் எனக்கு தாம் வெளியிடும் புதினம் பத்திரிகையை தபாலில் அனுப்பிக்கொண்டிருந்தார். 
இந்தப்பத்திரிகையிலும் நான் சிறிது காலம் தொடர்ந்து எழுதினேன். அதில் முக்கியமான ஒரு தொடரையும் சில வாரங்கள் எழுதியிருந்தேன். 

இற்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் 1993 மேமாதம் 01 ஆம் திகதி, ஒரு தற்கொலை குண்டுதாரியினால் அன்றைய மேதின ஊர்வலத்தில் கொல்லப்பட்ட ரணசிங்க பிரேமதாச குறித்தும் ( அவரது அரசியல் வாழ்வும் பணியும் பற்றியது ) ஒரு தொடரை எழுதினேன். 

அன்றொரு நாள் தபாலில் வந்த புதினம் இதழில் வெளியாகியிருந்த ஒரு சிறிய விளம்பரம் எனது கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. 

அந்த விளம்பரம் இவ்வாறு அமைந்திருந்தது: 

 “ எண்பது வயதுடைய ஒரு அம்மாவுடன் காலை 8-00 மணியிலிருந்து மாலை 5-00 மணி வரையில் பேசிக்கொண்டிருப்பதற்கு ஒரு பெண் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும்.

 “ வயது செல்லச்செல்ல, முதுமை வந்துவிடும். முதுமைக் காலத்தில் உடல் உபாதைகளும் கூடிவிடும். உணவில் , உறக்கத்தில், பயணங்களில், நாளாந்த வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய காலம் இந்த முதுமைப்பருவம். 

வீட்டிலே வைத்து பராமரிக்க முடியாத முதியவர்களை காப்பகங்களில் அனுமதிக்கின்றார்கள். நான் வதியும் அவுஸ்திரேலியாவில் ஏராளமான முதியோர் காப்பகங்கள் இயங்குகின்றன. 

சிலவற்றில் எனது நண்பர்களும் பணியாற்றுகின்றனர். அவர்களிடமிருந்தும் எனக்கு பல சுவரசியமான கதைகள் கிடைத்து வருகின்றன. 
நினைவு மறதி நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் கதைகள் மிகுந்த வருத்தம் தரக்கூடியது. 

பணக்கார குடும்பம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 .

எம் ஜி ஆரின் நடிப்பில் பெரிய இடத்து பெண் வெற்றி படத்தை தயாரித்து இயக்கிய டி. ஆர் . ராமண்ணா 1964ம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் உருவாக்கிய படம் பணக்கார குடும்பம். அநேகமாக பெரிய இடத்துப் பெண்ணில் நடித்த எல்லோரும் ( எம் ஆர் ராதா தவிர்த்து ) இந்தப் படத்திலும் இடம் பெற்றார்கள். வழக்கமான எம் ஜி ஆர் படங்களில் இருந்து சற்று மாறுபட்டு காதலுக்கு மரியாதையை கொடுக்கும் கதையாக படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.

கிராமத்தில் வேலையில்லாமல் , வேலாயியை காதலித்துக் கொண்டிருந்த முத்தையா சந்தர்ப்பவசத்தால் சொத்துக்கு ஆசைப்பட்டு பணக்கார பெண் ஒருத்தியை திருமணம் செய்கிறான். அவர்களுக்கு ராணி என்ற குழந்தை பிறக்கிறது. வேலாயியுடன் சேர்ந்து சதி செய்யும் முத்தையா குடும்பமாக கிராமத்துக்கு படகில் செல்லும் போது படகு கவிழ்கிறது. ராணி உயிர் தப்ப அவளின் தாய் இறந்து விட்டதாக கருதப்படுகிறது. ராணியை வளர்க்கும் பொறுப்பை ஒரு குடியானவனிடம் ஒப்படைத்து விட்டு வேலாயியுடன் சென்னையில் புது வாழ்வு தொடங்குகிறான் முத்தையா. அவன் குடும்பம் பணக்காராக் குடும்பமாகிறது. அதே சமயம் தன் மகள் ராணியை வேலாயிக்கு தெரியாமல் பராமரித்தும் வருகிறான். கல்லூரி பெண்ணான ராணிக்கும், வேலை தேடும் நல்லதம்பிக்கும் காதல் மலர்கிறது. அந்த காதலை வரவேற்க முடியாமல் தடுமாறும் முத்தையா , ராணியை மறந்து விடும் படி நல்லதம்பியை கெஞ்சுகிறார். வேறுவழியின்றி அவனும் அதற்கு இணங்க ராணியோ காதல் தோல்வியால் துவண்டு போகிறாள். பணக்கார குடும்பத்தை சேர்ந்த அவள் காதல் நிறைவேறியதா என்பதே படத்தின் மீதி கதை.

காதல், ரொமான்ஸ், நகைச்சுவை, உணர்ச்சிகரமான காட்சிகள் இவற்றை முன்னிலைப் படுத்தி அமைந்த படத்தில் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்து கொண்டவர் எஸ் ஏ அசோகன்தான்! முத்தையாவாக வரும் அவர் பெரிய மனிதனான பிறகு மகள் ராணியிடம் உண்மைகளை சொல்ல முடியாமல் தவிப்பதும், வேலாயியிடம் பயந்து நடுங்குவதும், நல்லதம்பியிடம் கெஞ்சுவதுமாக படம் முழுதும் தன் குணச்சித்திர நடிப்பை வழங்கியிருந்தார். வழக்கமான வில்லன் அசோகனை இதில் காணோம் !

ஈழத்து இசை நாடகக் கலைஞன் நடிகமணி வி.வி.வைரமுத்து நூற்றாண்டு - கலாநிதி த.கலாமணி பேசுகிறார் - கானா பிரபா

 .

VVVairamuthu.jpg

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக கலாநிதி த.கலாமணி அவர்களைத் தொடர்பு கொண்டு எடுத்திருந்தேன். 
அந்தப் பகிர்வின் ஒலிவடிவம் இதோ

https://www.youtube.com/watch?v=kP-08qsOQzk

தமிழ்விசை என்னும் இணையத்தளத்தில் வெளியான வி.வி.வைரமுத்து அவர்கள் குறித்த பதிவை நன்றியோடு மீள் இடுகையாகத் தருகின்றேன்.

கூத்திசை நடிகர். இசையமைப்பாளர்
பிறந்தது: காங்கேசந்துறை - தமிழீழம்
வாழ்வு: பெப்ரவரி 11, 1924 - ஜூலை 8, 1989
ஈழத்தின் இசை நாடக வரலாற்றில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு மாபெரும் கலைஞராகத் திகழ்ந்தவர் அமரர் நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்கள் அன்று மட்டுமல்ல இன்றும்கூட ‘அரிச்சந்திரா” நாடகமென்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது வைரமுத்து அவர்கள்தான்!. கலைஞர்கள் பல நாடகங்களில் பல பாத்திரங்களில் நடிப்பார்கள். ஆனால் அரிச்சந்திரனாக நடித்தால் மட்டும் அவர்களை நடிகமணி வைரமுத்து அவர்களுடன் ஒப்பிட்டே பார்ப்பார்கள். அப்படியாக மக்கள் மனங்களில் எல்லாம் அரிச்சந்திரனாகவே வாழ்ந்து மறைந்தவர் இவர்.

இவர் நடித்த ‘அரிச்சந்திரா மயானகாண்டம்” நாடகம் மட்டும் 3000க்கும் அதிகமான தடவைகள் மேடையேற்றப்பட்டு பெரும் சாதனையை நிலை நாட்டியிருப்பதோடு இலங்கை வானொலியிலும் பல தடவைகள் ஒலிபரப்பப்பட்டிருப்பதும் இலங்கையில் தயாரான நிர்மலா” என்னும் திரைப்படத்தில் இன் நாடகத்தின் ஒரு சிறு காட்சி இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நாடகமே இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் ஒளிபரப்பு செய்த முதல் தமிழ் நாடகமும் ஆகும்.
எவ்வளவுதான் புகழ் உச்சியில் இருந்தபோதும் சிறிதேனும் தலைக்கனம் இல்லாத அர்ப்பணிப்பு மிக்க கலைஞர் நடிகமணி அவர்கள். பாடி நடிப்பது மட்டுமல்ல! மிருதங்கம் ஆர்மோனியம் வயிலின் ஜலதங்கரம் போன்ற வாத்தியங்களை இசைப்பதிலும் வல்லவராய் இருந்ததோடு இலங்கை வானொலியில் கர்நாடக இசைக் கச்சேரிகளும் செய்திருக்கின்றார்.
சிறந்த நாடக நெறியாளரான இவர் கலைப்பணிமீது கொண்ட பற்றால் தான் பணிபுரிந்து வந்த ஆசிரியத் தொழிலைத் துறந்து ‘வசந்தகான சபா” என்னும் நாடக மன்றத்தை ஆரம்பித்து சரித்திர புராண இதிகாச நாடகங்களை தத்ரூபமாக நடித்து மக்கள் மனங்களில் பதியவைத்திருந்தார்.

கலையரசு சொர்ணலிங்கம் ஜயா அவர்களே இவருக்கு நடிகமணி என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்திருந்தார். பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் எழுதிய நாடக தீபம் என்னும் நூலில் ‘தமிழ் நாடகத்தின் மரணிக்காத குரல்” என்று வைரமுத்து அவர்களுக்கு புகழாரம் சூட்டியிருக்கின்றார். அது மாத்திரமல்ல பேராசிரியர் திரு வித்தியானந்தன் அவர்கள் ‘கலைக் கோமான்” என்னும் விருதையும் பேராசிரியர் திரு கைலாசபதி அவர்கள் ந‌வரச திலகம்” என்னும் விருதையும் தென்னிந்திய தமிழ் மூதறிஞர் திரு.மா.பொ.சிவஞானம் அவர்கள் நாடக வேந்தன்” என்னும் விருதினையும் முன்னாள் வட்டுக்கோட்டைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் ந‌டிப்பிசைச் சக்கரவர்த்தி” என்னும் விருதினையும் பாசையூர் சென்றோக் படிப்பகத்தினர் ‘முத்தமிழ் வித்தகர்” என்னும் விருதினையும் வழங்கி வைரமுத்து அவர்களைக் கௌரவப் படுத்தியிருக்கின்றார்கள். இவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் 2004ம் ஆண்டில் இவருக்கு “கலாநிதி” பட்டத்தை வழங்கி கௌரவித்திருந்ததும் நடிகமணி அவர்களின் கலைப்பணிக்குக் கிடைத்த மேலதிக சிறப்பாகும்.

நடிகமணி வி.வி.வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும்
http://www.noolaham.org/wiki/index.php/நடிகமணி_வி.வி.வைரமுத்துவின்_வாழ்வும்_அரங்கும்

வைரமுத்து வாழ்க்கைக் குறிப்புக்கள் நன்றி: தமிழ் விசை
படம் உதவி : தமிழ் விக்கிப்பீடியா
ஆவணக் கோப்பு நன்றி : நூலகம்

இலங்கைச் செய்திகள்

 .

சுமார் ரூ. 37 கோடி பெறுமதியான மாணிக்ககற்கள் மீட்பு

- பெளத்த தேரர் உள்ளிட்ட இருவர் கைது

நாட்டில் பிரதானமாக மழையற்ற வானிலை

- ஒரு சில பகுதிகளில் 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று

கைதானால் 5 வருட சிறைத் தண்டனை




சுமார் ரூ. 37 கோடி பெறுமதியான மாணிக்ககற்கள் மீட்பு


இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2 நீலக் மாணிக்கக் கற்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட மாணிக்கக்கற்கள் சுமார் ரூ. 37 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவிருந்த நிலையில் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த தேரர் ஒருவர் உட்பட இருவர் கொஸ்லந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணிக்கக் கற்கள் விகாரை வடிவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி தினகரன் 

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கலாநிதி தம்பி ஐயா கலாமணி அவர்களின் Poothaththamby பூதத்தம்பி இசைநாடகம்-

 


உலகச் செய்திகள்

 .

நவீன யுகத்திற்கு அமைவாக இந்திய சட்டங்களில் சீர்திருத்தம்


இந்தியாவின் விண்வெளி துறை முதலீடு அதிகரிப்பு


பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் முன்னிலை

காசா எல்லை நகரான ரபா மீது இஸ்ரேலின் தாக்குதல் அதிகரிப்பு




நவீன யுகத்திற்கு அமைவாக இந்திய சட்டங்களில் சீர்திருத்தம்





நவீன யுகத்திற்கு ஏற்ப தற்போதைய யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்தியாவின் சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் சட்ட மாஅதிபர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மாநாட்டை புதுடில்லியிலுள்ள விஞ்ஞான் பவனில் அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நீதி வழங்குவதில் எல்லை தாண்டிய சவால்கள்’ என்ற தொனிப்பொருளிலான இம்மாநாட்டில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் மோடி, காலனித்துவ காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு காலாவதியாகியுள்ள ஆயிரக்கணக்கான சட்டங்களை நாம் நீக்கியுள்ளோம். காலனித்துவ காலம் முதல் இந்தியா ஒரு சட்ட அமைப்பைப் பெற்றுள்ள போதிலும் அதில் பல சீர்திருத்தங்களை நாம் மேற்கொண்டுள்ளோம்.

ஒரு நாட்டில் நீதியை உறுதிப்படுத்த சில சமயங்களில் ஏனைய நாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு நாங்கள் ஒத்துழைப்புடன் செயற்படும் போது, அமைப்புக்களை ஒருவருக்கொருவர் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி தினகரன்