செல்வி விஜயாள் முகுந்தனின் பரத நாட்டிய அரங்கேற்றம் - செளந்தரி கணேசன்

 


May 28, 2023 அன்று Parramatta Riverside நிகழ்கலை அரங்கில் செல்வி விஜயாள் முகுந்தனின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

அவ்வைத் தமிழானவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்என்னும் ஸ்ரீ கணேச சரணத்துடனும் புஷ்பாஞ்சலியுடனும் மலரும் அரும்பாய் நிகழ்ச்சி ஆரம்பித்தது. தொடர்ந்து, ஜதிகளும் ஸ்வரங்களும் கோர்வையாய் தொடர, அவற்றை விஜயாள் தனது அபிநயத்திலும் அசைவிலும் அழகான சரங்களாக மாற்றிக் கொண்டிருந்தார். அடுத்து இடம்பெற்றது வர்ணம்ஆஞ்சநேயம்”. அனுமனின் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி படைக்கப்பட்டிருந்தது இந்த அற்புதமான பகுதி. இராம தூதனான ஆஞ்சநேயரின் சாகசங்களை தனது அபிநயத்தினாலும் நடிப்பாலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.  வாயு புத்திரனான, இவர் இலங்கையில் இருந்து சீதையை மீட்பதற்கு , மலையை பெயர்த்தெடுக்கும் விதம், ஆஞ்சநேயரின் வலிமை, மாருதி செய்கின்ற சேட்டைகள், சீதாவைக்கண்டதும், ஜடாயுவாகப் பறந்து, அனுமனாகத் தாவுகின்ற விதம் என ஆஞ்சநேயரின் சிறப்புகளை சிறிதளவும் பிசகாமல் வெளிப்படுத்தியவிதம் அழகோ அழகு.  அனுமனைப் போற்றும் வகையில் பாடலும் அமைந்திருந்தது. ஒவ்வொரு காட்சியும் மிகவும் ரசிக்கும் வகையிலும் அமைந்திருந்தது.

அரங்கில் நிற்கும் ஒவ்வொரு கணமும், முகபாவங்களினாலும், நடன அசைவுகளினாலும் மேலதிகமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தார் விஜயாள். அயோத்தியில் ஆஞ்சநேயத்தை கண்முன்னே  கொண்டு வந்த அவரது ஆட்டத்தில் அரங்கமே மயங்கியிருந்தது.

மறை மாயம் தெரிவதில்லை !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா 




 விஞ்ஞானம் வளர்கிறது 
 விந்தைகளும் பெருகிறது
 நல்ஞானம் என்றுமே
 நம்புகிறோம் யாவருமே 
 விஞ்ஞான ஆராய்வில்
 விளங்குகின்ற ஆளுமைகள்
 மெய்யறிவை மனங்கொண்டால்
 விபரீதம் தடுத்திடலாம் 
























ஆராய்ச்சி ஆணவத்தை
விதைத்துவிடக் கூடாது
அறமற்ற பாதையிலே
கால்பதித்தல் ஆகாது  
மானிடத்தை மனமிருத்தி
ஆராய்ச்சி அமைவதுவே
மானிலத்தில் நல்விளைவு
மலர்வதற்கு வழியாகும்

















அஞ்சலிக்குறிப்பு: கமலி பிரேம்ஜி ஞானசுந்தரன் மறைந்தார் முற்போக்கு இலக்கிய முகாமிலிருந்து பிரதிகளை தட்டச்சுசெய்து வழங்கியவர் பற்றிய நினைவுகள் முருகபூபதி


உலகில் எந்தப் பாகத்திற்குச் சென்றாலும்,  அஞ்சலிக் குறிப்பு எழுதும் எனது வேலைக்கு மாத்திரம் ஓய்வு கிட்டாது போலிருக்கிறது.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழாவுக்கு கடந்த ஜூன் 01 ஆம் திகதி மெல்பனிலிருந்து புறப்படும்போதே  எனக்கு நன்கு தெரிந்த இரண்டு அன்பர்கள் இறந்துவிட்டனர்.

கனடா வந்து சேர்ந்தபின்னர் மற்றும் ஒரு சகோதரி திருமதி புஸ்பா சிவபாலன்  மெல்பனில் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது.

புஸ்பா எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் உறுப்பினர். கலை, இலக்கிய ஆர்வலர். எமது எழுத்தாளர் விழாக்களிலும் இலக்கிய சந்திப்புகளிலும் பங்கேற்பவர்.

 “ நன்றாகத்தானே இருந்தார் ! அவருக்கு என்ன நடந்தது..?   என நான்


 யோசித்துக்கொண்டிருந்தபோது,  கொழும்பிலிருந்து  நண்பர் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங் தொடர்புகொண்டு, “ எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவிருந்த எமது அருமை நண்பர்                   ( அமரர் ) பிரேம்ஜி ஞானசுந்தரனின் அன்புத்துணைவியார்  கமலி அக்கா கனடாவில்  மறைந்துவிட்டார் என்ற செய்தியைச் சொன்னார்.

அடுத்தடுத்து துயரமான  செய்திகளே வந்துகொண்டிருந்தன.

கனடாவில் நான் முற்கூட்டியே தயாரித்திருந்த நிகழ்ச்சி நிரலையும் சிறிது மாற்ற நேர்ந்தது.  மெல்பனிலிருந்து புறப்படும்போது கமலி அக்காவையும் பார்க்கவேண்டும் என்ற தீர்மானத்திலிருந்தேன். அதற்காக நாளும் குறித்தேன்.

ஆனால், அவரை அதே முகப்பொலிவுடன் மரணக்கோலத்தில்தான் பார்க்க முடிந்தது.  என்னுடன் வீரகேசரியில் முன்னர் பணியாற்றிய நண்பர் தவநேசனையும் எங்கள் நீர்கொழும்பூர் நண்பர் ராஜாவையும் அழைத்துக்கொண்டு  கமலி அக்காவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரைந்தேன்.

அங்கே அவரின் இரண்டு புதல்விகளும் என்னைக் கண்டு பேராச்சிரியம் அடைந்தனர்.

   “ பூபதி அண்ணா, அம்மா உங்களை தனது இறுதிச்சடங்கிற்கு அழைத்து வந்துவிட்டார்.   என்று அவர்கள் நா தழுதழுக்கச் சொன்னபோது விம்மிவந்த அழுகையை அடக்குவதற்கு சிரமப்பட்டேன்.

இலங்கையில்  எமது மூத்த தலைமுறை வாசகர்கள் நன்கு வாசித்து அறிந்த சோவியத் நாடு மாத இதழை மறந்திருக்க மாட்டார்கள். அத்துடன், சோஷலிஸம்: தத்துவமும் நடைமுறையும் என்ற இதழையும் மறக்கமாட்டார்கள். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ( மாஸ்கோ சார்பு )  தேசாபிமானி, புதுயுகம், சக்தி முதலான இதழ்களையும் மறந்திருக்கமாட்டார்கள்.

தனது கணவர் பிரேம்ஜி  மட்டுமன்றி,  இதர எழுத்தாளர்களும் தங்கள் கையால் எழுதிக்கொடுத்த பிரதிகளையெல்லாம் எழுத்துப் பிழையின்றி கச்சிதமாக தட்டச்சில் பதிவுசெய்து கொடுத்தவர்தான் கமலி அக்கா.

இலங்கையில் சேர் ஏர்ணஸ் டீ சில்வா மாவத்தையில் அமைந்திருந்த நவஸ்தி என அழைக்கப்பட்ட சோவியத் தூதுவராலய தகவல் பிரிவில்தான் கமலி அக்கா, தனது கணவர் பிரேம்ஜி ஞானசுந்தரனுடன் பணியாற்றினார்.

குறிப்பிட்ட  சோவியத் நாடு,  மற்றும் சோஷலிஸம் : தத்துவமும் நடைமுறையும் ஆகிய இரண்டு இதழ்களுடன் தினம் தினம் வெளியாகும் சோவியத் செய்திக்குறிப்பேட்டையும்                           ( News Letter ) தட்டச்சு செய்தவர் கமலி அக்கா.

அக்காலப்பகுதியில் அங்கே பணியாற்றிய இலக்கிய நண்பர் இராஜகுலேந்திரன் ( யாதவன் என்ற புனைபெயரில் இலக்கிய பிரதிகள் எழுதியவர் ) கமலி அக்கா, ரோணியோ படிவத்தில் தட்டச்சுசெய்து கொடுக்கும் செய்தி ஏட்டினை பிரதிகள் எடுத்து கொழும்பிலிருக்கும் பத்திரிகை ஊடகங்களுக்கு அனுப்பிக்கொண்டிருப்பார்.

ஈழத்து கூத்து மரபின் கலைக்காவலர் பேராசிரியர் சி.மெளனகுரு அகவை 80 ❤️🥁

 305760767_5374324905948320_4336409769236334860_n.jpg

எதிலும் நிச்சயமற்ற இயற்கை வெளியில் தங்கள் இருப்பிற்கு அர்த்தம் கற்பிக்கின்ற எத்தனையோ வழிமுறைகளில் ஒன்று தான் கூத்து, வாழ்வு, கல்வி, கலை, தொழில் முயற்சிகள் எனலாம்.
அர்த்தமில்லாத வாழ்வில் அர்த்தம் தேடுகிறோமா?
நடந்தே கழியவேணும் பயணம்
வாழ்ந்தே கழிய வேணும் வாழ்க்கை” – பேராசிரியர் சி.மெளனகுரு
எங்கள் பெருமைக்குரிய ஈழத்து கூத்து மரபின் கலைக்காவலர் பேராசிரியர் சி.மெளனகுரு அகவை 80 இல் ஜூன் 9 ஆம் திகதி இன்று காலடி எடுத்து வைக்கிறார்.
ஈழத்துக் கூத்து மரபினைப் பேணிக் காத்து, அதனை அடுத்த சந்ததிக்கும் பரப்பி வரும் அரை நூற்றாண்டுக்கும் மேலான பணியைச் செய்து வருபவர்.
ஒரு பக்கம் கலை, இன்னொரு பக்கம் இலக்கிய ஆய்வு என்று சரிசமமான பங்களிப்போடு இயங்கி வருபவர்.
MounaGuru1.png

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 67 சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் , முடிவே இல்லாதது ! முருகபூபதி


தாயகத்தில்  நீண்ட காலம் வாழ்ந்து , ஏதோ ஒரு காரணத்தினால் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழநேரிடும் எவரும்,  மீண்டும்  தமது தாயகத்திற்கோ அல்லது  ஏனைய நாடுகளுக்கோ பயணப்படும்போது சந்திக்கும்  பெரும் சிக்கல் நேரம்தான்.

 “ தமிழருக்கென்று ஒரு  நாடு இல்லை. ஆனால், தமிழர் இல்லாத தேசங்களும் இல்லை.     என்பது தமிழ் தேசிய பற்றாளர்கள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை.  

எனக்கென்னமோ தோழர் ஏர்ணஸ்ட் சேகுவேராவின் வார்த்தைகள்தான் மிகவும் பிடித்தமானது.

அவர் சென்னார்:   “ தனது காலடி பதியும் இடங்கள் யாவுமே தனக்குச்


சொந்தமானது.      அதன் அர்த்தம் நில ஆக்கிரமிப்பு அல்ல !  கனியன் பூங்குன்றனாரின்  “ யாதும் ஊரே யாவரும் கேளீர்  “ என்பதன் மற்றுமோர் அர்த்தம்தான் சேகுவேராவின் கூற்று !

கனடாவில் சில இலட்சம் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் சுமார் நூறுபேரையாவது எனக்கு நன்கு தெரியும். அவர்கள் அனைவரும் கனடா தேசத்தில் எந்தெந்த மாநிலங்களில் இருக்கிறார்கள் என்பது தெரியாதுவிட்டாலும், ஏதோ ஒரு வழியில் அவர்களுடன் தொடர்பை பேணிவருகின்றேன். அவர்களில் சிலர் முதுமையினாலும்,  உடல் உபாதைகளினாலும் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். முடிந்தவரையில் அவர்களை சந்திப்பதற்காகவும் இந்த நெடிய பயணத்தை ஆரம்பித்தேன்.


கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழாவுக்காக  நான் வதியும் அவுஸ்திரேலியா மெல்பனிலிருந்து கடந்த ஜூன் மாதம் 01 ஆம் திகதி இரவு ஒன்பது மணிக்குமேல்  Qantas    விமானத்தில் புறப்படத்தொடங்கியதுமே நேரம் குறித்த பதட்டம் தொடங்கிவிட்டது.

பல உடல் உபாதைகளின் சொந்தக்காரனாக நீண்ட காலம் வாழ்வதனால்,  பயணங்களில் எனது உடைமைகளுக்குள் இன்சுலின் உட்பட பல மருந்து – மாத்திரைகளும் இருக்கும்.

விமானத்தில் எனக்கு அடிக்கடி எழுந்து செல்வதற்கும்,  உள்ளே நடமாடுவதற்கும் ஏற்றவகையில் ஆசனம் வேண்டும் என்று கேட்டுப்பெற்றுக்கொள்வேன். அத்துடன் எனக்குரிய உணவு விடயத்திலும் கூடுதல் கவனம் செலுத்துவேன்.

விமானம் ஏறியதும்,   அங்கிருக்கும் பணிப்பெண்களிடம் எனது இனசுலின் பேனைகள் நிரம்பிய பொதியை ஒப்படைத்து,  விமானத்திலிருக்கும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கச்சொல்வேன்.       

இம்முறையும் கனடா பயணத்தில் இதுதான் நடந்தது.

எனக்குரிய ஆசனம் Qantas    விமானத்தில் சிரமபரிகாரம் செய்யும் சிறிய அறைக்கு பக்கத்திலேயே கிடைத்தது பாக்கியம்தான். அதன் அருகிலிருந்த ஆசனத்தில் அமர்ந்த சில நிமிடங்களில்,  ஒரு இளம் யுவதி யன்னலோர இருக்கைக்கு வந்தார். 

வந்ததுமே,    நீங்கள் இந்த ஆசனத்தை ஏன் தெரிவுசெய்திருக்கிறீர்கள் என்பதை அறிவேன்.  உங்களுடன் அமெரிக்கா லோஸ் ஏஞ்சல்ஸ் வரையில் பயணிப்பேன்.  எதற்கும் கவலைப்படவேண்டாம். நான் ஒரு மருத்துவ தாதி. உங்களுக்கு இரத்தத்தில் சீனி குறைந்தால் என்ன செய்யவேண்டும் ?  என்பது எனக்குத் தெரியும்.  “ என்று சொன்னது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

அவரே எனது இன்சுலின் பொதியை விமானப்பணிப் பெண்ணிடம் எடுத்துக் கொடுத்தார்.

அவரது கனிவான வார்த்தைகள் நெகிழ்ச்சியாக இருந்தது. அவரும்  மெல்பன் விமான நிலையத்தில் Qantas அலுவலர்களிடம்  ஆசனத்தெரிவில் அக்கறை காண்பித்துக்கேட்டபோதுதான், அவருக்கு முன்னரே விமனத்திற்குள் வந்துவிட்ட என்னைப்பற்றி அறிந்திருக்கின்றார்.

லவகுசா - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 இந்தியத் திரைப்படங்களின் பெரும்பாலான கதைகள்


இராமாயணம், மகாபாரதம் என்ற இரண்டு இதிகாசங்களில் இருந்து எடுக்கப் பட்டவைதான் என்பது சில திரைப்பட ஆய்வாளர்களின் கருத்தாகும். காரணம் அந்த இரண்டு நூல்களிலும் அடங்கியிருக்கும் கதைகள். கிளைக் கதைகள், தத்துவங்கள், என்பன பல நூறு கதைகளைக் கொண்டதாகவே இருந்துள்ளது.


அப்படி ராமாயணத்தின் பிற்பகுதி கதையான ராமர்

அரசாள்வதையும், சந்தேகத்தின் பேரில் சீதையை அவர் காட்டுக்கு அனுப்புவதையும், அங்கே அவள் லவ, குசா என்ற இரு குழந்தைகளை பெற்றெடுப்பதையும் கதைக் கருவாகக் கொண்டு அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தயாரான படம்தான் லவகுசா.

தெலுங்கு பட ரசிகர்களை பொறுத்த வரை அவர்கள் ராமரை நேரில் பார்த்ததில்லை. ஆனால் , தெலுங்கு பட சூப்பர் ஸ்டார் என் டி ராமராவ் மூலமாக அவரை பார்த்தார்கள். தரிசித்தார்கள். அந்தளவுக்கு ராமரின், கிருஷ்ணரின் மறு அவதாரமாகவே ரசிகர்களினால் ராமராவ் போற்றப்பட்டார். இதன் காரணமாக தெலுங்கில் தயாராகும் படங்களில் ராமர், கிருஷ்ணர் வேடம் என்றால் அந்த வேடத்தில் ராமராவ் தான் நடிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.

அந்த வகையில் தெலுங்கிலும், தமிழிலும் தயாரான லவ குசா படத்திலும் ராமராவ் ராமர் வேடம் தரித்தார். அவருக்கு இணையாக சீதை வேடத்தில் அஞ்சலிதேவி நடித்தார். ராம ராஜ்ஜியம் நடக்கும் காலத்தில் எல்லா மக்களும் மகிழ்ச்சியில் இருக்க ஒரே ஒரு சலவைத் தொழிலாளி தன் மனைவி மீது சந்தேகப்பட்டு , ராமர், சீதை இருவரையும் தூற்ற அது அறிந்து ராமர் தன பத்தினியை தனியாக வனவாசம் அனுப்புகிறான். இவ்வாறு அமைந்த கதை என்பதால் ராமராவ், அஞ்சலிதேவி இருவர் நடிப்பிலும் சோகமும், கவலையுமே மேவி இருந்தது. இருவரும் அதனை சிறப்பாக செய்திருந்தனர்.

இலட்சுமனணாக ஜெமினி கணேசன் நடித்திருந்தார். வண்ணான் வேடத்தில் எம் ஆர் ராதாவும், அவர் மனைவியாக மனோரமாவுக்கு நடித்தனர். படத்தில் இவர்கள் தோன்றுவதும் சில நிமிடங்களே என்றாலும் , கதையோட்டத்துக்கு அவர்களின் பங்களிப்பு பெரிதும் தேவைப்பட்டது. அதே போல் வால்மீகியாக வரும் வி நாகய்யாவின் நடிப்பு சிறப்பாக அமைந்தது. கண்ணாம்பா, எஸ் வரலக்ஷ்மி, சந்தியா, ஆகியோரும் நடித்திருந்தனர்.

50 - ஆன்மீக கேள்விகளும்-பதில்களும் ஏன் ? எதற்கு? எப்படி? - சைவமகன் சிவஸ்ரீ தனாசிவம்


1 - வீட்டில் விளக்கேற்றும் போது சுவாமி படங்களுக்கு பூ கட்டாயம் போட வேண்டுமா?
காலையில் விளக்கேற்றி பூ சாத்தி வழிபடவேண்டும். மாலையில் பூ கட்டாயமில்லை.
2 - செவ்வாய், வெள்ளிக்கிழமையில் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாதா ஏன்?
செவ்வாயும், வெள்ளியும் பொருள் வாங்கிச் சேர்த்தால் வளரும். அதனால், இவ்விரு நாட்களிலும் வீட்டைத் துடைப்பதில்லை. முதல்நாளே ஒட்டடை அடித்து சுத்தப்படுத்தி விடுங்கள்.
3 - கண்ணை மூடிக் கொண்டு கடவுளை வழிபடக்கூடாது என்கிறார்களே உண்மையா?
கடவுளின் திருவுருவம் கண் முன்னே இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.
4 - திருமணஞ்சேரியில் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை மாலை தொலைந்துவிட்டது. மீண்டும் மாலை செலுத்த விரும்புகிறேன். பரிகாரம் என்ன?
அறியாமல் செய்த தவறு தானே! இதற்காகக் குழம்பிக் கொள்ள வேண்டாம். மீண்டும் திருமணஞ்சேரி சென்று புதுமாலை வாங்கி சேர்த்து விடுங்கள். தவறைப் பொறுக்குமாறு கல்யாணசுந்தர சுவாமியிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
5 - சஞ்சீவிமலையைத் தூக்கி வரும் அனுமனை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்கிறார்களே, ஏன்?
சஞ்சீவி என்பது உயிர் காக்கும் மூலிகை. இந்த அனுமனை வழிபட்டால் கவலை நம்மை தீண்டாது. இவரை வழிபட நோயில்லாத நல்வாழ்வு உண்டாகும்.
6 - கனவில் பாம்பு அடிக்கடி வருகிறது. அதைத் தவிர்க்க ஏதாவது பரிகாரம் உண்டா?
பொதுவாக கனவில் பாம்பு வந்தால் பணம் வரும் என்பார்கள். மற்றபடி பயப்பட ஏதுமில்லை. முருகனுக்கு அர்ச்சனை செய்து பயத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.
7 - பூஜை, விரதம் போன்றவற்றை பெண்கள் மட்டுமே கடை பிடிக்க வேண்டுமா, ஆண்கள் கடைபிடிக்கக் கூடாதா?
இவற்றில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. வீடு, குழந்தைகள் நலன் விஷயங்களில் பெண்களே அதிகம் அக்கறை கொண்டவர்களாக இருப்பதால் பூஜை, விரதங்களில் ஈடுபாடு காட்டுகிறார்கள். மற்றபடி ஆண்கள் பூஜை, விரதம் போன்றவற்றைச் செய்யாமல் இல்லை.
8 - மாலை நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வதன் காரணம் என்ன?
சாப்பிடுவது, தூங்குவது, நகம் வெட்டுவது போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் தான் செய்ய வேண்டும். காலை சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய இரு வேளைகளும் சந்தியா காலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரு வேளைகளிலும் தெய்வ வழிபாட்டை தவிர மேற்படி விஷயங்களை செய்யக்கூடாது. மகாலட்சுமி நம் வீட்டிற்கு வரும் வேளையில் விளக்கேற்றி வரவேற்க வேண்டுமே தவிர மற்றதைச் செய்யக்கூடாது.
9 - வாகனத்தில் பன்றி இடித்துவிட்டால் அதை விற்றுவிடுகின்றனர். இதற்கு சாஸ்திர ரீதியான காரணம் உண்டா?
பன்றியைத் தவிர மற்ற மிருகங்கள் இடித்துவிட்டால் வாகனம் தங்கமாக மாறிவிடுமா? இதற்கு சாஸ்திரங்களையெல்லாம் இழுக்க வேண்டாம். வாகனங்களை விற்கவும் வேண்டாம். முதலில் எல்லோரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். "சாலை விதிகளை மதிக்காமல் வாகனத்தில் இடிப்பவர்களெல்லாம் அடுத்த பிறவியில் பன்றியாகப் போகக் கடவது' என்று சபிக்குமளவுக்கு சிலர் வாகனம் ஓட்டுகின்றனர்.
10 - திருஷ்டி கழிக்க ஏற்ற முறையும், அதற்கான நாளும் எது என்று சொல்லுங்கள்?
சாம்பிராணி புகை போட்டும், தேங்காயில் சூடம் கொளுத்தி வைத்தும், மிளகாய் வத்தல், காலடி மண்ணைச் சுற்றி நெருப்பில் போட்டும் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து திருஷ்டி கழிக்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஏற்ற நாட்கள்.

20 ஆண்டு சிறை இருந்த தாய்க்கு பொது மன்னிப்பு

 Tuesday, June 6, 2023 - 2:06pm

அவுஸ்திரேலியாவின் மிக மோசமான பெண் தொடர் கொலையாளி என அழைக்கப்பட்ட பெண் ஒருவர் அவரது நான்கு குழந்தைகளையும் கொல்லவில்லை என்பதை உறுதி செய்யும் புதிய ஆதாரங்கள் வெளியானதை அடுத்து பொது மன்னிப்புப் பெற்றுள்ளார்.

ஒரு தசாப்த காலத்தில் தனது நான்கு குழந்தைகளை கொன்றதாக குற்றங்காணப்பட்ட கத்லீன் பெல்பிக் என்ற பெண் கடந்த 20 ஆண்டுகள் சிறை அனுபவித்து வந்தார்.

எனினும் அந்தக் குழந்தைகள் இயற்கையாக இறந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுவதாக அண்மைய விசாரணை தெரிவித்துள்ளது.

இலங்கைச் செய்திகள்

 இலங்கை, இந்திய கப்பல் சேவை விரைவில்

பொன்சேகா இராஜினாமா, வெற்றிடத்தை நிரப்பிய ஹக்கீம்

 சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் யாழ். தமிழர்

2300 நாட்களை கடந்து தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

கலைவாதி கலீல் காலமானார் ஜனாஸா நேற்று நல்லடக்கம்

பொலிஸாரின் தரப்பில் எந்த தவறும் கிடையாது


இலங்கை, இந்திய கப்பல் சேவை விரைவில்

இந்திய துணைத் தூதர் நம்பிக்கை

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையேயான கப்பல் போக்குவரத்து சேவைகளை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக யாழ். இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உலகச் செய்திகள்

 சவூதியின் உற்பத்திக் குறைப்பால் சர்வதேச எண்ணெய் விலை ஏற்றம்

ஆப்கான் பள்ளிவாசல் குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் பிரதான அணை வெடித்து பாரிய வெள்ள அபாயம்

அணை உடைப்பினால் உக்ரைனில் அவசரநிலை

கனடாவின் காட்டுத் தீயினால் அமெரிக்காவில் புகைமூட்டம்

 உக்ரைனிய அணை உடைப்பால் பல்லாயிரம் மக்கள் வெளியேற்றம்

வட அமெரிக்காவில் காற்றின் தரம் பாதிப்பு


சவூதியின் உற்பத்திக் குறைப்பால் சர்வதேச எண்ணெய் விலை ஏற்றம்

குறைவடைந்து வரும் எண்ணெய் விலையை உயர்த்தும் நடவடிக்கையாக எண்ணெய் உற்பத்தியை தொடர்ந்து குறைப்பதற்கு எண்ணெய் உற்பத்தி நாடுகள் இணங்கியுள்ளன.

எதிர்வரும் ஜூலையில் நாளுக்கு ஒரு மில்லியன் பீப்பாய்களை குறைப்பதாக சவூதி அரேபியா அறிவித்திருப்பதோடு 2024 இல் இருந்து நாளொன்றுக்கு மேலும் 1.4 மில்லியன் பீப்பாய்களை குறைக்க இலக்கு வைத்திருப்பதாக ஒபெக் பிளஸ் நாடுகள் குறிப்பிட்டுள்ளன.

போதைப்பொருளை ஒழிப்பதில் பொதுமக்களின் ஆதரவு அவசியம்!

 Thursday, June 8, 2023 - 1:00am

போதைப்பொருள் கடத்தலும் பாவனையும் இலங்கையை மாத்திரமன்றி, உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. உலகம் எதிர்நோக்குகின்ற பாரதூரமான பிரச்சினைகளில் போதைப்பொருள் கடத்தலும் ஒன்றாக இருக்கின்றது.

போதைப்பொருளை ஒழித்துக் கட்டுவதற்கு உலகநாடுகள் ஒன்றிணைந்து போராடிக் கொண்டிருக்கின்றன. அதற்கென மிகக்கடுமையான சட்டதிட்டங்களையும் வகுத்துச் செயற்படுத்திக் கொண்டிருக்கின்றன. போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகளும் மிகக் கடுமையானதாகவே உள்ளன.

ஆனாலும் போதைப்பொருள் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதென்பது இயலாத காரியமாகவே இருக்கின்றது. போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்ைககள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், கடத்தல்காரர்கள் தங்கள் குற்றத்தைத் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றனர். போதைப்பொருட்களும் நாட்டுக்குள் வந்து கொண்டேயிருக்கின்றன.