ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் (SVT, சிட்னி) - திருவிழா - 19/09/2020 - 28/09/2020

 


“Brahmotsavam” என்ற சொல் “பிரம்மா” மற்றும் “உட்சவம்” ஆகிய இரண்டு சமஸ்கிருத சொற்களின் கலவையாகும். ஒரு சூழலில், பிரம்மா முதன்முதலில் இந்த விழாவை நிகழ்த்தினார், எனவே பிரம்மோத்ஸவம் பிரம்மாவால் கொண்டாடப்படும் திருவிழா என்று குறிப்பிடப்படுகிறது.

புராணத்தின் படி, இந்த திருவிழாவை நடத்துவதற்காக இறைவன் “பிரம்மா” பூமிக்கு இறங்குவார் என்று நம்பப்படுகிறது, எனவே இந்த விழாவிற்கு பிரம்மோத்ஸவம் என்ற பெயர் வந்தது,

19/09/2020  சனி - காலை 9.00: மூலவர் அபிஷேகம்; காலை 10.30: துவாஜா அரோகனம்; மாலை 04.00: பிரம்மோத்ஸ யாகம்; மாலை 5.30 மணி: பெரி தாண்டனம் தொடர்ந்து வசந்தா மண்டப பூஜைகள் / விஷ்ணு சன்னதியைச் சுற்றி ஊர்வலம். மற்றும் ஊஞ்சல்.

வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலரே ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


 






வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலரே 

தறிகெட்ட மனிதரை குறிபார்த்த மாகவியே 

விடுதலைச் சிறகுகளை விரித்திட்ட பெருங்கவியே 

வீழ்வேனா எனவுரைத்து வித்தானாய் புரட்சிக்கு 

 

மடமைத் தனத்துக்கு மாலையிட்டார் மண்டியிட

அடிமைத் தளையிருந்தார் அலறியே ஓடிவிட 

பொடிவைத்து பாட்டிசைத்து போக்கியே நின்றாயே 

பொல்லாதார் வசையெல்லாம் பொசுங்கிவிடச் செய்தனையே  

 

பாப்பாக்கு பாட்டுரைத்து பலகாரம் கொடுத்தாயே

பாஞ்சாலி கதையெடுத்து பகர்ந்தாயே சுயவுணர்வை 

வருமென்னும் நம்பிக்கை மனமுழுக்க கொண்டதனால்

வருமுன்னே விடுதலைக்கு பாடிவிட்டாய் பள்ளுதனை 

ஈழத்து எழுத்தாளர் மாவை வரோதயன் நினைவுகள் செப்டெம்பர் 12 பிறந்த தினம் ! “ ஈதல் தமிழுக்கானாய் இன்சொல்லின் இருப்பினாய் எங்கிருந்து சொல்லெடுக்க இயல்பினை நயந்துரைக்க...? “ சுபாஷினி சிகதரன் - மெல்பன்


செப்டெம்பர் 12 ஆம் திகதி மகாகவி பாரதியின் நினவு தினம்.  இதே தினத்தில்தான் எனது நேசத்திற்குரிய உடன்பிறவாச் சகோதரன் ஈழத்து எழுத்தாளர் மாவை வரோதயன் அண்ணாவின் பிறந்த தினமுமாகும்.

அதனால் பாரதியாரின் நினைவு வரும்போதெல்லாம்,  1965 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி பிறந்து, 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி அற்பாயுளில் மறைந்துபோன மாவைவரதோயன்  அண்ணா அவர்களும் நினைவுக்கு வந்துவிடுவார்.

இன்றைய தினம் நான் எனது முகநூலில் பகிர்ந்துகொண்டதை  வாகர்களிடத்தில் சமர்ப்பிக்கின்றேன்.

    

எனது கைத்தொலைபேசி அழைப்பிற்கு மறுமுனையில் ஒலிவாங்கியின் அதிர்வும், கூட்டத்தின் சலசலப்பும் சேர்ந்து இரைந்தன. இவற்றிற்கு மேலாக, "வந்துடுறன், இப்ப இன்னும் அரை மணித்தியாலத்துக்குள்ள. நீங்கள் வெளியில போகமுதல் வந்துடுவன்" என்ற வரோதயன் அண்ணனின் படபடத்த அவசரக்குரல் ஒலித்தது. பதினைந்து, இருபது நிமிடங்களிலேயே வரோதயன் அண்ணா வீட்டுக் கதவைத் தட்டினார்.

 

மெல்பன் இராஜரட்ணம் வைத்தியநாதன் வாழ்வும் பணிகளும் செப்டெம்பர் 10 பிறந்த தினம் ! தாயகத்தின் பாதுகாப்புக்காக கடல்வலம் வந்தவர், புகலிடத்தில் கோயிலை வலம்வந்த கதை ! ! முருகபூபதி

அந்தச் சிறுவனுக்கு  கடல் மீது அளவுகடந்த நேசம்.  பிறந்த வீடும் கடலருகே இருந்தமையும் அதற்குக்காரணம்.  கடலில் விரைந்து செல்லும் படகுகளை கண்வெட்டாமல் பார்த்து பரவசமடைவான்.

கடலின் கரையில் இருப்பதோ படகுத்துறையாக பிரபலம்பெற்ற காங்கேசன்துறை. தமிழரசுத் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் தேர்தல் தொகுதி.

      

இலங்கை அரசியலில் கவனத்திற்குள்ளான ஊர். 1972 இல் புதிய அரசியலமைப்பினை எதிர்த்து தந்தை செல்வநாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்து, மீண்டும் மக்களின் ஆணைக்காக தேர்தலில் இறங்கி வெற்றிவாகைசூடிய தொகுதி.

அத்தகைய ஒரு கடலோர நகரத்தில் 1952 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்  10 ஆம் திகதி  பிறந்த குழந்தையின் விதியை இறைவன் எவ்வாறு எழுதியிருந்தானோ தெரியாது,

ஆனால்,  தனது பாதை இப்படித்தான் இருக்கும், என்று துணிவுடனும் ஆளுமைப்பண்புகளுடனும்  வாழ்ந்து காட்டியிருக்கும்  ஒருவருக்குத்தான் இன்று பிறந்த தினம்.

இலங்கையின் வடபுலத்தில் வாழ்ந்த தமிழ்ப்பெற்றோர் தமது பிள்ளைகள் எதிர்காலத்தில் எவ்வாறு வரவேண்டும் என்பதில் நிறைய கனவுகள் காண்பவர்கள்.   அதனால் கல்வியையே பெரிய மூலதனமாக கருதுபவர்கள்.

 “கோழி மேய்த்தாலும் கோரணமேந்தில் மேய்க்கவேண்டும்  “  என்ற பிரதேச மொழிப்பிரயோகத்தின் சொந்தக்காரர்கள். அதாவது அரச உத்தியோகம் கிடைத்தால்தான் சமூகத்தில் தனி அந்தஸ்து கிடைக்கும் எனக்கருதினார்கள்.  அதனால் பெரும்பாலான ஆண்கள் அரச உத்தியோகங்களுக்காக தென்னிலங்கை வந்து,  மணியோடர் பொருளாதாரத்தை  வடக்கில் அறிமுகப்படுத்தியவர்கள்.

அந்தக்கனவுதான் இந்த கதையின் நாயகனின் பெற்றோருக்கும் இருந்திருக்கும்.

யார் அந்த நாயகன்…?

   

அவர்தான் மெல்பனில் புறநகர் ரொக்பேங்கில்  எழுந்தருளியிருக்கும்  குன்றத்துக்குமரன் ஆலயத்தின் உருவாக்கத்திற்கு பிரதான காரணமாகத்திகழ்ந்தவரான திரு. இராஜரட்ணம் வைத்தியநாதன். இவரை எனக்கு நீண்ட நெடுங்காலமாகவே தெரியும்.

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் – 08 இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் இலக்கிய இயக்கமும் அதிகாரத்தை முதன்மைப்படுத்தும் அரசியலமைப்பும் இனமுரண்பாடும் முருகபூபதி


   

இலக்கிய , ஊடகப்பிரவேசம் செய்த காலப்பகுதியில்  மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா அவர்களினால் 1972 பெப்ரவரி மாதம் எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டவர்தான் எழுத்தாளர் மு. கனகராசன்.

யாழ்ப்பாணம் மானிப்பாயைச்சேர்ந்தவர். எனினும் நீண்டகாலமாக தென்னிலங்கைவாசி. எமது நீர்கொழும்பூர் இல்லத்தில் குறிப்பிட்ட 1972 ஆம் ஆண்டு பெப்ரவரிமாதம் வெளியான மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழின் வெளியீட்டு அரங்கில்தான் முதல் முதலில் கனகராசனை சந்தித்தேன்.

அன்று முதல் மகரகமை புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையில்  அவர் மறையும் வரையில்  ஏதோ ஒரு வழியில் அவருடன் தொடர்பிலிருந்தேன்.

  

அந்தமரணப்படுக்கையிலும் அவர் தனது மனைவி அசுந்தாவிடம்,  “ தனக்கு ஏதும் நடந்துவிட்டால், உடனடியாக அறிவிக்கவேண்டிய இருவர் “   என்று ஒரு சிறிய காகிதத்தில் எழுதிக்கொடுத்திருக்கிறார்.

உலக தற்கொலை தவிர்ப்பு நாள் - மனநல ஆலோசகர் ரேவதி மோகன் வானலையில்

 


செப்டெம்பர் 10 ஆம் திகதி உலக தற்கொலை தவிர்ப்பு நாளாக அமைகின்றது. இதனையொட்டிய விழிப்புணர்வுப் பகிர்வாக மனநல ஆலோசகர் ரேவதி மோகன்  வானலையில் வழங்கிய கருத்துப் பகிர்வு



அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 31 – உடல் – சரவண பிரபு ராமமூர்த்தி

உடல்தோற்கருவி

 

கோவில்களில் மட்டுமே இசைக்கப்படும் தொன்மையான தோற்கருவி உடல். தவிலைப் போலவே இருக்கும் உடல், அதைவிட சற்றுப் பெரியது. ஓங்காரத் தொனியில் ஒலிக்கக் கூடியது. உடல் பருத்து, ஓரங்கள் சுருங்கி, இரண்டு முகங்களிலும் தோல் கட்டப்பட்ட கருவி. தவிலைப் போல் அல்லாமல் உடலின் வலந்தலை, இடந்தலை இரண்டும் ஒரே அளவு கொண்டவை. பலாமரக் கட்டையில் தோலைக் கட்டி, புளியங்கொட்டை பசை கொண்டு இழுத்து ஒட்டி உடல் தயாரிக்கப்படுகிறது. இந்த புளியங்கொட்டை பசை மிகவும் பலம் வாய்ந்தது. புளியங்கொட்டையை நன்கு ஊறவைத்து, அரைத்து, தகுந்த பதத்தில் காய்ச்சினால், அதை மிஞ்ச வேறெந்த பசையும் இல்லை. தவிலில் வடந்தலைக்கு கன்றுத்தோலும், இடந்தலைக்கு ஆட்டுத்தோலும் வார்க்கப்படும். உடலுக்கு இருபுறமும் ஆடு அல்லது மாட்டுத்தோல் வார்க்கப்படும்.  சீர்காழி, திருவையாறு பகுதிகளில் உடல் செய்யப்பட்டது. அண்மைக்காலமாக மரத்திற்கு பதில் உலோகத்தில் உடல் தயாரிக்கப்படுகிறது.

   

தவிலின் ஒரு முகத்தில் குச்சியாலும், மற்றொரு முகத்தில் கை அல்லது கூடுகள் கொண்டும் வாசிப்பார்கள். உடலின் இருமுகங்களையும் குருவிக்கொம்புக் குச்சி கொண்டே வாசிப்பார்கள். பல கோவில்களில் ஒரு முகம் தான் இசைக்கப்படும். குருவிக்கொம்பு குச்சி என்பது திருவண்ணாமலை, வேலூர் வட்டாரக் காடுகளில் கிடைக்கும் ஒருவகை செடியில் ஒடிக்கப்படுகிறது. வளையும் தன்மையுடையது. அரளிக்குச்சி, சவுக்குக்குச்சிகள் கொண்டும் சிலர் வாசிக்கிறார்கள். இப்பொழுது பெரும்பாலும் நெகிழி குச்சி தான். பெரிய உடல், சின்ன உடல், சன்ன உடல் என்று அளவின் அடிப்படையில் மூன்று வகை உடல்கள் உள்ளன.

 

இலங்கைச் செய்திகள்

20வது திருத்தத்திற்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுப்பது?

முறியடிக்க நாம் முயற்சிப்போம்

ஆணைக்குழுக்களினால் எவ்விதமான பயனுமில்லை

மக்கள் தேவையே எனது இலக்கு போலி தேசியம் அல்ல

இந்திய உயர் ஸ்தானிகருடன் அங்கஜன் விசேட சந்திப்பு

வடக்கில் முதலீடுகளுக்கு உரிய கள ஆய்வின் பின்னர் அனுமதி

இந்தியாவை மீறி 13ஆவது திருத்தத்தை ஒழிக்க முடியாது

புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்களுடன் பிரதமர் மஹிந்த நேற்று சந்தித்துரையாடல்

ஆறுமுகனின் தலைமைத்துவம் ஜீவனுக்கு சிறந்த முன்மாதிரி

கட்சி பேதமின்றி அனைவருடனும் நட்பாக பழகும் இயல்புடைய தலைவர்

கருத்தாழம்மிக்க சிந்தனையாளர் அமரர் ஆறுமுகன் தொண்டமான்

மலையக மக்களுக்காக தனது இறுதி மூச்சுவரை அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் அமரர் ஆறுமுகன்


20வது திருத்தத்திற்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுப்பது?

TNA இவ்வாரம் கூடி முடிவு −மாவை

20வது திருத்தத்துக்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து இந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

உலகச் செய்திகள்

பலஸ்தீனர்களுக்கு நியாயமான தீர்வை கேட்டு டிரம்பிடம் சல்மான் வலியுறுத்து

பெலாரஸ் ஆர்ப்பாட்டங்களில் 600க்கும் அதிகமானோர் கைது

உலகெங்கும் விநியோகிப்பதற்கு 8,000 ஜம்போ ஜெட்கள் தேவை

இஸ்ரேல் – ஐ.அ. இராச்சிய உடன்படிக்கை செப். 15இல்

அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்பின் பெயர் பரிந்துரை

ஈராக்கில் இருந்து 2,200 அமெ. துருப்புகள் வாபஸ்

அரபு லீக்கில் பலஸ்தீனத்தின் கண்டனத் தீர்மானம் தோல்வி

பெலாருஸ் நாட்டின் மற்றொரு எதிர்க்கட்சி தலைவர் கைது

பிரிட்டனில் 6 பேருக்கு மேல் கூட கட்டுப்பாடு

ரொஹிங்கிய படுகொலைகள் தொடர்பில் இரு மியன்மார் படை வீரர்கள் ஒப்புதல்


பலஸ்தீனர்களுக்கு நியாயமான தீர்வை கேட்டு டிரம்பிடம் சல்மான் வலியுறுத்து

பலஸ்தீனர்களுக்கான நியாயமான மற்றும் நிரந்தர தீர்வொன்றை எட்டுவதற்கு சவூதி ஆரேபியா ஆர்வமாக இருப்பதாக அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் தெரிவித்துள்ளார்.

ஆட்டிஸக் குறைபாடு (வரு முன் காப்போம்) கட்டுரை உஷாஜவகர் (அவுஸ்திரேலியா)



ஆட்டிசம்
(Autism) என்றால் என்ன?சாதாரண மனிதர்களை விட நடத்தையில் சில வித்தியாசங்களை ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கொண்டிருப்பார்கள்.

 பொதுவாக ஆண்களே பெண்களை விட ஆட்டிஸக் குறைபாடு அதிகம் உள்ளவர்களாக காணப்படுகிறார்கள்.

4 அவுஸ்திரேலிய ஆண்களுக்கு 1 பெண் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது அறியப்பட்டிருக்கிறது.

 குழந்தைகளில் காணப்படும் ஆட்டிஸக் குறைபாட்டுக்கான அறிகுறிகள்

 

(6 மாதத்திலிருந்து ஒரு வயது வரை)

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் – அங்கம் 30 கனிமவளம் நிறைந்த பாப்புவாநியுகினியில் குழந்தை இலக்கியம் ! எல்லா கடற்கரையில் உள்வாங்கிய காட்சி !!


   

அவுஸ்திரிலேசியாவில் பசுபிக் தீவுகளான பாப்புவா நியூகினியிலும் சொலமன் தீவிலும்  வாழும் குழந்தைகளுக்காகவும்  கவிதைகள், பாடல்கள் புனைந்தின்றேன்.

இந்த நாடுகள் எமது அவுஸ்திரேலியாவுக்கு அருகில் பசுபிக் கடல் பிராந்தியத்தில் இணைந்துள்ள கனிமவளங்கள் நிரம்பப்பெற்ற தேசங்கள்.

பொன், வெள்ளி, செம்பு, நிக்கல் முதலான உலேகங்களை பிரசவிக்கும் வளமுள்ள நாடுகள். மீன் பிடித்தொழிலுக்கும் பெயர் பெற்றவை.

இங்கு வாழும் சிறுவர், சிறுமியருடன் எனது பணி நிமித்தம் நெருக்கமான உறவையும் கொண்டிருந்தேன். அவர்களின் மொழி, பண்பாடு, உணவு நாகரீகம், நடை, உடை பாவனைகள்,  சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை என்பன என்னை பெரிதும் கவர்ந்தன.

அவற்றை உள்வாங்கிக்கொண்டுதான்,  இரண்டு  ஆங்கில கவிதை நூல்களை எழுதினேன். அவற்றுக்கு ஓசைநயமும் கொடுத்தேன். அதனால் அக்கவிதைகள் குழந்தைகளின் நாவிலிருந்து பாடல்களாகவும் பிறந்தன.

Lingering Memories, A String of Pearls ஆகிய குறிப்பிட்ட நூல்களைப்பற்றியும் எனது சிறுவர் இலக்கிய சேவைகள் குறித்தும் அங்கிருந்து வெளியான National, The Independent, Solomon Star ஆகிய இதழ்களும் கட்டுரைகளை வெளியிட்டன.

   

பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 16 - வியட்னாம் வீடு - சுந்தரதாஸ்

 .

தமிழ் திரையுலகில் பலவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து சாதனை புரிந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அந்தவகையில் பிராமணராக வேடமேற்று பிராமண பாஷையில் படம் முழுவதும் பேசி நடித்த வெற்றிப் படம் வியட்நாம் வீடு. சிவாஜியின் சொந்த பட நிறுவனமான சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்தது.

சுந்தரம் என்ற இளைஞர் எழுதி சிவாஜி நாடக மன்றத்தினால் பல தடவைகள் நடிக்கப்பட்ட வியட்நாம் வீடு நாடகத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பு சிவாஜியை நாடகத்தை படமாக்க தூண்டியது. நாடகத்தில் ஏற்ற பிரஸ்ட்டீஸ் பத்தமனாதன் பாத்திரத்திலேயே படத்திலும் சிவாஜி நடித்தார். நடித்தார் என்பதைவிட அவ்வேடத்திலேயே வாழ்ந்தார் எனலாம். தனது முகபாவனை, உடல் அசைவு, மொழி என்று எல்லாவற்றிலுமே தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார் சிவாஜி. 60 களில் வாழ்ந்த ஒரு பொறுப்பு வாய்ந்த பிராமண அதிகாரி எவ்வாறு நடந்து கொள்வாரோ அதனையே படத்திலும் வெளிப்படுத்தினார்.

கண்டிப்பும் கட்டுப்பாடும் கொண்ட பத்மநாபன் சாவித்திரி தம்பதிக்கு மூன்று வாரிசுகள் மூவரும் தந்தையை பின்பற்றாமல் தான்தோன்றித்தனமாக வாழத் துடிக்கிறார்கள்.இதனால் பல சங்கடங்கள் உருவாகின்றன அவற்றை பத்மநாபன் எவ்வாறு அனுபவிக்கிறார் என்பதே படத்தின் கதை.

மேற்கின் ஆதிக்கம் – ஒன்றிணைந்த வைத்தியம் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

 


சில தினங்களுக்கு முன் கேட்ட செய்தி என்னை திடுக்கிட வைத்தது. அந்த செய்தி இதுதான் – 2030-களில் உலகம் பெரிய உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் என்பதே. மக்களின் மாறிவரும் உணவுப்பழக்கமே இதற்குக் காரணமாகிறது. முக்கியமாக உலகில் அதிக ஜனத்தொகையைக் கொண்ட நாடுகளான இந்தியா, சைனா வாழ் மக்கள் தமது பாரம்பரியமான உணவுப்பழக்கங்களை விடுத்து புதிய வகை உணவுகளை உண்ணப் பழகுகிறார்கள் எனவும் இது ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. அடுத்து McDonalds போன்ற Fast food நிலையங்கள் எதிர்பாராத அளவு வேகமாகப் பரவுவதும் காரணமாகிறது. இத்தகைய மாற்றங்கள் மனித சுகவாழ்வைக் கெடுப்பவை எனவும் கூறப்பட்டது.

  எமது நாடான இலங்கையை நோக்குவோமானால் மூன்று நான்கு தலைமுறைக்கு முன் வாழ்ந்த இலங்கைத் தமிழர் குரக்கன், வரகு, சாமை போன்ற தானியங்களையே உண்டார்கள். இவர்கள் சுகதேகியாகவும் வாழ்ந்தார்கள். அப்படியான உடல் இன்றைய வாழ் எம்மவருக்கு இல்லை எனவும் கூறப்படுகிறது. ஏன் அதே உணவை பிற்பட்டு வந்தவர்கள் உண்ணவில்லை? குரக்கன், சாமை, வரகு போன்ற தானியத்தை எம்மவர் விதையாது அரிசி மட்டுமே சாகுபடி செய்தார்களா? அரிசி விளைச்சல் பெருகி அதை உண்டோமா? இல்லவே இல்லை. அரிசி இறக்குமதியானது. அது மட்டுமல்ல. கோதுமை மாவும் வந்திறங்கியது. அதுவும் சங்க கடைகளில் மலிவு விலைக்கு விற்பனையாகியது. இந்த கோதுமை மா வெள்ளை வெளேரென இருக்கும் காரணம்தான் என்ன? கோதுமை தானியத்தை அரைத்தால் அது பழுப்பு நிற மாவாகும். ஆனால் எமக்கு வந்ததோ வெள்ளை மா. காரணம் என்ன? கோதுமை தானியத்தில் இருக்கும் தோல் நீக்கப்பட்டு அது கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படும். அதாவது கோதுமையின் போஷாக்கு உள்ள பகுதி கால்நடைக்குப் போக மீதமுள்ள போஷாக்கற்ற பகுதியே வெள்ளை மாவாக எமக்கு ஏற்றுமதியானது. இந்த மாவின் பிறிதொரு பெயர் அமெரிக்கன் மா. நமது இலங்கை தேசம் மாவை விலை கொடுத்து வாங்கியது அமெரிக்காவிடம் இருந்து. அமெரிக்காவில் அதிகப்படியாக விளையும் கோதுமையால் உலக சந்தையில் விலை சரியாமல் இருப்பதற்காக கோதுமையை கடலில் கொட்டுவார்கள். இப்படிக் கொட்டுவதையே மலிவு விலையில் எம் போன்ற மூன்றாவது மண்டல நாடுகட்கு விற்று வந்தார்கள். வெள்ளை அரிசியையும் அமெரிக்கன் மாவையும் உண்டு உடல் பலமற்ற ஒரு சமுதாயம் உருவானது.

 

மழைக்காற்று ( தொடர்கதை ) --- அங்கம் 52 முருகபூபதி


டுத்தடுத்த வாரங்களில் ஜீவிகா எடுத்த அதிரடி முடிவுகளைக்கண்டு  அபிதா சற்று கலங்கியிருந்தாலும் வெளியே காண்பிக்காமல் எந்தச்சலனமுமற்று  தான் இருப்பதாக பாவனைகாண்பித்தவாறு குட்டி ஈன்ற பூனையைப்போன்று நடமாடினாள்.

 

ஜீவிகாவின் இந்த முடிவுகளுக்கு லண்டனிலிருக்கும் அவளது பெரியப்பா சண்முகநாதனின் மகள் தர்ஷினிதான் காரணம் என்பதையும்  அபிதா புரிந்துகொண்டாள்.

‘ சபாஷ் சரியான போட்டிதான்  ‘  வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் வில்லன் நடிகர் வீரப்பாவின் அந்த புகழ்பெற்ற  வசனம் அபிதாவின்   நினைவுக்கு  வந்தது.

அந்தப்படம் வெளியானபோது அவள் பிறந்திருக்கவில்லை.  அவளது அம்மாதான் நடிகைகள் பத்மினி, வைஜயந்திமாலா பற்றி அடிக்கடி சொல்லி, தன்னையும் நாட்டியம் கற்றுக்கொள்ள நந்தினி ரீச்சரிடம் அனுப்பியிருந்தார். நந்தினி ரீச்சர் வீட்டில்தான் முதல்தடவை அந்தப்படத்தின்  போட்டி நடனக்காட்சியை பார்த்தவள் அபிதா.

தவறின தருணங்கள் (கன்பரா யோகன்)

நிகழ்ந்தவற்றை  நினைத்து வருத்தப்படுவது, இதே போல நிகழாமல் போய்விட்ட தருணங்களையும் எண்ணி வருத்தமடைவதுமுண்டு.

பேசிய வார்த்தைகளையிட்டு வருத்தம் கொள்வதுண்டு அதே வேளை  பேசாமல் விட்டு விட்டு விட்டோமே என்று வருத்தப்படும் வேறு

தருணங்களைப் போலத்தான் இதுவும்.

 

2011 ஜனவரியில் கொழும்பில் எமது விடுமுறையை முடித்து அவுஸ்திரேலியா திரும்பு முன் சந்திக்க வேண்டிய சிலரில் பேராசிரியர் சிவத்தம்பியும் ஒருவர். அப்போது அவர் கொழும்பில் டெகிவலயில் இருந்தார்.

அவரது தொலைபேசி இலக்கத்தை யாழ்ப்பாணம் -  திருநெல்வேலியிலிருந்த குழந்தை சண்முகலிங்கம் மாஸ்டரிடம்  வாங்கிக் கொண்டு கொழும்பு வந்திருந்தேன். அவுஸ்திரேலிய  பயணத்திற்கு  முதல் நாள் காலையில் பேராசிரியர் சிவத்தம்பியுடன் தொடர்பு கொண்டேன்.

 

நான் அவர் மாணவன் அல்ல. அவரை நான் அறிய வேண்டி வந்தது 1985 இல் பல்கலைக்கழக கலாச்சாரக் குழு நாடக  செயற்பாடுகளில்  ஈட்டுபட்டதால்  மட்டுமே.  அதன் பிறகு 1988 இல் அவர் தமிழ் அகதிகள் புனர் வாழ்வுக் கழகத்தில் (T.R.R.O)  தலைவராக கடமையாற்றியபோது அங்கே வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  அதன் அலுவலகம் யாழ்ப்பாணத்தில்

4 ம் குறுக்குத் தெருவில் அமைந்திருந்தது. 

பிக்பாஸ் ஆரவ் திருமண பந்தத்தில் இணைந்தார்

பிக்பாஸ் ஆரவ் திருமண பந்தத்தில் இணைந்தார்-BiggBoss Aarav Wedding Photos

பிக்பாஸ் தமிழ் முதலாவது தொடரின் வெற்றியாளராக தெரிவான ஆரவ் திருமண பந்தத்தின் இணைந்துள்ளார்.

இந்திய தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வெற்றியாளராக தெரிவானவரே ஆரவ்.

பிக்பாஸ் ஆரவ் திருமண பந்தத்தில் இணைந்தார்-BiggBoss Aarav Wedding Photos

கடந்த சில நாட்களாக அவருக்கு திருமணமாகப் போகின்றது எனவும் நடிகை ராஹே என்பவரை அவர் மணம் முடிக்கவுள்ளதாகவும் இந்திய இணையத்தளங்களில் பேசப்பட்டு வந்தது.

நடிகை ராஹே, கௌதம் மேனன் இயக்கிய 'ஜோஷ்வா இமைபோல் காக்க’ என்ற படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் ஆரவ் திருமண பந்தத்தில் இணைந்தார்-BiggBoss Aarav Wedding Photos

இந்நிலையில் நேற்று நடிகர் ஆரவ் மற்றும் நடிகை ராஹே ஆகியோரின் திருமணம் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இதிருமணத்திற்கு பிக்பாஸ் தமிழ் முதல் தொடரின் போட்டியாளர்களான கவிஞர் சிநேகன், நடிகைகளான காயத்ரி ரகுராம், ஆர்த்தி, பிந்துமாதவி, சுஜா வருணி, நடிகர் ஹரிஷ் கல்யாண் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பிக்பாஸ் ஆரவ் திருமண பந்தத்தில் இணைந்தார்-BiggBoss Aarav Wedding Photos

பிக்பாஸ் ஆரவ் திருமண பந்தத்தில் இணைந்தார்-BiggBoss Aarav Wedding Photos

இருவரும் காதலித்தார்கள் எனவும், இத்திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடனே நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிக்பாஸ் தொடரின்போது, ஆரவ்வை காதலித்ததாக சர்ச்சைக்குள்ளான நடிகை ஓவியா இத்திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிக்பாஸ் ஆரவ் திருமண பந்தத்தில் இணைந்தார்-BiggBoss Aarav Wedding Photos

பிக்பாஸ் ஆரவ் திருமண பந்தத்தில் இணைந்தார்-BiggBoss Aarav Wedding Photos

நன்றி தினகரன்  



மரண அறிவித்தல்

 


ஜெரீஷன் அருமைநாயகம்

மலர்வு 19.12.1986                                    உதிர்வு 11.09.2020

யாழ்ப்பாணம், உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெரீஷன் அருமைநாயகம் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று காலமானார்.

அன்னார் சின்னத்தம்பி அருமைநாயகம், வத்சலா அருமைநாயகம் ஆகியோரின் அன்பு மகனும், ஜெனோஷன் அவர்களின் பாசமிகு சகோதரனும்,

காலஞ் சென்றவர்களான செல்லையா துரைரத்தினம், யோகேஸ்வரி துரைரத்தினம், சின்னத்தம்பி, தங்கமுத்து சின்னத்தம்பி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ் சென்ற ஸ்ரீதரன், ரமணீதரன், உமா ரமணீதரன் (மெல்பேண்) ஆகியோரின் மருமகனும், சசிகலா இராஜநாயகம் (மெல்பேண்), கௌரி அல்லமதேவன் (மெல்பேண்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

பத்மாவதி அம்பிகைபாகன் (லண்டன்), ஆனந்தகௌரி குழந்தைவடிவேல் (ஜேர்மனி), பட்டம்பாள் ஸ்ரீஸ்கந்தராசா (கனடா), லலிதாம்பிகை சண்முகநாதன் (ஜேர்மனி), கமலாம்பிகை தவசீலன் (ஜேர்மனி) ஆகியோரின் மருமகனும், தம்பிரத்தினம் நாகரத்தினம் (சுன்னாகம்), கங்காதரன் விஜயநிதி (கனடா), ஆகியோரின் பெறாமகனும்,

ஷம்கி யூட், ஜெய்ஷன், மதுரா ஜெய்ஷன், சங்கீர்த்தனா நீலன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும், ரம்யா, கிரிதரன் ஆகியோரின் மச்சானும்,

ஜொஷ், ரனீஷியா, ஸ்ரேயா ஆகியோரின் மாமாவும், மேக்னா, அமரன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் 13.09.2020 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.

தகவல் :- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :- ஜெனோஷன்  (உரும்பிராய்) +94 77 944 8109

சசிகலா (மெல்பேண்) +61 9846 2451

ரமணன் (மெல்பேண்) + 61 403 430 112

கௌரி (மெல்பேண்) +61 9467 9898