என் அருமைச் சகோதரியே ரிசானா..! --ஜே.பிரோஸ்கான் -

.


என் அருமைச் சகோதரியே ரிசானா
உனது மரணம் உலக மக்களின்
பேரிழப்பு.
நேற்று நீ உறங்கிப் போன பின்
அந்த அரேபியாவில் ~ரீஆ
சட்டமும் தடுமாறி நின்றதாம்
சரியா செய்யாததால்.
பதினேழு வயசு குழந்தை நீ
பக்குவம் அறியா இளசு நீ
மொழியும் தெரியா பறவை நீ
இதையறிந்தும் அந்த அரேபியா
தாய்க்கு உள் மனசு இறங்கேவில்லையே
சரீரம் முழுதுமாய் அடங்கிப் போனது
அவள் செயல் கண்டு.
நீ வருவாய்
நீ வருவாய்
என்ற பேச்சுக்கள் தான்
நம் ஊர் மண்ணின் புழுதியில்
கூட கலந்திருந்தது.
ரிசானா உன் மரணத்தின்
முன்னான நாட்களில் பத்திரிகைச்
செய்திகள் சந்தோசிக்கச் செய்தது
நீ வருவாய் வந்து விடுவாய் என்று.
அது என்னவோ உண்மைதான்

நான் ரசித்த அரங்கேற்றம்........கலா ஜீவகுமார்


.


அண்மையில் அபினயாலயா நடனப் பள்ளி ஆசிரியை ஸ்ரீமதி மிர்நாளினி ஜெயமோகனின் முதலாவது நடன அரங்கேற்றம் சிட்னி riverside theater இல் 28/01/13 இடம் பெற்றது. செல்வி பாலகி பரமேஸ்வரன் இந்த சிறப்பான அரங்கேற்ற நிகழ்வைச் செய்து தனக்கும் தனது ஆசிரியர் மிர்நாளினியிற்கும் பெருமை சேர்த்துக் கொண்டார். ஸ்ரீமதி மிர்நாளினி ஜெயமோகன் தனது அபிநயாலயா நடனப் பள்ளியை 2002 ம் ஆண்டு சிட்னியில் அங்குரார்ப்பணம் செய்து அன்றிலிருந்து இன்றுவரை எத்தனையோ நடன நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளார் என்பது சிட்னி வாழ் மக்கள் நன்கறிந்த உண்மை. எல்லா நிகழ்வுகளுக்கும் சிகரம் வைத்தால் போல் அமைந்திருந்தது செல்வி பாலகியின் அரங்கேற்றம்.
பரமேஸ்வரன் யோகராணி தம்பதியினரின் அருமைப் புதல்வி பாலகி சிறு வயது முதலே சகல துறைகளிலும் ஆற்றலும் ஈடுபாடும் கொண்டவர். வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பதற்கு ஈடாக அவரை சிறு குழந்தையாக பார்க்கும் போதே அவரது ஆற்றல் , அறிவு, திறமை அவரில் தெளிவாக புலப்படும். எந்தத் துறையை எடுத்தாலும் அதைச் சிறப்பாக முடிக்க வேண்டும் என்று எண்ணிச் செயற்படும் பாலகியின் ஒரு பரிணாமமே இந்த நடனக் கலை, அதன் ஒரு படிக் கல்லே இந்த அரங்கேற்றம்.
பரமேஸ்வரன் ஒரு பிள்ளையார் பக்தன் அதனைப் பிரதிபலித்தது மண்டப அலங்காரம். எளிமையாக ஒரு தொந்திக் கணபதி வாயிலை அலங்கரிக்க , இடையே பாலகியின் நடனத் தோற்றத்தோடு மிகவும் எளிமையாக மண்டபம் காணப்பட்டது. சரியாக 6 மணிக்கு மண்டபத்தின் பெரும்பகுதி நிறைந்துவிட 6.05 இற்கு நிகழ்வு ஆரம்பித்தது. 

துர்க்கை அம்மன் ஆலய கட்டிட நிதிக்கான இரவு உணவு

.


                                                               Photos by Gnanam Arts

மெல்பேணில் வியந்து இரசிக்க வைத்த வீணை அரங்கேற்றம்

.
                                        தேவி திருமுருகன்,  மெல்பேண்


அண்மையில் மெல்பேணில் றோவில் மேல்நிலைப் பள்ளி, காட்சிக் கலைக்கூடத்தில் இடம்பெற்ற செல்வி காயத்திரி மதனசேனராஜாவின் வீணை அரங்கேற்றம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி மிகவும் மகிழ்ந்து இரசிக்க வைத்தது. பரதநாட்டியம்,  மிருதங்கம்,  வாய்ப்பாட்டு ஆகிய நுண்கலைகளின் அரங்கேற்றங்கள் அடிக்கடி நடைபெறுவது சாதாரணம். ஆனால் வீணை அரங்கேற்றம் என்பது அத்தி பூத்தாப்போல மிகவும் அரிதாகவே நடைபெறும். நூற்றுக்கணக்கான மாணவர்கள் வீணைவாத்தியத்தைக் கற்றுக்கொண்டிருந்தாலும்,  அரங்கேற்றம் வரை பயிற்சியினைத் தொடருவோர் மிகச்சிலரே. அவர்களிலும் அரங்கேற்றம் செய்வோர் விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையிலேயே உள்ளனர்.

இந்த நிலையில்,  அண்மையில் மெல்பேணில் செல்வி காயத்திரி மதனசேனராஜா தனது வீணை அரங்கேற்றத்தினை நிகழ்த்தியிருந்தார். மொனாஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவக்கல்வியின் இறுதியாண்டு மாணவியான காயத்திரி கல்வி தொடர்பான கற்கை அழுத்தங்களுக்கு மத்தியில் இதனை நிறைவேற்றியது உண்மையிலேயே சாதனைதான். அதே வேளை அவரது உயர்கல்வித் தகைமை காரணமாக அமைந்துவிட்ட அறிவும், முழுமையும்,  நிதானமும் வீணை வாத்தியத்தின் நுட்பங்களைத் தெளிவுறத் தெரிந்து கொள்ளவும்,  ஈடுபாட்டுடன் வாசிக்கவும் பேருதவிபுரிந்திருக்கும் என்பதை அரங்கேற்றச் சிறப்பு வெளிப்படுத்தியது.


படித்தோம் சொல்கிறோம் -தெணியான் இன்னும் சொல்லாதவை


.
(முன் குறிப்பு:- கடந்த ஜனவரி 6 ஆம் திகதி இலங்கை வடமராட்சியில் ஜீவநதி மாத இதழின் சார்பில் படைப்பிலக்கியவாதி தெணியானின் பிறந்தநாள் விழாவும் அவருடைய சிறுகதைத்தொகுதி (ஜீவநதியில் வெளியான சிறுகதைகள்) தெணியான் ஏற்கனவே எழுதிய நூல்கள் பற்றிய மதிப்பாய்வுக்கட்டுரைகளின் தொகுப்;பு ஆகியவற்றின் வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது. தெணியானின் நூல்பற்றிய முருகபூபதியின் பதிவு இங்கு தமிழ் முரசு வாசகர்களுக்காக வெளியிடப்படுகிறது)

தெணியான் இன்னும் சொல்லாதவை

முருகபூபதி 

நாவலாக எழுதியிருக்கவேண்டிய ஒரு படைப்பு சுயவரலாறாகியுள்ளது. தெணியான் ஒரு கதைசொல்லி. சிறுகதைகள்ää நாவல்கள் உட்பட சில தொடர்களும் கட்டுரைகளும் எழுதியிருப்பவர். அவரது எந்தவொரு படைப்பை உன்னிப்பாகப்பார்த்தாலும் அவர் ஒரு சிறந்த கதைசொல்லி என்ற முடிவுக்கே வாசகர்கள் வந்துவிடுவார்கள்.
இன்னும் சொல்லாதவை நுலைப்படித்தபோது எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தவர் தமிழ்நாட்டின் கரிசல்கட்டுமைந்தன் கி.ராஜநாராயணன்.
அவரும் சிறந்த கதைசொல்லி. அத்துடன் பிரதேச மொழிவழக்குகளை அநாயசமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லவல்லவர். தெணியான் எங்கள் தேசத்தின் வடமராட்சிக்கதைசொல்லி.
இந்நூலின் பதிப்புரையில் பின்வரும் பந்தி எனக்கு முக்கியத்துவமாகப்பட்டது.
 ஒரு எழுத்தாளனது புனைவுலகை தரிசித்து அதில் லயித்துக்கிடக்கும் வாசகனுக்கு அந்த எழுத்தாளனது சொந்த வாழ்வைப்பற்றிய இரகசியங்களை அறிந்துகொள்ளும்போது அந்த எழுத்தாளனைப்பற்றி உருவாக்கிவைத்திருக்கும் மனக்கோட்டை உடைந்து சிதறுவதே இயல்பு. இதனால்தானோ என்னவோ பல பிரபலங்கள் தங்களது சொந்த வாழ்வை வெளிப்படுத்துவதில்லை. தங்களது சுற்றம்ää நட்பு இவற்றின்மீது வெளிச்சம்படாமல் கவனமாகப்பார்த்துக்கொள்கின்றனர். இந்நிலைக்கு மாறாக தெணியானின் வாழ்வனுபவங்களை படிக்கும்போது அவர் மீதான நமது மதிப்பு பல மடங்கு கூடுகிறது. அவருடன் நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது.


'''ஊரை விட்டு போறன்'' சிவாஜி-கமல் உரையாடல்(விஸ்வரூபம் சம்பந்தமாக)-வீடியோ

.
கமல் என்றொரு கலைஞன் ஒரு படமெடுத்து படாத பாடு படுகிறார் . அதை வைத்து எவ்வளவு விடயங்கள் இணையதளங்களில்  நடக்கிறது என்று பாருங்கள்



நன்றி சின்னக்குட்டி 

இலங்கைச் செய்திகள்



வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

புனரமைக்கப்படும் இரணைமடு விமான ஓடுபாதை

எந்த பலனையும் பெற்றுதராத ஏகாதிபத்திய விசுவாசம்

தமிழ் மக்களின் முடிவில்லாத பயணம்

23 வருடங்களாக போராடும் வலிகாமம் வடக்கு மக்கள்

வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

 இந்தியாவின் நிதி உதவியின் கீழ் நிரந்த வீடுகளை வழங்குவதில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளினால் அநீதிகள் இழைக்கப்படுதாக கூறி, இன்று முற்பகல் வவுனியா பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

வவுனியா காமனி வித்தியாலத்திற்கு எதிரில் இருந்த பேரணியாக சென்றவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தமக்கு ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

சோ . சிவபாதசுந்தரம்

.


நன்றி : அஞ்ச ல் 

காற்றோடு போயாச்சு...

.



முனா, நில்லு. நான் சொல்றதைக் கேளு! கத்தினான் பரசு.

முடியாது நான் சாகப்போறேன். ஆகாஷ் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்! தண்ணீரில் குதிக்க முன்னேறிச் சென்றாள் யமுனா.

பரந்து கிடந்த குளத்தின் நீரலைகள் ஆழத்தைப் பொதிந்து வைத்தபடி, வா,வா,’ என்று அவளை வரவேற்றன. பரசுவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. ஆனாலும் யமுனாவைக் கோபப்பட மனசில்லை.

சிறு வயது சிநேகம் காதலாக மாறி உள்ளுக்குள் அலை வீசிக்கொண்டிருக்க,தன் விருப்பத்தை வெளியிட பரசு சமயம் பார்த்துக் கொண்டிருந்தபொதுதான் திடீர்ப் பிரவேசமாகக் குறுக்கிட்டான் ஆராய்ச்சியாளன் ஆகாஷ்.

 அதுவரை பரசு, பரசு என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக் கொண்டிருந்த யமுனா அடியோடு மாறிப்போனாள். ஒரே ஒருநாள் தனியே சந்தித்து பத்து நிமிஷம் பேசினான் ஆகாஷ். அப்படி என்னதான் பேசினானோ,அடுத்த வினாடியிலிருந்தே அவன் மீது மையலாகி விட்டாள் யமுனா.

அவர்கள் காதல் நாளொரு மேனியாக வளர இவனது மனம் பொழுதொரு வண்ணமாக பட்டுப்போனது. ஆகாஷ் மீது பைத்தியமாக மாறிப்போன யமுனா சாதாரணமாகக் கூட தன்னுடன் பேசாமல் போனதுதான் பரசுவுக்குத் தாங்கொணா வேதனையைக் கொடுத்தது.
அப்போதுதான்...

எங்க ஊர் காட்வெயர் எஞ்சினியர்...


.


யாழ்ப்பாணத்துக்கு கணணி பரவலாக அறிமுகமான நேரத்தில் எத்தினை பேர் ஊரில் இருந்தீர்களோ தெரியாது..அப்படி இருந்திருந்தால் அந்த நேரம் புதிது புதிதாக முளைத்த பல கணணி திருத்தும் கடைகளையும் பார்த்திருப்பீர்கள்..அந்த நேரம் கணணி யாழ்ப்பாணத்துக்கு புதிது என்பதால் பிள்ளைகளுக்கு கணணி வாங்கிகொடுத்த பெற்றொர் பலருக்கு அதைப்பற்றி பெரிதாக விளக்கம் ஏதும் தெரியாது..அப்படியான பெற்றொர்கள் கணணி பிழைத்துவிட்டது என்று இந்த திருத்துபவர்களிடம் போனால் அவர்கள் செய்யும் சுத்துமாத்துக்கள் பல..(எல்லாரும் அல்ல)..இந்த நிலமை புலம்பெயர்ந்த பின்னும் பல தமிழ் வீடுகளில் கணணி பற்றிய பெரிய அறிமுகம் இல்லாத பெற்றோரை பல கண்ணணி திருத்துபவர்கள் ஏய்ப்பது நடக்கிறது..இப்படிப்பட்ட ஊர் காட்வெயர் எஞ்சினியர்களை வைத்து ஒரு பதிவு....



அண்ணணிண் சிங்கிள் பாத்ரூம் சைஸ் காட்வெயர் திருத்தும் கடை...
இரண்டு மேசை..இதுக்குள்ளைதான் நீட்டவும் முடியாமல்..மடக்கவும் முடியாமல் அண்ணை பழைய கொம்பியூட்டருகளோட(அதுக்குள்ளை ஒண்டும் கிடவாது..வெறும் கோதுகள்..நான் ஒரு பெரிய வேலைக்காறன் எண்டு காட்ட பம்மாத்துக்கு வைச்சிருக்கிற பழைய இரும்புக்கடை அயிற்றங்கள்...)சண்டை பிடிச்சுக்கொண்டு இருப்பார்...

உலகச் செய்திகள்

பிரேசிலில் இரவு களியாட்ட விடுதியில் தீ: 200 பேர் பலி

பிரேசில் களியாட்ட விடுதியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு!

மும்பைத் தாக்குதல்: ஹெட்லிக்கு 35 வருட சிறை

எகிப்தில் மீண்டும் கலவரம்!

சிரியாவில் தொடரும் மோதல்: 79 சடலங்கள் ஆற்றில் கண்டுபிடிப்பு

பிரேசிலில் இரவு களியாட்ட விடுதியில் தீ: 200 பேர் பலி




பிரேசிலிலுள்ள இரவு களியாட்ட விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 200 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் இதில் காயமடைந்துள்ளனர்.
அந்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள சாண்டா மரியா நகரில் அமைந்துள்ள விடுதியொன்றிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 159 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின் போது சுமார் 2000 பேர் வரை அங்கிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  நன்றி வீரகேசரி  


LIFE OF PI: உங்களைத் தேடித்தரும் திரைமொழி!


.

எல்லாமும் பறிக்கப்பட்ட நிலையில் யாருமேயற்ற தீவொன்றில் தனித்து விடப்பட்டதாக உணர்ந்திருக்கிறீர்களா? அல்லது அப்படிப்பட்ட கனவையாவது கண்டிருக்கிறீர்களா? ஆம், என்று பதில் சொல்கிறவர்களுக்குத் தெரியும் அப்படிப்பட்ட நிலை எவ்வளவு அயர்வைத் தரும் என்று. தூக்கம் எமக்கு கிடைத்த ஓய்வின் அற்புத வடிவம். ஆனால், அந்த தூக்கத்தில் வரும் கனவுகள் சில எங்களின் ஆழ் மனதை அலைக்கழித்து அந்தக் களைப்பினை மனதில் மட்டுமல்ல (தூக்கத்தின் முடிவில்) உடலினுள்ளும்  வழங்கக் கூடியது. கனவுகளை தவிர்ப்பது எம்மால் அவ்வளவுக்கு முடியாது. ஆனால், யாருமே- எதுமே அற்ற நிலையை மனது உணரும் தருணங்களை நாம் வெற்றி கொள்ள முடியும்.    எம்முடைய மனதை நாமே வெற்றி கொள்வது பற்றிய தேடல்கள் தியானம் என்கிற வடிவில் அதிகம் ஆன்மீகத்தை நோக்கி கொண்டு சேர்க்கின்றன.  

தியானமும்- ஆன்மீகமும் கேள்விகள் முன்வைக்கப்பட்டு அதற்குண்டான பதில்களை பெற்றுக்கொள்வதன் மூலம் சரியாக அணுகப்பட வேண்டியது.  தியானத்தின் வழியில் பெற்றுக்கொள்கிற ஆன்மீகத்தையோ நம்பிக்கையோ யாருமே இன்னொருவருக்கு கற்றுத்தர முடியாது. அது  தனித்துவமானது. ஒவ்வொரு மனிதனும்- மனமும் தத்துவார்த்தமாகவும்- அதற்குப் பின்னராக நம்பிக்கையையும் முன்வைத்து பெற்றுக்கொள்வது.  இறுதிவரை ஆன்மிகத்தை ஒரு ஆசிரியராலோ- மத நிறுவனத்தாலோ சரியாக கற்றுத்தர முடியாது. அது, தனி மனது சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. சிலர் இசைக்குள் தன்னுடைய மனகட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் புத்தகங்களுக்குள், இன்னும் சிலர் நீச்சலுக்குள், விளையாட்டுக்குள், எழுத்துக்குள், சமையலுக்குள், பயணங்களுக்குள் என்று அவரவர் தங்களது மனகட்டுப்பாட்டை வைத்துக்கொள்வதற்கு தனித்தனியான முறைகளை கொண்டிருக்கிறார்கள்.  ஆனால், தங்களையோ- சமூகத்தையோ நோக்கிய கேள்விகளை மட்டும் இறுதிவரை கைவிட மாட்டார்கள்.  மேற்குறிப்பிட்ட இவ்வளவும் ஒரு பருமட்டான வடிவம் மட்டுமே. ஆக, இப்படியும் தியானமும்- அதன் சார்பிலான ஆன்மீகமும் அடையாளப்படுத்தப்படலாம். அணுகப்படலாம்.

Raaga Sangamam - 2013 10.03.13

.

இலக்கிய ஆளுமைகளுடன் சந்திப்பு



அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் படைப்பாளியும் ஊடகவியலாளரும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அமைப்பாளருமான  லெ.முருகபூபதி கடந்த வாரம் தமிழ்நாடு- நாமக்கல்லில் பிரபல நாவலாசிரியர்  கு. சின்னப்பபாரதியையும் கோவையில் பிரபல மாக்சீய இலக்கிய விமர்சகர் கோவை ஞானி மற்றும் யுகமாயினி ஆசிரியர் சித்தன் ஆகியோரையும் சந்தித்து உரையாடினார்.
புகலிட இலக்கியம்,  தற்கால இலக்கிய செல்நெறி,  மொழிபெயர்ப்பு முயற்சிகள்,  படைப்பிலக்கியவாதிகளிடையே ஏற்படுத்தப்படவேண்டிய சர்வதேச தொடர்பு பற்றி இச்சந்திப்புகளில் கலந்துரையாடப்பட்டது.


இலவச இந்து அறநெறி வகுப்புகள்


சிட்னி ஹில்ஸ் புறநகர் வட்டாரத்தில் 5 - 12 வயது குழந்தைகளுக்காக இலவச இந்து அறநெறி வகுப்பு ஆரம்பம்.

குழந்தைகளுக்கான அறநெறிக் கதைகள், பஜனைப் பாடல்கள் மற்றும் இந்து வாழ்வியல் நடைமுறைகள்  மிக அனுபவம் வாய்ந்த ஆசிரியையால்  வாரந்தோறும் ஆங்கில மொழியில் போதிக்கப்படும்.

வகுப்பு நேரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் கலை 9.30 முதல் 12.00 மணி வரை
வகுப்புகள் முற்றிலும் இலவசம்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
வாஹிணி
0426 402 723 (கைபேசி)
மின்னஞ்சல்: vahini55@gmail.com

இன்னும் எப்போ பூ பூக்குமோ??

.


உன் மெளனமும்
என் மெளனமும்
இன்னும் எப்போ
பூ பூக்குமோ?

காதல் செய்யும் என் கனவாய் நீ
கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ

பனியில் - நீ 
கனியா

நெஞ்சோரம் சாய்வாய் 

மொட்ட விழ்ந்த கள்ளி
சட்டென்று எள்ளி
நகைகொண்டாய் உயிரில்

பயிர் கொண்ட கள்வா
உறவாட வருவாய் 
பலநாள் என்னெதிரில்

மனசென்னும் இசையில்
விசைகொண்ட ராகம்

தமிழ் சினிமா

.

முடிவுக்கு வந்தது விஸ்வரூபம் சர்ச்சை



தமிழகத்தில் கடந்த 11 நாள்களாக நீடித்து வந்த நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் பட சர்ச்சை சனிக்கிழமை (பிப்ரவரி 2) மாலை முடிவுக்கு வந்தது. இந்தப் படத்தில் சில ஒலிக் குறிப்புகளை நீக்க கமல்ஹாசன் ஒப்புக் கொண்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறைச் செயலாளர் ராஜகோபால் முன்னிலையில்
நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதையடுத்து, விஸ்வரூபம் படம் தமிழகத்தில் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதைத் தொடர்ந்து விஸ்வரூபம் பட சர்ச்சை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை கமல் தரப்பினர் வாபஸ் பெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
உடன்பாடு கையெழுத்து: நடிகர் கமல்ஹாசன் தரப்பும், இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பும் சுமுக முடிவுக்கான எழுத்துப்பூர்வ உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. விஸ்வரூபம் படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது எனவும், தனிப்பட்ட பிரச்னை காரணமாக முதல்வர் ஜெயலலிதா இந்தப் படத்துக்கு தடை விதித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த முதல்வர் ஜெயலலிதா, நடிகர் கமல்ஹாசன் தரப்பும்,  இஸ்லாமிய அமைப்புகளும் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்தால் அதற்கு ஏற்பாடு செய்யத் தயார் என தெரிவித்திருந்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பையடுத்து, தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை பிற்பகல் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் அரசுத் தரப்பில் உள்துறை செயலாளர் ராஜகோபால், விஸ்வரூபம் படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நடிகர் கமல்ஹாசன், அவருடைய சகோதரர் சந்திரஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபா, தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்தத் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா உள்ளிட்ட 14 பேர் பங்கேற்றனர்.
திரைப்படத்தை பார்த்த பிறகு...: தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை 6 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. பிற்பகலில் பேச்சுவார்த்தை தொடங்கியது.
பேச்சுவார்த்தையின்போது, விஸ்வரூபம் படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டதாகவும், அதிலுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை இஸ்லாமிய அமைப்புகள் சுட்டிக் காட்டியதாகவும், அதற்கான விளக்கங்களை கமல்ஹாசன் அளித்ததாகவும் அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தை இரவு 7.30 மணிக்கு முடிவடைந்தது.
பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டி:
""முத்தரப்பு பேச்சுவார்த்தை என்ற இந்தச் சந்திப்பு ஏற்பட ஆவன செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு விடுமுறை நாளிலும்
கிட்டத்தட்ட 6 மணி நேரமாக எங்களுக்கு ஆலோசனைகள் மற்றும் ஆறுதல்களைச் சொன்ன உள்துறைச் செயலாளருக்கு நன்றி. பேச்சுவார்த்தையில் என்னுடைய இஸ்லாமிய சகோதரர்களிடம் பேசி அவர்களின் குறைகளைத் தெரிந்து கொண்டு என்னால் என்ன முடியும் என்பதைத் தெரிவித்தேன்.
குறிப்புகள் நீக்கப்படும்: அவர்களது கோரிக்கையை ஏற்று, படத்தில் சில ஒலிக் குறிப்புகளை நீக்குவதாகச் சொல்லி இருக்கிறேன். அதன் பட்டியல் இருக்கிறது. நீக்கப்படும் குறிப்புகள் குறித்து மத்திய சான்றிதழ் தணிக்கை வாரியத்திடம் முறைப்படி தெரிவித்து அவர்களின் ஒப்புதல் பெறப்படும். இதன் பின், படத்தை வெளியிட முயற்சிப்பேன். இந்த படப் பிரச்னை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் எனது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெறுவேன். தமிழக அரசும் படத்துக்கு விதித்துள்ள தடையை விலக்கிக் கொள்ளும் என நம்புகிறேன் என்றார் நடிகர் கமல்ஹாசன்.
பேச்சுவார்த்தை குறித்து ஜவாஹிருல்லா கூறியது:
விஸ்வரூபம் படத்தின் சில காட்சிகள் மற்றும் சில வசனங்களை நீக்க நடிகர் கமல்ஹாசன் ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் நடிகர் கமல்ஹாசன் இடையே எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இஸ்லாமிய அமைப்புகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபாவும் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நடிகர் கமல்ஹாசனும் கையெழுத்திட்டுள்ளனர் என்றார்.
எப்போது வெளியாகும்?
விஸ்வரூபம் படம் தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் நடிகர் கமல்ஹாசன் கூறியது:
எனது ரசிகர்களுக்கு முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். படத்தின் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ள நிலையில் படத்தை வெளியிடும் தேதியை அறிவிக்க உடனடியாக ஏற்பாடு செய்யப்படும். தொழில்நுட்பரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பேசிய பிறகு படம் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றார் கமல்ஹாசன்.

நன்றி: dinamani.com

விஸ்வரூபம் மீதான தடை நீக்கம் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


 
கமல் ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக பெரும் சர்ச்சைகளில் சிக்கித் தவித்த விஸ்வரூபம் திரைப்படத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் சிலவற்றின் பலத்த எதிர்ப்பின் காரணமாக தமிழகத்தில் திரையிட தமிழக அரசு தடை விதித்திருந்தது.

இதனையடுத்து இப்படத்தின் தடை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கமல் தரப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில் இன்று ஒத்திவைக்கபட்டிருந்து.

மீண்டும் இன்று நீதிமன்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இவ்வழக்கு சுமார் 6 மணி நேர விவாதத்தின் பின்னர் தீர்ப்பிற்காக ஒத்தி வைக்கப்பட்டு சற்று முன்னர் திரு கே. வெங்கட்ராமன் நீதிபதி விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடையை நீக்கி தீர்ப்பளித்துள்ளார்.

இதேவேளை இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் அறிக்கை இன்று இலங்கை தணிக்கை குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பரீசிலனை செய்த பின்னர் இலங்கையில் வெளியிடுவது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 நன்றி வீரகேசரி  

 

 

 

இலங்கையில் விஸ்வரூபம் திரையிடப்படுமா? தணிக்கை சபை விளக்கம்



2013-01-29

இலங்கையில் விஸ்வரூபம் திரையிடப்படுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்ட இலங்கை தணிக்கை சபையின் தலைவர் காமினி சுமனசேகர, இஸ்லாமிய மத குருமாரின் அறிக்கை கிடைத்தவுடன் மீளாய்வு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இத்திரைப்படம் இஸ்லாமிய மதகுருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதான முஸ்லிம் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்களுக்கு தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் நேற்றிரவு காண்பிக்கப்பட்டது.

விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமது பிரதான எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என நேற்றிரவு அறிவித்தது.

இது தொடர்பில் தணிக்கைச் சபையின் தலைவர் காமினி சுமனசேகர வீரகேசரி இணையத்தளத்துக்கு தெரிவித்த கருத்துக்கள்,

கேள்வி: விஸ்வரூபம் திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்படுவதற்கு ஏதுவான காரணிகள் என்ன?

பதில்: இஸ்லாம் மதத்துக்கு எதிரான காட்சிகளைக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தி அத்திரைப்படத்தினை தடை செய்யுமாறு இஸ்லாமிய அமைப்புகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இலங்கையில் வாழும் இனத்தவர்கள் என்ற வகையில் அவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது எமது கடமையாகும்.

அதன்பிரகாரம் திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக இடைநிறுத்தி குறிப்பிட்ட அமைப்புகளுடனும் முஸ்லிம் தலைவர்களுடனும் பேச்சுவார்த்கைள் நடத்தினோம். இத்திரைப்படம் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட ஏனைய அமைப்பினருக்கும் மத குருமாருக்கும் நேற்றிரவு காண்பிக்கப்பட்டது.

கேள்வி: அதன்பின்னர் நீங்கள் எடுத்த தீர்மானம் என்ன?

பதில்: முஸ்லிம் மதத் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் திரைப்படம் தொடர்பாக எழுத்து மூலமான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நாம் கோரியிருந்தோம். அதன்பிரகாரம் இவ்வாரம் அந்த அறிக்கையை சமர்ப்பிப்பதாக உறுதியளித்துள்ளார்கள். ஆயினும் நேற்று திரைப்படத்தை பார்த்த பெரும்பாலானோரின் கருத்து திரைப்படத்தை திரையிடக் கூடாது என்பதாகத்தான் இருந்தது.

கேள்வி: விஸ்வரூபத்தை திரையிடக் கூடாது என்பதற்கு அந்த அமைப்புகள் கூறும் காரணம் என்ன?

பதில்: அவர்கள் இதுவரை எழுத்து மூலமாக எமக்கு அறிவிக்கவில்லை. எனினும் பேச்சுவார்த்தைகளின் போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இஸ்லாம் மதத்தவரை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாகவும் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பல காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கேள்வி: இலங்கை தணிக்கை சபை என்ற வகையில் விஸ்வரூபம் தொடர்பில் உங்களுடைய கருத்தினை கூற முடியுமா?

பதில்: என்னைப் பொறுத்தவரையில், திரைத்துறையைச் சார்ந்தவன் என்ற ரீதியில் விஸ்வரூபம் திரைப்படத்தில் பிழை என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கருத்துக்கள் இல்லை.

கேள்வி: இலங்கையில் திரைப்படம் ஒன்றை திரையிடுவதற்குரிய அனுமதி வழங்கும் அதிகாரம் உங்களிடம் இருக்கும் அதேவேளை, மதங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கருத்துக்களும் இல்லை என்று குறிப்பிடுகிறீர்கள். அவ்வாறெனின் உங்களுக்குரிய அதிகாரத்தின் நம்பகத்தன்மை இங்கு மீறப்படுவதாக இல்லையா?

பதில்: இலங்கையில் முஸ்லிம் மக்கள் வாழுகிறார்கள். இலங்கையர்கள் என்ற ரீதியில் அவர்களுடைய கருத்துக்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் தானே? அதனால்தான் அவர்களுக்கு திரையிட்டுக் காட்டினோம். இஸ்லாமிய மதத் தலைவர்களின் பார்வையில் அந்தத்திரைப்படம் எவ்வாறிருக்கிறது என்பதை எழுத்து மூலமாகக் கோரியிருக்கிறோம்.

(ஆர். நிர்ஷன்)

நன்றி வீரகேசரி 

 

 

தமிழகத்தை விட்டு வேறு மதசார்பற்ற நாட்டில் குடியேறுவேன்: கமல் ஹாசன்
விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்து, படம் வெளியிட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் கமல் ஹாசன். அப்போது அவர், தான் தமிழகத்தை விட்டுவிட்டு, வேறு மதச்சார்பற்ற மாநிலத்துக்கோ அல்லது மதச்சார்பற்ற நாட்டுக்கோ சென்று குடியேறுவேன் என்று கூறினார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில்,

"விஸ்வரூபம் படம் நடக்கும் களம் ஆப்கானிஸ்தான். இது இந்திய முஸ்லிம்களை எப்படி கேலி செய்வதாக அமையும்? இந்தப் படத்தை எடுப்பதற்காக நான் பெரும் தொகை செலவு செய்திருக்கிறேன். என் திரையுலக அனுபவத்தையும் தொழில்நுட்ப அறிவையும் கொண்டு இந்தப் படத்தை நான் தயாரித்துள்ளேன். இந்தப் படத்துக்காக நான் எனது சொத்துக்கள் அனைத்தையும் அடகு வைத்துள்ளேன்.

இந்தப் படம் மட்டும் வெளியாகவில்லை என்றால் நான் உங்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் இந்த வீடு ‌என்னுடையது இல்லை என்றாகிவிடும்.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, நீதிபதி என்னிடம் கேட்டார். ஒருவரின் முதலீட்டுக்காக நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டுமா? என்று!

எனக்கு நம் நாட்டின் ஒற்றுமைதான் முக்கியம் என்பதை நான் இப்போதும் சொல்கிறேன். நம்  நாட்டுக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் இழக்கவும் நான் தயாராக இருக்கிறேன். எனக்கு மதம் கிடையாது; அரசியல் கிடையாது; மனிதநேயம்தான் முக்கியம்.

என் மனதில் பட்டதை தைரியமாக எடுத்துச் சொல்வேன். இந்தப் படம் நிச்சயம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் இல்லை. இந்த நிலையில், எதற்காக எனது படத்தைத் தடை செய்கிறார்கள் என்பது எனக்குப் புரியவி‌ல்லை.

என்னை வீழ்த்தி விடலாம் என்று சிலர் கருதுகின்றனர். நான் விழுந்தால் விதையாக விழுவேன். மீண்டும் மீண்டும் விருட்சமாக எழுவேன். சுதந்திரப் பறவைகள் வந்து அமரும் மரமாக நான் உயர்வேன். அது ஒரு சோலையாகும், காடாகும். ஆனால் இந்த விதையைப் போட்டது நான். எனது பட வசனமே எனக்கு உதவிக்கு வருகிறது.

ஒரு வேளை தமிழகம் மட்டும் மதச்சார்பற்ற மாநிலமாக இல்லாமல் போய்விட்டால், நான் நிச்சயமாக வேறு ஒரு மாநிலத்தைத் தேடிப் போவேன். அதற்காக தமிழகத்தை விட்டு வெளியேறவும் நான் தயார். வேறு மாநிலமும் கிடைக்காவிட்டால் வேறு நாட்டைத் தேடிப் போவேன்.

இன்று படம் பார்க்க திரையரங்குகளுக்குச் சென்ற எனது ரசிகர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இழப்பதற்கு இனி என்னிடம் ஒன்றும் இல்லை. எனது ரசிகர்கள் அமைதியானவர்கள். அவர்களில் பலர் முஸ்லிம்கள். அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள்.

கேரளாவில் மலபாரிலும், ஐதராபாத்திலும் படம் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் எனது நீதி தாமதப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்".

- இவ்வாறு கூறினார் கமல் ஹாசன்.நன்றி தேனீ