கர்வாதிகாரர்கள் -கவிதை

.
கர்வாதிகாரர்கள்
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ


இன்றும் அதே சிந்தனைகள் இன்னுமொரு ஆடை பூண்டு
பூதாகரமாய் உருவெடுக்கும்
உங்கள் மீதான தூற்றங்களை
அள்ளிக் கூட்;டி விசிறிக் கடாசப்பட்ட
புணர் ஜென்ம ஊழ் வினைகளை
மீண்டும் தட்டியெடுத்து வெள்ளையடிக்கும்
திரண்டு உருண்ட உறுப்புகள் சுருங்கி
பெருகியோடும் உங்கள் வாய் வீரங்களை மறந்து
மீண்டும் ஒரு குழந்தையாவீர்கள்
உங்கள் பாதம் தொட்டு நீண்ட சேவகர்களும்
ஆமென்று ஆமோதித்துக் கிடக்கும்
உங்களைச் சுற்றிய உங்களுக்கான
தலையை விட தலைப்பாகை கணக்கும் பிரதானிகளும்
இன்னுமோர் உச்சத்தில் உங்களையிருத்தக்கூடும்
என்றென்றும் விவரிக்கயியலாதொரு உலகில்
விழியெங்கும் கனவுகள் விரிய உங்களுக்கானவைகளை
கனவுப் பாத்திரங்கள் மூலம் சேகரம் செய்து கொண்டிருப்பீர்கள்
முற்றிலும் வர்ணங்களிலானதொரு உலகை
உங்கள் விரல் நுனியில் இசைந்தாடும சூரிய சந்திரன்களை
மெல்லப் பனியிடரும் சாமப் பொழுதுகளை
கட்டியாண்டு சளைத்துவிட்டதாய் சடைவீர்கள்
சூரியப் பொழுதிலும் கூட ராக்கனவு ராசாவாய்
பகட்டு ராஜாங்கமேற்றுத் திரிகையிலும் கூட
உங்கள் பிடரி வழியாய் ஒழுகும் குருதியை
மறந்துதான் போவீர்கள்.

Nantri: uyirmmai.com

என்னைக் கவர்ந்த ஜேசுதாஸ் அவர்களின் கானமழை - செ.பாஸ்கரன்

.


சென்ற ஞாயிற்றுக்கிழமை 19.08.2012 விடிந்தும் விடியாததுமான காலைப்பொழுதில் மனம் லேசாகி மகிழ்கிறது. செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றலின் வருடல்போல்  அந்தநினைவு வந்து புகுந்துகொள்கிறது. ஆம் இன்றைய மாலைப்பொழுதில் இந்திய இசை உலகில் அற்புதங்களை புரிந்துகொண்டு வாழ்ந்துவரும் கே ஜே யேசுதாஸ் அவர்களின் இசை இரவு ஒஸ்ரேலியாவின் சிட்னியில் Opera House இல் இடம்பெற இருக்கிறது.இதுதான் மனம் குதூகலிப்பதன் காரணம்.5 மணிக்கு ஆரம்பம் என்று அறிவித்துள்ளார்கள் இந்த நிகழ்வை நடாத்துகின்ற சிம்பொனி என்ரரைனேர்ஸ். தரமான நிகழ்ச்சிகளை அழகாக நடாத்தும் வழமை கொண்டவர்கள் இவர்கள் அதனால் சரியான நேரத்திற்கு சென்றுவிடவேண்டும் என்ற ஆவல் உந்தித்தள்ள 3.30 மணிக்கே புறப்பட்டுவிட்டோம். 5 மணிக்கு சற்றுமுன்னதாக மண்டபத்துள் நுழைந்தும் ஆயிற்று.

5.15 மணிக்கு மாயி என்ற சிறு பெண்பிள்ளை இசைக்கருவிகளின் சங்கமத்தோடு மேடையில் தோன்றி வணக்கம்கூறி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்திருந்த வெண்கலக்குரலோன் அப்துல் கமீத் அவர்களை அழைக்கிறாள். அதே வெண்கலக்குரலோடு அன்றுபார்த்த அதே தோற்றத்தோடு வருகிறார் அரங்கம் அதிர்கின்றது கரகோசத்தில். கே ஜே யேசுதாஜ் அவர்களின் 50வது ஆண்டுவிழா கதிர் சிற்றம்பலத்தின் முயற்சியினால் சிம்பொனி அமைப்பால் முதல்முதல் ஒஸ்ரேலியாவிலே கொண்டாடப்படுகிறது எல்லா மதத்தவருக்கும் எல்லா இனத்தவருக்கும் சொந்தமான யேசுதாஸ் அவர்கள் இன்றும் மதம் கடந்து பாடுகின்றார் என்றுகூற



மரணஅறிவித்தல்.





                இளைப்பாறிய ஆசிரியை 
திருமதி.தவமணி தியாகராஜா (ராசாத்தி)


                                       தோற்றம் :- 27.12.1933       மறைவு :- 25.08.2012

வேலணை மேற்கு தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் சுண்டுக்குளியை வதிவிடமாகவும் கொணடிருந்த இளைப்பாறிய ஆசிரியை திருமதி.தவமணி தியாகராஜா(ராசாத்தி) அவர்கள் கடந்த 25.08.2012 சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்.

வேம்படி மகளிர் பாடசாலையின் நிகழ்ச்சி -கௌரி



.
சிட்னியில் வாழும் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் பாடசாலையின் பழைய மாணவிகள் வருடா வருடம் "Vembadi Night 2012" என்ற நிகழ்ச்சியை நடாத்தி வரும் நிதியை தமது பாடசாலைக்கு உதவி செய்து வருகிறார்கள். அவ்வாறு இவ்வருடமும் கடந்த சனிக்கிழமை 11.08.2012 அன்று Castle Grand Pioneer  Hall - Castle Hill Community Centre ல் Vembadi Night 2012 நடந்தேறியது.
வழமைபோல் சரியாக குறிக்கப்பட்ட நேரமாகிய மாலை 6.30 மணிக்கு எமது தாய்நாட்டில் நடந்த இனப்போரில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதையும் மௌன அஞ்சலியும் செலுத்தியவுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. முதலாவதாக பாடசாலை கீதம் ஆங்கிலத்திலும் தமிழிலும் தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசிய கீதமும் பாடப்பட்டது.


சிட்னி முருகன் கோவில் தெற்கு வீதியில் புதிய கட்டடம் திறப்பு 22/08/2012

.
சென்ற புதன்கிழமை  22/08/2012 ம் திகதி   சிட்னி முருகன் கோவில் தெற்கு வீதியில் புதிய கட்டடம்   திறப்பு விழா நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படங்களை கீழே பார்க்கலாம் (படப்பிடிப்பு திருமதி ஞானி)




கீதவாணி விருதுகள் 2012 01 sep

.

முருகபூபதியின் “உள்ளும் புறமும்” நூல் மதிப்பாய்வு -தெணியான்


.
                              இப்பொழுது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் இலங்கை எழுத்தாளர் லெ. முருகபூபதி அவர்களின் நு}ல் ஒன்றுவெளிவந்திருக்கின்றது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் வெளியீடாக வந்திருக்கும் ‘உள்ளும் புறமும்’ என்னும் இந்த நு}லுக்குச் சூட்டப்பெற்றுள்ள பெயர் ஒருபுனைகதைப் படைப்புக்குரியதாகவே தோன்றுகிறது. அதேசமயம் அவ்வாறிருக்க இயலாதென மறுகணம்நினைத்துக் கொண்டேன்.
 கனடாவில் வதியும் க.நவம் அவர்களின் ‘உள்ளும் புறமும்’ சிறுகதைத்தொகுதியொன்றுமுன்னர் வெளிவந்திருப்பதனை  நன்றாக அறிந்தவர் முருகபூபதி. எனவே தமது புனைகதைப்படைப்பொன்றுக்கு இந்தப் பெயரைச் சூட்டி இருக்கமாட்டார். சிறுகதை, நாவல், பயண இலக்கியம், கடித இலக்கியம், சிறுவர் இலக்கியம்,கட்டுரை, நேர்காணல் எனத் தமது ஆளுமையின் வெளிப்பாடாகப் பலதுறை சார்ந்த நு}ல்களைப்பூபதி ஏற்கனவே வெளியிட்டுள்ளார். இந்த நு}ல் வித்தியாசமான ஒரு நு}லாக இருக்க வேண்டுமென எனக்குள்ளேதீர்மானித்துக் கொண்டேன்.
 நு}லைத்திறந்து உள்ளே நோக்குகையில் நு}லின் பெயருக்குக் கீழே ஒரு கோடிட்டு, இந்தக்கோட்டுக்குக் கீழ், “சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – 2011 தொடர்பான பதிவுகள்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டு கொண்டபின்னர் குழப்பமில்லாத ஒரு தெளிவு உண்டானது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – 2011 தொடர்பான உள்ளும் புறமுமான விபரங்கள் அடங்கிய பதிவு இந்த நு}ல் என்பதனைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது.

வானொலி மாமா மகேசனின் குறளில் குறும்பு 43- அடக்கிப் பார்



அப்பா:        சுந்தரி, காதல், காமம், எண்ட பேச்சை எடுத்தவுடனை எங்கடை வயதுவந்த பெம்பிளைப் பிள்ளையள் வெக்கித் தலை குனிஞ்சுகொண்டு ஏன் ஓடுதுகள்?

சுந்தரி:        அது வந்தப்பா, பெம்பிளையளுக்கு உள்ள ஒரு இயல்பு. அது எங்கடை தமிழ்ப்    பிள்ளையளிலை அதிகமாய் இருக்கு.

அப்பா:        ஏன் நீர் பாக்கேல்லையே. எகங்கடை இவள் பிள்ளை ஞானாவை. அண்டைக்கு கலியாணம், கச்சேரி எண்டு பேச்செடுத்தவுடனை, “பேங்கோப்பா, உங்களுக்கு என்னோடை பகிடிதான்” எண்டு சொல்லிக் கொண்டு ஓடிடனதை.

சுந்தரி:        இளம் பெம்பிளைப் பிள்ளையள் அப்பிடித்தான் அப்பா. நீங்களும் காமத்துப்பாலிலை உதாரணம் காட்டினால் வெக்கப் படுங்கள்தானே.

அப்பா: 
       என்ன வெக்கம் எண்டு கேக்கிறன் சுந்தரி. இந்தக் காலத்திலை ளநஒ நனரஉயவழை எண்டு சொல்லிப் பள்ளிக் கூடங்களிலை படிப்பிக்கினம். திருவள்ளுவர் காமத்துப் பாலை எவ்வளவு அழகாய் நாகாPகமாய் எழுதியிருக்கிறார்.

இலங்கைச் செய்திகள்

ஆஸிக்கு படகு மூலம் செல்ல முயன்ற 83 பேர் கைது

இலங்கையுடன் முறுகல் போன்று கட்டிக்கொள்ளும் இந்தியா

படைக்குறைப்பில் திருப்தியில்லை, மீள்குடியமர்வும் சரியாகச் செய்யவில்லை! அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் யாழ். ஆயர் தெரிவிப்பு.

புத்தர் சிலைக்கு முத்தம் கொடுத்த வெளிநாட்டவர் மூவருக்கு விளக்கமறியல்

மு.கா. அதிருப்தி குழு உறுப்பினர்கள்இருவரின் கடைகள் தீ வைத்து ௭ரிப்பு

டில்ருக்சனின் படுகொலையைக் கண்டித்து பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம்

பாலாவி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை

கைதடி மத்திய மருந்தகத்தை அகற்றி வடமாகாண சபைத் தலைமையகம் அமைக்கத் திட்டம்?

 கல்வித்துறை நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண வலியுறுத்தி கொழும்பில் பேரணி

யாழ். வலிகாமத்தில்  திறக்கப்படவிருந்த புதிய பிரதேச சபைக் கட்டடத்தின் மீது கழிவு எண்ணெய் வீச்சு 

அளவுக்கு அதிகமான ராணுவ பிரசன்னமே, பிரிட்டனின் பயண எச்சரிக்கைக்கு அடிப்படை காரணம்

ஆஸிக்கு படகு மூலம் செல்ல முயன்ற 83 பேர் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்த 83 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரு படகுகளில் பயணித்த மேற்படி நபர்களில் இரு பெண்கள் 4 சிறுவர்கள் அடங்கலாக 66 தமிழர்கள் 14 சிங்களவர்கள் 3 முஸ்லிம்கள் அடங்குகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்கு புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

திருமுறை முற்றோதல் 02/09/2012


 
WORLD SAIVA COUNCIL (AUSTRALIA) INC
    
உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா


Postal Address: 6 Dudly Street, Auburn NSW 2144
Tel: 612-96425406
திருமுறை முற்றோதல்

(75வது மாதாந்த தொடர்நிகழ்ச்சி)

02.09.2012 ஞாயிற்றுக்கிழமை

உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்

உலக சைவப் பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையின் மாதாந்த திருமுறை முற்றோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 02.09.2012 காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை திரு மா அருச்சுனமணி; அவர்கள் காசியில் நடைபெற்ற மெய்கண்டார் ஆதீன வெள்ளிவிழா பற்றிய விபரத்தையும் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையின் விளக்கத்தையும் கூறவுள்ளார். தொடர்ந்து எட்டாம் திருமுறையில் இருபதாம்; பதிகம் (திருப்பள்ளியெழுச்சி) தொடக்கம் திருவாசகப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.

அவர் நாண நன்னயம் - முகில் தினகரன்

.
நீண்ட யோசிப்பிற்குப் பின் கிருஷ்ணன் அந்த யோசனையைக் கூற, சற்றும் தயக்கமின்றி அதை முழு மனதோடு ஆமோதித்தாள் பார்வதி. ‘நானே சொல்லலாம்ன்னு இருந்தேங்க….நீங்களே சொல்லிட்டீங்க…ரொம்ப சந்தோஷம்…தாராளமாச் செய்யலாம்” என்றாள்.

‘ஆமாம் பார்வதி…..விதி அரக்கன் தன்னோட அகோர பசிக்கு நம்ம மகனோட உயிரை எடுத்துக்கிட்டான்…நாம அதையே நினைச்சு…நினைச்சு…உருகி…மருகிக் கெடக்கறத விட…நம்மோட அன்பையும் பாசத்தையும் கொட்டறதுக்காக…நம்மோட வயோதிக காலத்துல நமக்குன்னு ஒரு துணை தேவைப்படும்கறதுக்காக…முக்கியமா நாம இப்ப அனுபவிச்சிட்டிருக்கிற இந்த புத்திர சோகத்திலிருந்து விடுபட…ஒரு அனாதைக் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம்னு இருக்கேன்…”


சொல்லமறந்த கதைகள் 07

.


காலிமுகம்
முருகபூபதி – அவுஸ்திரேலியா
Galle Face roadகொழும்பில் காலிமுகக் கடற்கரை சரித்திர பிரசித்தம் வாய்ந்தது. தமிழ் நாட்டில் சென்னை மெரீனா பீச்சுக்கு ஒப்பானது. இந்து சமுத்திரத்தாயின் அரவணைப்புடன் திகழும் காலிமுகத்திடலைப்பற்றி ஏராளமான கதைகள், செய்திகள் இன்றும் பேசப்படுபவை.
  1974 ஆம் ஆண்டு நானும்  சுமார் ஓராண்டுகாலம் இந்த காலிமுகத்திடலில் வெய்யிலில் குளித்து  முகத்தை கறுப்பாக்கியிருக்கின்றேன். காலிமுகத்தில் (GalleFace) முன்னைய பாராளுமன்றத்திற்கு முன்பாக செல்லும் காலி வீதியை அகலமாக்கும் வேலை அந்த ஆண்டு தொடங்கப்பட்டபோது, படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த எனக்கு அங்கே ஒரு சப்-ஓவர்ஸீயர் வேலை கிடைத்தது.
 வீதி நிர்மாணம் தொடர்பாக எந்த அடிப்படை பொறியியல் அறிவும் இல்லாதிருந்த எனக்கு Teritorial Civil Engineering Organization ( T.C.E.O ) என்ற நிறுவனத்தில்  எனது பெற்றோரின் குடும்ப நண்பர் ஒருவரின் தயவால் கிடைத்த வேலை அது.
 என்ன தகைமை?
.

சந்திரனில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் காலமானார்


சந்திரனில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர் எனும் பெருமைக்குரிய அமெரிக்காவின் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் காலமானார்.
அவரது 82 வயதில் நேற்று (சனிக்கிழமை) இரவு  மரணமடைந்துள்ளார். இம்மாதம் தொடக்கத்தில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

வருடாந்த அகதிகள் உள்ளீர்ப்பை 20,000ஆக அதிகரிக்க அவுஸ்திரேலியா தீர்மானம்; படகில் வருபவர்களுக்கு ஊக்குவிப்பில்லை


தனது வருடாந்த அகதிகள் உள்ளீர்ப்பு எண்ணக்கையை 20,000 ஆக அதிகரிப்பதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.

தற்போது 13,750 ஆகவுள்ள இந்த எண்ணிக்கையை நிபுணர்கள் குழுவொன்றின் சிபாரிசின்படி 20,000 அதிகரிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த 45 சதவீதமான அதிகரிப்பு கடந்த 30 வருடகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அதிகரிப்பாகும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.

படகுமூலம் வருபவர்களை விசாரிப்பதற்கு நௌரு மற்றும் பப்வுவா நியூகினியா நாடுகளில் முகாம்களை அமைப்பதற்கும் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் அங்கீகாரமளித்தமை குறிப்பிடத்தக்கது.

உலகச் செய்திகள்

உலக அழகியாக சீனப் பெண் தெரிவு

விமான விபத்தில் 31 பேர் பலி: அதிர்ச்சியில் உறைந்தது சூடான்

அமெரிக்காவில் நகரசபைத் தேர்தலில் தமிழ்ப்பெண் வெற்றி

லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இளவரசர் ஹரியின் நிர்வாண புகைப்படங்கள்

சிரியாவில் இடம் பெற்ற வன்முறைகளில் 180 பேர் பலி

உலக அழகியாக சீனப் பெண் தெரிவு



இந்த ஆண்டுக்கான உலக அழகியாக சீனாவைச் சேர்ந்த வென் சியா யூ, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழனை எவரும் அடிக்கலாம்!


தமிழனை சிங்கள இனவெறியர்கள் தான் என்றில்லை தமிழர்களும் அடிக்கிறார்கள்.இது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமில்லை.சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஒரு நாட்டில் ஒரு மனிதனுக்கு இன்னொருவன் அடித்தல் என்பது அதிகார திமிர் சம்பந்தப்பட்டது. 'அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் அதிகாரமற்றவர்களின் குரலை ஒடுக்குவதற்காக  அவர்களுக்கு  அடிக்கிறார்கள்' இது உலகெங்கும் நடக்கும் விடயம் தான்.
ஆனால் பசிக்கு உணவுக்காக கையேந்தி நிற்கும் ஒருவனை அடித்து உதைத்து வீதியில் எறிவது நான் அறிந்த வரை தமிழ் சமூகத்திலும் குறிப்பாக  இந்தியச் சமூகத்தில் தான் நடந்திருக்கிறது.

தமிழ் சினிமா


அட்டகத்தி

மீண்டும் ஒரு காதல் கதை. ஆனால் கிராமமும் இல்லை, நகரமும் இல்லை. இது கொஞ்சம் புதுமைதான். சென்னை புறநகர்தான் படத்தின் களம்.
படத்தின் கதாநாயகன் அட்டக்கத்தி தினேஷ். பிளஸ் 2 ஆங்கிலத்தில் மறுபடி மறுபடி பெயிலாகி டுட்டோரியல் காலேஜில் படிக்கிறார்.
எப்படியாவது தனக்கொரு காதலி வேண்டும் என்று பார்க்கிற பெண்களுக்கு எல்லாம் ‘ரூட்’ விடுகிறார். அதில் கதாநாயகியும் அடக்கம்.
கதாநாயகி நந்திதாவிடம் காதலை சொல்லப் போகிற நேரத்தில் அவர் அண்ணா என்று சொல்லி விடுகிறார். திரும்பவும் முயற்சித்து பக்கத்து வீட்டு பெண்ணுக்கு காதல் அம்பு வீசி அங்கேயும் அவருக்கு “பல்ப்”.
இப்படி ஒவ்வொரு பெண்ணிடமும் தோல்வியை சந்திக்கும் தினேஷ், அவன் படிக்கும் காலேஜில் முன்பு அவனை அண்ணா என்று சொன்ன நந்திதாவும் சேர்கிறாள்.
அதன்பிறகு ஏற்படும் சந்தர்ப்பங்களில் நந்திதா தன்னை விரும்புகிறாளோ என்ற எண்ணம் தினேஷூக்கு ஏற்பட மறுபடியும் நந்திதா மீது காதல்.
இந்த காதல் கைகூடியதா? இல்லை ஒவ்வொரு பெண்ணாக கடந்ததா? என்பது மீதிக்கதை.
படத்தில் பிரேம் பை பிரேம் கலக்குவது கதாநாயகன் தினேஷ்தான். முதல் காதலில் தோல்வியடைந்ததும் சோகத்தை வரவழைக்க முயற்சித்து பார்ப்பது, லவ் லெட்டர் கொடுக்கப் போகும் நேரத்தில் முகத்தில் எந்த கலவரத்தையும் காட்டாமல் நதியாவா, திவ்யாவா என ‘சாய்ஸ்’ வைப்பது, ஒரு பெண்ணிடம் லவ் லெட்டர் கொடுக்க வந்து அடிவாங்கும் போது, என்ன அடி... இந்த பக்கமே வரக்கூடாது என புலம்புவது என ஒவ்வொரு காட்சியிலும் முகபாவங்களை அருமையாக காட்டியிருக்கிறார்.
வருகிற பெண்களில் ஸ்வேதாவுக்கே நடிக்க நிறைய வாய்ப்பு. அதை அவர் அழகாகவும் செய்திருக்கிறார். கிராமம், நகரம் கலந்த நடுத்தர குடும்பத்து முகம்.
படத்தில் அட்டக்கத்திக்கு அடுத்து கலக்குவது தினேஷின் அப்பா. இவரு பெரிய அட்டக்கத்தி. தினம் இரவு தண்ணி போட்டுட்டு வீர வசனம் பேசுவது, அடுத்த இரவு காட்சி வரும் முன்னே நமக்கு சிரிப்பை வரவழைத்து விடுகிறது.
சென்னையில் புறநகர் பகுதி குப்பைமேடுகளைகூட ரசிக்கும் படியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரமோத் வர்மா. பஸ்ஸில் புட்போர்டு அடிக்கும் காட்சிகளை படம் பிடித்த கோணங்கள் ஒவ்வொன்றும் ரசிக்க வைப்பவை.
படத்திற்கு இன்னொரு பலம் சந்தோஷின் இசை. ‘ஆடி போனா ஆவணி’ பாடல் ஆட வைக்கும் ரகத்தில் கலக்கல் என்றால் ‘ஆசை ஒரு புல்வெளி’ நொடியில் மனதில் நிற்கும் மெலோடி. பின்னணி இசையையும் அளவோடு, அழகாக பதிவு செய்திருக்கிறார்.
முதல் படத்திலேயே ஹீரோவுக்குனு இருக்கிற டெம்பிளேட்டுகளை உடைத்து படமாக்கியதற்காக இயக்குனர் ரஞ்சித்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
காதலைச் சொல்லப்போகும் நேரத்தில் மற்றொரு பெண்ணைப் பார்த்து நிலை தடுமாறுவது, பின் யோசிப்பது என்பது மாதிரியான சராசரி மனித இயல்புகளை கதாபாத்திரமாக்கி முழு படத்தையும் இயக்கியிருப்பது, அதற்கு கச்சிதமான திரைக்கதையமைத்திருப்பது பாராட்டப்பட வேண்டியது.
நடிகர்: தினேஷ்.
நடிகை: நந்திதா.
இயக்குனர்: ரஞ்சித்.
இசை: சந்தோஷ் நாராயணன்.
ஒளிப்பதிவு: பி.கே.வர்மா.
நன்றி விடுப்பு
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=AMgaqDvLX6g