வாசிக்க மறவாத சபேசன் என்ற தமிழின் காதலன் சுவாசிக்க மறந்துபோன வலி எமக்கு நெடுந்துயரே ! - முருகபூபதி


ழத்தமிழர்களின்  புலப்பெயர்வு  அவுஸ்திரேலியாவை நோக்கி  ஆரம்பித்தபோது,  முதலில் வந்தவர்கள் கல்வி, தொழில்வாய்ப்பு முதலான காரணங்களைத்தான் முன்னிறுத்தியிருந்தனர்.
ஏற்கனவே லண்டனுக்கும் சிங்கப்பூர், மலேசியாவுக்கும் சென்றவர்களும் அவுஸ்திரேலியாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான்,  இந்த கங்காரு தேசத்தில் தொழில் வாய்ப்பு பெறுவதற்காக  வந்து  குடியேறினர்.
1980 இற்குப்பின்னர் அய்ரோப்பிய நாடுகளுக்கு விசா அவசியமின்றி செல்லக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தபோது,  ஈழத்தவர்கள் லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலியை நாடிச்சென்றார்கள்.
ஆனால், அதே குறிப்பிட்ட காலத்தில் அவுஸ்திரேலியாவுக்கு வரவிரும்பியவர்கள் முறைப்படி விசா பெற்றுத்தான் வரநேர்ந்தது.
அவ்வாறு வந்தவர்களில் பெரும்பாலானவர்களும் ஒரு சில மாதங்கள்தான் இங்கு தங்குவதற்கு அனுமதிபெற்றிருந்தவர்கள்.  தொடர்ந்து இங்கே வாழவேண்டுமானால் குடிவரவுத்திணைக்களத்திற்கு சட்டத்தரணிகள் ஊடாக விண்ணப்பித்து அகதி அந்தஸ்து கோரவேண்டும்.
அவ்வாறு 1987 ஆம் ஆண்டில் நானும் இங்கு பிரவேசித்தபோது, எனக்கு பத்திரிகை ஊடகத்தொழிலைத்தவிர வேறு எந்தவொரு தொழிலும் தெரியாது. வாழ்க்கையை நடத்துவதற்காக ஒரு தொழிலைத்தேடிக்கொண்டே,  இயந்திரமயமான அன்றாடப்பொழுதுகளில் கிடைக்கும் சொற்ப நேரங்களில் இலங்கை பத்திரிகைகள் வீரகேசரி, தினகரன், மற்றும் மல்லிகை இதழிலும் எழுதிக்கொண்டிருந்தேன்.

மீள் வாசிப்பு அனுபவம் 2 - மாடும் கயிறுகள் அறுக்கும் - செ .பாஸ்கரன்

.


மாடும் கயிறுகள் அறுக்கும் கவிஞர் முருகையனின் கவிதை தொகுதி இந்த வாரம் வாசிப்புக்காக எனது கண்ணில் பட்டது. இந்தக் கவிதைத்தொகுதி 1990 ஆம் ஆண்டு தேசிய கலை இலக்கிய பேரவையினூடாக இந்த கவிதை நூல் வெளிவந்தது. பல பத்திரிகைகளில் தாமரை, தீபம், எழுத்து போன்றவைகளிலும் வீரகேசரி, தினகரன், மல்லிகை , தாயகம் , சிந்தாமணி போன்ற வற்றில் ஒரு கால் நூற்றாண்டு கால அறுவடையாக இந்த கவிதைகளை வைத்திருக்கிறார்கள்.

இந்த கவிதைகள் வேள்வி, கொதிப்பு, நடப்பு, பல்லக்கு , உலகியல், ஒன்றல் என ஆறு கூட்டங்களாக உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விடயம் பற்றி பேசுகின்றது கலையாக்கம் பற்றி, மனக் கிளர்ச்சி பற்றி, தினசரி வாழ்க்கையில் நடக்கின்ற மனிதர்களின் கோலங்கள் , விசித்திரங்களை முரண்பாடுகளைகளையும் ஒவ்வொரு பகுதியாக பேசுகின்றது. புதுக்கவிதைகள் வெளிவரத் தொடங்கிய காலகட்டத்திழும் மரபுக்கவிதை ஊடாகவே இந்த கவிதைகள் அமைக்கப்படுகின்றது அதுமட்டுமல்ல கடுழியம் என்னும் நாடகமும் இந்த தொகுதியிலே காணப்படுகின்றது. விடுதலை கிடைத்த பிறகுதான் நிம்மதி என்பது கடுழியத்தின் உயிர் குரலாக இருக்கிறது. அந்த விடுதலையும் இன, மத, வர்க்க ஒடுக்கல்களில் இருந்து விடுதலையாக இருக்கலாம் என்ற ஆவல் அங்கே தெரிகிறது.

பல கவிதைகள் மனதை தொட்டு விடுகின்ற கவிதைகளாக அமைந்திருக்கின்றன. ஒரு கவிதை அரசியலை சாடடை கொண்டு சாடுவது.
உருக்கம் என்ற கவிதை
நத்தார் விருந்திலே
நாற்பது சிறுமியர்
தோள் வரை நறுக்கி கழுவி சுருட்டிய
எண்ணை படாத கூந்தல் பறந்திட
வூளிகள், சோளிகள் , ஜீப்பிகள் ஒளிவிட
சாயம் பூசிய செவ்விதழ் திறந்தனர்


பிரமுகர் பெருமையைப் புகழ்ந்து பாடினர்
 ஐம்பது வாத்தியம் பின்னணி இசைத்தன

பார்த்தார் பிரமுகர்
சிறுமியர் கைகளை
நாற்பது கையிலும் காப்புகள் மின்னின
கைக்கடிகாரமும் காணப்பட்டது

பேசுங்கள் தட்டச்சப்படும்


நாம் பேசுவதைத் தானியங்கி முறையில் தட்டச்சப்படும் செயன்முறையை இங்கே காணொளி வடிவில் பகிர்கிறேன். இது தமிழில் தட்டச்சச் சிக்கல் அடைபவர்களுக்கும், வேகமாகத் தமிழில் தட்டச்ச முடியாதவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம்



நமைமறந்து இயங்கிவிடில் நம்மியக்கம் மழுங்கிவிடும் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


   ஆலையிட்ட கரும்பாக அவதியுற்ற மக்களெலாம்
   சாலையெலாம் திறந்ததென்று தாம்மகிழ்வு எய்துகிறார் 
   கோலோச்சும் கொரனோவோ கொன்றொழிக்கும் எண்ணமுடன்
   அடுத்தகட்ட நிலையபற்றி ஆளமாய் நினைக்கிறது !

  திறந்துவிட்ட காரணத்தால் திசைமாறிப் போகின்றார்
  நிறுத்திவிட்ட அத்தனையும் நெஞ்சமதில் நிறைக்கின்றார்
  சுயநினைவு இல்லாமல் செய்கின்றார் யாவருமே
  நமைமறந்து இயங்கிவிடில் நம்மியக்கம் மழுங்கிவிடும் !

  அளவுடனே நடப்பதால் ஆபத்து எமையணுகா
  அளவுதனை மீறிவிடின் ஆபத்து வீடுவரும்
  அரைகுறையாய் அறிந்துவிட்டு ஆட்டமெலாம் போடுவது
  அரைகுறாய் ஆக்கியெமை அடங்கிவிடச் செய்திடுமே !

  விடுதலை கிடைத்ததாய் வெற்றிவிழா நடத்துகிறார்
  வேதனைகள் சோதனைகள் விலகியெங்கும் ஓடவில்லை
  உலகத்தின் ஒருமூலை உணர்விழந்தே கிடக்கிறது
  உணர்விழந்து நாமிருந்தால் ஓலமிடும் நிலைமைவரும் !

இளையராஜாவும் நானும் - கானா பிரபா


இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளன்று நம் தமிழ் ஊடகம் என்னிடம் இளையராஜாவைப் பற்றிப் பேசச் சொல்லி அழைத்தார்கள். இலங்கையின் பிரபல ஊடகரும் தற்போது நியூசிலாந்தில் வாழ்பவருமான எம்.ஜே.எம்  சர்த்தாருடன் இளையராஜாவின் தனித்துவம் குறித்துப் பேசியதோடு அவர் எப்படி என் வாழ்வை ஆக்கிரமித்தார் என்பதை என் வாழ்வியல் அனுபவங்களூடாகப் பகிர்ந்து கொண்டதன் காணொளியை இங்கே பகிர்கின்றேன் 


அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 17 –தப்பட்டை


தப்பட்டை தோற்கருவி

பறை
, மத்தளம், தவில், உடுக்கை முதலிய தோற்கருவிகளுக்கு, தோலை அடுத்து மரப்பலகைகளே முக்கிய பங்களிப்பைத்தருகின்றன. பறை தொல்காப்பியத்தில் பதிவு பெற்றுள்ளது. மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தெய்வமான முருகனைத்தொழுது ஆடிப்பாட நம் முன்னோர் தொண்டகம், சிறுபறை, அரிப்பறை, துடிப்பறை முதலியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். பொதுவாக தொல் தமிழ்த்தெய்வம் முருகனைப் பாடப் பயன்படுத்தியதால் "முருகியம்" என்ற சிறப்புப்பெயரைப் பெற்றுள்ளன என்று தமிழிசைக் கலைக் களஞ்சிய ஆசிரியர் வீ.பா.க.சுந்தரம் குறிப்பிடுகின்றார். குறிஞ்சி நில மக்களே தொல் மாந்தர்கள். அவர்களின் தொன்மைத்தெய்வம் முருகன். அவனைப்பாடும் பறை முருகியம். இவற்றால் இக்கருவிகள் எவ்வளவு பழமையானவை என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. ஆதிமானிடன் வேட்டையாடிய விலங்குகளின் தோலும், அவனைச்சூழ்ந்து நின்ற மரங்களும் இக்கருவிகளின் படைப்பில் முக்கியப்பங்காற்றியுள்ளன. இந்த தொன்மையான தொண்டகப்பறையின் மருவிய வடிவங்கள் தான் மகுடமும் தப்பட்டையும்.

அன்பின் மாயம் நிறைந்த வீடு - கவிதை - வித்யாசாகர்!


ந்த வீடு அப்படித்தான்
அன்பின் மாயம் நிறைந்தது
எங்களின் சிரிப்பெல்லாம் செங்கற்களுள் புதைந்து 
அழுகையின் சத்தங்களில் 
இறுகி இருந்த வீடு அது. 

அந்த வீட்டில் சிவப்பு செம்பருத்தி
தலை தாழ்ந்திருந்தாலும் நாங்கள் 
தலைநிமிர்ந்து வாழ்ந்தோம் அன்று.

இரண்டு மாடுகள் போட்ட 
சாணங்களால் கூட வீட்டில் அன்று அடுப்பெரிந்தது,
ஊருக்கு பால்கறந்து விற்றுவிட்டு
வாங்கிய கையளவு அரிசியில்
வாழ்க்கையின் நீதியையும்
பாதையையும் காட்டிய வீடு அது, 

படித்தோம் சொல்கின்றோம்: கனடா - ஶ்ரீரஞ்சனியின் மூன்று நூல்கள் மீதான வாசிப்பு அனுபவம் - முருகபூபதி


.
கனடா - ஶ்ரீரஞ்சனியின்  மூன்று நூல்கள் மீதான வாசிப்பு அனுபவம்  முல்லைக்குத்  துணையாகிய தேரும் பலமரங்களின் அழிவினால்தானே உருவானது…!?  வாழ்வின் தரிசனங்களை சமர்ப்பிக்கும் கதைகள்


ஒரு கிராமத்தில்  மரத்தடியில்  ஊர் மக்களை அழைத்து வைத்துக்கொண்டு,   “ கற்பில் சிறந்தவள் யார்..?  “ என்று அவர்  கேட்பார்.  அங்கிருந்த ஆண்கள் ஒவ்வொருவரும்  காவியப்பெண்ணின் பெயரைச்சொல்வார்கள்!
கண்ணகி,  மாதவி, சீதை, சாவித்திரி, தமயந்தி, சகுந்தலை, சந்திரமதி… என்பார்கள்.
உடனே அங்குநின்ற பெண்களைப்பார்த்து,  “ பாருங்கள் உங்கள் கணவர்மாருக்கு முன்பின் தெரியாத அந்தப்பெண்கள்தான் கற்பில் சிறந்தவர்களாகத் தெரிகிறார்கள்.  வாழ்நாள் பூராவும் அருகில் இருக்கும் நீங்கள் எவரும் கற்புக்கரசிகளாகத்   தெரியவில்லை  “ என்பார். உடனே அந்தப்பெண்கள் ருத்ர தாண்டவம் எடுத்து கணவர்மாரைப்பார்த்து,   “ யோவ்… நாங்களெல்லாம் உங்க கண்ணுக்கு கற்புக்கரசிகள் மாதிரி தெரியல்லையா..?  “ என்று ஏககுரலில் சத்தம்போடுவார்கள்.
இந்தக்காட்சியை பலவருடங்களுக்கு முன்னர் வெளியான விதி திரைப்படத்தில் நீங்கள் பார்த்து ரசித்திருப்பீர்கள். அவ்வாறு குறும்புத்தனமான கேள்வியை கேட்பவர் இயக்குநர்  பாக்கியராஜ்.
கனடாவில் வதியும் ஶ்ரீரஞ்சனியின் பின்தொடரும் குரல் நூலில், புலம்பெயர் வாழ்வில் கண்ணகியும் மாதவியும் என்ற கட்டுரையை  படித்துக்கொண்டிருந்தபோது, எனக்கு அந்த விதி திரைப்படக்காட்சிதான் மனதில் நிழலாடியது.
இந்த நூல் வௌிவரவிருந்த வேளையில் நானும் ஒரு குறிப்பினை அவருக்கு அனுப்பிவைத்தேன். அதனையும் இந்நூலின் பின்புற அட்டையில் பதிவுசெய்துள்ளார் நூலாசிரியர்.

பறந்து சென்ற குயில் (சிறுகதை) - உஷா ஜவாகர் - அவுஸ்திரேலியா


அன்று 1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதியில் ஓர் நாள். எனக்கு அப்போது தான் திருமணமாகி இரண்டு மாதங்கள் பூர்த்தி ஆகியிருந்தது. நானும் என் கணவரும்  சாம்பியா நாட்டிலுள்ள இண்டோலா (Ndola) என்ற சிறிய நகரில் குடியிருந்தோம் .
                                     எங்களுடன் என் மாமனார், மாமியார், மற்றும் என்  கணவரின் இரு தங்கைகளும் தங்கியிருந்தார்கள் . எங்கள் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் போல விளங்கியது. எங்கள்  வீட்டில்  இரண்டு சாம்பிய பணிப்பெண்கள் வேலை  செய்து கொண்டிருந்தார்கள். என்ன காரணத்தாலோ அவர்கள் சட்டென வேலையிலிருந்து நின்று விட்டார்கள்.
                                     எனவே எங்கள் வீட்டு செக்யூரிட்டி கார்ட் (security guard) ஒரு புதிய பணிப்பெண்ணை கூட்டி வந்தான். சாம்பிய மக்கள் தங்கள் தாய் மொழியுடன் ஆங்கிலத்திலும் சரளமாக உரையாடுவார்கள்.
                                   புதிதாக வந்தவளுக்கு சுமார் முப்பது வயது மதிப்பிடலாம் போலிருந்தது . கன்னங் கறுப்பு நிறம் . சாந்தமான முகத் தோற்றத்தை கொண்டிருந்தாள். அவள் சிரிக்கும்போது அவளது பற்கள் காரிருளில் மின்னல் பளிச்சிடுவது போல பளிச்சிட்டன. அவள் பெயர் மாத்தா (Martha) என அறிந்து கொண்டோம்.


                                    அவளும் காரியத்தில் கெட்டிக்காரி தான். தான் எந்த மாதிரி வீட்டில் வேலை செய்ய போகிறோம், என்ன வேலை செய்ய போகிறோம், எங்கு தங்க போகிறோம், எவ்வளவு சம்பளம் என எல்லாவற்றையும் அறியத்தான் அன்று வந்திருந்தாள்.
                                சுருங்கக்கூறினால் நாங்கள் அவளை இன்டெர்வியு பண்ணினோம். பதிலுக்கு அவளும் எங்களை இன்டெர்வியு பண்ணினாள். அவள் எங்களை இன்டெர்வியு பண்ணும்போதே தனது ஒரேயொரு மகனான   முலேங்காவையும் (Mulenga) தன்னுடன் கூட்டி வந்து சேர்வன்ட் குவார்ட்டேர்ஸில் வைத்திருக்க அனுமதி  கேட்டாள். நாங்களும் அதற்கு சம்மதித்தோம்.                  
                                  முலேங்காவிற்கு 10 வயதாகிறது. ஆனால் இரண்டாம் வகுப்பில் தான் படித்துக் கொண்டிருந்தான். மார்த்தாவுக்கு வசதியில்லாதபடியால் பாடசாலையில் மூலேங்காவை உடனடியாக சேர்த்திருக்கவில்லை.

                                    அவள் கணவனை விட்டு பிரிந்து வாழ்கிறாள் எனக் கூறினாள்.எங்களுக்கு அது ஒரு விதத்தில் நிம்மதி அளித்தது என்றே கூறலாம். அங்கு ஒரு வீட்டின் முதலாளியை சாம்பிய வேலைக்காரன் வெட்டி கொன்ற செய்தியையும் கேள்விப்பட்டிருந்தோம்.
                                     எனவே மார்த்தாவும் மகனும் மட்டும் வந்து எங்கள் வீட்டின் பின்புறம் உள்ள சேர்வன்ட் குவார்டேர்ஸில்  தங்குவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும்  இருக்கவில்லை.

விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி கல்பானா சாவ்லா

.


விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.
பிறப்பு: ஜூலை 1, 1961
இடம்: கர்னல், ஹரியானா (இந்தியா)
பணி: அறிவியலாளர்
இறப்பு: பிப்ரவரி 1, 2003
பிறப்பு:
கல்பனா சாவ்லா அவர்கள், இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் ஜூலை 1, 1961 ஆம் ஆண்டு, பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக, ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரனும் இருந்தனர்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:

மழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 39 - முருகபூபதி



றந்தகாலமும் எதிர்காலமும் எம்மிடம் இல்லை.  நிகழ்காலம் மாத்திரமே கைவசம் இருக்கிறது என்பதுதான் யதார்த்தம் என்றாலும், மனித மனம் நிகழ்காலத்தைவிட்டு விட்டு, அடிக்கடி நினைப்பது இறந்த காலமாகவும் எதிர்காலமாகவும்தான் இருக்கிறது. அது ஏன்…?  - அபிதாவின் மனதை அரித்துக்கொண்டிருக்கிறது இந்தக்கேள்வி.
இறந்தகாலம்,  நினைவுகளிலேயே பெரிதும் தங்கியிருப்பதுபோன்று எதிர்காலம் கனவுகளில்தான் பெரிதும் தங்கியுள்ளது என்பதையும் நன்கு புரிந்துகொண்டே, மஞ்சுளாவை நிகழ்காலத்திற்கு அழைத்துப்பேசுவதற்கு அபிதா தயாராகியிருந்தாள்.
“ மஞ்சு,  இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படியே இருக்கப்போறீங்க…  ? வாழ்க்கைத்  துணையொன்று தேவைப்பட்ட காலத்தை  நீங்கள் கடந்துகொண்டிருக்கிறீங்க. “
“  என்ன புதிர் போடுறீங்க அபிதா…?  காலம் தரித்து நிற்காதுதானே…?! கடப்பதுதானே அதன் வேலை.   நாம் அதனோடு சேர்ந்து இழுபடுகின்றோம்.  நான் இன்னமும் துணை தேடும் படலத்தில் இறங்கவில்லை. இரண்டொருத்தர் என்னை விரும்புவதாக  புரபோஸ் செய்துமிருக்கிறான்கள். ஒன்றிரண்டு  ஃபேஸ் புக் வழியாகவும் வந்தது.  நான்தான் ரிஜெக்ட் பண்ணியிட்டன்.  என்ர அம்மா செய்த செயலுக்குப்பிறகு,   திருமணம், இல்லறம், குடும்பம்  பற்றியே நான் யோசிப்பதற்கு விரும்புவதில்லை.   “ என்று சொன்ன மஞ்சுளா,  மரத்தில் தவழ்ந்து சென்ற அணிலை பார்த்து  பரவசத்துடன் நின்றாள். 
அந்த அணிலை அபிதாவும் பார்த்தாள். அது எதனையோ கால்களுக்கிடையில் வைத்து சாப்பிட்டது.   “ அதற்கிருக்கும் சுதந்திரம் கூட மனிதர்களுக்கில்லை.   “ என்றாள் அபிதா.
இருவரும் அந்த வீட்டின் பின்வளவு  மரக்கறி தோட்டத்திலிருந்த நீண்ட  மரக்குற்றியில் அமர்ந்தனர். பல வருடங்களுக்கு முன்னர் அந்த வீட்டுக்காணியின் எல்லையில் நெடிதுயர்ந்து வளர்ந்து நின்ற வேப்பமரத்தின்  அடிப்பகுதி.  அதன்வேர்கள் அயல்வீட்டினரால் கட்டப்பட்ட மதில் சுவரில் வெடிப்புகளை ஏற்படுத்தியதால் வெட்டித்தரிக்கப்பட்டதன் ஒரு பாகம்தான் அந்தக்குற்றி என்று முன்பொருதடவை ஜீவிகா சொல்லியிருக்கிறாள்.

பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 4 - காவியத்தலைவி - ச . சுந்தரதாஸ்

.


தமிழ் தெலுங்கு மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் சவுகார் ஜானகி, இவருக்கு 1970 ஆம் ஆண்டு ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது. சொந்தத்தில் படம் தயாரித்து நடிக்க வேண்டும் என்பதுதான் அது . அன்றைய காலகட்டத்தில் கே பாலச்சந்தரின் எல்லா படங்களிலும் நடித்துக் கொண்டிருந்ததால் பாலச்சந்தரே தன படத்தை இயக்கித் தர கேட்டு அவரும் உடன்பட்டு அவ்வாறு தயாரான படம் தான் காவியத்தலைவி.

இந்தியில் அசோக்குமார், சுசித்ராசென் நடித்து வெற்றி பெற்ற மம்தா என்ற படத்தை பாலச்சந்தர் கதை வசனத்தில் தமிழ் ஆக்கினார். பாலச்சந்தர் படம் என்றால் அதில் நாகேஷ் கட்டாயம் நடிப்பார், ஆனால் இந்த படத்தில் அவருக்கு ஏற்ற வேடம் இல்லாததால் நாகேஷ் இல்லாத முதல் பாலச்சந்தர் படமாக இது வெளிவந்தது.

பிரபல நடிகையான சுசித்ராசென் ஏற்ற வேடத்தை சவுக்காரும் , அசோக்குமார் வே டத்தில் ஜெமினியும் நடித்தனர். பிள்ளைகளை பெற்ற கடனுக்காக தந்தை பாடுபடுவது வாடிக்கை , ஆனால் இப்படத்தில் தந்தை பெற்ற கடனுக்காக மகள் தன் காதலைத் துறந்து கடன் கொடுத்தவரை கரம்பிடிக்கிறார். ஆனால் அவனோ படு கேவலமாக அவளிடம் நடந்துகொள்கிறான். தன் குழந்தையை காப்பாற்ற நடனப் பெண்ணாகும் அவளுக்கு தன் பழைய காதலன் முன் நடனமாடும் இக்கட்டான நிலை ஏற்படுகின்றது.

தாய்மையின் மேன்மையை, துடிதுடிப்பு என்று எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் அருமையான இடம் சவுக்காருக்கு அதனை நிறைவேற்றி இருந்தார் அவர். பாலச்சந்தரின் இயக்கத்தில் மிகையில்லாத நடிப்பையும் அவர் வழங்கியிருந்தார். படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வருபவர் எம்ஆர் ஆர் வாசு . வாசு தன தந்தை ராதாவின் பாணியிலேயே தன் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவருக்கு பிறகு தான் ஜெமினியின் பாத்திரம் எடுபடாது எனலாம் . இவர்களுடன் ரவிசந்திரன் வரலட்சுமி ஆகியோர் இடம் பெற்றனர்.


பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்.. சிறுகதை - ஃபாத்திமா, ஷார்ஜா.

.


காலை ஆறு மணி. ஒரு கையில் டீ குடித்துக் கொண்டே மறுகையில் செய்தித்தாளைப்படித்து முடித்தார் சேதுராமன். காலியான டீ கிளாசை மனைவியிடம் கொடுத்துவிட்டு செல்போனைக் கையிலெடுத்து தோட்டத்து வாட்ச்மேனுக்கு போன் செய்தார். 

“சிங்காரம், தோட்டத்திலேயே இரு. எங்கேயும் போய்ராதே, பத்துமணிக்கு மரங்களையெல்லாம் வெட்றதுக்கு ஆளுங்க வராங்க. அதுக்கப்புறம் மர வியாபாரிங்க வந்து மரங்களையெல்லாம் எடுத்துட்டுப் போய்ருவாங்க. எல்லாம் முடிஞ்சவுடனே தோட்டத்த சுத்தம் பண்ணி வெச்சுடு” என்று சொல்லி முடித்தார். 

“எதுக்குங்கய்யா மரங்களை வெட்டி தோட்டத்த சுத்தப்படுத்தணும்? ஏன்யா இப்படி திடீர்னு ஒரு முடிவு?” என்று பவ்யமாகவும், பாவமாகவும் கேட்டார் சிங்காரம். 

“ஒன்னுமில்ல சிங்காரம், சீசன்லதான் காசு பாக்குறோம்,மத்த  நாள்கள்ல ஒரு புண்ணியமுமில்ல பாரு இந்த மரங்களால. நமக்குத்தான் பராமரிப்புச் செலவும்கூட. 
அதனாலதான் இந்த இடத்தில ஒரு காம்பளக்ஸ் இல்லைனா அபார்ட்மென்ட்ஸ் இந்த மாதிரி கட்டி விடுட்டோம்னா வருசம் முழுசும் காசு வந்துட்டே இருக்கும்.” என்று காரணம் சொல்லி முடித்தார் சேதுராமன். 

“ஐயாவுக்குத்தான் சூப்பர் மார்க்கெட், ஜவுளிக்கடை, ரைஸ்மில் அப்படினு இன்னும் நிறைய வருமானம் வரக்கூடிய தொழில் துறைனு இருக்குங்களே....  இந்த பச்சை மரங்களை ஏன்யா வெட்டி காசு பாக்கணும்னு ஆசைப்பட்றீங்க...  எல்லா மரத்திலேயும் பறவைங்களும், சின்னச்சின்ன குருவிகளும் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிச்சு வாழுதுங்க. மரங்கள வெட்டும்போது எல்லாமே சிதஞ்சு  போகுமுங்க....”

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -16 ஆனந்த பைரவியிலும் ஆதி தாளத்திலும் பிறந்த கல்லூரிக்கீதம்




நான்
1950 ஆண்டு முதல் யாழ்.தெல்லிப்பழை  யூனியன் கல்லூரியில்  ஆசிரியனாக பணிபுரியத் தொடங்கியிருந்தேன். அதன்பிறகு ,  10 -  12 ஆண்டுகளின் பின்னர்  நிலை மாறியது. அமெரிக்காவின்  இலங்கை மிஷனின் உடைமையாக இருந்த அக்கல்லூரி மட்டுமல்ல,   நாட்டின் அனைத்துப் பாடசாலைகளையும்  அரசு பொறுப்பேற்கும் காலம் வந்தது.
அதனால்,  நான் பணியாற்றத்தொடங்கிய அக்கல்லூரியும்   நாட்டு அரசின் உடைமையானது. அதனால்,  மிஷனின் பொறுப்பில் இருந்து அது விடுபட்டு,  இலங்கை  அரசு  விரும்பியபடியே அங்கும் நியமனங்கள் - இடமாற்றங்கள் யாவும் நடைபெற்றன.
நாலு தசாப்தங்களாக அதிபராக இருந்து இக்கல்லூரியை வளர்த்தெடுத்த அதிபர் திரு.  ஐ.பி.துரைரத்தினம் ஓய்வுபெறும் காலமும் வந்தது. பக்கத்திலிருந்த  மகாஜனாக் கல்லூரி உபஅதிபராக இருந்த திரு . கிருஷ்ணபிள்ளை யூனியன் அதிபராக நியமனம் பொற்று வந்தார்.  கல்லூரிக்கென   கல்லூரிக் கீதம் ஒன்று வேண்டும் என அவர் தீர்மானித்தார்.  அவர் அந்தப் பொறுப்பை என்னிடம் தந்தார்.
நான்  அது பற்றிச்சிந்தித்தேன். 1816 ஆம் ஆண்டு முதல்  தெல்லிப்பழை வாழ் மக்களுக்குச்  சேவை செய்த  அக்கல்லூரி அது.   சிறு பாடசாலையாக ஐந்தாறு  மாணவருடன் 1816 இல் தொடங்கிய அக்கல்வி நிலையம்,  1960 கனிஷ்ட  தரத்தில் பெரிய கல்லூரியாக வளர்ந்திருந்தது.

இலங்கைச் செய்திகள்


09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி

ஜீவனிடம் தலைமையை வழங்குவதே சரியான முடிவு

ஜீவனுக்கே அமைச்சு பதவி



09ஆம் திகதி முதல் அனைத்து மத வழிபாட்டுக்கும் அனுமதி



கூட்டுத் தொழுகை,ஜூம்ஆவுக்கு அனுமதியில்லை

உலகச் செய்திகள்


அமெரிக்காவின் பல நகரங்களிலும் 6ஆவது நாளாக தொடர்ந்து பதற்றம்

பதற்றத்தை கட்டுப்படுத்த இராணுவத்தை அழைப்பதாக டிரம்ப் கடும் எச்சரிக்கை

டிரம்ப்பின் பதிவை கட்டுப்படுத்த பேஸ்புக் ஊழியர்கள் வலியுறுத்து

அமெரிக்காவில் தொடர்ந்தும் பெரும் ஆர்ப்பாட்டங்கள்: வன்முறை தணிவு

போராட்டக் களமாக மாறிய அமெரிக்க நகரங்கள்!

2016இல் கறுப்பினத்தவர் மரணம்: பிரான்ஸில் பாரிய ஆர்ப்பாட்டம்

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இணைக்க தயாராகும் இஸ்ரேல்

கறுப்பினத்தவர் மரணம்: பொலிஸார் மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு

ட்விட்டரில் ‘இனவாதி’ தேடலில் டொனால்ட் டிரம்ப் முதலிடம்


அமெரிக்காவின் பல நகரங்களிலும் 6ஆவது நாளாக தொடர்ந்து பதற்றம்



ஆயிரம் பூக்களால் அர்ச்சிப்பவள் நீ - காதல் கவிதை - வித்யாசாகர்!


யிரானாய்
உயிராகவே இருப்பாய்
உயிருள் உயிர்மை ஊட்டுபவளே
உயிருள்ளவரை
உடனிரு.
ஒரு அலைபோல
மீண்டும் மீண்டும்
ஓயாது வருபவள் நீ
அந்த அலை அந்தக் கடலிலிருந்து
மெல்ல விலகினால்
அந்தக் கடலென்ன ஆகும்?
நானென்ன ஆவேன்???
நீ போனால்
உயிர்போகும்
உயிர் தானே போகட்டும்,
நீ வந்தால்
உயிர் வரும்
வாழ்க்கையும் வரும்.
நீ என்பதுள்
அத்தனை அழகைச் சேர்ப்பவள்
நீ மட்டுமே,
நீ யிருப்பதால் தான்
அந்த நீ கூட
அப்படி இனிக்கிறது,
உனக்கொன்று தெரியுமா?
நீயும் நானும்
உயிரும் நஞ்சும் போல
நீ உயிர் பருகிச் செல்கிறாய்
நான் நஞ்சுண்டு நிற்கிறேன்
மரணம் என் சன்னல் வழியே
வரும்போதெல்லாம்
உன் கொலுசொலி கேட்டு
மறைகிறது,

போர் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.



  எம் இனம் ஒரு கொடுமையான போரில் சிக்கித் தவித்தது. கை கால்களை இழந்து தவிப்போர் பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்திய நிலையங்களும் குண்டுகளால் பாதிக்கப்பட்ட நிலையில் போதிய மருந்தில்லாமை, ஏன் குடிநீர் கூட கிடைக்காமல் தவித்தவர் எத்தனையோ பேர். நாம் போரை எதிர்கொள்ளும் காலம் வரை அதன் பாதிப்பை தொலைக்காட்சிகளிலே மட்டுமே கண்டோம். இன்றோ அது எமது வாழ்வின் அனுபவமாகிவிட்டது. சேர சோழ பாண்டியர்கள், போர் புரிந்தார்கள். நாடுகளைத் தமதாக்கினர், பெருமை மிக்க தமிழினம் என வாசித்து மகிழ்ந்தோம். ஆனால் போர் என்ற அந்த நாச சக்தியை உணரும்போது எமது இரத்தமே உறைந்துவிடுகிறது. இத்தனையையும் அறியும்போது இந்த போர்தான் என்ன, இதற்கு விடிவுண்டா? என எண்ணத் தொடங்கினேன்.  அதன் வெளிப்பாடே நான் உங்களுடன் பகிர உள்ளவை.

  மனித சமுதாயம் என ஒன்று உருவாகத் தொடங்கிய காலம் தொட்டு, இன்று வரை மனிதன் போர் என்ற பெயரால் தன் இனத்தைக் கொன்றுகொண்டேதான் இருக்கிறான். சில போர்களோ மிக குறுகிய காலமே நிலைப்பவை, வேறு சிலவோ பல வருடங்கள் தொடர்ந்து நடைபெறுபவை. மனிதன் ஆரம்ப காலத்திலேய கூட்டாக வாழ்ந்தான். இந்த கூட்டங்களே காலப்போக்கில் மாறுபட்ட பெயர்களுடன் இனக்குழுக்களாக வாழ்ந்தார்கள். வேறுபட்ட இனக்குழுக்கள் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொண்டனர். இதுவே மனிதனது போரின் ஆரம்பம் போலும். ஆதி மனிதன் வேட்டையாடி வாழ்ந்த காலத்திலே வேட்டை ஆடும் நிலப்பரப்பிற்காகப் போரிட்டான். தன் இனம் வேட்டையாடும் இடத்திலே மாற்றான் வந்தால் அவனை விரட்டினார்கள். முடிந்தால் கொன்றும் தீர்த்தனர்.

கடவுளும் கொரோனாவும் - ருத்ரா


கொரோனா முன் தோன்றினார்
கடவுள்.
"இப்படி நீ உயிர் குடிப்பது
நியாயம் தானா?"
என்றார்.

"அது சரி!
கையை சோப்பு போட்டு கழுவினீர்களா?
முக கவசம் எங்கே?"

"என்ன சொல்கிறாய்?"
அவர் "புலித்தோல்" ஆடை கூட‌
வெட வெடத்தது!

"அய்யோ..
இது ஏதோ புது பிரணவ மந்திரம்
போல் இருக்கிறதே.
"சண்முக கவசம் " தெரியும்.
அது என்ன வெறும் முக கவசம்?
நம் குட்டிப்பயலைத்தான் 
கேட்க வேண்டும்"
கடவுள்
உள்ளுக்குள் பேசிக்கொண்டார்.

கொரோனா
"பக பக"வென்று சிரித்தது.

___________________________________________

ok2K தமிழ் சினிமா - ஒரு குயிலும் 2 கோட்டான்களும்



சந்திரா productions(ஆஸ்திரேலியா) தயாரிப்பில் N.S.Thanaa அவர்களின் இயக்கத்தில் உருவான "ஒரு குயிலும் 2 கோட்டான்களும்" முழுநீள திரைப்படம் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படுகிறது...
இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
கீழுள்ள லிங்கை கிளிக் செய்து திரைப்படத்தை பார்வையிடுங்கள்.👇👇👇