மூத்த எழுத்தாளர் எஸ் பொ காலமானார்

.

மூத்த எழுத்தாளர் எஸ் பொ  அவர்கள் சிட்னியில் இன்று காலமானார் . சிறுகதை,நாவல் நாடகம்,கவிதை,விமர்சனம்,அரசியல் என்று இலக்கியத்தின் அனைத்து பக்கங்களையும் தொட்ட மிகப்பெரும் எழுத்தாளர் .சடங்கு என்ற நாவலின்மூலம் தமிழ் சமூகத்தில் மாபெரும் தாக்கத்தை கொண்டுவந்த எழுத்தாளர் எஸ் பொ அவர்கள்  இன்று தனது 82வது வயதில் அவுஸ்திரேலியா சிட்னியில்  காலமாகிவிட்டார் .

தீ ,ஆண்மை, சடங்கு, வீ , நனைவிடைதோய்தல், இனிஒரு விதிசெய்வோம் என்ற எழுத்துக்கள் உட்பட பல எழுத்துக்களையும்  சிட்னியில்  அரங்ககலைகள் சக இலக்கிய பவரில் இருந்து "ஈடு" என்ற நாடகத்தின் மூலம் இலங்கையின் அரசியல் பிரச்சினையை தொடக்கம் முதல் துவக்குவரை சொல்லுவதற்கு பங்காற்றிய எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது

தனக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு தமிழோடு விளையாடிய ஒரு எழுத்தாளன் ஓய்வு பெற்றுக்கொண்டார் . தமிழை இவர் நேசித்தார் , தமிழ் இவருக்கு கைகட்டி சேவகம் செய்தது.

வாழ்ந்து கொண்டு இருக்கும் போதே வரலாற்றில் வாழ்தல் என்ற இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட தன் சுயசரிதையை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டவர் .

மித்திர பதிப்பகம் என்ற பதிப்பகத்தை நடாத்தி ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் எழுத்துக்களை அச்சேற்றிய பெருமையையும், உலகத் தமிழ் எழுத்தாளர்களை ஒன்றுதிரட்டி பனையும் பனியும் என்ற சிறு கதை தொகுதியையும் தந்த  எழுத்தாளர் இன்று ஓய்வெடுத்துக்கொண்டார் .

யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.பொ அவர்கள், தனது வாழ்நாளின் பெரும்பாகத்தை மட்டக்களப்பில் கழித்திருந்தார்

அவரது மறைவால் துயருறும் குடும்பத்தினர்க்கு தமிழ்முரசு அவுஸ்ரேலியா  தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றது.

தமிழோடு விளையாடிய இந்த  எழுத்தாளனின்  ஆண்மை என்ற நாவலில்  ஒரு சில வரிகள் 

ஈச்சேரில் விழுந்த சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சிவசம்பு சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம் தூங்குவதான நினைப்பே அவருக்கு யாரோ உடம்பைப் பிடித்து விட்டது போன்ற சுகத்தைக் கொடுத்தது.
 
வள்ளிசாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பம் தாயடி வீட்டிலே வந்திருக்கிறது. பெத்துப் பெருகிய குடும்பம். அவருடைய மனைவி சரஸ்வதி மூலம் ஐந்து பிள்ளைகளையும் பெட்டைக்குஞ்சுகளாகவே பீச்சி விட்டாள். அரிய விரதங்கள் பிடித்து, இருக்காத தவம் எல்லாம் கிடந்து, கண்ட கண்ட தெய்வங்களையெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டது வீண் போகவில்லை. சோட்டைத் தீர்க்க ஆறாம் காலாகப் பொடியன் பிறந்தான். சந்தான விருத்தியில் அவனே மங்களமாக அமைந்தான்.

அழு -கவிதை - நோர்வே நக்கீரா

.


அம்மா!!! 
நான் பிறந்தபோது அழுதாய்
நானும் அழுதேன்
தடவிக்கொடுத்து தாய்மை தந்தாய்

நாம் அழுதபோது
அனைவரும் ஆர்ப்பரித்தனர்
ஒருவரின் துன்பத்தில் தானே
இன்னொருவர் இன்பம்.
ஒராயிரம் ஏழைகளின் கண்ணீரில்தாணே
ஒரு பணக்காரன் சிரிக்கிறான்

இன்று மூச்சை விட்டு
அழுகையை நிறுத்தினாய்
மூச்சையாகியும்
அழுதுகொண்டே இருக்கின்றேன்.
அனைவரும் அழுகின்றனர் 
உன்னைத்தவிர

அழுகையை நிறுத்தியது
நான் காலம்பூராக அழுவதற்கா?
என்னை அழுவதற்குப் பழக்கிவிட்டு
நீமட்டும் நின்மதியாகத் து}ங்கிவிட்டாயே
எப்படி சுயநலக்காரியானாய் தாயே.

நோர்வே நக்கீரா 19.11.2014

மெல்பேனில் மாவீரர் நாள்

.
meb

திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
 கலை - இலக்கிய    விமர்சனத்துறையில்   நயக்கும் பண்பினை   வளர்த்த  முன்னோடி   - தகவம்  இராசையா  
  
                                           
ஈழத்து  கலை,  இலக்கிய  வளர்ச்சியில்  விமர்சகர்களின்  பங்கும் பணியும்  முக்கியமானது.
விமர்சகர்களில்   எத்தனையோ   ரகம்.  தாம்  சார்ந்த  அரசியல் கோட்பாடுகளுக்குட்பட்டு   விமர்சிக்கும்  பெரும்பாலான  விமர்சகர்கள் மாக்ஸீய   பண்டிதர்களாகவும்  விளங்கினர்.  சிலர்  தமது கருத்துக்களை   மிகவும்  எளிமையாக  பதிவு செய்து  படிப்பதற்கு ஆர்வமூட்டினார்கள்.
சிலர்  நீண்ட  காலமாக  விமர்சனத்துறையில்  ஈடுபட்டாலும் அவர்களை  தொடர்ந்து  படித்து வருபவர்கள்   மீண்டும்  மீண்டும் படித்தே   தெளிவுபெறவேண்டியவர்களானார்கள்.  சில சமயங்களில் அவர்கள்  எழுதியதை  புரிந்துகொள்ள  முடியாமல்  தமது தலையைப்பிய்த்துக்கொண்டவர்களும்  இருக்கிறார்கள்.
சில   இலக்கிய  சிற்றிதழ்களில்  குறித்த  விமர்சனங்களை   படிக்கும் ஆர்வம்   அற்று  அதன்    பக்கங்களை   புரட்டி  மறுபக்கங்களுக்கும் சென்றுவிடுவார்கள்.
ஈழத்து  இலக்கிய  உலகத்தில்  ஒருவகை    நெறிப்படுத்தப்பட்ட விமர்சன    முறைமைகள்  நீடித்தமையினால்    ஆக்க  இலக்கியங்களில்   அழகியல்  மங்கிப்போனதாகவும்  குற்றச்சாட்டு தொடர்கிறது.

மாவீரரை நினைவு கூரும் நாள் 27.11.2014

.

சிட்னி வாழ் தமிழ் மக்களுக்குத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சிட்னி பணியகம் விடுக்கும் அன்பான வேண்டுகோள்.
தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும்தமிழ் மக்களின் விடிவிற்காகவும் தம்மை அர்ப்பணித்து தம் இன் உயிர் ஈய்ந்த மாவீரரை நினைவு கூரும் நாள்மாவீரர் நினைவெழுச்சி நாள்.
சிட்னியில்மாவீரர் நாள்நவம்பர் மாதம் 27ம் திகதி வியாழக்கிழமை அனுசரிக்கப்படவுள்ளது.

ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களின் பயணம் - கானா பிரபா

.



ஈழத்தில் போர்க்கால இலக்கியங்களின் ஆரம்பம் வீதி வழி நாடகங்களாகவும், பின்னர் இசை நாடகங்களாகவும், கதைகளாகவும், கவிதைகளாகவும், பரந்து விரிந்த போது இவற்றையெல்லாம் மீறிய கலைப்படைப்புகளாக வெளிவந்து ஆட்கொண்டவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள்.
இவற்றோடு வாழ்ந்து கழித்தவருக்கு பாடல்களைக் கேட்கும் போது எழும் உணர்வுக்கு வார்த்தை அலங்காரம் கட்ட முடியாது. ஈழத்தில் குறிப்பாக எண்பதுகள், தொண்ணூறுகளில் வாழத் தலைப்பட்டவருக்கு இம்மாதிரி அனுபவங்களைக் கேட்டவுடனேயே தம் கண் முன்னே தரிசிப்பர். அவ்வளவு உணர்வு பொருந்திய வரிகளைக் கொண்டமைந்து எமது வாழ்வியலோடு அந்தக் காலகட்டத்தில் கலந்து நின்றவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள்.

ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பல இயக்கங்கள் போராட்டக் களத்தில் இருந்த அந்த எண்பதுகளில், எனது அண்ணன் முறையான ஒருவர் ரெலோ இயக்கத்தின் மீது மிகுந்த பற்றோடு இயங்கி வந்தவர். அப்போது தன்னுடைய வீட்டில் ஒரு ஒலிநாடாவை எடுத்து வந்து ஒலிபரப்பியபோது புதுமையாக இருந்தது. தமிழீழ விடுதலையை வேண்டிய பாடல்களின் தொகுப்பு அது.
தமிழ்த்திரையிசைப் பாடல்களைக் கேட்டு வளர்ந்த எமக்கு அப்போது அதைத் தாண்டிய ஜனரஞ்சக இசையாக "சின்ன மாமியே", "சுராங்கனி" போன்ற பொப்பிசைப் பாடல்களும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காலைச் செய்தி அறிக்கையோடு வரும் ஒரு சில மெல்லிசைப் பாடல்களும் தான் அறிமுகமாகியிருந்த வேளை இந்த எழுச்சிப் பாடல்களைக் கேட்டது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. ஏனெனில் அன்றைய காலகட்டத்தில் ஈழ விடுதலையை வலியுறுத்தும் பிரச்சாரங்களுக்காப் பொதுமக்களை அணி திரள அழைக்கும் போது எல்லா இயக்கங்களுமே பொதுவில் சினிமாவில் வந்த  
எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்களையும் வேறு சில புரட்சிகரப் பாடல்களையுமே ஒலிபெருக்கி வழியே கொடுத்து மக்களின் கவனத்தைக் குவிக்க வைத்தார்கள்.


முத்தமிழ் மாலை 2014. 30.11.2014

.

இலங்கைச் செய்திகள்


கவனம்; தாலிக்கொடி, சங்கிலி அறுக்குமிடம்

 மரணத் தண்டனை விதிக்கப்பட்ட 5 இந்திய மீனவர்களும் விடுதலை


 நுவரெலியாவில் சீரற்ற காலநிலை : 678 குடும்பங்கள் இடம்பெயர்வு
சன்மாஸ்டருடன் த.தே.கூட்டமைப்பினர் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்:பயங்கரமான பிரச்சினை என்கிறது அரசாங்கம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் தீ

ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 8 : தேர்தல்கள் ஆணையாளர்
===========================================================


கவனம்; தாலிக்கொடி, சங்கிலி அறுக்குமிடம்

18/11/2014 திரு­டர்­களின் தொல்­லை­களில் இருந்து பெண்­க­ளையும் உடை­மை­க­ளையும் பாது­காக்கும் நோக்­குடன் முன்­னெச்­சரிக்­கை­யாக திருட்­டுக்கள் இடம்­பெறும் இடத்தைக் குறிப்­பிட்டு யாழ்ப்பா­ணத்தில் திரு­டர்கள் கவனம் என்ற சுலோக அட்­டைகள் தொங்­க­வி­டப்­பட்­டுள்­ளன.

இந்த அறி­விப்பைத் தொடர்ந்து மேற்­ படி வீதியால் செல்லும் பெண்கள் மிக அவ­தா­னத்­துடன் பயணம் செய்­ய ­வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.
மானிப்பாய் மத்­திய சந்­தைக்கு முன்­பாகச் செல்லும் முத்­துத்­தம்பி வீதியில் குறிப்­பிட்ட இடத்தில் சுலோக அட்­டைகள் தொங்­க­வி­ட ப்­பட்­டுள்­ளன.

சங்கத் தமிழ் மாநாடு விசேட கருத்தரங்கு - Dr.பாரதி

.

அவுஸ்திரேலியாவில் குளோபல் சக்தி சூப்பர் ஸ்டார் தேடல் - சுனிதா.

.

இலங்கையில் சக்தி தொலைக்கட்சியில் இடம் பெரும் "சக்தி சூப்பர் ஸ்டார்" நிகழ்ச்சி யாவரும் அறிந்த ஒன்றே. இவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக இந்த அற்புதமான நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
சக்தி தொலைக்கட்சி நிறுவனம் இந்த வருடத்திலிருந்து உலகளாவிய ரீதியில் இந்நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு, அதாவது உலகத்தமிழரின் பாடும் திறமையை நிரூபிக்க "குளோபல் சக்தி சூப்பர் ஸ்டார்" என்னும் பாடல் போட்டியை 2015-ல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதற்கான தேடல் இந்த டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியா, மலேசியா, கனடா மற்றும் சிங்கப்பூரில் நடைபெற இருக்கின்றது.

அதற்கமைய நான் அவுஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் "குளோபல் சக்தி சூப்பர் ஸ்டார்" தேடல்  பற்றிய விளக்கத்தை கொணர முன்வந்தேன். இந்த நிகழ்ச்சிக்கான குரல் தெரிவு  டிசம்பர் மாதம் 20 மற்றும் 21-ம் திகதிகளில் Liverpool ல் உள்ள Heaven Centre ல்  காலை 10.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.

RAAGAM MUSIC CENTRE ஸ்தாபனத்தார் வழங்கும் மாபெரும் மலிவு விற்பனை

.
இம் மாதம் 19ம் திகதி முதல்
ஒரிஜினல் டிவிடி, விசிடி, ஒடியோ சிடி, எம்பி 3, ஒடியோ கசட்
Original DVD,VCD, Audio Cd, MP 3, Audio Cassettes
மற்றும் Imitation Jewellery ஆகியவற்றை 20 % முதல் 50 % வீதக் கழிவுடன் வாங்கிக்கொள்ளலாம்
பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பழைய, புதிய தமிழ், ஹிந்தி, மலையாள, கன்னட, சிங்கள திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் சின்னத்திரை நாடகங்கள் விற்பனைக்கும் , வாடகைக்கும் பெற்றுக்கொள்ளலாம்
  திருமண வைபவங்கள் , பூப்புனித நீராட்டு விழாக்கள், பிறந்த நாள் வாழ்த்துக்கள் போன்றவற்றை DVD  யில் பதிவு செய்து கொள்வதற்கும்
மலிவான விலையில் கூடிய நேரம் வெளிநாடுகளுக்கு LAND LINE, MOBILE, SKYPE ற்கு பேசுவதற்கும், வெளிநாடுகளிருந்து உங்களோடு பேசுவதற்கும் தரமான
  SELLA தொலைபேசி அட்டையை வாங்கி பயனடையுங்கள்
SELLA INTERNATIONAL PHONE CARD. எமது கடையில் அல்லது  http;//www.sellacards.com  வாங்கிக்கொள்ளலாம்

RAAGAM MUSIC CENTRE
17a/16 - 20 Henley Road Homebush west
Close To Flemington railway Station  
Phone:- 02 97466486
Mobile :- 0414 579 923
http;//www.raagammusic.com




வேர்களைத் தேடிச் செல்வோம்

.

மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுடன் தமிழுக்கு இருந்த உறவு அரசியல் காரணங்களால் நலிவடைந்தது.
திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ், இந்திய விடுதலைக்கு முன்புகூட தன் சக மொழிகளுடன் நல்லுறவு கொண்டிருந்தது. மொழிவாரி மாநிலம் உருவான பிறகு ஏற்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி, மொழி மீதான அரசியல்வாதிகளின் நிதானமற்ற ஆவேசம் இரண்டும் ஒரு குடும்ப மொழிகளுக்குள்ளே மாறுபாட்டை உருவாக்கிவிட்டன.
கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கும் தமிழுக்குமான உறவில் சில அரசியல் காரணங்களால் இடைவெளி வந்துவிட்டது. என்றாலும், விதிவிலக்காகப் பண்பாட்டு ஆய்வாளர் சிலர் இனத்துக்கும் மொழிக்குமான பழைய உறவைச் சரியாகவே பதிவுசெய்துள்ளார்கள்.
ஷெட்டரின் ஆராய்ச்சி
சங்க இலக்கியங்களின் கன்னட மொழி பேசிய பகுதியின் வரலாற்றை நேர்மையாக ஆராய்ந்தவர் ஷெட்டர். இவரது முக்கியமான நூல், ‘ரிஃப்லெக்‌ஷன் ஆன் தி எர்லி டிரவிடியன் ரிலேஷன்’ (Reflection on the Early Dravidian Relation). ஷெட்டர் மானுடவியல், தொல்லியல் வரலாற்றுப் பேராசிரியர். கர்நாடகப் பல்கலைக்கழகத்திலும் கேம்பிரிட்ஜ், ஹார்டுவேர்டு பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியராக இருந்தவர்.

மறந்து போகாதே! -சிறுகதை - நவீனன்



.
என் அன்புத் தந்தை காவலுர் ராசதுihக்கு சமர்ப்பணம்
மத்தியானம் சாப்பிட வந்த அப்பா அவசர அவசரமாக இருந்தார். மாலை கிளிநொச்சிக்குப்பயணமாகிப் போவதாகவும் பையை அடுக்கி வைக்குமாறு சொன்னார்.
போன முறையைமாதிரி சாரத்தையும் பற்பசையையும் மறந்து போகாதே என்றார்.
இல்லை இல்லை மறக்க மாட்டேன் என்றேன். போனமுறை ஏதோ யோசனையில் மறந்தே போயிருந்தேன்.
அப்பாவின் பாக்கை அடுக்குவது நான்தான். அடிக்கடி இப்படி வெளியிடங்களுறங்குப் வேலை காரணமாகப் போய் வருவார். அம்மாவுக்கு இப்படிப் போவது விருப்பமில்லை. அப்பா எப்போது தான் வெளியிடத்துக்கு; போகப்போவதாகச் சொல்லுவாரா அம்மா தொடங்கிவிடுவார்.
அப்பாவுக்கு நிரந்தரமான தொழில் இல்லை என்கிற கோபத்தில் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் உள்ள அனைவருக்கும் ஏச்சும் பேச்சும் விழும். எல்லோரும் கள்ளப்பயல்கள் என்று முடியும்.


கொய்யாவின் மருத்துவக் குணங்கள் !

.
பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக்கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர்ச்சத்துக்களும் தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது இலை, பட்டை என அனைத்துமே மருத்துவக்குணம் கொண்டுள்ளன.
  வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன. கொய்யா மரத்தின் இலைகள் திசுக்களைச் சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை. மலச்சிக்கல் போக்கும். கஷாயம் வாந்தியைத் தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையைக் காய்ச்சிக் கொப்பளிக்கலாம்.
  கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றது. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம், புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.


விழுதல் என்பது எழுகையே பகுதி 27 பொலிகை ஜெயா - சுவீஸ்

.
சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா  அவர்கள் பற்றிய அறிமுகம்



பொதுவாக இவர் ஒரு இலக்கியவாதி.முக்கியமாக அவர் ஒரு கட்டுரையாளர்.அதன் பின்பே சிறுகதைஇகவி வடிப்பவர்இ   அவரது கட்டுரைகள் இலங்கை வீர கேசரிஇஜீவநதிஇபுதிய பூமிஇஇந்தியா இனிய நந்தவனம்இகனடா உதயன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தன
சிறு கதைகள் சில சுவிஸ் தமிழ் ஏடுஇவீரகேசரிஇஜீவநதி ஆகியவற்றில்
பிரசுரமாகியன.
கவிதைகள் பல ஐரோப்பிய வானொலிகளில் வெளிவந்தன .அத்தோடு வானொலிகளில் அரசியல் களத்தில் பங்கெடுத்துள்ளார்.
சுவிஸில் பல பட்டிமன்றங்களில் பேச்சாளராகவும் தலமை ஏற்றும் உள்ளார்.
முல்லையமுதன் டழனெழn டைஉ வானொலியில் நடாத்தும் இலக்கியப்பூக்கள்
நிகழ்வில் அண்மைக்காலமாக பங்குபற்றுகிறார்.
2010 பாரிசிலும்இ2014 ஜெர்மன் காம் ல் நடைபெற்ற உலக தமிழர் பண்பாட்டு இயக்க மாநாட்டில் பங்கு பற்றி கட்டுரைகள் சமர்ப்பித்து தமிழ் ஆய்வரங்கத்தில் பங்கெடுத்து தமிழ் ஆய்வு  செய்தார்.


கதை தொடர்கிறது

சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா எழுதிய   -      பகுதி 27


                                                                                         சிறிது நேரம் அவனை கவனித்தவள்இ "என்ன சீலன் கண்கள் கலங்கியிருக்கு முகத்தில் எவ்வித களையும் இல்லாமல் சோகத்துடன் இருப்பது போல் தெரிகிறதுஇ
என்ன நடந்தது கலாவுக்கு கனடாவில் முரளியை முடிவு செய்து விட்டார்களா? அல்லது அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா?“என தனது சகோதரனை கேட்பதுபோல உரிமையுடன் கேட்டாள்.

துர்கா தேவி தேவஸ்தானத்தில் சுவாமி ரமணா 24- 01/ 12.2014

.

உலகச் செய்திகள்


அமெரிக்க தொண்டு நிறுவன பணியாளரின் படுகொலைக்கு பராக் ஒபாமா கண்டனம்

ஜெருசலேமில் யூத வழிபாட்டு ஸ்தலத்தில் தாக்குதல் : 4 பேர் பலி; 8 பேர் காயம்

கிழக்கு உக்ரேனில் வன்முறை தாக்குதல்களில் 6 படை வீரர்கள்; 3 பொலிஸார் பலி

அமெரிக்க நியூயோர்க்கில் கடும் பனிப்பொழிவு: 4 பேர் உயிரிழப்பு


=================================================================

அமெரிக்க தொண்டு நிறுவன பணியாளரின் படுகொலைக்கு பராக் ஒபாமா கண்டனம்

18/11/2014 அமெ­ரிக்க தொண்டு நிறு­வன பணி­யாளர் அப்துல் ரஹ்மான் காஸிக் கொல்­லப்­பட்­டமை பிசா­சுத்­த­ன­மான ஒரு நட­வ­டிக்கை என அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா கண்­டனம் தெரி­வித்­துள்ளார்.

அவுஸ்­தி­ரே­லி­யாவில் இடம்­பெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு திரும்­பிய வேளை­யி­லேயே பராக் ஒபாமா மேற்­படி கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்ளார்.

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிப்பணம் அதிகரிப்பு.

.
அவுஸ்திரேலியாவில்    இயங்கும்   இலங்கை  மாணவர்  கல்வி   நிதியத்தின்  உதவி   பெறும்  மாணவர்களுக்கு  அடுத்த  ஆண்டு  முதல்  உதவிப்பணம்   அதிகரிப்பு.
                                 25  ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில்  தீர்மானம்.



இலங்கையில்   நீடித்த  உள்நாட்டுப்போரினால்  பெற்றவர்களையும் குடும்பத்தின்   மூல  உழைப்பாளியையும்  இழந்து  பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ்   மாணவர்களுக்கு  அவுஸ்திரேலியாவிலிருந்து  உதவிவரும் இலங்கை   மாணவர்  கல்வி   நிதியத்தின்  25  ஆவது  ஆண்டுப்பொதுக்கூட்டம்   மெல்பனில்  அண்மையில் Vermont South  மண்டபத்தில்  நிதியத்தின் தலைவர்   திருமதி  அருண். விஜயராணியின்   தலைமையில்  நடைபெற்றது.
நிகழ்ச்சியின்  தொடக்கத்தில்  போர்களில்  உயிரிழந்தவர்களின்   ஆத்ம சாந்திக்காக   ஒரு  நிமிடம்  மௌன   அஞ்சலி  செலுத்தப்பட்டது.
நிதிச்செயலாளர்   திருமதி  வித்தியா  ஸ்ரீஸ்கந்தராஜா   நிதியத்தின்  24  ஆவது ஆண்டுப்பொதுக்கூட்ட    குறிப்புகளையும்  2014-2015   ஆண்டறிக்கை    மற்றும்    நிதியறிக்கைகளை   சமர்ப்பித்தார்.

தமிழ் சினிமா


புலிப்பார்வை


விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடந்த இறுதிப்போரின் போது இலங்கை ராணுவத்தினரின் அத்துமீறல்களை சொல்ல வந்திருக்கும் மற்றொரு படம் தான் இந்த ‘புலிப்பார்வை’.


கதை 

பாலச்சந்திரன் எப்படி இலங்கை ராணுவத்தினரிடம் பிடிபட்டிருப்பார். அவரைக் காப்பற்ற புலிகள் படை எவ்வாறு முயற்சித்திருக்கும், பிடிபட்ட பாலச்சந்திரன், எந்த மனநிலையில் இலங்கை ராணுவத்தினர் பிடியில் இருந்திருப்பார் என்ற கற்பனையை, தனது திரைக்கதை யுக்தியின் மூலம் முழு நீள கமர்ஷியல் படம் போல சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிரவீன் காந்தி.
படத்தின் ஆரம்பத்தில் தாக்குதல் நடத்த போவதாக புலிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது, அதில் பிரவீன் காந்தி ஒரு கதாபாத்திரமாக தோன்றுகிறார். 

இந்த படத்தில் அதிகமாக சிங்கள ராணுவ அதிகாரிகளுக்கு வசனம் பேசும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. புலிகள் இயக்கம் போர் புரியும் போது கண்ணி வெடி அகற்றுவதற்க்கு பொது மக்களை பயன்படுத்துகிறார்கள். இதில் கதாநாயகியும் ஒருவராக வருகிறார்.

படத்தின் முக்கியமான அடித்தளம் என்னவென்றால் கதாநாயகி செய்யும் வேலையும், தன் காதலனுக்கு வழங்கும் காதல் பரிசான கண்ணிவெடியும் தான். இதை தொடர்ந்து படத்தில் நிகழும் சுவாரசிய சம்பவங்களே மீதிக்கதை.


பலம்

இப்படத்தின் முக்கியமான பலம் என்னவென்றால் ஒளிப்பதிவு, காட்சி அமைப்பு மற்றும் பின்னணி இசை. இதில் வரும் நடிகர்கள் வசனமே பேசாமல் தங்களது நடிப்பின் மூலமாகவே அனைத்தையும் உணர்த்துவது மற்றுமொரு பலம். சிறுவனாக வரும் கதாபாத்திரம் மிக தத்ரூபமாக யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
பலவீனம்

போரின் போது புலியின் சின்னத்தை வெளிப்படையாக காட்டி சிங்கள கொடியை மட்டும் கிராஃபிக்ஸ் மூலம் மறைத்து காட்டுவது உணர்ச்சியை தூண்டி விடுகிறது. திரைக்கதையை நாம் தான் இழுத்து செல்ல வேண்டும் போல, அந்த அளவிற்கு பொறுமையை சோதிக்கிறது.

மொத்தத்தில் புலிப்பார்வை கொஞ்சம் கூராக இல்லை.
 - நன்றி cineulagam