நியூ சவுத் வேல்ஸ் மாநில HSC தமிழ்ப் பாடநெறியில் சிகரம் தொட்ட ஹோம்புஷ் தமிழ்க்கல்வி நிலைய மாணவர்கள்



கானா பிரபா




நியூ சவுத் வேல்ஸ் மாநில HSC தமிழ்ப் பாடநெறியில் சிகரம் தொட்ட ஹோம்புஷ் தமிழ்க்கல்வி நிலைய மாணவர்கள் ATBC வானொலியில் வழங்கிய சிறப்புக் கலந்துரையாடல்

 


வாழ் வெல்லாம் தொடர்வதற்கு வழி வகுப்போம் வாருங்கள் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா 






தமிழன்னை எனை ஈன்றாள்
தமிழ்ப்பாலை ஊட்டி நின்றாள்
தாலாட்டும் போதும் அவள்
தமிமிழினிலே பாடி நின்றாள்
தடுக்கி நான் விழுந்தாலும்
தமிழ் வார்த்தை எழுந்ததுவே
அமிழ்தாக நான் நினைத்தேன்
அதை எண்ணி மகிழுகிறேன் !

ஊட்டி வளர்த்த தமிழ்
உவந்து பாட்டி உரைத்ததமிழ்
நாட்டுப் புற இசையை
நன்றாகச் சொல்லுந் தமிழ்
போட்டி என வந்தார்க்கு
சாட்டை என நின்றதமிழ்
நாட்டையே ஆண்ட தமிழ்
நந்தமிழே என மகிழ்வேன்  !

இலங்கை தமிழ் இதழியலில் பேராசிரியர் கைலாசபதியின் வகிபாகம் அங்கம் -02 முருகபூபதி


லங்கைத்தலைநகரை எடுத்துக்கொண்டால், அங்கிருந்து வெளியான அனைத்து தமிழ், சிங்கள, ஆங்கில நாளேடுகள் மற்றும் வார இதழ்கள் அனைத்துக்கும் பின்னால் அரசியல் இருந்தது.

லேக்வுஸ், ரைம்ஸ் ஒஃப் சிலோன், தவஸ குரூப், வீரகேசரி, ஐலண்ட், விஜய  முதலான அனைத்துக்கும் பின்னால் அரசியலும் அரசியல் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களும் இருந்தனர்.

கொழும்பு கிரேண்ட்பாஸ் வீதியில் 185 ஆம் இலக்கத்திலிருந்து வெளிவரத்தொடங்கிய  வீரகேசரி பத்திரிகை அமைந்த இல்லத்தில்தான் முன்னாள் அதிபர் ஜே. ஆர். ஜெயவர்தனா, 1906 ஆம் ஆண்டு பிறந்தார்.  பின்னாளில் அவரும் அவரது சகாவான டட்லி


சேனாநாயக்காவும் அதனை வாங்கி ஆங்கில – சிங்கள பத்திரிகைகளும் வெளியிட்டனர்.

அதே ஜே. ஆர். ஜெயவர்தனாவின் நெருங்கிய உறவினரான அவருக்கு முன்னர்   1886 ஆம் ஆண்டு பிறந்த டொன் ரிச்சர்ட் விஜேவர்தனாதான் 1909 இல் ஆரம்பிக்கப்பட்ட தினமின தினசரி பத்திரிக்கையை 1914 இல் சொந்தமாக வாங்கி அதனை அவரே விநியோகிக்கத் திட்டமிட்டார். 1918 ஆம் ஆண்டில் Ceylonese என்ற ஆங்கில பத்திரிக்கையை வாங்கி அதனை Daily News  என்று பெயர் மாற்றி நாட்டின் மிகவும் பிரபலமான ஆங்கில செய்தித்தாளாக உருவாக்கினார். 1923 ஆம் ஆண்டில் ஐரோப்பியர்களுக்கு சொந்தமான  Observer பத்திரிக்கையை வாங்குவதற்கான சந்தர்ப்பம் அவருக்கு அமைந்தது.


Ceylonese
என்ற பத்திரிகையை சேர். பொன்னம்பலம் அருணாசலம் அவர்களிடம் இருந்து அப்போது என்ன விலைக்கு அவர் வாங்கினார் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

 அன்றைய அதன் விலை பதினாறாயிரம் ரூபாதான்.

லேக்வுஸின் நிறுவனர், டீ. ஆர். விஜயவர்தனாவின் நெருங்கிய இரத்த உறவினர்தான் மூத்த பத்திரிகையாளர் எஸ்மண்ட் விக்கிரமசிங்கா.

இவரது மகன்தான் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா.

The Island – திவயின,  சித்ரமித்ர  முதலான பத்திரிகைகளை ஆரம்பித்த உபாலி விஜேவர்தனாவும் ஜே.ஆர். ஜெயவர்தனாவின் மருமகன் முறையானவர்தான்.

தவஸ, SUN , தினபதி, சிந்தாமணி, ராதா, சுந்தரி  உட்பட 16 இற்கும் அதிகமான பத்திரிகைகளை வெளியிட்ட எம். டீ. குணசேனா நிறுவனர் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் நெருங்கிய நண்பர்தான்.

'நன்றே நமக்குமோர் காலம்வரும்' என்று நறுந்தமிழ் வளர்த்திடக் காத்திருப்பீர்!.

 .


.................. பல் வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்



('தங்கத் தாத்தா'வின் 'கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகா? -- நித்தம்

காவல் புரிகின்ற சேவகா! ' ...என்ற பாடலின் மெட்டு) 












தாத்தா:- 

பள்ளிக் குச்சென்றிடும் பாப்பாவிடம் நானும்

       'படிக்கவா தமிழ்'என வரிந்தழைத்தேன்- தமிழ்

       'படிக்கவா தமிழ்'என வரிந்தழைத்தேன் 

துள்ளி நின்றேயவள் ஆங்கிலமொழி தன்னில்

       சொன்னசொல் நெஞ்;சினிற் சுட்டதம்மா!- பதில்

       சொன்னசொல் நெஞ்சினிற் சுட்டதம்மா!









சமத்துவ கட்சியின் யாழ் இளைஞர் அணியினரால் கொவிட்19 விழிப்புணர்வு செயற்றிட்டம்

 


சமத்துவ கட்சியின் யாழ் இளைஞர் அணியினரால் கொவிட்19 விழிப்புணர்வு செயற்றிட்டம்


வருமுன்  காத்து சமூகத்தை பாதுகாப்போம் கொவிட் 19 விழிப்புணர்வு
செயற்றிட்டம் சமத்துவ கட்சியின் யாழ் இளைஞர்களால் இன்று
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமத்துவ கட்சியின் இளைஞர் அணியினரால் இக் குறித்த கொரோனா வழிப்புணர்வு
செயற்றிட்டமும், முககவசம் வழங்கும் நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில்  கல்வியங்காடு சந்தை, நாவாந்துறை

சந்தை, கொட்டடி
சந்தை, உள்ளிட்ட பல இடங்களில் இவ் விழிப்புணர்வு செயற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வருமுன் காப்போம், சமூகத்தை பாதுகாப்போம் எனும் தொணிப் பொருளில்
மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையின் போது பொது
மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள், மற்றும் கொரோனா தொடர்பான
தகவல்கள் உள்ளடங்கிய துண்டுப்பிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.


பன்முகப் பார்வையில் இலங்கை வானொலி – நூல் நயப்பு இலங்கை வானொலிக்கு வயது 95

 

கானா பிரபா


இதே தினம் டிசெம்பர் 16, 1925 ஆம் ஆண்டு இலங்கை வானொலி ஆரம்பித்து வைக்கப்பட்டு இன்று 95 வயதைப் பிடித்திருக்கின்றது.

ஆசியாவின் முதல் வானொலி நிலையம் என்ற பெருமையோடு, ஒரு காலகட்டத்தில் இலங்கை வானொலி யுகம் என்று ஈழம் தாண்டி இந்தியா வரை கடல் கடந்து புகழோச்சியது வரலாறு.

இலங்கை வானொலி உலக ஜாம்பவான்கள் ஒரு பக்கம், இந்த வானொலி படைத்திட்ட நிகழ்ச்சிகள் இன்னொரு பக்கம் என்று “றேடியோ சிலோன்” காலத்துப் பசுமை நினைவுகளோடு வாழ்பவர்கள் பலர் இன்னும் அவற்றைச் சிலிர்ப்போடு அசை போடுவர்.

“நான் கண்ட சொர்க்கம்” படத்தில் நடிகர் கே.ஏ.தங்கவேலு எமலோகம் செல்லும் காட்சியில் “ரேடியோ சிலோன் மயில்வாகனன் இங்கேயும் வந்துவிட்டாரா?” என்று குறிப்பிடுவார்.
காணொளி


எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 20 சமயம் சார்ந்து இயங்கிய அமைப்பை சமூகம் சார்ந்து இயக்கவைக்க நடத்திய போராட்டம் ! விளையும் பயிர்களை முளையிலேயே உணர்த்திய அரும்புகள் !! முருகபூபதி



ணர்ச்சிக்கவிஞர் காசி. ஆனந்தனின் வருகைக்கு எதிராக எங்கள் ஊரில் ஆர்ப்பாட்டம் நடத்தியதனால் எழுந்த அதிர்வலைகளின் பின்னர்,  இந்து வாலிபர் சங்கத்தின் தலைவரும் நீர்கொழும்பு மாநகர சபையின் 03 ஆம் வட்டாரத்தின் உறுப்பினருமான ( அமரர் ) ஜெயம் விஜயரத்தினமும் செயலாளர் ( அமரர் ) மருத்துவர் பாலசுப்பிரமணியமும்  என்னையும் சங்கத்தில் அங்கத்தவனாக இணைந்துகொள்ளுமாறு உறுப்பினர் விண்ணப்ப படிவம் தந்து சேர்த்துக்கொண்டனர்.

அப்போது எனக்கு 21 வயது.  என்னைப்போன்ற இளைஞர்களை


சங்கம் அக்காலப்பகுதியில் உள்வாங்கியதற்கு காரணமும் இருந்தது.

ஒரு அமைப்பினை நடத்தும்போது தோன்றும் சிக்கல்கள்,  வரும் கருத்துமுரண்பாடுகளை அதில் இணையும் இளம்தலைமுறையும் தெரிந்துகொண்டு  கூட்டுப்பொறுப்பினையும் உணரும்.

அவ்வாறு இணையாமல் வெளியே நின்றால்,  தங்களுக்கும் பிரச்சினை மற்றவர்களுக்கும் பிரச்சினை என்பதை உணர்ந்த மூத்த தலைமுறையினர், தம்மைக் குடைந்து கும்மியடிப்பவர்களை அழைத்து பதவி கொடுத்து  “ செய்து பார்… உள்ளே வந்து சொல்லவேண்டியதை சொல்  “  என்று பொதுப்பணிகளில் இழுத்துவிடுவார்கள்.

 “இலக்கியத்தில், அது என்ன சோஷலிஸ யதார்ப்பார்வை ?   “  என்று ஒரு நாள் நான்,  என்னை  படைப்பு இலக்கியத்திற்குள்


அறிமுகப்படுத்திய மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவிடம் கேட்டதன் விளைவுதான், அவர் என்னை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு அறிமுகப்படுத்தி இணைத்துவிட்டதன் தாற்பரியம்.

 “ நீ… என்ன தெருவில் நின்றா ஆர்ப்பாட்டம் செய்கிறாய். வா  உள்ளே , உள்ளே வந்து பார் அதன்பிறகு தெரியும் எங்களது நிலைமை  “ என்ற எண்ணத்துடன் வாலிபர் சங்கத்தின் தலைமைப்பீடம்  என்னை உள்ளிழுத்தது.

நான்  உறுப்பினராகி   கலந்துகொண்ட முதலாவது ஆண்டுப்பொதுக்கூட்டத்திலேயே எனது குரலை ஓங்கி ஒலிப்பதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது.

சங்கம் அமைந்துள்ள அதே கடற்கரை வீதியில் ஶ்ரீ சிங்கமாகாளி அம்மன் கோயிலுக்கு பக்கத்தில்  தென்னோலையால் வேயப்பட்ட சிறிய வீட்டில் வசித்தாள் எனது  ஆரம்ப பாடசாலையில் என்னுடன் அரிவரி ( பாலர் ) வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புவரையில் படித்த அன்னம்மா என்ற தோழி.   அவளுக்கு தந்தை இல்லை.  தாயார் இராசாத்தி தோசை சுட்டு விற்று அவளை படிக்கவைத்தார்.

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 45 – ஈழப் பறை மேளம் – சரவண பிரபு ராமமூர்த்தி ஈழப் பறை மேளம் – தோற்கருவி


ஈழப்  பறை ஈழ  தமிழர்களுக்கு உரியது. தமிழ்நாட்டின் பறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ஈழப்  பறை அளவில் மிகப்பெரியது. இலங்கையின் தனித்துவமான தமிழர் அடையாளங்களில் ஒன்று. பலா மரத்தாலான பெரிய உருளை வடிவ இசைக்கருவி.  இரு புறமும் ஆட்டுத் தோல்  கட்டப்பட்டு இருக்கும்.   குச்சியால் இசைக்கப்படும் முகம் ஆண் ஆட்டுத் தோலாலும் மறுபுறம் பெண் ஆட்டுத் தோலால் ஆனது என்கிறார்கள். இரண்டு அளவுகளில் இக்கருவி புழக்கத்தில் உள்ளது. மிகப் பெரியது ஒன்று அதைவிட சிறிய நடுத்தர அளவுடையது மற்றொன்று.

 

தமிழகம் போல் இலங்கையிலும் பறை விளிம்பு நிலை


சமூகங்களின் கருவியாகவே உள்ளது. பறை என்றால் பேசு என்றும் ஒரு பொருள்படும். உண்மையிலேயே பறை ஒரு தாள வாத்தியக்கருவியாக இருந்தபோதும் அது ஒலிக்கும் போது வெளிப்படும் ஓசையைக்கொண்டு அந்த மேள அடி எதைச் சொல்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடியும். கோயில், இறப்புவீடு, மங்கல நிகழ்வுகள் என்னும் மூன்று சூழல்களில் ஒவ்வொன்றுக்கும் ஆறு ஆறு தாளக்கட்டுகளாக மொத்தம் 18 தாளக்கட்டுகள் உள்ளனவாம். மரணச்சடங்கில் உறவினர்கள் வருகையின் போது, பிரேதத்தை குளிக்க வைக்கும் போது, பிரேதம் தூக்கும் போது, இறுதி ஊர்வலத்தின் போது, கொள்ளி வைக்கும் போது என ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஒவ்வொரு விதமான அடி இலங்கைப் பறையில் உண்டு. தெய்வ பூசை, பொங்கல், படையல், கலையாடுதல், காவடியாட்டம் போன்ற வழிபாடு சம்மபந்தமான நிகழ்வுகளில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான தாள அடி உண்டு. ஆலயங்களில் ஆலயத்தாளம், அபிஷேகத்தாளம், அழைப்புத்தாளம், சுற்றாலைத்தாளம், பெரியபூசைத்தாளம் என்ற வேறுபாடுகளுடனும், வரவேற்பு போன்ற நிகழ்வுகளில் வரவுத்தாளம், கோணங்கித்தாளம், இராசதாளம், பல்லாக்குத்தாளம், நாலடித்தாளம், ஆறடித்தாளம், எட்டடித்தாளம், தட்டுமாறும்தாளம் என பறைமேளம் இசைக்கப்பட்டு வருகிறது.

அற்பாயுளில் உதிர்ந்த மலர்கள் : வருண்ராஜ் ஞானேஸ்வரன் - கிசோபன் ரவிச்சந்திரன் இதய அஞ்சலி ! முருகபூபதி


நான் அவுஸ்திரேலியா  மெல்பனில் வசிக்கும் புறநகரமான மோர்வெல்லிலிருந்து  சுமார் 65 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் மற்றும் ஒரு புறநகரமான சேல் என்ற ஊருக்கு கனத்த மனதுடன் சென்றுகொண்டிருக்கின்றேன்.

அந்தப்பாதையால் அதற்கு முன்னர் பலதடவைகள் அவுஸ்திரேலியாவின் மாநிலத்தலைநகரம் கன்பராவுக்கு  சென்றிருந்தபோது இருந்த மனநிலையில்  கடந்த செவ்வாயன்று  மேற்கொண்ட  அந்தப்பயணம் அமைந்திருக்கவில்லை.

இந்த 2020 ஆம் ஆண்டு பிறந்தது முதல்  எனக்குத் தெரிந்த சில கலை


, இலக்கிய ஆளுமைகள் மறைந்ததையடுத்து அஞ்சலிக்குறிப்புகள் எழுதியிருக்கும் நான், எதிர்பாராதவகையில் எனக்கு என்றைக்குமே அறிமுகமில்லாத ஒரு தமிழ் இளைஞன் குறித்த அஞ்சலிக்குறிப்புகளை எழுதநேர்ந்துவிட்டதும்  விதிப்பயனா ? அல்லது  உலகெங்கும் அகதிகளாக அலைந்துழலும்  மனித குலத்தின் சோகக்குரலின் எதிரொலியா..? 

இலங்கையில் நீடித்த போரின் முடிவுடன், அங்கிருந்து இந்தியாவுக்கும் பின்னர் அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கும் படகேறி வந்து குவிந்த மக்கள் திரளின் ஒரு பிரதிநிதியான செல்வன் வருண்ராஜ் ஞானேஸ்வரன் இம்மாதம் 05 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில்  ஒரு உயரமான கட்டிடத்திலிலிருந்து குதித்து தற்கொலைசெய்துகொண்டார்.

அவருடைய இறுதி நிகழ்வுக்குத்தான்  அவருடையதும் அவரது தாயார் மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் அவரது தங்கையினதும்  புகலிடக்கோரிக்கை விண்ணப்பத்தில் கவனம் செலுத்தும் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் மற்றும் அவருடை துணைவியார் ஜெஸி ரவீந்திரன், புதல்வன் அரூரண் ரவீந்திரன் ஆகியோருடன்  அவர்களின் காரில் சென்றுகொண்டிருக்கின்றேன்.

தற்கொலை செய்துகொண்ட செல்வன் வருணின் இறுதி நிகழ்வுகள் நடக்கும் சேல் என்ற புறநகர், நான் வதியும் மோர்வல் நகரிலிருந்து 65 கிலோ மீற்றல் தொலைவு. ஆனால், சட்டத்தரணி ரவீந்திரன் குடும்பத்தினருக்கு அதில் மும்மடங்கு தொலைவு. அவர்கள் குடும்ப சமேதராக இந்த இளைஞனின் இறுதி நிகழ்வில் அவனை வழியனுப்ப வருகிறார்கள் என்றால், அவனதும் அவனது தாய் மற்றும் தங்கையுடனும் அவர்களுக்கிருந்த நேசம் புரிந்துகொள்ளத்தக்கது.

பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 27- எங்க மாமா - சுந்தரதாஸ்

 .



இன்று உள்ள நட்சத்திர நடிகர்கள் ஆண்டிற்கு ஒரு படம் மட்டுமே நடித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள் ஆனால் அன்று உள்ள நட்சத்திர நடிகர்கள் ஆண்டிற்கு பல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்கள் அந்த வகையில் 1970-ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 8 படங்கள் வெளிவந்தன அவற்றில் ஒன்றுதான் எங்க மாமா.

ஜெ ஆர் மூவிஸ், ஏவிஎம் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்தார்கள் இந்தியில் ஜிம்மி கபூர் நடித்து வெற்றிபெற்ற பிரம்மச்சாரி படத்தை 19 ஆயிரம் ரூபாய் கொடுத்து பட உரிமையை வாங்கி தமிழில் படமாக்கினார்கள்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த குகநாதன் என்ற இளைஞர் பிரம்மச்சாரி படத்தின் வெற்றியைப் பற்றி ஏவிஎம் செட்டியார் ஜே ஆர் மூவிஸ் இடமும் எடுத்துச்சொல்லி தமிழில் அதை படமாக்க உறுதுணை ஆனார். படத்தின் வசனங்களையும் அவரே எழுதினார். சிவாஜிக்கு குகநாதன் வசனம் எழுதிய முதல் படமும் இதுதான்.

இலங்கைச் செய்திகள்

மஹர அமைதியின்மை; 4 கைதிகளின் உடல்களை தகனிக்க உத்தரவு

மாலைதீவில் இலங்கையரின் உடல்கள் அடக்கம் செய்வதா?

அரசியல் கைதிகளின் விடுதலை விரைவில் நடக்குமென நம்பிக்கை

முல்லைத்தீவு காட்டுக்குள் மன்னர் கால கல்வெட்டு

காங்கேசன்துறை அணைக்கட்டுகளுக்கு வவுனியாவிலிருந்து கற்கள்

 

மஹர அமைதியின்மை; 4 கைதிகளின் உடல்களை தகனிக்க உத்தரவு

மஹர அமைதியின்மை; 4 கைதிகளின் உடல்களை தகனிக்க உத்தரவு-Mahara Prison Shooting Court Ordered to Cremate 4 Bodies of Inmates

- குறித்த நால்வரும் துப்பாக்கிச் சூட்டிலேயே மரணம்

மஹர சிறையில் கடந்த நவம்பர் 29ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின்போது, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 11 பேர் மரணடைந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்கள் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

உலகச் செய்திகள்

ஜோ பைடனின் வெற்றியை உறுதிசெய்தது தேர்தல் சபை

ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கிய துருக்கி மீது அமெரிக்கா தடை

கொவிட்–19: அதிக உயிரிழப்பு பிராந்தியமானது ஐரோப்பா

மொடர்னா தடுப்பு மருந்துக்கும் அமெரிக்காவில் பச்சைக்கொடி

தினசரி கொரோனா தொற்றில் அமெரிக்காவில் புதிய உச்சம்

எளிமையாக நடைபெறும் ஜோ பைடன் பதவியேற்பு


ஜோ பைடனின் வெற்றியை உறுதிசெய்தது தேர்தல் சபை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தேர்தல் சபை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் மக்களின் விருப்பம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக தேர்தல் சபையின் அறிவிப்பு வெளியான பின் உரையாற்றிய அவர், “அமெரிக்க ஜனநாயகம் தள்ளப்பட்டது, பரிசோதிக்கப்பட்டது மற்றும் அச்சுறுத்தப்பட்டது,” என்று கூறினார்.

ஆனால், அது “மீண்டு வரக்கூடியது, உண்மையானது மற்றும் வலிமையானது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது “ என்றும் தனது உரையில் பைடன் குறிப்பிட்டார்.

2021ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு தேவையான சில இறுதி கட்ட நடவடிக்கைகளில் தேர்தல் சபை உறுப்பினர்கள் கூடிப் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதும் ஒன்றாக இருந்தது. இந்த நகழ்வு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

திரை மொழி நமக்கான சினிமாவைத் தேடி... காலாண்டிதழ்



இலங்கையில் முதல் முறையாக தமிழில் உலக சினிமா பற்றிய சஞ்சிகை.

 

ஜனவரி மாதம் முதல் இலங்கையில் முதல் முறையாக ஒரு உலக சினிமாவுக்கான சஞ்சிகை வெளிவரவுள்ளது. இது ஒரு காலாண்டிதழ்.  கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

 

இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு  ஆரோக்கியமான முகத்தை


உருவாக்கும் இந்த பணிக்கு கட்டுரை தந்து உதவுங்கள்.

 

தமிழில் சினிமாவே இல்லாத சூழலில் இருக்கும் சினிமாவையும் தென்னிந்திய தமிழ்பட தாக்கத்தினால் நமது அடையாளங்களை இழந்து நிற்கிறோம். இந்த அவலங்களை மாற்றி அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் நமது ஒவ்வொரு கலை மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்களது தலையாய கடமை. 

 

வைரமாளிகை - தமிழரசன் பெர்லின்

வைரமாளிகை என்பது யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வெட்டித்துறையைப் பின்புலமாய்க் கொண்ட ஒருவரின் பெரிய நகைக்கடையின் பெயராகும். ஆனால் வைரமாளிகை என்பது அந்த நகைக்கடையைவிட ஒரு மனிதனின் பெயராகவே யாழ்குடாநாடு எங்கும் அறியப்பட்டு இருந்தது. வைரமாளிகை (Diamond House)என்று தனது ஆடைகளில் முன்னும் பின்னுமாகப் பொறிக்கப்பட்ட எழுத்துக்களுடன் சுவிப் டிக்கற், பத்திரிகை விற்பனை என்பவற்றுடன் விளம்பரமும் செய்யும் மனிதரான வைரமாளிகையையே எமது பேசுபொருள். உயர்ந்த கறுத்த தோற்றமுடைய 60 வயதுக்கு மேற்பட்ட வைரமாளிகை "22 கரட் தங்க நகைகள் நயம் நம்பிக்கை நிறைந்தது" என்ற உரத்த குரலோடு இவர் யாழ் பஸ் நிலையத்தைச் சுற்றி வருவார். கஸ்தூரியார் வீதி ஸ்டான்லி வீதி ஆஸ்பத்தியடி என்று காணப்படுவார். கிட்டத்தட்ட 1960 முதல் 1987வரையில் யாழ் மக்களுக்கு மட்டுமல்ல வன்னி உட்பட மற்றைய பிரதேசங்களில் இருந்து வருபவர்களும் பஸ் நிலையத்தில் அவரைக் கட்டாயம் கண்டிருப்பார்கள். நல்லூர்த் திருவிழாவா சென் பற்றிக்ஸ் பெரிய கோவில் விசேடமா அங்கெல்லாம் அந்த நீலநிற வைரமாளிகை விளம்பரம் எழுதப்பட்ட உடையுடன் எங்கும் தென்படுவார். பெரும்பகுதியாக வைரமாளிகை யாழ் பஸ்நிலையத்தையே சுற்றி வருவார். உரத்த குரலில் திடுக்கிடும்படி பேசுவார். சத்தமிட்டு சிரித்து பற்களை நற நற என்று சத்தம் வரும்படி நெருமி நிமிர்ந்து ஆமிக்காரன் போல நடப்பார். ஓடுவார். ஆடுவார். பாடுவார். வெயில் மழைக்கு ஒதுங்காத ஓய்வெடுக்க சற்று குந்தியிருக்க ஒத்துக்கொள்ளாத இடைவிடாத இயக்கமுடையவர் வைரமாளிகை.

ஷோபா முதல் சித்ரா வரை; மர்மங்கள் நிறைந்த திரையுலக மரணங்கள்

இந்திய சினிமாவில் இன்னும் விடை காண முடியாமல் இருக்கிறது பல நடிகர், நடிகைகளின் தற்கொலைகள். சினிமாவில், ஒவ்வொரு தற்கொலைக்குப் பின்னும், இதுதான், அதுதான் என காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் என்பது இறந்துபோனவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். சிலர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்திருக்கிறார்கள்.

இந்திய சினிமாவில் பல விடை தெரியாத தற்கொலைகள் நடந்திருக்கின்றன.

இந்தி சினிமாவில் இளம் இயக்குனராக இருந்த குருதத், ​ெபாலிவுட்டுக்கு அருமையான சில படங்களைத் தந்தவர். காகாஸ் கே பூ, பாஸி, பியாசா ஆகிய படங்களின் வழியே இன்னும் பேசிக் கொண்டிருக்கிறவர். 1964 ஆம் ஆண்டு அப்போதை பாம்பேயில் தனது வாடகை வீட்டில் உயிரிழந்து கிடந்தார், சடலமாக. அப்போது அந்த இயக்குனர், நடிகர், தயாரிப்பாளருக்கு வயது 39. ஆல்ஹகாலும், தூக்க மாத்திரையும் அளவுக்கதிகமாக உட்கொண்டதால் அவர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இது தற்கொலையா அல்லது எதிர்பாராமல் நடந்த விபத்தா என்பது இப்போது வரை தெரியவில்லை. ஆனால், இது ஒரு விபத்துதான் என்றார் குருதத்தின் மகன் அருண் தத்.  

மகாலட்சுமி மேனன் என்று சொன்னால், நிச்சயம் உங்களுக்கு யாரென்று தெரியாது. ஆனால், அவரது ஸ்கீரீன் பெயரான ஷோபா என்றால், ஆஹா என்பீர்கள். நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், பசி, அழியாத கோலங்கள், மூடுபனி என அவர் நடித்த படங்கள், அழகாலும் நடிப்பாலும் நிரம்பி இருக்கிறது. 'பசி' படத்துக்காக தேசிய விருது பெற்ற ஷோபா, கடந்த 1980 ஆம் ஆண்டு மே 1 ஆம் திகதி சடலமாக கிடந்தார் தனது சென்னை வீட்டில். காரணம் தெரியவில்லை அப்போது அந்த நடிகைக்கு வயது 17. அதற்குள் அவர் சில படங்களில் ஹீரோயினாக நடித்து முடிந்திருந்தார். அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது இப்போதுவரை புதிராகவே இருக்கிறது. அவர் தற்கொலை செய்துகொண்ட சில வருடங்களிலேயே அவர் அம்மாவும் தற்கொலை செய்துகொண்டார். இதற்கும் காரணம் தெரியவில்லை. மூன்று முடிச்சு படத்தில் வந்த என்னடி உலகம் அதில் எத்தனை கலகம் என்ற பாட்டில் நடிகை படாபட் ஜெயலட்சுமியின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. 

அந்தப் படத்தில் அவர் உபயோகித்த படாபட் என்ற வார்த்தையே அவருக்கு அடையாளமாகிப் போனது. 
அழகான, அருமையான நடிகையாக வலம் வந்த படாபட்டின் முடிவு தற்கொலையாகிப் போனதுதான் துயரமானது. 

நடிகைகள் தற்கொலை லிஸ்டில் இருக்கும் இன்னொரு பிரபல நடிகை விஜயலட்சுமி. அதாவது சில்க் ஸ்மிதா. வண்டிச்சக்கரம், மூன்று முகம் என்று படங்களில் மிரட்டிய சில்க், 1996 ஆம் ஆண்டு தனது 33 வயதில் தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலைக்கு என்ன காரணமாக இருந்திருக்கும் என்கிற அவரது ரசிகர்களின் கேள்விகள் இன்னும் அப்படியே இருக்கிறது. நடிகை ஜியா கான் காதலர் தினம் படத்தில் நடித்த குணால், கோழி கூவுது விஜி, சிம்ரன் தங்கை நடிகை மோனல் என தொடரும் தற்கொலைகளில், நிசப்த், கஜினி ரீமேக் உட்பட சில படங்களில் நடித்த ஜியா கானின் தற்கொலை 2013 ஆம் ஆண்டு பரபரப்பாகப் பேசப்பட்டது. இதே போல இன்னும் பல பிரபலங்களின் தற்கொலைக்கு விடை கிடைக்கவில்லை. சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் இந்த லிஸ்டில் இணைந்திருந்தார். தற்போது இந்தப் பட்டியலில் இணைகிறார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா. 

இந்திய சினிமா மட்டுமல்ல, ​ெஹாலிவுட்டிலும் நடிகைகளின் தற்கொலைகள் இன்று சாதாரண செய்தியாகிவிட்டது. 

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை ஒட்டு மொத்த சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

2013-ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் சித்ரா. 

அதனைத் தொடர்ந்து ஜெயா டிவி, ஜீ தமிழ், உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் ‘சரவணன் மீனாட்சி (சீசன் 2)’ சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

2018-ம் ஆண்டு முதல் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வருகிறார். இந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், இவருக்கு தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. 

திருவான்மியூரை சேர்ந்த சித்ரா, சென்னை அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் அறையில் தங்கியிருந்து தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்துள்ளார். 

இந்நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்டவருடன் தங்கியிருந்த சித்ரா ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

சித்ரா நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். பிரபலமான துணிக்கடைகள், தனியார் மருத்துவமனை பற்றிய விளம்பரம் ஆகியவற்றின் விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார் சித்ரா.  

கண்ணாடி போல அழகான வாழ்க்கை சினிமாக்காரங்களுக்கும் சொந்தமானது என்று ரசிகர்கள் நினைத்தாலும் அவங்களுடைய வாழ்க்கையிலும் சோகங்களும் கண்ணீரும் நிறைந்ததே என்பதற்கு இந்த தற்கொலைகளே சாட்சியங்கள். இந்த பாதை இன்னும் எதுவரை நீளும்?  

நன்றி தினகரன்